السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 24 May 2018

இது தான் உலக நியதி..!

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்...
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே...
ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்
முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;
ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!
காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!...
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!
நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!
"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!
இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....
"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
இது தான் உலக நியதி..!
நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும்!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....
நிச்சயம் வரும்!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

Monday 21 May 2018

சூஃபி ஞானி கதைகள் – அரு மருந்து

சூஃபி ஞானி
ஒர் சூஃபி மரணப் படுக்கையில் இருக்கும் போது, தனது மாணவரொருவரைக் கூப்பிட்டு. அவரிடம் கத்தையாக சில காகிதங்களை கொடுத்து விட்டுச் சொன்னார்:

“இதை வைத்துக் கொள்ளுங்கள். சில காகிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சில காகிதங்களில் எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படாத பக்கங்கள், எழுதப்பட்டவை போலவே மதிப்பு மிக்கவை தான்’

சீடரும் காகிதங்களை எடுத்துக் கொண்டார். எழுதப்பட்டவைகளைக் கவனமாக படித்துக் கொண்டார். மற்ற காகிதங்களின் மதிப்பு பின்னாளில் உறுதிப்படும் வரை அவற்றை கவனமாகப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு நாள் சத்திரத்தில் அந்த சீடர் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார். குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் மரணப் புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் எனப் பட்டதால் அவரைப் பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

“காத்துக் கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை . தரமான தாள்களை எனக்கு கொண்டு வந்து தாருங்கள். அதில் அவர் சிகிச்சைக்கான மந்திரத்தை நான் எழுதவேண்டும் ” என்று மருத்துவர் சொன்னார்.

அங்கு கூடியிருந்தவர்கள் சுற்றுமுற்றும் தேடினார்கள். சீடரின் பையைத் துழாவிய போது, சூஃபி ஞானி, சீடருக்குக் கொடுத்த காகிதங்களில் சில எழுதப்படாதவைகளாக இருப்பதைக் கண்டு அக் காகிதங்களை மருத்துவரிடம் கொடுத்தனர்.

மருத்தவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்தார். அதன் மீது வினோதமான ஒரு படத்தை வரைந்தார்,

” இக் காகிதத்தைத் தண்ணீரில் முக்குங்கள். காகித்தலிருக்கும் மை நீரில் கரைந்ததும், அந்நீரை நோயாளிக்குக் குடிக்கக் கொடுங்கள்” என்று மருத்துவர் சொன்னார்.

மருத்துவர் சொன்ன மாதிரியே கூடியிருந்தோர் செய்தனர்.

சீடரும் உடனே சரியானார்.

உண்மையில் சீடர் குணமடைந்ததற்கான கரணம், எழுதப் படாத காகிதங்களில் சூஃபி ஞானி நோய்க்கான மருந்தைத் தடவி பூசியிருந்தார். இது ஒருவருக்கும் தெரியாது .

சீடர் குணமாகி, மரியாதைக்குரிய சூஃபி ஞானி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். தன்னுடைய அனுபவங்களை அவரிடம் சொன்னார். எழுதாத பக்கத்தின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார் சீடர்.

” காகிதத்திலிருந்த “உண்மையால் தான்’ நீ குணமானாய் மருத்துவர் வரைந்த வினோத உருவத்தால அல்ல’ என்றார் சீடரிடம் சூஃபி .

“நீங்கள் ஓரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றுவதுதான் முக்கியம். அது பற்றிய பேச்சு பின்னால் தான்’ என்று பேச்சை முடித்துக் கொண்டார் சூஃபி.

சீடர் அதைக் கேட்டு பின் வாங்கினார். தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரை தேடத் தொடங்கினார். எங்கெல்லாமோ சுற்றியலைந்து மருத்துவரைக் கண்டு பிடித்தார் சீடர்.

“எந்த நிலைமை , காகிதத்தில் வேறு மந்திரங்களை ஆய்ந்து எழுதித் தரச் செய்தது ? ‘ என்று மருந்துவரிடம் கேட்டார் சீடர்.

