السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 29 December 2025

இமாம் அல்-புஹாரி (ரஹ்) - ஓர் வரலாற்றுப் பார்வை 01

 

இமாம் அல்-புஹாரி (ரஹ்) - ஓர் வரலாற்றுப் பார்வை.

ஹதீஸ் கலையின் பேரரசர்: 


றயீஸுல் முஹத்திதீன், நக்காஷுல் ஹதீதின் நபவிய்யிஷ்ஷரீப்

இமாம் அல்-புஹாரி (ரஹ்) - ஓர் வரலாற்றுப் பார்வை.


தொடர்:- 01


தொகுப்பு:- மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ .


​இயற்பெயர்: 


முஹம்மது பின் இஸ்மாயில் பின் இப்ராஹீம் பின் அல்-முகீரா பின் பர்திஸ்பா அல்-புகாரி.


​பிறப்பு: 


ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13 / கி.பி. 810, ஜூலை 21.


​பிறந்த இடம்: 


புகாரா, அப்பாஸியப் பேரரசு (தற்போதைய உஸ்பெகிஸ்தான்).


​மறைவு: 


ஹிஜ்ரி 256, ஷவ்வால் 1 / கி.பி. 870, செப்டம்பர் 1 (வயது 61).


​மறைந்த இடம்:


 சமர்கந்த், ஸாமானியப் பேரரசு.


​அடக்கம் செய்யப்பட்ட இடம்: 


புகாரி தர்கா (நிழற்குடை), புகாரா, உஸ்பெகிஸ்தான்.


​புனைப்பெயர் (குன்யா): 

அபூ அப்துல்லாஹ்.


​சிறப்புப் பெயர்: 


அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்).


​மதம்:


 இஸ்லாம்.


​பிரிவு: 


அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ.


​மத்ஹப் (சட்டமுறை):


 அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது (பெரும்பாலும் ஷாஃபி அல்லது முஜ்தஹித் எனக் கருதப்படுபவர்).


​தந்தை: 


இஸ்மாயில் பின் இப்ராஹீம் அல்-புகாரி.


​கல்வி மற்றும் பணி வாழ்வு

​காலம்: 


அப்பாஸிய காலம்.


​பிராந்தியம்: 


குராஸான் மற்றும் மா வரா அந்-நஹ்ர் (Transoxiana).


​கல்வி முறை: 


அஹ்லுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை வல்லுநர்கள்).


​முக்கிய ஆசிரியர்கள்: 


இமாம் அஹ்மத் பின் ஹன்பல், அலி பின் அல்-மதீனி, யஹ்யா பின் மயீன், இஸ்ஹாக் பின் ராஹவைஹ்.


​முக்கிய மாணவர்கள்:


 இமாம் முஸ்லிம் பின் அல்-ஹஜ்ஜாஜ், இமாம் திர்மிதி, இமாம் இப்னு குஸைமா, அபூ அல்-காசிம் அல்-பகவி.


​தொழில்:


 முஹத்திஸ் (ஹதீஸ் கலை அறிஞர்), ஃபகிஹ் (சட்ட அறிஞர்), முஃபஸ்ஸிர் (குர்ஆன் விரிவுரையாளர்).


​புலமை பெற்ற துறைகள்: 


ஹதீஸ் கலை மற்றும் அதன் குறைபாடுகள் (இலல்), ஹதீஸ் அறிவிப்பாளர் ஆய்வு (இல்முர் ரிஜால்), தஃப்சீர் (விரிவுரை), இலாமிய சட்டவியல் (ஃபிக்ஹ்) மற்றும் கொள்கை விளக்கம் (அகீதா).


​மிக முக்கியமான படைப்பு:-


​ஸஹீஹ் அல்-புகாரி (Sahih al-Bukhari) - குர்ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மிகவும் நம்பகமான நூலாக இது கருதப்படுகிறது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Sunday, 28 December 2025

திருக்குர்ஆன் விளக்கம்.13

 


*திருக்குர்ஆன் விளக்கம்.* 

••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

               தொடர்: 13

              -------------


أَلَا إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ


 2:12-

அவர்கள்தான் குழப்பவாதிகள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்பு: 


இதற்கு முன் முனாபிக்குகளின் முட்டாள்தனமான பேச்சைப்பற்றிக் கூறப்பட்டது , இப்போது அதற்கு மறுப்புக்கூறப்படுகின்றது,   எந்தளவு நீட்டி முழங்கி தங்களுடைய புகழைக் கூறினார்களோ அதைவிட அதிகமாக அவர்களின் குறையை எடுத்துக்கூறப்பட்டுள்ளது,


விளக்கம்: தப்ஸீர் 


இவர்கள்தான் முதல்தர குழப்பவாதிகள், இதோடு சேர்த்து  சீர்திருத்தத்தையும், குழப்பத்தையும், வேறுபடுத்திப்பார்க்கத்தெரியாதளவுக்கு  உணர்ச்சியற்றவர்களிலும் முதல் தரமானவர்கள்,  மனம் குருடாகுவதால் வெளி உறுப்புக்களும் பயனற்றுவிடுகின்றன.


இத்திருவசனத்தில்  الا அறிக !, என்று ஆரம்பம் செய்கின்றான், இச்சொல் பாராமுகமாக இருப்பவர்களை விளிப்பூட்டுவதற்காகவும்,  சில வேளை உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை தேசியப் படுத்துவதற்காகவும் வரும்,  அடுத்து ان என்ற சொல் பாதிக்கப்பட்டுள்ளது ,  இச்சொல் பேச்சை மறுக்கும் போது, அல்லது மறுப்பதற்கான சாத்தியம் காணப்படும் போது  இச்சொல் கையாளப்படும்.


 முனாபிக்கு கள் குழப்பவாதிகள் என்பதை மறுத்தனர், பலவீனமான முஸ்லிம்கள் முனாபிக்குகளின் வெளிப்படையான செயலைப் பார்த்து இவர்கள் சமாதான விரும்பிகள்,  முஸ்லிம்கள் யுத்தத்தை விரும்புபவர்கள் என்று கருதினார்கள்,  ஆகவேதான் இந்த இடத்தில் ان என்ற சொல் கையாளப்பட்டு  இவர்கள் ஒருபோதும் சமாதான விரும்பிகள் கிடையாது,  குழப்பவாதிகளே ஆவார்கள் என்று கோடிட்டுக் கூறப்பட்டது,  குழப்பவாதிகள் - المفيدون - என்ற சொல்  முனாபிக்கு கள் நாவாலும், சிந்தனையாலும் , உறுப்புக்களாலும் குப்றில் தோய்ந்த வர்கள், மனிதர்களை ஈமான் கொள்ள விடாமல் தடுக்கின்றார்கள், காபிர்களை அவர்களின் குப்றில் உறுதியாக இருக்கத் தூண்டுகின்றார்கள், பூமியில் அல்லாஹ்வின் நினைவைத் தடுக்கின்றார்கள் , இப்படியாக அவர்களின் குழப்பம் தோடர்கினறது, ஆகவே, இவர்கள் சகல தரப்பிலும் குழப்பவாதிகள் ஆகும்.  


எனினும் அவர்கள் உணரமாட்டார்கள் என்பதில் لا يشعرون  என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது , شعور என்ற வார்த்தை புலனால் அறிவதைக் குறிக்கும், இச்சொல் முனாபிக்குகளின் குழப்பத்தைக் கண்ணால் பார்த்து அறியக்கூடியதாக இருக்கும் என்பதை குறிக்கின்றது, இவர்களின் குழப்பம் வெளிப்படையாக இருந்தும் அதை ப்பார்த்து விளங்காத   மட்டிகளாக இருக்கின்றனர், 


தற்காலத்தில் முளைத்துள்ள இயக்கவாதிகளின் வெளிக்கோலமும், பிரச்சாரமும் நல்லது போன்றே கவர்ச்சி காட்டுகின்றன,, ஒரு கூட்டம் தொழுகைக்கு அழைப்பதாக வெளியில் கூறிக் கொண்டு முட்டாள்களைத் தலைவர்களாக்கி உலமாக்களை அவர்களின் சொல்கேட்டு அவர்களுக்குக் கீழ்படிந்து நடக்க வைதுள்ளது, குறிப்பிட்ட சில சிறப்பு  நூற்களை வாசிக்க வைத்து ஷரீஅத் சட்டங்களையும், மற்றும் திருக்குர்ஆன், ஹதீது, தஸவ்வுப் நூல்களையும் வாசிக்க விடாமல் தடுக்கின்றது,

 

பள்ளிவாசலில் தங்குவதாகக் கூறி பள்ளிவாசல்களின் சங்கைகளை நாசமாக்குகின்றது, சிறுவர்களையும், பாமரர்களையும் இயக்கத்தில் இணைத்து    அவர்களின் கோலத்தை மாற்றி பேசக் கற்றுக்கொடுத்து நீங்கள் எட்டு வருடங்கள் ஓதிய ஆலிம் களை விட சிறந்தவர்கள் என்று கூறி அவர்களின் மனதில் உலமாக்களையும், ஷரீஅத் ஞானத்தையும் பற்றிய மரியாதையை மனதிலிருந்து அகற்றி விடுகின்றது. 


மற்றுமொரு கூட்டம் படிக்கும் மாணவர்களையும், படித்தவர்களையும் வளைத்துப் போட்டு இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளாதாரம் என்றெல்லாம் கூறி அவர்களின் மூளையைச் சலவை செய்கின்றது.


இன்னுமொரு கூட்டம்  குர்ஆன் ஹதீது மட்டும்தான் உண்மை, ஏனைய மத்ஹபுகள்சார்ந்த அறிவுத் துறைகள் யாவும் குப்பைகள் என்று கூறி இஸ்லாத்தின் அடித்தளத்தை யே சுக்கு நூறாக்குகின்றது, இவர்கள் தங்களை நியாயப்படுத்த  பொருளாதார சில உதவிகளைச் செய்கின்றனர். 


மக்கள் இவர்களின் வெளிப்பேச்சையும், கோலத்தையும் பார்த்து ஏமாறுகின்றனர், இவர்களால் இஸ்லாமிய விழுமியங்கள் அழிந்து போவதையும், ஆத்மீக பக்தி உணர்வுகள் தேய்ந்து  போவதையும் கண்ணால் பார்த்தும் பலவீனமான மக்கள் அவர்களைக் குறைகாணத்தயங்குகின்றனர்.


தற்கால வஹாபிஸ சிந்தனை கொண்ட அத்தனை இயக்கங்களும் குழப்பம் விளைவிக்கும் சுத்தமான முனாபிக்குகள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகும், இவர்களுடைய உள்ளத்தில்  ஆழமாகப் பீடித்திருக்கும் தீராத நோயால்தான் நபிமார்களையும் ஸஹாபாக்களையும், இமாம் களையும், வலிமார்களையும் குறைகாண்கின்றார்கள்,


 மார்க்கத்தை விட உலக ஆதாயத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றார் கள்,  காபிர்களோடு அன்னியொன்னியமாக இருக்கவேண்டும், குர்பான் இறைச்சியை அவர்களுக்கும் வழங்கவேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். 


மொத்தத்தில்  இவர்களின் பிரச்சாரமும், சிந்தனைகளும் இஸ்லாத்தை வளர்ப்பதல்ல,, இஸ்லாத்தின் கௌரவத்தை உயர்த்துவதல்ல  மாறாக முஸ்லிம்களின் மத உணர்வை மழுங்கடிப்பதாகும். அன்று முனாபிக்குகள் செய்த அதே வேலையை இப்போது இந்த இயக்கங்கள் செய்கின்றனர்.


கிருபையுள்ள றஹ்மான் இத்தீய நயவஞ்சகக் கூட்டத்தின் வாடையும் நம்மில்  படாமல் பாதுகாப்பானாக! ஆமீன்.


ஸூபிஸ விளக்கம்: 

•••••••••••••••••••••••••••••••••

மனிதனுக்கான தொடர்பு உலகத்தோடும் உண்டு, மார்க்கத்தோடும் உண்டு, ஆயினும், உலகமும் , தீனும் ஒன்றுக்கொன்று எதிரானவை,  உலகத்தைச்   சமாளித்தால் மார்க்கம் முரண்டுபிடிக்கும், மார்க்கத்தின்  சீராக்கம் உலகத்தைப் பழுதாக்கிவிடும்,  


எதார்த்தத்தில் கவனம் செலுத்துபவன்  மார்க்கத்தை அதிகம் சிந்தையில் வைத்துக்கொள்வான், கணிசமான கட்டங்களில் மார்க்கத்திற்காக உலகத்தை உதறிவிடுவிடுவான் , வெளிப்படையாகவே மக்கள்  மார்க்கத்தைவிட உலகத்தை  முதன்மையானதாக புரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் உலகத்திற்காக மார்க்கத்தை  அழித்துக்கொள்கின்றனர், 


முனாபிக்குகள் இப்படியான மக்களைச்சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர், இவர்களின் பார்வையில் உலகத்தைச் சம்பாதிப்பதுதான்  அதி உச்ச வெற்றி யாகப் பார்க்கின்றனர், ஆகவேதான் தங்களுடைய காரியத்தை சீர்திருத்தம் என்கின்றனர், அல்லாஹுத்த ஆலாலா இதை குழப்பம் என்று தீர்மானித்துள்ளான்,


ஏனெனில் , இவர்கள் தங்களின் உலகியலை சீராக்கி மார்க்கத்தைப் பழாக்கின்றனர், நிரந்தரமானதைப் பாழாக்கி தற்காலிகமானதை தூக்கிப்பிடிப்பது சந்தேகமில்லாமல் குழப்பம்தான்,


பயன்கள்:


இத்திருவசனத்தில்  சில பயன்களைப்  பெற்றுக்கொள்கின்றோம்.


1-  ஆல்லாஹ்வின் நல்லடியார்களோடு மோதுவது அல்லாஹ்வோடு மோதுவதாக அமையும் என்பதை இத்திருவசனத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அடியார்களை ஆட்சேபிப்பது திரைமறைவில் அல்லாஹ்வை ஆட்சேபிப்பதாகும்,  ஏனெனில் , முனாபிக்கள் முஸ்லிம்களை ஆட்சேபித்தார்கள் தவிர, றப்பை அல்ல, ஆனால் றப்பு பதில்கொடுக்கின்றான்,இந்த  ஆட்சேபனையை ஹக்குத்த ஆலா  தன்னோடு தொடர்பாக்கியுள்ளான் என்பதை இதன்மூலம்  புரிகின்றோம், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பேரில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லாஹுத்த ஆலாவே பதில் கூறுவதை பல தடவைகள் பார்த்துள்ளோம்.


2-   எவர் அல்லாஹ்வுக்காக தன்னை அற்பணிக்கின்றாரோ, அல்லாஹுத்த ஆலா அவருக்குரியவனாக ஆகிவிடுகின்றான், எவர் உலகத்தில் அல்லாஹ்வின் வகீலாக ஆகி அவனுடைய மார்க்க சட்டங்களை முயன்று  பரப்பினால், அல்லாஹுத்த ஆலாவும் அவருடைய வகீலாக ஆகிவிடுவான், அவர்மீது விழும் சோதனைகளைத் தட்டிவிடுவான்,  ஆகவேதான் فاتخذوه وكيلا ، அல்லாஹ்வை உங்களுடைய வகீலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான், 


எவர் அல்லாஹ்வுக்கு வழிப்படும்  சிந்தனையில் இருக்கின்றாரோ, அவருடைய உலகியல் சிந்தனையிலிருந்து அல்லாஹுத்த ஆலா அவரைப்பாதுகாக்கின்றான் என்பது   எதார்த்தமாகும் ,


3- ஸஹாபாக்களை "குழப்பவாதிகள்" என்று கூறுவது முனாபிக்குகளின் வேலையாகும், முனாபிக்குகள் தங்களை "சீர்திருத்த வாதிகள்" என்றும் , ஸஹாபாக்களை குழப்பவாதிகள் என்றும் கூறினார்கள்,  ஆனால் , றப்புத்த ஆலா முனாபிக்குகள்தான் "குழப்பவாதிக ள்" என்று முத்திரை குத்தினான்.


ஸஹாபாக்களுக்கு மத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் குழப்பமல்ல,   சுயநலமிக்கதுமல்ல, முனாபிக்குகள் சுயநலத்துக்காகத் தொழுததால் அவர்களின் தொழுகை பாழாகிவிட்டது, ஹளறத் யூஸூப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களை   காபிர் என்றோ, குழப்பவாதிகள் என்றோ றப்புத்த ஆலா கூறாமல்   " நான் பதினொரு தாரகைகளைக்கனவில் கண்டேன் " என்ற யூஸூப் நபியின் கனவை க்கூறி  ஹிதாயத்தின் தாரகைகள் என்று கூறியுள்ளான். .

Saturday, 27 December 2025

தலைபாத்திஹாமௌலித் #தோன்றிய #வரலாற்றுப் #பின்னணி

தலைபாத்திஹாமௌலித் #தோன்றிய #வரலாற்றுப் #பின்னணி



 #இலங்கைமுஸ்லிம்களின்பண்பாட்டில் ‘#தலைபாத்திஹா’ #மௌலித்


#முன்னுரை


இலங்கை மற்றும் இந்திய மண்ணில் வாழும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் கொள்கையைச் சார்ந்த முஸ்லிம்களிடம், இறைநேசர்களான அவ்லியாக்கள் மற்றும் நபிமார்களைக் கண்ணியப்படுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் அந்தந்த மாதங்களில் சிறப்புக்குரிய பெரியார்களின் பெயரால் மௌலித் ஓதுவதும், கந்தூரி அன்னதானம் வழங்குவதும், அவர்களின் வாழ்வியலைப் போற்றுவதும் இங்குள்ள ஆன்மீக மரபாகும். இத்தகைய மௌலித் இலக்கியங்களைப் படைத்தவர்களில் தனித்துவம் வாய்ந்தவர் இமாமுல் அரூஸ் அஸ்ஸெய்யித் முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களாவர். இவர்களால் இயற்றப்பட்ட ‘தலைபாத்திஹா’ என அழைக்கப்படும் மௌலித், இன்றும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டில் நீங்கா இடம் பிடித்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகளார் அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகளையும், அவர்களது தூய குடும்பத்தின் (அஹ்லுல் பைத்) மகிமையையும் பாடுவதே இம்மௌலிதின் மையப்பொருளாகும்.


