السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 19 December 2025

படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்)

படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்)


 *படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்) பற்றிய விளக்கம் !* 

•••••••••••••••••••••••••••••

அரபு மூலம்: 

தஃலீமுல் முத அல்லிம்


தமிழில்: 


மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••

          தொடர் : (3)


 படிக்கும் காலத்தில் மாணவனுக்கு கல்வியைப் பற்றிய உள்ளார்ந்த நோக்கம்( நிய்யத்) இருக்க வேண்டும்,ஸஹீஹான ஹதீதில் "செயல்கள் யாவும் உள்ளார்ந்த எண்ணத்தைப் பொறுத்து இருக்கின்றன" என்ற திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கூற்றுக்கு ஒப்ப எண்ணம்தான் அனைத்து செயல்களுக்கும் மூல வேராக இருக்கின்றது, 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


كَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الدُّنْيَا،

وَيَصِيرُ بِحُسْنِ النِّيَّةِ مِنْ أَعْمَالِ الْآخِرَةِ،

وَكَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الْآخِرَةِ،

ثُمَّ يَصِيرُ مِنْ أَعْمَالِ الدُّنْيَا بِسُوءِ النِّيَّة


“எத்தனையோ செயல்கள் உலகச் செயல்களாகத் தோன்றினாலும், நல்ல நிய்யத்தால் அவை மறுமையின் செயல்களாகி விடுகின்றன.

அதேபோல், எத்தனையோ செயல்கள் மறுமையின் செயல்களின் தோற்றத்தில் இருந்தாலும், கெட்ட நிய்யத்தால் அவை வெறும் உலகச் செயல்களாகி விடுகின்றன.”


 அறிவைத் தேடுவதில் மாணவன் 


1- அல்லாஹுத்த ஆலா வின் திருப்பொருத்தம், 


2- மறுமையின் இல்லம்,(சொர்க்கம்) 


 3- தன்னிலிருந்தும் , ஏனைய அறிவிலிகளிலிருந்தும் அறியாமையை அகற்றல், 


 4- சன்மார்க்கத்தை உயிர்ப்பித்தல், 


5- இஸ்லாத்தைப் பாதுகாத்தல் 


 உள்ளிட்ட வையை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும், ஏனெனில், இஸ்லாம் அறிவால் தான் நிலைத்திருக்கும், முட்டாள்தனம் இருக்கத்தக்க நிலையில் துறவறமும் தக்வாவும் ஒருபோதும் சீராகுவதில்லை..


"ஹிதாயா" என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மேதகு அறிஞர் இமாம் புர்ஹானுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் இந்த கவிதைகளைக் கேளுங்கள்.


فَسَادٌ كَبِيرٌ عَالِمٌ مُتَحَنِّكٌ

وَأَكْبَرُ مِنْهُ جَاهِلٌ مُتَسَنِّكُ

هُمَا فِتْنَةٌ فِي الْعَالَمِينَ عَظِيمَةٌ

لِمَنْ بِهِمَا فِي دِينِهِ يَتَمَسَّكُ


பொறுப்பற்ற அறிஞன் மிகப்பெரிய குழப்பக்காறன்,


இதை மிகைத்த குழப்பக்காறன் முட்டாள் வணக்கசாலி,


.தனது மார்க்கத்தில் இவ்விருவரையும் பின்பற்றுபவருக்கு 


 இவ்விருவரும் உலகத்தில் மிகப்பெரிய சோதனையாக இருக்கின்றனர்.


  அறிவைப் பெறுவதன் மூலம் அல்லாஹுத்த ஆலாவின் அருட்கொடை யான புத்தி (عقل) உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட நிஃமத்துக்களைத்தந்த அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுவதை மாணவன் மனதில் எண்ணிக்கொள்வது அவசியமாகும்.  


அறிவின் மூலம்

 மக்களை தன்பக்கம் கவர்வது,

 உலகத்தின் குப்பை ( செல்வங்)களை திரட்டுவது, அரசரிடமும் ,அவரல்லாதவர்களிடமும் கண்ணியத்தை எதிர்பார்ப்பது உள்ளிட்டவையை நினைக்கக்கூடாது. 


முஹம்மத் இப்னு ஹஸன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்.


