السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 30 November 2015

தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 04




தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மணரமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுகளை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.
சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு முக்கிய பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.
அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான நம்பிக்கையில்  பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார். 

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.
இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாளர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 

(யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. 
தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.
தொடரும்.........

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 03

 முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?


முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மரணமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இது இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.

சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார்.

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.

இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாலர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

தொடரும்.........

Tuesday 24 November 2015

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 02

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 02
தேவபந்த் ஜமாஅத்தின் பிரபலமான அறிஜர்களில் ஒருவரான மௌலவி முனாளிர் அஹ்சன் கைலாணி, சவாநிஹ் காசிமி என்ற பெயரில் மௌலானா காசிம் நாநூதவியின் வாழ்க்கை சரிதையை எழுதினார். அதனை தாருல் உலூம் தேவபந்த் அச்சிட்டு பிரசுரம் செய்தது. அதில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் தகவல் அதில் பதிவு சைய்யப்பட்டுள்ளது.
ஒரு தடவை பஞ்சாப் மாநிலத்தில் உள்ளதொரு பகுதிக்கு தேவபந்த் ஆலிம் ஒருவர் சென்றிருந்தார். அவ்வூர் மக்கள் அவரை பள்ளியில் இமாமாக நியமித்தனர். இவ்வாறு சிறப்பாக வாழ்ந்துவரும் சந்தர்பத்தில் அப்பகுதிக்கு மௌலவி ஒருவர் வந்து மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களும் அவர் பேச்சில் கவரப்பட்டு அவரின் விசுவாசிகளாகவே மாறிவிட்டனர். இப்படியானதொரு கட்டத்தில் இவ்வூரின் பள்ளி இமாமாக யார் இருக்கிறார்? என மக்களிடம் அவர் வினவியதற்கு தேவபந்தில் கல்வி கற்றதொரு மௌலவி என மக்கள் கூறினார்கள்.

தேவபந்த் என்ற பெயரைக் கேட்டதும் கடுமையாக ஆத்திரப்பட்டு விமர்சிக்கத் துவங்கிவிட்டார். அவர் பின்னால் தொழ முடியாது. அவர் கொள்கை பிழையானது. அவர் பின்னால் தொழுத தொழுகைகளை மீட்டித் தொழ வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள். அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விரோதிகள் என்றெல்லாம்கூட சப்தமிடத் தொடங்கிவிட்டார்.
ஊர் மக்கள் பெரிதும் கவலையும் மன உளைச்சலும் அடைந்தனர். வீணாக இந்த இமாமுக்குப் பின்னால் தொழுது விட்டோமே! பணம் காசுகளை செலவு செய்துவிட்டோமே என்றெல்லாம்கூட பேசிக்கொண்டனர். இதனால்  சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இமாம் பதில் கூறவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். பெரும் கவலையும் அச்சமும் நிறைந்த நிலையில் அவரோடு விவாதிப்பதாக முடிவு செய்து காலம் இடமும் நேரம் என்பன அறிவிக்கப்பட்டது.

இருவரில் ஒருவர் கம்பீரமாகவும் நிறைய நூல்களுடனும் மேடையில் வந்தமர, மற்றவர் தனிமையில் அச்சம் பீதி நிறைந்தவராக வந்தமர்ந்தார். (அவதானிக்க வேண்டிய விடயமாகிறது,)

உரையாடல்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேவபந்த் ஆலிம் அருகில் வந்தமர்கிறார். பயப்படாதே! தைரியமாக இரு என்றார். எனக்கும் மனதில் என்னை அறியாது தைரியம் ஏற்பட்டது.
நான் பேசத் துவங்கினேன். நான் என்ன பேசுகின்றேன் என்று தெரியாமல் பேசிக்கொண்டே சென்றேன். பின்னர் கேள்வி பதிலுக்குரிய நேரம் வந்ததும் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு பிரபல பேச்சாளர் பதில் கூறினாலும் தொடர்ந்து அவரால் பதில் கூற முடியாது தடுமாறினார். திக்குமுக்காடினார். அதிர்சியில் சபையில் இருந்து எழுந்து என்னருகில் வந்து என பாதங்களில் அவர் தலையை வைத்து அழத் துவங்கி விட்டார். ஆழம் அறியாது வாய் போட்டுவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் சொல்வது பிழையானது. நீங்கள் சொல்வதுதான் உண்மையானது என்றார். சபையோர் திகைத்து நிற்கும் அதிர்சியான அந்நேரத்தில் என்னருகில் வந்தமர்ந்த அடையாளம் தெரியாத அந்நபரும் காணமல் போய்விட்டார்.

மௌலானா மஹ்மூத் ஹசன், வந்தவரின் அடையாளங்களை சொல்ல முடியுமாவென்று அவ் ஆலிமிடம் கேட்டபோது அவர் கூறிய அடையாளங்களை அவதானித்துவிட்டு, வந்தவர் வேறு யாரும் இல்லை. மௌலானா காசிம் நாநூதவி அவர்கள்தான் என்றார். அல்லாஹ்தான் அவர்களை உம்மிடம் உமக்கு உதவிட அனுப்பி வைத்துள்ளான் என்றார் மஹ்மூத் ஹசன் அவர்கள். (சவானிஹ் காசிமி பாகம் ஒன்று பக்கம் 330)

சகோதரர்களே சிந்தியுங்கள்!

மௌலவி காசிம் நாநூதவிக்கு கப்ரில் இருக்கும்போது பூமியில் நடைபெறும் நிகழ்வு தெரிந்துள்ளது. இன்ன இடத்தில் இன்ன நபர் அவதிப்படும் நிலையையும் உணர்துள்ளார். கப்ரில் இருந்து வெளியேறி மனித தோற்றத்தில் அவர் விரும்பும் இடம்சென்று பிறரின் கஷ்டங்களுக்கு உதவி செய்துள்ளாரே! இது ஷிர்க் இல்லையா? இது குப்ர் இல்லையா?

அருமை நாயகம் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருக்கிறது. கப்ரில் இருந்துகொண்டு வெளிவரும் சக்தி இருக்கிறது. பிறர்களுக்கு உதவிடும் வல்லமையை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்று நம்புவது ஷிர்க்கான குப்ரான விடயங்கள் என்றால், ஒரு நபிக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் அறிஜர்களுக்கு இருப்பதாக நம்புவதற்குப் பெயர் என்ன?