அதற்கு , ” தனது அற்புதங்களை இரகசியமாக மூடி மறைத்துக் கொள்ளும் அந்த சூஃபியிடம் நான் மாணவனாக இருந்த போது ,

“ஒரு நாள் சத்திரத்தில் நோய்வாய்பட்டிருக்கும் மனிதனைக் காண நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவருக்கு இன்னின்ன வகையில் நோய்க் குறிகள் இருந்தால். வெற்றுக் காதிதத்தை எடுத்து வரச் செய்து அதில் ஒரு வரைபடம் வரை. பின் அந்த வரைபடத்தின் மை கலக்கப்பட்ட தண்ணீரை நோயாளியைக் குடிக்கச் செய்தால் , காய்ச்சல் மூன்று மணி நேரத்தில் போய்விடும் ‘ என்று தன்னிடம் சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

“அந்தக் காகிதங்கள் இல்லாவிட்டால், மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் உங்களுக்கு சொல்லப்பட்டனவா? என்று மருத்துவரிடம் மேலும் கேட்டார் சீடர்.

காகிதங்கள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும். காகிதங்கள் அங்கில்லா விட்டால், அது தனது கடமையினை அஜாக்கிரதையாக ஒதுக்கிய மனிதனின் செயலாகும். துறவிகளின் ஆணைகளை கண்டு கொள்ளாததற்கு அந்த செயல் ஓப்பாகும். அப்படிப்பட்ட மனிதன் தனக்குத்தானே மரணத்தை வருவித்துக் கொள்ளுவான். அந்தத் தருணத்தில் காகிதம் அங்கில்லாவிட்டால். நோயாளி இறந்து விடுவான்” என்று சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

Padithathil pidithavai

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான்.

ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்… என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.

“எது கேட்டாலும் கிடைக்குமா?’’

“நிச்சயமாக… என்ன வேண்டும் கேள்!’’

“வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்… முடியுமா?’’

“என்ன அது/’’

“நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’

“அதற்கென்ன… சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’

“வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது.

வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்…’’

அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான்.

திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்… எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர,  பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்… கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது… அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது.
பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்… “இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’

“நீ பார்த்தாயே… என் உறவுக்காரப் பறவை… அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்…’’

அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது.

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை

ஸ்டீவ் ஜாப்ஸ்



மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும்
வரை அவனுக்கு
எந்த துணையும் தேவையில்லை..

அவனை சுற்றி எல்லோருமே இருப்பார்கள்..

படுத்து விட்டால் பார்த்து
கொள்ள யாரும் கிடையாது.இது
உலக வழக்கம்..

கணினி உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களில்
ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.



ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகமே வியந்து பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட இவர் உடல்நலம் குன்றி 56 வயதில் உலகை பிரிவதற்கு முன்பாக சொன்ன வார்த்தைகள் மறக்கக் கூடாதவை..

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன்.

மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.

நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில் தான்
அறிந்து கொண்டேன்.

இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக் கொண்டு
என் முழு வாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.

இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.

கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்க வேண்டும் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது.

அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.

அவைதான்
வாழ்வில் மிகமிக இன்றியமையாதது என்பதை காலங் கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.

அதை விட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பி விடுகிறது.என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்.

பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும் மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.
நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.

வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.
எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை, உச்சத்தைத் தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்.

ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது.
முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்து விட்டால்
மீண்டும் வாங்கி விடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை.

இப்போதாவது வாழ்க்கையை
வாழத்
தொடங்குங்கள்.

நாம் நடித்துக்
கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்.



nidurseasons

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை

சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ 

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’
நன்றி - விகடன்

Monday 14 May 2018

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது

இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !!

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது

இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்),  அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள்.
இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களின் சகல சொத்துக்களையும் அழிக்கும் யூத இஸ்ரேல். அமெரிக்க ஸியோனிஸ்டுகளை ஆதரிக்கும்
கூலிப்படைகளே இந்த வஹாபிகள் என்பதை அறிய வேண்டுமா?
மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வஹாபிகளும் செய்யும் அட்டூழியங்களின் சுருக்கத்தை அறிய வேண்டுமா?

வஹாபிகளால் ஆதரிக்கப்படும், ஸிரிய அரசாங்கத்துக்கெதிரான அமெரிக்க, இஸ்ரேல் யுத்தம் பற்றி பலஸ்தீனைச் சேர்ந்த உலகின் பிரபல மத்தியகிழக்கு விவகார ஆய்வாளர் அப்துல் பாரி அத்வானி அவர்கள், அரபுலகை அமெரிக்கா அழிப்பது பற்றி மிகக் கவலையோடு பேசுகிறார். இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேல், அமெரிக்க திட்டத்தைத் தான் இங்குள்ள வஹாபி தமிழ் ஊடகங்கள் ஆதரிக்கின்றன என்பதை இலகுவாக புரிந்து கொள்வீர்கள்.
இந்த வீடியோவை முழுதும் கவனமாக கேளுங்கள்.
அரபு தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் மூலம் கேளுங்கள்.
சகல முஸ்லிம்களுக்கும் எத்தி வையுங்கள்.