#நூலாசிரியர்: #இமாமுல் #அரூஸ் (ரஹ்)


"இமாமுல் அரூஸ்" என்று பரவலாக அறியப்படும் அஸ்ஸெய்யித் முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (1816–1898), தமிழகத்தின் கீழக்கரையில் தோன்றிய 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும், சூபி ஞானியும், சமூகச் சீர்திருத்தவாதியுமாவார். அரபு மற்றும் தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், தமிழகத்திலும் இலங்கையிலும் இஸ்லாமியக் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டதில் மிக முக்கிய பங்காற்றினார்.


அரபுத் தமிழ் (அர்வி) இலக்கிய வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. இஸ்லாமியச் சட்டங்களை விளக்கும் "பத்ஹுத் தய்யான்", திருக்குர்ஆன் விரிவுரை நூலான "மகானி" மற்றும் பல்வேறு மௌலித் காவியங்கள் இவரது அறிவாற்றலுக்குச் சான்றுகளாகும். ஆன்மீக வழியில் 'காதிரிய்யா' தரீக்காவின் முக்கியப் பொறுப்பை வகித்த இவர்கள், பாமர மக்களும் மார்க்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூல்களை இயற்றினார். தென்னிந்திய மற்றும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் இவர், தனது காலத்தால் அழியாத எழுத்துக்களின் வழியாக இன்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார்.


#தலைபாத்திஹாமௌலித் #தோன்றிய #வரலாற்றுப் #பின்னணி


இந்தியாவைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள், ஆன்மீகப் பணிகளுக்காக அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அக்காலகட்டத்தில், இலங்கையின் பல்லின கலாச்சாரச் சூழலில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் பிற மதச் சடங்குகளின் தாக்கம் ஊடுருவியிருந்தது.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் இந்து மதச் சடங்கான "வளைகாப்பு" அல்லது "சீமந்தம்" போன்ற நடைமுறைகளை முஸ்லிம் பெண்களும் பின்பற்றி வந்தனர். இதனை அவதானித்த இமாமுல் அரூஸ் (ரஹ்), இச்செயல் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது எனக் கருதினார்கள். எனவே, அந்நியக் கலாச்சாரச் சடங்கான வளைகாப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலும், அதற்கு மாற்றீடாகவும் அன்னை பாத்திமா நாயகி (ரலி) அவர்களின் புகழைப் பாடும் இம்மௌலிதை இயற்றினார்கள். கர்ப்பிணிப் பெண்கள் இம்மௌலிதை ஓதி, அன்னை பாத்திமா அவர்களை முன்னிறுத்தி (வஸீலா) இறைவனிடம் சுகப்பிரசவத்தை வேண்டிக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.


#பெயர்க்காரணம்


திருமணமான தம்பதியினருக்குப் பிறக்கவிருக்கும் முதல் குழந்தையின் சுகப்பிரசவத்தை முன்னிட்டு, ஒரு நல்ல தொடக்கமாக இது ஓதப்படுவதால், இதற்கு "தலைபாத்திஹா" (தலை - முதன்மை/ஆரம்பம்) என்று பெயர் வழங்கலாயிற்று.


#இலக்கியப் #பங்களிப்பு


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் கோர்வை செய்யப்பட்ட இம் மௌலித், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, இலக்கிய ரீதியாகவும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இதன் பங்களிப்பைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:


1. அரபு-தமிழ் (அர்வி) அடையாளம்:


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் "அர்வி" எனப்படும் அரபுத் தமிழ் மொழியில் பெரும் புலமை பெற்றவர். இம் மௌலித், தென்னிந்திய மற்றும் இலங்கை முஸ்லிம்களுக்கென தனித்துவமான ஒரு இலக்கிய நடையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. அரபுச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் இழைந்தோடும் ஒரு கலப்பு நடையை (மணிப்பிரவாளம் போல) இது கையாண்டுள்ளது. இது பாமர மக்களும் உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை எளிதாக மனனம் செய்ய உதவியது.


2. காவியத் தன்மை:


இந்நூல் அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் பிறப்பு முதல், அவர்களின் திருமணம், வறுமை, பொறுமை மற்றும் மறைவு வரை ஒரு வரலாற்றைக் கதை சொல்லும் பாணியில் (Narrative Style) விவரிக்கிறது. குறிப்பாக, அன்னை பாத்திமா அவர்களின் திருமணத்தின் போது விண்ணுலகில் நடந்த அலங்காரங்கள் மற்றும் சொர்க்கத்தின் வர்ணனைகள் ஆகியவை இதில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை நயத்துடன் (Hyperbolic Imagery) இலக்கியச் சுவையோடு விவரிக்கப்பட்டுள்ளன.


3 எதுகை, மோனை மற்றும் சந்த நயம்:


மௌலித் என்பது சத்தமாக ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரியது. எனவே, இதில் இசை நயம் (Musicality) முக்கியத்துவம் பெறுகிறது. அரபு இலக்கிய வகையான 'சஜ்வு' முறையைத் தழுவி, ஒவ்வொரு வரியின் இறுதியிலும் ஒரே மாதிரியான ஓசையுடன் முடியும் வகையில் சொற்கள் இம்மௌலிதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், இது தமிழின் கும்மி, சிந்து போன்ற நாட்டுப்புற இசை வடிவங்களோடு ஒன்றிப்போகும் தன்மை கொண்டிருப்பதால், பெண்கள் இதனை மனப்பாடமாக ஓதுவதற்கு ஏதுவாக அமைந்தது.


4. பெண்ணியம் சார் இலக்கியம்:


ஆண்களைப் பற்றியே அதிக இலக்கியங்கள் இருந்த காலத்தில், ஒரு பெண்ணின் (பாத்திமா ரலி) தியாகத்தையும், உயர்வையும் போற்றிப் பாடும் ஒரு இலக்கியத்தை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் தந்தது ஒரு புரட்சிகரமான இலக்கியப் பணியாகும். இது பெண்களின் சபைகளில், பெண்களாலேயே ஓதப்படுவதால், இது ஒரு "பெண்கள் இலக்கியமாகவே" (Feminist Literature in a spiritual context) திகழ்கிறது.


5. பக்தி இலக்கியம்:


தமிழில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் உருவாக்கிய பக்தி இலக்கிய மரபைப் போல, இஸ்லாமிய சூபித்துவ மரபில் இறைத் தூதர் குடும்பத்தின் (அஹ்லுல் பைத்) மீது அன்பை வளர்க்கும் "இஷ்க்" (காதல்/அன்பு) சார்ந்த இலக்கியமாக இது அமைகிறது. படிக்கும் வாசகனை உணர்ச்சிப் பெருக்கிற்கு (Emotional Ecstasy) இட்டுச் செல்லும் வல்லமை இந்த வரிகளுக்கு உண்டு.


6. கலாசார ஆவணம்:


இந்த நூல் எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக நம்பிக்கைகள், திருமண முறைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஆவணப்படுத்தும் ஒரு பெட்டகமாகவும் இது திகழ்கிறது. அரபுத் திருமண முறையை விவரிக்கும் அதே வேளையில், தமிழக/இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார எதிர்பார்ப்புகளையும் இது பிரதிபலிக்கிறது.


முடிவுரை


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தலைபாத்திஹா மௌலித் என்பது வெறும் சமயச் சடங்கு நூல் மட்டுமல்ல; அது அரபுக் கவிதை மரபையும் தமிழ்ப் பண்பாட்டு மரபையும் இணைத்துக் கட்டிய ஒரு இலக்கியப் பாலமாகும். பிற கலாச்சாரத் தாக்கங்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்து, இஸ்லாமிய விழுமியங்களுக்குள் அவர்களை வழிநடத்திய ஒரு சமூகச் சீர்திருத்தக் கருவியாகவும் இது திகழ்கிறது.


உசாத்துணைகள்

 

அமீன், எம்.ஐ.எம். (2010). இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகள். ஹெம்மாத்தகம: அல் ஹஸ்ஸனாத் பதிப்பகம்.

 

அமீன், எம்.ஐ.எம். (2009). இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (1870–1915). கொழும்பு: இஸ்லாமிய புத்தக இல்லம்.

 

அரீழ், எம்.ரி.எம். (2001). அரூஸியத்துல் காதிரியாவின் ஆத்மஞானிகளும் அறப் பணிகளும். வெலிகாமம்.


 பாரி, எம்.எஸ். அப்துல். (2001). இலங்கை முஸ்லிம்களின் சமூக கலாசார மறுமலர்ச்சியில் அறபு மத்ரஸாக்களின் பங்களிப்புக்கள். (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமானி ஆய்வுக் கட்டுரை), பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.


 ஜமீம், அ. (2004). வலிமார்கள் வரலாறு (ஐந்தாம் பாகம்). சென்னை: யுனிவர்சல் வெளியீடு.

 

மக்கீன், ம. (1998). இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள். சென்னை: மணிமேகலை பதிப்பகம்.


 ஹுஸைன், ஏ.ஜே. (2010). இலங்கை முஸ்லிம்களிடையேயான சமய, சமூக சீர்திருத்தப் பணிகள்: சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலம் பற்றிய விசேட ஆய்வு. (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமானி ஆய்வேடு), பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.


 யூகப், ஏ.எச்.எம். (1984). மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் மிஷ்காதுல் பாரி நூற்றாண்டு விழா சிறப்பு மலர். வெலிகாமம்: அல் மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி.

 

அல் மிஷ்காத் ஞான சஞ்சிகை (ஏப்ரல், 2001). காத்தான்குடி: அகில இலங்கை மெய்ஞான பேரவை.

 

Alim, Tayka Shu'ayb. (1993). Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust.


 Nuhman, M.A. (2007). Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity. Colombo: International Center for Ethnic Studies.

 

Sukri, M.A.M. (1986). Muslims of Sri Lanka: Avenues to Antiquity. Beruwela: Jamiah Naleemia Institute.


M.L Lathfan Rosin 

Department of Political Science 

University of Peradeniya

திருக்குர்ஆன் விளக்கம் 12

 

திருக்குர்ஆன் விளக்கம் 12

*திருக்குர்ஆன் விளக்கம்* 
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••••
              தொடர் : 12
               ---------------

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

  2- 11 -. இன்னும், பூமியில் குழப்பம் செய்ய வேண்டாம்   என்று அவர்களிடம் சொல்லப்பட்டால்,  நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்கள் என்கின்றனர்;  
••••••••••••••••••••••••••••••••••

தொடர்பு: 

முதல் திரு வசனத்தில் முனாஃபிக்குகளின் மனநோய் உச்சம் தொட்டுவிட்டது என்று கூறப்பட்டது, இங்கு அதன் அடையாளம் கூறப்படுகிறது; அவர்கள் நல்லதையும், தீயதையும் பிரித்தறியாமல் ஒவ்வொன்றையும் தவறாகவே எடை போடுகின்றனர்; 

 நோயாளியோடு சேர்த்து அதன் அடையாளங்களையும் மருத்துவர்கள் கூறுவது போன்று  இங்கு இந்த நோயைத் தெரிந்து கொள்ளும் அடையாளத்தைக் கூறப்படுகின்றது, இது  இத்திருவசனத்தின் முடிவாகும். 

இதற்கு மாறாக வும் இருக்கலாம், அதாவது, அவர்களின் புலன்கள்  நல்லதைச் கெட்ட தாகவும், கெட்டதை நல்லதாகவும் புரிய வைக்கலாம், 

தொடர்பு இவ்வாறு இருக்கலாம்,

இதற்கு முன் முனாபிக்குகளின் கெட்ட அகீதாக்கள், உளறல்கள் ,கெட்ட செயல்கள் பற்றிக் கூறப்பட்டன,  இப்போது அவர்களின் கெட்ட பரிவர்த்தனைகள்  பற்றிக் கூறப்படுகின்றன,  அதாவது மனதில் நோய்,  நாவில் பொய் , தவறான வணக்கம் உள்ளிட்ட அவர்களின் நடைமுறைகள் யாவும் பாழ் என்று கூறப்படுகின்றது,

 வணக்கங்கள் நடைமுறைக்கு முன் நிகழ்பவை, ஆகவேதான் , வணக்கங்கள் முதலிலும், நடைமுறைகள் பின்பும் கூறப்பட்டன, 

அல்லாஹ்வோடு தொடர்பான செயல்களை *இபாதத்துக்கள்*  என்றும், உ+ம்,, தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத்,  அடியார்களோடு தொடர்பானவை களை  *முஆமலாத்* நடைமுறைகள்- என்றும் கூறப்படும், உ+ம் , வர்த்தகம்,  பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல்,  மற்றும் ஏனைய பரிவர்த்தனைகள்,

முனாபிக்குகளின் இவ்விரண்டு செயல்களும் பாழாகும், அவற்றில் இறுதி வகை பற்றி இப்போது கூறப்படுகின்றது.

"குழப்பம்" என்பது ,பயனற்றது, பொருத்தமற்றது ;சமநிலையற்றது; இதற்கு எதிர் சீர்திருத்தம்! இது பயனுள்ளது; சமநிலையானது; பொருத்தமானது; முனாஃபிக்குகள் தங்களுக்குள்ளேயே மனவியாதியால் குழம்பிப் போயிருக்க, ,அடுத்தவருக்கு சீர்திருத்தம் எப்படிச் செய்வது? இதிலிருந்து இவர்களின் குழப்பம் அடுத்தவர்களையும் பாதிக்கிறது என்பது தெளிவு!

 இவர்கள் செய்த குழப்பங்கள் வருமாறு,

1-காபிர்களைச் சந்தித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உதவி செய்தல்,

2-முஸ்லிம்களின் இரகசியங்களைக் காபிர்களுக்கு தெரியப்படுத்துவது. 

3-புதிதாக இஸ்லாத்தைத்  தழுவியவர்களை இரகசியமாகச் சந்தித்து அவர்களின் மனதில் இஸ்லாத்திற்கு மாற்றமான சந்தேகங்களையும், சலனங்களையும் ஏற்படுத்துவது.

சீர்திருத்தம் செய்பவர் நடுநிலையில் இருப்பார், அவரின் மனம் தெளிவாக இருக்கும்; குழப்பத்தைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்களை தவிப்பார்; பேச்சு வார்த்தையில் இருதரப்பிலும் நம்பிக்கையூட்டும் நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பார் ; 
ஆனால், முனாஃபிக்குகள் முஸ்லிம்களைப் பற்றி புறம் ,கோள் சொல்லித் திரிந்தார்கள்; முஸ்லிம்களை நையாண்டி பண்ணினார்கள்; இவர்களின் செயல் மன வியாதியால் அல்லல் படுபவனைப் போன்று இருந்தது;

முனாபிக்குகள்  தங்களை சீர்திருத்த வாதிகள் என்று கூறுவதன் கருத்து யாதெனில், 

,காபிர்களோடு சமரசம் பேசி உங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வர வேண்டும், 

 புனித மதீனாவின் புனித  மண்ணில்  குருதியால் நனையாமலிருக்க வேண்டும், 

 முஸ்லிம்களே! நீங்கள்
குருதியை ஓட்ட விளைகின்றீர்கள், நாங்கள் சமரசம் செய்து அமைதியையும் , நல்லெண்ணத்தையும் கொண்டுவர விளைகின்றோம், 

ஆதலால் நாங்கள்தான் சீர்திருத்த சமாதான வாதிகள், நீங்கள் அல்ல!என்பது முனாபிக்குகளின் வாதமாகும்.

திருக்குர்ஆனில் முனாபிக்குகளின் மற்றுமொரு கூற்றை இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.

قَالُوا إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا

அன்பரே!  அவர்கள் உம்முடைய திருச்சமுகம் வந்து  " நாங்கள்  நன்மையையும்,  நட்பையும் தவிர்த்து  வேறு எதனையும்  நாடவில்லை என்று  அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து  கூறுகின்றனர்.  4:  62

 ஆகவே, இவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்வதாகக் கூறினாலும் ,இவர்களின் கூற்றுக்கெதிரான குழப்பத்தையே செய்கின்றார்கள்;  தாங்கள் செய்யும் குழப்பத்தை அவர்களால் உணர முடியாத சர்வ முட்டாள்களாக இருக்கின்றனர் என்பதைஇத் திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

 இக்காலத்தில் ஒற்றுமை, இன ஐக்கியம்; மத நல்லிணக்கம் என்ற பெயரில் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் நயவஞ்சகத்தின் வெளிப்பாடுதான்! வழிகெட்ட வஹாபி, தேவ்பந்தி, ஷீஆ காதியானி உள்ளிட்டோருடன் சகஜமாக உறவாடுவது அவர்களை சமனாக உள்வாங்கி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நயவஞ்சகம் தான். இவையாவும் தங்களின் நலன்கருதிச்செய்யப்படுகின்றவே தவிர மார்க்கத்தின் நலன் கருதிப் செய்யப்படுவதில்லை, 

இப்போது "  மத நல்லிணக்கம் "என்ற  கருப்பொருளுக்குப் பின்னாலிருப்பவர்கள்  காபிர்களாகும், குறிப்பாக கிறிஸ்த்தவ ர்கள், இவர்களின் உள் நோக்கம் முஸ்லிம்களின் மனதில் குப்றின் வெறுப்பை அழிக்க வேண்டும், கண்மணி றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மீதான நேசத்தைக்குறைக்கவேண்டும், ஷரீஅத்தின் கட்டுப்பாட்டை உடைக்கவேண்டும், அன்னிய காஃபிர்களின் கலாச்சாரத்தை முஸ்லிம்களுக்குள் புகுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சமயங்களையும், கலாச்சார விடயங்களையும் முஸ்லிம்களை ஏற்கச்  செய்யவேண்டும்.