தொடரும்.....

Monday 23 November 2015

எதிரியின் எதிரி கூட்டாளி

எதிரியின் எதிரி கூட்டாளி கொள்கையில்

 முஸ்லிம் நாடுகள் 


01- ஈஸா நபியை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்.
ஈஸா நபியை யூதர்கள் வெறுக்கிறார்கள்.
ஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கு, ஈஸா நபியை வெறுக்கும் இஸ்ரேலுக்கு உதவுகின்றன, ஈஸா நபியை பின்பற்றும் (?) அமெரிக்காவும் பிரிட்டனும். எப்படி இருக்கிறது இந்த அரசியல் ?

இதே தத்துவம் தான் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும்.

இதே தத்துவம் தான் ஈரான் ஹமாஸ் கூட்டும்

2- ஈரான் சீஆ நாடு. வஹாபியத்தை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது.

எகிப்து ஸுன்னி நாடு.

மத்திய கிழக்கில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிப்பது ஈரானின் திட்டம்.

இதற்காக, தனது பகைமை இயக்கமான இக்வான், ஹமாஸ் ஆகியவற்றுக்கு ஈரான் பூரண ஆதரவளிக்கிறது எப்படியாவது ஸுன்னி எகிப்தை அழிப்பதற்கு.

3- ஈரான் சீஆ நாடு.

ஸிரியா (இப்போது) சீஆ ஆதிக்க நாடு. இரு நாடுகளும் நட்பு நாடுகள்.

ஆனால், ஸிரியாவில் சீஆ ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஹமாஸுடன் (ஸிரியாவுக்கு வெளியில்) ஈரான் நட்பு கொண்டாடுகின்றது.

4- துருக்கி வஹாபி இக்வான் சார்பு நாடு.

யெமன் ஸுன்னி நாடு.

ஆனால் யெமனை அழிக்கும் இக்வானுடன் துருக்கி (வெளியில்) நட்பு. (இது யெமன் யத்தத்துக்கு முந்தைய நிலை)

5- சீஆ சார்பு ஸிரியாவை அழிக்க ISISக்கு (தாஇஷுக்கு) ஸவூதி உதவி செய்கிறது.

எகிப்தை அழிக்கும் அதே தாஇஷை அழிக்க, ஸிஸிக்கு (எகிப்துக்கு) ஸவூதி உதவி செய்கிறது. காரணம் தாஇஷின் ஆபத்து ஸவூதிக்கு வரும் போது, எகிப்தின் உதவியைக் கோரி, தமது மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நோக்கம்.

"அல்லாஹ்வுக்காக" என்ற இக்லாஸ் இப்போது மருந்துக்கும் இல்லை !

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 01

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

தேவபந்த் ஜமாஅத்தின் இமாமுல் அவ்வல் மௌலவி இஸ்மாயில் சாஹிப், தக்வியதுல் ஈமான் எனும் நூலின் 8,10,21,26,27,25,24,58ம் பக்கங்களிலும் மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி பதாவா ரஷீதியாவின் 1:20, 2:141, 3:17,42, '"125,ம் பக்கங்களிலும் மௌலவி அஷ்ரப் அலி தானவி பெஹ்ஷ்தி சயூர் பாகம் ஒன்று பக்கம் முப்பத்திஏழு, பதாவா இம்தாதிய்யா 4:56லும் அவ்வாறே மௌலவி அப்துச்சகூர், காரி தய்யிப், மௌலவி மன்லூர் நுமானி, மௌலவி கலீல் அஹ்மத் ஆகியோரும் பிவருமாறு கூறியுள்ளார்கள்.
‘எவர் அல்லாஹ் அல்லாத இன்னுமொருவர் மறைவானவற்றை அறிவார் எனவும் நபிமார் வலிமார்கள் வருகை இடம்பெறுகிறது. அவர்களை அழைத்து உதவி தேடலாம் என்றும் கூறுவாரோ அவர் சந்தேகம் இல்லாமல் காபிராகும். அவ்வாறானதொரு நபர் இமாமத் செய்யக்கூடாது. அவருடன் நெருக்கம், அன்புடன் நடந்து கொள்வது ஹராம் ஆகும்’. (பதாவா ரஷீதிய்யா.)
இதனைப் படிக்கின்ற எந்தப் பாமரனும் நமது அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உட்பட எந்தவொரு நபிக்கும் மறைவான அறிவு அறவேயில்லை. அவர்களுக்கு எவ்விதமான ஆற்றலும் கிடையாதுன்னு நம்பிக்கை கொள்வதுடன் மேற்க்கூறிய நம்பிக்கையில் உள்ள ஒருவர் பிழையான நம்பிக்கையில் இருக்கிறார் எனவும் நம்புவார்.
இதுவே அல்லாஹ்வுக்கு உருவமும் இடமும் இருக்கின்றதென்று பிரச்சாரம் செய்யும் வஹ்ஹாபிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இதனால்தான் தப்லீக் இயக்கத்தினர்களான நீங்களெல்லாம் வஹ்ஹாபிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருக்கின்றீர்கள் என்பது நமக்குத் தெரியும்..
அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நம்பும் ஒருவரைக் காபிர் என்று தீர்ப்பளித்துள்ள மேற்க்கூறிய உலமாக்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் அவர்கள் மரணமான பின்னர் இருப்பதாக யாராவது சொன்னால்? அவரும் காபிர் என்றுதானே அர்த்தம்.
தேவபந்த் தாருல் உலூம் மதரசாவின் தலைவராக மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கல்லூரியின் ஆசிரியர்கள் மத்தியில் சிறு தகறாரு உருவானது. கல்லூரியின் அதிபர் மௌலவி மஹ்மூத் ஹசனும் இதில் இணைந்து கொண்டதால் தகறாரு நீளத் தொடங்கியது.
இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருநாள் ஸுபுஹ் தொழுகையின் பின்னர் மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் கல்லூரியில் இருக்கையில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அவரது அறைக்குள் வருமாறு அழைத்தார். அதுவொரு குளிர் காலமாகவேறு இருந்தது.
மௌலவி மஹ்மூத் அவர்கள் உள்ளே வந்ததும், எனது போர்வையைப் பாருங்கள் என்றார் அதிபர். அது முழுமையாக நனைந்து இருந்தது. அதிபர் அவர்களும்கூட வியர்வையால் நனைந்து இருப்பதைக்கண்டு அதிசயப்பட்டார். இது பற்றி அதிபர் பின்வருமாறு கூறினார்.
இப்பொழுதுதான் மௌலானா நாநூதவி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் வந்து இங்கு வந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் வியர்த்துக் கொட்டிவிட்டது. தர்கத்தில் செல்லாது இருக்குமாறு உங்களுக்கு கூறுமாறு சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதை சொல்லவே உங்களை நான் அழைத்தேன் என்றார். உடனே அதிபரின் கரம் பற்றி தௌபா சொல்லி இதன் பிறகு நான் தகராரில் இறங்கமாட்டேன் என்றும் கூறி சென்றார். நூல்: அர்வாஹே தலாசா பக்கம் 242.
தப்லீக் பிரியர்களே!
மரணமான பின்னரும் மௌலானா நாநூதவி அவர்களுக்கு கல்லூரி பற்றிய கவலை இருக்கிறது. கல்லூரியில் இடம் பெரும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருக்கிறார். யார்யார் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருப்பதற்கும் அப்பால் கப்ரில் இருந்து புறப்பட்டு வெளியேறி அவரின் சொந்த தோற்றத்தில் சமூகம் தந்ததை தப்லீக் முன்னோர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?
தொடரும்.

