*திருக்குர்ஆன்*
*விளக்கம்*
•••••••••••••••••••••••••••••••
மௌலவி பாஸில் *ஏ. எல். பதுறுத்தீன்*. ஷர்க்கி, பரேலவி, ஸூபி,காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••. தொடர் : 8
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
2- 7 அல்லாஹுத்த ஆலாஅவர்கள் இதயங்களிலும் , இன்னும், அவர்களின் கேள்விகளிலும் முத்திரையிட்டு விட்டான்; இன்னும், அவர்களின் பார்வையில் திரை விழுந்திருக்கி ன்றது; அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு .!
••••••••••••••••••••••••••••••
தொடர்பு:
---------------
இதற்கு முன்னுள்ள திருவசனத்தில் காபிர்களின் பண்புகளையும், நிலைகளையும் கூறப்பட்டுள்ளன; இத்திருவசனத் தில் அதற்கான காரணத்தையும், முடிவையும் கூறப்படுகின்றன; இங்கு "முத்திரையிடப்பட்டது" என்பதன் நோக்கம் அவர்களின் பிடிவாதம் குப்புறையும், பாவத்தையும் நல்லதாக காணத் தொடங்கியது; ஈமானையும், வழிபடுவதையும் தீயதாகக் கருதியது; காபிர்களின் தலைவர்களில் அதிகளவான விருப்பமும்; நபிமார்கள், வலிமார்களில் வெறுப்பும் ஏற்படலாயிற்று; இப்போது அவர்களின் உள்ளத்திலிருந்து குப்று வெளியேற மாட்டாது; ஈமான் உள்ளே நுழையவும் மாட்டாது; உண்மையை விளங்க முடியாதளவுக்கு அவர்களின் இதயங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
திருக்குர்ஆனில் சில இடங்களில். طبع الله என்றும், اغفلنا قلوبهم என்றும்; ران علي قلوبهم என்றும்; قاسية قلو بهم என்றும் கூறப்பட்டுள்ளன; இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று "முத்திரையிடல்" என்ற நெருக்கமான பொருளையே கொண்டிருக்கின்றன;
இத்திருவசனத்தில் இதயம், காது; உள்ளிட்ட இரண்டும் முத்திரையிடப்பட்டுள்ளன என்பதை علي என்ற இடைச்சொல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வந்திருப்பதை தெரியப்படுத்துகின்றது; பார்வையில் திரை விழுந்திரு க்கின்றது என்பதை غشاوة என்ற சொல் மூலம் தெரிகின்றது. عظيم என்ற சொல் சகல தரப்பு தண்டனையிலும் மிகப்பெரிய தண்டனை கிட்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
உலகத்தில் முஸ்லிம்களால் கொல்லப்படுவது, அல்லது , கைது செய்யப்படுவது, மறுமையில் கொதி நீரால், விஷ ஜந்துக்களால் சோதிக்கப்படுவது, இவையனைத்திலும் மிகைத்து சோதனை முடிவில்லாமல் நிரந்தரமாக இவற்றை அனுபவிப்பதாகும்.
இத்திருவசனத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் வருமாறு,
நபியவர்களே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இந்த காபிர்கள் ஈமான் கொள்ளவில்லை யென்று நீங்கள் சஞ்சலப் பட வேண்டாம், ஏனெனில், ஈமான் கொள்வதற்கு இரண்டு வழிகளே இருக்கின்றன,
1- அல்லாஹுத்த ஆலாவின் அத்தாட்சிகளையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முஃஜிஸாத்துக்களையும் பார்த்து ஈமான் கொள்வதற்கு அவர்களின் மனம் சீராக இருக்க வேண்டும்.
2- அவருக்கு அறிவில்லாமல் இருந்து அடுத்தவர் புரியவைத்து தெரியப்படுத்துவதன்மூலம் ஈமானை ஒப்புக்கொள்ளல்.
