السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 17 September 2018

நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள்

நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள்
அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.

கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.

அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.

என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி
எங்கோ நகரத் தொடங்கியது.

நான் தலை கீழாக மாறிவிட்டேன்.

அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.

எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.

ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.

திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.

சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.

இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.

ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.

கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.

அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.

தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.

என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.

அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.

என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.

நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.

கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.

அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.

அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.

எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.

தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.

மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.

அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.

அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.

நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.

எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...

என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று....

அம்மா....

பாத்திமா சியா fb

Sunday 16 September 2018

இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி

இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி


இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி


                                                           எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  

அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்...!!
ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்....!!
இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள்....!!
மதீனாவில் ஓர் அன்ஸாரிப் பெண்மணி இருந்தார். அவருடைய பெயர் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்....!!
இறையச்சத்தை இதயத்தில் நிரப்பமாக பெற்றிருந்த பெண்மணி. அல்குர்ஆனை அழகிய குரலால் அலங்கரித்து,
கேட்போரின் செவிகளையும், இதயங்களையும் கசிந்துருக வைத்திடுவார்....!!
அம்மணியின் அழகிய ஓதுதலை செவிதாழ்த்தி கேட்கும் ஸஹாபாக்கள் பலர் உண்டு. அதில் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் ஒருவர்....!!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை பெண்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பிலும் அமர்த்தியிருந்தார்கள்.
ஒரு முஅத்தினையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள்.
பத்ர் யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் மேற்கொண்டிருந்த தருணம் அது..,,,,

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றார்கள் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்....!!
அல்லாஹ்வின் தூதரே! நானும் இஸ்லாமியப் படையோடு வர ஆசிக்கின்றேன்.
நானும் உங்களோடு வருவதற்கு அனுமதி தாருங்களேன்? எனக்கும் ஷஹாதத்-வீரமரணம் அடையும் நற்பேறு கிடைக்கும் அல்லவா? என்று மிக ஆசையோடு கேட்டார்கள்....!!
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,,,
“நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள், அல்லாஹ் வீட்டில் வைத்தே ஷஹீதாகும் வாய்ப்பை நல்குவான்” என நவின்றார்கள்....!!!
இவ்வாறு ஒரு முறையல்ல இரு முறையல்ல, பகைவர்களுக்கு எதிராக இஸ்லாமியப் படை புறப்படும் ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது இப்படியான உரையாடல்....!!
வீட்டிலிருக்கும் போதே ஷஹாதத்தா? என மக்கள் ஒருவருக்கொருவர் வியப்போடு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு பிரபல்யமாகி விட்டிருந்தது....!!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூட உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களைக் காணும் போதெல்லாம் “இதோ! ஷஹீதா வருகிறார்” என்று கூறுவார்கள்...!!

”வாருங்கள் நாம் ஷஹீதாவின் வீடு வரை சற்று போய் வரலாம்” என்று நபித்தோழர்கள் பேசிக்கொள்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டிருந்தது..!!

இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காணும் போதெல்லாம் இவ்வாறு குறிப்பிட்டதிலிருந்து இறைவன்,,,

அப் பெண்மணிக்கு ஷஹாதத்தை உறுதியாக வழங்குவான் என்பதை நபித்தோழர்கள் நம்பினார்கள்....!!
அதை அம் மக்கள் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். காலம் கனிந்தது.
உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் அவர்களின் வீட்டில் காஃபிரான ஓர் அடிமையும், ஓர் அடிமைப் பெண்ணும் பணிபுரிந்து வந்தனர்....!!
”எப்போது நான் இறக்கின்றேனோ அப்போதே உங்களின் அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விடும். நீங்கள் இருவரும் விடுதலையாகி விடுவீர்கள்” என உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறியிருந்தார்கள்....!!!
ஆனால், விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களே தவிர, அந்தக் காலம் வரும் வரை அவர்கள் காத்திருக்க வில்லை...!!
மாறாக, உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு துணியை கழுத்தில் இறுக்கிக் கொன்று விட்டார்கள்...!!

வீட்டை விட்டும் ஓடியும் விட்டார்கள் அந்த அடிமைகள்.
அதிகாலை நேரம் ஆட்சித் தலைவர்-அமீருல் முஃமினீன் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வழக்கம் போல் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டுச் சுவரோரமாக அவர்கள் குர்ஆன் ஓதும் இனிமையைக் கேட்பதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.!
ஆனால், நீண்ட நேரமாகியும் குர்ஆன் ஓதப்படுகிற சப்தம் வரவில்லை. ஏதோ உள்ளுணர்வு உறுத்தவே வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கின்றார்கள்...!!
இன்னா லில்லாஹ்… உயிரைப் பிரிந்த உடல் உணர்வற்று துணியால் இறுக்கப்பட்டுக் கிடந்தது...!
“வீட்டிலேயே நீங்கள் ஷஹீதாவீர்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையே உரைத்தார்கள்” என உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவர்கள் வாய்விட்டுக் கூறினார்கள்....!!
தப்பியோடிய இரு அடிமைகளையும் கைது செய்து கொண்டு வந்து, கழு மரத்தில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்றினார்கள் கலீஃபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்...!!
மதீனாவில் முதன் முதலாக இவர்களுக்குத்தான் கழுமரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
(நூல்: அஹ்மத், பாகம்:6, பக்கம்:405., அபூ தாவூத், , ஹதீஸ் எண்:591.)
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

நபிமொழியை மெய்ப்பித்தது விஞ்ஞானம் 02


No automatic alt text available.


