السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 8 December 2025

1806 ல் அடிப்படைவாதிகளால் ஜன்னத்துல் பக்கீயில் சஹாபாக்களின் கப்ருகள் இடிக்கப்பட்ட வரலாறு

 


1744 ஆம் ஆண்டு எமிரேட் ஆப் டிரியா Emirate of Diriyah எனும் அடிப்படை வாத கூட்டணியும்....

1806 ல் அடிப்படைவாதிகளால் ஜன்னத்துல் பக்கீயில் இழைக்கப்பட்ட சஹாபாக்களின் பாரம்பரிய கப்ருகள் இடிப்பும் 

-----------------------------------------------------------------

உலக முஸ்லிம்களின் வரலாற்றிலே பாரிய பாரம்பரிய சேதங்களும் அப்பாவி சூஃபி முஸ்லிம்களின் உயிர் இழப்புகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.


உதாரணமாக 2009 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானில் தாலிபான் போராளிகள் சூஃபி வழிபாட்டுதலங்கள் மற்றும் கூட்டங்களை குண்டு வீசித்தாக்கி டஜன் கணக்கான அப்பாவி சூஃபி மக்களை கொன்றதையும்,சூபி கவிஞர் ரஹ்மான் பாபாவின் மக்பராவை தாலிபான் போராளிகள் இடித்தனர் என்று UNESCO மற்றும் Thimbuktu செய்திகள் பகிஷ்கரித்த செய்திகளும் மறக்க முடியாத ஒன்று .


ஏன் சிரியா மற்றும் ஈராக்கில் ஆயுதமேந்திய இஸ்லாமிய அடிப்படை வாத குழுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான சூஃபி மக்பராக்கள் மற்றும் சியாரங்களை அழித்துள்ளனர் என்ற செய்தியை மறக்க முடியுமா 


அல்லது மாலியில் 2012 ஆம் ஆண்டில் "333 புனிதர்களின் நகரம் "என்று அழைக்கப்பட்ட யுனஸ்கோ உலக பாரம்பரிய தளமான டிம்பக்டுவில் உள்ள ஏராளமான சூஃபி மக்பராக்கள் அன்சார் டைன் என்ற அடிப்படை வாத போராளிகளால் தகர்க்கப்பட்ட வரலாற்று செய்திகளை மறக்கமுடியுமா? 


முஸ்லிம்களின் பாரம்பரியங்களை அழிப்பதின் மூலம் மாத்திரமே இஸ்லாத்தை அழிக்கமுடியும் என்ற சதித்திட்டங்கள் ,வெள்ளையர்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாகும், ஆனால் சரியான கொள்கை உறுதியின் காரணம் முஸ்லிம்களை அசைத்து பழம் பறிக்க முடியாமல் போனதும் அவர்களின் பலத்த கோரத்தாக்குதல்களுக்கு கனத்த காரணம். 


அதன் விளைவு இப்னு அப்தில் வஹாப் என்பவரது அடிப்படைவாத ஈர்ப்பு மற்றும் இஸ்லாமிய அகீதா சிந்தனையில் ஏற்ப்பட்ட கலப்படம் மற்றும் பேராசை, வெள்ளையர்களின் மாயை துணியில் அவரை மாயச்செய்தது வரலாற்று உண்மை.


இஸ்லாமிய ஆய்வு அறிஞர் ஆதில் முஹம்மதின் கூற்றுப்படி: வஹாபியர்கள் ஜன்னத்துல் பகி ஐ அழித்ததற்கு அரசியல் வேர்கள் காரணம் என்பது போல, இப்னு அப்தில் வஹாபிற்கு அரசியல் பலம் முஹம்மத் பின் சவுத் ஆல் கிடைத்தது.


இன்றைய சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் இரண்டு மிக முக்கியமான இஸ்லாமிய மக்பராக்களில் ஒன்றான ஜன்னத்துல் பகி 1806 களில் அங்கே சஹபாக்களின் கப்ருகளுக்கு மேல் அடையாளச்சின்னங்கள் இருப்பது கூடாது ஷிர்க் என்ற புரட்சியை இந்த அடிப்படை வாதிகளின் சீடர்களால் வெள்ளையர்களின் கனவுபோல் இடித்து தகர்க்கப்பட்டன .


19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரிய புனரமைப்பிற்கு பிறகு 1925 ல் மீண்டும் அடிப்படைவாதிகளால் நமது நபிகளாரின் இஸ்லாமிய பாரம்பரிய ஆன்மீக குடும்பங்கள் மற்றும் குலபாக்கள் அடங்கப்பெற்றுள்ள ஜன்னத்துல் பகி அழிக்கப்பட்டது, சவுதி வம்சத்தினருக்கும் டிரியா எமிரேட் என்று அழைக்கப்படும் வஹாபி இயக்கத்தை பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான கூட்டணியே முதல் இடிப்பை மேற்க்கொண்டது என்று 

report of Demolition of al -Baqi கூறுகின்றது.


இதனால் ஹசன் இப்னு அலி,அலி இப்னு ஹுசைன் முஹம்மது அல் பகீர் மற்றும் ஜாஃபர் சாதிக் அலைஹிமுஸ்ஸலாம் போன்றோரின் மக்பராக்கள் இடித்து தகர்க்கப்பட்டதன் பின்னணி பாரிய பிரிட்டிஷ் சிந்தானதிக்கம் உள்ளமை குறிப்பிததக்கது.


