السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 01

 

திருக்குர்ஆன் விளக்கம் 01

*திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••

மௌலவி பாஸில் *ஏ> எல், பதுறுத்தீன்* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••••. ( 1)


தமிழில் பல திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்கள் வெளிவந்துள்ளன, அவற்றில் எதுவும் அரபு தப்ஸீரை அடியொற்றி தமிழாக்கம் செய்யப் படவில்லை, பல இடங்களில் பிழையான மொழிபெயர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன, 


நாம் அறிந்தவரை ஆரம்ப காலத்தில் அரபுத் தமிழில் வெளிவந்த முழுமையான இரு தப்ஸீர்களும் மிகச் சரியாகவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன, 


தமிழில் வெளிவந்த" தப்ஸீருல் ஹமீத் இப்னுகதீர் உள்ளிட்டவையும் சரியாகவே உள்ளன, இவற்றில் தப்ஸீருல் ஹமீத் " தப்ஸீர் றூஹுல் பயான்" தப்ஸீரின் தமிழாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் வழுவில்லாத தர்ஜமத்துல் குர்ஆனின் தேவையை நீண்ட காலமாக அனைவராலும் எதிர்பாக்கப்பட்டு வருகின்றது, நமது மனதிலும் இந்த கவலை இருந்துவந்தது, 


உருது மொழியில் பல தர்ஜமாக்கள் உள்ளன, அவற்றுள் இமாம் அஹ்மத் றிழா கான் பா ஸில் பரேலவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின்*கன்சுல் ஈமான்" என்ற தர்ஜமா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அற்புதமான தர்ஜமாவாகும்.


இதனை தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற பேரவா என்நெஞ்சில் நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது, 


கிருபையுள்ள றஹ்மான் எனது பேரவாவை நிறைவேற்ற தீர்மானித்தான், அல்லாஹுத்த ஆலா வின் பேரருள்ளால் 2021 அதை தமிழாக்கி நிறைவாக்கினேன்.அல்ஹம்துலில்லாஹ்! 


இதன்பின், விரிவான விளக்கம் எழுத வேண்டும் என்று என்மனம்என்னை உறுத்தியது, பல்வேறு சோதனைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல்லாஹுத்த ஆலா வில் தவக்குல் வைத்து அவன் நல்லுதவியை எதிர்பார்த்து அதை எழுதத் துணிந்தேன், 


எனது முயற்சி முழுமையடையும் வரை எனது ஆயுளை ஆரோக்கியத்தோடு நீட்டித்துத்தர வேண்டும் என்று கிருபையுள்ள றஹ்மானிடம் இரஞ்சுகின்றேன்.


எமது ஏராளமான ஆக்கங்கள் புத்தக வடிவில் வெளிவராவிட்டாலும், சமூக வலைத்தளம் ஊடாக மக்களிடம் போய்ச்சேர்ந்துள்ளன.


இந்த வகையில் நமது தப்ஸீர் நூல் வடிவம் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படலாம் என்று அஞ்சி சமூக வலைத்தளம் ஊடாக மக்களிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சிறு சிறு பகுதிகளாக முன்வைக்கின்றேன். 


 நமது எழுத்துப் பணி முற்றிலும் தூய நோக்கம் கொண்டது, இதன் மூலம் பொருளாதார விருத்தியோ, புகழ் பெறுவதோ நமது நோக்கமல்ல, 


 நாம் செய்யும் இந்த வேலையால் எந்த விதமான பாராட்டோ, வ ரவேற்போ நமக்குக் கிடைப்பதில்லை, அதை நாம் எதிர்பார்ப்பது மில்லை, உண்மையைச் சொல்லப்போனால் நமது ஆக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க கூட இருப்பவர்கள் வெகுதூரம் செல்கின்றனர், நமது ஆக்கங்களை திருடி எனது பெயரை அழித்துவிட்டு அவர்களின் பெயரைப் போட்டு வெளியிடுகின்றனர், இதனால் நமது மனம் சஞ்சலம் பட்டாலும் நமக்கு முன்னாலும் இந்த வேலையை பெருங்கொண்ட இமாம்களுக் கும் இதே காரியத்தைச் செய்திருக்கின்றார்கள், அந்த வகையில் நாம் ஆறுதல் பெறுகின்றோம்.


