*திருக்குர்ஆன் விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••••
தொடர்: 10
----------------
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
2- 9 - அவர்கள் அல்லாஹ்வுக்கும், இன்னும், முஃமின்களுக்கும் சதி செய்கின்றனர்; இன்னும், அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர் ; அதை அவர்கள் உணர்ந்து கொள்ள வில்லை;
*************************
தொடர்பு:
இத்திருவசனம் முந்திய திரு வசனத்தோடு இரு விதங்களில் தொடர்பாகின்றது.
1- இத்திருவசனத்தில் முனாஃபிக்குகளின் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன, இதற்கு முந்திய திருவசனத்தில் அவர்களின் ஈமான் இல்லாத குப்றைப்பற்றிக் கூறப்பிடப்பட்டுள்ளது ;, குப்று ; செயலைவிட முந்திய து,ஆகவேதான் செயலை விட குப்றை முதலில் கூறப்பட்டது,
2- அவர்கள் வெளியில் தங்களை முஃமின் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் முஃமின்கள் கிடையாது என்று முதல் திருவசனத்தில் கூறப்பட்டது, இத்திருவசனத்தில் அவர்களின் ஈமான் ஏற்கப்படாதற்கான காரணம் கூறப்படுகின்றது, அதாவது, அவர்கள் வெளிப்படுத்தும் ஈமான் இக்லாஸானதாக இல்லை, மாறாக ஏமாற்றுவதற்கானதாகும், ஆகவேதான் அது அங்கீகரிக்கப்படவில்லை,
இதே காலிமாவை மனத்தூய்மை யோடு மொழிந்தவர்கள் முஃமினாக ஆனார்கள், இவர்கள் இதே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள், ஏனெனில் ,வார்த்தைகளில் நிய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருக்கின்றது, முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் தோற்றத்தில் பாலாகத்தெரிந்தாலும் சந்தையில் அதற்கு மதிப்பு இல்லை,
இக்லாஸான நிய்யத் என்பது , கொழுப்பைப் போன்றது, இக்லாஸ் இல்லாத நல்ல நல்ல வார்த்தைகளுக்கு அல்லாஹ்விடத்தில் எவ்வித பெறுமதியும் கிடையாது.
" அவர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்கின்றார்கள்" என்பதன் பொருள், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சதி செய்கின்றார்கள் என்பதாகும், அதிகமான இடத்தில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டாலும் நோக்கம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள், அல்லாஹ்வின் திருவடியில் அன்னாருக்கு இருக்கும் மகத்துவத்தை வெளிப்படுத்த இவ்வாறு கூறப்படுகின்றது.
அல்லாஹுத்த ஆலா வின் திருவடியில் அன்னாரின் மகத்துவம் யாதெனில், றஸூலுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும், அன்னாருக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும், நபிகளாருக்கு சதி செய்வது அல்லாஹ்வுக்கு சதி செய்வதாகும்,
திருக்குர் ஓர் இடத்தில் கூறுகின்றது.
எவர் றஸூலிடம் பைஅத் செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத் செய்கின்றார்கள், அல்லாஹ்வின் கரம் அன்னாரின் கரத்திற்கு மேல் இருக்கின்றது, இந்த கோட்பாட்டின் படியே தான் இங்கும் முனாபிக்கு கள் அல்லாஹ்வுக்கு அதாவது றஸூலுக்கு - சதி செய்கின்றனர்.
தப்ஸீர், றூஹுல்பயான்,
தப்ஸீர் அஸீஸி.
"அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர்" என்பதன் பொருள், இவர்கள் உயர்ந்த விலைமதிப்புள்ளதை விட்டுவிட்டு தாழ்ந்ததைத் தேர்வு செய்து கொண்டு வெற்றியை எதிர்பார்ப்பது படு முட்டாள்தனமான தாகும், இது அவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்வதற்கு சமனாகும், முனாபிக்குகள் மார்க்கத்தைத் துறந்து விட்டு உலகத்தை எடுத்துக்கொண்டனர், இதில் மகிழ்ச்சியும் அடைகின்றனர், உண்மையில் அவர்கள் எதிர்பார்தவாறு உலகம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை , துன்பமும், இழிவும் தான் அவர்களுக்கு மிஞ்சியது,
கண்ணியமிக்க ஸஹாபாக்கள் அழியும் உலகத்தையும், அதன் சுகங்களையும் எட்டி உதைத்து விட்டு அல்லாஹ்வையும் , இன்னும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள், உலகம் அவர்களின் கால்களை முத்தமிட்டது, எதார்த்தத்தில் இவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகும்.
