السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 05

 


*திருக்குர்ஆன் விளக்கம்*

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில். *ஏ.எல்* .

 *பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••••

           தொடர்: 5


ومما رزقنهم ينفقون 


நாம் வழங்கிய பாக்கியங்களிலிருந்து நமது வழியில் செலவு செய்வார்கள்.

••••••••••••••••••••••••••••••


 *தொடர்பு* 


இங்கு முத்தகியின் பண்புகளின் ஒழுங்கு முறை கூறப்படுகின்றது, 


1- முதன் முதலில் ஈமானைப்பற்றிக் கூறப்பட்டது, அதுதான் அனைத்திற்கும் அடிப்படை , பின், அனைத்து அமல்களிலும் மேலான தொழுகை பற்றிக் கூறப்பட்டது, இது முஃமின்களின் உடலோடு தொடர்பானது , இப்போது அல்லாஹ்வின் வழியில் செலவு செய்வது பற்றிக் கூறப்படுகின்றது, இது பொருளோடு தொடர்பானது, இவ்வாறு கூறப்பட்டதற்கு சில நியாயங்கள் உள்ளன.


1- மனிதன் பிறந்ததும் முதலில் உடல் மட்டும்தான் அவனோடு இருக்கும், பொருள் பின்னர் வருவது ,ஆகவே , முதலில் தொழுகையும், அடுத்து செலவு செய்வது பற்றியும் கூறப்படுகின்றன


2- ஸகாத் தொழுகைக்குப் பின் கடமையானதால் தொழுகைக்கு அடுத்து ஸகாத்தைக்கூறப்படுகின்றது


3- ஈமானில் வெற்றி,(நஜாத்) தொழுகையில் பிரார்த்தனை, (முனாஜாத்) செலவு செய்வதில் படித்தரங்கள் (தரஜாத்) உள்ளன, படித்தரங்களின் தகுதி பிரார்த்தனைக்கு அடுத்து இருப்பதால் தொழுகை முந்தியும், ஸகாத் பிந்தியும் வந்துள்ளது, 


4- ஈமான்,சுப செய்தியும், , தொழுகையில் குற்றப் பரிகார மும், , செலவு செய்வதில் பரிசுத்தமும் இருக்கின்றன, ஆகவே, செலவு செய்தல் என்பது ஈமான், தொழுகை ஆகிய இரண்டுக்கும் பின்னால் வந்துள்ளது.


5- ஈமானில் கண்ணியம்,தொழுகையில் நெருக்கம் , செலவில் அதிகரிப்பு இருப்பதால் செலவழிப்பது இறுதியாக வந்துள்ளது.


இத்திருத்திருவசனத்தில் நான்கு விடயங்கள் கூறப்பட்டுள்ளன.


1-தக்வா.

 

2- மறைவான

வற்றை ஈமான் கொள்ளல்.


3- தொழுகை

யை நிலைநாட்டல்,


4- செலவு செய்தல்..


இந்த நான்கும் நான்கு கலீபாக்களின் நற்குணங்கள் ஆகும்.


1- ஹளறத் ஸித்தீகுல் அக்பர் றழியல்லாஹு முத்தகீன்களின் இமாம்..


2- ஹளறத் உமர் பாரூக் றழியல்லாஹு முஃமீன்களின் தலைவர்.


3- ஹளறத் உதுமான். றழியல்லாஹு அன்ஹு தொழுகையாளிகளின் இமாம்‌


4- ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களின் இமாம்

.

தப்ஸீர் றூஹுல்பயான்.


விளக்கம்: தப்ஸீர்.


நாம் வழங்கிய பாக்கியங்களிலிருந்து என்பதில் வரும் من என்ற இடைச்சொல் கொஞ்சம் என்ற பொருளைக் கொடுக்கும் , இதன்படி, உங்கள் முதல்களில் "சிலதை" என்று பொருள்படும், அனைத்தையும் வாரி இறைத்து விட்டு பிள்ளைகளைப் பிச்சைக்காறர்களாக விட்டுச்செல்வதை இஸ்லாம் வரவேற்க வில்லை.


"நாம் கொடுத்தவையிலிருந்து" என்ற சொற்றொடர் நாம் விரும்பி வழங்கிய சுத்தமான ஹலாலானவை என்பதை சைக்கினைச் செய்கிறது ;


ஷரீஅத்தில் ஏழுவிதங்களில் பொருளைச் செலவு செய்வது இபாதத்தாக இருக்கின்றது,


1-ஸக்காத்


 2- ஸதக்கத்துல் பித்றா


3- உபரியான தான தர்மம் ;


4-வக்ப்.


