السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 31 March 2024

யா அலி ரலியல்லாஹு அன்ஹு

 

#அறிவின் தலைவாயில் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) கர்ரமல்லாஹு வஜ்ஹஹு..!!!


#இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், 


#கண்மணி ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை ஃபாத்திமா  ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கணவரும், 


சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரலியல்லாஹூ அன்ஹூ..., இமாம் ஹுசைன் ரலியல்லாஹூ அன்ஹூ... ஆகியோரின் தகப்பனாரும்,


சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும்,,,


உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும்,


மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் ஆகும்...!!


இவர்கள் புனித காஃபாவில் பிறந்தார்கள். முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை. 


பிறந்து கண் திறந்த போது முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இவர்களை பார்க்க சென்ற போதுதான் கண்திறந்தார்கள்.


சிறு வயதிலேயே (7 அல்லது 9 வயது, அதாவது வயதிற்கு வருவதற்கு முன்னமே) இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள்.


ஆரம்ப கால முதல் நபிகளாரின் தோழமை இவர்களை மிகவும் பண்படுத்தியது.


ஏழ்மையான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். கண்மணி நபிகளார் இவர்களை புகழ்ந்து يحب الله ورسوله ويحبه الله ورسوله அதாவது இவர்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்ற சோபன செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.


தங்களுடைய கஷ்ட ஜீவனத்திலும் எந்த காரியமும் அல்லாஹ்விற்காக செய்வார்கள்.


ஒரு முறை தங்களுடைய பிள்ளைகளின் காய்ச்சல் சரியாகிவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்கின்றோம் என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் அன்னை ஃபாத்திமா நாயகி ரலியல்லாஹூ அன்ஹா... அவர்களும் நேர்ந்து இருந்தார்கள்.


அப்படியே நோன்பும் இருந்தார்கள். முதல் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், மிஸ்கீன் வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே இரண்டாம் நோன்பை நோற்றார்கள். இரண்டாம் நாள் நோன்பு முடிந்தது.


சாப்பிட அமர்ந்தார்கள், அநாதை வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே மூன்றாம் நோன்பைநோற்றார்கள். 


மூன்றாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், கைதி வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே அடுத்த நாளின் ஏனைய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். 


அல்லாஹ் இவர்களை புகந்து சூரா தஹ்ர் இறக்கி வைத்துள்ளான். அதில் இந்த சம்பவத்தின் வசனத்தையும் இறக்கியுள்ளான்.


وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا 


அவனுடைய (அல்லாஹ்வுடைய) பிரியத்தில் ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள், அப்படி உணவளித்து விட்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான் வழங்கினோம் என்று கூறுவார்கள். (76: 8,9)


ஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை கண்மணி நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்... அவர்களுடனே இருந்து தபூக் தவிர அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள்.


இவர்களின் தலைமையில் அனைத்து போர்களிலும் வெற்றி கிடைத்தது. 


பத்ரு போரில் 20 வயது இருப்பினும் முஹாஜிரீன்களின் கொடி இவர்களிடம் தான் இருந்தது. 


வலீத் உட்பட பல காபிர்களை இஸ்லாத்திற்காக வீழ்த்தினார்கள். உஹதில் இவர்கள் காட்டிய வீரத்தால் எதிரிகள் சிதருண்டார்கள்.


அகழ் போரில் நடந்த ஒரே யுத்தத்தில் அமர் என்ற வீரமிகு எதிரியை, இஸ்லாத்திற்காக உயிரை பணயம் வைத்து அவனோடு போர் புரிந்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள்.


கைபர் யுத்தத்தில் மூன்று நாட்கள் போர் புரிந்தும் கிடைக்காத வெற்றி, நாளை ஒரு இளைஞன் யிடம் கொடியை தரப்போகின்றேன், அவரை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், 


அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்றும் கூறி அவர்களின் கையில் வெற்றி கிடைக்கப் போகிறது என்ற சோபனமும் கூறினார்கள். (புகாரி)


அப்படியே வெற்றி கிடைத்தது. அங்கு நடந்த ஒரு சம்பவம் மூலம் எப்படி இவர்கள் இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.


ஒரு எதிரியை தாக்க வாள் தூக்கி கொண்டு போக, அவன் இவர்கள் மீது துப்பி விடுகின்றான். இயல்பாக கோபம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களோ அவனை விட்டு முகத்தை திருப்பி கொண்டார்கள்.


அவருக்கு ஆச்சரியமாக போக என்ன என்று விசாரிக்கின்றார். நான் அல்லாஹ்விற்காக வாள் ஓங்கினேன். நீ துப்பி விட்டதால் பகைமை நமக்குள் வந்துவிட்டது.


அதனால் அல்லாஹ்விற்காக மற்றொரு முறை உன்னை பார்த்து கொள்வேன் என்று கூற அந்த யூதர் இஸ்லாம் ஆனார்.


அல்லாஹ்விற்காக செய்த அதன் ஒரு காரியத்தில் அவருடைய சந்ததிகளுக்கு இஸ்லாம் கிடைத்தது என்று பெருமக்கள் கூறுவார்கள். 


அதே கைபரில் கடைசி கோட்டையில் மிர்ஹப் உடைய கிரீடத்தை உடைத்தார்கள். அதில் இருந்த நவரத்தினங்களை போரில் கிடைத்த பொருள் (கனீமத்) ஆக சஹாபாக்கள் எடுக்க,


அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களையும் எடுக்க சொன்ன பொது நான் உடைத்தது அல்லாஹ்விற்காக, நான் இதை எடுத்து விட்டால் அல்லாஹ் நீ சுயநலத்திற்கு உடைத்தாய் என்று கூறி விட்டால் என்ன செய்வேன் அதனால் எடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.


இவர்களுடைய பெருமைகள் சொல்லி முடியாது. தபூக் யுத்ததிற்கு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களை நபிகளார் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். 


அழுது கொண்டு சென்றார்கள் நபிகளாரிடம், யா ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்).. நான் என்ன தவறு செய்தேன் இல்லை போர் புரிய தகுதியை இழந்து விட்டேனா என்று கேட்க இல்லை,


உங்களை மூஸா அலைஹிஸ்ஸலாம்... அவர்கள் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்... அவர்களை விட்டு சென்றதை போல் நான் விட்டு செல்கின்றேன், எனினும் எனக்கு பிறகு நபி இல்லை.(நபி இருந்து இருந்தால் நீங்கள் தான் நபி)


انت بمنزلة هارون من موسى الا انه لا نبي بعدي ياعلي 


கண்மணி நபிகளாரை குளிப்பாட்டி கப்ரில் அடக்கம் செய்ததும் இவர்கள் தான்.


இவர்கள் அல்லாஹ்வின் பயத்தால் இரவில் நின்று அழுதவர்களாக இருப்பார்கள். போரில் புன்முறுவல் பூத்தவர்களாக செல்வார்கள். 


இதை பற்றி ஒரு கவிஞர் சொல்லும் போது هو البكاء فى المحراب ليلا - هو الضحاك في يوم الضراب அதாவது, இவர்கள் இரவில் மிஹ்ராபில் (தொழுகையில்) அழுவார்கள், போரிலே சிரித்தவர்களாக செல்வார்கள்(கடினத்தை முகத்தில் காட்டமாட்டார்கள்)


இவர்களை பற்றி


انت مني وانا منك ياعلي 


அலீயே நீர் என்னிலிருந்தும் நான் உம்மிலிருந்தும் இருக்கின்றோம் என்றும்,


انت اخي فى الدنيا والاخرة ياعلي 


நீர் இந்த உலகிலும் மறு உலகிலும் என்னுடைய சகோதரராக இருக்கின்றீர் என்றும்,


انا مدينة العلم وعلي بابها 


நான் அறிவின் பட்டணம், அலீ அதன் நுழைவாயில்


என்றும் கண்மணி‌ ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்... அவர்கள் கூறியுள்ளார்கள்.


