*திருக்குர்ஆன் விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்* . ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••••
ان الذين كفروا سواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون.
2- 6. நிச்சயமாக *எவரின் விதியில்* குப்றியத் உள்ளதோ, அவர்களுக்கு எச்சரிப்பதும், எச்சரிக்காமலிருப்பதும் சமம்தான்! அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
•••••••••••••••••••••••••••••••••.
தொடர் :7
தொடர்பு :
------------
இத்திருவசனம் முந்திய திருவசனத்தோடு சில வகையில் தொர்பாகியுள்ளது.
1- இதற்கு முந்திய திருவசனங்களில் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களைப் பற்றி கூறப்பட்டது, இப்போது அவர்களுக்கு எதிரான நிராகரிப்பாளர்களைப் பற்றிக் கூறப்படுகிறது; ஒவ்வொன்றையும் அதற்கு எதிரானதைக் கொண்டே அறியப்படும். பகலை இரவின் மூலமாகவும், வெளிச்சத்தை இருட்டின் மூலமாகவும் அறியப்படும்.
2- அங்கீகாரம் பெற்ற நல்லடியார்கள் ஹிதாயத் பெற்று, வெற்றியடைந்தற்குக் காரணமான பண்புகளைப்பற்றி முதலில் கூறப்பட்டன, இப்போது ஹிதாயத்தையும், வெற்றியையும் இழப்பதற்குக் காரணமான பண்புகளைப் பற்றிக் கூறப்படுகின்றது, ஹிதாயத்தின்
நுட்பம் யாதெனில், இருதரப்புப் பண்புகளையும் எடுத்துக் கூறி கேட்பவர் சிறந்ததற்கான காரணத்தைத் தேர்வு செய்து; தீயவைக்கான காரணத்தை விட்டும் தவிர்ந்துக் கொள்வதாகும்.
3- மேற் கூறப்பட்ட ஆறு பண்புகளையும் கொண்டுள்ள முத்தகீன்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டும் என்று முதலில் கூறப்பட்டது, இப்போது இத்திருவசனத்திலுள்ள பண்புகளைக்கொண்டவர்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டாது என்று கூறப்படுகின்றது, இதிலிருந்து மேற்கூறிய பண்புகள் ஹிதாயத்திற்கான காரணங்கள் என்றும் , இப்போது கூறப்படும் காரணங்கள் ஹிதாயத்தை இழக்கச் செய்யும் காரணங்கள் என்றும் தெரிகின்றது,
கூர்மையான மருத்துவர் நோயாளிக்கு பரிகாரத்திற்கான முறையையும், இன்னின்னவைதீங்கு செய்யும் என்றும், அதைத்தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்.
இறங்கிய காரணம்:
---------------
இத்திரு வசனம் அபூஜஹ்லு, அபூலஹப் உள்ளிட்ட காபிர்களின் விடயத்தில் இறங்கியது,இவர்கள் ஈமான் கொள்ளாதிருப்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஆழ்ந்த கவலையைக் கொடுத்தது; இத்திரு வசனம் இறங்கி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கொடுத்துள்ளது
எனது நேசரே! எத்தி வைப்பது தான் உங்கள் கடமை! ஈமான் கொள்ளாதிப்பது அவர்களின் கூறுகெட்ட நிலை !ஆகவே, இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
விளக்கம் : தப்ஸீர்
----------.
"குப்று" என்பதற்கு மறைத்தல் என்பது அகராதி ப் பொருள், ஷரீஅத்தில் , அல்லாஹ்வின் வுஜூத், அல்லது அவனுடைய தௌஹீத், அல்லது எதாவது ஒரு நபியின் நுபுவ்வத்தை அல்லது மார்க்கத்தின் கண்டிப்பான வையில் ஏதாவது ஒன்றை மறுப்பது,
மார்க்கத்தில் கண்டிப்பானவை என்பது ,எது மார்க்கம் தொடர்பான விடயம் என்று பொதுவாக முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கும் விடயங்களைக் குறிக்கும்.
சில விடயங்கள் மார்க்கத்தை மறுக்கும் அடையாளங்களாக இருக்கும்,, உ+மாக, பூநூல் போடுவது,
ஹிந்துக்களுக்குச் சொந்தமான தொப்பி , உருத்திர மாலை அணிவது,
சிலுவை அணிவது,கிறித்தவ மாதிரிகள் போன்று இடுப்பில் கறுத்த பட்டி அணிவது,
சாதிகளைச் போன்று காவி உடை உடுப்பது உள்ளிட்டவையும் குப்றாகும்.
ஹிந்துக்கள் தங்களின் சமய அடையாளமாகக் கருதுகின்ற பொட்டு, திலகம் வைப்பது , கோமணம் கட்டுவது உள்ளிட்டவையும் குப்றுதான்,
பொதுவாக வெளியில் பார்க்கின்றவருக்கு "காபிர்" என்று அடையாளப்படுத்தும் அனைத்தும் குப்றுதான்.