அதே போலவே இரண்டாவது தடவையும் ஜன்னத்துல் பகியில் சவுதி வம்சத்தினராலும் வஹாபிசத்தை பின்பற்றுபவர்களாலும் ஆளப்பட்ட நஜ்த் சுல்தானகத்தின் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் இரண்டாவது முறையும் பாரம்பரிய சஹபாக்களின் மக்பரா ஆக்கிரமிப்பு இடிப்பை மேற்கொண்டதும் பாரிய வரலாற்று விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.


ஆனால் 14 நூற்றாண்டுகளாக நமது இஸ்லாமிய அறிஞர்களினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மரபுகளை ஷிர்க் என்றும் பித் அத் என்றும் கூறுவது மிகப்பெரும் வரலாற்று அறியாமையாகும்.


சஹாபி அகீல் இப்னு அபீதாலிபை பற்றி( ரலியல்லாஹு அன்ஹு ) வை வரலாறு படித்தவர்களுக்கு நன்றாக பரிச்சியம் உள்ள மனிதர், அதாவது இஸ்லாமிய வரலாற்று பாரம்பரியங்கள் மற்றும் இஸ்லாமிய தொல்லியல்கள் இவரின் வீட்டில் காணப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதின் படி, தாரீகுள் மதீனா 1/120 ம் பக்கத்தில் குறிப்பிட்ட வரலாற்று செய்தியை பாரிய ஒரு விடயமாக வரலாற்று ஆய்வாளர்கள் மேற்க்கொள் காட்டியுள்ளனர்.


அதாவது சஹாபி அகீல் ரலி ஒரு நாள் தனது வீட்டில் ஒரு கிணற்றை தோண்டும்போது அங்கே நபிகளாரின் மனைவியரில் ஒருவரான உம்மு ஹபீபா பிந்த் சஹ்ர் இப்னு ஹர்ப் என்பவரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை அக்குழியில் கண்டார்கள், கண்டதும் அப்படியே மண்ணை மூடி அதன் மேல் கட்டடம் ஒன்றை கட்டியதாக வரலாறு காணப்படுகின்றன.


அதே போல இமாம் நவவி تهذيب الأسماء واللغات என்ற கிரந்தத்தில் ஷூஐப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு பாலஸ்தீனில் உள்ளது அதிலே பெரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும் மிக தொலைவில் இருந்து மக்கள் சியாரத்து செய்ய வருகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.


இவ்வராக சஹபாக்களின் பாரம்பரியங்கள் இருக்கும் போதும், அதே நேரம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தினமும் ஜன்னத்துல் பக்கியிற்கு சென்று அங்குள்ள நபித்தோழர்கள் மற்றும் தனது குடும்பதார்களுக்கும் பிரார்த்தனை செய்யும் போதும் தோன்றாத மார்க்க சுத்திகரிப்பு ஏன் ? இவர்களுக்கு தோன்றியது என்ற கேள்வியே சாலச்சிறந்தது.


20 ஆம் நூற்றண்டுகளின் முன்பு ஜன்னத்துல் பக்கியில் உள்ள சில கப்ருகளில் டோம் போன்ற பெரிய கட்டடங்கள் மற்றும் மக்பராக்கள் இருந்ததாக ஆங்கிலேய வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன , ஆனால் 1765 ஆம் ஆண்டில் முஹம்மத் பின் சுஊத் இறந்த நேரத்தில் நஜ்தின் பெரும் பகுதி இப்னு சுஊதின் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற வரலாறும் இப்னு அப்துல் வஹாபின் ஆதிக்கத்தையும் நஜிதின் செல்வாக்கையும் உணர்த்துகின்றது.


இதன் விளைவு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சொந்த சகோதரன் ஜைத் இப்னுல் கத்தாப் என்ற சஹாபியின் மக்பராவை இப்னு அப்தில் வஹாப் சொந்தக்கரத்தால் இடித்து நொறிக்கினார்.


வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சூஃபி பாரம்பரிய மக்பராக்கள் இவ்வரான ஆங்கிலேய கட்டுரைகள் கூறுவது போன்று அடிப்படை வாதிகளால் தகர்க்கப்பட்டுள்ளமை மற்றும் சூபி அப்பாவி அறிஞர்கள் நஞ்சு வைத்து கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.


இதனாலேயே "நஜிதிலே குழப்பங்களும் ஷைத்தானின் கொம்பும் வெளிப்படும்" என்ற நபிகளாரின் பொன்மொழியை மறைத்து இன்றைய அடிப்படைவாதிகள் நஜிதை ரியாத் ஆக பெயர்மாற்றம் செய்துள்ளமை மிகப்பெரும் ஊர் பெயர் மாற்று துரோகமாகும்.


நிச்சயம் இவ்வரண இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தப்படும் குழுக்களிடமிருந்தும் அடிப்படை வாத செயற்பாடுகளில் இருந்தும் நமது வாலிப சமூகம் விழித்தெழ வேண்டும்.


Ash Shaike Nibras Saqafi 

Sri Lanka