சுபஹானல்லாஹ்!!
உலகம்
பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது!
நபிமொழியை மெய்ப்பித்தது!
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள்
கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது.
எழுத படிக்கத்தெரியாத
முகம்மது நபி இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி
வருவதாக சொன்னார்கள்.
அப்படி வந்த செய்திகள் தான்
திருக்குர்ஆன் 

அதுமட்டுமின்றி
மக்களுக்கு அவ்வப்போது
சில...ரகசியங்களையும்
சொல்லியுள்ளார்கள்.அப்படி
அவர்கள் சொன்ன.... பல
உண்மையான ரகசியங்களில்
இதுவும் ஒன்று...
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு
(# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி]
அழியாது....இதை அழிக்கவும்
முடியாது என்று முகம்மது நபியவர்கள் சொன்னார்கள்.

இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும்.... பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி
செய்தார் முடிவில் அவருக்கு
கிடைத்தது தோல்வியே...
முடிவில்... முகம்மது
நபிகளின் வாக்கு உண்மையே
என்பதை இந்த உலகுக்கு
தன்னுடைய சோதனையின்
மூலம் நிரூபித்தார்.

இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே...
அல்லாஹுவின் தூதர்(ஸல்)
அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ்
எவ்வாறு உயிர் கொடுப்பான்
என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின்(மனிதனின் உடலிலுள்ள)
அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் ;மனிதனின்(முதுகுத்தண்டின்
வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!....
அதை வைத்தே அவன்
(தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்)
படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661

பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து
ஒரு நீரை இறக்குவான்...
உடனே இ(றந்துபோன)வர்கள்
பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று
எழுவார்கள். மனிதனின்
எல்லா உறுப்புகளும்
(மண்ணுக்குள்) மக்கிப்போய்
விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனதுமுதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்)உள்வால்
எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.அதை வைத்தே
படைப்பினங்கள் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660

ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்

ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்
.
தொழுகைக்காக மனிதன் நின்ற போது அவன் மொழியும் ஆரம்ப வார்த்தை இன்ன ஸலாதி வனுஸ்கி வமஹ்யாய வமமாதி லில்லாஹி ரப்பில் ஆலமீன். அதாவது நிச்சயமாக எனது வணக்கங்களும் தியாகங்களும் வாழ்வும் மரணமும் அல்லாஹ்விற்காக வேண்டியாய் இருக்கும். 

இப்படியாக தான் வாழ்ந்தாலும் உனக்காகவே எனது தியாகங்களும் வணக்கங்களும் என்று உறுதி கூறும் மனிதன் வணங்குவதும் இல்லை.தியாகங்கள் புரிவதும் இல்லை. அப்படியே வணங்கினாலும் தியாகங்கள் பரிந்தாலும் அது அல்லாஹ்விற்காகவா என்று பார்த்தால் அதுவுமில்லை. மாறாக பிறர் மதிக்க வேண்டும் மக்கள் போற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதிலே மேலோங்கி நிற்கிறதே தவிர மாண்பாளனான அல்லாஹ்வின் மனம் குளிர வேண்டும் அதனால் நாம் மணம் பெற வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் எழ மறுக்கிறது. 

உலகை முற்றிலும் துறந்து விடு என்று மார்க்கம் கூற வில்லை மாறாக உலகம் எதுவரை உதவும் என்பதை உணர்ந்து நட என்றுதான் கூறுகிறது. அப்படி உணர்ந்து நடந்த நல்லோர்களைத்தான் நாம் உத்தமர்கள் இறைநேசர்கள் என்று கூறுகிறோம். 

அப்படிப் பட்ட மாந்தருள் மாணிக்கமாகத் திகழ்பவர்கள்தான் ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மதுல்லாஹ் அவர்களாகும்.  அன்னை ராபியத்துல் பஸரிய்யா அவர்களின் உலக நாட்கள் உதிர்ந்து போகும் இருதி நேரத்தில் இருக்கும் போது அவர்களைக்கான இறைநேசச் செல்வர்களான மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ரியாஹ் இப்னு கைஸ் ரஹ்மதுல்லாஹ் ஆகிய இரண்டு போரும் அன்னை அவர்களின் வீடு வந்து சேர்ந்தார்கள். ஸக்ராத்த ஹாலில் இருக்கும் அன்னையவர்களின் நிலை கண்டு மனம் வருத்தி அல்லாஹ்வின் நல் அடியாரே! தங்களுக்கு ஏதேனும் விருப்பம் உள்ளதா? என்று கேட்டார்கள்.