இந்த இரண்டு வழிகளையும் இந்த காஃபிர்கள் இழந்துள்ளனர், அவர்களின் பிடிவாதத்தால் இதைச் சிந்தித்து ஏற்கும் நிலையில் அவர்களின் மனம் இல்லை,
அவர்களின் செவியும், கண்ணும் சத்தியத்தைக்கேட்டவோ, பார்க்கவோ முடியாதளவு செயலிழந்து விட்டன, அதாவது, ஈமான் கொள்வதற்கான சகல காரணங்களும் அடைபட்டு விட்டன, ஆகவேதான் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறப்பட்டது,
மனம் ஈமானுக்கான தலம், காதும், கண்ணும் ஈமானுக்கான வழிகள், வழிகள் தடைபட்டதால் தலமும் ஈமானைப்பெறுவதற்கான தகுதியை இழந்துவிட்டது, இந்த நிலையில் அவர்களுக்கு எவ்வாறு ஈமான் சாத்தியமாகும்?
பாவத்திற்கான அடிப்படை மூன்று என்று உலமாக்கள் கூறுகின்றனர்.
1- பேராசை: حرص
2- பொறாமை : حسد
3- பெருமை : تكبر
சில வஸ்த்துக்கள் பராமுகத்தை غفلة
ஏற்படுத்தக்கூடியவையாகும். அவை வருமாறு,
அதிகமாக உண்பது, அதிகமாக உறங்குவது, எல்லா நேரத்திலும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை , பணத்தில் ஆசை, பதவி மோகம், அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆசை , சில வேளை பணத்தையும் , ஆட்சி அதிகாரத்தையும் தேடுவோர் குப்றில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, உள்ளிட்ட பாவங்கள் என்ற கரும்புள்ளியால் மனம் இருளடைந்து போகின்றது,
திருக்குர்ஆனை ஓதுவது, ஸலவாத்ஓதுவது, அல்லாஹுத்த ஆலா வை திக்ரு செய்வது , மரணத்தை அதிகம் ஞாபகப்படுத்துவது உள்ளிட்ட இவையாவும் மனதின் கறைகளை நீக்கி சுத்தப்படுத்தும் ரஸவாதங்களாகும்,
இவ்வாறு அதிகமாகச் சிரிப்பது மனதை நோயாளிக்கும், அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது இந்த நோய்க்கான பரிகாரமாகும்,
எவராவது பாவத்தோடு நன்மையான நற்காரியங்களையும் தொடர்ச்சியாகச் செய்து வருவாராயின், மனத்தின் அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்,
நன்மையில் கவனம் செலுத்தாமல் பாவத்திலே புரண்டு கிடப்பவரின் இதயம் கரும்புள்ளியால் சூழப்பட்டு முழுமையாகவே இருண்டு விடும், இந்த இருளை கடின முயற்சியால்தான் அகற்றமுடியும்
உள்ளத்தை தாவிப் பிடித்த இருளை அல்லாஹுத்த ஆலா வின் நேசர்களின் அருட்பார்வை யால் நீங்க வில்லையென்றால் மனதில் முத்திரை விழுந்துவிட்டது என்பது பொருளாகும்.
மனம் பாவத்தின் அழுக்கால் மெதுவாகவே அழுக்கடையும், வணக்கங்கள் அந்த அழுக்கை மெதுவாக விலக்கிச் சுத்தப்படுத்தும், ஆனால் நபியின் விரோதம் மனதை ஒரே தடவையில் முத்திரை குத்தி விடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்,
ஷைத்தானின் மனதில் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விரோதம் ஒரே தடவையில் முத்திரை குத்தியது, ஹளறத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு போட்டிக்கு வந்த சூனியக்காரர்களின் மனதிலிருந்த அழுக்கை ஹளறத் கலீமுள்ளாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வை ஒரே தடவையில் துடைத்து பரிசுத்தப் படுத்தியது.