மக்காவில் ஹரம் சரீபில் CCTV கமெரா காட்சிகள்

  1. கண் பார்வையற்ற எகிப்தியருக்கு பார்வை மீளல்
  2. பொறுப்பற் விதத்தில் நடந்துகொள்ளும் இளைஞன்.
  3. உறங்குபவரின் Hand phone ஐ திருடும் திருடனை பொலிஸ் பிடித்தல்
  4. தொழுதுகொண்டே சிக்கரட் பற்றும் மன நோயாளியை பொலிஸ் பிடித்தல்.
  5. அங்கவீனரான குட்டையானவர் தவாப் செய்யவும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடவும் பொலிஸ் உதவி செய்தல்.


Thursday 10 May 2018

மாதவிடாயும், குழந்தை பாக்கியமும் !!!


மாதவிடாயும், குழந்தை பாக்கியமும் !!!

இறைவன் மாதவிடாயை (PERIOD) பெண்களுக்கு ஏன் ஏற்படுத்தி உள்ளான்!
படித்தவுடன் அதிகம் செயார் செய்யுங்கள்
மாதவிடாயும், குழந்தை பாக்கியமும் !!!
-பயனுள்ள தகவல் -----------------------------
இறைவன் படைத்த உயிர் இனங்களில் செங்குத்தாக நிற்க்கும் பெண் இனத்திற்க்கு மட்டும் மாதம் ஒரு முறை வாடிக்கையாக உடலில் இருந்து வெளியேறும் விதமாக மாதவிடாயை அமைத்துள்ளான்
இந்த மாதவிடாய் பெண்களுக்கு இயற்கையாக வரும் என்று மட்டும் அநேகமானவர்கள் அறிந்து வைத்துள்ளார்களே தவிர
இதை ஏன் இறைவன் படைத்துள்ளான் ? மாதம் ஒரு முறை இது பெண்ணிண் உடலில் இருந்து ஏன் வெளிப்படுகின்றது ? என்ற அறிவியல் ரீதியான தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ளவில்லை
------++++++++++------
பருவ வயது அடைந்த ஒவ்வொரு பெண்ணிண் உடலில் ஒவ்வொரு மாதமும் மூன்றரை இலட்சம் சினை முட்டைகளை இறைவன் ஏற்படுத்துகின்றான்
அதாவது ஒரு பெண்ணிண் உடலில் ஒவ்வொரு மாதமும் உருவாகின்ற மூன்று அரை இலட்சம் சினை முட்டைகளை வைத்து மூன்று அரை இலட்சம் குழந்தைகளை உருவாக்கலாம்
ஆனாலும் அந்த மூன்று அரை இலட்சம் சினைமுட்டைகளில் முப்பது முட்டைகள் மட்டுமே ஆணிண் விந்து துளியில் இருக்கும் உயிரணுவை சுமந்து கருவை சுமக்க போட்டி போட்டு எதிர் பார்த்து நிற்கிறது
ஒரு சில நாட்களில் அந்த முப்பது சினைமுட்டைகளில் இருபத்தி ஒன்பது சினை முட்டையும் இறந்து போய் விடுகின்றது
மீதி ஒரே ஒரு சினை முட்டை மட்டுமே ஆணிண் விந்துத் துளியில் இருக்கும் உயிரணுவை பெற்று குழந்தை கருவை சுமக்க கருவரை வாசலில் வந்து காத்து நிற்கின்றது
அதாவது மாதவிடாய் துவங்கிய நாள் முதல் தொடர்ந்து வரும் பதினான்காம் நாளில் தான்
இந்த சினை முட்டை முழு வளர்ச்சி பெற்று கரு வாசலில் வந்து நிற்கின்றது
இந்த நாளில் ஒரு பெண்ணிண் கணவன் தன் மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டால் மட்டுமே அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
இதில் இறைவனின் ஏற்பாடு என்னவெனன்றால் இந்த வளர்ச்சி அடைந்த சினை முட்டை கூட இருபத்தி நான்கு மணி நேரம் அதாவது ஒரே ஒரு நாள் மட்டும் தான் உயிரோடு இருக்கும்
ஒரு நாள் கடந்த பின்பு அதுவும் இறந்து விடுகின்றது இது இறக்கும் நாள் முன்போ அல்லது இறந்த நாள் பின்போ உயிரணுவை முழுமையாய் பெற்ற ஒரு ஆண் மகன் தன் மனைவியிடம் பல முறை இல்லறத்தில் ஈடுபட்டால் கூட குழந்தை பாக்கியத்தை நிச்சயம் பெறவே முடியாது
சுருக்கமாக சொல்வதானால் மனைவிக்கு மாதவிடாய் நின்று ஒரு வார காலம் உறை மாலாடீ போன்ற எவ்வித தடை சாதனமும் இல்லாது நீங்கள் நேரடியாக இல்லறத்தில் ஈடுபட்டாலும் சரி அல்லது சினை முட்டை அழிந்த பதினான்காம் தாண்டி அடுத்த மாதவிடாய் வரும் வரை நீங்கள் உங்கள் மனைவியரிடம் எவ்வித தடை சாதனமும் இன்றி இல்லறத்தில் ஈடுபட்டாலும் குழந்தை உருவாகாது
இந்த உடலியல் நுணுக்கத்தை புரியாமல் அநேகமானோர் இல்லறத்தில் ஈடுபடுவதால் தான் தங்களை மலடாகவும் மலடியாகவும் நினைத்துக் கொள்கின்றனர்
இந்த அறியாமையை பயன்படுத்தி தான் பாலியல் மருத்துர்களில் பலர் குழந்தை பாக்கியத்திற்க்கு நாங்கள் மருந்து தருகிறோம் எனும் பெயரில் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டி வாழ்கின்றனர்
நாம் குழந்தை பிறப்பிற்க்கு எதை உங்களுக்கு சொன்னோமோ அந்த மாதவிடாய் தேதியை உங்களிடமே சூட்சகமாய் அறிந்து அதற்க்கு தகுந்தார் போல் உங்களுக்கு ஆலோசனை தருவர்
அவர்கள் தரும் அநேக மருந்துகள் உங்களை சாந்தப்படுத்தும் சத்து மருந்துகளே தவிர குழந்தை பாக்கியத்தை உருவாக்கும் மருந்துகள் இல்லை
