. *திருக்குர்ஆன் விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..
•••••••••••••••••••••••••••••••••
தொடர்: 4
*ويقيمون الصلوة*
தொழுகையை நிலை நிறுத்தியவர்கள்
*தொடர்பு:*
இந்த இடத்தில் முத்தகீன்களின் பண்பைப்பற்றிக்கூறப்படுகின்றது, " முத்தகீ" என்பவர் ஈமானிலும் , அமல்களிலும் சீரானவராக இருக்கவேண்டும், ஈமானைப்பற்றி முதலில் கூறப்பட்டுள்ளது, இப்போது அமல்களைப்பற்றி ஆரம்பமாகின்றது, அமல்களில் தொழுகை தான் முதன்மையானது , ஆகவே , தொழுகையை முதலில் கூறப்படுகின்றது,
சில காரணங்களினால் ஈமான் அமல்களை விட முதன்மையாகின்றது.
1- அமல்களுக்கு ஈமான் தான் அடிப்படை, ஆகவே, முதலில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
2- ஈமான் கல்பின் செயல், அமல்கள் உடலின் செயல்கள்,மனம் அரசர், உடல் அவரின் பிரஜை ஆகவே, மனதின் செயல் உடலின் செயலை விட மேலானது,
3- ஈமான் அனைத்து நபிமார்களின் மார்க்கத்திலும் ஒன்று போலிருந்தது, செயல்களில் வேறுபாடுகள் வந்தன, நிரந்தரமான பொருள் மாறுபடும் பொருளை விட மேம்பட்டது,
4- ஈமான் கொள்வது இஸ்லாம் ஆரம்பித்த நாளிலிருந்து பர்ழாக இருந்து வருகின்றது, தொழுகை, ஸகாத் உள்ளிட்டவை பின்னால் பர்ழானவை .
5- செயல்கள் மரணத்தோடு முடிந்துவிடும், ஈமான் மரணம், கப்று ,ஹஷ்று உள்ளிட்ட சகல இடங்களிலும் தொடர்ந்து சேர்ந்திருக்கும்,
6- ஈமான் கொள்வது அனைவர்மீதும் பர்ழு , அமல்கள் அனைவர் மீதும் பர்ழு இல்லை, காபிர் மீதும் ஈமான் கொள்ளவேண்டியது பர்ழு, பெற்றோரைத் தொடர்ந்திருக்கும் குழந்தை, பைத்தியம் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது எல்லா நிலைகளிலும் ஈமான் பர்ழாகும்,ஆனால், தொழுகை உள்ளிட்ட அமல்கள் இவர்களுக்கு பர்ழு இல்லை, , இவ்வாறு பெண்களுக்கு ஹைழு, நிபாஸ் காலத்தில் தொழுகை,நோன்பு பர்ழு இல்லை, ஏழைக்கு ஸகாத் , ஹஜ் கடமை இல்லை,
இவ்வாறான காரணங்களுக்காக அமல்களை விட ஈமான் முற்படுத்தப்பட்டுள்ளது,
இவ்வாறு தொழுகை ஸகாத்தைவிட முற்படுத்தப்பட்டதற்கும் சில காரணங்கள் உள்ளன.
1- தொழுகை உடலின் செயல், ஸகாத் பொருளின்செயல், பொருளை விட உடல் மேலானது, ஆகவே, தொழுகை முற்படுத்தப்பட்டது.
2- இஸ்லாத்தில் முதலாவதாக தொழுகை தான் கடமையானது.
3- தொழுகை அர்ஷுக்கு அப்பால் அல்லாஹு ஸுப்ஹானஹு வத ஆலா வின் திருவடியில்கடமையாக்கப்பட்டது, ஏனைய அமல்கள் பூமியில் கடமையானவை , இதிலிருந்து தொழுகை , ஏனைய அமல்களை விட மேலானது என்பது தெளிவு,
4- தொழுகை தினமும் ஐந்து வேளைகள் பர்ழு, ஸகாத், நோன்பு, ஹஜ் வருடத்தில் ஒருமுறை தான் பர்ழு ,.
5- தொழுகை அரசர், ஆண்டி பிரயாணி, நோயாளி உள்ளிட்ட அனைவர் மீதும் கடமை , ஸகாத் ஏழைக்கு கடமையில்லை பிரயாணி , நோயாளிக்கு நோன்பு கடமை இல்லை , பின்னர் கழாச்செய்யலாம்.