 5-வஸிய்யத்


 6- ஹஜ்ஜுக்கான செலவு


7-தனது பொறுப்பிலுள்ள உறவினர்களின்செலவுக்கு அவசியமான அளவு கொடுத்தல்.


"செலவழித்தல்" என்பது அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடிச் செய்யும் கடமையான, உபரியான செலவைக் குறிக்கும், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பொதுவாக "ஸகாத்" என்று குறிப்பிட்டாலும், இதற்குள் ஆயிரம் சட்ட சிக்கல்கள் பொதிந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.


ஸூபிஸ விளக்கம் : 


"செலவு செய்தல்" என்பதற்கு, ஸூபியாக்கள் பின்வரும் அகமிய விளக்கத்தைக் கூறுகின்றார்கள்.


 இத்திருவசனம் எவ்வாறு வெளிப்படையான நிஃமத்துக்களைச்செலவு செய்வதைப்பொதிந்துள்ளதோ, அவ்வாறே அகவியல் (பாதின்) சார்ந்த நிஃமத்துக்களைச்செலவு செய்வதும் இதில் பொதிந்துள்ளது. ஆகவே, செல்வந்தன் தனது செல்வத்தைச் செலவு செய்வது போன்று, அறிஞர்கள் தங்களின் அறிவால் போதித்தல் ,எழுதுதல் ;கற்றுக் கொடுத்தல் மூலம் செலவு செய்ய வேண்டும்,வணக்கவாளி தன் உயிரால் ஹக்குத்தாலாவை வழிபடுவதில் செலவு செய்ய வேண்டும், ஆரிபீன்களான ஞானிகள் தனது மனதுக்குள் உலகியல் அசிங்கங்கள் உள்நுழையாமலும், உலகியல் சிந்தனையில் சிக்காமலும் செலவு செய்ய வேண்டும், 


மனம் என்ற வீட்டை நண்பனின்( அல்லாஹ்வின்) வருகைக்காக சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும், அசிங்கமான இடத்திற்கு அரசர் வரமாட்டார், கப்பலுக்குள் புகுந்த நீரை வெளியேற்றுவது போன்று மனதிலிருக்கும் உலகியல் அசிங்கங்களை வெளியேற்ற வேண்டும்.


 கப்பலுக்கு நீர் அவசியம், கப்பலுக்குள் நீர் புகுந்தால், கப்பல் மூழ்கி விடும்! என்று ஒரு பாரசீக கவிஞர் அழகாக கூறியுள்ளார், மனதுக்கு சிந்தனை அவசியம்! சிந்தனை மனதுக்குள் புகுந்து விட்டால், மனம் அழிந்து விடும், செல்வந்தன் செலவு செய்து பையைக் காலியாக்க வேண்டும், சூபி (தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் திரையாக இருக்கும் "தன்னுணர்வு" என்ற) வேற்றுமையை வெளியேற்றி கல்பைச் சுத்தமாக்க வேண்டும் என்று மௌலானா ஜலாலுத்தீன் றூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


ஸகாத்தின் இரகசியங்களும், பயன்களும்.


1- செலவு செய்வதால் பொருள் வளரும் என்பது இயற்கையான விடயமாகும், ஓர் அறிஞர் தனது அறிவை செலவு செய்யாவிட்டால் அறிவுஅவர் கையைவிட்டும் போய்விடும், கிணற்றை இறைக்காவிட்டால் கிணறு பாழாகும், மரங்களில் சில கிளைகளைத் தறிக்காவிட்டால் கனிகள் குறைவாகும், இவ்வாறு சொத்தின் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் , சொத்தின் வளர்ச்சி தடைப்படும், 


2- இயற்கை ஒவ்வொரு பொருளிலிருந்தும் ஸக்காத்தை எடுத்துக் கொள்கின்றது, நோய் ஆரோக்கியத்தின் ஸகாத், தூக்கம் விளிப்பின் ஸக்காத், சிரமம், சுகத்தின் ஸக்காத், வயல்களின் விளைச்சலில்ஏற்படும் அழிவும் , பறவைகள் உண்பதும், விவசாயத்தின் ஸகாத் ஆகும், தனது சொத்தின் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், இயற்கையின் நியதிக்குமாற்றம் செய்வதாக அமையும், ,


3- எவராவது ஒருவருக்கு தேவையை விட அதிகமாகக் கொடுக்கப்பட்டால்,அவர் அதை வேறு இடத்தில் செலவு செய்ய வேண்டும், நாய் போன்ற இதர மிருகங்களின் மடியில் அதன் குட்டிகளுக்குப் போதுமான பால்மட்டுமே உண்டு, ஆனால், எருமை, பசுவில் அதன் கன்றுக்குத் தேவையானதை விட அதிக பால் அதன் மடியில் உள்ளது, அதனால் அதன் பாலில் அடுத்தவர்களு க்கும் பங்கிருக்கின்றது, 


  உங்களின் சொத்து உங்களின் தேவைக்கு அதிகமாக இருந்தால் , அதில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கின்றது, மேலதிகமானதை வேறாக்குவது அவசியமாகும்.