Saturday 21 November 2015

இஸ்லாத்தின் பார்வையில் ஷியாக்கள்


தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுன்னி என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் ஆணிவேரான ஈமானைப் பாதிக்கும் கொள்கையுடைய பல்வேறு புதிய கூட்டங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்திய சட்டம் மற்றும் இலங்கை சட்டங்கள் முஸ்லிம்களை இரண்டே பிரிவுகளாகத் தான் பிரிக்கிறது. ஒன்று சுன்னி முஸ்லிம் மற்றொன்று ஷியா முஸ்லிம். சுன்னி பிரிவிலிருந்து ஷியா பிரிவு எந்த வகையில் வேறுபடுகிறது. அவர்களின் கொள்கைகள்(அகீதா) என்ன? என்பது பற்றி விரிவாக அலசவே இக் கட்டுரைத் தொகுப்பு.
‘ஷியா’ என்ற பெயர் வந்ததற்கான காரணம்:
ஷியா என்னும் அரபி பதத்திற்கு பின்னால் செல்பவன், உதவியாளன், கூட்டம், பிரிவு மற்றும் தம்மை அஹ்லெ பைத் எனக் கூறிக் கொள்ளும் பிரிவினர் என்பது பொருளாகும். நூல்: அல் காமூஸுல் அன்வார், பக்கம் 319.
ஒருவரைப் பின்தொடர்ந்து உதவி செய்வோருக்கும் ஒரு விஷயத்தில் ஒருங்கிணைந்துள்ள கூட்டத்தாருக்கும் ஷியா எனப்படுகிறது. நூல்: தஹ்தீபுல் துஙா 3:161, தாஜுல் உரூஸ் 4:405.
அல்குர்ஆனிலல் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குறிக்கப்பட்டுள்ளது. உம்மத்-கூட்டம் என்றும், பிரிவு என்றும், போன்ற, நிகரான என்றும், பின்தொடர்பவன் என்றும் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
வழக்குச் சொல்லில் இதன் அர்த்தமாவது,
ஷியா என்ற பதம் ஸெய்யிதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களையும் அஹ்லெ பைத்தினரையும் தங்களின் அதிகாரிகளாக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் சொந்தமாக்கப்பட்ட பெயராகும். நூல்: அல் காமூஸுல் முஹீத் 3:47.
ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களுக்கு முன்பிருந்த நேர்வழி காட்டும் புனித கலீபாக்கள் அனைவரையும் விட உயர்வு படுத்தியதுடன், கலீபாவாக இருப்பதற்கு அஹ்லெ பைத்தினரே மிகவும் தகுதியானவர்கள் என்றும், அவர்களல்லாத ஏனைய கலீபாக்களின் ஆட்சியனைத்தும் பாத்திலானவை என்று எண்ணுகிற அனைவரும் ஷியாக்கள் என்பதாக அழைக்கப்படுகின்றனர்.
ஷியாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது குடும்பத்தினரது அன்பைப் பறிமுதல் செய்தவர்கள். உண்மை இதுவல்ல. இவர்கள் செய்யிதினா ஹஸன், ஹுஸைன், அலி, ஜைனுல் ஆபிதீன், ஸைத் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரைப் பின்தொடர்வோர் என விழிப்பிலே கனவு காண்போராகும். அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு தோழர்களையும் ஏளனமாகக் கருதுவது, ஏசுவது இவர்களின் சின்னமாகும் என்பதாக தாரகுத்னியில் பதிவாகியுள்ளதாக ‘அல் அஜ்விபத் தாமிகா’ பக்கம் 142ல் பதிவாகியுள்ளது.
இந்த ஷியாக்கள் ‘ராபிழா’ என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகின்றனர். ராபிழா என்றால் ‘விட்டு விட்டவன்’ என்பது அரபி இலக்கண அர்த்தமாகும்.
இந்த ராபிழா என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணத்தைப் பார்ப்போம்:
செய்யிதினா ஹழ்ரத் ஜைத் பின் அலீ, ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களை இமாமாக ஏற்காது அவர்களை விட்டும் பிரிந்து போனதால் இப்பெயர் இவர்களுக்கு வழங்கப்பட்டது. நூல்: அல்பிதாயா வந்நிகாயா 9:380, பிரக் முஆஸரா 1:206.
ராஃபிழா என்னும் இப்பெயர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, எனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் அவர்களுகு;கு ராஃபிழா என்று பெயரிடப்பட்டிருக்கும். அவர்கள் இத்தகைய அடையாளங்களை கொண்டிருப்பர் என்று அறிவிக்கப்படும் ஹதீது முஸ்னத் அஹ்மத் பக்கம் 106, ஹதீது எண் 808, ஷரஹ் உஸூல் இஃதிகாத் பக்கம் 1454, 1456, அல் அஜ்விபத் தாமிகா பக்கம் 142, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக்கம் 1:446 லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸெய்யிதினா ஜைத் பின் அலீ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கலீபா ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கிலாபத்தை ஏற்றுப் பிரகடனப்படுத்திய பிறகு ஒரு கூட்டத்தார் இவர்களிடம் வருகை தந்து நீங்கள் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் உங்களை இமாமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றனர்.
அதுபோது இமாம் அவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள் என்னை விட்டீர்கள். நானும் உங்களை விடுகிறேன் என்று ராஃபிழா என்று பெயரிட்டு, இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ராஃபிழா என்று பெயரிடப்பட்டவர்கள் என்று பிரகடனப்படுத்தினர். -நூல்: குன்யத்துத் தாலிபீன் பக்கம் 148, நாமே வ நஸப் பக் 495, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக் 1:446
ஷியாக்களின் அகீதா:
