السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 06

 


*திருக்குர்ஆன் விளக்கம்*

•••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

             தொடர் :6



والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون..


2 :4-- இன்னும் நேசரே! உம் தரப்பில் இறக்கப்பட்டதையும்,உமக்குமுன்னுள்ளவர்கள் மீது இறக்கப்பட்டதையும் அவர்கள் ஈமான் கொள்கின்றனர்; இன்னும், மறுமையையும் அவர்கள் உறுதி கொள்கின்றனர்.

••••••••••••••••••••••••••••••••


தொடர்பு:


இத்திருத்திருவசனம் முந்திய திரு வசனத்தோடு சில வகையில் தொடர்பாகின்றது, சில விதங்கள் இபாதத்தின் ரீதியிலும், சில உள்ளடக்கத்தின் ரீதிலும் இத்தொடர்பு உள்ளது,, இபாதத்தின் ரீதியிலான தொடர்பின்பொருள், மேற்கண்ட மூன்று பண்புகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் நேரியவழியிலிருக்கும் வெற்றியாளர்களாகும்,

 உள்ளடக்கத்தின் ரீதியானதிலும் சில வகைகளில் தொடர்புள்ளது.


1- முதல் திருவசனத்தில் முத்தக்கிகளின் பண்புகளில் "மறைவானவற்றை ஈமான் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டது, வெளிப்படையில் "மறைவு" என்பதன் பொருள், அல்லாஹுத்த ஆலாவின் தாத், ஸிபாத்துகளாகும், அல்லாஹுத்த ஆலா வின் தாத், ஸிபாத்துக்களை மட்டும் நம்புவது முத்தகியாவதற்குப் போதாது, அதோடு சேர்த்து முந்திய நபிமார்கள், வேதங்கள் , கியாமத் நாள் உள்ளிட்டவையையும் ஈமான் கொள்வதோடு மறுமையில் உறுதி பூண்டிருக்கவும் வேண்டும் 

என்று இத்திருவசனத்தில் சுட்டிக் காட்டப்படுகின்றது.


முந்திய திரு வசனத்தில் எழுத வாசிக்கக் தெரியாத மக்கத்து முஷ்ரிக்குகள்ஈமான் கொண்டு முத்தகியாவதற்குரிய வழிகளைப்பற்றிக் கூறப்பட்டது,ஏனெனில், அவர்களுக்கு நுபுவ்வத்,வானத்து வேதங்கள்,கியாமத் நாள் உள்ளிட்ட யாவும் முற்றிலும் மறைவாகும், இவர்களுக்கு இவை பற்றி முற்றிலும் தெரியாது , ஆகவே , முதல் திருவசனனத்தில் இவர்களைப் பற்றிக் கூறப்பட்டது, இப்போது வேதம் கொடுக்கப்பட்ட எஹூதி, நஸாராக்களி லிருந்து ஈமான் கொண்டோரை விளித்துக் கூறப்படுகின்றது ,இவர்கள் ஆரம்பத்திலிருந்தே நுபுவ்வத், வேதங்கள் ,கியாமத் நாள் பற்றியெல்லாம் அறிந்திருந்தனர், இதிலிருந்து இத்திருவேதம் இருதரப்பாருக்கும் பூரணமாக ஹிதாயத் செய்யக் கூடியதாக இருப்பதை அறிய முடிகின்றது!


3- இத்திருவசனம் முந்திய திருவனத்திற்கு விளக்கமாகும், 

முந்திய திருவசனத்தில் , மறைவானவற்றை ஈமான் கொண்டவர்கள் "முத்தகி" என்று கூறப்பட்டது, அவர்கள் அனைத்து வேதங்களையும் ஈமான் கொண்ட மக்கள் என்று விளக்கமாக இதில் கூறப்படுகின்றது. இந்த இரு தொடர்புகளிலுமுள்ள "மறைவானவை" என்பது , மறைந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கும்.


"உம்தரப்பில் இறக்கப்பட்டது" என்பது, வெளிப்படையான வஹியாகிய திருக்குர்ஆனையும், நபியவர்களின் கல்பில் போடப்பட்ட ஹதீதையும்,, அன்னாரின் திருவாய் மலர்ந்தருளிய யாவற்றையும் நம்புவது ஈமானுக்கு அவசியமாகும், ஏனெனில் , இவை யாவும் றப்பின் தரப்பிலிருந்து வருவதாகும், 


திருக்குர்ஆன் கூறுகின்றது .


وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى 


எமது நேசர் மன இச்சைப்படி பேசுவதில்லை, அவை அனைத்தும் அவர்கள் பால் வஹியாக வழங்கப்படுகின்றது.

ஆகவே, எவராவது ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றை நிராகரித்தால் காபிராகிவிடுவார்,


"உங்கள் பால் இறக்கப்பட்டதை" என்பதற்குள் அன்னாரின் கல்பில் போடப்பட்ட வை, காதில் கூறப்பட்டவை, கண்ணால் பார்த்தவை யாவும் இதற்குள் அடங்கும், ஆகவே , தொழுகையின் எண்ணிக்கை, தொழும் விதம், ஸகாத்தின் அளவு உள்ளிட்டவையும் இதற்குள் அடங்கும்.


"உங்களுக்கு முன் இறக்கப்பட்டதை" என்பதிலிருந்து

எவ்வாறு திருக்குர்ஆனை நம்புவது பர்ழாக இருப்பது போன்று முந்திய வேதங்களையும் ஈமான் கொள்ள வேண்டியது பர்ழாகும். முந்திய வேதங்கள் உண்மையானவை என்று நம்பினால் போதும்,விபரமாக அறிய வேண்டும் என்பதும், அதன்படி செயல்படவேண்டும் என்பதும் அவசியமில்லை,ஆனால், திருக்குர்ஆனின் அவசியமான சட்டங்களை விலாவாரியாக அறிந்திருப்பது "பர்ளு ஐன்" ஒவ்வொருவருக்கும் கட்டாய கடமையாகும்.


திருக்குர்ஆனை ஈமான் கொள்ளுமாறு கூறப்பட்ட தே தவிர, அதன்படி அமல் செய்யுங்கள் என்று கூறப்படவில்லை, மாற்றப்பட்ட திருவசனங்களை நம்புவது கடமை , அதன்படி செயல்படுவது அநேகமாக தடை , 


 ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக இருந்தது, ஆயினும், அதை நோக்கித்தொழுவதற்கு இப்போது தடைஉள்ளது , ஆகவேதான் திருக்குர்ஆன் இங்கு ஈமான் கொள்வதைப்பற்றிக்கூறியது, செயலைக் கூறவில்லை, 


 மூன்று இடங்களில் நமக்கு தங்க வேண்டியுள்ளது,


1- சில காலம் உலகத்தில்,


2- சில காலம் கப்றில், அதாவது பர்ஸகில்


3- நிரந்தரமாக கியாமத்தில். 


உலகத்தின் ஆரம்பம் பிறப்பிலிருந்து மரணத்தோடு முடிகின்றது, பர்ஸகின் வாழ்க்கை மரணத்தோடு ஆரம்பித்து கியாமத்தோடு முடிகின்றது, மறுமையின் வாழ்வு கியாமத்தில் ஆரம்பித்து முடிவில்லாமல் இருக்கின்றது. 

 "துன்யா"என்றால் நெருக்கமானது அதாவது அழிவு நெருக்கமானது என்று பொருள் அல்லது இழிவான பொருள்,


 "பர்ஸக்", என்றால் திரை என்று பொருள் உலகவாழ்வுக்கும் , மறுமை வாழ்வுக்கும் இடையில் ஒரு திரை உண்டு, அங்கு எந்த அமலையும் செய்ய முடியாது, செய்தாலும் அதற்குக் கூலி கிடையாது. ஆகவேதான் "பர்ஸக் "எனப்படுகின்றது.


 "ஆகிறத்" என்பது வேறுவிதமான வாழ்க்கையைக் குறிக்கின்றது. 


உலக வாழ்க்கை புலக்காட்சிக்குட்பட்டது , ஏனைய இரண்டும் மறைவானவை எனவே, உலகத்தை ஈமான் கொள்ள வேண்டியது கடமையல்ல, ஏனைய இரண்டையும் ஈமான் கொள்ள வேண்டியது அவசியமாகும்., 

 

'"அவர்கள்தான் மறுமையில் உறுதி கொண்டவர்கள்"' என்பதில் முத்தகீன்களை மட்டுப்படுத்திக் கூறப்பட்டுள்ளது, ஏனெனில் , ஹிந்து, புத்தீஸ், ஆரியர், சீக்கியர் உள்ளிட்டோர் மறுமையை நம்பவில்லை, யஹூதிகளும், நஸாறாக்களும் பிழையாக விளக்கியுள்ளனர், ஆகவேதான் முஃமின்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


யகீனுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன.