لَوْ كانَ النّاسُ كُلُّهُمْ عَبِيدِي لَا اعْتَقَدْتُهُمْ فَتَبَرَّأْتُ مِنْ وَلائِهِمْ، وَمَنْ وَجَدَ لَذَّةَ الْعِلْمِ وَالْعَمَلِ بِهِ قَلَّمَا يَرْغَبُ فِيمَا عِنْدَ النّاسِ.


“மனிதர் எல்லோரும் எனக்கு அடிமைகளாயிருந்தாலும், நான் அவர்களிடம் சார்ந்திருப்பதாக எண்ணாது; அவர்களது ஆதரவைப் பொறுத்திருக்காமல் விடுவிப்பேன்.


ஏனெனில், அறிவின் இனிமையையும் அதன்படி நடப்பதன் ஆனந்தத்தையும் உணர்ந்தவன், மனிதர்களிடமுள்ள பொருட்களிலும் ஆதாயங்களிலும் பெரிதாக விருப்பம் கொள்ளமாட்டான்.”


 மேதகு இமாம் கீர்த்திமிக்க ஆசான் அஷ்ஷைகு கவ்வாமுத்தீன் ஹம்மாத் இப்னு இப்றாஹீமுஸ்ஸிஙார் அன்ஸாரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் "அமாலி" என்ற நூலிலிருந்து ஒரு கவிதையை நமக்கு சொல்லிக் காட்டுகின்றார் கள்.


مَنْ طَلَبَ العِلْمَ لِلمَعَادِ

فَازَ بِفَضْلِ اللهِ مِنَ الرَّشَادِ

فَيَا لِخُسْرَانِ طَالِبِهِ

لِنَيْلِ فَضْلٍ مِنَ العِبَاد


மறுமையின் வாழ்க்கைக்காக—அறிவைத் தேடுகிறவன்,

அல்லாஹ்வின் கருணையும் நல் வழிகாட்டுதலையும் பெற்று வெற்றி பெறுகின்றான்.


ஆனால், மனிதர்களிடமிருந்து புகழையும், உலக நலன்களையும்

பெறுவதற்காக அறிவைத் தேடுகிறவன் உண்மையிலேயே பெரும் இழப்புக்குள்ளாகின்றான்..


 உண்மைதான்! நன்மையை ஏவி, தீமையை விலக்கவும், சத்தியத்தை நிலைநாட்டவும், மார்க்கத்தின் கண்ணியத்தை உயர்த்தவும் பதவியைத் தேடினால், அதில் தனக்கோ , தனது பேராசைக்கான நோக்கம் இல்லாதிருந்தால்,, நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் அளவான பதவியைத்தேடுவது ஆகுமானது, 


மாணவன் கல்வியைத் தேடுவது தொடர்பில் அதிகமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில், கடின முயற்சி செய்து பெற்ற கல்வியை அழியக்கூடிய அற்ப உலகத்திற்காக அதை செலவு செய்யக்கூடாது,  


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


اِتَّقُوا الدُّنْيَا، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّهَا لَسِحْرٌ مِنْ هَارُوتَ وَمَارُوتَ


 “இம்மையை எச்சரிக்கையுடன் தவிர்த்து நடந்து கொள்ளுங்கள்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக!

உலகம் ஹாரூத்–மாரூத் ஆகியோர் செய்த மாயையைவிட மோசமான மாயையுடையதாக இருக்கிறது.”


கவிதை: 


هِىَ الدُّنْيا أَقَلُّ مِنَ الْقَلِيلِ

وَعَاشِقُهَا أَذَلُّ مِنَ الذَّلِيلِ

تُصِمُّ بِسِحْرِهَا قَوْمًا وَتُعْمِي

فَهُمْ مُتَحَيِّرُونَ بِلَا دَلِيلِ


“இந்த உலகம் அற்றப்பத்திலும் அற்மானது,

அதை காதலிப்பவன் கடையனிலும் கடையனாவான்,

அவள் (உலகம்) தனது வித்தையால் பலரை செவிடாகவும், குருடாகவும் ஆக்கிவிட்டாள்,

அவர்கள் வழியறியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார்கள்.