கணிதத்தில் மிகவும் உயரத்தில் இருந்தார்கள். தப்சீர் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். 


தப்சீர் கலையில் தலைவராக கருதப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்கள், 


ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களிடம் பாடம் பயின்றார்கள்.


ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்கள் கூறுகின்றார்கள்,


அல்குர்'ஆன் எங்கு, எப்போது, எதற்கு, யாருக்கு, இறங்கியது என்ற ஞானம் எனக்கு உள்ளது போல் சஹாபா பெருமக்களில் வேறு ஒருவருக்கு இல்லை என்று கூறி உள்ளார்கள்.


ஏனைய கலீபாக்களின் ஆட்சிகளின் போது அவர்களுடனே இருந்து மார்க்கப் பிரச்சனைகளில் தீர்வு கண்டார்கள். 


அல்குர்ஆன் கூறும் சட்டங்கள், வாரிசு உரிமை சட்டங்களின் தலைமை ஆசிரியராக விளங்கினார்கள்.


இவர்களின் ஆட்சி 4 1/2 ஆண்டுகள் நடந்தது. ஒரு நாளும் நிம்மதியாக இருக்கவில்லை. கலீபாவாக இருப்பினும் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார்கள். 


தலை சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் நீதத்தில் (واقضاهم علي) நபிகளார் கூறியதை போல் நீதி வானாக இருந்தார்கள்.


உமையாக்களின் அட்டூழியத்தால் ஹிஜ்ரி 40 இல் பள்ளிவாசலில் வைத்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.


அல்லாஹ் நம்மவர்களின் பிழையை இப்புனிதர்களின் பொருட்டால் மன்னித்தருள்வானாக. 


நம்முடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்!

அல்லாஹூம்ம ஆமீன்..!!


(நூல்: அலி ரலியல்லாஹு அன்ஹு வரலாறு)


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்


ஸித்றத்துல் முன்தஹா


நோன்பு 21

இன்று ஹஸ்ரத் அலீ நாயகத்தின் வபாத் நாள் என்று சொல்லப்படுகின்றது.


مدد ياعلي


نَادِ عَلِيّاً مَظْهَرَ الْعَجَائِبِ 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 


نَادِ عَلِيّاً مَظْهَرَ الْعَجَائِبِ تَجِدْهُ عَوْناً لَكَ فِي النَّوَائِبِ لِي إِلَى اللَّهِ حَاجَتِي وَ عَلَيْهِ مُعَوَّلِي كُلَّمَا رَمْيَتُهُ وَ رَمَيْتَ مُقْتَضَي كُلِّ هَمٍّ وَ غَمٍّ سَيَنْجَلِي بِعَظَمَتِكَ يَا اللَّهُ وَ بِنُبُوَّتِكَ يَا مُحَمَّدُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلَّمَ وَ بِوَلَايَتِكَ يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا عَلِيُّ أَدْرِكْنِي بِحَقِّ لُطْفِكَ الْخَفِيِّ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَنَا مِنْ شَرِّ أَعْدَائِكَ بَرِي‌ءٌ بَرِي‌ءٌ بَرِي‌ءٌ اللَّهُ صَمَدِي بِحَقِّ إِيَّاكَ نَعْبُدُ وَ إِيَّاكَ نَسْتَعِينُ يَا أَبَا الْغَيْثِ أَغِثْنِي يَا عَلِيُّ أَدْرِكْنِي يَا قَاهِرَ الْعَدُوِّ وَ يَا وَالِيَ الْوَلِيِّ يَا مَظْهَرَ الْعَجَائِبِ يَا مُرْتَضَى عَلِيُّ، يَا قَهَّارُ تَقَهَّرْتَ بِالْقَهْرِ وَ الْقَهْرُ فِي قَهْرِ قَهْرِكَ يَا قَهَّارُ يَا ذَا الْبَطْشِ الشَّدِيدِ أَنْتَ الْقَاهِرُ الْجَبَّارُ الْمُهْلِكُ الْمُنْتَقِمُ الْقَوِيُّ وَ الَّذِي لَا يُطَاقُ انْتِقَامُهُ وَ أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ

ரலியல்லாஹு அன்ஹு மரணித்த நாள்

 


ரமழான் மாதம் 21 ஆம் நாளன்று தான் இறைத்தூதரின் மருமகனும், முதல் தலைமுறை முஸ்லிம்களில் முதுகெலும்புகளில் ஒருவருமான அலி இப்னு அபூதாலிப் (ரழி) ஷஹாதத்தை எய்தினார். அரசியல் ரீதியான மாற்றுத் தரப்பாக உருவான கவாரிஜ்கள் பின்னர் மார்க்க ரீதியான பிளவாக அதனை மாற்றிக் கொண்டு அலி (ரழி) போன்ற சிரேஷ்ட நபித் தோழர்களையே காஃபிர்கள் என்று கூற ஆரம்பித்தார்கள். மட்டுமன்றி இஸ்லாமிய அரசுடன் முடிவற்ற போர்களிலும் இறங்கினர். அலி இப்னு அபூதாலிபிடம் கவாரிஜ்களைப் பற்றி பொது மக்கள் கேட்ட பொழுது 'நேற்று எம்முடன் இருந்த, இன்று எமக்கு எதிராக நிற்கும் எமது சகோதரர்கள்' என்றே குறிப்பிடப்பட்டார். இத்தனைக்கும் கவாரிஜ்கள் கொலை செய்யப்பட வேண்டிய காஃபிராக அலி (ரழி)யை பிரகடனப்படுத்தி இருந்தனர். ஆனால் போற்றத் தக்க ஆன்மீக பரிபக்குவம் கொண்டவரும், சிறந்த விவேகியுமான அலி (ரழி) அதனை உணர்ச்சிப் பெருக்கினால் அன்றி அறிவுபூர்வமாக கையாண்டார். அவருடைய ஆத்மீக மாட்சிமை உள்ள அளவில் நின்று ஞானத்தின் பரிபூரண மகுடத்தை அணியும் அளவுக்கு உயர்ந்து நின்றது. ஆனால் அலி (ரழி) ஆன்மீகத்தையும், அரசியல் போன்ற சமூக விவகாரங்களையும் பிரித்தே நோக்கினார். கவாரிஜ்களுடன் ஒரு உரையாடலையே நாடினார் அலி (ரழி). ஆனால் போர் வெறியர்களான கவாரிஜ்கள் அதற்கு இணங்கவில்லை. மூளையால் பின் தொடர வேண்டியவற்றை மூளையாலும், உணர்வால் அணுக வேண்டியவற்றை இதயத்தாலும் அணுகுவது தான் ஓரு பக்குவப்பட்ட ஆளுமைக்கு அழகு. அலி இப்னு அபூதாலிப் (ரழி) அனைத்து கோணங்களிலும் பரிபூரண ஆளுமையாக திகழ்ந்தார்.


பிறர் எம்மைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் நாம் பிறரை எடை போட முடியாது / கூடாது. ஏனெனில் அது பிறர் எம்மில் இலகுவாக தாக்கம் செலுத்தும் பலவீனமான மனவமைப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் ஒரு வலிய ஆன்மா புறச் சூழல் தாக்கத்தை சமன் செய்து தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ளும். அலி (ரழி) தன்னை காஃபிர் என்று கூறிய கவாரிஜ்களை திருப்பி காஃபிர் என்று அழைக்கவில்லை. சுயகட்டுப்பாடு என்பது அறிஞனுக்கும், வீரனுக்கும் அவசியம். நாம் அலி (ரழி) அவர்களிடத்திலே கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களில் இது பிரதானமானது.


