السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 21 December 2015

மீலாத் விழாக்களுக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா?

மீலாத் விழாக்களுக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா?
கேள்வி :இன்று நடைமுறையில் இருக்கும் மீலாத் - மௌலித் வைபவங்களுக்கு குர்ஆனிலிருந்தும் அல்லது ஹதீதுகளிலிருந்தும் ஆதாரம் காட்ட முடியுமா? ஆதாரம் காட்டினால், பத்து இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சவால் விட்டு ஒரு பிரசாரம் வஹாபிகளால் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களின் சவாலுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
பதில் : வஹாபிகளின் இச்செயல் புதியது அல்ல. பல நூறு ஆண்டுகளாக அவர்கள் பாடும் பல்லவிதான் இது. வழிகெட்ட வஹாபிகளிடம் சில வினாக்களை நாமும் விடுகி்ன்றோம். அதற்கு அவர்கள் கூறும் பதிலில் எமது பதில் அடங்கியுள்ளது. கவனமாகப் படியுங்கள். வழிகேடர்களின் சதி வலையைப் புரிந்து கொள்வீர்கள். நமது வினாவுக்கு சரியான பதில் கூறினால் அதே தொகையை நாம் தருவோம். இன்ஷா அல்லாஹ்!
01. உமது றப்பின் நிஃமத்தை எடுத்துக் கூறுவீராக! (அல்குர்ஆன் - 93 : 11)
வினா : றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் பிறப்பு இந்த உலகிற்கு நிஃமத்தாக இல்லை என்பதையும், மீலாத் விழாக்களில் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றையும், அன்னார் பற்றிய சிறப்பம்சங்களையும், மக்களுக்கு எடுத்துக் கூறுவது அல்லாஹ்வின் நிஃமத்தாகிய றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களைப் பற்றி கூறுவதும் ஆகாதா? வஹாபிகள் எடுத்துக் கூற வேண்டும்.
02. நபிகள் நாதர் அகிலத்தின் அருட்கொடை முத்திரை நபி. அவர்கள் பிறந்த தினம் மகத்துவமிக்கவர்களி்ன் நாட்களைச் சார்ந்து இல்லையா? மீலாத் விழா மகத்துவமிக்க அத்தினத்தை நினைவுபடுத்துவதாக ஆகாதா? வஹாபிகள் சுற்றி வளைக்காமல் பதில் கூற வேண்டும்.
03. நபியே கூறுவீராக! அல்லாஹ்வின் வரிசை, அவன் றஹ்மத் அவை கொண்டு சந்தோஷம் கொண்டாடட்டும். (அல்குர்ஆன் - 10 : 58)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் பிறப்பு, அல்லாஹ்வின் வரிசை, றஹ்மத் இல்லை என்று வஹாபிகள் நிரூபிக்கட்டும். அல்லது மீலாத் விழாக்கள் அல்லாஹ்வின் வரிசை, றஹ்மத் பற்றி நினைவுபடுத்தி மகிழ்கின்ற விழா இல்லை என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
04. றஸூல் எதை உங்களுக்கு கொண்டு வந்தாரோ அதை எடுங்கள். இன்னும் எதை உங்களுக்கு விலக்கினாரோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 59 : 7)
மௌலித் ஓதுவது மீலாத் விழாக்கள் எடுப்பது கூடாத செயல் என்பதை வழிகெட்ட வஹாபிகள் குர்ஆனிலிருந்தோ, ஹதீதுகளிலிருந்தோ மழுப்பாமல் சுற்றி வளைக்காமலும் நேரடியாக நிரூபித்துக் காட்ட வேண்டும்.
றபீஉல் அவ்வல் மாதத்தில் மௌலிது ஓதுவது, மீலாத் விழா எடுப்பது பாவமான காரியம், ஷரீஅத் தடை செய்த ஒன்று என்பதை திருக்குர்ஆன் வசனத்தையும், அதற்கு நபியவர்கள் அல்லது, ஸஹாபாக்கள் கூறிய விளக்கத்தை ஸனதுடன் பதிவுசெய்யப்பட்ட ஹதீது நூற்களை பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தட்டும்.
வஹாபிகளுக்கு வசதியாக மீலாத் விழா எடுப்பது அல்லது மௌலிது ஓதுவது பாவமான செயல் என்பதை நான்கு இமாம்களில் ஒருவராவது அல்லது ஹதீதுத்துறை அறிஞர்கள் அல்லது பிக்ஃ சட்ட அறிஞர்கள் யாராவது கூறியிருப்பின் தக்க ஆதாரத்துடன் முன் வைக்கட்டும்.
05. வழிகெட்ட வஹாபிகள் மகாநாடுகள் நடத்துவது, அதற்காக உணவு பரிமாறுவது, அதற்காக சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுவது, பதாதைகள் தொங்க விடுவது, மேடை அமைத்து மின் அலங்காரம் செய்து சோடிப்பது, மத்ரஸாக்கள் அமைத்து அதற்கென்று பாடத்திட்டம் வகுத்து குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்து பாடபோதனை புரிவது, பரீட்சை நடாத்தி சித்தி எய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பட்டம் சூட்டுவது, பத்திரிகை நடாத்துவது போன்றவைகள் நபியவர்கள் காலத்தில் நடந்தவைகள் என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் சுற்றி வளைக்காமல் நேரடியான ஆதாரத்துடன் வஹாபிகள் முன் வைக்க வேண்டும்.

06. நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சி கூறுபவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் ஈமான் கொள்வதற்காக. இன்னும் அவரை கண்ணியப் படுத்துங்கள். அவரை கௌரவப்படுத்துங்கள். (அல்குர்ஆன் - 48 : 8,9)

எவர் அவரை (ரஸூலை) ஈமான்கொண்டு, இன்னும் அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து அவரோடு இறக்கப்பட்ட வேதத்தைப் பின்பற்றினாரோ அக்கூட்டம்தான் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் - 7 : 157)
“நீங்கள் தொழுது ஸகாத்தும் கொடுத்து, எனது றஸூல்மார்களை ஈமான் கொண்டு, அவர்களைக் கண்ணியப்படுத்தி, அழகிய முறையில் அல்லாஹ்வுக்கு கடன் வழங்குவீர்களாயின், உங்கள் குற்றங்களை விட்டும் நீக்கி விடுவேன், சொர்க்கத்தில் நுழைவிப்பேன். அதன் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். இதன் பின் உங்களில் யாராவது நிராகரித்தால் நிச்சயமாக நேரான வழியிலிருந்து தப்பியவராவர்”. (அல்குர்ஆன் - 5 : 12)
மேற்கண்ட மூன்று திருவசனங்களிலும் அல்லாஹ்வின் திருத்தூதரை கண்ணியப்படுத்துமாறு அல்லாஹ் கட்டளை யிட்டுள்ளான். அல்லாஹ்வின் கட்டளை எதுவித குறிப்பும் இல்லாமல் பொதுமையாக உள்ளது. “அல்முத்லகு யஜ்ரி அலா இத்லாகிஹி” - “ஒரு பொதுமை, பொதுமையாகவே, இருக்கும்“ என்பது ஷரிஅத்தின் விதி.
(பார்க்க. அத்தவ்ழீஹ் வத்தல்வீஹ், பாகம் - 01, பக்கம் - 169)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மீது பொதுவாகவே கண்ணியம் செலுத்துவதில் அனைத்து வகையான கண்ணியமும் அடங்கும். ஷரீஅத் தடை விதிக்காத அனைத்து வகையான கண்ணியமும் செலுத்துமாறு திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகின்றது.

அல்லாஹ் அருளிய றஹ்மத் மீது சந்தோஷம் கொண்டாடுவது, அல்லாஹ்வின் நாட்களை எடுத்துச் சொல்வது அல்லாஹ்வின் நிஃமத்தை பறை சாற்றுவது என்பதெல்லாம் பொதுமையானதாகும். இவற்றை ஷரீஅத் அனுமதிக் கத்தக்க எவ்வழியில் செய்தாலும் அது அல்லாஹ்வி்ன் கட்டளைக்கு உட்பட்டதாகும்.
அல்லாஹ் அனுமதித்த ஒன்றை அல்லாஹ்தான் மாற்ற வேண்டும். அல்லது நபியவர்கள் மாற்ற வேண்டும். இரண்டுமில்லாமல் ஒருவர் நிராகரித்தால் அல்லது அல்லாஹ் பொதுமையாகக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பாக் கினால், அவர் திருக்குர்ஆனுக்கு சுய விளக்கம் கூறியவராவார். அதனால் தனது இடததை மறுமையில் நரகத்தில் ஆக்கிக் கொண்ட துர்ப்பாக்கியத்திற்குரியவராவார்.