இது போன்ற மருத்துவர்களை தான் அநேகர் கைராசி டாக்டர் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கும் சூழலை பார்க்கிறோம்
--+++++++++--
இது போக இலட்சத்தில் சில ஆண்களுக்கு அவர்களின் விந்துதுளியின் உயிரணுவில் பழகீனம் இருந்தாலோ
அல்லது பெண்களில் சிலருக்கு சினை முட்டையில் பழகீனம் இருந்தாலோ அவர்கள் மேற்கூறிய அடிப்படையில் இல்லறத்தில் ஈடுபட்டாலும் குழந்தை பிறப்பதில் கோளாறுகளோ அல்லது இயலாமையோ ஏற்படலாம்
இவர்கள் பாலியல் ரீதியாக படித்த முறையான மருத்துவரை அணுகி ஆலோசனைகளையும் மருந்துகளையும் பெற்றுத் தான் தனது உடலியல் கோளாறுகளை சீர் படுத்த வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது
-----------------------
திருமணம் ஆகாத பெண்களுக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டு ஆடவனின் உயிரணுவிற்க்கு வழியில்லாத பட்சத்திலும்
திருமணமானவர்கள் முறையாக இணையாது அந்த சினைமுட்டையை பாழ்படுத்தியதாலும் ஒட்டுமொத்தமாக மூன்றரை இலட்ச சினைமுட்டைகளும் பல்வேறு இரசாயன மாற்றங்களுக்கு பிறகு கழிவுகளாக இறைவன் அதை பெண்ணிண் உடலில் இருந்து வெளியேற்றுகின்றான் காரணம் இந்த கழிவுகள் பெண்கள் உடலில் தங்குமேயானால் அதனால் பல வித நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ
أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்
நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்
ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்
அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்
அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்
இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்
(அல்குர்ஆன் : 2:222)
++++++++++++++++++++
மாதவிடாய் பெண் தீட்டா ?
அநேக மதங்களில் மாதவிடாய் பெண்கள் தீட்டுடையவர்களாக பார்க்கப் படுகின்றனர்
இஸ்லாத்தை பொருத்தவரை மாதவிடாய் பெண்கள் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் தான் ஈடுபடக் கூடாதே தவிர
அவர்களிடம் உரையாடுவதோ தொடுவதோ மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை
---------------------
297. “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
------------
இறைவனின் ஆற்றலும் நாட்டமும் தான் நமக்கு குழந்தை பாக்கியத்தை தரும் என்ற ஆழமான நம்பிக்கையே முஸ்லிம் தம்பதியர்களுக்கு முக்கியமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்
குழந்தை இல்லை என்பதற்காக விவாகரத்தை நோக்கி செல்வதோ மலடன் மலடி என்று விமர்சனங்களையோ தம்பதியர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் போக்கை கை விட வேண்டும்
காரணம் இறைவனுக்கு நெருக்கமான நபிமார்களில் இப்ராஹீம் ( அலை) ஜகரிய்யா (அலை) போன்றோருக்கு கூட அல்லாஹ் நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியத்தை தரவில்லை
அவர்களே தள்ளாத வயதில் தான் குழந்தை பாக்கியம் பெற்றார்கள்
இதை காரணம் காட்டி நபிமார்களோ அல்லது நபித்தோழர்களோ விவாகரத்தை நோக்கி செல்லவில்லை
காரணம் இறைவன் நாடினாலேயன்றி எவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாது
لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்
ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்
தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்
மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்
(அல்குர்ஆன் : 42:49)
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்
அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்
நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்
(அல்குர்ஆன் : 42:50)
இது போக இறைவன் எந்த ஆடவனின் துணையின்றி நபி ஈஸா ( அலை) அவர்களை தந்தையின்றி படைத்துள்ளான் என்ற ஈமானிய உறுதியையும் பெற வேண்டும்
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்
(அல்குர்ஆன் : 19:19)
قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்
(அல்குர்ஆன் : 19:20)
قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ ۖ وَلِنَجْعَلَهُ آيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே
மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்
இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்