அலி (ரழி) யை கொலை செய்த காரிஜியின் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் (எவ்வளவு அழகான பெயர்! ஆனால் செய்த வேலை தான் வரலாற்றில் நிரந்தரக் கறையாக நின்று துர்வாசம் வீசக் கூடிய படுபாதகச் செயல்). வாளால் வெட்டும் பொழுது அந்த வெட்டு நபிகளாரின் கண்ணியமிக்க மருமகனின் முகத்தில் விழுந்தது. இதனால் அலியின் பெயரை சொல்லும் பொழுது எல்லாம் பின்னெட்டாக 'கர்ரமல்லாஹு வஜஅஹு' என்று சொல்லும் பழக்கம் இஸ்லாமிய மரபில் உருவானது. இதன் அர்த்தம் 'அல்லாஹ் அவருடைய முகத்தை கண்ணியப்படுத்தி வைக்கட்டும்' என்பது. இதொரு பிரார்த்தனை வடிவம். அல்லாஹ் அலி இப்னு அபூதாலிப் (ரழி) யை கண்ணியப்படுத்தி வைத்து இருக்கிறான் என்பதற்கு வரலாறு சாட்சி.


அலி (ரழி) யை கொன்ற இப்னு முல்ஜிம் சிறையிடப்பட்ட பொழுது 'நாவை மட்டும் அறுக்க வேண்டாம். ஏனென்றால் நான் இறைவனை தஸ்பீஹ் (துதி செய்தல்) செய்ய வேண்டும்' என்றானாம். அந்தளவுக்கு வணக்க வழிபாடுகளில் கவனம் கொண்டவர்கள் கவாரிஜ்கள். ஆனால் அலி (ரழி) யின் அந்தஸ்து பற்றிய அறிவின்மை அவனை உத்தம நபித் தோழரையே கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்தது. இதற்கு மாறாக அறிவில் உயர்ந்து நின்ற இப்லீஸ் தன்னுடைய கர்வம் காரணமாக ஆதம் நபிக்கு வழிபட மறுத்து இறை சாபத்தை பெற்று விண்ணகத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.


இப்லீஸின் அறிவு, இப்னு முல்ஜிமின் அமல் (பக்திபூர்வமான வணக்க வழிபாடு) இரண்டுமே அவர்களுக்கு மீட்சியை அளிக்கவில்லை. ஆக நேர்வழி என்பது இறைவனின் கையில், சித்தத்தில் உள்ள விடயம். பயமும் எதிர்பார்க்ககையுமாக இறைவனை கடைசி வரை பிரக்ஞையுடன் வணங்கி வர வேண்டியதன் அவசியத்தை அலியின் போற்றத் தக்க வீர மரணம் எமக்கு உணர்த்துகிறது.


முதல் நிலை முஸ்லிம் ; மாபெரும் அறிஞர் ; கூர்மதி கொண்ட அரசியல் நிபுணர் ; ஆத்மீக ஞானி ; வீரரான அலி முர்தழா (ரழி) அவர்களை நினைவு கூர்கிறோம்!


நன்றியுடன் பதிவு Lafees Shaheed

Saturday 30 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 474

 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#ஷஹர் #சிந்தனை -17

---------------------------------------


தனித்துவம் வாய்ந்த(313) #பத்ர் ஸஹாபாக்கள்!!


இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு நபித்தோழர்களையும் அல்லாஹ் பல்வேறு வகைகளில் அவர்கள் வாழும் போதும் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் சங்கையும் சிறப்பும் படுத்தினான்.


பத்ர் போரில் பங்கேற்ற நபித்தோழர்களில் சொர்க்கத்தை கொண்டு பெருமானார் (ﷺ) அவர்களின் அமுத வாயால் நேரடியாக சோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் அடங்குவர். ஹுதைபிய்யாவுக்குப் பின்னர் நடைபெற்ற பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்று அல்லாஹ்வின் சோபனத்தைப் பெறும் பாக்கியத்தை பெற்ற பலரும் பத்ர் ஸஹாபாக்கள். பின்னர் நடைபெற்ற போர்களில் கலந்து கொண்டு ஷஹீத் அந்தஸ்தை அடைந்தவர்களும் உண்டு. 


பெருமானார் (ﷺ) அவர்களின் காலத்திற்குப் பிறகு பரந்து விரிந்த இப்பாருலகில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை கண்டு மகிழும் பாக்கியம் பெற்றவர்களும் உண்டு.


இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்களாக, கலீஃபாக்களின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்களும் உண்டு.


இன்னும் சொல்லப்போனால் பின்னோர்களின் நெகிழ்வான நினைவுகளாக, இஸ்லாமிய எழுச்சியின் வடிவமைப்பை முதலில் கட்டமைத்தவர்கள் எனும் அடையாளத்தோடு காலம் முழுவதும் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.


வரலாற்றில் பல இடங்களில் "இந்த இடத்தில், இந்த நிகழ்வில், இந்த போரில், இன்ன நேரத்தில், இது நடைபெறும் போது " இன்ன பத்ர் ஸஹாபி, இன்னின்ன பத்ர் ஸஹாபிகள் இருந்தனர். பங்கேற்றனர், கலந்து கொண்டனர் என்று வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட்டனர்.


பத்ரில் கலந்து கொண்ட 313 நபித்தோழர்கள் மற்றும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ரில் கலந்து ஒவ்வொருவருக்கும் உத்வேகம் இருந்தது..


ولما ندب النبي - صلى الله عليه وسلم - المسلمين يوم بدر فأسرعوا ، قال خيثمة لابنه سعد : آثرني بالخروج ، وأقم مع نسائك . فأبى وقال : لو كان غير الجنة ، آثرتك به . فاقترعا ، فخرج سهم سعد فخرج ، واستشهد ببدر واستشهد أبوه خيثمة يوم أحد .


நபி (ﷺ،) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா (ரலி) அவர்கள் தன்னுடைய மகனான ஸஅது இப்னு கைஃஸமா (ரலி) அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள்.


அதற்கு ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி)அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே!இது சாதாரணமான ஒன்றல்ல. சொர்க்கத்தை நிர்ணயம் செய்யும் விஷயமாகும். சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.


அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்கள் பெயரே வந்தது.


இவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான்.


அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்களின் தந்தை உஹதிலே பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்கள்.


குறிப்பாக பத்ரில் கலந்து கொண்ட இரண்டு நபித்தோழர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ர் போரின் வெற்றியில் அல்லாஹ்வின் மகத்தான உதவி, வானவர்களின் வருகை, பத்ர் இடம் தேர்வு செய்யப்படுதல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றது.


அதில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பெருமானார் (ﷺ،) அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டமும் அதில் நான்கு நபித்தோழர்களின் வீர தீரம் நிறைந்த உரையும் குறிப்பாக முஹாஜிர்களில் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களும் ஆற்றிய உரை திருப்புமுனையாகும்.


மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)எழுந்து பேசினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டியவழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,


‘‘மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)


என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ”பர்குல் ஃகிமாது”*(*மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத் துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி)கூறிமுடித்தார்.


அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ﷺ،) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.


நபி (ﷺ،) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்றுபொதுவாகக் கூறினார்கள். நபி (ﷺ،) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ﷺ،)அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ﷺ،) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:


‘‘நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவி மடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''


மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டி விடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும்.


அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்' பகுதியில் உள்ள ‘பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ﷺ،) அவர்களிடம் கூறினார்கள்.