ஆயுள் சுருங்குகின்றது, பலவீனம் முற்றுகின்றது, இதற்குள் முடிந்ததை ச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொந்த விடயங்களை ஓரமாக்கி அவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். 


நமது மறைவிற்குப் பின் இவை நமக்கு நற்பலன் தரவேண்டும் இதன் பறக்கத்தால் எனது குடும்பம் மனைவி பிள்ளைகள் நேர்வழியில் இருக்க வேண்டும், என்பது எனது பிரார்த்தனை.

கிருபையுள்ள றஹ்மான் எனது நோக்கத்தை கபூல் செய்வானாக ! ஆமீன்.


எமது விளக்கத்தில் தவறுகளைக் காண்பவர்கள் தயவு செய்து உடன் தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.

--------------------------  


அல்பகறா. பசு. மதனி


 வசனங்கள் 280

பிரிவுகள்:40. எழுத்துக்கள்

சொற்கள்: 6312. 26792

•••••••••••••••••••••••••••••••


 பகறா சூறத்திற்கு மேலதிகமாக இரு நாமங்கள் உள்ளன, 

1- கிஸ்தாதுல் குர்ஆன்

فسطاط القران ذ

.2- 

 ஸனாமுல் குர்ஆன், 

سنام القران

 

இத்கான் : பாகம்1 பக்கம் 54


'பகறா' என்றால், "பசு" என்பது பொருள், ஒரு பசுவை அறுத்து அதன்மூலம் இறந்த ஒருவர் உயிர்பிக்கப்பட்ட வரலாறு இந்த அத்தியாயத்தில் கூறப் பட்டிருப்பதால், இவ்வத்தியாயத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது;


இறங்கிய காரணம்: 


இஸ்லாத்தின் நிறுவனரான நபிகள் திலகம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மக்காவில் தன்னை நபியென்று பிரகடனப்படுத்திய போது, அங்கு சிலைவணங்கிகள் உள்ளிட்ட முஷ்ரிக்குகளிடம் மட்டுமே மோத வேண்டியிருந்தது, ஆனால், மதீனா தைய்யிபாவுக்கு வருகை தந்ததும், அங்கு யூத, நஸாறாக்களின் அதிகமான குடியிருப்புக்களைக் கண்டார்கள்,


மதீனாவில் யூதர்களின் ஆதிக்கம் அதிகமாகயிருந்தது, அப்துல்லாஹ் இப்னு உபையை அவர்களின் தலைவராக அவர்கள் ஏற்கும் தருணமாக இருந்த நிலையில்தான் இஸ்லாம் அங்கே தனது பேரொளியைப் பாய்ச்சத் தொடங்கியது, திருக்குர்ஆனின் திருவசனங்கள் அவர்களின் செவிக்குள் ஊடுருவியதும், பலர் புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர், ஆயினும், அவர்களுள் அறிவாளிகள் என்று பிரபல்யமான சிலர் பொறாமையின் காரணமாக இஸ்லாத்தில் இணையாமல் விலகியிருந்தனர், மதீனாவைச் சுற்றியிருப்பவர்கள் இவர்களுக்கு கண்ணியம் கொடுத்து வந்தனர், இதன்காரணமாக அதிகமான அறிவில்லாத பாமரமக்கள் அவர்களோடு இணைந்திருந்தனர்,


யஹூதிகளும், நஸாறாக்களும் காலம்காலமாக சண்டை பிடித்துக்கொண்டேயிருந்தனர், இஸ்லாம் வந்த போது இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக தங்கள் பகையை மறந்து. இருவரும் இணைந்து கொண்டனர், அப்துல்லாஹ் இப்னு உபையும், அவனுடைய சஹாக்களும் வெளிப்படையில் கண்ணியத்தையும், சொத்தையும் நேசிப்பவர்களாக இருந்ததால், போலித்தனமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர், ஆயினும், அவர்களின் மனம் காபிர்கள் பக்கமே இருந்தது, இவர்கள் திரைமறைவில் காபிர்களுக்கு உதவிசெய்து கொண்டிருந்தனர், 