Wednesday 9 May 2018

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள்.
அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ் ஆகும்.
ஹாஜாவுடன் அங்குவந்த அனைவரும் காடுகள் சூழ்ந்த ஒரு பகுதியில் தங்கியிருந்து வணக்க வழிபாடுகள் செய்து வந்தார்கள். இந்தச் செய்தி ஆட்சி செய்த கொண்டிருந்த அரசனுக்கு எட்டியது. கோபம் கொண்ட அரசன் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு தூது அனுப்பினான். ஹாஜா மறுத்துவிட்டார். கோபம் கொண்ட அரசன் அவர்களுக்குப் படிப்படியாக இன்னல்களும், தொல்லைகளும் கொடுக்கத் தொடங்கினான்.
ஹாஜாஜீயும், அவர்களுடன் வந்திருந்த பக்தர்களும் குளிப்பதற்கும், குடிப்பதற்கும், "வுழு" என்ற சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்த "அனாஸ்கார்" என்ற குளத்தில் நீர் எடுக்கக் கூடாதென்றும், அக்குளத்தண்டை செல்லக்கூடாதென்றும் தடைவிதித்தான்.
சில நாட்கள் பொறுமை செய்து கொண்டிருந்த ஹாஜாஜீ சீறி எழுந்தார்கள். "வுழு" என்ற சுத்தம் செய்வதற்காக அவர்கள் பயன் படுத்தி வந்த "கூசா" சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு "அனாஸ்கார்" குளத்தை நோக்கி விரைந்தார்கள். அங்கு அரசனால் காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்த போர் வீரர்கள் ஹாஜாஜீ அவர்களைக் கண்டதும் மயக்கமுற்று ஒருவர் பின் ஒருவராக மயங்கித் தரையில் விழுந்தார்கள். ஹாஜாஜீ தங்களின் "கூசா" கேத்தலை குளத்தில் வைத்தார்கள். அவ்வளவுதான். என்னே புதுமை கடல் போன்று பரந்து விரிந்து காணப்பட்ட "அனாஸ்கார்" குளத்து நீர் எல்லாமே ஒரு சொட்டுக்கூட பாக்கியின்றி ஹாஜாஜீயின் சிறிய கேத்தலில் புகுந்து விட்டது. குளம் வற்றி வரண்டு போயிற்று. ஹாஜாஜீ கேத்தலை - கூஜாவை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
இச் செய்தி கேட்டுச் சீறி எழுந்த அரசன் பிரிதிவிராஜ் என்ற "பத்ஹுறா" தனது அரச சபை சூனியக்காரன் - மந்திரவாதி "அஜய்பால்" என்பவனை அழைத்து மலையிலுள்ள பெரும் கல்லொன்றை ஹாஜாவின் மீது தள்ளி அவரைக் கொண்றுவிடு என்று கர்ஜித்தான். மந்திரவாதி "அஜய்பால்" மலையிலுள்ள பெரும் கல்லொன்றை மலையடியில் வாழ்ந்து வந்த ஹாஜாஜீ மீது மந்திரம் ஜெபித்து உருட்டினான். அக் கல் ஹாஜாஜீயை நோக்கி மின்னல் வேகத்தில் உருண்டு வந்தது. ஸுப்ஹானல்லாஹ்! ஹாஜாஜீ தனது வலக்கரச் சுட்டு விரலால் அக்கல்லைக் குத்தி தடுத்து நிறுத்தினார்கள். (அக் கல் இன்றும் ஹாஜாஜீ மலையில் சுட்டு விரல் அடையாளத்துடன் உள்ளது)