1-ஏதாவது ஒரு விடயத்தை சந்தேகமில்லாமல் அறிவது, அதாவது, முதலில் சந்தேகமிருந்து பின் நீங்கி விடுவது.


2- ஆதாரங்களோடு சந்தேகமில்லாமல் அறிவது, 

அல்லாஹ்வின் அறிவை யகீன் என்பதில்லை, ஏனெனில் அல்லாஹுத்த ஆலாவின் அறிவு ஆதாரங்களினால் வந்ததல்ல, இவ்வாறுதான் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நுபுவ்வத் பற்றிய அறிவை யகீன் என்பதில்லை, ஏனெனில், நபியவர்களுக்கு "நுபுவ்வத்" பற்றி முதலில் சந்தேகமிருக்கவில்லை, ஆதாரங்களால் இதை பெறவும் இல்லை, 


. இமாம் அபூ லைதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


யகீன் மூன்று வகைப்படும்,


1-கண்டு உறுதி கொள்வது,

 

2- செய்தி கேட்டு உறுதி கொள்ளுதல் ,


3-ஆதாரங்களால் உறுதி கொள்ளுதல்,


 இங்கு பிந்திய இரண்டு வகைகளையும் குறிக்கிறது, ஷரிஅத்தில் செய்தியைக் கேட்டு உறுதி கொள்வதை மட்டுமே இங்கு குறிக்கும்,ஒருவர் நபியை நிராகரித்துவிட்டு தனது புத்தியில் ஆராய்ந்து விளங்கி நம்பினால், அதற்கு "ஈமான்" என்று கூற முடியாது! ஆகவேதான் மறுமைக்கான உறுதி வேதங்களுக்குப் பின் கூறப்பட்டுள்ளது,அதாவது, வேதங்கள் கூறிய படி உறுதி கொள்ளவேண்டும்.


 இப்போது சிலர் இஸ்லாமிய ஷரீஅத் கடமைகளை புத்தியால் நிறுவ முயல்கின்றனர், இவர்கள் வேதங்கள் கூறியதை ஏற்காமல் புத்தியின் ஆதாரங்களை ஆதாரமாகக் கொள்வதால் இவர்கள் "முஃமின்கள்" அல்லர்.


ஸூபியாக்கள் மத்தியில் "யகீன்" மூன்று வகைப்படும். 


1- கேட்டு அறிவது, علم اليقين 


2- பார்த்து அறிவது, عين اليقين 


 3- தன்னை அழித்து அறிவது,

 حق اليقين


சாதாரணமாக ஒருவர் தீயை பார்த்து' " தீ' "என்று அழைக்கின்றார், மற்றவர் "தீ." க்கு பக்கத்தில் இருந்து தீயின் சூட்டை உணர்ந்து அறிகிறார், மூன்றாம் நபர் தீக்குளித்து அணு அணுவாக அனுபவித்து நாவாலும், நிலையாலும் கூறுகிறார்.


தக்வாவுக்குரிய அக, புற அனைத்து விடயங்களையும் நம்பி, அதன்படி முழுமையாக செயல்படுவதற்கான தௌபீக்கை கிருபை உள்ள ரஹ்மான் நமக்குபூரணமிகத் தந்தருள் புரிவானாக ஆமீன்.



اولئك علي هدي من ربهم واولئك هم المفلحون..


2: 5- இவர்கள்தான் தனது றப்பின் தரப்பில் உள்ள வழிகாட்டுதலில் இருப்பவர்கள், இன்னும், இவர்கள்தான் நோக்கத்தை அடைந்த வெற்றியாளர்கள்.

••••••••••••••••••••••••••••••


இச்சொற்றொடர் முந்திய திருவசனத்தின் முடிவைக்கூறுவதாகும், முதலில் அமலைப் பற்றி கூறப்பட்டது, இப்போது அதன் பலனைப் பற்றிக் கூறப்படுகின்றது, இதன் முடிவு நேர் வழியிலிருப்பதும், வெற்றி பெறுவதுமாகும்.


