السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 30 September 2019

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹ்

வாழும் கவிஞன் மௌலானா ரூமி
வாழும் கவிஞன் மௌலானா ரூமி - 812ஆவது பிறந்த தினம்

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் பிறந்த 812வது ஆண்டு  இன்று  கொண்டாடப்படுகிறது.  படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும், ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி கவி வரிகள் மூலம் எடுத்துரைத்தவர்; அன்பே மனிதம் என்றார் ரூமி.

அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் கவிதை நூல்களில் மௌலானா ரூமியின் கவிதைத் தொகுப்புக்களே முதல் இடத்தில் உள்ளதாக BBC உலகசேவை மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் பிறந்த மௌலானா ரூமி அவர்கள்; மௌலானா ரூமி அவர்களின் வாழ்வில் பரீதுத்தீன் அத்தார் அவர்களின் செல்வாக்கு அதிகம் அதனால் தான் ஓர் இடத்தில் " அத்தார் காதல் எனும் ஏழு நகரங்களில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது நானோ ஒரு வீதியில் மாத்திரம் அலைந்துகொண்டிருந்தேன்" என்று மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் கூறுகிறார்கள்.

மௌலானா ரூமி செய்யிதினா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் குடும்பவாரிசாவார்கள்.
ஷம்சே தப்ரீஸ் அவர்கள் மீது மௌலானா ரூமி அவர்கள் வைத்திருந்த நேசம் அலாதியானது.
அதனாலேய பிற்காலத்தில்  அவர்களுக்கு மறைந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது
(கொல்லப்பட்டார்கள் என்ற கருத்து வரலாற்று ரீதியாக உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தப்ரீஸி திடீரென்று மறைந்துவிட்டார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்)

மன்னிப்பும் அன்பும் ரூமியின் இரு கண்களாக கருதப்படுகினறன. "மன்னிப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். அழகிய மலர் கசக்கப்படும் போது வெளியாகும் நறுமணத்தைப் போன்றது என்றேன்" என்கிறார்கள். மௌலவியா சூபி வழியமைப்பு தர்வீஷ் நடனம் போன்றவை ரூமி சிந்திய முத்துக்கள்.

சூபி என்றால் யார் என கேட்டான் " முஹம்மது நபி ஸல்லாஹூஅலைஹிவஸல்லம் மீது தொங்கிக்கொண்டிருக்கும் அபூபக்ரை போல" என்றேன் என ரூமி பதிலளித்தார்.

 பேராசிரியர் எட்வட் ப்றவுன் கலாநிதி ஆன் மேரி சீம்மெல் சேர் அல்லாமா இக்பால், கலாநிதி ஓமைத் ஷாபி, பேராசிரியர் செய்யித் ஹூஸைன் நஸ்ர் போன்றவர்கள்கள் ரூமி கற்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

மௌலானா ரூமி அவர்களின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் மஸ்னவியின் எழுத்துக்கள் ஆழமான சுவை கொண்டவை. அறிஞர் ஆர்.பி. எம் கனி, முஹம்மத் மஹ்ரூப் (Mohamed Mahroof) , நாகூர் ரூமி (Nagore Rumi), பேராசிரியர் ரமீஸ் பிலாலி (Rameez Bilali) ,நாரியம்பட்டு ஸலாம், மௌலவி அபூதாஹிர் மஹ்ழரி, ஆகியோரின் எழுத்துக்கள் அற்புதமானவை.

மௌலானா ரூமி அவர்கள் அடங்கியிருக்கும் துருக்கியின் கொன்யா நகரம் World Heritage City ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
சிக்காகோ யேல் தெஹ்ரான் உட்பட பல பல்கலைக்கழகங்கள் ரூமி கற்கைக்கான இருக்கைகளை அமைத்திருக்கின்றன.
புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர் லியர்னாடோ டி காப்ரியோ விரைவில் மௌலானா ரூமியின் பாத்திரம் ஏற்று திரைப்படத்தில் நடக்கவுள்ளார். ரூமி காதலித்தார் அதனால் இன்று காதலிக்கப்படுறர்கள்
"நான் மரணித்துவிட்டால் என்னை என் அடக்கஸ்தலத்தில் தேட வேண்டாம் நான் மனிதர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பேன்" என்றார்கள் அதனால் தான் நான் ஆரம்பித்திலேயே ரூமியை வாழும் கவிஞன் என்றேன்.

மல்கம்பிட்டி சியாரத்தில் புணித கொடி ஏற்றம்










                              அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹித்தாலா வபரஹாத்தஹூ.
  

        🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

அம்பாறை மாவட்டம்- சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்ஹாவில் இறைநேசர்களான, 

சிக்கந்தர் வலிய்யுல்லாஹ் கலந்தர் வலிய்யுல்லாஹ் ஆகியோர்களின் நினைவிலான கொடியேற்றம் [30-09-2019] இன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து வெகு விமர்சையாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

Friday 27 September 2019

மனிதநேயம்

மனிதநேயம்
மற்ற  பிற படைப்ப்பினங்களுக்கும் மனிதவர்கத்துக்கும் உள்ள வேறுபாடாக, ஆறாம் அறிவை கொடுத்துள்ளான் என்பதாக அறிஞர்கள் கூறுவார்கள். அது நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் அறிவு. இந்த பகுத்தறிவை பயன்படுத்துவதில் தான் மனிதநேயம் வாழ்கிறது.

அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் :


هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(55:60)


وروى أنس أن النبي صلى الله عليه وسلم قرأ هل جزاء الإحسان إلا الإحسان ثم قال : هل تدرون ماذا قال ربكم ؟ قالوا : الله ورسوله أعلم ، قال : يقول ما جزاء من أنعمت عليه بالتوحيد إلا الجنة .

 وروى ابن عباس أن النبي صلى الله عليه وسلم قرأ هذه الآية فقال : يقول الله هل جزاء من أنعمت عليه بمعرفتي وتوحيدي إلا أن أسكنه جنتي وحظيرة قدسي برحمتي


இதனை நிஃமத்துகளையும் நமக்கு கொடுத்த அல்லலாஹு தாலாவிற்கு நாம் செய்யும் கைம்மாறு ரன்ன என்பதை தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு ஹதீஸே இஹ்ஸான் மூலமாக நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள் .

عن عُمَر بْنُ الْخَطَّابِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعَرِ لَا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنْ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا قَالَ صَدَقْتَ قَالَ فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ قَالَ فَأَخْبِرْنِي عَنْ الْإِيمَانِ قَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ قَالَ صَدَقْتَ

قَالَ فَأَخْبِرْنِي عَنْ الْإِحْسَانِ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ

قَالَ فَأَخْبِرْنِي عَنْ السَّاعَةِ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ قَالَ فَأَخْبِرْنِي عَنْ أَمَارَتِهَا قَالَ أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ قَالَ ثُمَّ انْطَلَقَ فَلَبِثْتُ مَلِيًّا ثُمَّ قَالَ لِي يَا عُمَرُ أَتَدْرِي مَنْ السَّائِلُ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ ))

[ مسلم، الترمذي، أحمد، النسائي، أبو داود، ابن ماجة ]


 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)" என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்.

எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கைம்மாறு என்பதனை இதன் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் வழியாக  நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனை பின்பற்றி தொடர்ந்து செய்கின்றோம் என்பதனை நமக்கு நாமே எழுப்பிக்கொள்ள வேண்டியதொரு கேள்வி. 

ஆக, இது நான் இறைவனுக்கு செய்யவேண்டியது.


மனிதநேயம் என்பது நம்முடைய இந்த வாழ்வில் பல்வேறு வகையாக பிரிக்கலாம். ஆனால், அதன் அனைத்து பரிமாணங்களிலும் நம் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

தாய் தந்தைக்குரியது :
 الإحسان في التعامل مع الوالدين: يكون ببرّ الوالدان وطاعتهما، وعدم التأفّف بوجههما، ومعاملتهما برحمةٍ عند كبرهما.

ஏழை மற்றும் அனாதைகளுக்குரியது
الإحسان لليتامى والمساكين: من مظاهر الإحسان ليتامى والمساكين العمل على تربيتهم، والمحافظة على حقوقهم، ومدّ يد العون لهم في كلّ الأوقات، والبر بهم، فالإحسان للمسكين واليتيم تذهب قسوة القلب لقوله صلّى الله عليه وسلّم: (امسح رأس اليتيم، وأطعم المسكين) [صحيح الجامع].


வியாபாரத்தில்  மனிதநேயம் :
 الإحسان في التعاملات التجارية: أمرنا الله سبحانه وتعالى بالإحسان في المعاملات التجاريّة، فهي طريق للسعادة والنجاة، كاستيفاء الثمن فمن الإحسان المسامحة، أو الإمهال، والتيسير، أو التسهيل في طلب الدين، وسلامة رأس المال.