ஸஅதின் பேச்சையும் அவரின் உற்சாகத்தையும் கண்ட நபி (ﷺ،) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போதுபார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.


1. மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்...


உலகில் வாழும் நாம் தான் சுவனத்தை நேசிப்போம். சுவனத்தில் பிரவேசிக்க விரும்புவோம். சுவனத்தின் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுவோம். சுவனத்தை தந்து விடு யாஅல்லாஹ்! என்று பிரார்த்திப்போம்! சுவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உலகில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.


ஆனால், சுவர்க்கமே நேசித்த, தன்னில் பிரவேசிக்க வேண்டும் என்று விரும்பிய, தன்னில் உள்ள இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உலகின் நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி (ﷺ،) அவர்களை நேசிப்பதை கடமையாக்க்கி இருக்கின்றான். ஆனால், அந்த நபி (ﷺ،) அவர்களை அழைத்து நீங்கள் நான்கு மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெரிவித்தான்.


அப்படி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்


இதை விட வேறென்ன சிறந்த பாக்கியம் இருக்கப் போகிறது ஒரு இறைநம்பிக்கையாளருக்கு?!!


روى الترمذي (3718)، وابن ماجه (140)، وأحمد (22968)، والحاكم (4649) من طريق شَرِيك، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ ) . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: (عَلِيٌّ مِنْهُمْ -يَقُولُ ذَلِكَ ثَلَاثًا - وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ، أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ) .


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு நபர்களை நேசிக்குமாறு எனக்கு கட்டளை பிறப்பித்தான்.மேலும், அல்லாஹ்வும் அவ்ர்களை நேப்பதாக என்னிடம் தெரிவித்தான் அவர்கள் இவர்கள் தான்”: 1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள். ( நூல்: அஹ்மத்: பாகம்: 5 பக்கம்: 351, திர்மிதீ )


قد جاء في معجم الطبراني الكبير مرفوعا أن الجنة تشتاق إلى أربعة علي بن أبي طالب، وعمار بن ياسر، وسلمان الفارسي، والمقداد بن الأسود رضي الله عنهم.


وفي مسند أبي يعلى: أن الجنة لتشتاق إلى ثلاثة وهم: علي, وأبوذر, والمقداد.


فأما حديث الطبراني فلم نجد من حكم عليه بضعف أو تصحيح, وأما حديث أبي يعلى فقد قال الشيخ حسين أسد: إسناده ضعيف


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “நான்கு நபர்களை சொர்க்கம் விரும்புகிறது. 1. அலீ (ரலி), 2. அம்மார் இப்னு யாஸிர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள்.


திர்மிதீ ஷரீஃபின் ஷரஹ் நூலான துஹ்ஃபதுல் அஹ்வதீயின் இன்னொரு அறிவிப்பில் மூவரை சுவனம் விரும்புகின்றது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஆகியோர் ஆவார்கள்.


2. ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَاقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ ‏ ‏أُهْدِيَتْ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ ‏ ‏لَمَنَادِيلُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏خَيْرٌ مِنْهَا ‏ ‏أَوْ أَلْيَنُ ‏ ‏رَوَاهُ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَالزُّهْرِيُّ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


ஒரு முறை) நபி(ﷺ) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ﷺ) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ﷺ) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்” என்று கூறினார்கள். அறி: அல்பர்ராஉ (ரலி).

( நூல்: புகாரி : 3802 )


عن جابر، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.


நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:- சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:


ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள் என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ﷺ) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.

 நூல்: ஸஹீஹுல் புகாரி 3803


விளக்கம்: இந்த நபி மொழி சஅத் (ரலி) அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர் (ரலி) அனஸ் (ரலி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அபு ஸஈது (ரலி) ஆயிஷா (ரலி) இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.


இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89


மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்; மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால் சஅத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரி (ஸல்) (நூல்: :ஃபவாயிதுத் தமாம்16 )


حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله: "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".


ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.


இன்னும் பல சிறப்பம்சங்கள் நாளை பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

தொடரும்.........

வரலாற்றில் ஓர் ஏடு

 


#வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 475
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#ஷஹர் #சிந்தனை -18
--------------------------------------

சில போது சில பொருட்கள் உயர்ந்தவர்களோடு சேர்கிற போது மாண்பையும், மகத்துவத்தையும் பெரும்.

ஈமானிய உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் சிலர் இணைவைப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி குகை ஒன்றினுள் ஒளிந்து கொண்டதால் அந்த ( அல் கஹ்ஃப் ) குகை அல்குர்ஆனில் இடம் பெற்றது.

இஸ்லாமிய ஏகத்துவ அழைப்பை ஸபா நாட்டு அரசிக்கு தன் அலகிலும், கால்களிலும் சுமந்து சென்றதால் ஹுத்ஹுத் பறைவையும் அல்குர்ஆனில் இடம் பெற்றது.

அல்லாஹ்வின் பரிசுத்த ஆலயத்தை பாதுகாக்க அளவினில் மிகச் சிறியதாக இருந்த வாயினுள் எரிகற்களைச் சுமந்து சென்ற அபாபீல் பறவையும் அல்குர்ஆனில் இடம் பெற்றது.

அந்த வரிசையில் ஈமானிய எழுச்சி கல்யை, இஸ்லாத்தின் ஜோதியை பாரெங்கும் நிலைத்திடச் செய்யும் வகையில் எவ்வித ஆயுதமும் இன்றி மாநபி {ﷺ} அவர்களும், சத்திய ஸஹாபாக்களும் ஒன்று திரண்ட ஓர் இடம் தான் பத்ர்.

அடிப்படையில், அது மதீனாவைச் சுற்றிலும் இருந்த எந்த ஒரு பிரபல்யமும் இல்லாத கிணறுகளில் ஒன்று ஆம்! பத்ர் எனும் கிணறு.

அல்லாஹ் அந்த பத்ரையும் அல்குர்ஆனில் இடம் பெறச் செய்ததோடு மாத்திரமல்லால் அந்தப் பெயரையே பல்வேறு சிறப்புக்களுக்குச் சொந்தமாக்கி விட்டான்.

இந்த உலகமும், உலகத்தில் முஸ்லிம் சமூகமும் உள்ள வரை பேசப்படுகிற ஓர் உயரிய அம்சமாக ஆக்கிவிட்டான்.

#சிறந்தவர்களும்… #மிகச்சிறந்தவர்களும்…

فضل من شهد بدراً من الصحابة، والملائكة على غيرهم، روى البخاري في صحيحه من حديث معاذ بن رفاعة ابن رافع عن أبيه، وكان أبوه من أهل بدر قال: جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ؟" قَالَ: مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ، - أَوْ كَلِمَةً نَحْوَهَا - قَالَ: وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلَائِكَةِ

முஆத் இப்னு ரிஃபாஆ இப்னு ராஃபிஇ (ரலி) அவர்கள் பத்ரில் கலந்து கொண்ட தங்களின் தந்தை ரிஃபாஆ (ரலி) அவர்கள் மூலமாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ﷺ} அவர்களின் திருச்சமூகம் வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “பத்ர் போரில் கலந்து கொண்ட உங்கள் தோழர்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்? என்று நபி {ﷺ} அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, “எங்களில் மிகச்சிறந்தவர்களாக அவர்களை நாங்கள் மதிக்கின்றோம்” என்று மாநபி {ﷺ} அவர்கள் பதில் கூற, அதற்கு ஜிப்ரயீல் (அலை) “எங்களிலும் கூட பத்ரிலே கலந்து கொண்ட வானவர்களை மிகச் சிறந்தவர்களாக நாங்கள் மதிக்கின்றோம்” என பதில் கூறினார்கள்.                            ( நூல்: புகாரி )

பத்ரின் ஷஹீத்கள் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிலே….

