தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுன்னி என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் ஆணிவேரான ஈமானைப் பாதிக்கும் கொள்கையுடைய பல்வேறு புதிய கூட்டங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்திய சட்டம் மற்றும் இலங்கை சட்டங்கள் முஸ்லிம்களை இரண்டே பிரிவுகளாகத் தான் பிரிக்கிறது. ஒன்று சுன்னி முஸ்லிம் மற்றொன்று ஷியா முஸ்லிம். சுன்னி பிரிவிலிருந்து ஷியா பிரிவு எந்த வகையில் வேறுபடுகிறது. அவர்களின் கொள்கைகள்(அகீதா) என்ன? என்பது பற்றி விரிவாக அலசவே இக் கட்டுரைத் தொகுப்பு.
‘ஷியா’ என்ற பெயர் வந்ததற்கான காரணம்:
ஷியா என்னும் அரபி பதத்திற்கு பின்னால் செல்பவன், உதவியாளன், கூட்டம், பிரிவு மற்றும் தம்மை அஹ்லெ பைத் எனக் கூறிக் கொள்ளும் பிரிவினர் என்பது பொருளாகும். நூல்: அல் காமூஸுல் அன்வார், பக்கம் 319.
ஒருவரைப் பின்தொடர்ந்து உதவி செய்வோருக்கும் ஒரு விஷயத்தில் ஒருங்கிணைந்துள்ள கூட்டத்தாருக்கும் ஷியா எனப்படுகிறது. நூல்: தஹ்தீபுல் துஙா 3:161, தாஜுல் உரூஸ் 4:405.
அல்குர்ஆனிலல் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குறிக்கப்பட்டுள்ளது. உம்மத்-கூட்டம் என்றும், பிரிவு என்றும், போன்ற, நிகரான என்றும், பின்தொடர்பவன் என்றும் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
வழக்குச் சொல்லில் இதன் அர்த்தமாவது,
ஷியா என்ற பதம் ஸெய்யிதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களையும் அஹ்லெ பைத்தினரையும் தங்களின் அதிகாரிகளாக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் சொந்தமாக்கப்பட்ட பெயராகும். நூல்: அல் காமூஸுல் முஹீத் 3:47.
ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களுக்கு முன்பிருந்த நேர்வழி காட்டும் புனித கலீபாக்கள் அனைவரையும் விட உயர்வு படுத்தியதுடன், கலீபாவாக இருப்பதற்கு அஹ்லெ பைத்தினரே மிகவும் தகுதியானவர்கள் என்றும், அவர்களல்லாத ஏனைய கலீபாக்களின் ஆட்சியனைத்தும் பாத்திலானவை என்று எண்ணுகிற அனைவரும் ஷியாக்கள் என்பதாக அழைக்கப்படுகின்றனர்.
ஷியாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது குடும்பத்தினரது அன்பைப் பறிமுதல் செய்தவர்கள். உண்மை இதுவல்ல. இவர்கள் செய்யிதினா ஹஸன், ஹுஸைன், அலி, ஜைனுல் ஆபிதீன், ஸைத் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரைப் பின்தொடர்வோர் என விழிப்பிலே கனவு காண்போராகும். அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு தோழர்களையும் ஏளனமாகக் கருதுவது, ஏசுவது இவர்களின் சின்னமாகும் என்பதாக தாரகுத்னியில் பதிவாகியுள்ளதாக ‘அல் அஜ்விபத் தாமிகா’ பக்கம் 142ல் பதிவாகியுள்ளது.
இந்த ஷியாக்கள் ‘ராபிழா’ என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகின்றனர். ராபிழா என்றால் ‘விட்டு விட்டவன்’ என்பது அரபி இலக்கண அர்த்தமாகும்.
இந்த ராபிழா என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணத்தைப் பார்ப்போம்:
செய்யிதினா ஹழ்ரத் ஜைத் பின் அலீ, ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களை இமாமாக ஏற்காது அவர்களை விட்டும் பிரிந்து போனதால் இப்பெயர் இவர்களுக்கு வழங்கப்பட்டது. நூல்: அல்பிதாயா வந்நிகாயா 9:380, பிரக் முஆஸரா 1:206.