பேசும் பேச்சில் மனிதநேயம்  :

 الإحسان في الكلام: يكون بالكلام الحسن والكلمة الطيّبة،

 لقوله تعالى: (وَقُلْ لِعبادِي يَقولوا التي هِيَ أحسنُ إنّ الشيْطانَ يَنزَغُ بَيْنَهمْ إنّ الشيْطانَ كانَ لِلإنسانِ عَدُوّاً مُبيناً) [الإسراء: 53]

வாயற்ற ஜீவன்களிடத்தில் மனிதநேயம் :

. الإحسان في التعامل مع الحيوان: حثّ الدين الإسلامي وسائر الأديان على الاهتمام بالحيوان والرفق به، وإطعامه وعدم تعذيبه، وعدم تحميله فوق طاقته من عمل.


இப்படி  நம்முடைய வாழ்வில் மனிதநேயத்துடன் வாழ்வது  நம்முடைய மார்க்கம் நமக்கு நன்மைகளை தரும் வழியை நமக்கு வகுத்துத்தருகிறது. எந்த வகையிலும் நமக்கு மனிதநேயத்தையே இஸ்லாம் போதிக்கிறது.

கந்தூரி நிகழ்வு

  ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ் சியாரத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 28 /09/2019 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க உலமாக்களினால் குர்ஆன் ஓதப்பட்டு மற்றும் புர்தா மஜ்லிஸும் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க மெளலவி அன்வர் BA மன்பயீ தகாபி அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் இஷா தொழுகையினைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் . ஆகவே அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்பாட்டுக் குழுவினர். 



Wednesday 25 September 2019

போட்டிகளில் முதலாமிடம்

போட்டிகளில் முதலாமிடம்
Monday, September 23, 2019
கவிஞர் இஸ்மத் பாத்திமா 9 போட்டிகளில் முதலாமிடம்...

கலை  இலக்கிய திறந்த மட்ட நிகழ்வுகள் ஒன்பதில் முதலாம் இடம் பெற்று  கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா சாதனை படைத்துள்ளார்.

மத்திய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை  இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2019 இல் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில் பஸ்யாலயைச் சேர்ந்த கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஆங்கிலம் தமிழ் என இரு  மொழிகளிலும் பங்கு பற்றி ஒன்பது நிகழ்வுகளில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.

இலங்கை  அதிபர் சேவை தரம் 02 இல் பதவி வகிக்கும் இவர் கல்லெலிய அலிகார் முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதி அதிபராவார். இள வயது முதல் எழுத்து துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் 2017ம் ஆண்டு "இரண்டும் ஒன்று" என்ற தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகமெங்கும் பெயர் பதித்தது மட்டுமல்லாமல்  "புதையல் தேடி" என்ற கவிதை நூலை மிக விரைவில் வெளியிட உள்ளார். தமிழ் மொழி மூலம் கவிதை பாடலாக்கம், நூல் விமர்சனம், சிறுவர் கதை, சிறுகதை போட்டிகளிலும் ஆங்கில மொழி மூலம் கவிதைபாடலாக்கம், நூல் விமர்சனம்,சிறுவர் கதை ஆகிய போட்டிகளில் இவர் வெற்றியீட்டியுள்ளார். 

சமூக அவலம், பெண்ணியம், சர்வதேச பார்வை என்பன இவரது கவிதைகளில் காணக்கூடியதாக இருப்பதோடு தனது எழுத்தாண்மையினால் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பேசக்கூடிய ஒருவராகவும் மாறியுள்ளார். அவர் பங்கு பற்றி வெற்றி பெற்ற போட்டிகளின் விபரம் வருமாறு:

தமிழ் மொழி
--------------------
கவிதை
பாடலாக்கம்
நூல் விமர்சனம்
சிறுவர் கதை
சிறுகதை

ஆங்கில மொழி
-------------------------
கவிதை
பாடலாக்கம்
நூல் விமர்சனம்
சிறுவர் கதை

Monday 23 September 2019

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

மகுட வாசகம்
நன்மை என்பது நற்குணம்

தூரநோக்கு
இஸ்லாமிய ஆளுமையும் நற்பண்பும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூக உருவாக்கம்

பணிக்கூற்று
கிடைக்கின்ற வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி,நல்லோர்களின் வழிநின்று,அன்பு,தியாகம், வீரம்,பணிவுபோன்ற அறப்பண்புகள் நிறைந்த தற்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திகண்ட அஹ்லுஸ் ஸன்னத் வல்- ஜமாஅத் ஆலிம்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்குதல் 




ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah

eravur hasaniyyah


video 01

video 2