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையேத் தகர்க்கக் கூடிய கொள்கைகளைக் கொண்டவர்கள்தான் இந்த ஷியாக்கள். அவர்களின் கொள்கைகள் இங்கு விபரமாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அறிவுக்கு சற்றும்; பொருத்தம் இல்லாததாகவும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். பொய், புரட்டு, கட்டுக்கதைகளை தம் மனம் போனபோக்கில் பெரும் பாக்கியசாலிகளின் மீது இட்டுக் கட்டியுள்ளனர்.
அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தினர்கள்தான் இந்த ஷியாக்களுக்கு எதிரியாகத் திகழ்பவர்கள். அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு ஸினான் என்பவர் ஹழ்ரத் செய்யிதினா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு கிடைத்ததாக தெரிவிப்பது என்னவெனில், எனது தந்தை இமாமவர்களிடம் யூத, கிறித்துவர்களின் பெண்களை திருமணம் செய்வது சம்பந்தமாக வினவியபோது (நான் அப்போது அங்கே அமர்ந்திருந்தேன்) இமாமவர்களே! அவ்விரு கூட்டத்தாரின் பெண்களை திருமணம் செய்வது ‘நாஸிபிய்யா’க்களின் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின்) பெண்களை திருமணம் செய்வதை விட மேலானதாகும். இருப்பினும் நான் அதை விரும்ப மாட்டேன் என்று கூறினர். நூல்: ஃபுரூஃவுல் காஃபி 5:351, கிதாபுன் நிகாஹ், தெஹ்ரான் பதிப்பகம்)
ஹழ்ரத் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கப்பலில் நாய், பன்றி போன்றவற்றையெல்லாம் ஏற்றிக் கொண்டு பயணம் செய்தனர். ஆனால் விபச்சாரத்தில் பிறந்த ஹராமிகளை மட்டும் ஏற்றவில்லை. இதில் இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹராமிகளை விட மிகக் கெட்;டவர்கள். நூல்: ஜாமிஉல் அக்பார் பக்கம் 158, நஜப் அஷ்ரஃப் பதிப்பகம்.
சுன்னத் வல் ஜமாஅத்தினரது பெண்களை மணம் முடிக்காதீர். அவர்கள் அறுத்ததை புசிக்காதீர்கள். இன்னும் அவர்களோடு சேர்ந்து வசிக்காதீர்கள். நூல்: அல் இஸ்திப்ஸார் 3:184, தெஹ்ரான் அச்சகம், தஹ்தீபுல் அஹ்காம் 7:303 தெஹ்ரான் அச்சகம்.
‘நாஸிபிய்யா’ என்பது சுன்னத் வல் ஜமாஅத்தினரைத்தான் குறிக்கிறது என்பதை ராபிழிகளின் அன்வார் நுஃமானிய்யா 2:307, ஹக்குல் யக்கீன் 2:516 என்ற நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
பிக்ஹ் ஜஃபரிய்யா என்னும் ஷியாக்களின் சட்ட நூலானாது இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் உருவாக்கப்பட்டதாக ஷியாக்களால் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் அஹ்லெ சுன்னத்திற்கு மாற்றமான ஒன்றாகும். இந்த ஷியாக்களைப் பற்றியும் அவர்களின் பிக்ஹ் ஜஃபரிய்யா நூற்களைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் இமாம்கள் கூறியிருப்பதாவது:
1. எனது பாட்டனார் ஸெய்யிதினா ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலம் முதல் எனது காலம் வரை ஷியாக்களின் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரில் பொய்களையே தந்துள்ளனர்.
2. அஹ்லெ பைத்தினர்களின் இமாம்கள் இப்பொய்யர்கள் மீது சூடான இரும்பினால் வேதனை செய்தும் பிரார்த்தனை புரிந்துமுள்ளனர்.
3. இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் பெயாரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்களை ஷியாக்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்
4. அஹ்லெ பைத்தினர்களான எங்களின் மீது பழி சுமத்தும் ஷியாக்களின் சிரசுகளைத் துண்டிப்பவர் இமாம் மஹ்தியாகும் என்கின்றனர் இமாம் ரிழா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘உங்கள் தந்தை மூன்று கலீபாக்களின் பின்னால் தொழுதவைகளை வீட்டில் திருப்பித் தொழுகிறவர்களாக இருந்தார்களா?’ என்று வினவப்பட்டபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை’ என்றார்கள். -நூல்: பிஹாருல் அன்வார் 10:140 பழைய பிரதி.
ஆக இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூன்று கலீபாக்களையும் ஒரு மனதாகப் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதும், இவர்களின் பெயரால் ஷியாக்கள் எழுதியிருப்பது கட்டுக்கதை என்பதும் நிரூபணமாகிறது.
உங்கள் முன் நமூனாவாக -எடுத்துக் காட்டாக இங்கு ஷியாக்களின் கொள்கைள் நம்முடைய சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலிருந்து எவ்வகையில் மாறுபட்டது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இனி,
ஷியாக்களைப் பற்றி நமது இமாம்கள், மார்க்க அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்.
அஹ்லெ பைத் குடும்பத்தைச் சார்ந்த ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது ‘குன்யத்துத்தாலிபீன்’ என்ற நூலில் பக்கம் 147 ல் சொல்லியிருக்கிறார்கள், ‘ஷியாக்களின் மத்ஹப் யூதர்களின் மத்ஹபுக்கு ஒப்பானது ஆகும். இன்னும் ஹஜ்ரத் ஷஃபி அவர்கள், ராஃபிழிகளை நேசிப்பது யூதர்களை நேசிப்பது போலாகும் என்கின்றனர். இனி ராபிழிகளுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையினை ஒப்பு நோக்கலைப் பாருங்கள்:
யூதர்கள்: தாவூதின் குடும்பத்தாரை தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.
ராபிழிகள்: இமாம் அலியின் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.
யூதர்கள்: மஸீஹ் தஜ்ஜாலும், வானத்திலிருந்தும் நபி ஈஸாவும் இறங்கும் வரை ஜிஹாத் என்பதில்லை.