ஒருவரை ஒருவர் மனதால் நேசித்தால் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது, அவரைப்பற்றி யாராவது பாராட்டிப் பேசினால் மன மகிழ்ச்சியடைவது, அவரை வரவேற்பது, அவரைப் புகழ்து பாடிய கவிதைகளை ரசிப்பது மனித இயல்பாகும்.
“ஒன்றை ஒருவன் நேசித்தால் அதிகமாக அதை நினைவு கூருவான்” என்ற உண்மையை நினைவு கூர்ந்து பாருங்கள்.

மனதில் வெறுப்பும், குரோதமும் உள்ளவன் அவர் பாராட்டப்படுவதையோ விரும்ப மாட்டான். யாராவது அவன் வெறுப்பவரை பாராட்டினால் ஆத்திரப்படுவான். புகழ்ந்து பாடுபவரை தாக்குவான். இது மனித இயல்பு நிலை.

நண்பனையும், விரோதியையும் அறிந்து கொள்வதற்கான முறை இதுதான். “பசுத்தோல் போத்திய புலி போல்“ சிலர் முஸ்லிம் பெயரில் முனாபிக்குகளாக நடமாடுகின்றனர். இதற்குரிய சரியான உரைக்கல் நபிகளாரைப் பற்றி அவர் கூறும் கருத்துரைகளாகும். “நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அவர்” அவரை சாதாரண மனிதரை விட அதிகம் புகழக் கூடாது. தனது தாய் தந்தையே நரகிலிருந்து காப்பாற்ற முடியாதவர் நம்மைக் காப்பாற்றுவாரா? (நஊதுபில்லாஹ்) இப்படியான சாக்கடை வார்த்தைகளை நாக்கூசாமல் கூறுவோர் எப்படி நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிப்பவராகக் கூற முடியும்?

இப்படி, நெஞ்சில் நஞ்சும், உதட்டில் அமுதமும் வைத்துக்கொண்டு வஞ்சகத்தனமாக நடப்போர்தான் நபிகள் நாயகத்தின் மீது புகழ்பாடும் மௌலிதுகளையும், மீலாத் விழாக்களையும் வெறுக்கின்றனர். நயவஞ்சகர்கள் நாவிலிருந்தும், நடத்தையிலிருந்தும் நபிகள் நாயகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. அறிவுக்கோ, ஷரிஅத்திற்கோ எவ்விதத்திலும் பொருந்தாத புரட்டு வாதங்களையே தொடர்ந்தும் பாடுவர். இது அவர்களின் பூர்வீகப் பண்பு. அதனால் இவர்கள் கூறும் வெற்று வாதங்களையும், பொருத்தமில்லாத மற்ற விளக்கங்களையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு அறிவு பூர்வமாகவும் ஈமானி்ன் வெளிச்சத்தோடும் நோக்க வேண்டியது முஃமின்களின் கடமையாகும். இதில் தவறுபவர் மறுமையில் வருந்த வேண்டி வரும்.
“ஒன்றை மறுப்பவர்தான் ஆதாரம் காட்ட வேண்டும்“ என்பது நபி மொழி “ரஸூல் எதை தடுத்தார்களோ அதிலிருந்து விலகியிருங்கள்“. என்பது இறை கட்டளை. “ஒன்றின் அடிப்படைச் சட்டம் ஆகும்“ என்பதும் நபி மொழிதான். இவைதான் இஸ்லாமிய உஸூல் முறையாகும். இதனைப் புரிந்த எவரும் மீலாத் விழாக்களுக்குரிய ஆதாரத்தை, செய்கின்றவர்களிடம் கேட்கமாட்டார்கள்.

மீலாத் விழா கூடாது என்று எவர் வாதிக்கின்றாரோ அவர்தான் தக்க ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இதுவரை வஹாபிகள் எவரும் மீலாத் விழா கூடாது என்பதற்கு சரியான ஆதாரத்தை முன்வைக்கவில்லை.