 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா தைய்யிபா வந்தபின்,1- யஹூதி அறிஞர்கள், 2- நஸாறா அறிஞர்கள், 3- அறிவில்லாத முஷ்ரிக்குகள், 4- முனாபிக்குகள் உள்ளிட்ட நான்கு தரப்பில் எதிரிகளைச்சந்திக்க வேண்டியதாயிற்று;


முனாபிக்குகள் மறைமுகமாக வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம்களுக்கு மத்தியில் சந்தேகங்களையும் ; சலனங்களையும் ஏற்படுத்தவும் முயற்சித்தனர், இந்த கட்டத்தில்தான், மேற்படி நான்கு கூட்டத்தார்களின் சந்தேகங்களைத் தூராக்கும் வண்ணம் ஓர் அத்தியாயத்தை இறக்க அல்லாஹுத்த ஆலா தீர்மானித்தான்;


ஆகவே, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா தைய்யிபா வருகை தந்ததுமே இந்த அத்தியாயம் இறங்கத் தொடங்கியது , இது முழுமையான அத்தியாயம் இறங்தியதற்கான விளக்கமாகும் ; தவிர, திருவசனங்கள் இறங்திய காரணங்கள் ஆங்காங்கே உரிய இடத்தில் இடம்பெறும் இன்ஷாஅல்லாஹ்! 


சூறத்துல் பகறாவின் சிறப்புக்கள்.


1- ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 


 1- உங்கள் வீடுகளை கப்றுகளக ஆக்கி விடாதீர்கள், சூரத்துல் பகரா ஓதப்படும் வீடுகளில் ஷைத்தான் நிச்சயமாக நுழைவதில்லை. 


 2- திருக்குர்ஆன் ஓதப்படாமல் கப்றுஸ்த்தான் பாழடைந்து கிடப்பது போன்று இபாதத்துக்கள் , திருக்குர்ஆன் பாராயணமில்லாமல் வீடுகளை பாழடைந்ததாக ஆக்கக்கூடாது, குறிப்பாக சூறா பகறாவை ஓதவேண்டும் , அதன் காரணமாக ஷைத்தான் ஓடிவிடுவான், ஷைத்தான் ஓடுவதன் காரணமாக,


- இந்த சூறத்தின் பறக்கத்தினால் வீட்டிலிருப்பவர்களை ஷைத்தான் 

வழிகெடுக்கமுடியாது, ஆகவே, அவன் வேறுவழியைத்தேடுவான்,


-வீட்டிலிருப்பவர்கள் வணக்கவழிபாடுகளில் முயன்று ஈடுபடுபடுவதையும் ,அதில் அவர்கள் உறுதியாக இருப்பதையும் ஷைத்தான் பார்த்து நிராசையடைந்து ஓடிவிடுவான். இந்த சூறத்தின் பறக்கத்தால் இதுநடக்கின்றது ,


- இந்த சூறத் நீளமாக இருப்பதாலும், இதில் அல்லாஹுத்த ஆலாவின் திருநாமங்களும், சட்டங்களும் அதிகளவில் இடம்பெறுகின்றன, இதில் ஆயிரம் கட்டளைகள், ஆயிரம் விலக்கல்கள், ஆயிரம் ஹிக்மத்துக்கள், ஆயிரம் தகவல்கள் இருப்பதாகக்கூறப்படுகின்றது,


மிர்க்காத், பாகம்2 பக்கம் 580. 


2- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


திருக்குர்ஆனில் சூறத்துல் பகறா இருப்பது, ஒட்டகத்தின் உடலில் அதன் திமிலிருப்பது போன்றாகும். (அதாவது, ஒட்டகத்திற்கு அதன் திமில் அழுகு சேர்ப்பதுபோன்று, சூறத்துல் பகறா திருக்குர்ஆனுக்கு அழகு சேர்க்கின்றது.


முஸ்னத் அஹ்மத்.


3- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


எவர் ஜும்ஆவுடைய இரவில் சூறத்துல் பகறாவையும், சூறத்து ஆல இம்றானையும் ஓதினால், அவருக்கு அதன் நற்கூலி பஈதாவிலிருந்து உறூபா வரை நிறைந்திருக்கும், 'ப ஈதா' என்பது, பூமியின் ஏழாவது தட்டுக்கான பெயர், அறூபா,என்பது ஏழாம் வானத்திற்கான பெயர்.