أن من قُتل منهم نال الفردوس الأعلى، روى البخاري في صحيحه من حديث أنس بن مالك رضي اللهُ عنه: أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ الْبَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ: أَلَا تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ؟ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ، أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ، قَالَ: "يَا أُمَّ حَارِثَةَ! إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الْأَعْلَى

பத்ர் யுத்தம் முடிந்து மதீனாவின் எல்லைக்குள் மாநபியும், மாநபித் தோழர்களும் அடியெடுத்து வைத்த அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிப் பிழம்பான தருணம்.

பத்ரில் கலந்து கொண்டு வெற்றியோடு திரும்பிய தங்களின் உறவுகளை அவரவர்களின் குடும்பத்தினர்கள் ஆரத்தழுவி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு இளைஞரின் தாய் அங்கும் இங்கும் அலைகிறார். தேடுகின்றார். போருக்குச் சென்று திரும்பியவர்களில் அவர்களின் மகன் இடம் பெறவில்லை. பதறித் துடித்தவர்களாக அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! என் மகன் ஹாரிஸாவின் நிலை என்ன? என்று வினவினார்.

அப்போது, அங்கு சுற்றி நின்றிருந்த நபித்தோழர்கள் உம்முடைய மகன் ஒரு அம்பு பட்டு போரில் கொல்லப்பட்டு விட்டார்” என்றார்கள்.

மாநபியின் அருகே வந்த அப்பெண்மணி “என் மகன் சுவனத்தில் இருக்கின்றான் என்றால் மாநபியே நான் பொறுமையோடு இங்கிருந்து திரும்பிச் செல்வேன். இல்லையேல், என் அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது” என்று கூறினார்.

அதற்கு, நபி {ﷺ} அவர்கள் “உம்மு ஹாரிஸாவே! சுவனங்கள் என்ன ஒன்றா? இரண்டா? இருக்கின்றது. பல சுவனங்கள் இருக்கின்றது. உம்முடைய மகன் மேலான ஃபிர்தவ்ஸிலே இருக்கின்றார்” என்று சோபனம் சொன்னார்கள் 
                                         ( நூல்: புகாரி 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களின் எல்லா செயல்களிலும் உள்ள பிழைகளை மன்னித்து விட்டான்” என மாநபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.                           
  ( நூல்: அஹ்மத் )

இந்த மகத்தான சோபனம் பத்ர் ஸஹாபாக்களைத் தவிர நபித்தோழர்களில் வேறெவருக்கும் கிடைக்கப் பெறவில்லை என இப்னு ஜரீர் (ரஹ்) கூறுகின்றார்கள்

சுவனத்தின் நான்கு தலைவர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள்..

وأخرج ابن عساكر عن عبد الرحمن بن يزيد عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم " سادات السودان أربعة: لقمان الحبشي. والنجاشي. وبلال. ومهجع ".

பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாவார். உமர் (ரலி) அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள்.  என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.1.எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி,  2.  லுக்மானுல் ஹகீம் (அலை), 3. பிலால் (ரலி), 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஃ (ரலி) ஆகியோர் எனக் கூறினார்கள்.  ( நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் )

பத்ர் ஷுஹதாவின் மகளுக்கு அல்லாஹ் வழங்கிய பாதுகாப்பு…

أخبرنا أبو الحسين بن بشران قال: أخبرنا أبو علي الحسين بن صفوان البردعي قال: أخبرنا عبد الله بن محمد بن أبي الدنيا قال: أخبرنا محمد بن قدامة، قال: حدثنا عمر بن يونس اليمامي الحنفي، قال: حدثنا عكرمة بن عمار، قال: حدثنا إسحاق بن عبد الله بن أبي طلحة، قال: حدثنا أنس بن مالك قال: كانت ابنة عوف ابن عفراء مستلقية على فراشها، فما شعرت إلا بزنجي قد وثب على صدرها، ووضع يده في حلقها، فإذا صحيفة صفراء، تهوي بين السماء والأرض، حتى وقعت على صدري.

فأخذها - تعني - : الزنجي فقرأها، فإذا فيها: من رب لكين إلى لكين: اجتنب ابنة العبد الصالح، فإن لا سبيل لك عليها؛ فقام وأرسل يده من حلقي، وضرب بيده على ركبتي، فاسودت، حتى صارت مثل رأس الشاة، قالت: فأتيت عائشة، فذكرت ذلك لها.

فقالت: " يا ابنة أخي إذا حضت، فاجمعي عليك ثيابك، فإنه لن يضرك إن شاء الله - قال: فحفظها الله بأبيها، إنه علي كان قتل يوم بدر شهيدا كذا في كتابي بنت عوف ابن عفراء وروي من وجه آخر عن الربيع بنت معوذ ابن عفراء، وهي صاحبة القصة.

முஅவ்விது இப்னு அஃப்ராவு (ரலி) அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:- ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’ தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன்.

அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது.

அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் ‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை’ என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.

இந்த செய்தியை  இமாம் பைஹகீ (ரஹ்)  தம்முடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள். ( நூல்: பைஹகீ 115/7  )

அன்று அவர்கள் விழுதுகளாக இந்த சத்திய சன்மார்க்கத்தைத் தாங்கிப் பிடிக்க வில்லை என்றால் இன்று 600 கோடிக்கும் மேலான முஸ்லிம்களாக நாம் விருட்சமாய் பாருலகெங்கும் பரவி விரவியிருக்க மாட்டோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ர் ஸஹாபாக்கள் மீது நேசத்தையும், பிரியத்தையும் வைப்பதற்கு அருள்புரிவானாக!

அல்லாஹ் அன்னார்களின் வழிச்சுவடுகளை பின்பற்றி வாழும் மேன்மக்களில் ஒருவராக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! 
@highlight


IBYO ERAVUR இளைஞர் அமைப்பினால் பத்ர் மஜ்லிஸ்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

👉

ஏறாவூர்🌻 IBYO🌻இமாம் பூசிரி இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடைபெற்று வரும் புனித 💐பத்ருஸ் ஸஹாபா மௌலித் மனாகிப் மஜ்லிஸ் மற்றும் துஆ பிரார்த்தனையும், விஷேட மார்க்க சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்💐). இம்முறையும்    ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ஹனீபா ஆலிம் பள்ளிவாயலில்

29/03/2024 சங்கைக்குரிய உலமாக்கள் மத்ரஸா மாணவர்கள் தரீக்கா சகோதரர்களின் பங்களிப்புடன்

மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தியவர் 👉 கண்ணியமிக்க மௌலவி அன்வர் (BA,மன்பயி,பாஸில் தகாபி)அவர்கள். சிரேஸ்ட்ட உஸ்தாத் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரி ஏறாவூர்.


இறுதியாக ஹனீபா ஆலிம் மஸ்ஜித் பேஸ் இமாம் சங்கைக்குரிய மெளலவி யஹ்யா கெளதி அவர்களின் துஆ பிரார்தனையுடன் ஸலவாத்துடன்  மஜ்லிஸ் நிறைவு  பெற்றது. 


கலந்து கொண்ட எல்லோருக்கும் இப்தார் நிகழ்வு மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது. 


இந்நிகழ்வுக்கு உதவிகள் செய்த அத்துனை உள்ளங்களுக்கும் இமாம் பூசீரி இளைஞர் அமைப்பு  சாா்பாக ஜஸகல்லாஹு ஹைரா
















முழு வீடியோவைப் பார்வையிட 



பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.


 பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.


- அ. நௌஷாத் அலீ பாகவீ.


ஷாஃபியீ மத்ஹபின் சட்டமேதைகள் சிலர்… "அவ்வாறு பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத்" என்று சொல்கின்றனர். 


அரபுலக அறிஞர்களால் கூட ஆதரிக்கப்பட்ட வளைகுடா நாடுகளிலும் கூட அச்சடிக்கப்படுகிற நூலான ஃபத்ஹுல் முஈன் மற்றும் இஆனத்துத் தாலிபீன் நூல்களில் உள்ள வாசகமாவது: 

"وتسنّ الصلاة على النبي صلى الله عليه وسلم قبلهما : أي الأذان والإقامة"

"பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத் ஆகும்".


முக்கிய நபிமொழி நூல்களில் ஒன்றான தப்ரானியில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிற நபிமொழியொன்று இப்படி வருகிறது:


[عن أبي هريرة رضي الله عنه] كان بلالٌ إذا أرادَ أنْ يُقِيمَ الصلاةَ قال السلامُ عليْكَ أيُّها النبيُّ ورحمَةُ اللهِ وبَرَكاتُهُ الصلاةُ رَحِمَكَ اللهُ

"பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இகாமத் சொல்ல நாடினால் 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாத்து ரஹிமகல்லாஹ்' என்று (ஸலாத்தும் ஸலாமும்) சொல்வார்கள்"

الهيثمي (ت ٨٠٧)، مجمع الزوائد ٢‏/٧٨ • أخرجه الطبراني في «المعجم الأوسط» (٨٩١٠)


ஆனாலும் வழக்கம் போல் அல்பானீ போன்ற சவூதிய அறிஞர்கள் இந்நபிமொழியை ளஈஃப் முத்திரை குத்தி பலவீனப்படுத்துகிறார்கள். ளஈஃப் முத்திரையோடு ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இச்செயலை பித்அத் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். 


இந்த ஹதீஸ் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்தாலும், பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படி சொன்னதற்குக் காரணம், பள்ளியை ஒட்டியே இருந்த நபியவர்களின் அறைக்குச் சென்று இகாமத் சொல்ல அனுமதி பெறுவதற்காக இருக்கலாமென்றும் அல்லது நபியவர்களுக்கு இகாமத் கேட்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் கூட இருக்கலாமல்லவா? என அசடு வழியும் சப்பைக் காரணங்களை சொல்கிறார்கள்.


இக்கேள்விக்கு ஷாஃபியீ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 'அல்ஃபfத்தாவல் ஃபிfக்ஹிய்யத்துல் குப்ரா' எனும் நூலில் ஃபத்வா தந்துள்ளார்கள்: 


"இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று சொல்பவர்களை நான் பார்க்கவில்லை. 


பாங்கைப் போலவே இகாமத்துக்குப் பின்னரும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று தான் நம் இமாம்கள் சொல்கிறார்கள். அதற்குப் பிறகு 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தி...' என்ற பாங்கு துஆவை ஓதலாம். 


ஆனால், பாங்கு இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதை இடையூறு செய்யும்படியாக எந்த நபிமொழியிலும் நான் பார்க்கவில்லை. நம் இமாம்கள் பேச்சுகளிலும் அப்படி இடையூறு இருந்து நான் பார்த்ததில்லை. 


இது போன்ற நேரங்களில், பாங்குக்கும், இகாமத்துக்கும் முன்னர் அவ்விரண்டும் ஸுன்னத் இல்லை தான். அவ்விரண்டும் ஸுன்னத் என்ற நம்பிக்கையில் ஒருவர் இதைச் செய்யும் போது அது தடுக்கப்படும். காரணம், ஆதாரமே இல்லாத ஒன்றை ஷரீஅத்தாக ஆக்கிய குற்றம் ஏற்படும். ஆதாரமில்லாத ஒன்றை ஷரீஅத்தாக்குவன் தண்டிக்கப்படுவான். அச்செயல் தடை செய்யப்படும்" 


سئل ابن حجر الهيتمي في "الفتاوى الفقهية الكبرى" :


" هل نص أحد على استحباب الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم أول الإقامة ؟


فأجاب :

لم أر من قال بندب الصلاة والسلام أول الإقامة ، وإنما الذي ذكره أئمتنا أنهما سنتان عقب الإقامة كالأذان ، ثم بعدهما : اللهم رب هذه الدعوة التامة ...( ثم ذكر الآثار السابقة عن الحسن البصري وغيره ) " انتهى 


وقال أيضا في (1/131) :

" لم نر في شيء منها – يعني الأحاديث - التعرض للصلاة عليه – صلى الله عليه وسلم - قبل الأذان ، ولا إلى محمد رسول الله بعده ، ولم نر أيضا في كلام أئمتنا تعرضا لذلك أيضا ، فحينئذ كل واحد من هذين ليس بسنة في محله المذكور فيه ، فمن أتى بواحد منهما في ذلك معتقدا سنيته في ذلك المحل المخصوص نُهي عنه ومنع منه ؛ لأنه تشريع بغير دليل ، ومن شرَّع بلا دليل يزجر عن ذلك ويُنهى عنه " انتهى


ஆக மொத்தம், நம் இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்துப் பிரகாரம் "இது ஸுன்னத்தும் இல்லை. பித்அத்தும் இல்லை. காரணம் நபிமொழிகளில் அதற்குத் தடை இல்லை" என்று கூறியிருக்க,


நம் மதரஸாக்களில் மிகுந்த மதிப்பு கொடுத்து ஓதித்தரப்படும் கிதாபுகளில் ஒன்றான ஃபத்ஹுல் முஈன் உடைய ஆசிரியரும், கேரள சட்ட வல்லுநருமான பொன்னானி ஜைனுத்தீன் மக்தூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "இது ஸுன்னத்" என்று கூறியிருக்க,


வஹ்ஹாபிகளின் இமாமான அல்பானி போன்றோரின் 'பித்அத்' முத்திரையை டேஷாக கூட மதிக்கமாட்டோம். 


நம் இமாம்கள் காட்டித் தந்த வழியில் ஒரு ஊரில் பாங்குக்கு முன்னர் ஸலவாத்து ஓதும் பழக்கம் இருக்குமேயானால் அதைத் தடை செய்ய எந்த அல்பானி வகையறாக்களுக்கும் உரிமையில்லை. 


குறிப்பு: சில ஊர்களில் இதை கடுமையாக வஹ்ஹாபிகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்குவதாக வந்ததையடுத்து இச்சிறு கட்டுரை இந்நேரத்தில் பதிவிடப்படுகிறது.

Thursday 21 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470


 #வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#ஷஹர் #சிந்தனை -10

------------------------------------------


அல்லாஹ் விரும்பும் ஸலாம்!


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ، أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ، وَلاَ نَصَبَ


(ஒரு முறை) நபி(ﷺ) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.


அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

 நூல் : புகாரி-3820


வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் ஸலாம்!


وفي الصحيحين:- عن عائشة رضي الله عنها قالت: (قال لي رسول الله صلى الله عليه وسلم:- هذا جبريل يقرأ عليك السلام – أي: يسلم عليك – قالت: قلت: وعليه السلام ورحمة الله وبركاته، وقالت: ترى ما لا نراه) أي: أنك ترى الذي لا أراه


وهو جبريل عليه السلام.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ﷺ) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம்,“(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்மத் துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களின்


துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு நாள் என்னிடம்)“ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன். நான்


பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )


நபி (ﷺ) அவர்கள் முந்தி ஸலாம் சொல்லும் பழக்கம் உடையவர்களாக


جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:“ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ﷺ} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் 

வருகை தந்திருக்கின்றார்கள். 