ராபிழிகள்: இமாம் மஹ்தி வெளிப்பட்டு இவர்தான் மஹ்தி என அல்லாஹ்வைக் கொண்டு தெரிவிக்கப்படும் வரை ஜிஹாத் என்பதில்லை.
யூதர்கள்: இவர்கள் மஃரிப் வணக்கத்தை நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொள்ளும் வரை பிற்படுத்துவர்.
ராஃபிழிகள்: இவர்களும் மஃரிப் வணக்கத்தை பிற்படுத்துவோரேயாகும்.
யூதர்கள்: கிப்லாவின் திசையை விட்டு சற்று விலகியே வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான். யூதர்கள் வணங்கும்போது ஆடி அசைந்து வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான் வணங்குகின்றனர். யூதர்கள் ஆடைகளை தொங்கவிட்டு வணங்குவதைப் போலவே ஷியாக்களும் வணங்குகின்றனர். யூதர்கள் முஸ்லிம்களது இரத்தத்தை ஹலால் எனக் கருதுவது போலவே ராஃபிழிகள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் இரத்தத்தை ஹலாலென் கருதுகின்றனர். யூதர்கள் பெண்களின் இத்தா காலத்தை கணக்கில் கொள்ளாதது போன்று இவர்களும் கணக்கில் கொள்வதில்லை. யூதர்கள் முத்தலாக்கை மதிக்காதது போன்று ஷியாக்களும் மதிப்பதில்லை. யூதர்கள் தௌராத்தில் இடைச் சொருகல் செய்ததை போன்று இவர்கள் குர்ஆனில் செய்துள்ளனர். யூதர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிரியாகக் கணித்திருப்பதைப் போன்று ஷியாக்களில் ஒரு பிரிவாhர் ஜிப்ரீலவர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்க வேண்டிய வஹியை தவறாக இன்னொருவருக்கு வழங்கிவிட்டார் என கூறுகின்றனர். இவர்கள் நாசமாகட்டும். அழிந்து போகட்டும்’ என்று கூறுகின்றனர்.
கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் தகுதியான கலீபாக்களென்போர் ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரே. அஹ்லு சுன்னாவின் கொள்கை தோழர்களனைவரையும் பரிசுத்தப்படுத்தி அல்லாஹ் ரஸூலின் பொருத்தத்தைப் பெறுவதுதான். – இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு ரலியல்லாஹு அன்ஹு.
செய்யிதினா ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் போன்றோரின் கிலாபத் ஆட்சியை உண்மைபடுத்துவதே உனது அகீதா ஈடேற்றமடைய போதுமானதாகும். -ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.
முதல் கலீபா ஸித்தீகுல் அக்பர், இரண்டாம் கலீபா உமர் பாரூக், மூன்றாம் கலீபா உத்மான் கனீ, நான்காம் கலீபா அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களாகும். – இமாம் கமால் இப்னு ஹுகாம் ஹனபி ரலியல்லாஹு அன்ஹு.
நபித்தோழர்களில் நான்கு கலீபாக்களும், பின்னர் சுபச் செய்தி வழங்கப்பட்ட தோழர்களும், அதன்பின் அஹ்லெ பத்ர், பின்பு அஹ்லெ உஹத்;, அதையடுத்து பைத்துர் ரிழ்வான் ரலியல்லாஹு அன்ஹும் என்பதே எனது அகீதாவாகும்.
– இமாம் நவவி ஷாபிஇ ரலியல்லாஹு அன்ஹு.
இன்னும் இது போன்ற மகான்கள் சொன்ன சொற்கள் நமக்கு நமது அகீதாவை படிப்பினையாக்கி போதித்துக் கொண்டிருக்கிறது.
மார்க்கத் தீர்ப்பு:
புனித கண்மணி நாயகத் தோழர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். -அல்குர்ஆன்.
எனது தோழர்களை நேசிப்பவன் என்னை நேசித்தவன். அவர்கள் மீது கோபம் கொள்வோர் என்னைக் கோபித்தவராவார். -நபிமொழி
இஆனத்துத்தாலிபீன் நூலின் 4:159ல் ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஸஹாபி என்பதை பொய்யாக்குவதும், ஸெய்யிததுனா ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இழித்துரைப்பதும் ‘குப்ராகும்’ என்றும் , அதே நூல் பக்கம் 4:149 ல் குர்ஆனில் உள்ள ஒரு அட்சரத்தையேனும் சந்தேகிப்பது குப்ரை ஏற்படுத்துவதாகும்.
ஹழ்ரத் சித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் மறுப்பது ‘குப்ராகும்’ -நூல்: பத்ஹுல் கதீர் 1:304
மூன்று தோழர்களை விட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சிறந்தவர் என்று எண்ணுவது பித்அத்தாகும். இதுபோன்றே ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் கிலாபத்தை – ஆட்சியை மறுப்பது குப்ராகும். நூல்: ஹாஸயத்துஷ் ஷிப்லி அலா திப்யீகில் ஹகாயிக் 1:135.
ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் வர்ணிப்பதும், அவர்களை குறை கூறுவதும் ‘குப்ராகும்’ நூல்: பஹ்ருல் ராயிக்  5:126.
ஷைகைன் ஆகிய இருவரின் கிலாபத்தை பொய்யாக்குவதும், மறுப்பதும் குப்ராகும்.
நூல்: பதாவா பஸ்ஸாஸிய்யா 6:318.
ஸெய்யிதினா ஸித்தீகுல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் கிலாபத்தை மறுப்பது குப்ராகும். நூல்: hஷியத்துத் தஹாவி அலா மராகில் ஃபலாஹ். பக்கம் 181.
இதுவரை மேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு நபித் தோழர்களை ஏசுவதும், அவர்களை இழித்துரைப்பதும், சாபமிடுவதும் குப்ரு என்னும் நிபந்தனைக்கு உட்படுகின்றது. அதாவது இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் குப்ரு ஏற்படும் என்று தெரிய வருகிறது. ஆக இவ்விஷயங்களை செய்த ஷியாக்களின் நிலை குப்ரான ஒன்றாகிறது.
அல்லாஹ் நம் அனைவர்களையும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஸீலாவைக் கொண்டு பாதுகாப்பானாக! ஆமீன்.