காஃபிர்களின் சமய , சமூக அடையாளமாக இருப்பவற்றை முஸ்லிம்கள் செய்வது ஹறாம், உ+மாக, தீபாவளி நாளில் பட்டாசு கொளுத்துவது, பௌத்தவர்களின் சிறப்பு நாளில் தோரணம் அமைப்பது, அகல் விளக்கு எரிப்பது, காஃபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்வது , அதற்கு உதவி செய்வது, காஃபிர்களின் செயல்களை நல்லதாகக் காண்பது, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உள்ளிட்ட யாவும் ஹறாமாகும். சில வேளை குப்றாகவும் ஆகும். இதிலிருந்து எம்மை அல்லாஹுத்த ஆலா பாதுகாப்பானாக!
திருக்குர்ஆனில் "குப்று" என்ற சொல் நான்கு பொருட்களில் வந்துள்ளது,
1- ஈமானுக்கு எதிர்
2- நிராகரிப்பு
3- நம்பிக்கை
க்கு எதிர்.
4-- நிராசை
இங்கு முதல் வகை நோக்கமாகும், காரணம் இதற்கு முன் ஈமானைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
"குஃப்ர்" நான்கு விதங்களில் உள்ளன
1- நிராகரிக்கும் குபுர், كفر انكار
அதாவது அல்லாஹ்வைப் பற்றி எதுவும் தெரியாமல் நிராகரிப்பது.
2- முரண்டு பிடிக்கும் குப்று:
ரப்பை மனதால் அறிவது ஆனால் அதை வாயால் விண்ணப்பிக்காமல் இருப்பது இப்லீஸ் மற்றும் பிடிவாதக் காபிர்களின் குப்றைப்போல்,
3- பிடிவாதமான குப்று: كفر الجهود
மனதால் அறிவது, சில வேளை வாயாலும் கூறுவது; ஏதும் காரணத்தால் அதற்கு வழிப்படாதிருப்பது அபூதாலிபின் குப்று போன்று!
4- நயவஞ்சகக் குப்று: كفر النفاق
இவர்கள் வாயால் உறுதிப்படுத்துவார்கள், மனதில் நிர்ணயம் கொள்வதில்லை.
ஆதாரம்:
தப்ஸீர் , றூஹுல் பயான்.
பத்உல் ஆமாலி
இத்திருவசனத்தில் கூறப்படும் "குப்று" என்பது இரண்டாவது வகையைக் குறிக்கும், அனைத்து காபிர் களையும் இத்திருவசனம் குறிக்காது , ஏனெனில், அதிகளவான காபிர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்
,இத்திருவசனத்தில் காபிர் கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து பிடிவாதத்தால் காபிரானவர்களை இத்திருவசனம் குறிப்பிடுவதாக உலமாக்கள் கூறுகின்றனர்,
காபிர்களில் விளக்கம் இல்லாதவர்களும், சரியான சாட்சியமில்லாதவர்களும் இஸ்லாத்திற்குள் வருவதற்கு வாய்ப்புண்டு, சிலர் அனைத்தையும் தெளிவாக அறிந்து கொண்டு மனமுரண்டாக மறுக்கின்றவர்கள்இருக்கின்றார்கள், இவ்வாறான வர்கள் முஸ்லிமாவ தற்கான வாய்ப்பு முற்றிலுமாகக்கிடையாது,
முரண்டுபிடிப்பவரைத்திருத்த எந்த அறிஞராலும் முடியாது, சந்தேகமுள்ள நோயாளிக்கு எந்த மருத்துவராலும் பரிகாரம் செய்ய முடியாது.
பிடிவாதத்திற்கு சில காரணங்கள் உள்ளன.
1- வழிகாட்டி மீது தனிப்பட்ட விரோதம் இருப்பின் அவரின் ஒவ்வொரு கூற்றும் அவருக்கு வெறுப்பாகவே இருக்கும், இப்லீஸ் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான பொறாமையின் காரணமாகவே தான் காபிரானான், ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யுமாறு அல்லாஹுத்த ஆலா கட்டளையிட்டதும் அனைத்து மலக்குகளும் சுஜூது செய்ததை இப்லீஸ் பார்த்தும்அவன் ஈமான் கொள்ளவில்லை,ஏனெனில் , பேச்சின் தாக்கம் சொல்பவரின் மகத்துவத்தினால் ஏற்படுவதாகும்,
முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காதல் மனதில் குப்று வருவதைத் தடுக்கும், முஸ்தபா மாநபி மீதான வெறுப்பு மனதில் ஈமான் வருவதை அனுமதிக்காது.