முனாபிக்குகள்  தங்களைப் பற்றி கூறும் போது انما  என்ற இடைச் சொல்லைப் பாவித்தனர், இதன் பொருள் "நாங்கள் தான் சீர்திருத்தவாதிகள்! முஸ்லிம்களாகிய நீங்கள் குழப்பவாதிகள்" என்ற பொருள் அதற்குள் தொக்கி நிற்கிறது;இதற்கு மறுப்பாகவே انهم    குழப்பவாதிகள் அவர்களே தான் என்று அறுதியிட்டு அல்லாஹ் கூறுகிறான்; ஆயினும், அவர்கள் உணர்வதில்லை என்பது   அவர்களின் புலக்காட்சியைக் குறிக்கும்;

 இதன்படி, முனாஃபிக்குகள் குழப்பவாதிகளாக இருப்பது கண்ணால் காணக் கூடியதான வெளிப்படையானதாகும்;இதை புரிய முடியாதளவுக்கு அவர்களின் கண்களும் மந்தமாகி விட்டதால் வெளிப்படையானதைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை;

 குழப்பத்தையும், சீர்திருத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத ளவுக்கு அவர்களின் கல்பு குருடாகி விட்டதால், உறுப்புக்களும் உணர்வை இழந்து போய்விட்டது!

இத்திரு வசனத்தில் பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன,

1- எவர் அல்லாஹ்வின் நல்லாடியார்களுடன் மோதுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வோடு மோதுகின்றனர், இவர்களை ஆட்சேபிப்பது அல்லாஹ்வை ஆட்சேபிப்பதாக அமையும்; காரணம்,  முனாபிக்குகள் முஸ்லிம்களோடு தான் முரண்பட்டனர்; அல்லாஹ்வோடு முரண்படவில்லை.;ஆனாலும், அல்லாஹ்.முஸ்லிம்கள் சார்பாகப் பதில் கூறுகின்றான்; இதிலிருந்து இக்குற்றச் சாட்டை தன்னுடைய குற்றச்சாட்டாக ஏற்றுக் கொண்டான். 

2-ரப்புக்கு வழிபடுவதை எவர் தனது சிந்தனையில் கொள்கின்றாரோ, ரப்புத்தாலா உலகியல் சிந்தனையிலிருந்து அவரை பாதுகாக்கின்றான்.

3- சஹாபாக்களை குழப்பவாதிகள் என்று கூறுவது முனாபிக்களின் வேலை, ஸஹாபாக்கள் தங்களுக்குள் சண்டையிட்டதெல்லாம் சுயநலத்திற்கானது அல்ல! முனாபிக்குகள் சுயநலத்திற்காக தொழுதார்கள்; ஆகவே, முனாபிக்குகள் முகஸ்துதியாளர்கள்;

ஸூபிஸ விளக்கம்:
-------------------------
 எப்படியான வளமான பூமியாக இருந்தாலும்  அதில் தூவும் விதைதான் மரமாக வளரும், பூமியில் ,  முட்செடிகளை விதைத்தால் விறகுக்கான மரம் தான் வளரும், அதில் அவருக்கு எவ்வித பயனுமில்லை,  இவ்வாறு  மனித மனம் எல்லாவற்றிற்கும் தகுதியான தாக இருக்கின்றது,  அதில் ஈமானின் விதையை நட்டால்  அதிலிருந்து பெறுமதியான கனிகளைப் பெறலாம்,  குப்றினால் கையைக் கடிக்கும் முட்புதர்கள்தான் வளரும்,  ஆகவேதான்  முனாபிக்குகளே!  மனம்  என்ற விதை நிலத்தில் குப்றையும்,  நயவஞ்சகத்தையும் விதைத்து மனதைப் பழுதாக்காதே ! என்று இங்கு கூறப்படுகின்றது,

ஈமானின் விதையை விதைத்து ,  இபாதத் என்ற நீரை பாய்ச்சியபின்,  நல்ல உறவுகள் என்ற  காற்றை வீச வைத்து  பழம் தரும் மரமாக வளர்த்துக்கொள்ளுங்கள்,

 ஆனால் , அவர்கள்  தனது முட்டாள்தனத்தால் முட்புதர் செடிகளை விதைத்து விட்டு கனிகளை எதிர்பார்க்கின்றனர்.

திருக்குர்ஆன் விளக்கம் 11


 *திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..

 •••••••••••••••••••••••••••••

             தொடர் : 11

              --------------


فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ

  . 

2- 10. அவர்களின் மனதில் நோயுண்டு! அல்லாஹுத்த ஆலா அவர்களின் நோயை அதிகப்படுத்தியுள்ளான்,இன்னும், அவர்கள் பொய்யாக்கியதற்குப் பகரமாக அதிக துன்பம் தரும் வேதனை அவர்களுக்கு உண்டு!

•••••••••••••••••••••••••••••••••


தொடர்பு: 


கடந்த திருவசனத்தில் முனாஃபிக்குகளின் கெட்ட செயல்களைப்பற்றிக் கூறப்பட்டன, இத் திருவசனத்தில் அவர்களின் மனதில் நயவஞ்சகத்தின் நோய் உண்டு! ஆகவேதான் இத்தீய வேலைகளைச் செய்கின்றனர் என்று செயலுக்கான காரணம் கூறப்படுகின்றது; 


இங்கு "பிணி" என்று கூறப்படுவது நப்ஸின் பூணத்துவங்களை இல்லாமலாக்கச் செய்யக்கூடிய மடமை, கெட்ட அகீதா; பொறாமை; சினம்; குரோதம்; உலகத்தின் மோகம், பொய், அக்கிரமம் உள்ளிட்டவையை குறிக்கின்றது. இக்குறைகள் யாவும் றூஹின் மரணமான குப்ரு வரை சேர்க்கக் கூடியதாகும். 


மனதின் நோய் சில வகையில் உள்ளன.


1- கெட்ட அகீதா


2- குணங்களோடு தொடர்பானது

உ+மாக, பொறாமை, குரோதம் உள்ளிட்டவை


3-

 செயல்களோடு தெடர்பானவை,

உ+மாக, கெட்ட எண்ணம்.


இத்திருவசனத்தில் கூறப்படும் நோய் என்பது முதல் வகையான தாகும், அவர்களின் உள்ளத்தில் கெட்ட அகீதாவும், குப்றும் ஏற்கனவே குடிகொண்டிருக்கின்றன, அது தினமும் அதிகரித்துச் செல்கின்றது, அல்லது இம்மூன்று நோய்களும் நோக்கமாக இருக்கலாம், அதாவது, முனாபிக்குகளின் உள்ளத்தில் கெட்ட அகீதா, கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள் இருக்கின்றன, அது மேலும் அதிகரித்துச் செல்கின்றன,


நோய் அதிகரிப்புதற்கான காரணங்கள்.


1- இஸ்லாத்தைப் பார்க்கும் போது அவர்களுக்குக் கவலை ஏற்படுகின்றது, அல்லாஹுத்த ஆலா இஸ்லாத்தைப் பரவச் செய்வதன் ஊடாக அவர்களின் கவலையும் அதிகரிக்கின்றது,

இவ்வாறே அவர்களின் மனங்களில் கெட்ட அகீதாவும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் விரோதமும் இருந்தன, உபதே சங்களும்,நல்லுரைகளும் அவர்களின் இதயத்தில் தாக்கம் செய்யாதது அல்லாஹுத்த ஆலா அவர்களின் உள்ளத்தில் முத்திரை குத்தி குப்றை வளர்த்து விட்டான் என்பதற்கான ஆதாரங்களாகும்.


அல்லது , ஷரீஅத் சட்டங்களும், வணக்க வழிபாடுகளும் அதிகரிக்க அதிகரிக்க அதன் மறுப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, ஷரீஅத் சட்டங்களும் திருக்குர்ஆன் வசனங்களும் முஃமின்களின் ஈமானை வலுப்படுத்தியது , காஃபிர்களின் குப்றை வன்மப்படுத்தியது, மழை சாக்கடையில் விழும்போது அசிங்கத்தை அதிகப்படுத்தும், தூய பொருட்களில் படும்போது மேலும் மேலும் பரிசுத்தப் படுத்தும், இங்கும் இதுவே நடக்கின்றன,


" அவர்கள் பொய்யாக்கியதற்குப் பகரமாக அதிக துன்பம் தரும் வேதனை அவர்களுக்கு உண்டு" 


என்பதில் வேதனை என்பது காபிர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்களுக்கான வேதனை அதிகமாகும், ஏனெனில் , காபிர்கள் ஈமானின் இன்பத்தைச் சுவைக்க வில்லை, தொழுகையின் இன்பத்தைப்பற்றிய, ஈமான் என்றால் என்ன என்பது பற்றிய தகவலும் அவர்களுக்கு இல்லை, 

ஆனால் , முனாபிக்குகள் ஈமானின் வாசல் வரை வந்தவர்கள், அதன் சுவையும் , இன்பமும் அவர்களின் உதடு வரை நெருங்கியும் அதன் கனியைச் சுவைக்க முடியவில்லை , அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலை அவர்களை வாட்டவே செய்யும், 


காஃபிர்களுக்கு நரக வேதனை மட்டுமே கிடைக்கும், முனாபிக்குகளுக்கு வேதனையோடு சேர்த்து அவமானமும் கிடைக்கும், இதனால் அவர்களுக்கு வேதனை அதிகமாகும், மேலும், இவர்கள் பொய் கூறியதால் நரகத்தின் சூடு முதலில் படும் அடித்தட்டில் போடப்படுவார்கள், குப்றின் காரணத்தால் வேதனை கிடைக்கும், துரோகத்தின் காரணமாக சித்திரவதை கிடைக்கும்,


பொய் பல விதங்களில் உண்டு.


1- பேச்சில் பொய், இது எதார்த்தத்திற்கு மாறான பேச்சு


2- செயலில் பொய்,  

 சொல்லுக்கு மாறான செயல் , அதாவது சொல்வது ஒன்று செய்வது வேறு ஒன்று.


3- அகீதாவில் பொய்,   

உ+மாக, படைத்தவன் ஒருவன்தான், சிலரின் அகீதா படைப்பாளன் பலர், இது பொய்யான அகீதாவாகும், ஒவ்வொரு பொய்யும் தீங்குதான், ஆனால் பொய்யான அகீதா படுமோசமான தீங்காகும், இந்த முனாபிக் அனைத்து வகையிலும் பொய்யனாகும், 


பொய்தான் அனைத்து பாவங்களுக்கும் வேர், எவராவது பொய் சொல்வதில்லை என்று உறுதி கொண்டால், இன்ஷாஅல்லாஹ் அனைத்து பாவங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வார், சங்கையான நபிமார்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட வர்கள், குறிப்பாக பொய்யிலிருந்து பாதுகாக்கப்பட்ட வர்கள், நபிமார்களில் எவராவது பொய் கூறினார்கள் என்று எவராவது கூறினால் அவன் மார்க்க மற்றவனாகும்.


ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தொடர்பாக மூன்று பொய்கள் கூறியதாக வருவதன் பொருள் அவர்கள் சிலேடையாக இரட்டை பொருள் படக்கூறினார்கள், இதற்கு வெளிப்படையான பொருள் கொள்ளக்கூடாது, ஓர் அக்கிரமக்காற அரசன் ஹளறத் ஸாறாவைப்பார்த்து யார் இவர்? என்று கேட்டான்,, மனைவி என்றால் கபளிகரம் செய்து கொள்வான், அதனால் இவர் எனது சகோதரி என்றார்கள், இவர்களின் எண்ணத்தில் மார்க்கத்தில் சகோதரியாகும், அவன் வெளிப்படையான பொருளை விளங்கி விடுதலை செய்தான்.

இவ்வாறு ஹளறத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரத் செல்லும் போது கூடவே இருப்பவர் யார்? என்று வழியில் ஒருவர் கேட்டார், இரகசியத்தை மறைப்பதற்காக "வழிகாட்டி" என் று பதில் கூறினார்கள், கேட்ட வர் பாதையைக் காட்டுபவர் என்று புரிந்து கொண்டார், இவ்வாறு சிலேடையாகப்பேசுவது ஆகுமானதுதான். 


பொய் சில இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


1- கடுமையான நிர்பந்த நிலையில்.


2 இரண்டு முஸ்லிம்களைச் சமாதானம் செய்வதில்,


3 தனது மனைவியைத் திருப்திப் படுத்துவதற்காக 


4- யுத்த களத்தில்.


 தப்ஸீர்: றூஹூல்பயான். இத்திருவசனத்தின் சுருக்கம் வருமாறு: 


முனாபிக்குகளின் இயல்பில் ஒருபோதும் ஆரோக்கியம் இருந்ததில்லை, பொய் என்ற நோய் அவர்களின் மனதில் சவாரி செய்கின்றது, உடலில் நோய் நீடிப்பது போன்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுடன் மக்கள் அதிகம் உறவு கொள்வதை காணும் போதெல்லாம் அவர்களின் மனதில் இந்த நோய் அதிகரிக்கின்றது, 


உடலுக்கான நோயால் மரணம் வருவது போன்று , றூஹுக்கான நோயின் முடிவு துன்புறுத்தும் கொடிய வேதனையாக இருக்கின்றது, 


ஸூபிஸ விளக்கம்: 


 மனதில் பொதுவாக நல்ல சிந்தனைகளும் வரும், கெட்ட சிந்தனைகளும் வரும், நல்ல சிந்தனைகள் றஹ்மானுடைய தரப்பில் வரும் இல்ஹாமாகும், இதற்கென்று ஒரு மலக் நியமிக்கப்பட்டிருப்பார், கெட்ட சிந்தனைகள் ஷைத்தானின் ஊசாட்டங்களால் வரும், எவருடைய மனதில் அல்லாஹுத்த ஆலாவின் அருள் உண்டோ அவருக்கு இல்ஹாம் அதிகமாகவும், வஸ்வாஸ்- ஊசலாட்டம்- குறைவாகவும் இருக்கும், எனினும், அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்ற நல்லடியார்கள் இந்த வஸ்வாஸ்களை விட்டும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் ,


எவருடைய மனதில் இல்ஹாம் குறைவாகவும், வஸ்வாஸ் அதிகமாகவும் உள்ளதோ அவர்களின் மனதில் நோயிருக்கும், இந்த நோய்க்கு ஏதாவது ஆத்மீக வைத்தியர் பரிகாரம் செய்வாராயின் ,நோய் சுகமாகும். தவறினால் நோய் வளர்ந்து மனதில் நல்ல சிந்தனைகள் வருவது முற்றிலுமாகத் தடைப்படும், 


சில வேளை இந்த நோய் முற்றி நல்ல செயல்கள் தீயதாகவும், தீய செயல்கள் நல்லதாகவும் புரியக் கூடிய சூழல் உருவாகும். மேலும், தீயவர்களை நண்பர்களாகவும், நல்லவர்களில் வெறுப்பு ஏற்படவும் செய்யும். இதுதான் மனதின்மரணமாகும்.


இதுபோன்று சில வேளைகளில் மனதில் மறைவான புறத்திலிருந்து மனிதனை தீயவையிலிருந்து தடுக்கும் சப்தங்கள் வரும், தீய காரியங்களின் செயல்பாட்டை இழிவாகக் கருத வைக்கும், அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு இந்த சப்தம் அதிக பலமானதாக இருக்கும், தீய வழிகளில் வரமாட்டாது,


பாவமான காரியங்களால் இந்த சப்தம் பலவீனமடைந்து கட்டம் கட்டமாகக் குறைந்து தடைபட்டு விடும்,பின்னர், தவறான சப்தம் வரத் தொடங்கும், பாவமான காரியங்களைச்செய்யும் போது மகிழ்ச்சியான சப்தம் வெளிப்படும், இது மனதின் மரணமாகும், இந்தத் திருவசனத்தில் இந்த நோயைப் பற்றியே கூறப்படுகின்றது, 


எவ்வாறு சில ஔடதங்களும்,, சில இடங்களிலுள்ள நீரும், காற்றும் ஆரோக்கியத்தைக்கொடுக்கின்றதோ அவ்வாறே சில அமல்களும் , மற்றும் சில இடங்களின் நீரும், காற்றும் றூஹானியத்தான உற்சாகத்தைக் கொடுக்கின்றன,

  இந்த அடிப்படையில்தான் வலிமார்களைச் சந்திப்பதற்கும்,, அவர்களின் புனித கப்றுகளைத்தரிசிப்பதற்கும் கட்டளையிடப் பட்டுள்ளது, அங்குள்ள நீரும், காற்றும் ஈமானுக்கு அதிகளவில் பிரயோசனம் கொடுக்கும்,


 உடல் நோயைச் சுத்தப்படுத்த மருத்துவரைத் தேடிச் செல்வது போன்று மனநோயைச்சுகப்படுத்த ஆத்மீக வைத்தியரைத் தேடிச் செல்கின்றோம்,, இதில் என்ன தவறு வரப்போகின்றது,? மாசடைந்த சூழல் நோய்களை ஏற்படுத்துவது போன்று கெட்ட உறவுகள் மனதில் - ஈமானில்- நோயை ஏற்படுத்தும், நல்ல உறவுகள் ஈமானைப் பலப்படுத்தும்,, இறை நெருக்கத்தை ஏற்படுத்தும்,


 ஆகவே , மனதின் நோயை சுத்தப்படுத்தும் ஆத்மீக வாதிகளான ஸூபியாக்களின் உறவில் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் நப்ஸு அம்மாறாவின் கெடுதியிலிருந்து தப்ப முடியும்.

திருக்குர்ஆன் விளக்கம் 10


 *திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

           தொடர்: 10

           ----------------


يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ


2- 9 - அவர்கள் அல்லாஹ்வுக்கும், இன்னும், முஃமின்களுக்கும் சதி செய்கின்றனர்; இன்னும், அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர் ; அதை அவர்கள் உணர்ந்து கொள்ள வில்லை; 

*************************


தொடர்பு: 


இத்திருவசனம் முந்திய திரு வசனத்தோடு இரு விதங்களில் தொடர்பாகின்றது.