6-
தொழுகை ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடக்கம் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காலம்வரை சகல நபிமார்களுக்கும் சில வேறுபாட்டோடு கடமையாக இருந்து வந்தது,
ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் சுப்ஹு தொழுதார்கள், ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் ழுஹர் தொழுதார்கள், ஹளறத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அஸர் தொழுதார்கள், ஹளறத் ஈஸா நபி அலைஹிமஸ்ஸலாம் மக்ரிப் தொழுதார்கள், ஹளறத் மூஸா நபி அலைஹிமஸ்ஸலாம் இஷா தொழுதார்கள்,
தப்ஸீர் றூஹுல் பயான்.
விளக்கம் : தப்ஸீர்.
தொழுகையை நிலை நாட்டுதல் என்பதன் பொருள்: எப்போதும் அதன் அக,புற ஒழுக்கங்களைப் பேணித் தொழ வேண்டும் என்பதாகும் , வெளிப்படையான ஒழுக்கங்கள் என்பன, அதன் ஷர்த்துக்கள் ;பர்ழுகள், சுன்னத்துக்கள், உள்ளிட்ட வையாகும், மனதில் பணிவை ஏற்படுத்துவது, மனதை ஓர்மைப்படுத்துவது, மனதை இறை சன்னிதானம் பக்கம் திருப்புவது உள்ளிட்டவை அந்தரங்க ஒழுக்கங்களாகும். .
திருக்குர்ஆனில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் நிலை நாட்டுமாறு கூறுகின்றது, எனவே, ,எவர் தொழுகையை பேணுதலோடு தொழவில்லையோ, அவர் இத்திரு வசனத்தின் பிரகாரம் தொழாதவராகவே கருதப்படுவார்.
நிலை நாட்டுவார்கள் என்பது, பன்மைச் சொல், இதன் மூலம் ஜமாத்தாகத் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் صلوة. என்ற சொல் ஐந்து பொருளில் வந்துள்ளது
1 -து ஆ - وصل عليهم
2- புகழுதல் - يصلون علي النبي
3- திருக்குர்ஆனை ஓதுதல். ولا تجهر بصلوتك
4- றஹ்மத் - صلوات من ربهم
5- தொழுகை - اقيموا الصلوة
தொழுகையில் முதல் நான்கு பொருள்களும் உள்ளடங்கி இருக்கின்றன, அதில் ரப்பிடம் துஆ கேட்பதும், அவனைப் புகழுவதும், திருக்குர்ஆனைப் பாராயணம் செய்வதும் ,அதை ஓதுபவர் மீது ரஹ்மத் கிடைப்பதும் இருக்கின்றன,
தொழுகையில் அனைத்து மலக்குகளின் அமல்களும் உள்ளடங்கியுள்ளன.
தொழுகையில் அனைத்து வகையான படைப்புகளின் வணக்கங்களும் சேகரமாகி இருக்கின்றன, மரம் எல்லா நேரத்திலும் நின்று வணங்குகின்றது, கால் நடைகள் றுகூவிலிருக்கின்றன,பாம்பு, தேள்,பூரான் உள்ளிட்ட ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் சுஜூதில் இருக்கின்றன, தவளை இருப்பிலிருக்கின்றது, இவை யாவற்றிலும் மேலானவன் மனிதன்! ஆகையால், அனைத்து வணக்கங்களும் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஸூபியாக்கள் "நிலை நாட்டுதல்" என்பதற்கு வேறு பொருளைக் கூறுகின்றனர்,அத்திவாரமின்றி சுவர் இல்லை! வேரின்றி மரம் இல்லை! இஸ்லாத்தின் அனைத்துக் கட்டிடங்களும் தொழுகை என்ற சுவரிலேயே நிற்கின்றன,"தொழுகை" என்ற சுவர் நிலைத்து நிற்பதற்கு முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் "இஷ்க்" என்ற காதல் அடிப்படையாகும், எனவே, தொழுகையில் முகம் கிப்லாவை நோக்கியும், மனம் மதினா தைய்யிபாவை நோக்கியும் இருக்க வேண்டும், இல்லையேல் றுகூஊ, சுஜூது திரைக்குள்ளையே இருக்கும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காதலோடு தொழுகையை நிலை நிறுத்துவதற்குரிய தௌபீக்கை கிருபை யுள்ள ரஹ்மான் நமக்கு ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.
.