மீலாத் விழா கூடாது என்போர், தக்க ஆதாரத்தை முன்வைக்காமல் இருப்பதுதான் எங்களுக்கான தக்க ஆதாரமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நிரபராதி, தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்று கேட்பது உலகில் எங்குமில்லாத கேள்வியாகும்.
அல்லாஹ் காப்பானாக!

Sunday 20 December 2015

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் பயட்டேடா

நபிகள் நாயகம் (ஸல்) பயட்டேடா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின்  வரலாற்றுச் சுருக்கம்
பெயா : முஹம்மது
( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை
பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா
தகுதி:
1 - 40 வயதில் நபி
( இறைவனது செய்திகளை மக்களுக்குசொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )
2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./
3 - இறுதித்தூதா
கல்வி :எழுதப்படிக்க கற்காதவா
தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்
(முஹம்மதுநபி (ஸல்) ஆமினாஅம்மாவின்காப்பத்தில்ஆறுமாதசிசுவாகஇருக்கும்போதுஅப்துல்லாஹ்மரணமடைந்தா. )
தாயார் : ஆமினாபின்து வஹப்
(முஹம்மதுநபியின்ஆறாவதுவயதில்தாயாஆமினாஇறையடிசோந்தார்)பாட்டனா (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸைபெரிய தந்தை : அபூதாலிப்
முதல்திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண்கதீஜா ( ரலி ) அவாகளைதிருமணம் செய்தாகள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி)மரணமடைந்தாகள்.மற்ற திருமணஙகள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின்அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணஙகளுக்காக அண்ணலா மேலும்பல பெண்களை திருமணஙகள் செய்தாகள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளான்காலத்திலேயே இறந்தா. பெருமானா (ஸல்) அவாகள் இறந்த போது அவருக்கு 9 மனைவியாஇருந்தனா. ( 2 )
மனைவியா பெயாகள்
1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபீபக்கா (ரலி)
3) உம்முசலமா (ரலி)
4) ஹப்ஸாபின்து உமா (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)குழந்தைகள் ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )
1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவா - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவா - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவாகள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்குபிறந்தவாகள். )
7) இபுறாகீம் (ரலி) ( இவா மாய்யதுல் கிப்திய்யா ( ரலி )அவாகளுக்குபிறந்தவா. ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனா )

முக்கிய நிகழ்வுகள்
40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவா ஜிப்ரயீல் (அலை) அவாகளை சந்தித்தாகள் . முதல் வேத வசனம்அருளப்பட்டதுதாயிப் பயணம் -ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு
தனது 52 வயதில் மிஃராஜ்விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டா. இறைவனை சந்தித்து உரையாடினாகள்.
தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினாகள்.
இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.
ஹிஜ் 10 ம்ஆண்டு சுமா 1 லட்சம் தோழாகளுடன் ஹஜ் செய்தாகள். அதற்கடுத்த வருடம்பெருமானா (ஸல் ) அவாகள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் (ஹஜஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )
போகள்
பலபோகள்அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லைகொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும்உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப்போற்றி வரும் இஸலாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவா வாழ்ந்த 10 வருட காலஙகளில்தானே 27 போகளை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்குதனது தோழாகளைஅனுப்பி வைக்கவும் நோந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில்மதத்தை திணிப்பதோ அப்போகளின் நோக்கமல்ல. .அப்போகளின் போதுமிகஎச்சாக்கையாகமனித உயிகள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள்பாத்துக் கொண்டாகள் . இப்போகளில் மொத்தம் உயிரிழந்தவாகள் 1018 போ மட்டுமே.நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமேசண்டை நடந்தது. அவையாவன.
1 பத்ஹிஜ்ö2 - 2 உஹத்ஹிஜ்ö3 - 3 அகழ்யுத்தம்ஹிஜ்ö5 - 4 பனூகுறைழாஹிஜ்ö5
5முரைஸிஃ ஹிஜ்ö5 -6 கைபாஹிஜ்ö7 -7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8 - 8 ஹுனைன்ஹிஜ் 8
9 தாயிப்ஹிஜ் 8
ஒப்பந்தஙகள்
அகபா ஒப்பந்தஙகள்
நபி (ஸல் அவாகள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவரை ரகசியமாகசந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணஙகள் அகபாஉடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போதுமதீனா வாசிகள் ஆறு போ முஸ்லிம்களாயினா.
621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 போ முஸ்லிம்களாயினா 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 போ முஸ்லிம்களாயினா
நபி (ஸல்) அவாகள் மதீனா வந்து சோந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ -பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம்செய்தாகள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ 6 ம்ஆண்டுமுஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுககும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சஙகளில் இரண்டு அம்சஙகள் ஒரு தரப்பாக / எதிகளுக்குச் சாபாக இருந்தபோதும் ( 4 )
10 வருடஙகளுக்கு ஒருவரோடு ஒருவா சண்டையிட்டுக்கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள்ஒத்துக் கொண்டாகள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாகஅமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வாணித்தான்.