'அந்தக் கூட்டம்' என்பது, சஹாபாக்கள்,அல்லது தக்குவாவின் பண்புகளைச் கியாமத்து நாள் வரையிலும் சுமந்வர்கள் , '"ஹிதாயத்தின் மீது"' என்பதன் பொருள்,"ஹிதாயத்" அவர்களை மிகைத்து விட்டது என்பது கருத்து, அதாவது, "ஹிதாயத்" அவர்களின் பிடிக்குள் வந்துவிட்டது, இன்ஷா அல்லாஹ் அது அவர்களை விட்டும் விடுபடாது, காரணம் அது அல்லாஹ்வின் நன்கொடையாகும்.


இவர்கள்தான் (اولئك) என்று இரு முறை கூறப்பட்டதன் நோக்கம் முத்தகிகளின் பண்புகள் இரு முறை கூறப்பட்டுள்ளன. 


1- மறைவானவற்றை ஈமான் கொள்ளல், தொழுகையை நிலை நிறுத்தல், அல்லாஹ்வின் வழியில் செலவழித்தல். 


2- வானத்து வேதங்களை ஈமான் கொள்ளல், மறுமையில் உறுதி கொள்ளல்.


முதற்பண்புகளின் மூலமாக ஹிதாயத்தின் இருந்தார்கள், இரண்டாவது பண்புகளின் மூலமாக வெற்றி பெற்றார்கள், முதல் பண்புகள் பொதுவான முஸ்லிம்களுக்கும், இரண்டாவது பண்புகள் உலமாக்கள் உள்ளிட்ட ஏனையவரகளுக்குமாக இருக்கலாம்‌.


அவர்கள் (هم) என்பது, முத்தகீன்கள் மட்டும்தான் என்பதை அறிய முடிகின்றது, வெற்றியாளர்கள் என்பது உலகத்தில்,கப்ரில், மறுமையில் வெற்றியாளர்களாகும்‌.


உலகத்தில் வெற்றியாளர் என்பது ,

அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாத் அகீதாவில் சிறப்பாக இருப்பது, நல்லமல்களுக்கு நல்லுதவியை (தௌபீக்கை) ப்பெற்றிருப்பது ;


கப்ரில் வெற்றி என்பது,

மரணிக்கும் போது 

நல்ல முடிவோடு மரணிப்பது, கப்ரில் கேள்விகளுக்கான விடைகளைக் கூறுவதில் ஹிதாயத்திலிருப்பது,பின்னர், பர்ஸகின் நிஃமத்துக்களால் வெற்றி பெறுவது.


 கியாமத்தின்" ஹிதாயத்" வெற்றி என்பது, கியாமத்தின் கேள்விகளுக்கு மலக்குகளின் விடைகளால் வழிகாட்டப்படுவார்கள், பின்னர், பாவமன்னிப்பால் வெற்றி பெறுவார்கள்.


"நேர்வழி "என்பது ,ஷரிஅத்தில் நடப்பது, "வெற்றி" என்பது, ரப்பு தன் பக்கம் ஈர்ப்பது என்று சூபியாக்கள் கூறுகின்றனர், மேலும் எவர் நல்லமல்கள் என்ற அக்கினியால் தனது இருப்பு (வுஜூத்) என்ற திரையை எரிக்கின்றாரோ ,இன்னும், உலகத்தின் பார்வையை புறந்தள்ளிவிட்டு மறுமையை முஷாஹதா (காட்சி) காணுகின்றாரோ அவரை ரப்பானியத்தான் ரஹமத் தன் பக்கமாக ஈர்க்கின்றது ;அதாவது "ரஹமத்" ஈர்க்கக்கூடியது ;இவர் மஜ்தூப் ஈர்க்கப்பட்டவர் ;அல்லது இவர் "தாலிப்' தேடுபவர் அவன் தேடப்பட்டவன்,(மத்லூப்) இது முடிவில்லாத நிலையாகும், இதை வார்த்தைக்குள் அடக்க முடியாது!


யா அல்லாஹ்! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பொருட்டால் இம்மை, மறுமை உள்ளிட்ட அனைத்திலும் பரிபூரணமான வெற்றியை தந்தருள் புரிவாயாக! ஆமீன்.