ஹாஜாஜீயின் "கறாமத்" அற்புதத்திற்கு முகம் கொடுக்;க முடியாமற்போன மன்னன் "பத்ஹுறா" பிரதிவிராஜ் ஹாஜாஜி அவர்களின் காலடி வந்து (மகானே! இறைநேசரே! நீங்கள்தான் ராஜஸ்தான் மாநிலத்தின் அரசர் நான் அல்ல. அஜ்மீர் நகரின் அதிகாரி நீங்கள்தான். நான் அல்ல. "அனாஸ்கார்" குளம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் நீர் வழங்கிக் கொண்டிருந்தது. இன்று அது வற்றி வரண்டு போயிற்று. கால் நடைகள் நீரின்றி செத்து மடிகின்றன, மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக உண்ண உணவின்றியும், பருக நீரின்றியும் மரணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் என்றுமில்லாதவாறு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நான் இஸ்லாம் மார்க்கத்தில் இனைகின்றேன். இம் மாநில மக்களும் இனணகிறார்கள். குளத்து நீரைத் தாருங்கள்) என்று ஹாஜாஜீயின் காலடியில் மண்டியிட்டுக் கிடந்தான் மன்னன்.
கருணையுள்ள ஹாஜா "கூஜா" வை எடுத்துக் கொண்டு "அனாஸ்கார்" குளத்தண்டை சென்று அதை வரண்டு போயிருந்த குளத்தில் - தரையில் வைத்தார்கள். ஸுப்ஹானல்லாஹ்! கூஜாவிலிருந்து கடல் மடை திறந்தாற்போல் நீர் ஊற்றெடுத்து வந்தது. "அனாஸ்கார்" குளம் முன்பு இருந்ததை விட பன் மடங்கு நீர் அதிகமான குளமாயிற்று.
இதை நேரில் கண்டும், கேள்விப் பட்டும் அறிந்த இந்துக்களில் 90 இலட்சம் பேர் ஹாஜாஜீயின் கரம் பற்றி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரேயொரு "கறாமத்" அற்புதம் மூலம் 90 இலட்சம் மக்களை இஸ்லாமில் இணைத்த பெருமை ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.
ஒரு நொடியில் ஒரேயொரு “கறாமத்” அற்புதம் கொண்டு 90 இலட்சம் மக்களை - காபிர்கள்- இஸ்லாமாக்கினார்கள் ஹாஜா இது வரலாற்று உண்மை.

Tuesday 8 May 2018

மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

Image may contain: 1 personமெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

எமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது.
அவர் ஒரு பெளத்த மதகுரு மட்டுமல்லாது, ஒரு அரச பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றுகின்றார்.
அவரது உரையின் இடையில் இப்படி ஒரு கதை சொன்னார்...
"நான் அதிபராக கடமையாற்றும் பாடசாலையில், கடந்த வருடம் இரண்டாம் தவனைப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்தப் பரீட்சை நேர சூசியில் வெள்ளிக்கிழமை 12 மணி முதல் 1.30 மணிவரை ஒரு பாடம் போடப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை காலையிலேயே என்னை சந்திக்க, எனது பாடசாலையில் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் சிலர் வந்தார்கள்".
"அபே ஹாம்துருவனே...
இன்று 12 மணிக்கு எமக்கு ஒரு பாடத்தில் பரீட்சை இருக்கிறது....
அதே நேரத்தில்தான் எமக்கு ஜும்மா தொழுகையும் இருக்கிறது....
எமக்கு பரீட்சை எழுதாமல் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் பள்ளிக்குப் போகமல் இருக்க முடியாது என்றார்கள்.
அந்த மாணவர்களின் மத நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
வெறும் 14,15 வயதில் தனது கடவுள் கொள்கை மீதும், அவறுக்கு செலுத்தவேண்டிய கடமை மீதும், எவ்வளவு உறுதியாக இறுக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
பின்னர் நான் பரீட்சை நேரத்தை மாற்றிக் கொடுத்தேன் என்று, முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார் அந்த தேரர்.
இஸ்லாத்தின் கோட்பாட்டை தொழுகையின் முக்கியத்துவத்தை ஒரு பெளத்த தேரருக்கு அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், அந்த பாடசாலை மாணவர்கள்.
அவர்களது அந்த செயற்பாட்டினால், ஒரு பெளத்த தேரரே இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும், முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்தும் சிலாகித்துப் பேசும் ஒரு நிலமை உறுவாகி இருக்கின்றது.
இந்த மாணவர்கள் செய்ததுதான் தஃவா.
நாம் எங்கிருந்தாலும் எந்த சூழலில் இருந்தாலும், எமது செயற்பாடுகள்தான் அன்னிய மக்களிடம் இஸ்லாத்தின் தூதை கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம்.
நன்றி
Safwan Basheer

Tuesday 1 May 2018

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

eravur

“இவ்விரவில் தீர்க்கமான காரியங்கள் அனைத்தும் பிரிக்கப்படுகின்றன.” அல்குர்ஆன் அத்தியாயம் 44 வசனம் 04

அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையின் பொருட்டினால் நமது வாழ்நாளில் மற்றுமொரு சங்கைமிகுந்த புனித ரமழான் மாதம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அதனை வரவேற்கும் விதத்தில் அதற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தினை நாம் சங்கைப்படுத்த வேண்டியுள்ளது. இது நபி வழியாகும். 

ரமழான் மாதத்திற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் ஸல்லல்லதஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களால் வலியுறுத்திக் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் அமலாகும். ரமழான் மாதம் அல்லாததொரு மாதத்தில் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆஹி வசல்லம் அவர்கள் அதிகம் நோன்பு நோற்ற மாதம் என்றால் அது ஷஃபான் மாதம் அன்றி வேறில்லை.

அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் கூடுதலாக நோன்பு நோற்றிருக்கின்றார்கள் என்பதற்குரிய பல சான்றுகள் புகாரி முஸ்லிம் போன்ற நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியிருந்தபோதிலும் அவ்வாறு நோன்பிருந்ததற்கான காரணத்தை பின்வரும் நபி மொழிகளினூடாக அறிய முடிகிறது.

ரமழானை வரவேற்றல்.

“ரமழானுக்குப் பின்னர் நோற்கப்படும் நோன்புகளில் எது சிறந்த நோன்பாகும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோதுää ரமழானை கண்ணியப்படுத்தி ஷஃபானில் நோற்கப்படும் நோன்பாகும்” என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (திர்மிதி)

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிப்பதாவதுää அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு இருப்பதை நான் கண்டதில்லை. என்று கூறினேன். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ரஜபுக்கும் ரமழானுக்கும் மத்தியில் இருக்கும் அந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும்போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவதை நான் வெகுவாக விரும்புகின்றேன் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்ää நசாயீ)

ஷஃபானுடைய மாதத்தில் மட்டும்தான் ந மது அமல்கள் அல்லாஹ்வின் சன்னிதானத்திறகு உயர்த்தப்படுவதாக நாம் எண்ணிவிடக்கூடாது. ரமழான் மாதத்தில் உயர்த்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு இரவும் பகலும் உயர்த்தப்படுவதாகவும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. அவ்வாறே கிழமையில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் உயர்த்தப்படுவதாகும் மற்றுமொரு நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமில் பதவிவாகியுள்ளது.

கிப்லா மாற்றப்பட்ட மாதம்

இந்த மாதத்தின் நடுப் பகுதியில்தான் கஃபாவை முன்னோக்கித் தொழுவதற்கான அனுமதி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக இமாம் குர்துபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தமது தப்சீருல் குர்ஆனில் குறிப்பிடுகிறார்கள்.

ஸலவாத்தின் மாதம்

“நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது அமரர்களும் நபி நாயகம் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்) மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அவர் மீது ஸலவாத்ää சலாம் சொல்லுங்கள் என்ற திருமறை வசனம் ஷஃபான் மாதத்தில் இறங்கியதாக இமாம் ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அல் மவாஹிப் என்ற நூலில் பதிவு செய்கின்றார்கள்.