 1- இத்திருவசனத்தில் முனாஃபிக்குகளின் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன, இதற்கு முந்திய திருவசனத்தில் அவர்களின் ஈமான் இல்லாத குப்றைப்பற்றிக் கூறப்பிடப்பட்டுள்ளது ;, குப்று ; செயலைவிட முந்திய து,ஆகவேதான் செயலை விட குப்றை முதலில் கூறப்பட்டது,


2- அவர்கள் வெளியில் தங்களை முஃமின் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் முஃமின்கள் கிடையாது என்று முதல் திருவசனத்தில் கூறப்பட்டது, இத்திருவசனத்தில் அவர்களின் ஈமான் ஏற்கப்படாதற்கான காரணம் கூறப்படுகின்றது, அதாவது, அவர்கள் வெளிப்படுத்தும் ஈமான் இக்லாஸானதாக இல்லை, மாறாக ஏமாற்றுவதற்கானதாகும், ஆகவேதான் அது அங்கீகரிக்கப்படவில்லை,


இதே காலிமாவை மனத்தூய்மை யோடு மொழிந்தவர்கள் முஃமினாக ஆனார்கள், இவர்கள் இதே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள், ஏனெனில் ,வார்த்தைகளில் நிய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருக்கின்றது, முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் தோற்றத்தில் பாலாகத்தெரிந்தாலும் சந்தையில் அதற்கு மதிப்பு இல்லை,


இக்லாஸான நிய்யத் என்பது , கொழுப்பைப் போன்றது, இக்லாஸ் இல்லாத நல்ல நல்ல வார்த்தைகளுக்கு அல்லாஹ்விடத்தில் எவ்வித பெறுமதியும் கிடையாது.


" அவர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்கின்றார்கள்" என்பதன் பொருள், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சதி செய்கின்றார்கள் என்பதாகும், அதிகமான இடத்தில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டாலும் நோக்கம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள், அல்லாஹ்வின் திருவடியில் அன்னாருக்கு இருக்கும் மகத்துவத்தை வெளிப்படுத்த இவ்வாறு கூறப்படுகின்றது.


அல்லாஹுத்த ஆலா வின் திருவடியில் அன்னாரின் மகத்துவம் யாதெனில், றஸூலுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும், அன்னாருக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும், நபிகளாருக்கு சதி செய்வது அல்லாஹ்வுக்கு சதி செய்வதாகும், 


திருக்குர் ஓர் இடத்தில் கூறுகின்றது.


எவர் றஸூலிடம் பைஅத் செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத் செய்கின்றார்கள், அல்லாஹ்வின் கரம் அன்னாரின் கரத்திற்கு மேல் இருக்கின்றது, இந்த கோட்பாட்டின் படியே தான் இங்கும் முனாபிக்கு கள் அல்லாஹ்வுக்கு அதாவது றஸூலுக்கு - சதி செய்கின்றனர்.


தப்ஸீர், றூஹுல்பயான்,

தப்ஸீர் அஸீஸி.


"அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர்" என்பதன் பொருள், இவர்கள் உயர்ந்த விலைமதிப்புள்ளதை விட்டுவிட்டு தாழ்ந்ததைத் தேர்வு செய்து கொண்டு வெற்றியை எதிர்பார்ப்பது படு முட்டாள்தனமான தாகும், இது அவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்வதற்கு சமனாகும், முனாபிக்குகள் மார்க்கத்தைத் துறந்து விட்டு உலகத்தை எடுத்துக்கொண்டனர், இதில் மகிழ்ச்சியும் அடைகின்றனர், உண்மையில் அவர்கள் எதிர்பார்தவாறு உலகம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை , துன்பமும், இழிவும் தான் அவர்களுக்கு மிஞ்சியது, 


கண்ணியமிக்க ஸஹாபாக்கள் அழியும் உலகத்தையும், அதன் சுகங்களையும் எட்டி உதைத்து விட்டு அல்லாஹ்வையும் , இன்னும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள், உலகம் அவர்களின் கால்களை முத்தமிட்டது, எதார்த்தத்தில் இவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகும்.


இத்திருவசனத்தின் சாரம் யாதெனில், முனாபிக்குகள் அல்லாஹ்வையும் , இன்னும் இறுதி நாளையும் ஈமான் கொண்டிருப்பதாகக் கூறினாலும், அவர்களின் எண்ணத்தில் அல்லாஹ்வுக்கு அல்லது அல்லாஹுத்த ஆலா வின் றஸூலுக்கு , அல்லது முஸ்லிம்களுக்கு சதி செய்வதாகும், உண்மையில் அவர்கள் தங்களுக்கே சதி செய்கின்றனர், ஏனெனில், அல்லாஹுத்த ஆலா மறைவானவற்றை நன்கு அறிந்தவன், அவனுக்கு எந்த விடயமும் மறைவாக இல்லை, எதார்த்தத்தில் அவர்கள் தங்களை உணராமல் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்,


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலாவின் மிகப்பெரிய கலீபாவாகும், அல்லாஹுத்த ஆலா தனது ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அனைத்து மறைவான ஞானங்களையும் கற்றுக் கொடுத்துள்ளான், ஆரம்பத்திலிருந்தே அன்னார் அனைத்தினதும் யதார்த்தங்களை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள், மிஃறாஜுக்குச் சென்ற வேளை அனைத்து முஃமின் களையும், காபிர் களையும் கண்ணால் பார்த்துவிட்டே வந்தார்கள், காபிர்கள், முஃமின்களின் பட்டியல் உள்ள ஏட்டை ஸஹாபாக்களுக்குக் காட்டினார்கள்,


படுமோசமான பாவிகளை சொர்க்கவாதி என்றார்கள் பெரும் பெரும் பக்திவான்களை காபிர் என்றார்கள், முடிவில் அன்னார் கூறியதே நடந்தது,


 ஹளறத் ஹஸன், ஹளறத் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு மா ஆகிய இருவரும் சொர்க்கத்தில் இளவல்களின் தலைவர்கள் என்றார்கள், நபிகளாரின் ஈரல் கொழுந்து பாத்திமத்துஸ்ஸஹ்றா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொர்க்கத்தில் பெண்களின் தலைவி என்றார்கள்,  


அபூதாலிப் நரகத்தின் விளிம்பிலிருக்கின்றார்கள் என்றார்கள், ஆக, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கவாதிகளையும், நரகவாதிகளையும் அவர்களின் நிலைகளையும் , பதவிகளையும் அச்சொட்டாகக்கூறியிருக்கும் போது முனாபிக்குகள் அன்னாருக்கு சதி செய்யமுடியுமா? அன்னாரை ஏமாற்றத்தான் இயலுமா? 


முஃமின்கள் தங்களின் ஈமானின் வெளிச்சத்தால் முஃமினையும் , காபிரையும் அறிந்து கொள்கின்றார்கள், " முஃமினின் குறிப்பறிதலை அஞ்சிக்கொள்ளுங்கள், அவர்கள் அல்லாஹ்வின் ஒளியால் பார்க்கின்றார்கள்" என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது, அல்லாஹ்வின் நேசர்களோடு சேர்ந்திருக்கும் விலங்குகளும் முஃமினையும், காபிரையும் அடையாளம் கண்டு பிரித்துப் பார்க்கின்றன. , 


ஹளறத் ஸபீனா றழியல்லாஹு அன்ஹு ஒரு யுத்தத்தில் வழிதவறி வெகுதூரம் சென்றுவிட்டார்கள், அப்போது ஒரு சிங்கம் எதிரே வந்தது, சிங்கமே! நான் அல்லாஹ்வின் திருத்தூதரின் அடிமை என்றதும் நாயைப்போன்று வாலை ஆட்டியது, பின்னர், கூடவே 

வந்து படையோடு சேர்த்து வைத்தது, 


அபூலஹபின் மகன் உத்பா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை மரியாதைக் குறைவாகக் தூஷனித்தான், இவர் ஒரு கூட்டத்தோடு பயணம் செய்தார், இரவில் எல்லோரும் சேர்ந்து உறங்கினர், சிங்கம் உள்ளே வந்து உறங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு வரின் வாயையும் முகர்ந்து பார்த்து இறுதியாக உத்பாவைக்கவ்விக்கொண்டு சென்று கொன்றது.


 உண்மையில் முனாபிக்குகள் அல்லாஹ்வுக்கோ, அவனுடைய றஸூலுக்கோ, முஃமின்களுக்கோ சதி செய்ய வி ல்லை,முனாபிக்குள் உலகத்தை நம்பி ஈமானைக்கைவிட்டதால் இவ்வுலகமும் இவ்வுலகத்தின் சுகமும், கண்ணியமும் இவர்களை விட்டும் விலகிச் சென்றது, துயரமும், இழிவுமே அவர்களுக்குக் கிடைத்தன.


 மறுமையில் நரகத்தின் அடித்தட்டில் நீடூழி காலம் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியம் கிடைத்தது இதை அவர்கள் அறியாமலேயே இந்த அடாத்து வேலையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வெட்டிய படு குழியில் அவர்களே வீழ்ந்துள்ளார்கள். அதை அவர்களின் புலன்கள் உணர்வதில்லை, 

மனதில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும்; இமாம்களையும்; வலிமார்களையும் பற்றி அலங்காரமான வார்த்தைகளால் வாயாரப் புகழ்ந்து கொண்டு மௌலீது, மீலாத்;கந்தூரிகளை குறை காண்பவர்களும் இந்த முனாபிக் கூட்டத்தையே சேருவார்கள். 


ஸூபிஸ விளக்கம்.


மனிதர்களிடமும் இந்த மூன்று கூட்டத்தார்களும் இருக்கவே செய்கின்றனர்.


1- றூஹுல் இன்ஸான் ! சுத்தமான முஃமின்.


2- ஷைத்தான்!, வெளிப்படையான காபிர்.


3- நப்ஸு அம்மாறா! முனாபிக்


இது மனதில் இருந்து கொண்டு தன்னை அவனின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும், ஷைத்தானோடு சேர்ந்து கொண்டு அவனை நண்பனாகிக்கொள்ளும், எவரின் உள்ளத்தில் அல்லாஹ்வின் கருணைப் பார்வை உள்ளதோ அவரில் நப்ஸு அம்மாறா ஆதிக்கம் செலுத்தாது, முடிவில் நிர்பந்தமாகவே சரணடைந்து வழிப்படச்செய்யும்.


யாஅல்லாஹ் !, எங்களின் ஈமானில் நிபாக்கின் துளி கூட இல்லாமல் எங்கள் ஈமானைப் பரிசுதாதமாக்கி வைப்பாயாக! காமிலான முஃமின்களான வலிமார்கள் கூட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொள்வாயாக! நப்ஸு அம்மாறாவின் கெடுதியிலிருந்து எங்களின் மனதைப் பாதுகாப்பாயாக ! ஆமீன் யாறப்பல் ஆலமீன்.

திருக்குர்ஆன் விளக்கம் 09

 


*திருக்குர்ஆன் விளக்கம்* 

•••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* 

ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

              தொடர்: 9


وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ


2- 8 இன்னும்,மனிதர்களில் சிலர் அல்லாஹ்வையும் , இன்னும், இறுதி நாளையும் ஈமான் கொடண்டதாகக் கூறுகின்றனர், இன்னும், அவர்கள் ஈமான் கொண்டவர்கள் அல்ல!

••••••••••••••••••••••••••••••••


தொடர்பு: 

 

1- இதற்கு முன்னுள்ள திருவசனங்களில் சுத்தமான முஃமின்களையும், சுத்தமான காபிர்களையும் பற்றிக் கூறப்பட்டன; இப்போது நாவில் முஃமினாகவும், மனதால் காபிராகவுமிருக்கும் முனாபிக்குகளைப் பற்றிக் கூறப்படுகின்றது, இவர்கள் இருபக்கமும் வாலாட்டுபவர்கள், ஆகவேதான் இவ்விருவருக்கும் பின் இவர்களைப் பற்றிக் கூறப்படுகின்றது, இருபக்கத்திலு

முள்ளவற்றைப் புரிந்து கொள்ளு - ம் போதுதான் நடுவிலிருப்பதை அறியமுடியும்.  


2-. இதற்கு முன் வெளிப்படையான காபிர்களைப் பற்றிக் கூறப்பட்டது, இப்போது ஒளிந்திருக்கும் காபிர்களைப்பற்றிக் கூறப்படுகின்றது, ஒளிந்திருக்கும் காபிர் வெளிப்படையான காபிரை விட அதிகம் ஆபத்தானவர்கள், ஆகவேதான் அவர்களைக் கடைசியாகக் கூறப்பட்டது.


இறங்கிய காரணம்:

••••••••••••••••••••••••••••••••••••


"உபை இப்னு கலப்" என்பவர் அப்போதைய யத்ரிப் மக்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்கவராகக் கருதப்பட்டிருந்தார், இவரை அவர்களுக்குத் தலைவராக முடிசூட இருக்கும் தருணத்தில் தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினத்துல் முனவ்வரா போய்ச் சேர்ந்தார்கள்; நபியவர்களின் வருகைக்குப் பின், அங்குள்ள மக்கள் இஸ்லாத்தில் கவரப்பட்டனர்; ஆகவே, உபையின் மதிப்பு சரிந்தது; அவர் தலைவராக வேண்டும் என்ற கனவும் கலைந்து போனது; இதனால்அவர் ஆத்திரமடைந்தார்;  


தனது வெஞ்சத்தை மனதில் மறைத்துக் கொண்டு இரு தரப்பாருடனும் சகஜமாக நடந்து தனக்கென ஒரு கூட்டத்தைத் திரட்டி கொண்டார்; இக்கூட்டத்தை "முனாஃபிக்குகள்" என்று கூறப்படுகின்றது; இத் திருவசனம் இவர்கள் விடயத்தில் இறங்கியது; இவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அன்று படுமோசமான சண்டாளர்களாகத் திகழ்ந்தார்கள்; இதைத் தொடர்ந்து வரும் திருவசனங்கள் மூலமாக இவர்களின் பண்புகள், மாய்மாலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.


விளக்கம் - தப்ஸீர் -


றப்புத்த ஆலா முஸ்லிம்களின் பண்புகளில் நான்கு திருவசனங்களையும், காஃபிர்கள் தொடர்பாக இரு திருவசனஙகளையும் இங்கு இறக்கினான், ஆனால், முனாபிக்குகளின் குறைகளை பதின்மூன்று திருவசனங்களில் குறிப்பிடுகின்றான், ஏனெனில், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அல்லது இவர்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதனாலாகும்,  


முஸ்லிம்கள் இவர்களை இலகுவில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகளவான இவர்களின் அடையாளங்களைக் குறிப்பிடுகின்றான், அல்லது, இவர்கள் முஸ்லிம்களோடு தொடர்பாக இருந்தார்கள், முஸ்லிம்களோடு சேர்ந்து இருந்து கொள்வார்கள், தொழுகையில் பங்கெடுப்பார்கள், ஆகவே, இவர்களின் அடையாளங்களைக் கூறுவதால் வெட்கப்பட்டு திருந்தி முஸ்லிம்களோடு முழுமையாக சேர்ந்து கொள்வார்கள் என்று ஆதரவு வைப்பதற்காக இருக்கலாம்.


இத்திருவசனத்தில் ஈமானின் இரு விடயங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. 


1- அல்லாஹுத்த ஆலாவைப் பற்றி


2- கியாமத்நாளைப்பற்றி


இவை இரண்டும் ஈமானிய விடயங்களின் இரு ஓரங்களாகும், 

முனாபிக்குகள் ஈமானின் அனைத்து அம்சங்களையும் ஈமான் கொள்வதாகக் கூறுவார்கள், இதற்குள் வேதம்,, நபி உள்ளிட்ட அனைத்தும் அடங்கும், 


முனாபிக்குகளான இவர்கள் யஹூதிகள், ஏலவே இவற்றை அவர்கள் ஈமான் கொண்டுள்ளார்கள், முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக ஈமான் கொண்டதாகக் கூறிக்கொண்டு அவர்களின் இனத்தைச் சேர்ந்த காஃபிர்களிடம் சென்று நாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கூறுவார்கள், இந்த பாசாங்குக்காறர்கள் உண்மையில் "இவர்கள்முஃமின்கள் இல்லை" என்று இத்திருவசனத்தில் அல்லாஹுத்த ஆலா கூறி அவர்களின் வெளி வேஷத்தைத் தோலுரித்து காட்டிவிட்டான்..


முனாபிக் என்ற சொல் "நிபாக்" என்ற சொல்லிலிருந்து வந்தது, இதற்கான பொருள் தனியாகுவது, அவர்களின் மனமும், நாவும் தனித்தனியாக இருக்கின்றன, ஆகவேதான் இவர்களை "முனாபிக்" எனக் கூறப்படுகின்றது, 


நயவஞ்சகத்தின் வகைகள்.

--------------------------


நயவஞ்சகம் சில வகையில் உள்ளன.


1- நாவால் ஈமானை வெளிப்படுத்துதல், மனதில் முழுமையாக மறுப்பது.


2- நாவால் ஈமானை வெளிப்படுத்துவது ,ஆனால், தெளிவாக மறுக்காமலிருப்பது, இவர்களை முதப்தப் مذبذب முடிவெடுக்காமல் தடுமாற்றத்தில் இருப்பவர்ஆவார்கள்.


3- இவர்கள் வாயால் இஸ்லாத்தை உறுதிப்படுத்துவார்கள், மனதால் உண்மைப் படுத்தவும் செய்வார்கள், ஆனால், இவர்களின் மனதில் உலகத்தின் மோகம் மிகைத்திருக்கும், அதனால், உலகத்தின் பயனை ஈமானை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவார்கள், உலக ஆதாயத்துக்காக இஸ்லாமிய படைக்கு எதிராக போராடுவார்கள், இஸ்லாத்தை துவம்சம் செய்வது , இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது,  


இந்த மூன்று கூட்டத்தாரும் கடுமையான காபிர்களாகும், இவர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள்.


4- சொல்லும், செயலும் ஒன்றுபோல் இல்லாதவர்கள், வாயால் ஒன்றைச் சொல்வார்கள், மனதில் வேறு ஒன்றை வைத்துக்கொள்வார்கள், இதை " தகிய்யா" என்று சொல்வார்கள், இது ஷீஆ பிரிவினரின் முக்கியமான ஓர் அடிப்படைக் கோட்பாடாக இருக்கின்றது, இதுவும் முனாபிக்குகளின் ஒரு வழியாகவே இருக்கின்றது, இது உண்மையான ஈமானியக்கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறானதாகும், சாதாரண புரிதல் உள்ள எந்த நபரும் இதை ஒரு நல்ல செயலாகக் கருத மாட்டார்கள்.