இத்திருவசனத்தின் சாரம் யாதெனில், முனாபிக்குகள் அல்லாஹ்வையும் , இன்னும் இறுதி நாளையும் ஈமான் கொண்டிருப்பதாகக் கூறினாலும், அவர்களின் எண்ணத்தில் அல்லாஹ்வுக்கு அல்லது அல்லாஹுத்த ஆலா வின் றஸூலுக்கு , அல்லது முஸ்லிம்களுக்கு சதி செய்வதாகும், உண்மையில் அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர், ஏனெனில், அல்லாஹுத்த ஆலா மறைவானவற்றை நன்கு அறிந்தவன், அவனுக்கு எந்த விடயமும் மறைவாக இல்லை, எதார்த்தத்தில் அவர்கள் தங்களை உணராமல் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலாவின் மிகப்பெரிய கலீபாவாகும், அல்லாஹுத்த ஆலா தனது ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அனைத்து மறைவான ஞானங்களையும் கற்றுக் கொடுத்துள்ளான், ஆரம்பத்திலிருந்தே அன்னார் அனைத்தினதும் யதார்த்தங்களை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள், மிஃறாஜுக்குச் சென்ற வேளை அனைத்து முஃமின் களையும், காபிர் களையும் கண்ணால் பார்த்துவிட்டே வந்தார்கள், காபிர்கள், முஃமின்களின் பட்டியல் உள்ள ஏட்டை ஸஹாபாக்களுக்குக் காட்டினார்கள்,
படுமோசமான பாவிகளை சொர்க்கவாதி என்றார்கள் பெரும் பெரும் பக்திவான்களை காபிர் என்றார்கள், முடிவில் அன்னார் கூறியதே நடந்தது,
ஹளறத் ஹஸன், ஹளறத் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு மா ஆகிய இருவரும் சொர்க்கத்தில் இளவல்களின் தலைவர்கள் என்றார்கள், நபிகளாரின் ஈரல் கொழுந்து பாத்திமத்துஸ்ஸஹ்றா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொர்க்கத்தில் பெண்களின் தலைவி என்றார்கள்,
அபூதாலிப் நரகத்தின் விளிம்பிலிருக்கின்றார்கள் என்றார்கள், ஆக, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கவாதிகளையும், நரகவாதிகளையும் அவர்களின் நிலைகளையும் , பதவிகளையும் அச்சொட்டாகக்கூறியிருக்கும் போது முனாபிக்குகள் அன்னாருக்கு சதி செய்யமுடியுமா? அன்னாரை ஏமாற்றத்தான் இயலுமா?
முஃமின்கள் தங்களின் ஈமானின் வெளிச்சத்தால் முஃமினையும் , காபிரையும் அறிந்து கொள்கின்றார்கள், " முஃமினின் குறிப்பறிதலை அஞ்சிக்கொள்ளுங்கள், அவர்கள் அல்லாஹ்வின் ஒளியால் பார்க்கின்றார்கள்" என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது, அல்லாஹ்வின் நேசர்களோடு சேர்ந்திருக்கும் விலங்குகளும் முஃமினையும், காபிரையும் அடையாளம் கண்டு பிரித்துப் பார்க்கின்றன. ,
ஹளறத் ஸபீனா றழியல்லாஹு அன்ஹு ஒரு யுத்தத்தில் வழிதவறி வெகுதூரம் சென்றுவிட்டார்கள், அப்போது ஒரு சிங்கம் எதிரே வந்தது, சிங்கமே! நான் அல்லாஹ்வின் திருத்தூதரின் அடிமை என்றதும் நாயைப்போன்று வாலை ஆட்டியது, பின்னர், கூடவே
வந்து படையோடு சேர்த்து வைத்தது,
அபூலஹபின் மகன் உத்பா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை மரியாதைக் குறைவாகக் தூஷனித்தான், இவர் ஒரு கூட்டத்தோடு பயணம் செய்தார், இரவில் எல்லோரும் சேர்ந்து உறங்கினர், சிங்கம் உள்ளே வந்து உறங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு வரின் வாயையும் முகர்ந்து பார்த்து இறுதியாக உத்பாவைக்கவ்விக்கொண்டு சென்று கொன்றது.
உண்மையில் முனாபிக்குகள் அல்லாஹ்வுக்கோ, அவனுடைய றஸூலுக்கோ, முஃமின்களுக்கோ சதி செய்ய வி ல்லை,முனாபிக்குள் உலகத்தை நம்பி ஈமானைக்கைவிட்டதால் இவ்வுலகமும் இவ்வுலகத்தின் சுகமும், கண்ணியமும் இவர்களை விட்டும் விலகிச் சென்றது, துயரமும், இழிவுமே அவர்களுக்குக் கிடைத்தன.
மறுமையில் நரகத்தின் அடித்தட்டில் நீடூழி காலம் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியம் கிடைத்தது இதை அவர்கள் அறியாமலேயே இந்த அடாத்து வேலையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வெட்டிய படு குழியில் அவர்களே வீழ்ந்துள்ளார்கள். அதை அவர்களின் புலன்கள் உணர்வதில்லை,
மனதில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும்; இமாம்களையும்; வலிமார்களையும் பற்றி அலங்காரமான வார்த்தைகளால் வாயாரப் புகழ்ந்து கொண்டு மௌலீது, மீலாத்;கந்தூரிகளை குறை காண்பவர்களும் இந்த முனாபிக் கூட்டத்தையே சேருவார்கள்.
ஸூபிஸ விளக்கம்.
மனிதர்களிடமும் இந்த மூன்று கூட்டத்தார்களும் இருக்கவே செய்கின்றனர்.
1- றூஹுல் இன்ஸான் ! சுத்தமான முஃமின்.
2- ஷைத்தான்!, வெளிப்படையான காபிர்.
3- நப்ஸு அம்மாறா! முனாபிக்
இது மனதில் இருந்து கொண்டு தன்னை அவனின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும், ஷைத்தானோடு சேர்ந்து கொண்டு அவனை நண்பனாகிக்கொள்ளும், எவரின் உள்ளத்தில் அல்லாஹ்வின் கருணைப் பார்வை உள்ளதோ அவரில் நப்ஸு அம்மாறா ஆதிக்கம் செலுத்தாது, முடிவில் நிர்பந்தமாகவே சரணடைந்து வழிப்படச்செய்யும்.
யாஅல்லாஹ் !, எங்களின் ஈமானில் நிபாக்கின் துளி கூட இல்லாமல் எங்கள் ஈமானைப் பரிசுதாதமாக்கி வைப்பாயாக! காமிலான முஃமின்களான வலிமார்கள் கூட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொள்வாயாக! நப்ஸு அம்மாறாவின் கெடுதியிலிருந்து எங்களின் மனதைப் பாதுகாப்பாயாக ! ஆமீன் யாறப்பல் ஆலமீன்.