ஸல்லல்லாஹு  அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.





Tuesday 10 November 2015

அனைத்து முஸ்லிம்களுக்கும் பயனுள்ள ஒரு தகவல்

அனைத்து முஸ்லிம்களுக்கும் பயனுள்ள ஒரு தகவல்


அனைத்து முஸ்லிம்களுக்கும் பயனுள்ள ஒரு தகவல்: அதிகம் ஷேர் செய்யுங்கள்.
.
1000 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைகழகம்தான் உலக முஸ்லிம்களின் தலைமை இஸ்லாமிய கல்வி மையமும், பத்வா (மார்க்க தீர்ப்பு) நிலையமுமாகும். இவர்களின் பத்வாவே முழு உலகிலும் பின்பற்றப்படுகிறது. அதேபோல, இவர்களின் பாடத்திட்டங்களுக்கு அமையவே பல்வேறு நாடுகளில் மௌலவி, ஆலிம் போன்ற கற்கை நெறிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 
.
அதேபோல, இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் கல்வி கற்கும் உலமாக்களின் ஒரு பெரிய ஆசைதான், எப்படியாவது அல் அஸ்ஹரில் சென்று கல்வி கற்று “அல் அஸ்ஹரி” என்ற பட்டத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். காரணம், இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி தரம் அந்தளவு மேன்மை மிக்கது. உலக புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் இங்கு கல்வி கற்றவர்களே.
.
இன்னும், இஸ்லாமிய உலகில் ஏதேனும் புது பிரச்சினைகள் ஏற்பட்டால், அல்லது நவீன விடயங்கள் வரும்போது, இஸ்லாமிய மார்க்க தீர்ப்பு (பத்வா) தேவைப்பட்டால், பிரச்சினையை அல் அஸ்ஹருக்கே அனுப்பி வைப்பர். அங்குள்ள மிக பெரும் உலமாக்கள் குழு ஆய்வு செய்து கடைசியில் அதன் பத்வாவை வெளியிடுவர். கடைசியில் அந்த பத்வா முழு உலகிலும் பின்பற்றப்படும்.
.
அதேபோல, தனிப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் மார்க்க பிரச்சினைகளுக்கு பத்வா தேவைப்பட்டாலும் அவர்களை அணுகலாம். இது அவர்களது உத்தியோகப்பூர்வமான ஆங்கில இணையத்தளமாகும்.
http://eng.dar-alifta.org/foreign/default.aspx
.
இங்கு சென்று உங்களுக்கு தேவையான பத்வாவை தேடி பெறலாம். ஏற்கனவே இங்கு, வணக்க வழிபாடுகள், குடும்ப வாழ்க்கை, வியாபார கொடுக்கல் வாங்கல், சமூக வாழ்க்கை உட்பட நிறைய சந்தேகங்களுக்குரிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்வாக்கள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.
.
மேலும், FATWA REQUEST என்று ஒரு option வைத்து இருக்கிறார்கள். அந்த பக்கத்திற்கு சென்று உங்கள் பிரச்சினையை (அதாவது மார்க்க சந்தேகத்தை) ஆங்கிலத்தில் கேட்டால், உங்கள் ஈமெயிலுக்கு அதன் பத்வாவை அனுப்பி வைப்பார்கள்.
.
இல்லாவிட்டால், PHONE FATWA என்று ஒரு option உம் இருக்கிறது. நீங்கள் அவர்களுக்கு போன் செய்தும் ஆங்கிலத்தில் இலவசமாக பத்வாவை பெற்றுக் கொள்ளலாம்.
.
நிறைய தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இது தெரியாது. ஆனால், அரபு நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் நிறைய பேர் இச்சேவையை இலவசமாக பெற்று வருகிறார்கள். எனவே, அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் பயனடைய இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்.
.
நன்றி - உலக முஸ்லிம் செய்திகள்


Wednesday 4 November 2015

PJ வருகை எரிகிர நெருப்பில் எண்ணை ஊற்றுமா?

PJ வருகை எரிகிர நெருப்பில் எண்ணை ஊற்றுமா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முன்னால் தலைவரும் பிரச்சாரகருமாகிய  திரு.பீ.ஜெயினுலாபீதீன் என்பவர் எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள சிங்கள மொழியில் குரான் மொழியாக்கம் வெளியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக வருகை தரவிருக்கிறார் என்ற செய்தியை அந்த அமைப்பின் கிளையாக இலங்கையில் செயல்படும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்(ளுடுவுது)அறிவித்துள்ளத்துடன் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பிரஸ்தாபிக்கப்பட்டுவருகிறது.

பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள்   ஜமாத்தார்களிடையே இது ஒரு பேசுபொருளாகியிருகிற நிலையில் இலங்கையை பொருத்தவரை இவற்றின் சாதக பாதகங்கள் பற்றி விமர்சன ரீதியில் பல கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலே தொடர்ந்தவண்ணம் உள்ளன.

காலம் காலமாக முஸ்லிம்கள் செய்துவருகின்ற கத்தம் இபாத்திஹா மௌலிது மீலாது தர்ஹா போன்றவற்றை எதிர்த்து 1980 களில் இருந்து திரு பீஜே பிரச்சாரம் செய்துவருகிறார். 

முஸ்லிம்கள் அமல்காளாக கருதி தொன்றுதொட்டு செய்துவரும் செயல்பாடுகளை ஷிர்க் என்றும் பித் அத் என்றும் பிரகடனப்படுத்திய இவர் அன்று தொட்டு இன்று வரை உலமாக்களால் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார். இருந்தும் இவரது கம்பீரமான பேச்சாற்றலினால் கவரப்பட்ட பலர் இவரது கொள்கைகளை ஏற்று அவரது அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து ஈமானை பறிகொடுத்துவருகின்றனர்.