நகத்தில், முடியில் மேலதிகமான தை அகற்றுகின்றோம், இவ்வாறு வயிறு மேலதிகமான கழிவுகளை வெளியேற்றுகின்றது, அது தங்குவது நோய், இவ்வாறு சகாத்தின் பணமும் வெளியேற்றப் படவேண்டும், 


2- அரசாங்கம் நமக்குச்செய்து தரும் பல வகையான உதவிக்கும், வசதி வாய்ப்புக்களுக்கும் நம்மிடமிருந்து வரி அறவிடுகின்றது, அதைச்செலுத்தாதவர் தண்டனைக்குரிய குற்றவாளியாவார், அவ்வாறு றப்புத்த ஆலா நமக்கு கணக்கற்ற அருட்பாக்கியங்களையும், வசதிகளையும் செய்து தந்திருக்கின்றான், அதற்காக நாம் சொத்தில் சிலதை செலவு செய்யக்கூடாதா?


 உண்மையில் சொத்தும், விளைச்சலும் அவனுடையதுதான், அப்படியிருந்தும் செலவு செய்வதற்கு நற்கூலியைத்தருகின்றான்,


மனதின் இயல்பில் மஹப்பத் இருக்கின்றது, சில மஹப்பத் பயன்மிக்கது, சில வீணானது, சில நஷ்டமானது, அல்லாஹ்வையும் , இன்னும் அவனுடைய திருத்தூதரையும் நேசிப்பது பயன்மிக்கது, உலகத்தில் உள்ள பொருட்களை நேசிப்பது வீணானது, ஷைத்தானின் பொருட்களை நேசிப்பது நஷ்டமானது,


முதல் வகையான நேசத்தை வளர்ப்பதற்காக ஆல்லாஹுத்த ஆலா இபாதத்துக்களை வைத்துள்ளான், எவருக்கு கீழ்படிவது அதிகமுள்ளதோ, அவரின் மஹப்பத்தில் அதிகரிப்பு காணப்படும், பிந்திய இரண்டு ம‌ஹப்பத்துக்களையும் வெட்டி வீழ்த்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன,


 கப்றுகளை ஸியாறத் செய்வதன்மூலம் உலகத்தின் மோகம் சிதைவடையும், இவ்வாறான வழிகளில் ஸகாத் தும், தர்மங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, தான் சம்பாதித்ததை தனது கரங்களால் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது சொத்திலிலுள்ள நேசம் மனதில் வருவதில்லை,


ஸகாத் கொடுப்பதால் ஏற்படும் பெரும் நன்மையாதெனில், முதல் பெருகுவதாகும், அழிவு , நஷ்டம் உள்ளிட்டவைவராமல் முதல் பாதுகாக்கப்படும்,


தபாஸீர் றூஹுல்பயானில் இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை கூறப்படுகின்றது. 


 ஆயுளில் அரைப்பகுதி செல்வமும், மறு பாதி வறுமையும் இருக்கும் ஒரு மனிதனிடத்தில் எது முதலில் வேண்டும் என்று கேட்குமாறு ஒரு நபிக்கு அல்லாஹுத்த ஆலா வஹி அறிவித்தான், முதலில் செல்வம் வேண்டும் என்று அவர் பதில் கூறினார், எனவே, அவருக்கு செல்வம் வழங்கப்பட்டது, அவர் தனக்குச் செலவு செய்தார், எனினும்,சற்று அதிகமாக ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தான தருமங்கள் செய்தார்,


அவரின் ஆயுளின் பாதிக்காலம் கழிந்ததும் மீண்டும் அந்த நபிக்கு வஹிவந்தது, அவர் நமது நிஃமத்துக்களுக்கு நன்றி பாராட்டினார், நன்றி பாராட்டுவதால் நிஃமத்துக்கள் வளரும், ஆகவே ,அவரின் முழு ஆயுளிலும் செல்வமாகவே ஆக்கப்படும்என்று அல்லாஹுத்த ஆலா கூறினான்.