السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 8 June 2013

எறும்புகள் பேசும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குர் ஆனில் அல்லாஹ் ஒரு பெண் எறும்பு மற்ற எறும்புகளிடம் பேசுவது போல் ஒரு வசனம் வரும். காலம் காலமாக இஸ்லாமின் எதிரிகள் இதை வைத்து இஸ்லாத்தையும் குர் ஆன்னையும் விமர்சித்து வந்தனர். இப்பொழுது எறும்பு பேசும் என்று வின்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
அல்லாஹு அக்பர்.

குர் ஆன்னின் வசனம்:

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

அப்போது அதன் (அவள்) சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார்.
[குர் ஆன் 27:18-19]