அற்புதஙகள்
அல்லாஹஒருவரை நபி எனத் தோவு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக்கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காயஙகளைச் செய்யும் ஆற்றலைவழஙகுகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமானசெயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் )எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் )அவாகளது பிரதான பொய அற்புதம் குஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பலஅற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில்முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்பசந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது.
சீìதிருத்தஙகள்
மது / óதாட்டம் / விபச்சாரம் / திருட்டுஆகியவற்றை ஒழித்தாìகள்.
பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினாகள்.
ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தாகள்.
பெண்களுக்கு வாழ்வுமை /மண உமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துமையையும் பெற்றுத் தந்தாகள்.வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினாகள்.இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கிமனித சமத்துவம் நிலைநாட்டினாகள்.
சாதனைகள்
தனதுநாற்பதாவது வயதில் நபி எனப்பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்த 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்தஅரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தாகள் . எந்தஅளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதைவிடக் கொடியவிஷயமாக அதைக் கருதினா.
மூடப்பழக்க வழக்கஙகளும் மூக்கத்தனமானநடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவாகளதுஅறிவாற்றலை வளாத்து ஒரு சிறந்த நாகாகத்திற்கு சொந்தக்காரர்களாகமாற்றினாகள்.
சிறு சிறு குடும்பஙகளாக வாழ்ந்து வந்த அரபுக்குலஙகளை ஒரு தேசிய இனமாக உருவாக்கினாகள்.அரபுலகின்அறியப்பட்டவரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன்உள்ளிட்ட பெரிய பரந்து பட்ட அரசாஙகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தாகள். உலகம்முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியைசெயல்படுத்திக்காட்டினாகள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினாநேரடியாகவும் மற்றும் பலா மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டுவாழ்ந்து வருகின்றனா.
தோழாகள்
அன்னாரதுதோழாகள் சஹாபாக்கள் எனப்பட்டனா.தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில்குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும்மதீனாவைப்பபிறப்பிடமாக கொண்ட தோழாகள்அன்சா ( உதவியாளா ) என்றும் அழைக்கப்பட்டனா.
முக்கியமான தோழாகள்
1 அபூபக்கா (ரலி)
2 உமா (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
உயாந்தோனை நோக்கி
தனது 63 வயதில் ஹிஜ 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமைபயணமானாகள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னைஆயிஷா ( ரலி ) அவாகளின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டாகள்.இன்னா லில்லாஹி `
முஹம்மது (ஸல்) அவாகள் எஙகள் தலைவாஅவருக்குகீழ்பணிந்ததனால் எஙகளுக்கு மாயாதை வந்தது( ஓ அரபுப் பாடல் )