ராஃபிழா என்னும் இப்பெயர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, எனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் அவர்களுகு;கு ராஃபிழா என்று பெயரிடப்பட்டிருக்கும். அவர்கள் இத்தகைய அடையாளங்களை கொண்டிருப்பர் என்று அறிவிக்கப்படும் ஹதீது முஸ்னத் அஹ்மத் பக்கம் 106, ஹதீது எண் 808, ஷரஹ் உஸூல் இஃதிகாத் பக்கம் 1454, 1456, அல் அஜ்விபத் தாமிகா பக்கம் 142, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக்கம் 1:446 லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸெய்யிதினா ஜைத் பின் அலீ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கலீபா ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கிலாபத்தை ஏற்றுப் பிரகடனப்படுத்திய பிறகு ஒரு கூட்டத்தார் இவர்களிடம் வருகை தந்து நீங்கள் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் உங்களை இமாமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றனர்.
அதுபோது இமாம் அவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள் என்னை விட்டீர்கள். நானும் உங்களை விடுகிறேன் என்று ராஃபிழா என்று பெயரிட்டு, இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ராஃபிழா என்று பெயரிடப்பட்டவர்கள் என்று பிரகடனப்படுத்தினர். -நூல்: குன்யத்துத் தாலிபீன் பக்கம் 148, நாமே வ நஸப் பக் 495, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக் 1:446
ஷியாக்களின் அகீதா:
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையேத் தகர்க்கக் கூடிய கொள்கைகளைக் கொண்டவர்கள்தான் இந்த ஷியாக்கள். அவர்களின் கொள்கைகள் இங்கு விபரமாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அறிவுக்கு சற்றும்; பொருத்தம் இல்லாததாகவும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். பொய், புரட்டு, கட்டுக்கதைகளை தம் மனம் போனபோக்கில் பெரும் பாக்கியசாலிகளின் மீது இட்டுக் கட்டியுள்ளனர்.
அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தினர்கள்தான் இந்த ஷியாக்களுக்கு எதிரியாகத் திகழ்பவர்கள். அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு ஸினான் என்பவர் ஹழ்ரத் செய்யிதினா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு கிடைத்ததாக தெரிவிப்பது என்னவெனில், எனது தந்தை இமாமவர்களிடம் யூத, கிறித்துவர்களின் பெண்களை திருமணம் செய்வது சம்பந்தமாக வினவியபோது (நான் அப்போது அங்கே அமர்ந்திருந்தேன்) இமாமவர்களே! அவ்விரு கூட்டத்தாரின் பெண்களை திருமணம் செய்வது ‘நாஸிபிய்யா’க்களின் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின்) பெண்களை திருமணம் செய்வதை விட மேலானதாகும். இருப்பினும் நான் அதை விரும்ப மாட்டேன் என்று கூறினர். நூல்: ஃபுரூஃவுல் காஃபி 5:351, கிதாபுன் நிகாஹ், தெஹ்ரான் பதிப்பகம்)
ஹழ்ரத் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கப்பலில் நாய், பன்றி போன்றவற்றையெல்லாம் ஏற்றிக் கொண்டு பயணம் செய்தனர். ஆனால் விபச்சாரத்தில் பிறந்த ஹராமிகளை மட்டும் ஏற்றவில்லை. இதில் இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹராமிகளை விட மிகக் கெட்;டவர்கள். நூல்: ஜாமிஉல் அக்பார் பக்கம் 158, நஜப் அஷ்ரஃப் பதிப்பகம்.
சுன்னத் வல் ஜமாஅத்தினரது பெண்களை மணம் முடிக்காதீர். அவர்கள் அறுத்ததை புசிக்காதீர்கள். இன்னும் அவர்களோடு சேர்ந்து வசிக்காதீர்கள். நூல்: அல் இஸ்திப்ஸார் 3:184, தெஹ்ரான் அச்சகம், தஹ்தீபுல் அஹ்காம் 7:303 தெஹ்ரான் அச்சகம்.
‘நாஸிபிய்யா’ என்பது சுன்னத் வல் ஜமாஅத்தினரைத்தான் குறிக்கிறது என்பதை ராபிழிகளின் அன்வார் நுஃமானிய்யா 2:307, ஹக்குல் யக்கீன் 2:516 என்ற நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
பிக்ஹ் ஜஃபரிய்யா என்னும் ஷியாக்களின் சட்ட நூலானாது இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் உருவாக்கப்பட்டதாக ஷியாக்களால் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் அஹ்லெ சுன்னத்திற்கு மாற்றமான ஒன்றாகும். இந்த ஷியாக்களைப் பற்றியும் அவர்களின் பிக்ஹ் ஜஃபரிய்யா நூற்களைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் இமாம்கள் கூறியிருப்பதாவது:
1. எனது பாட்டனார் ஸெய்யிதினா ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலம் முதல் எனது காலம் வரை ஷியாக்களின் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரில் பொய்களையே தந்துள்ளனர்.