وَيَنْبَغِي لِأَهْلِ الْعِلْمِ أَنْ لَا يُذِلَّ نَفْسَهُ بِالطَّمَعِ فِي غَيْرِ الْمَطْمُعِ وَيَتَحَرَّزَ عَمَّا فِيهِ مُذِلَّةُ الْعِلْمِ وَأَهْلِهِ وَيَكُونَ مُتَوَاضِعًا وَالتَّوَاضُعُ بَيْنَ التَّكَبُّرِ وَالْمَذِلَّةِ وَالْعِفَّةُ كَذَلِكَ وَيُعْرَفُ ذَلِكَ فِي كِتَابِ الْأَخْلَاقِ


தங்களுக்குச் சொந்தமில்லாததில் ஆசைப்பட்டு தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளாமலிருப்பது அறிஞர்களுக்கு அவசியமாகும், 

அறிவுக்கும் , அறிஞர்களுக்கும் இழிவைத்தரக்கூடியவையிலிருந்து விலகியிருக்க வேண்டும், பணிவுள்ளவராக இருக்க வேண்டும், பணிவு பெருமைக்கும், இழிவுக்கும் மத்தியிலிருப்பதாகும், கற்பும் அவ்வாறுதான் , ஒழுக்க வியல் (اخلاق) நூற்களில் இதை அறிந்து கொள்ள முடியும். 


அல்அதீபுல் முக்தார் என்று அறியப்பட்ட இமாம் அல் உஸ்தாத் றுக்னுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இந்த கவிதையை எனக்கு சொன்னார்கள்.


اِنَّ التَّوَاضُعَ مِنْ خِصَالِ الْمُتَّقِي

وَبهُ الْتَّقِي إِلَى الْمَعَالِي يَرْتَقِي

وَمِنَ الْعَجَائِبِ عَجَبٌ مَنْ هُوَ جَاهِلٌ

فِي حَالِهِ أَهُوَ السَّعِيدُ أَمِ الشَّقِي

المُ كَيَّفَ يُخْتَمُ عُمْرُهُ أَوْ رُوحُهُ

يَوْمَ النَّوَى مُتَسَفِّلٌ أَمْ مُرْتَقِي


وَالْكِبْرِيَاءُ لِرَبِّنَا صِفَةٌ بِهِ

مَخْصُوصَةٌ تَجَنَّبْهَا وَالْمُتَّقِي


“பணிவு என்பது தக்வாவுள்ளவரின் சிறப்புக்குணங்களில் ஒன்றாகும்;

தக்வாவுள்ளவர் இதனால் உயர்ந்த நிலைகளுக்கு ஏறுகிறார்.


தான் பாக்கியவானா?இல்லைஅபாக்கியவானா? என்பதை அறியாத மூடன் தற்பெருமை கொள்வது விசித்திரமான தாகும், 


 மரண வேளையில் தனது ஆயுளும், தனது றூஹும் எப்படி முற்றுப்பெறும்,அது நரகம் செல்லுமா? அல்லது உயர்சொர்க்கம் செல்லுமா?  


பெருமை என்பது ,நமது இறைவனைச் சேர்ந்த தனித்துவமான குணமாகும்;

அதை தக்வாவுள்ளவர் தக்க முறையில் தவிர்க்க வேண்டும்.”


 இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்.


உங்களின் தலைப்பாகைகளை பெரிதாக்குங்கள், இன்னும், உங்களின் ஆடையின் கைகளை விசாலமாக்குங்கள், அறிவையும், அறிவுள்ளவர்களையும் ஏளனமாக அடுத்தவர்கள் பார்க்காதிருக்கவே இவ்வாறு கூறினார்கள்.


இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர் யூஸூப் இப்னு காலித் அஸ்ஸம்தி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய குடும்பத்தாரிடம் செல்லும் போது அவருக்கு எழுதிய "அல் வஸிய்யத்" என்ற நூலை மாணவன் பெற்றுக்கொள்வது அவசியமாகும், தேடினால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்

 

எமது ஆசான் ஷைகுல் இஸ்லாம் புர்ஹானுத்தீன் அலி இப்னு அபீபக்கர் கத்தஸல்லாஹு றூஹஹுல் அஸீஸ்.அவர்கள் நான் ஊருக்குத் திரும்பும் வேளை அதை எழுதுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள், நான் அதை எழுதினேன், மக்களோடு உறவைப்பேணிக்கொள்ளும் ஆசிரியருக்கும், முப்திக்கும் இந்த நூல் மிக அவசியமான ஒன்றாகும்‌