அப்போது, நபி {ﷺ} அவர்கள்“அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் 

வரவைத்தது” என்று பதில் கூறினார்கள்.


சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ﷺ} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் 

“அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்” என்று கூறினார்கள்.


கொஞ்ச நேரம் அண்ணலார் {ﷺ} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி –அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடி விட்டு “தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.


நபி {ﷺ} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.


மாநபி {ﷺ} அவர்கள், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி - அன்ஹுமா) இருவரையும் முந்திக்கொண்டு ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை . 


இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி{ﷺ} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது,“வஅலைக்குமுஸ்ஸலாம்… யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்கள் குரல் கொடுத்தார்கள்.உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ﷺ} அவர்கள் கேட்டார்கள்.


அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? 

தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம்நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது 

தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.


நபி {ﷺ} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வின வினார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” உம்மு ஸஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ﷺ} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வர வேற்றார்கள்.


உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது” என்றுகூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.


மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) 

அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.


அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் “போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ﷺ} 

அவர்கள் “இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்” இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.


அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! 

சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.


மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். 

சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ﷺ} அவர்களின் முன் கொண்டுவைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.


கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால்முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! 

எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.


அதற்கு, நபி {ﷺ} அவர்கள் “நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் 

நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் 

வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! 

வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்”என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.


பிள்ளைகளை பெற்றோர் காணும்போதும் எழுந்து நின்று ஸலாம் கூறி வரவேற்கவும் வேண்டும். இதுசுன்னத்தான ஒரு நற்பண்பாகும்.


 كانت إذا دخلت عليه

قام إليها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه، وكان إذا دخل عليها قامت إليه

فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها                                                                       


ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடம் ஃபாத்திமா ரலிஅவர்கள் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து அவர்களின் கரத்தைப் பற்றி,அவர்களுக்கு அன்பு முத்தம் கொடுத்து தன் சபையில் அவர்களை அமர்த்திவைப்பார்கள். ஃபாத்திமாரலி அன்ஹா அவர்களிடம் நபிகள் நாயகம்வந்தால் (தந்தையின்) திருக்கரத்தைப் பற்றி தந்தைக்கு அன்பு முத்தம் சொரிந்து தன் சபையில் (மகள்) ஃபாத்திமா (ரலி)அமரச்செய்வார்கள்.. ( நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸாயீ 


வீட்டில் நுழைந்ததும் முதலில் ஸலாம் சொல்வோம்!


عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ #ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.

رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢


மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்” என்று ரஸூலுல்லாஹி (#ﷺ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ( நூல்: இப்னு ஹிப்பான்

Tuesday 19 March 2024

ஸஹீஹான ஹதீஸ்

 

உண்மையில் ஸஹீஹ் என்று கூறப்படும் ஹதீஸ்தான் பின்பற்றப்படுகிறதா? 


இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் பலவீனமான செய்திகளே உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.


அறிவிப்பு : 1


மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.


1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ


நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல் : முஅத்தா (1395)


இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.


அறிவிப்பு : 2


இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது.


جامع بيان العلم وفضله – مؤسسة الريان – (2 / 55(724- حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: “تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم”.


அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)


இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.


இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.

உண்மைச் சம்பவம்

 

அருமையான ஒரு சம்பவம் படியுங்கள்.


அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை.


ஒரு ரமளான் ஈத் பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..


விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித குர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..


நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...


உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித குர்ஆன். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...


முதலாமவர் தயங்கியவாறே ஷேக்கிடம் சொன்னார்... முதலாளி, புனித குர்ஆனை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...


அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...


இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...


கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...


அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், 

...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...


தினசரி, அதிகாலை தொழுகைக்கு பிறகும், மாலையில் அந்தி சாயும் நேரத்து தொழுகைக்கு பிறகும் என் அம்மா குர்ஆன் ஓதி அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...


 என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு..... நான் இந்த புனித குர்ஆனையே தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....


சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,


 புனித குர்ஆன் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்...

......ஆச்சர்யம்


குர்ஆன் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்... யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....


அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...


செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...


மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...


வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்..... இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத "இறை நம்பிக்கை என்ற செல்வம்" மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா....


பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Saturday 2 March 2024

ஆற்றங்கரை மஸ்ஜித் ஏறாவூர்

 

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை


ஆற்றங்கரைப்பள்ளி ௨௫வான

௨ரசல்.


எமது ஊரின் ஆதி மஸ்ஜித்கள் இரண்டு


எனது ஊரின் முதல் மஸ்ஜித் ஓட்டுப் பள்ளி வாயிலாகும். இரண்டாவது ஆற்றங்கரைப் பள்ளிவாயில் கட்டப்பட்டது.


அந்தக் காலத்தில் ஓட்டுப்பள்ளியில் இரண்டு ஆதிக்கமுள்ள போட்டிக் குழுக்கள் இயங்கிவந்தன. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதுதான் வழக்கம். ஒரு நாள் ஒரு வக்து தொழுகையின் போது போட்டிக் குழு ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்கு முன் வரிசையில் நின்று தொழும் வாய்ப்புக் கிட்டவில்லை.அன்று முந்தி வந்தோரால் முன்வரிசை நிரம்பியிருந்தது.கொஞ்சம் பிந்தி வந்து ஜமாஅத்தில் இணைந்து கொண்ட அந்த மாற்றுக்குழு முக்கியஸ்தர் முன் வரிசையில் நின்ற போட்டிக் குழு முக்கியஸ்தருக்குச் சரியாகப் பின்னால் இரண்டாம் வரிசையில் ஒரு நோக்கத்தோடு போய் நின்று தொழத் தொடங்கினார். 


அல்லாஹு அக்பர் தக்பீர் கட்டியாயிற்று,

அல்லாஹு அக்பர் நிலையில் இருந்து ருக்கூவுக்குச் சென்றனர். சமியல்லாஹு லிமன் ஹமிதா மீண்டும் நிலைநிற்றல், அல்லா ஆஆ..ஹு அக்பர் சுஜூதுக்குச் சென்றனர்.அல்லாஹு அக்பர் முதல் இருப்புக்கு நிமிர்ந்த போது பின்னால் நின்ற பிரமுகர் முன்னால் நின்ற பிரமுகரின் பிஷ்டத்தில் வேண்டுமென்றே தனது தலையால் முட்டினார். இந்த முட்டல் நான்கு ரக்கஅத்துகளுக்கும் எட்டு முறை தவறாமல் நடந்தது. தனக்கு முன் வரிசையில் இடம் கிடைக்கவில்லை என்பது அந்தப் பிரமுகரை இவ்வளவு பெரிய வக்கிரத்துக்குள் தள்ளியது. தொழும் போது யாரென்று திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் யார் தனது பின்புறம் தலையால் முட்டுவது என்பதைப் பார்க்க முடியாத திண்ணாட்டத்தோடு தொழுது கொண்டிருந்த பிரமுகர் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ் என்று தொழுகை முடிகிற சலாத்தை இமாம் வலம் இடமாகத் திரும்பி இரண்டு முறை மொழிந்ததும், சடாரென்று பின்னால் திரும்பிப் பார்த்த முன் வரிசைப் பிரமுகர் தனது குண்டியில் தாக்கிய பிரமுகரை அடையாளம் கண்டு கொண்டார் .அவர் தஸ்பீஹ் செய்யவோ, திக்ரில் ஈடுபடவோ துஆ ஓதவோ இராமல் ஒரு கறுவுதல் பார்வையோடும், தீர்க்கமான ஒரு முடிவோடும் வெளியில் செல்ல எழுந்தார்.