இதுபோன்ற காரணங்களுக்காக ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்புகளை ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நோற்றிருக்கும்போது நம்மில் எத்தனை பேர் நபி வழியைப் பின்பற்றி இந்த மாதத்தில் நோன்பாளிகளாக இருக்கின்றோம் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னதுபோன்று இந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுவதையே அதிகம் காண முடிகிறது.

ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கையில் விசேட கவணம் செலுத்தப்பட்ட நிலையில் நோற்கப்பட்ட ஷஃபான் மாத நோன்பினை நாம் மறந்துபோயுள்ள இச்சநத்தர்ப்பத்தில் மீண்டும் அந்த ஸ{ன்னத்தினை பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர்களான நமக்கிருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

“எனக்குப் பின் மறக்கடிக்கப்பட்ட எனது ஸ{ன்னதினை யாராவது மீள கட்டியெழுப்பி அதனை பிறர்கள் செயல்படுத்துவார்களானால் அவர்களுக்கு வழங்கப்படும் அதே கூலி மீளக் கட்டியெழுப்பியவருக்கும் வழங்கப்படும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (திர்மிதி)

நபி வழியைப் பின்பற்றி இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்ப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் ஒரு நோன்பாவது நாம் இம்மாதத்தில் நோற்க வேண்டாமா? இதனடிப்படையில் ஷஃபான் மாதத்தில் ஒரு நோன்பாவது நோற்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அந்த ஸ{ன்னத்தினை ஹயாத்தாக்க விரும்புகின்றவர்கள் இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருப்பது சிறந்ததாகும். ஷஃபான் மாதம் பிறை 16 ஆம் தினத்திலிருந்து வழமைக்கு மாற்றமான எந்தவொரு நோன்பினையும் நோற்கலாகாது. காரணம்ää

ரமழான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள்ää வியாழன்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிரää அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம் என்று நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.  (புகாரி)

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி) எனவே ஆகக் குறைந்தது இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருக்க முயற்சிப்பதுடன் நமக்காகவும் பிறர்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் வேண்டும்.

இதுபோன்றதொரு இரவில் நாயகம் ஸல்லல்லஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஜன்னதுல் பகீஃ எனப்படும் அடக்கஸ்தளம் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். (திர்மிதிää இப்னு மாஜா)

முஷ்ரிக் மற்றும் சமூகத்தில் குழப்பங்களையும் பிரிவிணைகளையும் உருவாக்குகின்றவர்ää குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்பவர்ää பெற்றோர்களுக்கு அநீதிழைப்பவர்கள்ää மதுவுக்கு அடிமையானவர் போன்றவர்களை தவிரவுள்ள ஏனைய சகலரின் பாவங்களையும் அல்லாஹ் இவ்வாறான இரவில் மன்னிக்கின்றான் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (அஹ்மத்ää பைஹகீ)

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் விசேட அமல்கள் புரிவது தொடர்பான பல தகவல்கள் தபரானி, திர்மிதி, பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் அஹமத் ஆகிய நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளதைக் காண முடிகிறது. இதுபோன்ற இரவின் சிறப்புக்கள் அடங்கிய பல நபிமொழிகள் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறனதொரு இரவில் முன்னோர்கள் தனித்தனியாக விசேட தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அஷ்ஷெய்கு இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார்.

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பு நோற்று விசேட வணக்கம் புரிவது தொடர்பாகப் பதிவான தகவல்கள் பொய்யானது என்றும் அவை இட்டுக்கப்பட்ட தகவல்கள் என்றும் கூறி அவையாவும் அணாச்சாரம் என்று சொல்வோமாக இருந்தால் மேற்சொன்ன அறிஞர்களெல்லாம் நரகவாதிகளாகவும் நரகம் செல்வதற்கான வழிகளை அவர்கள் காட்டிச் சென்றதாகவும் சொல்ல நேரிடும்.

எனவே எதிர் வரும் புதன் கிழமை 02-05-2018 ஆம் நாள் நோன்பு நோற்பதோடு இயலுமான வணக்கங்களிலும் ஈடுபடுவதுடன் குடும்ப உறவுகளைப் பேணுவதற்குரிய வழிகளையும் கையாழ்வதற்கு வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக! ஆமீன்

அபூ தூபா
அந்நிழாமிய்யா மக்ஃபிய்யா அரபிக் கல்லூரி
ஏறாவூர்