ஹதீஸ் ஷரீஃபில் சில செயல்களையும் "நிஃபாக்" என்று கூறப்பட்டுள்ளது. ஓர் அறிவிப்பில் முனாஃபிக்களின் சில அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன:


1-பேசினால் பொய் பேசுவான், 


 2- எவருடனாவது தர்க்கம் செய்தால், தூஷணிப்பான் ,  

3- வாக்களித்தால் பூரணமாக நிறைவேற்ற மாட்டான், 


4- நம்பிக்கைக்கு மோசடி செய்வான், 


 இது செயல் சார்ந்த நயவஞ்சகம்,தவிர அகீதா சார்ந்த நயவஞ்சகமல்ல, 

2- தங்களை முஃமின் என்று வாயால் கூறிக்கொண்டு மனதில் குப்றியத்தான அகீதா வை வைத்திருக்கும் அனைத்து இயக்கங்களும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்பதை இத்திருவசனம் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது, வெறுமனே தன்னை முஃமின் என்பதால் ஒருபோதும் ஈமான் உண்டாகப் போவதில்லை.


3- முனாபிக்குகளை. من الناس "மனிதர்கள் நின்றும்" என்று இத்திருவசனத்தில் கூறப்பட்டுள்ளது, இவர்கள் கோலத்தில் முஸ்லிம்கள்; மனித பண்புகள், பூரணங்களை விட்டும் ஒழிந்தவர்கள்; எவரையாவது (பஷர்) மனுஷன் என்று மொட்டையாக கூறுவது அவரின் சிறப்புக்கள், பூரணங்களை மறுப்பதாக அமையும்; ஆகவே தான் நபிமார்களை 'பஷர்' சாதாரண மனிதன் என்று கூறுவதை 'குப்று' என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது;  

நபிமார்கள் விடயத்தில் சாதாரணமாக அவர்களை " மனிதர்"என்று கூறுவது அவர்களின் தகுதியைக் குறைத்துக் கூறுவதாக இருக்கும், இவ்வாறு கூறுவது காஃபிர்களின் வழக்கமாகும்.


தப்ஸீர் : கஸாயினுல் இர்ஃபான்.


4- வெளிப்படையான காபிர்களை விட, முனாபிக் மிகக் கெட்டவன் என்பதை இத்திருவசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது, இதற்கு சில காரணங்கள் உள்ளன.


1- காபிர் என்பவர் காபிர் மட்டும்தான்.ஆனால் , முனாபிக், காபிரும், துரோகியுமாவான்.


2- காபிர் மனிதனைப் போன்றவன், முனாபிக் ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியைப் போன்றவன்.


3- காபிர் என்பவர் காபிர் மட்டும்தான், முனாபிக் காபிரும், பொய்யனுமாவான்.


4- காபிர் கலப்பில்லாத காபிர் மட்டும்தான், முனாபிக், காபிரும், இஸ்லாத்தைக் கேவலப்படுத்துபவனுமாவான்


.ஆகவே, 

முனாபிக் காபிரை விட தரம் கெட்டவனாவான்.

திருக்குர்ஆன் விளக்கம் 08


 *திருக்குர்ஆன்* 

 *விளக்கம்* 

•••••••••••••••••••••••••••••••

மௌலவி பாஸில் *ஏ. எல். பதுறுத்தீன்*. ஷர்க்கி, பரேலவி, ஸூபி,காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••. தொடர் : 8


خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ


2- 7 அல்லாஹுத்த ஆலாஅவர்கள் இதயங்களிலும் , இன்னும், அவர்களின் கேள்விகளிலும் முத்திரையிட்டு விட்டான்; இன்னும், அவர்களின் பார்வையில் திரை விழுந்திருக்கி ன்றது; அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு .! 

••••••••••••••••••••••••••••••


தொடர்பு:

---------------


இதற்கு முன்னுள்ள திருவசனத்தில் காபிர்களின் பண்புகளையும், நிலைகளையும் கூறப்பட்டுள்ளன; இத்திருவசனத் தில் அதற்கான காரணத்தையும், முடிவையும் கூறப்படுகின்றன; இங்கு "முத்திரையிடப்பட்டது" என்பதன் நோக்கம் அவர்களின் பிடிவாதம் குப்புறையும், பாவத்தையும் நல்லதாக காணத் தொடங்கியது; ஈமானையும், வழிபடுவதையும் தீயதாகக் கருதியது; காபிர்களின் தலைவர்களில் அதிகளவான விருப்பமும்; நபிமார்கள், வலிமார்களில் வெறுப்பும் ஏற்படலாயிற்று; இப்போது அவர்களின் உள்ளத்திலிருந்து குப்று வெளியேற மாட்டாது; ஈமான் உள்ளே நுழையவும் மாட்டாது; உண்மையை விளங்க முடியாதளவுக்கு அவர்களின் இதயங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனில் சில இடங்களில். طبع الله என்றும், اغفلنا قلوبهم என்றும்; ران علي قلوبهم என்றும்; قاسية قلو بهم என்றும் கூறப்பட்டுள்ளன; இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று "முத்திரையிடல்" என்ற நெருக்கமான பொருளையே கொண்டிருக்கின்றன;

இத்திருவசனத்தில் இதயம், காது; உள்ளிட்ட இரண்டும் முத்திரையிடப்பட்டுள்ளன என்பதை علي என்ற இடைச்சொல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வந்திருப்பதை தெரியப்படுத்துகின்றது; பார்வையில் திரை விழுந்திரு க்கின்றது என்பதை غشاوة என்ற சொல் மூலம் தெரிகின்றது. عظيم என்ற சொல் சகல தரப்பு தண்டனையிலும் மிகப்பெரிய தண்டனை கிட்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ‌


உலகத்தில் முஸ்லிம்களால் கொல்லப்படுவது, அல்லது , கைது செய்யப்படுவது, மறுமையில் கொதி நீரால், விஷ ஜந்துக்களால் சோதிக்கப்படுவது, இவையனைத்திலும் மிகைத்து சோதனை முடிவில்லாமல் நிரந்தரமாக இவற்றை அனுபவிப்பதாகும்.


இத்திருவசனத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் வருமாறு, 


நபியவர்களே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இந்த காபிர்கள் ஈமான் கொள்ளவில்லை யென்று நீங்கள் சஞ்சலப் பட வேண்டாம், ஏனெனில், ஈமான் கொள்வதற்கு இரண்டு வழிகளே இருக்கின்றன, 


1- அல்லாஹுத்த ஆலாவின் அத்தாட்சிகளையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முஃஜிஸாத்துக்களையும் பார்த்து ஈமான் கொள்வதற்கு அவர்களின் மனம் சீராக இருக்க வேண்டும்.


2- அவருக்கு அறிவில்லாமல் இருந்து அடுத்தவர் புரியவைத்து தெரியப்படுத்துவதன்மூலம் ஈமானை ஒப்புக்கொள்ளல்.


 இந்த இரண்டு வழிகளையும் இந்த காஃபிர்கள் இழந்துள்ளனர், அவர்களின் பிடிவாதத்தால் இதைச் சிந்தித்து ஏற்கும் நிலையில் அவர்களின் மனம் இல்லை, 


 அவர்களின் செவியும், கண்ணும் சத்தியத்தைக்கேட்டவோ, பார்க்கவோ முடியாதளவு செயலிழந்து விட்டன, அதாவது, ஈமான் கொள்வதற்கான சகல காரணங்களும் அடைபட்டு விட்டன, ஆகவேதான் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறப்பட்டது, 


மனம் ஈமானுக்கான தலம், காதும், கண்ணும் ஈமானுக்கான வழிகள், வழிகள் தடைபட்டதால் தலமும் ஈமானைப்பெறுவதற்கான தகுதியை இழந்துவிட்டது, இந்த நிலையில் அவர்களுக்கு எவ்வாறு ஈமான் சாத்தியமாகும்? 


 பாவத்திற்கான அடிப்படை மூன்று என்று உலமாக்கள் கூறுகின்றனர்.


1- பேராசை: حرص


2- பொறாமை : حسد

                                                              

3- பெருமை : تكبر 

                         

சில வஸ்த்துக்கள் பராமுகத்தை غفلة

ஏற்படுத்தக்கூடியவையாகும். அவை வருமாறு,


அதிகமாக உண்பது, அதிகமாக உறங்குவது, எல்லா நேரத்திலும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை , பணத்தில் ஆசை, பதவி மோகம், அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆசை , சில வேளை பணத்தையும் , ஆட்சி அதிகாரத்தையும் தேடுவோர் குப்றில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, உள்ளிட்ட பாவங்கள் என்ற கரும்புள்ளியால் மனம் இருளடைந்து போகின்றது, 


திருக்குர்ஆனை ஓதுவது, ஸலவாத்ஓதுவது, அல்லாஹுத்த ஆலா வை திக்ரு செய்வது , மரணத்தை அதிகம் ஞாபகப்படுத்துவது உள்ளிட்ட இவையாவும் மனதின் கறைகளை நீக்கி சுத்தப்படுத்தும் ரஸவாதங்களாகும், 


இவ்வாறு அதிகமாகச் சிரிப்பது மனதை நோயாளிக்கும், அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது இந்த நோய்க்கான பரிகாரமாகும், 


எவராவது பாவத்தோடு நன்மையான நற்காரியங்களையும் தொடர்ச்சியாகச் செய்து வருவாராயின், மனத்தின் அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்,  


நன்மையில் கவனம் செலுத்தாமல் பாவத்திலே புரண்டு கிடப்பவரின் இதயம் கரும்புள்ளியால் சூழப்பட்டு முழுமையாகவே இருண்டு விடும், இந்த இருளை கடின முயற்சியால்தான் அகற்றமுடியும்


 உள்ளத்தை தாவிப் பிடித்த இருளை அல்லாஹுத்த ஆலா வின் நேசர்களின் அருட்பார்வை யால் நீங்க வில்லையென்றால் மனதில் முத்திரை விழுந்துவிட்டது என்பது பொருளாகும்.


 மனம் பாவத்தின் அழுக்கால் மெதுவாகவே அழுக்கடையும், வணக்கங்கள் அந்த அழுக்கை மெதுவாக விலக்கிச் சுத்தப்படுத்தும், ஆனால் நபியின் விரோதம் மனதை ஒரே தடவையில் முத்திரை குத்தி விடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 


 ஷைத்தானின் மனதில் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விரோதம் ஒரே தடவையில் முத்திரை குத்தியது, ஹளறத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு போட்டிக்கு வந்த சூனியக்காரர்களின் மனதிலிருந்த அழுக்கை ஹளறத் கலீமுள்ளாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வை ஒரே தடவையில் துடைத்து பரிசுத்தப் படுத்தியது. 


இதிலிருந்து நபியின் விரோதம் படுமோசமான குப்று!, வலியுள்ளாஹ்வின் பார்வை மிகச்சிறந்த நிஃமத்! என்று தெரிய வருகின்றது.


ஸூபிஸ விளக்கம்.

---------------

ஆன்ம உலகில் றப்புத்த ஆலா வாக்குறுதி வாங்கியபோது, மனிதர்களை அணுவின் கோலத்தில் வெளிப்படுத்தி அவர்களிடம் தன்னுடைய றுபூபிய்யத்துக்கான வாக்குறுதியை வாங்கினான், பின்னர் அந்த அணுக்களை மனங்களிலும்,மனங்களை சடங்களிலும், சடங்களை பூமியிலும் அமானிதமாக வைத்தான், 


பிறப்பின் போது இந்த அணுக்கள் மனத்தின் பொறியாக இருக்கும், இதன் ஊடாகவே மனதிற்கு மறைவான உலகம் தெரிய வருகின்றது, அங்குள்ள சப்தங்கள் உணரப்படுகின்றது,  


ஆகவேதான்


 ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்திலேயே பிறக்கின்றது, அதன் பெற்றோர்தான் அதை யஹூதியாகவும், நஸாறாவாகவும, மஜூஸியாகவும் ஆக்கின்றனர் " என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது.


மனிதன் கெட்ட உறவில் சேரும்போது அந்த பொறி மெல்ல, மெல்ல அடைபட்டு திறக்கமுடியாதளவு அடைபட்டு விடும், இந்த நிலையில் அவருக்கு பார்வை இருக்கும், அகப்பார்வை இருக்க மாட்டாது, 


அபூஜஹ்லு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இதயத்தால் பார்க்காமல், புறக்கண்ணால் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் என்று பார்த்ததால் நிரந்ர நரகவாதியானான், ஸித்தீக்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு இதயத்தின் பார்வையால் அல்லாஹ்வின் றஸூலாகப் பார்த்தார்கள் ஸித்தீக்குல் அக்பர் ஆனார்கள், லைலாவின் அழகைப் பார்ப்பதற்கு மஜ்னூனின் கண் வேண்டும்.


பயன்கள் 

-----------

அல்லாஹ்வின் நேசர்களைப் பகைத்துக் கொள்வதால் மனம் வன்மையடைகிறது, அவர்களில் விரோதம் பாராட்டுவதன் முடிவு மனம் முத்திரையிடப் படுவதாகும்,பின்னர், அவருக்கு ஈமான் ஒருபோதும் சாத்தியமாகாது,  


ஹதீதுக்குத்ஸியில் அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.


என்னுடைய வலியில் விரோதம் பாராட்டு பவனுக்கு எதிராக நான் யுத்தப் பிரகடனம் செய்கின்றேன்,


 மஹப்பத்தால் ஏற்படும் குப்றை விட விரோதத்தால் எழும் குப்று கடினமானது என்று கூறப்படுகின்றது, ஈஸாஈ ஹளறத் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது எல்லை தாண்டி மஹப்பத் வைத்ததால் காபிரானார்கள், யஹூதிகள் அடுத்த நபி மீது விரோதம் கொண்டதால் காபிரானார்கள், இருகூட்டத்தாரும் காபிர்களாக இருந்தாலும் யஹூதிகள் ஈஸாஈகளைவிட வன்மம் பிடித்த காபிர்களாகும், 


றாபிழிகள் ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது அளவுகடந்து மஹப்பத் வைத்ததால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள், தேவ்பந்தி வஹாபிகள் நபிமார்களைத்தரக்குறைவாகப் பேசி தூஷணித்ததால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள்,ஆகவே , தேவ்பந்திகள் றவாபிழிகளை விட கேடுகெட்ட வர்களாகும், ஏனெனில் இவர்கள் நபிமார்களின் விரோதத்தால் காபிரானவர்கள்.