தப்ஸீர் அஸீஸி 


4- சூறத்துல் பகறா ஓதப்படும் வீட்டில் மூன்று நாட்களுக்கு ஷைத்தானால் நுளைய முடியாது! 


5- எவராவது ஒருவர் தூங்கும் வேளை சூறதுல் பகறாவின் பத்து திருவசனங்களை ஓதுவாராயின், இன்ஷாஅல்லாஹ் அவர் திருக்குர்ஆனை மறக்க மறக்கமாட்டார்.


 அத்திருவசனங்கள் வருமா று,


ஆரம்பத்தில்உள்ள ' مفلحون வரையிலான நான்கு திருவசனங்கள், ஆயத்துல் குர்ஸி, ஆயத்துல் குர்ஸிக்குப் பின் தொடர்ந்து வரும் இரு ஆயத்துக்கள் சூறத்தின் இறுதியில் வரும் மூன்று ஆயத்துக்கள்.


6- ஹளறத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் தப்றானி, பைஹகி அறிவிக்கின்றார்கள்,


-றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,


மைய்யித்தை நல்லடக்கம் செய்த பின், அதன் தலைப்பக்கமாக சூறத்துல் பகறாவின் முதல் நான்கு ஆயத்துக்களையும் ; இன்னும் கால்பக்கமாக இந்த சூறத்தின் கடைசி றுகூயையும் ஓதவும். . 


அமீ ருல் முஃமினீன் ஹளரத் உமர் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு சூரத்துல் பகராவின் விளக்கத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அதன் நுட்பங்கள் எதார்த்தங்கள் உள்ளிட்டவையை கற்று முடித்த அன்று, ஓர் ஒட்டகத்தை அறுத்து சஹாபாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விருந்து படைத்தார்கள்.


(கிதாபுகளை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இனிப்புக்கள் வழங்குவது ஸஹாபாக்களின் சுன்னத் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்தின்றோம்.) 


சூரத்துல் பகராவில் ஆயிரம் சட்டங்களும், ஆயிரம் விளக்கங்களும்; ஆயிரம் செய்திகளும் உள்ளடங்கியிருப்பதாக ஷெய்குல் அக்பர் முஹ்யத்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.


சிறப்பு:


திருக்குர்ஆனின் திருவசனங்கள் பெ ரிதாயினும் சரி, சிறியதாயினும் சரி அவையனைத்திலும் அல்லாஹுத்த ஆலாவின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும்; எவ்வாறு பெரிய அத்தியாயத்தில் கணக்கற்ற சிறப்புக்கள் பொதிந்துள்ளதோ , அதேயளவான சிறப்புக்கள் சிறிய அத்தியாயத்திலும் பொதிந்திருக்கின்றது; சிறிய , பெரிய அத்தியாயங்கள் அனைத்தும் தனியான முஃஜிஸாவாகும்;   


சிந்தித்துப் பாருங்கள்! யானை உருவத்தில் மிகப் பெரியது, எறும்பு மிகச்சிறியது; யானை , ஒட்டகம் உள்ளிட்ட பெரிய மிருகங்களில் என்னென்ன அவயங்கள் உள்ளனவோ அவையனைத்தும் நுளம்பு , எறும்பு உள்ளிட்ட மிகச்சிறிய உயிரினங்களிலும் அதன் விகித சமனில் உண்டு! இதில் அல்லாஹுத்த ஆலாவின் ஆற்றலும் ஹிக்மத்தும் வெளிப்படுகின்றன;


மேலதிக பிரயோசனங்களை சூறத்தின் இறுதியில் இன்ஷாஅல்லாஹ் கூறப்படும்.


•••••••••••••••••••••••••••••••••


بسم الله الرحمن الرحيم. 


உச்ச கருணையும், 

 இரக்கமுமுள்ள அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.