Friday 18 December 2015

மீலாது மௌலிதுகளுக்கு ஷரீஅத்தில் ஆதாரம் உண்டு

இன்று உலகில் பல்வேறு சமுதாய மக்களிடையே தேசிய, இன, மத, மொழி, கலை, கலாசார பண்பாடு பற்றிய பல நிகழ்வுகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கின்றோம்.
இவற்றுள் சுதந்திர தினம், புதுவருடம், இலக்கியப் பண்பாட்டு விழா, பிறந்ததின விழா போன்றவைகள் நடைமுறையிலிருக்கும் முக்கிய விழாக்களாகும்.
மேற்கண்ட விழாக்களை, கொண்டாட்டங்களை சமய, மொழி வேறுபாடின்றி அனைவரும் விருப்புடன் செய்து வருகின்றனர். இவற்றில் எவரும் சமய சாயம் பூசி தீர்ப்புக் கூறுவது கிடையாது ஆனால்,
உலகின் உத்தமர், வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு, நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் பிறந்த தினவிழாவை—மீலாதைக் கொண்டாடும்போது மட்டும் சிலர் வெகுண்டெழுந்து ஷிர்க், ஹறாம், பித்அத் என்றெல்லாம் தீர்ப்புக் கூற முற்படுகின்றனர். செய்யக்கூடாத பெரும்பாவத்தைச் செய்வது போன்று தடுக்க பெரு முயற்சியெடுக்கின்றனர்.
நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் சிறப்பை, மேன்மையை கவிதையாக, உரைநடையாக பாடுவதில், வாசிப்பதில் என்ன குறை வந்துள்ளது?
ஓர் அறிவாளி, அரசியல் தலைவர், சமூகத்தின் முக்கிய சேவைச்செம்மல், இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரை வாழும்போதும், மறைந்த பின்பும் மதித்து, பாராட்டுவிழா நடத்தப்படுவதை யாரும் தடுக்கின்றார்களா?
அப்படியாயின், நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் குணநலன்களை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை கவிதையாகப் பாடும்போது மாத்திரம் தடுக்க முற்படுவது ஏன்?
வேந்தர் நபியவர்கள் பிறக்க முன்பும், பிறந்த போதும், நபியாக அனுப்பப்படுமுன்பும், பின்பும் வாழும்போதும், மறைந்த பின்பும் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒருவராகவே விளங்கினார்கள்.
பாராட்டுக்குரியவர், பாராட்டுக்குத் தகுதியானவர் என்ற காரணத்தினால்தான் முஹம்மது, அஹ்மது, முஸ்தபா என்ற திருநாமங்கள் அன்னாருக்குச் சூட்டப்பட்டன. பாராட்டுக்குரியவர் என்ற திருநாமம் கொண்டவர், பாராட்டுக்குத் தகுதியற்றவரானது எப்படி?
பாராட்டும், புகழும் ஒரு மனிதனிடம் காணப்படும் நற்குணங்களை, சேவைகளை, அறிவாற்றல், சிறப்புத் தன்மைகள், நற்பண்புகள் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு வருபவை.
புகழின் அளவும் எல்லையும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது அவரிடம் காணப்படும் சிறப்பியல்புகளின் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். வீண்விரயம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுவதுபோல் புகழும் ஆளுக்குஆள் வேறுபடும். ஒருவரிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது கூடாது. அதுபோல் நல்லெண்ணம் இல்லாமல் ஒருவரைப் பாராட்டுவதும் தடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை “முகஸ்துதி” என்று கூறுகின்றோம். அது கொடிய குற்றம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் அகிலத்தின் அருட்பிளம்பு, வையகக் காரணி, குணத்தின் குன்று உயிரிலும் மேலாக நேசிக்கப்படவேண்டிய ஒருவரைப் புகழக்கூடாது என்பதில் இருக்கும் நியாயம் என்ன?
“நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணத்திலிருக்கின்றீர்கள்” என்று திருக்குர்ஆன் தெட்டத்தெளிவாகக் கூறுகின்றது. திருக்குர்ஆன் திருத்தமாகச் சொல்லுகின்ற அன்னாரது மகத்தான எல்லையற்ற பண்பை, நற்குணத்தை பிறருக்கு எடுத்துக் கூறவதில் என்ன தடை இருக்கின்றது?
நூறு ஆண்டுகளின் பின் உயிர்பெற்றெழுந்து உலகில் வாழ்ந்ததைப் பார்த்து வியந்த யூதர்கள் நபி உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
அதுபோல் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் தந்தையின்றிப் பிறந்தார்கள், மரணித்தவர்களை உயிர்பெறச் செய்தார்கள். வெண்குஷ்டம், கருங்குஷ்டம் போன்ற கொடிய வியாதிகளைச் சுகப்படுத்தினார்கள். பிறவிக்குருடனை தடவி பார்வை கொடுத்தார்கள். வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் மறைவானவற்றை தெரியப்படுத்தினார்கள். இப்படியான அற்புதங்களைப் பார்த்த “நஸாராக்கள்” நபி ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹ்வின் குமாரர் என்றார்கள்.
யூதர்களும், நஸாராக்களும் தங்கள் நபிமார்கள் மீது இல்லாத தெய்வீகத் தன்மையை இருப்பதாகக் கூறியது பொய்யான வாதமாகும். பொய் நிராகரிக்கப்பட வேண்டியது. பொய்யில் புகழ் வரமுடியாது.
அதனால் இவர்களின் வாதம் மறுக்கப்பட்டது. இவர்களின் புகழ் எல்லை தாண்டியது என்று சுட்டிக் காட்டப்பட்டது, அதனால் தடுக்கப்பட்டது.
ஆனால், வேந்தர் நபியவர்கள் விடயத்தில் எல்லை தாண்டிய எந்தப் புகழும் சேர்க்கப்படவில்லை. அவர்களிடம் காணப்பட்ட குணங்களைக் கூறி புகழ் பாடப்படுகின்றது. தெய்வீகத் தன்மை தவிர்ந்த அல்லாஹ்வின் அடியார் என்ற எல்லைக்குள் எந்த ஒரு புகழும் அது எவ்வளவு உயர்ந்தாலும் அது அன்னாருக்குப் பொருத்தமாகவே கருதப்படுகின்றது.
இமாம் பூஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது இறவாப் புகழ்பெற்ற புர்தா ஷரீபில் பின்வருமாறு பண்ணிசைக்கின்றார்கள்.