திருக்குர்ஆன் விளக்கம் 07

*திருக்குர்ஆன் விளக்கம்*  •••••••••••••••••••••••••••••••• மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்* . ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி,  நக்ஷபந்தி. •••••••••••••••••••••••••••••••••  ان الذين كفروا سواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون.  2-  6.  நிச்சயமாக *எவரின் விதியில்* குப்றியத் உள்ளதோ,  அவர்களுக்கு எச்சரிப்பதும், எச்சரிக்காமலிருப்பதும் சமம்தான்! அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். •••••••••••••••••••••••••••••••••.                        தொடர் :7  தொடர்பு :  ------------  இத்திருவசனம் முந்திய திருவசனத்தோடு சில வகையில் தொர்பாகியுள்ளது.  1- இதற்கு முந்திய திருவசனங்களில்  அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களைப் பற்றி கூறப்பட்டது, இப்போது அவர்களுக்கு எதிரான நிராகரிப்பாளர்களைப் பற்றிக் கூறப்படுகிறது; ஒவ்வொன்றையும் அதற்கு எதிரானதைக் கொண்டே அறியப்படும். பகலை இரவின் மூலமாகவும்,  வெளிச்சத்தை இருட்டின் மூலமாகவும் அறியப்படும்.  2-  அங்கீகாரம் பெற்ற நல்லடியார்கள் ஹிதாயத் பெற்று, வெற்றியடைந்தற்குக் காரணமான பண்புகளைப்பற்றி முதலில் கூறப்பட்டன, இப்போது  ஹிதாயத்தையும், வெற்றியையும்   இழப்பதற்குக் காரணமான பண்புகளைப் பற்றிக் கூறப்படுகின்றது, ஹிதாயத்தின் நுட்பம் யாதெனில், இருதரப்புப் பண்புகளையும் எடுத்துக் கூறி கேட்பவர் சிறந்ததற்கான காரணத்தைத் தேர்வு செய்து; தீயவைக்கான காரணத்தை விட்டும் தவிர்ந்துக் கொள்வதாகும்.  3-  மேற் கூறப்பட்ட ஆறு பண்புகளையும் கொண்டுள்ள முத்தகீன்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டும் என்று முதலில் கூறப்பட்டது, இப்போது இத்திருவசனத்திலுள்ள பண்புகளைக்கொண்டவர்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டாது என்று  கூறப்படுகின்றது, இதிலிருந்து மேற்கூறிய பண்புகள் ஹிதாயத்திற்கான காரணங்கள் என்றும் , இப்போது கூறப்படும் காரணங்கள் ஹிதாயத்தை இழக்கச் செய்யும் காரணங்கள் என்றும் தெரிகின்றது,  கூர்மையான மருத்துவர்   நோயாளிக்கு பரிகாரத்திற்கான முறையையும், இன்னின்னவைதீங்கு செய்யும் என்றும், அதைத்தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்.   இறங்கிய காரணம்: ---------------  இத்திரு வசனம் அபூஜஹ்லு, அபூலஹப் உள்ளிட்ட காபிர்களின் விடயத்தில் இறங்கியது,இவர்கள் ஈமான் கொள்ளாதிருப்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஆழ்ந்த கவலையைக் கொடுத்தது; இத்திரு வசனம் இறங்கி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு இவ்வாறு  ஆறுதல் கொடுத்துள்ளது   எனது நேசரே! எத்தி வைப்பது தான் உங்கள் கடமை! ஈமான் கொள்ளாதிப்பது அவர்களின் கூறுகெட்ட நிலை !ஆகவே, இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.   விளக்கம் : தப்ஸீர் ----------.  "குப்று"  என்பதற்கு மறைத்தல் என்பது அகராதி ப் பொருள், ஷரீஅத்தில் , அல்லாஹ்வின் வுஜூத், அல்லது அவனுடைய தௌஹீத்,  அல்லது எதாவது ஒரு நபியின் நுபுவ்வத்தை  அல்லது மார்க்கத்தின்  கண்டிப்பான வையில் ஏதாவது ஒன்றை மறுப்பது,   மார்க்கத்தில் கண்டிப்பானவை என்பது ,எது மார்க்கம் தொடர்பான விடயம் என்று  பொதுவாக முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கும் விடயங்களைக் குறிக்கும்.  சில விடயங்கள் மார்க்கத்தை மறுக்கும் அடையாளங்களாக இருக்கும்,, உ+மாக, பூநூல் போடுவது,  ஹிந்துக்களுக்குச் சொந்தமான தொப்பி , உருத்திர மாலை அணிவது,   சிலுவை அணிவது,கிறித்தவ மாதிரிகள் போன்று  இடுப்பில் கறுத்த பட்டி அணிவது,    சாதிகளைச் போன்று காவி  உடை  உடுப்பது உள்ளிட்டவையும் குப்றாகும்.   ஹிந்துக்கள் தங்களின் சமய அடையாளமாகக் கருதுகின்ற பொட்டு, திலகம் வைப்பது , கோமணம்  கட்டுவது உள்ளிட்டவையும் குப்றுதான்,  பொதுவாக  வெளியில் பார்க்கின்றவருக்கு "காபிர்" என்று அடையாளப்படுத்தும் அனைத்தும் குப்றுதான்.   காஃபிர்களின் சமய , சமூக  அடையாளமாக இருப்பவற்றை முஸ்லிம்கள் செய்வது ஹறாம், உ+மாக, தீபாவளி நாளில் பட்டாசு கொளுத்துவது, பௌத்தவர்களின் சிறப்பு நாளில் தோரணம் அமைப்பது, அகல் விளக்கு எரிப்பது,     காஃபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்வது , அதற்கு உதவி செய்வது,  காஃபிர்களின் செயல்களை நல்லதாகக் காண்பது, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உள்ளிட்ட யாவும்  ஹறாமாகும். சில வேளை குப்றாகவும் ஆகும். இதிலிருந்து எம்மை அல்லாஹுத்த ஆலா பாதுகாப்பானாக!   திருக்குர்ஆனில் "குப்று" என்ற சொல் நான்கு பொருட்களில் வந்துள்ளது,  1-   ஈமானுக்கு எதிர்    2-    நிராகரிப்பு   3-  நம்பிக்கை         க்கு எதிர்.   4-- நிராசை  இங்கு முதல் வகை  நோக்கமாகும், காரணம் இதற்கு முன் ஈமானைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.  "குஃப்ர்" நான்கு விதங்களில் உள்ளன   1- நிராகரிக்கும் குபுர்,      كفر انكار   அதாவது  அல்லாஹ்வைப் பற்றி எதுவும் தெரியாமல் நிராகரிப்பது.   2- முரண்டு பிடிக்கும் குப்று:   ரப்பை மனதால் அறிவது ஆனால் அதை வாயால் விண்ணப்பிக்காமல் இருப்பது  இப்லீஸ்  மற்றும் பிடிவாதக் காபிர்களின்  குப்றைப்போல்,  3- பிடிவாதமான குப்று:     كفر الجهود   மனதால் அறிவது, சில வேளை வாயாலும் கூறுவது; ஏதும் காரணத்தால் அதற்கு வழிப்படாதிருப்பது அபூதாலிபின் குப்று  போன்று!  4- நயவஞ்சகக் குப்று:     كفر النفاق  இவர்கள் வாயால் உறுதிப்படுத்துவார்கள், மனதில் நிர்ணயம் கொள்வதில்லை.  ஆதாரம்:   தப்ஸீர் , றூஹுல் பயான். பத்உல் ஆமாலி  இத்திருவசனத்தில் கூறப்படும் "குப்று" என்பது இரண்டாவது வகையைக் குறிக்கும்,  அனைத்து காபிர் களையும் இத்திருவசனம் குறிக்காது , ஏனெனில், அதிகளவான காபிர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்  ,இத்திருவசனத்தில் காபிர் கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து  பிடிவாதத்தால்  காபிரானவர்களை இத்திருவசனம் குறிப்பிடுவதாக உலமாக்கள் கூறுகின்றனர்,   காபிர்களில் விளக்கம் இல்லாதவர்களும், சரியான சாட்சியமில்லாதவர்களும் இஸ்லாத்திற்குள் வருவதற்கு வாய்ப்புண்டு, சிலர் அனைத்தையும் தெளிவாக  அறிந்து கொண்டு மனமுரண்டாக மறுக்கின்றவர்கள்இருக்கின்றார்கள், இவ்வாறான வர்கள் முஸ்லிமாவ தற்கான வாய்ப்பு முற்றிலுமாகக்கிடையாது,  முரண்டுபிடிப்பவரைத்திருத்த எந்த அறிஞராலும் முடியாது, சந்தேகமுள்ள  நோயாளிக்கு எந்த மருத்துவராலும் பரிகாரம் செய்ய முடியாது.  பிடிவாதத்திற்கு சில காரணங்கள் உள்ளன.  1-  வழிகாட்டி மீது தனிப்பட்ட விரோதம் இருப்பின் அவரின் ஒவ்வொரு கூற்றும் அவருக்கு வெறுப்பாகவே இருக்கும், இப்லீஸ் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான பொறாமையின் காரணமாகவே தான் காபிரானான், ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யுமாறு அல்லாஹுத்த ஆலா கட்டளையிட்டதும் அனைத்து மலக்குகளும் சுஜூது செய்ததை இப்லீஸ் பார்த்தும்அவன் ஈமான் கொள்ளவில்லை,ஏனெனில் ,  பேச்சின் தாக்கம் சொல்பவரின் மகத்துவத்தினால் ஏற்படுவதாகும்,   முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காதல் மனதில் குப்று வருவதைத் தடுக்கும்,  முஸ்தபா மாநபி மீதான வெறுப்பு மனதில் ஈமான் வருவதை அனுமதிக்காது.  2-  தனது,  தந்தை பாட்டன்மார்களின்  நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களின் நல்லது, கெட்டதை யெல்லாம் ஆதரிப்பது.  3- குறிப்பிட்ட ஓர் ஆலிம், அல்லது வழிகாட்டி கூறுகின்றார் என்பதற்காக எதிர்ப்பது .   மேற் கூறப்பட்ட மூன்று  பிடிவாதக்காறர்களும் ஈமான் கொள்ள மாட்டார்கள்,   எவரின் விதியில் குப்று விதிக்கப்பட்டதோ அவர்கள் ஒருபோதும் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இத்திருவசனத்தின் பொருளாகும்.   திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கின்றனர்,    " நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நபியே நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும், அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் இரண்டும் அவர்களுக்கு சமமே ஆகும், அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்."  இந்த மொழிபெயர்ப்பால் பொதுவாக காபிர் கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று  விளங்க முடிகின்றது,  பொதுவாக காஃபிர்கள் எந்தவகையிலும் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்றிருந்தால்   பிரச்சாரம் பலனற்றதாகிவிடும்,  காபிர் கள் சாரிசாரியாக திரண்டு வந்து இஸ்லாத்தை ஏற்ற தெல்லாம்   பொய்யாகி விடும்,   நபிமார்கள், வலிமார்கள், மற்றும் பலரின் பிரச்சாரத்தால்  கணக்கற்றோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார், குப்றிலிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவே நபிமார்கள் வந்தார்கள், வேதங்கள் இறங்கின ,  மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவை யாவற்றையும் கேள்விக்கும் படுத்துகின்றது.   உண்மையில் இத்திருவசனத்தில் அனைத்து காபிர் களையும் குறிப்பிடவில்லை,  அல்லாஹ் விதியில் குப்றியத்தின் முத்திரை குத்தப்படாதவர்களையே குறிப்பிடுகின்றது,    பிரச்சாரத்தால் ஒருவரின் பண்புகள் மாற்றப்படலாம், எதார்த்தம் மாற்றப்படமாட்டாது, எந்த ஒரு நபரின் போதனையாலும் மிருகத்தை மனிதனாக்கமுடியாது. இதைத்தான் இத்திருவசனம் கோடிட்டு காட்டுகின்றது.   இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்ட காபிர்களுக்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரச்சாரம் செய்யவே செய்தார்கள், எத்திவைப்பது தான் நபியின் பணி , ஏற்பதும் , ஏற்காதிருப்பதும் அவர்களின் விதியிலுள்ளதின் முடிவாகும், எத்திவைத்ததற்கான நற்கூலி அவர்களுக்குக்  கிடைக்கும்,  திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு அல்லாஹுசுப்ஹானஹுவத ஆலா வின் நோக்கத்தை ப்புரிந்துசெய்யப்படவேண்டும், தவறினால் மக்கள் திருக்குர்ஆனை பிழையாக விளங்க வழிவகுக்கும். திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில்   இவ்வாறான தவறான மொழிபெயர்ப்புக் கள் அதிகம் காணப்படுகின்றன, சில இடங்களில் குப்றியத் ஏற்படக்கூடிய மொழிபெயர்ப்புக்களும் உள்ளன, உரிய இடத்தில் இன்ஷாஅல்லாஹ் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.     ஸூபியாக்கள் விளக்கம்:   . இத் திருவசனத்திற்கு ஸூபியாக்கள் இவ்வாறு விளக்கம் பகர்கின்றனர்,   இவர்கள் வாக்குறுதிக்குரி ய ( ஆலமுல் அர்வாஹ்வுடைய ) நாளில் எமது ருபூபியத்தை ஏற்று  بلي. உண்மைதான்   என்று கூறிய பின், தங்களின் மனம் என்ற தெளிவான கண்ணாடியை  பாவமான செயலால் அதன் தெளிவை நாசமாக்கி விட்டனர்; இன்னும், அவர்களின் பெறுமதி மிக்க.  றூஹு  என்ற பறவையை உடல் என்னும் கூட்டுக்குள் அடைத்த பின், தங்களின் ஐந்து புலன்களின் ஊடாக இவ்வுலகைப் பார்த்து தங்களின் உண்மையான உலகத்தை மறந்து விட்டார்கள்.   நஃப்ஸையும், ஷைத்தானையும் உறவு கொண்டதால்  றூஹை அதன் தாய் நாட்டின் பழைய நண்பர்களை மறக்குமளவுக்கு உதவாக்கரையாக்கி விட்டனர்; அது தனது தாய் நாட்டின் நண்பர்களைப் புறக்கணித்துவிட்டு தன் பாட்டில் இருக்கத் தொடங்கி  விட்டது;  எனவே,  மக்கள் இவ்வாறு இருக்கக் கூடாது, தங்களுடைய உண்மையான அந்த தேசத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.


*திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்* . ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••


ان الذين كفروا سواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون.


2- 6. நிச்சயமாக *எவரின் விதியில்* குப்றியத் உள்ளதோ, அவர்களுக்கு எச்சரிப்பதும், எச்சரிக்காமலிருப்பதும் சமம்தான்! அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

•••••••••••••••••••••••••••••••••.            

           தொடர் :7


தொடர்பு : 

------------

 இத்திருவசனம் முந்திய திருவசனத்தோடு சில வகையில் தொர்பாகியுள்ளது.


1- இதற்கு முந்திய திருவசனங்களில் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களைப் பற்றி கூறப்பட்டது, இப்போது அவர்களுக்கு எதிரான நிராகரிப்பாளர்களைப் பற்றிக் கூறப்படுகிறது; ஒவ்வொன்றையும் அதற்கு எதிரானதைக் கொண்டே அறியப்படும். பகலை இரவின் மூலமாகவும், வெளிச்சத்தை இருட்டின் மூலமாகவும் அறியப்படும்.


2- அங்கீகாரம் பெற்ற நல்லடியார்கள் ஹிதாயத் பெற்று, வெற்றியடைந்தற்குக் காரணமான பண்புகளைப்பற்றி முதலில் கூறப்பட்டன, இப்போது ஹிதாயத்தையும், வெற்றியையும் இழப்பதற்குக் காரணமான பண்புகளைப் பற்றிக் கூறப்படுகின்றது, ஹிதாயத்தின்

நுட்பம் யாதெனில், இருதரப்புப் பண்புகளையும் எடுத்துக் கூறி கேட்பவர் சிறந்ததற்கான காரணத்தைத் தேர்வு செய்து; தீயவைக்கான காரணத்தை விட்டும் தவிர்ந்துக் கொள்வதாகும்.


3- மேற் கூறப்பட்ட ஆறு பண்புகளையும் கொண்டுள்ள முத்தகீன்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டும் என்று முதலில் கூறப்பட்டது, இப்போது இத்திருவசனத்திலுள்ள பண்புகளைக்கொண்டவர்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டாது என்று கூறப்படுகின்றது, இதிலிருந்து மேற்கூறிய பண்புகள் ஹிதாயத்திற்கான காரணங்கள் என்றும் , இப்போது கூறப்படும் காரணங்கள் ஹிதாயத்தை இழக்கச் செய்யும் காரணங்கள் என்றும் தெரிகின்றது,


கூர்மையான மருத்துவர் நோயாளிக்கு பரிகாரத்திற்கான முறையையும், இன்னின்னவைதீங்கு செய்யும் என்றும், அதைத்தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்.


 இறங்கிய காரணம்:

---------------


இத்திரு வசனம் அபூஜஹ்லு, அபூலஹப் உள்ளிட்ட காபிர்களின் விடயத்தில் இறங்கியது,இவர்கள் ஈமான் கொள்ளாதிருப்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஆழ்ந்த கவலையைக் கொடுத்தது; இத்திரு வசனம் இறங்கி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கொடுத்துள்ளது


 எனது நேசரே! எத்தி வைப்பது தான் உங்கள் கடமை! ஈமான் கொள்ளாதிப்பது அவர்களின் கூறுகெட்ட நிலை !ஆகவே, இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.


 விளக்கம் : தப்ஸீர்

----------.


"குப்று" என்பதற்கு மறைத்தல் என்பது அகராதி ப் பொருள், ஷரீஅத்தில் , அல்லாஹ்வின் வுஜூத், அல்லது அவனுடைய தௌஹீத், அல்லது எதாவது ஒரு நபியின் நுபுவ்வத்தை அல்லது மார்க்கத்தின் கண்டிப்பான வையில் ஏதாவது ஒன்றை மறுப்பது,


 மார்க்கத்தில் கண்டிப்பானவை என்பது ,எது மார்க்கம் தொடர்பான விடயம் என்று பொதுவாக முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கும் விடயங்களைக் குறிக்கும்.


சில விடயங்கள் மார்க்கத்தை மறுக்கும் அடையாளங்களாக இருக்கும்,, உ+மாக, பூநூல் போடுவது,

 ஹிந்துக்களுக்குச் சொந்தமான தொப்பி , உருத்திர மாலை அணிவது,


 சிலுவை அணிவது,கிறித்தவ மாதிரிகள் போன்று இடுப்பில் கறுத்த பட்டி அணிவது, 


 சாதிகளைச் போன்று காவி உடை உடுப்பது உள்ளிட்டவையும் குப்றாகும்.


 ஹிந்துக்கள் தங்களின் சமய அடையாளமாகக் கருதுகின்ற பொட்டு, திலகம் வைப்பது , கோமணம் கட்டுவது உள்ளிட்டவையும் குப்றுதான்,

 பொதுவாக வெளியில் பார்க்கின்றவருக்கு "காபிர்" என்று அடையாளப்படுத்தும் அனைத்தும் குப்றுதான். 


காஃபிர்களின் சமய , சமூக அடையாளமாக இருப்பவற்றை முஸ்லிம்கள் செய்வது ஹறாம், உ+மாக, தீபாவளி நாளில் பட்டாசு கொளுத்துவது, பௌத்தவர்களின் சிறப்பு நாளில் தோரணம் அமைப்பது, அகல் விளக்கு எரிப்பது, காஃபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்வது , அதற்கு உதவி செய்வது, காஃபிர்களின் செயல்களை நல்லதாகக் காண்பது, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உள்ளிட்ட யாவும் ஹறாமாகும். சில வேளை குப்றாகவும் ஆகும். இதிலிருந்து எம்மை அல்லாஹுத்த ஆலா பாதுகாப்பானாக! 


திருக்குர்ஆனில் "குப்று" என்ற சொல் நான்கு பொருட்களில் வந்துள்ளது,


1- ஈமானுக்கு எதிர் 


 2- நிராகரிப்பு


 3- நம்பிக்கை

        க்கு எதிர்.


 4-- நிராசை


இங்கு முதல் வகை நோக்கமாகும், காரணம் இதற்கு முன் ஈமானைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

"குஃப்ர்" நான்கு விதங்களில் உள்ளன 


1- நிராகரிக்கும் குபுர், كفر انكار 


அதாவது அல்லாஹ்வைப் பற்றி எதுவும் தெரியாமல் நிராகரிப்பது. 


2- முரண்டு பிடிக்கும் குப்று: 


ரப்பை மனதால் அறிவது ஆனால் அதை வாயால் விண்ணப்பிக்காமல் இருப்பது இப்லீஸ் மற்றும் பிடிவாதக் காபிர்களின் குப்றைப்போல்,


3- பிடிவாதமான குப்று: كفر الجهود 


மனதால் அறிவது, சில வேளை வாயாலும் கூறுவது; ஏதும் காரணத்தால் அதற்கு வழிப்படாதிருப்பது அபூதாலிபின் குப்று போன்று!


4- நயவஞ்சகக் குப்று: كفر النفاق 

இவர்கள் வாயால் உறுதிப்படுத்துவார்கள், மனதில் நிர்ணயம் கொள்வதில்லை.


ஆதாரம்:  

தப்ஸீர் , றூஹுல் பயான்.