2. அஹ்லெ பைத்தினர்களின் இமாம்கள் இப்பொய்யர்கள் மீது சூடான இரும்பினால் வேதனை செய்தும் பிரார்த்தனை புரிந்துமுள்ளனர்.
3. இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் பெயாரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்களை ஷியாக்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்
4. அஹ்லெ பைத்தினர்களான எங்களின் மீது பழி சுமத்தும் ஷியாக்களின் சிரசுகளைத் துண்டிப்பவர் இமாம் மஹ்தியாகும் என்கின்றனர் இமாம் ரிழா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘உங்கள் தந்தை மூன்று கலீபாக்களின் பின்னால் தொழுதவைகளை வீட்டில் திருப்பித் தொழுகிறவர்களாக இருந்தார்களா?’ என்று வினவப்பட்டபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை’ என்றார்கள். -நூல்: பிஹாருல் அன்வார் 10:140 பழைய பிரதி.
ஆக இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூன்று கலீபாக்களையும் ஒரு மனதாகப் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதும், இவர்களின் பெயரால் ஷியாக்கள் எழுதியிருப்பது கட்டுக்கதை என்பதும் நிரூபணமாகிறது.
உங்கள் முன் நமூனாவாக -எடுத்துக் காட்டாக இங்கு ஷியாக்களின் கொள்கைள் நம்முடைய சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலிருந்து எவ்வகையில் மாறுபட்டது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இனி,
ஷியாக்களைப் பற்றி நமது இமாம்கள், மார்க்க அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்.
அஹ்லெ பைத் குடும்பத்தைச் சார்ந்த ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது ‘குன்யத்துத்தாலிபீன்’ என்ற நூலில் பக்கம் 147 ல் சொல்லியிருக்கிறார்கள், ‘ஷியாக்களின் மத்ஹப் யூதர்களின் மத்ஹபுக்கு ஒப்பானது ஆகும். இன்னும் ஹஜ்ரத் ஷஃபி அவர்கள், ராஃபிழிகளை நேசிப்பது யூதர்களை நேசிப்பது போலாகும் என்கின்றனர். இனி ராபிழிகளுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையினை ஒப்பு நோக்கலைப் பாருங்கள்:
யூதர்கள்: தாவூதின் குடும்பத்தாரை தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.
ராபிழிகள்: இமாம் அலியின் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.
யூதர்கள்: மஸீஹ் தஜ்ஜாலும், வானத்திலிருந்தும் நபி ஈஸாவும் இறங்கும் வரை ஜிஹாத் என்பதில்லை.
ராபிழிகள்: இமாம் மஹ்தி வெளிப்பட்டு இவர்தான் மஹ்தி என அல்லாஹ்வைக் கொண்டு தெரிவிக்கப்படும் வரை ஜிஹாத் என்பதில்லை.
யூதர்கள்: இவர்கள் மஃரிப் வணக்கத்தை நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொள்ளும் வரை பிற்படுத்துவர்.
ராஃபிழிகள்: இவர்களும் மஃரிப் வணக்கத்தை பிற்படுத்துவோரேயாகும்.
யூதர்கள்: கிப்லாவின் திசையை விட்டு சற்று விலகியே வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான். யூதர்கள் வணங்கும்போது ஆடி அசைந்து வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான் வணங்குகின்றனர். யூதர்கள் ஆடைகளை தொங்கவிட்டு வணங்குவதைப் போலவே ஷியாக்களும் வணங்குகின்றனர். யூதர்கள் முஸ்லிம்களது இரத்தத்தை ஹலால் எனக் கருதுவது போலவே ராஃபிழிகள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் இரத்தத்தை ஹலாலென் கருதுகின்றனர். யூதர்கள் பெண்களின் இத்தா காலத்தை கணக்கில் கொள்ளாதது போன்று இவர்களும் கணக்கில் கொள்வதில்லை. யூதர்கள் முத்தலாக்கை மதிக்காதது போன்று ஷியாக்களும் மதிப்பதில்லை. யூதர்கள் தௌராத்தில் இடைச் சொருகல் செய்ததை போன்று இவர்கள் குர்ஆனில் செய்துள்ளனர். யூதர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிரியாகக் கணித்திருப்பதைப் போன்று ஷியாக்களில் ஒரு பிரிவாhர் ஜிப்ரீலவர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்க வேண்டிய வஹியை தவறாக இன்னொருவருக்கு வழங்கிவிட்டார் என கூறுகின்றனர். இவர்கள் நாசமாகட்டும். அழிந்து போகட்டும்’ என்று கூறுகின்றனர்.
கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் தகுதியான கலீபாக்களென்போர் ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரே. அஹ்லு சுன்னாவின் கொள்கை தோழர்களனைவரையும் பரிசுத்தப்படுத்தி அல்லாஹ் ரஸூலின் பொருத்தத்தைப் பெறுவதுதான். – இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு ரலியல்லாஹு அன்ஹு.
செய்யிதினா ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் போன்றோரின் கிலாபத் ஆட்சியை உண்மைபடுத்துவதே உனது அகீதா ஈடேற்றமடைய போதுமானதாகும். -ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.
முதல் கலீபா ஸித்தீகுல் அக்பர், இரண்டாம் கலீபா உமர் பாரூக், மூன்றாம் கலீபா உத்மான் கனீ, நான்காம் கலீபா அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களாகும். – இமாம் கமால் இப்னு ஹுகாம் ஹனபி ரலியல்லாஹு அன்ஹு.
நபித்தோழர்களில் நான்கு கலீபாக்களும், பின்னர் சுபச் செய்தி வழங்கப்பட்ட தோழர்களும், அதன்பின் அஹ்லெ பத்ர், பின்பு அஹ்லெ உஹத்;, அதையடுத்து பைத்துர் ரிழ்வான் ரலியல்லாஹு அன்ஹும் என்பதே எனது அகீதாவாகும்.
– இமாம் நவவி ஷாபிஇ ரலியல்லாஹு அன்ஹு.
இன்னும் இது போன்ற மகான்கள் சொன்ன சொற்கள் நமக்கு நமது அகீதாவை படிப்பினையாக்கி போதித்துக் கொண்டிருக்கிறது.
மார்க்கத் தீர்ப்பு:
புனித கண்மணி நாயகத் தோழர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். -அல்குர்ஆன்.
எனது தோழர்களை நேசிப்பவன் என்னை நேசித்தவன். அவர்கள் மீது கோபம் கொள்வோர் என்னைக் கோபித்தவராவார். -நபிமொழி
இஆனத்துத்தாலிபீன் நூலின் 4:159ல் ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஸஹாபி என்பதை பொய்யாக்குவதும், ஸெய்யிததுனா ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இழித்துரைப்பதும் ‘குப்ராகும்’ என்றும் , அதே நூல் பக்கம் 4:149 ல் குர்ஆனில் உள்ள ஒரு அட்சரத்தையேனும் சந்தேகிப்பது குப்ரை ஏற்படுத்துவதாகும்.
ஹழ்ரத் சித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் மறுப்பது ‘குப்ராகும்’ -நூல்: பத்ஹுல் கதீர் 1:304
மூன்று தோழர்களை விட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சிறந்தவர் என்று எண்ணுவது பித்அத்தாகும். இதுபோன்றே ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் கிலாபத்தை – ஆட்சியை மறுப்பது குப்ராகும். நூல்: ஹாஸயத்துஷ் ஷிப்லி அலா திப்யீகில் ஹகாயிக் 1:135.
ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் வர்ணிப்பதும், அவர்களை குறை கூறுவதும் ‘குப்ராகும்’ நூல்: பஹ்ருல் ராயிக் 5:126.
ஷைகைன் ஆகிய இருவரின் கிலாபத்தை பொய்யாக்குவதும், மறுப்பதும் குப்ராகும்.
நூல்: பதாவா பஸ்ஸாஸிய்யா 6:318.
ஸெய்யிதினா ஸித்தீகுல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாபத்தை மறுப்பது குப்ராகும். நூல்: hஷியத்துத் தஹாவி அலா மராகில் ஃபலாஹ். பக்கம் 181.
இதுவரை மேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு நபித் தோழர்களை ஏசுவதும், அவர்களை இழித்துரைப்பதும், சாபமிடுவதும் குப்ரு என்னும் நிபந்தனைக்கு உட்படுகின்றது. அதாவது இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் குப்ரு ஏற்படும் என்று தெரிய வருகிறது. ஆக இவ்விஷயங்களை செய்த ஷியாக்களின் நிலை குப்ரான ஒன்றாகிறது.
அல்லாஹ் நம் அனைவர்களையும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஸீலாவைக் கொண்டு பாதுகாப்பானாக! ஆமீன்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.