தொடர்பு: 

சூரத்துல் பாதிஹாவை பிஸ்மியிலிருந்து, அல்லது அல்ஹம்திலிருந்து ஆரம்பம் செய்தான், இதன் விளக்கம் தெளிவானது, 

சூரத்துல் பகறாவை. الم லிலிருந்து ஆரம்பம் செய்தான், இதன் பொருளை விளங்குவதில் பெரும் பெரும் உலமாக்களும், வலிமார்களும் தடுமாற்றமடைந்துள்ளனர், திருக்குர்ஆனின் சில வசனங்களைப் புரிந்து கொள்வது மிக இலகு, மற்றும் சில திருவசனங்களின் இரகசியங்களையும், கூறியீடுகளையும் புரிந்து கொள்வது மிகவும் சிரமம், இவற்றைப் புரிந்து கொள்ள புத்தி ஆற்றல் பெறமாட்டாது, சுருதியான ஹதீதுகளின் அவசியம் வேண்டும்.


விளக்கம்: தப்ஸீர்.


الم 

இதன் பொருளை அல்லாஹ்வும், இன்னும்,அவனுடைய ரசூலையும் தவிர, வேறு எவரும் அறிய மாட்டார்கள், ஆகவே, அதை ஏற்பதும் ,அதன் எதார்த்தமான பொருளை அல்லாஹ்,இன்னும் ரசூல் பக்கம் சாட்டி விடுவதும் நமது கடமையாகும். 


சில அறிஞர்கள் இதற்குபின்வரும் சில விளக்கங்களைக் கூறியுள்ளனர், 


1 - இது பகறா அத்தியாயத்தின் பெயர், சூத்தின் ஆரம்பத்தில் வரும் இதுபோன்றவையும் உ+ம், الر - حمعيق அத்தியாயங்களில் நாமங்களாகும்.


2- இவற்றின் ஒவ்வொ எழுத்தும் ஹக்குத்த ஆலா வின் திருநாமமாகும்உ+மாக, الف என்பது அல்லாஹ்வையும்,لام என்பது لطف மென்மை (அன்பு) مينم என்பது, معين, உதவுபவர், مجيد பெருமை மிக்கவன், منان மிகுந்த அருளாளன் என்பதையும் குறிக்கும்.


3- அலிஃப் என்பது انا நான், لام என்பது அல்லாஹ், ميم என்பது اعلم 

 நான் அறிவேன் என்பதைக்கூறிக்கும்.


4- அல்லாஹ்வையும் இன்னும் மற்றவர்களையும் குறிக்கும் இலகுவான எழுத்துக்களாகும், அதாவது , الف என்பது அல்லாஹ்வையும், لام என்பது ஜிப்ரீலையும், ميم என்பது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் குறிக்கும், இதில் திருக்குர்ஆனை அனுப்பியவர், கொண்டுபோய் சேர்ந்தவர், பெற்றுக்கொண்டோர் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருக்கின்றன, 


ஜாஹிலியாக்காலத்தில் பிறர் புரியாத சில சங்கேத சொற்களை பாவித்து தங்களுக்குள்பேசிக்கொள்ளும் வழக்கம் அரபிகளுக்குள் இருந்தது, அவர்களின்அந்தவழக்கத்தைஅல்லாஹுத்த ஆலாவும் கையாண்டுள்ளான், இவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய திருத்தூதுவருக்குமிடையிலான இரகசிய சங்கேத சொற்களாக உள்ளன, அக்காலத்து நடைமுறை அரபி மொழியில் வித்துவத்தின் உச்சியிலியிருப்பதாக தம்பட்டமடித்தவர்களின் உச்சந்தலையில் இவை சம்மட்டி அடிகொடுத்தன, 


இதன் உட்பொருளை விளங்குவதற்கு அவர்களால் இயன்ற அனைத்தையும் முயற்சித்தும் விடை தெரியாமல் தோல்வியுற்றார்.கள். 


திருக்குர்ஆனின்முஃஜிஸாத்தைவெளிப்படுத்தும்ஆதாரங்களாக இவையும் இவை போன்ற முதஷாபிஹத்தான திருவனங்களும் இருக்கின்றன, ஆகவே , இதன் எதார்த்தமான பொருளை அல்லாஹ்வும், இன்னும் அவனுடைய திருத்தூதரு மே அறிவார்கள் என்று கூறவேண்டும்.