இந்தச் சம்பவத்தின் பின்னர் இவரும் இவரது நண்பர்களும் ஒட்டுப் பள்ளிக்குத் தொழுவதற்காகச் செல்லவில்லை.


முட்டப்பட்ட குழுவால் ஓட்டுப்பள்ளிக்கு அண்மையிலேயே ஆற்றங்கரை ஓரத்தில் வயல் வெளியில் ௨௫வானது.


தொட௫ம்  

சொல்ல மறந்த கதை

Link

Friday 1 March 2024

இப்னு தைமிய்யாஹ்


 💥அவசியம் வாசிக்கவும்👇


😡இப்னு தைமிய்யாவும் அவரின் வழிகேட்டால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதும்


முஸ்லிம்களின் கொள்கை குழப்பத்திற்கும் , பல முஸ்லிம்கள் வழிகேடர்களானதற்கும் பெரும் காரணியாக இருந்தவன் இப்னு தைமிய்யாவாகும்.  


அன்றைய இஸ்லாமிய சமூகம் இப்னு தைமிய்யாவின் அனைத்து விதமான வழிகேடான கருத்துக்கும் தக்க பதிலடி வழங்கி இப்னு தைமிய்யாவின் நவீன சிந்தனைகளை ஆதாரத்துடன் முடக்கினர்.  


தொடர்ந்தும் இப்னு தைமிய்யாவின் நச்சுக்கருத்துகள் வெளிவர இப்னு தைமிய்யா சிறைக்கைதியாக்கப்பட்டார். 


இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளும், காரணங்களும்


1) ஹிஜ்ரி 693 இல் திமஷ்கில் முதலாவதாக இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டு  சிறிது காலத்தின் பின் விடுவிக்கப்படார்.


2) இரண்டாவதாக கெய்ரோவில் உள்ள  புர்ஜ் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு ஜுப் எனும் சிறைக்கு மாற்றப்பட்டார். இதில் ஹிஜ்ரி 705 றமழான் பிறை 9 தொடக்கம் ஹிஜ்ரி 707 ரபீஉல் அவ்வல் பிறை 23 வரை சுமார்  ஒன்றரை வருடகாலமாகும்.


இச்சிறை  தண்டனைக்கான காரணம் , அல்லாஹ்வை படைப்பினங்களோடு உவமை செய்யும் சடவாதக் கொள்கை பேசியமையும், அல்லாஹ் அர்ஷில் தரிபட்டுள்ளான் என்ற குப்ரான கருத்தை வெளியிட்டமையும், அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கிவருகிறான் என்ற நச்சுக்கருத்துக்களை போதித்தமையுமாகும்.


பார்க்க:  இப்னு கதீரின் அல் பிதாயா வன்னிஹாயா ( ஹிஜ்ரி 705 இல் நடைபெற்றவைகள் என்ற தலைப்பில்) 


3) மூன்றாவது தடவையாக மீண்டும் எகிப்திலேதான் இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டான். ஹிஜ்ரி 707, 10 மாதம் பிறை 3 தொடக்கம் அதே மாதம் பிறை 18 வரை சுமார் 2 வார காலம் இச்சிறைக்காலம் காணப்பட்டது. 


இச்சிறை தண்டனைக்கான காரணம் " இஸ்திகாஸா" பற்றிய குர்ஆன் சுன்னாவுக்கு முற்றிலும் முரண்படும் கருத்தை கொண்ட நூலை வெளியிட்டமையாகும். 


4) நான்காவதாக மீண்டும் எகிப்திலேதான் சிறைப்பிடிக்கப்பட்டார்.


 இச்சிறைக்காலம் ஹிஜ்ரி 707 இன் ஷவ்வால் மாத இறுதுயிலிருந்து 708 இன் தொடக்கம் வரை சுமார் இரண்டு மாதங்களை விட சற்று அதிகமாக இருந்தது.  


5) ஐந்தாவதாக அலெக்ஸான்ரியாவில் இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்டான். சுமார் 7 மாதங்களாக ஹிஜ்ரி 709/03/01 தொடக்கம் 709/10/08 வரை சிறையிலிருந்தார். 


6) ஆறாவதாக திமஷ்கில் ஹிஜ்ரி 712/ 07/02 தொடக்கம் 721/01/10 வரை சுமார் 6 மாதம் சிறையில் வைக்கப்பட்டார். 


சிறைக்கான காரணம் தலாக்கை கொண்டு சத்தியம் செய்தல் என்ற மஸ்அலாவில் பிழையான பத்வா வழங்கியமை.


7) ஏழாவது தடவையாக ஹிஜ்ரி 726 , எட்டாம் மாதம் பிறை 6 திங்கட்கிழமை தொடக்கம்  ஹிஜ்ரி 728 ,  பதினொராம் மாதம் பிறை 20 திங்கள் இரவு வரை சிறையில் வைக்கப்பட்ட இப்னு தைமிய்யா,  அன்று சிறையின் உள்ளேயே மரணித்து அன்றைய தினம் மையித்தாகவே சிறையை விட்டும் வெளிக்கொணரப்பட்டான். கடைசி தடவையான இச்சிறைதண்டனை சுமார் 2 வருடமும் மூன்றரை மாதமுமாகும். 


இச்சிறை தண்டனைக்கான காரணம்  நபி முஹம்மத் عليه السلام அவர்களின் புனித கப்றை தரிசிக்க பயணம் மேற்கொள்வதை நிராகரித்தமையும், அப்பயணம் பாவமானதும்,  அப்பயணத்தின் போது தொழுகையை சுருக்க முடியாது அது ஹறாம் என முட்டாள்தனமான பத்வா வழங்கியமை யாகும்.  


மொத்தமாக இப்னு தைமிய்யா தனது வழிகேடான கருத்துகளின் காரணமாக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 


ஏன் இப்னு தைமிய்யா இவ்வாறான குப்ரிய்யத்களை கொண்டவனாக இருந்தும் கொல்லப்படவில்லை? ? என்ற சந்தேகம் எழலாம்.   


அதற்கான காரணம் என்னவெனில் ஒவ்வொரு முறையும் வழிகேடான கருத்துகளை வெளியிட்டு சிறையிலடைக்கப்படும் இப்னு தைமிய்யா, சிறைக்குள்ளே தன் வழிகேடான கருத்திலிருந்து வாபஸ் பெறுவதாக கலீபாவுக்கு முன்னிலையில் ஷஹாதஹ் கலிமா கூறி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்றுக் கொண்டு கலீபாவும் அவரை விடுதலை செய்வார். 


வெளியில் வரும் இப்னு தைமிய்யா மீண்டும் குப்ரிய்யத்தான கருத்தை வெளியிடுவார். மீண்டும் சிறைபிடிக்கப்படுவார். இவ்வாறே நிலைமை காணப்பட்டது. 


நபி பெருமானாரின் عليه السلام சங்கையான முடிகளை, ஆடைகளை கொண்டு பறகத் பெறுவதை ஹறாமாக்கும் இப்னு தைமிய்யாவின் வழித்தோன்றல்கள் இப்னு தைமிய்யாவின் உடலை கழுகிய தண்ணீரைக் கொண்டு பறக்கத் தேடியதாக நம்பத்தகுந்த ஆதாரப்பதிவுகளும் உள்ளன.  


வழிகேடன் இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை இன்றும் சிலர் நம்பிக்கை கொண்டுவருகின்றனர். அவர்களே வஹ்ஹாபிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். 


இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை ஆதாரங்களை வைத்து தகர்த்த இஸ்லாமிய பேரறிஞர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!