பத்உல் ஆமாலி


இத்திருவசனத்தில் கூறப்படும் "குப்று" என்பது இரண்டாவது வகையைக் குறிக்கும், அனைத்து காபிர் களையும் இத்திருவசனம் குறிக்காது , ஏனெனில், அதிகளவான காபிர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்


,இத்திருவசனத்தில் காபிர் கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து பிடிவாதத்தால் காபிரானவர்களை இத்திருவசனம் குறிப்பிடுவதாக உலமாக்கள் கூறுகின்றனர்,


 காபிர்களில் விளக்கம் இல்லாதவர்களும், சரியான சாட்சியமில்லாதவர்களும் இஸ்லாத்திற்குள் வருவதற்கு வாய்ப்புண்டு, சிலர் அனைத்தையும் தெளிவாக அறிந்து கொண்டு மனமுரண்டாக மறுக்கின்றவர்கள்இருக்கின்றார்கள், இவ்வாறான வர்கள் முஸ்லிமாவ தற்கான வாய்ப்பு முற்றிலுமாகக்கிடையாது,

 முரண்டுபிடிப்பவரைத்திருத்த எந்த அறிஞராலும் முடியாது, சந்தேகமுள்ள நோயாளிக்கு எந்த மருத்துவராலும் பரிகாரம் செய்ய முடியாது.


பிடிவாதத்திற்கு சில காரணங்கள் உள்ளன.


1- வழிகாட்டி மீது தனிப்பட்ட விரோதம் இருப்பின் அவரின் ஒவ்வொரு கூற்றும் அவருக்கு வெறுப்பாகவே இருக்கும், இப்லீஸ் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான பொறாமையின் காரணமாகவே தான் காபிரானான், ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யுமாறு அல்லாஹுத்த ஆலா கட்டளையிட்டதும் அனைத்து மலக்குகளும் சுஜூது செய்ததை இப்லீஸ் பார்த்தும்அவன் ஈமான் கொள்ளவில்லை,ஏனெனில் , பேச்சின் தாக்கம் சொல்பவரின் மகத்துவத்தினால் ஏற்படுவதாகும்,


 முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காதல் மனதில் குப்று வருவதைத் தடுக்கும், முஸ்தபா மாநபி மீதான வெறுப்பு மனதில் ஈமான் வருவதை அனுமதிக்காது.


2- தனது, தந்தை பாட்டன்மார்களின் நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களின் நல்லது, கெட்டதை யெல்லாம் ஆதரிப்பது.


3- குறிப்பிட்ட ஓர் ஆலிம், அல்லது வழிகாட்டி கூறுகின்றார் என்பதற்காக எதிர்ப்பது . 


மேற் கூறப்பட்ட மூன்று பிடிவாதக்காறர்களும் ஈமான் கொள்ள மாட்டார்கள், 


எவரின் விதியில் குப்று விதிக்கப்பட்டதோ அவர்கள் ஒருபோதும் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இத்திருவசனத்தின் பொருளாகும்.


 திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கின்றனர்,  


" நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நபியே நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும், அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் இரண்டும் அவர்களுக்கு சமமே ஆகும், அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்."


இந்த மொழிபெயர்ப்பால் பொதுவாக காபிர் கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று விளங்க முடிகின்றது, 

பொதுவாக காஃபிர்கள் எந்தவகையிலும் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்றிருந்தால் பிரச்சாரம் பலனற்றதாகிவிடும், காபிர் கள் சாரிசாரியாக திரண்டு வந்து இஸ்லாத்தை ஏற்ற தெல்லாம் பொய்யாகி விடும், 


நபிமார்கள், வலிமார்கள், மற்றும் பலரின் பிரச்சாரத்தால் கணக்கற்றோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்,

குப்றிலிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவே நபிமார்கள் வந்தார்கள், வேதங்கள் இறங்கின , மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவை யாவற்றையும் கேள்விக்கும் படுத்துகின்றது.


 உண்மையில் இத்திருவசனத்தில் அனைத்து காபிர் களையும் குறிப்பிடவில்லை, அல்லாஹ் விதியில் குப்றியத்தின் முத்திரை குத்தப்படாதவர்களையே குறிப்பிடுகின்றது, 


 பிரச்சாரத்தால் ஒருவரின் பண்புகள் மாற்றப்படலாம், எதார்த்தம் மாற்றப்படமாட்டாது, எந்த ஒரு நபரின் போதனையாலும் மிருகத்தை மனிதனாக்கமுடியாது. இதைத்தான் இத்திருவசனம் கோடிட்டு காட்டுகின்றது.


 இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்ட காபிர்களுக்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரச்சாரம் செய்யவே செய்தார்கள், எத்திவைப்பது தான் நபியின் பணி , ஏற்பதும் , ஏற்காதிருப்பதும் அவர்களின் விதியிலுள்ளதின் முடிவாகும், எத்திவைத்ததற்கான நற்கூலி அவர்களுக்குக் கிடைக்கும்,


திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு அல்லாஹுசுப்ஹானஹுவத ஆலா வின் நோக்கத்தை ப்புரிந்துசெய்யப்படவேண்டும், தவறினால் மக்கள் திருக்குர்ஆனை பிழையாக விளங்க வழிவகுக்கும். திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்களில் இவ்வாறான தவறான மொழிபெயர்ப்புக் கள் அதிகம் காணப்படுகின்றன, சில இடங்களில் குப்றியத் ஏற்படக்கூடிய மொழிபெயர்ப்புக்களும் உள்ளன, உரிய இடத்தில் இன்ஷாஅல்லாஹ் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.   


ஸூபியாக்கள் விளக்கம்: 


. இத் திருவசனத்திற்கு ஸூபியாக்கள் இவ்வாறு விளக்கம் பகர்கின்றனர், 


இவர்கள் வாக்குறுதிக்குரி ய ( ஆலமுல் அர்வாஹ்வுடைய ) நாளில் எமது ருபூபியத்தை ஏற்று بلي. உண்மைதான் என்று கூறிய பின், தங்களின் மனம் என்ற தெளிவான கண்ணாடியை பாவமான செயலால் அதன் தெளிவை நாசமாக்கி விட்டனர்; இன்னும், அவர்களின் பெறுமதி மிக்க. றூஹு என்ற பறவையை உடல் என்னும் கூட்டுக்குள் அடைத்த பின், தங்களின் ஐந்து புலன்களின் ஊடாக இவ்வுலகைப் பார்த்து தங்களின் உண்மையான உலகத்தை மறந்து விட்டார்கள். 


நஃப்ஸையும், ஷைத்தானையும் உறவு கொண்டதால் றூஹை அதன் தாய் நாட்டின் பழைய நண்பர்களை மறக்குமளவுக்கு உதவாக்கரையாக்கி விட்டனர்; அது தனது தாய் நாட்டின் நண்பர்களைப் புறக்கணித்துவிட்டு தன் பாட்டில் இருக்கத் தொடங்கி விட்டது; எனவே, மக்கள் இவ்வாறு இருக்கக் கூடாது, தங்களுடைய உண்மையான அந்த தேசத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் விளக்கம் 06

 


*திருக்குர்ஆன் விளக்கம்*

•••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

             தொடர் :6



والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون..


2 :4-- இன்னும் நேசரே! உம் தரப்பில் இறக்கப்பட்டதையும்,உமக்குமுன்னுள்ளவர்கள் மீது இறக்கப்பட்டதையும் அவர்கள் ஈமான் கொள்கின்றனர்; இன்னும், மறுமையையும் அவர்கள் உறுதி கொள்கின்றனர்.

••••••••••••••••••••••••••••••••


தொடர்பு:


இத்திருத்திருவசனம் முந்திய திரு வசனத்தோடு சில வகையில் தொடர்பாகின்றது, சில விதங்கள் இபாதத்தின் ரீதியிலும், சில உள்ளடக்கத்தின் ரீதிலும் இத்தொடர்பு உள்ளது,, இபாதத்தின் ரீதியிலான தொடர்பின்பொருள், மேற்கண்ட மூன்று பண்புகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் நேரியவழியிலிருக்கும் வெற்றியாளர்களாகும்,

 உள்ளடக்கத்தின் ரீதியானதிலும் சில வகைகளில் தொடர்புள்ளது.


1- முதல் திருவசனத்தில் முத்தக்கிகளின் பண்புகளில் "மறைவானவற்றை ஈமான் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டது, வெளிப்படையில் "மறைவு" என்பதன் பொருள், அல்லாஹுத்த ஆலாவின் தாத், ஸிபாத்துகளாகும், அல்லாஹுத்த ஆலா வின் தாத், ஸிபாத்துக்களை மட்டும் நம்புவது முத்தகியாவதற்குப் போதாது, அதோடு சேர்த்து முந்திய நபிமார்கள், வேதங்கள் , கியாமத் நாள் உள்ளிட்டவையையும் ஈமான் கொள்வதோடு மறுமையில் உறுதி பூண்டிருக்கவும் வேண்டும் 

என்று இத்திருவசனத்தில் சுட்டிக் காட்டப்படுகின்றது.


முந்திய திரு வசனத்தில் எழுத வாசிக்கக் தெரியாத மக்கத்து முஷ்ரிக்குகள்ஈமான் கொண்டு முத்தகியாவதற்குரிய வழிகளைப்பற்றிக் கூறப்பட்டது,ஏனெனில், அவர்களுக்கு நுபுவ்வத்,வானத்து வேதங்கள்,கியாமத் நாள் உள்ளிட்ட யாவும் முற்றிலும் மறைவாகும், இவர்களுக்கு இவை பற்றி முற்றிலும் தெரியாது , ஆகவே , முதல் திருவசனனத்தில் இவர்களைப் பற்றிக் கூறப்பட்டது, இப்போது வேதம் கொடுக்கப்பட்ட எஹூதி, நஸாராக்களி லிருந்து ஈமான் கொண்டோரை விளித்துக் கூறப்படுகின்றது ,இவர்கள் ஆரம்பத்திலிருந்தே நுபுவ்வத், வேதங்கள் ,கியாமத் நாள் பற்றியெல்லாம் அறிந்திருந்தனர், இதிலிருந்து இத்திருவேதம் இருதரப்பாருக்கும் பூரணமாக ஹிதாயத் செய்யக் கூடியதாக இருப்பதை அறிய முடிகின்றது!


3- இத்திருவசனம் முந்திய திருவனத்திற்கு விளக்கமாகும், 

முந்திய திருவசனத்தில் , மறைவானவற்றை ஈமான் கொண்டவர்கள் "முத்தகி" என்று கூறப்பட்டது, அவர்கள் அனைத்து வேதங்களையும் ஈமான் கொண்ட மக்கள் என்று விளக்கமாக இதில் கூறப்படுகின்றது. இந்த இரு தொடர்புகளிலுமுள்ள "மறைவானவை" என்பது , மறைந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கும்.


"உம்தரப்பில் இறக்கப்பட்டது" என்பது, வெளிப்படையான வஹியாகிய திருக்குர்ஆனையும், நபியவர்களின் கல்பில் போடப்பட்ட ஹதீதையும்,, அன்னாரின் திருவாய் மலர்ந்தருளிய யாவற்றையும் நம்புவது ஈமானுக்கு அவசியமாகும், ஏனெனில் , இவை யாவும் றப்பின் தரப்பிலிருந்து வருவதாகும், 


திருக்குர்ஆன் கூறுகின்றது .


وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى 


எமது நேசர் மன இச்சைப்படி பேசுவதில்லை, அவை அனைத்தும் அவர்கள் பால் வஹியாக வழங்கப்படுகின்றது.

ஆகவே, எவராவது ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றை நிராகரித்தால் காபிராகிவிடுவார்,


"உங்கள் பால் இறக்கப்பட்டதை" என்பதற்குள் அன்னாரின் கல்பில் போடப்பட்ட வை, காதில் கூறப்பட்டவை, கண்ணால் பார்த்தவை யாவும் இதற்குள் அடங்கும், ஆகவே , தொழுகையின் எண்ணிக்கை, தொழும் விதம், ஸகாத்தின் அளவு உள்ளிட்டவையும் இதற்குள் அடங்கும்.


"உங்களுக்கு முன் இறக்கப்பட்டதை" என்பதிலிருந்து

எவ்வாறு திருக்குர்ஆனை நம்புவது பர்ழாக இருப்பது போன்று முந்திய வேதங்களையும் ஈமான் கொள்ள வேண்டியது பர்ழாகும். முந்திய வேதங்கள் உண்மையானவை என்று நம்பினால் போதும்,விபரமாக அறிய வேண்டும் என்பதும், அதன்படி செயல்படவேண்டும் என்பதும் அவசியமில்லை,ஆனால், திருக்குர்ஆனின் அவசியமான சட்டங்களை விலாவாரியாக அறிந்திருப்பது "பர்ளு ஐன்" ஒவ்வொருவருக்கும் கட்டாய கடமையாகும்.


திருக்குர்ஆனை ஈமான் கொள்ளுமாறு கூறப்பட்ட தே தவிர, அதன்படி அமல் செய்யுங்கள் என்று கூறப்படவில்லை, மாற்றப்பட்ட திருவசனங்களை நம்புவது கடமை , அதன்படி செயல்படுவது அநேகமாக தடை , 


 ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக இருந்தது, ஆயினும், அதை நோக்கித்தொழுவதற்கு இப்போது தடைஉள்ளது , ஆகவேதான் திருக்குர்ஆன் இங்கு ஈமான் கொள்வதைப்பற்றிக்கூறியது, செயலைக் கூறவில்லை, 


 மூன்று இடங்களில் நமக்கு தங்க வேண்டியுள்ளது,


1- சில காலம் உலகத்தில்,


2- சில காலம் கப்றில், அதாவது பர்ஸகில்


3- நிரந்தரமாக கியாமத்தில். 


உலகத்தின் ஆரம்பம் பிறப்பிலிருந்து மரணத்தோடு முடிகின்றது, பர்ஸகின் வாழ்க்கை மரணத்தோடு ஆரம்பித்து கியாமத்தோடு முடிகின்றது, மறுமையின் வாழ்வு கியாமத்தில் ஆரம்பித்து முடிவில்லாமல் இருக்கின்றது. 

 "துன்யா"என்றால் நெருக்கமானது அதாவது அழிவு நெருக்கமானது என்று பொருள் அல்லது இழிவான பொருள்,


 "பர்ஸக்", என்றால் திரை என்று பொருள் உலகவாழ்வுக்கும் , மறுமை வாழ்வுக்கும் இடையில் ஒரு திரை உண்டு, அங்கு எந்த அமலையும் செய்ய முடியாது, செய்தாலும் அதற்குக் கூலி கிடையாது. ஆகவேதான் "பர்ஸக் "எனப்படுகின்றது.


 "ஆகிறத்" என்பது வேறுவிதமான வாழ்க்கையைக் குறிக்கின்றது. 


உலக வாழ்க்கை புலக்காட்சிக்குட்பட்டது , ஏனைய இரண்டும் மறைவானவை எனவே, உலகத்தை ஈமான் கொள்ள வேண்டியது கடமையல்ல, ஏனைய இரண்டையும் ஈமான் கொள்ள வேண்டியது அவசியமாகும்., 

 

'"அவர்கள்தான் மறுமையில் உறுதி கொண்டவர்கள்"' என்பதில் முத்தகீன்களை மட்டுப்படுத்திக் கூறப்பட்டுள்ளது, ஏனெனில் , ஹிந்து, புத்தீஸ், ஆரியர், சீக்கியர் உள்ளிட்டோர் மறுமையை நம்பவில்லை, யஹூதிகளும், நஸாறாக்களும் பிழையாக விளக்கியுள்ளனர், ஆகவேதான் முஃமின்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


யகீனுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன.


1-ஏதாவது ஒரு விடயத்தை சந்தேகமில்லாமல் அறிவது, அதாவது, முதலில் சந்தேகமிருந்து பின் நீங்கி விடுவது.


2- ஆதாரங்களோடு சந்தேகமில்லாமல் அறிவது, 

அல்லாஹ்வின் அறிவை யகீன் என்பதில்லை, ஏனெனில் அல்லாஹுத்த ஆலாவின் அறிவு ஆதாரங்களினால் வந்ததல்ல, இவ்வாறுதான் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நுபுவ்வத் பற்றிய அறிவை யகீன் என்பதில்லை, ஏனெனில், நபியவர்களுக்கு "நுபுவ்வத்" பற்றி முதலில் சந்தேகமிருக்கவில்லை, ஆதாரங்களால் இதை பெறவும் இல்லை, 


. இமாம் அபூ லைதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


யகீன் மூன்று வகைப்படும்,


1-கண்டு உறுதி கொள்வது,

 

2- செய்தி கேட்டு உறுதி கொள்ளுதல் ,


3-ஆதாரங்களால் உறுதி கொள்ளுதல்,


 இங்கு பிந்திய இரண்டு வகைகளையும் குறிக்கிறது, ஷரிஅத்தில் செய்தியைக் கேட்டு உறுதி கொள்வதை மட்டுமே இங்கு குறிக்கும்,ஒருவர் நபியை நிராகரித்துவிட்டு தனது புத்தியில் ஆராய்ந்து விளங்கி நம்பினால், அதற்கு "ஈமான்" என்று கூற முடியாது! ஆகவேதான் மறுமைக்கான உறுதி வேதங்களுக்குப் பின் கூறப்பட்டுள்ளது,அதாவது, வேதங்கள் கூறிய படி உறுதி கொள்ளவேண்டும்.


 இப்போது சிலர் இஸ்லாமிய ஷரீஅத் கடமைகளை புத்தியால் நிறுவ முயல்கின்றனர், இவர்கள் வேதங்கள் கூறியதை ஏற்காமல் புத்தியின் ஆதாரங்களை ஆதாரமாகக் கொள்வதால் இவர்கள் "முஃமின்கள்" அல்லர்.


ஸூபியாக்கள் மத்தியில் "யகீன்" மூன்று வகைப்படும். 


1- கேட்டு அறிவது, علم اليقين 


2- பார்த்து அறிவது, عين اليقين 


 3- தன்னை அழித்து அறிவது,

 حق اليقين


சாதாரணமாக ஒருவர் தீயை பார்த்து' " தீ' "என்று அழைக்கின்றார், மற்றவர் "தீ." க்கு பக்கத்தில் இருந்து தீயின் சூட்டை உணர்ந்து அறிகிறார், மூன்றாம் நபர் தீக்குளித்து அணு அணுவாக அனுபவித்து நாவாலும், நிலையாலும் கூறுகிறார்.


தக்வாவுக்குரிய அக, புற அனைத்து விடயங்களையும் நம்பி, அதன்படி முழுமையாக செயல்படுவதற்கான தௌபீக்கை கிருபை உள்ள ரஹ்மான் நமக்குபூரணமிகத் தந்தருள் புரிவானாக ஆமீன்.