ஒரு காலத்தில் ஷிர்க் பித் அத் மூட நம்பிக்கை என்று முஸ்லிம்களின் அமல்கள் மீது கைவைத்துவந்த  இவர் அண்மைக்காலமாக குப்ரிய்யத்தான கொள்கையின் பக்கம் அவர் சார்ந்திருக்கும் நபர்களை அழைத்து செல்ல துணிந்துவிட்டார். இமாம்களும் மத்ஹபுகளும் தேவையில்லை என்று ஆரம்பத்தில் கிளம்பிய இவர் பின்னர் ஸஹபாக்களை மறுக்கும் நிலையை தன் கொள்கையாக வகுத்துக்கொண்டதுடன் அல்குர் ஆனும் அல் ஹதீஸும் மாத்திரமே இஸ்லாமிய மூல ஆதாரங்கள் என்று பிரச்சாரம் செய்தார். இப்பரச்சாரத்தால் கவரப்பட்ட பலர் அவரது அமைப்பில் இணைந்ததுடன் தங்களது ஈமானையும் பறிகொடுத்தனர்.

அது மட்டுமன்றி தமிழகத்தில் ஊர்களுக்கிடையேயும் குடும்பங்களிடையேயும் பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.இது பற்றி த.த.ஜ. அமைப்பின் தற்போதைய தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி என்பவர் ஓரிடத்தில் பேசும்போது “சமூகத்தில் பிளவை ஏற்படுத்தியதில் எமக்கு பெரும்பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. நாங்கள் குழப்பவாதிகள் என்றால் மிகப்பெரிய குழப்பவாதி றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்தான்’ என்று நாயகத்தின் மீது ஓர் அருவருக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தை கூறி உலமாக்களினதும் சமூகத்தினதும் கண்டனத்தையும் பெற்றிருந்தார்.


அல்குரான் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் என்று கூறி பிரச்சாரம் செய்து வந்த இவர் அண்மைக்காலமாக ஸஹீஹான பல ஹதீதுகளையும் மறுக்கின்ற குப்ரிய்யத்தான படுபாதக செயலில் இறங்கியிருக்கின்றார். அறிவிப்பாளர் தொடர் சரியான ஹதீதுகளை அல்குரானுக்கு முரண்படுவதாகவும் புத்திக்கு முரண்படுவதாகவும் இவரும் இவரை சார்ந்த அமைப்பும் மறுத்துவருகிறது.நான் அறிய சுமார் 80 ஸஹீஹான ஹதீதுகளை பல்வேறு நொண்டி வாதங்களை முன்வைத்து இவர்கள் மறுத்துவருகின்றனர்.
அதில் பிரதானமாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது சம்பந்தமாக புஹாரியிலும் மற்றும் பல கிரந்தங்களிலும் இடம்பெற்றுள்ள செய்தியை இவர் மறுத்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தையும் பலத்த விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நாகரீகாமவும் அநாகரீகாமாகவும் பல்வேறு தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவரது குப்ரிய்யத்தான கொள்கைகளை ஆராய்ந்த தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை கடந்த 23.06.2015 அன்று இவரையும் இவரது கொள்கை சார்ந்தவர்களையும் ‘முர்தத்கள்’ என்று பத்வா வழங்கி தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.
PJ வருகை எரிகிர நெருப்பில் எண்ணை ஊற்றுமா?

திரு பீஜே அவர்கள் குரான் மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தமிழில்  வெளியிட்டிருக்கின்ற புத்தகத்தையே சிங்கள மொழியில் வெளியிட ளுடுவுது இனர் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் பீஜே அவர்கள் வெளியிட்டிருக்கின்ற தமிழ் மொழிபெயர்ப்புக்களில்கூட ஏராளம் ஏராளம் இஸ்லாத்துக்கு புறம்பான கருத்துக்களும் கோட்பாடுகளும் புதைந்து கிடக்கின்றன.இவை பற்றி உலமாக்கள் பல்வேறு விமர்சனங்களையும் தெளிவுகளையும் வழங்கியுள்ளனர்.அவை பற்றி அலசினால் இக்கட்டுரை வேறு திசை நோக்கி பயணித்துவிடும் என்பதால் தவிர்த்துக்கொள்கிறேன்.

மேலும் ஸஹாபாக்கள் தொகுத்தளித்த அல்குர் ஆன் மூலப்பிரதியில் கூட எழுத்துப்பிழை இருக்கிறது என்ற படுமோசமான யூதக்கருத்தையும் இவர் கொண்டிருக்கின்றார். இது சம்பந்தமாக கடந்த ஆண்டு தூத்துக்குடி ஜமாத்துல் உலமாவுக்கும் பீஜே அவர்களுக்குமிடையே ஒரு விவாதமும் நடைபெற்று பீஜே அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டது.

இலங்கையை பொருத்தவரை அதிகமான முஸ்லிம்கள் தொன்றுதொட்டு தனது மூதாதையர்களான ஸாலிஹீன்கள் வழியில் நான்கு மத்ஹபுகளாக ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர்.ஆன்மீக நோக்கங்களுக்காக தரீகாக்களிலும் தம்மை இணைத்து அமல்களில் பேனுதலை கடைப்பிடித்துவருகின்றனர்.

 த.த.ஜ வின் கிளையாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் பெயர்களில் உள்ள பிற ஜமாத்துக்களின் தோற்றத்தின் பின்னரே இலங்கையிலும் குடும்ப உறவுகளிடையே பிளவுகளும் பிரச்சனைகளும் தலைதூக்கி இன்று பல ஊர்களில் அடிதடி வரை நிலமை மோசமாகிவருகிறது.எந்தளவுக்கென்றால் ஜனாஸாவை அடக்குவதில் கூட பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய அவல நிலைக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே கடைசியாக இலங்கையில் பீஜே அவர்கள் வருகைதந்திருந்தார். அக்குரணை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் நிகழ்வில் இவர் பேசியபோது அங்கு பாரிய குழப்ப நிலை ஏற்பட்டதையும் அரசியல் மட்டங்களில் கூட இவரது வருகையை தடை செய்யவேண்டும் என்ற கருத்தாடல்கள் அதன் பின்னர் ஏற்பட்டதையும் சிலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு.

எனவே சகோதரர் பீஜேவின் இலங்கை வருகை எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவதாகவே அமையப்போகிறது என்கிற உண்மை நிச்சயம் உணரப்படும். 

UL.Muhamed Manas kalmunai

PJ வருகை எரிகிர நெருப்பில் எண்ணை ஊற்றுமா?

PJ வருகை எரிகிர நெருப்பில் எண்ணை ஊற்றுமா?



ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்

ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்

பீஜே குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை (Update Nov 2014) மறுத்துள்ள ஹதீஸ்கள்.
1- நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் பாதித்ததை சொல்லும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)
2- அஜ்வா ஈத்தம் பழம் நஞ்சுக்கெதிரான மருந்து (புகாரி,முஸ்லிம்)
3- கண்ணேறு உண்மையானது (புகாரி,முஸ்லிம்)
4- ஜஃபரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)
5- உம்மு ஸலமா வீட்டுப் பெண்ணுக்கு கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)
6- நபித்தோழர் ஸஹ்ல் கண்ணேரால் பாதிப்புறல் (இப்னு மாஜாஹ்)
7- கண்ணேறுக்கு மருத்துவம் (முஸ்லிம்)
8- கத்ருக்கும் கண்ணேறுக்கும் இடையிலான தொடர்பு (முஸ்லிம்)
9- கண்ணேறுக்காக கழுவிக்கேட்டல் (முஸ்லிம்)
10-கண்ணேறுக்கு எதிரான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமின் துஆ (முஸ்லிம்)
11-கண்ணேறிலிருந்து பாதுகாப்புத்தேட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிற்கு நபிகளாரின் கட்டளை (முஸ்லிம்)
12- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அனஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
13- நபியவர்கள் தன் பேரர்களுக்கு கண்ணேறிலிருந்து பாதுகாக்க கேட்ட துஆ (முஸ்லிம்)
14- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
15- கண்ணேறு உண்மை என்ற ஹாபிஸ் தமீமி ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
16- கண்ணேறு உண்மை என்ற இப்னு அப்பாஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
17- கண்ணேறுக்காக வுழூ எடுத்தல் (அபூ தாவூத்)
18- கண்ணேறு உண்மை என்ற ஆமிர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு(இப்னு மாஜாஹ்)
19- கண்ணேறிலிருந்து நபிகளார் பாதுகாப்புத் தேடுதல்(திர்மிதி)
20- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை புரைதா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
21- நபிகளாரிக்கு ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடல்
22- தந்தை உறவை மறுத்தல் பற்றிய ஹதீஸ் (புகாரி)
23- 5 தடவை தாய்ப் பாலருந்தினால் உறவு முறை உண்டாதல்(முஸ்லிம்)
24- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
25- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு(இப்னு மாஜா)
26- பிஃரு முஊனாவில் கொல்லப்பட்டவர்கள் பற்றி வசன ஓதல் மாற்றம் (புகாரி,முஸ்லிம்)
27- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)
28- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய உபை ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)
29- அஸர் தொழுகை பற்றிய வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)
30- ஸூரதுல்லைலின் வசன ஓதல் மாற்றம் (புகாரி)
31- கருஞ்சீரகத்தின் சிறப்பு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
32-கருஞ்சீரகத்தின் சிறப்பு அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
33-மாலையில் ஓதும் அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத் என்ற பிரார்த்தனை (முஸ்லிம்)
34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு
35- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை உம்மு ஷரீக் ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)
36- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆமிரின் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
37- பல்லியைக் கொல்லுவதன் நன்மை பற்றிய அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
38- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)
39- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா நடைமுறைப்படுத்திவிட்டு நபிகளாரின் கூற்றை விளக்கும் அறிவிப்பு (நஸாஈ)
40- ஸாலிம் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸ்(முஸ்லிம்)
41- 100 கொலை செய்தவனின் பாவமன்னிப்பு (புகாரி)
42- உம்மு ஹராம் ரலியால்லாஹு அன்ஹா வீட்டில் நபிகளார் உறங்குதல்(புகாரி,முஸ்லிம்)
43- பிலால் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் கடன் (அபூ தாவூத்)
44- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் (புகாரி)
45- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் என்று நபிகளார் சான்று பகரக் காரணமான ஹதீஸ்
46- ஹுதைபியாவில் நபிகளார் மீது நபித்தோழர்கள் காட்டிய அளவற்ற அன்பு (புகாரி)
47- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 100 திருமணங்கள் (புகாரி)
48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும்
மலகுல் மௌத்தும் (புகாரி)
49- பாதிமா பின்து கைஸ் ரலியால்லாஹு அன்ஹா அவர்களின் விவாகரத்து (புகாரி)
50- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
52- 7 நாட்களில் அல்லாஹ் படைத்த படைப்புக்களின் விபரங்கள் (முஸ்லிம்)
53- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையின் மறுமைத் தீர்ப்பு (புகாரி)
54- மாடும் ஓநாயும் பேசியதாக வரும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)
55- எலியை பனூ இஸ்ரேலின் உருமாற்றத்துடன் சம்பந்தப்படுத்தி நபிகளார் சந்தேகித்த செய்தி (முஸ்லிம்)
56- ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் பற்றிய ஹதீஸ் (புகாரி)
57- சூரியனின் ஸுஜூத் (புகாரி)
58- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
59- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
60- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும். இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
61- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும் ஸஹ்ல் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
62- இப்னு உமரின் மனைவியை தலாக் செய்யுமாறு உமரிட்ட கட்டளைக்கு வழிப்பபடுமாறு நபியவர்களின் உத்தரவு. (திர்மிதி)
63- தொழுகை ஆரம்பமாக 2 ரக்அத்துக்களாக கடமையாக்கப்படல் (புகாரி)
64-ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் வயதில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மறந்துவிடல் (திர்மிதி)
65- சிறு வயதில் நபிகளாரின் இதயம் பிளக்கப்பட்டு சீர் செய்யப்படல் (முஸ்லிம்)
66- குனூத் ஓதுதலை தடுத்து இறங்கிய அல் குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸ் (முஸ்லிம்)
67- ஸூரதுல் புர்கானை 2விதமாக ஓதல் (புகாரி)
68- வரஹ்துக மின்ஹுமுல் முக்லஸீன் என்ற வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)
69- ஸூரா தரியாதின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)
70- ஸூரா பய்யினாவின் வச ஓதல் மாற்றம் (அஹ்மத்)
71- மணமுடித்தவரின் விபச்சாரத் தண்டனைகல கல்லெறிந்து கொல்லல் வசன ஓதல் மாற்றம் (இப்னு மாஜாஹ்)
72- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான இறைவனின் முன்னறிவிப்பு (முஸ்லிம்)
73- விவாசய உபகரணங்கள் மூலம் இறைவன் இழிவைக் கொடுத்தல். (புகாரி)
74- ஈத்தம்பழம் உள்ள வீட்டவர்க்கு பசியேற்படாது (முஸ்லிம்)
75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்