ஆம் உள்ளது என்று அன்னை பதில் சொல்ல அவர்கள் என்ன விருப்பம் என்று கேட்க எனது பாவங்கள் மண்ணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூற மீண்டும் இறைநேசர்கள் கேட்டார்கள் இந்த துன்யாவை விட்டுப் போவப்போகிற உங்களுக்கு இந்த துன்யா சம்பந்தப்பட்ட விருப்பம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதும் ஆம் உண்டு.ருதபபெனும் பேரீத்தம் பழத்தை நான் முப்பது வருட காலமாக திண்ண நாடியும் அதனை எனது நப்ஸ_க்கு கொடுக்காமல் இருந்தேன் என்று கூறினார்கள்.

சகோதரியே இந்தக் காலம் பஸராவில் ருதபெனும் பேரீத்தம் பழம் கிடைக்காதே நான் என்ன செய்வேன் மரணவேளையில் உள்ள தங்களது ஹாஜத்தை என்னால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமே! என்று வருத்தியவர்களாக வெளியே பழம் தேடிப்போன போது ஒரு பறவையானது தனது அழகில் ருதபெனும் பழக்குழையை தூக்கிக் கொண்டு மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ்விடம் அருகில் வந்து போட்டு விட்டு பறந்து சென்றது.

அல்லாஹ் அக்பர் என்று இறைவனைப் புகழ்ந்தவர்களாக அந்தப்பழங்களைக் கொண்டு வந்து அன்னையிடம் கொடுத்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் கேட்டார்கள். இந்தப் பழங்கள் ஏது? எப்படிப் பெற்றீர்கள் ? என்று..

உடனே மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் கூறினார்கள் அம்மையே இந்தப் பழங்களை ஒரு பறவை கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது நீங்கள் விரும்பி கேட்ட அந்தப் பழங்கள்தான் இது என்றார்கள். அநீதமான முறையிலே வாழும் தீயோரின் தோட்டத்துப் பழங்களாக இவை இருக்காது என்ன நிச்சயம்? ஆகவே இவைகள் எனக்கு வேண்டாம் எனக்கூறி ஒன்றினைக்கூட எடுக்காது தள்ளி வைத்து விட்டார்கள்.

30 வருட காலமாக திண்ண வேண்டும் என்று ஆசித்த ஒரு பொருள் தனக்கு முன் இருந்தும் தொட்டும் பார்க்கவில்லை. இந்நிலையில் அன்னை ராபிய்யா அவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களே! தாங்கள் இருவரும் சிறிது வெளியே செல்லுங்கள் எனது ரப்பை நான் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று கூறினார்கள். அழுத நிலையில் இறை நேசர்கள் இருவரும் வெளியே சென்றதும் சப்தம் உள்ளிருந்து கேட்டது அதாவது யாஅய்துஹன்னப்ஸ_ல் முத்மயின்னாஹ் துர்ஜியி இல ரப்பிகி ராலியத்தன் மர்லிய்யா என்ற ஆயத்தின் சப்தத்தை கேட்டார்கள். உடனே சென்று பார்த்த போது அன்னை அவர்கள் ஸஜ்தாவிலே தலையை வைத்த நிலையில் மரணமடைந்திருக்க கண்டோம் என்று கூறினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்
 
Abu Izzah Zainab Eravur

Saturday 15 September 2018

நபிமொழியை மெய்ப்பித்த நவீன விஞ்ஞானம் 01


நபிமொழியை மெய்ப்பித்த நவீன விஞ்ஞானம்!!

இன்றைய கால கட்டத்தில் அதிகமாக உண்பவர்களும் குறைவாக உண்பவர்களும் பல வயிறு ரீதியான பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்...
செரிமான பிரச்சனை, 
அல்சர் (வயிற்றெரிச்சல்)
அசிடிட்டி (குடல் புண்)
அப்ரண்டீஸ்,
இன்னும் ஏராளமான பிரச்சனைகள்...
இவைகளில் பல நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானமாகாமல் தான் நிகழ்கின்றன...
இதற்கு அருமருந்தாக நபிகளார் சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி (வழித்து) சாப்பிங்கள் என கூறினார்கள்...
இதன் உண்மையான காரணம் இன்று மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவதனால் விரல்களில் உள்ள உப்புத்தன்மை கொண்ட திரவம் குடலில் செரிமான சக்தியை அதிகப்படுத்தி, வெகுவிரைவில் நாம் உண்ணும் உணவை செரிக்கச் செய்கிறது...
1400 வருடங்களுக்கு முன்னராக நபிகளார் கூறிய நபிமொழி இன்றைய விஞ்ஞான உலகத்தில் மெய்ய்பித்துள்ளது...
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
சாப்பிட்ட பின் விரல் களை சூப்புதல்
உணவு உண்டு முடித்தவர் தம் விர்லகளைச் சூப்புமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்திரவிட்டார்கள்
மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரகத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...