اولئك علي هدي من ربهم واولئك هم المفلحون..


2: 5- இவர்கள்தான் தனது றப்பின் தரப்பில் உள்ள வழிகாட்டுதலில் இருப்பவர்கள், இன்னும், இவர்கள்தான் நோக்கத்தை அடைந்த வெற்றியாளர்கள்.

••••••••••••••••••••••••••••••


இச்சொற்றொடர் முந்திய திருவசனத்தின் முடிவைக்கூறுவதாகும், முதலில் அமலைப் பற்றி கூறப்பட்டது, இப்போது அதன் பலனைப் பற்றிக் கூறப்படுகின்றது, இதன் முடிவு நேர் வழியிலிருப்பதும், வெற்றி பெறுவதுமாகும்.


'அந்தக் கூட்டம்' என்பது, சஹாபாக்கள்,அல்லது தக்குவாவின் பண்புகளைச் கியாமத்து நாள் வரையிலும் சுமந்வர்கள் , '"ஹிதாயத்தின் மீது"' என்பதன் பொருள்,"ஹிதாயத்" அவர்களை மிகைத்து விட்டது என்பது கருத்து, அதாவது, "ஹிதாயத்" அவர்களின் பிடிக்குள் வந்துவிட்டது, இன்ஷா அல்லாஹ் அது அவர்களை விட்டும் விடுபடாது, காரணம் அது அல்லாஹ்வின் நன்கொடையாகும்.


இவர்கள்தான் (اولئك) என்று இரு முறை கூறப்பட்டதன் நோக்கம் முத்தகிகளின் பண்புகள் இரு முறை கூறப்பட்டுள்ளன. 


1- மறைவானவற்றை ஈமான் கொள்ளல், தொழுகையை நிலை நிறுத்தல், அல்லாஹ்வின் வழியில் செலவழித்தல். 


2- வானத்து வேதங்களை ஈமான் கொள்ளல், மறுமையில் உறுதி கொள்ளல்.


முதற்பண்புகளின் மூலமாக ஹிதாயத்தின் இருந்தார்கள், இரண்டாவது பண்புகளின் மூலமாக வெற்றி பெற்றார்கள், முதல் பண்புகள் பொதுவான முஸ்லிம்களுக்கும், இரண்டாவது பண்புகள் உலமாக்கள் உள்ளிட்ட ஏனையவரகளுக்குமாக இருக்கலாம்‌.


அவர்கள் (هم) என்பது, முத்தகீன்கள் மட்டும்தான் என்பதை அறிய முடிகின்றது, வெற்றியாளர்கள் என்பது உலகத்தில்,கப்ரில், மறுமையில் வெற்றியாளர்களாகும்‌.


உலகத்தில் வெற்றியாளர் என்பது ,

அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாத் அகீதாவில் சிறப்பாக இருப்பது, நல்லமல்களுக்கு நல்லுதவியை (தௌபீக்கை) ப்பெற்றிருப்பது ;


கப்ரில் வெற்றி என்பது,

மரணிக்கும் போது 

நல்ல முடிவோடு மரணிப்பது, கப்ரில் கேள்விகளுக்கான விடைகளைக் கூறுவதில் ஹிதாயத்திலிருப்பது,பின்னர், பர்ஸகின் நிஃமத்துக்களால் வெற்றி பெறுவது.


 கியாமத்தின்" ஹிதாயத்" வெற்றி என்பது, கியாமத்தின் கேள்விகளுக்கு மலக்குகளின் விடைகளால் வழிகாட்டப்படுவார்கள், பின்னர், பாவமன்னிப்பால் வெற்றி பெறுவார்கள்.


"நேர்வழி "என்பது ,ஷரிஅத்தில் நடப்பது, "வெற்றி" என்பது, ரப்பு தன் பக்கம் ஈர்ப்பது என்று சூபியாக்கள் கூறுகின்றனர், மேலும் எவர் நல்லமல்கள் என்ற அக்கினியால் தனது இருப்பு (வுஜூத்) என்ற திரையை எரிக்கின்றாரோ ,இன்னும், உலகத்தின் பார்வையை புறந்தள்ளிவிட்டு மறுமையை முஷாஹதா (காட்சி) காணுகின்றாரோ அவரை ரப்பானியத்தான் ரஹமத் தன் பக்கமாக ஈர்க்கின்றது ;அதாவது "ரஹமத்" ஈர்க்கக்கூடியது ;இவர் மஜ்தூப் ஈர்க்கப்பட்டவர் ;அல்லது இவர் "தாலிப்' தேடுபவர் அவன் தேடப்பட்டவன்,(மத்லூப்) இது முடிவில்லாத நிலையாகும், இதை வார்த்தைக்குள் அடக்க முடியாது!


யா அல்லாஹ்! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பொருட்டால் இம்மை, மறுமை உள்ளிட்ட அனைத்திலும் பரிபூரணமான வெற்றியை தந்தருள் புரிவாயாக! ஆமீன்.

திருக்குர்ஆன் விளக்கம் 05

 


*திருக்குர்ஆன் விளக்கம்*

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில். *ஏ.எல்* .

 *பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••••

           தொடர்: 5


ومما رزقنهم ينفقون 


நாம் வழங்கிய பாக்கியங்களிலிருந்து நமது வழியில் செலவு செய்வார்கள்.

••••••••••••••••••••••••••••••


 *தொடர்பு* 


இங்கு முத்தகியின் பண்புகளின் ஒழுங்கு முறை கூறப்படுகின்றது, 


1- முதன் முதலில் ஈமானைப்பற்றிக் கூறப்பட்டது, அதுதான் அனைத்திற்கும் அடிப்படை , பின், அனைத்து அமல்களிலும் மேலான தொழுகை பற்றிக் கூறப்பட்டது, இது முஃமின்களின் உடலோடு தொடர்பானது , இப்போது அல்லாஹ்வின் வழியில் செலவு செய்வது பற்றிக் கூறப்படுகின்றது, இது பொருளோடு தொடர்பானது, இவ்வாறு கூறப்பட்டதற்கு சில நியாயங்கள் உள்ளன.


1- மனிதன் பிறந்ததும் முதலில் உடல் மட்டும்தான் அவனோடு இருக்கும், பொருள் பின்னர் வருவது ,ஆகவே , முதலில் தொழுகையும், அடுத்து செலவு செய்வது பற்றியும் கூறப்படுகின்றன


2- ஸகாத் தொழுகைக்குப் பின் கடமையானதால் தொழுகைக்கு அடுத்து ஸகாத்தைக்கூறப்படுகின்றது


3- ஈமானில் வெற்றி,(நஜாத்) தொழுகையில் பிரார்த்தனை, (முனாஜாத்) செலவு செய்வதில் படித்தரங்கள் (தரஜாத்) உள்ளன, படித்தரங்களின் தகுதி பிரார்த்தனைக்கு அடுத்து இருப்பதால் தொழுகை முந்தியும், ஸகாத் பிந்தியும் வந்துள்ளது, 


4- ஈமான்,சுப செய்தியும், , தொழுகையில் குற்றப் பரிகார மும், , செலவு செய்வதில் பரிசுத்தமும் இருக்கின்றன, ஆகவே, செலவு செய்தல் என்பது ஈமான், தொழுகை ஆகிய இரண்டுக்கும் பின்னால் வந்துள்ளது.


5- ஈமானில் கண்ணியம்,தொழுகையில் நெருக்கம் , செலவில் அதிகரிப்பு இருப்பதால் செலவழிப்பது இறுதியாக வந்துள்ளது.


இத்திருத்திருவசனத்தில் நான்கு விடயங்கள் கூறப்பட்டுள்ளன.


1-தக்வா.

 

2- மறைவான

வற்றை ஈமான் கொள்ளல்.


3- தொழுகை

யை நிலைநாட்டல்,


4- செலவு செய்தல்..


இந்த நான்கும் நான்கு கலீபாக்களின் நற்குணங்கள் ஆகும்.


1- ஹளறத் ஸித்தீகுல் அக்பர் றழியல்லாஹு முத்தகீன்களின் இமாம்..


2- ஹளறத் உமர் பாரூக் றழியல்லாஹு முஃமீன்களின் தலைவர்.


3- ஹளறத் உதுமான். றழியல்லாஹு அன்ஹு தொழுகையாளிகளின் இமாம்‌


4- ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களின் இமாம்

.

தப்ஸீர் றூஹுல்பயான்.


விளக்கம்: தப்ஸீர்.


நாம் வழங்கிய பாக்கியங்களிலிருந்து என்பதில் வரும் من என்ற இடைச்சொல் கொஞ்சம் என்ற பொருளைக் கொடுக்கும் , இதன்படி, உங்கள் முதல்களில் "சிலதை" என்று பொருள்படும், அனைத்தையும் வாரி இறைத்து விட்டு பிள்ளைகளைப் பிச்சைக்காறர்களாக விட்டுச்செல்வதை இஸ்லாம் வரவேற்க வில்லை.


"நாம் கொடுத்தவையிலிருந்து" என்ற சொற்றொடர் நாம் விரும்பி வழங்கிய சுத்தமான ஹலாலானவை என்பதை சைக்கினைச் செய்கிறது ;


ஷரீஅத்தில் ஏழுவிதங்களில் பொருளைச் செலவு செய்வது இபாதத்தாக இருக்கின்றது,


1-ஸக்காத்


 2- ஸதக்கத்துல் பித்றா


3- உபரியான தான தர்மம் ;


4-வக்ப்.


 5-வஸிய்யத்


 6- ஹஜ்ஜுக்கான செலவு


7-தனது பொறுப்பிலுள்ள உறவினர்களின்செலவுக்கு அவசியமான அளவு கொடுத்தல்.


"செலவழித்தல்" என்பது அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடிச் செய்யும் கடமையான, உபரியான செலவைக் குறிக்கும், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பொதுவாக "ஸகாத்" என்று குறிப்பிட்டாலும், இதற்குள் ஆயிரம் சட்ட சிக்கல்கள் பொதிந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.


ஸூபிஸ விளக்கம் : 


"செலவு செய்தல்" என்பதற்கு, ஸூபியாக்கள் பின்வரும் அகமிய விளக்கத்தைக் கூறுகின்றார்கள்.


 இத்திருவசனம் எவ்வாறு வெளிப்படையான நிஃமத்துக்களைச்செலவு செய்வதைப்பொதிந்துள்ளதோ, அவ்வாறே அகவியல் (பாதின்) சார்ந்த நிஃமத்துக்களைச்செலவு செய்வதும் இதில் பொதிந்துள்ளது. ஆகவே, செல்வந்தன் தனது செல்வத்தைச் செலவு செய்வது போன்று, அறிஞர்கள் தங்களின் அறிவால் போதித்தல் ,எழுதுதல் ;கற்றுக் கொடுத்தல் மூலம் செலவு செய்ய வேண்டும்,வணக்கவாளி தன் உயிரால் ஹக்குத்தாலாவை வழிபடுவதில் செலவு செய்ய வேண்டும், ஆரிபீன்களான ஞானிகள் தனது மனதுக்குள் உலகியல் அசிங்கங்கள் உள்நுழையாமலும், உலகியல் சிந்தனையில் சிக்காமலும் செலவு செய்ய வேண்டும், 


மனம் என்ற வீட்டை நண்பனின்( அல்லாஹ்வின்) வருகைக்காக சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும், அசிங்கமான இடத்திற்கு அரசர் வரமாட்டார், கப்பலுக்குள் புகுந்த நீரை வெளியேற்றுவது போன்று மனதிலிருக்கும் உலகியல் அசிங்கங்களை வெளியேற்ற வேண்டும்.


 கப்பலுக்கு நீர் அவசியம், கப்பலுக்குள் நீர் புகுந்தால், கப்பல் மூழ்கி விடும்! என்று ஒரு பாரசீக கவிஞர் அழகாக கூறியுள்ளார், மனதுக்கு சிந்தனை அவசியம்! சிந்தனை மனதுக்குள் புகுந்து விட்டால், மனம் அழிந்து விடும், செல்வந்தன் செலவு செய்து பையைக் காலியாக்க வேண்டும், சூபி (தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் திரையாக இருக்கும் "தன்னுணர்வு" என்ற) வேற்றுமையை வெளியேற்றி கல்பைச் சுத்தமாக்க வேண்டும் என்று மௌலானா ஜலாலுத்தீன் றூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


ஸகாத்தின் இரகசியங்களும், பயன்களும்.


1- செலவு செய்வதால் பொருள் வளரும் என்பது இயற்கையான விடயமாகும், ஓர் அறிஞர் தனது அறிவை செலவு செய்யாவிட்டால் அறிவுஅவர் கையைவிட்டும் போய்விடும், கிணற்றை இறைக்காவிட்டால் கிணறு பாழாகும், மரங்களில் சில கிளைகளைத் தறிக்காவிட்டால் கனிகள் குறைவாகும், இவ்வாறு சொத்தின் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் , சொத்தின் வளர்ச்சி தடைப்படும், 


2- இயற்கை ஒவ்வொரு பொருளிலிருந்தும் ஸக்காத்தை எடுத்துக் கொள்கின்றது, நோய் ஆரோக்கியத்தின் ஸகாத், தூக்கம் விளிப்பின் ஸக்காத், சிரமம், சுகத்தின் ஸக்காத், வயல்களின் விளைச்சலில்ஏற்படும் அழிவும் , பறவைகள் உண்பதும், விவசாயத்தின் ஸகாத் ஆகும், தனது சொத்தின் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், இயற்கையின் நியதிக்குமாற்றம் செய்வதாக அமையும், ,


3- எவராவது ஒருவருக்கு தேவையை விட அதிகமாகக் கொடுக்கப்பட்டால்,அவர் அதை வேறு இடத்தில் செலவு செய்ய வேண்டும், நாய் போன்ற இதர மிருகங்களின் மடியில் அதன் குட்டிகளுக்குப் போதுமான பால்மட்டுமே உண்டு, ஆனால், எருமை, பசுவில் அதன் கன்றுக்குத் தேவையானதை விட அதிக பால் அதன் மடியில் உள்ளது, அதனால் அதன் பாலில் அடுத்தவர்களு க்கும் பங்கிருக்கின்றது, 


  உங்களின் சொத்து உங்களின் தேவைக்கு அதிகமாக இருந்தால் , அதில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கின்றது, மேலதிகமானதை வேறாக்குவது அவசியமாகும்.


நகத்தில், முடியில் மேலதிகமான தை அகற்றுகின்றோம், இவ்வாறு வயிறு மேலதிகமான கழிவுகளை வெளியேற்றுகின்றது, அது தங்குவது நோய், இவ்வாறு சகாத்தின் பணமும் வெளியேற்றப் படவேண்டும், 


2- அரசாங்கம் நமக்குச்செய்து தரும் பல வகையான உதவிக்கும், வசதி வாய்ப்புக்களுக்கும் நம்மிடமிருந்து வரி அறவிடுகின்றது, அதைச்செலுத்தாதவர் தண்டனைக்குரிய குற்றவாளியாவார், அவ்வாறு றப்புத்த ஆலா நமக்கு கணக்கற்ற அருட்பாக்கியங்களையும், வசதிகளையும் செய்து தந்திருக்கின்றான், அதற்காக நாம் சொத்தில் சிலதை செலவு செய்யக்கூடாதா?


 உண்மையில் சொத்தும், விளைச்சலும் அவனுடையதுதான், அப்படியிருந்தும் செலவு செய்வதற்கு நற்கூலியைத்தருகின்றான்,


மனதின் இயல்பில் மஹப்பத் இருக்கின்றது, சில மஹப்பத் பயன்மிக்கது, சில வீணானது, சில நஷ்டமானது, அல்லாஹ்வையும் , இன்னும் அவனுடைய திருத்தூதரையும் நேசிப்பது பயன்மிக்கது, உலகத்தில் உள்ள பொருட்களை நேசிப்பது வீணானது, ஷைத்தானின் பொருட்களை நேசிப்பது நஷ்டமானது,


முதல் வகையான நேசத்தை வளர்ப்பதற்காக ஆல்லாஹுத்த ஆலா இபாதத்துக்களை வைத்துள்ளான், எவருக்கு கீழ்படிவது அதிகமுள்ளதோ, அவரின் மஹப்பத்தில் அதிகரிப்பு காணப்படும், பிந்திய இரண்டு ம‌ஹப்பத்துக்களையும் வெட்டி வீழ்த்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன,


 கப்றுகளை ஸியாறத் செய்வதன்மூலம் உலகத்தின் மோகம் சிதைவடையும், இவ்வாறான வழிகளில் ஸகாத் தும், தர்மங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, தான் சம்பாதித்ததை தனது கரங்களால் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது சொத்திலிலுள்ள நேசம் மனதில் வருவதில்லை,


ஸகாத் கொடுப்பதால் ஏற்படும் பெரும் நன்மையாதெனில், முதல் பெருகுவதாகும், அழிவு , நஷ்டம் உள்ளிட்டவைவராமல் முதல் பாதுகாக்கப்படும்,


தபாஸீர் றூஹுல்பயானில் இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை கூறப்படுகின்றது. 


 ஆயுளில் அரைப்பகுதி செல்வமும், மறு பாதி வறுமையும் இருக்கும் ஒரு மனிதனிடத்தில் எது முதலில் வேண்டும் என்று கேட்குமாறு ஒரு நபிக்கு அல்லாஹுத்த ஆலா வஹி அறிவித்தான், முதலில் செல்வம் வேண்டும் என்று அவர் பதில் கூறினார், எனவே, அவருக்கு செல்வம் வழங்கப்பட்டது, அவர் தனக்குச் செலவு செய்தார், எனினும்,சற்று அதிகமாக ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தான தருமங்கள் செய்தார்,


அவரின் ஆயுளின் பாதிக்காலம் கழிந்ததும் மீண்டும் அந்த நபிக்கு வஹிவந்தது, அவர் நமது நிஃமத்துக்களுக்கு நன்றி பாராட்டினார், நன்றி பாராட்டுவதால் நிஃமத்துக்கள் வளரும், ஆகவே ,அவரின் முழு ஆயுளிலும் செல்வமாகவே ஆக்கப்படும்என்று அல்லாஹுத்த ஆலா கூறினான்.