2- தனது, தந்தை பாட்டன்மார்களின் நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களின் நல்லது, கெட்டதை யெல்லாம் ஆதரிப்பது.
3- குறிப்பிட்ட ஓர் ஆலிம், அல்லது வழிகாட்டி கூறுகின்றார் என்பதற்காக எதிர்ப்பது .
மேற் கூறப்பட்ட மூன்று பிடிவாதக்காறர்களும் ஈமான் கொள்ள மாட்டார்கள்,
எவரின் விதியில் குப்று விதிக்கப்பட்டதோ அவர்கள் ஒருபோதும் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இத்திருவசனத்தின் பொருளாகும்.
திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கின்றனர்,
" நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நபியே நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும், அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் இரண்டும் அவர்களுக்கு சமமே ஆகும், அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்."
இந்த மொழிபெயர்ப்பால் பொதுவாக காபிர் கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று விளங்க முடிகின்றது,
பொதுவாக காஃபிர்கள் எந்தவகையிலும் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்றிருந்தால் பிரச்சாரம் பலனற்றதாகிவிடும், காபிர் கள் சாரிசாரியாக திரண்டு வந்து இஸ்லாத்தை ஏற்ற தெல்லாம் பொய்யாகி விடும்,
நபிமார்கள், வலிமார்கள், மற்றும் பலரின் பிரச்சாரத்தால் கணக்கற்றோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்,
குப்றிலிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவே நபிமார்கள் வந்தார்கள், வேதங்கள் இறங்கின , மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவை யாவற்றையும் கேள்விக்கும் படுத்துகின்றது.
உண்மையில் இத்திருவசனத்தில் அனைத்து காபிர் களையும் குறிப்பிடவில்லை, அல்லாஹ் விதியில் குப்றியத்தின் முத்திரை குத்தப்படாதவர்களையே குறிப்பிடுகின்றது,
பிரச்சாரத்தால் ஒருவரின் பண்புகள் மாற்றப்படலாம், எதார்த்தம் மாற்றப்படமாட்டாது, எந்த ஒரு நபரின் போதனையாலும் மிருகத்தை மனிதனாக்கமுடியாது. இதைத்தான் இத்திருவசனம் கோடிட்டு காட்டுகின்றது.
இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்ட காபிர்களுக்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரச்சாரம் செய்யவே செய்தார்கள், எத்திவைப்பது தான் நபியின் பணி , ஏற்பதும் , ஏற்காதிருப்பதும் அவர்களின் விதியிலுள்ளதின் முடிவாகும், எத்திவைத்ததற்கான நற்கூலி அவர்களுக்குக் கிடைக்கும்,
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு அல்லாஹுசுப்ஹானஹுவத ஆலா வின் நோக்கத்தை ப்புரிந்துசெய்யப்படவேண்டும், தவறினால் மக்கள் திருக்குர்ஆனை பிழையாக விளங்க வழிவகுக்கும். திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில் இவ்வாறான தவறான மொழிபெயர்ப்புக் கள் அதிகம் காணப்படுகின்றன, சில இடங்களில் குப்றியத் ஏற்படக்கூடிய மொழிபெயர்ப்புக்களும் உள்ளன, உரிய இடத்தில் இன்ஷாஅல்லாஹ் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.
ஸூபியாக்கள் விளக்கம்:
. இத் திருவசனத்திற்கு ஸூபியாக்கள் இவ்வாறு விளக்கம் பகர்கின்றனர்,
இவர்கள் வாக்குறுதிக்குரி ய ( ஆலமுல் அர்வாஹ்வுடைய ) நாளில் எமது ருபூபியத்தை ஏற்று بلي. உண்மைதான் என்று கூறிய பின், தங்களின் மனம் என்ற தெளிவான கண்ணாடியை பாவமான செயலால் அதன் தெளிவை நாசமாக்கி விட்டனர்; இன்னும், அவர்களின் பெறுமதி மிக்க. றூஹு என்ற பறவையை உடல் என்னும் கூட்டுக்குள் அடைத்த பின், தங்களின் ஐந்து புலன்களின் ஊடாக இவ்வுலகைப் பார்த்து தங்களின் உண்மையான உலகத்தை மறந்து விட்டார்கள்.
நஃப்ஸையும், ஷைத்தானையும் உறவு கொண்டதால் றூஹை அதன் தாய் நாட்டின் பழைய நண்பர்களை மறக்குமளவுக்கு உதவாக்கரையாக்கி விட்டனர்; அது தனது தாய் நாட்டின் நண்பர்களைப் புறக்கணித்துவிட்டு தன் பாட்டில் இருக்கத் தொடங்கி விட்டது; எனவே, மக்கள் இவ்வாறு இருக்கக் கூடாது, தங்களுடைய உண்மையான அந்த தேசத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.