இதிலிருந்து நபியின் விரோதம் படுமோசமான குப்று!, வலியுள்ளாஹ்வின் பார்வை மிகச்சிறந்த நிஃமத்! என்று தெரிய வருகின்றது.
ஸூபிஸ விளக்கம்.
---------------
ஆன்ம உலகில் றப்புத்த ஆலா வாக்குறுதி வாங்கியபோது, மனிதர்களை அணுவின் கோலத்தில் வெளிப்படுத்தி அவர்களிடம் தன்னுடைய றுபூபிய்யத்துக்கான வாக்குறுதியை வாங்கினான், பின்னர் அந்த அணுக்களை மனங்களிலும்,மனங்களை சடங்களிலும், சடங்களை பூமியிலும் அமானிதமாக வைத்தான்,
பிறப்பின் போது இந்த அணுக்கள் மனத்தின் பொறியாக இருக்கும், இதன் ஊடாகவே மனதிற்கு மறைவான உலகம் தெரிய வருகின்றது, அங்குள்ள சப்தங்கள் உணரப்படுகின்றது,
ஆகவேதான்
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்திலேயே பிறக்கின்றது, அதன் பெற்றோர்தான் அதை யஹூதியாகவும், நஸாறாவாகவும, மஜூஸியாகவும் ஆக்கின்றனர் " என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது.
மனிதன் கெட்ட உறவில் சேரும்போது அந்த பொறி மெல்ல, மெல்ல அடைபட்டு திறக்கமுடியாதளவு அடைபட்டு விடும், இந்த நிலையில் அவருக்கு பார்வை இருக்கும், அகப்பார்வை இருக்க மாட்டாது,
அபூஜஹ்லு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இதயத்தால் பார்க்காமல், புறக்கண்ணால் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் என்று பார்த்ததால் நிரந்ர நரகவாதியானான், ஸித்தீக்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு இதயத்தின் பார்வையால் அல்லாஹ்வின் றஸூலாகப் பார்த்தார்கள் ஸித்தீக்குல் அக்பர் ஆனார்கள், லைலாவின் அழகைப் பார்ப்பதற்கு மஜ்னூனின் கண் வேண்டும்.
பயன்கள்
-----------
அல்லாஹ்வின் நேசர்களைப் பகைத்துக் கொள்வதால் மனம் வன்மையடைகிறது, அவர்களில் விரோதம் பாராட்டுவதன் முடிவு மனம் முத்திரையிடப் படுவதாகும்,பின்னர், அவருக்கு ஈமான் ஒருபோதும் சாத்தியமாகாது,
ஹதீதுக்குத்ஸியில் அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
என்னுடைய வலியில் விரோதம் பாராட்டு பவனுக்கு எதிராக நான் யுத்தப் பிரகடனம் செய்கின்றேன்,
மஹப்பத்தால் ஏற்படும் குப்றை விட விரோதத்தால் எழும் குப்று கடினமானது என்று கூறப்படுகின்றது, ஈஸாஈ ஹளறத் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது எல்லை தாண்டி மஹப்பத் வைத்ததால் காபிரானார்கள், யஹூதிகள் அடுத்த நபி மீது விரோதம் கொண்டதால் காபிரானார்கள், இருகூட்டத்தாரும் காபிர்களாக இருந்தாலும் யஹூதிகள் ஈஸாஈகளைவிட வன்மம் பிடித்த காபிர்களாகும்,
றாபிழிகள் ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது அளவுகடந்து மஹப்பத் வைத்ததால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள், தேவ்பந்தி வஹாபிகள் நபிமார்களைத்தரக்குறைவாகப் பேசி தூஷணித்ததால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள்,ஆகவே , தேவ்பந்திகள் றவாபிழிகளை விட கேடுகெட்ட வர்களாகும், ஏனெனில் இவர்கள் நபிமார்களின் விரோதத்தால் காபிரானவர்கள்.