  1. Eravur meelad 2014
  2. Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-01
  3. Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-02
  4. Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-03
  5. Eravur Meerakerny Meeladhun Nabi (S.A.W) 2014 Part-01
  6. Eravur Meerakerny Meeladhun Nabi (S.A.W) 2014 Part-02


Saturday 12 December 2015

இவர்கள் உண்மை விசுவாசிகள்.-தொடர் -11

இவர்கள் உண்மை விசுவாசிகள்.-தொடர் -11

இவர்கள் உண்மை விசுவாசிகள்.
“நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் எதிர்கின்றார்களோ அவரகள் மிகத் தாழ்ந்தவர்கள்.” சூரத்துல் முஜாதலா 20ம் வசனம்.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசங்கொள்ளும் கூட்டத்தினரை, அல்லாஹ்வுக்கும் அவன் ரசூலுக்கும் மாறு செய்பவர்களை நேசிப்பவர்களாக நீர் பெற்றுக்கொள்ளமாட்டீர். அவ்வாறு மாறு செய்பவர்கள் இவர்களுடைய தந்தைமார்களாக அல்லது அவர்களுடைய புதல்வர்களாக அல்லது அவர்களுடைய சகோதரர்களாக அல்லது அவர்களுடைய குடும்பத்தினர்களாக இருந்த போதிலும் சரியே!,(ஏனெனில் விசுவாசங்கொண்ட) அவர்கள் இதயங்களில் அ(வ்விறை)வன் ஈமானை எழுதிவிட்டான். இன்னும் அவர்களைத் தனது அருள் என்னும் ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தி இருக்கிறான். மேலும் அவர்களை சுவனங்களில் நிரந்தரமாக பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப்பற்றி திருப்தியடைந்தான். அவர்களும் அவனைத் திருப்தியடைந்தார்கள். அறிந்துகொள், நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுவார்கள்.” சூரத்துல் முஜாதலா 22ம் வசனம்.
அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் தரக்குறைவாகப் பேசுகின்றவர்கள் இஸ்லாத்தின் விரோதிகள். அவர்கள் தங்கள் தந்தையராகவோ தனையராகவோ ஏனைய உறவினர்களாக இருப்பினும்கூட உண்மை விசுவாசிகள் நேசிக்க மாட்டார்கள்.
உண்மை விசுவாசிகளே!
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” கூறப்படாத நல்ல காரியங்கள் குறையுள்ளதென்றும் அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறப்படாத வணக்கம் திரையிடப்பட்டிருக்கும் என்ற நபிமொழிகள் ஆழமான அற்புதமான கருத்துக்களை தாங்கி நிற்கிறது.
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” கூறியே சகல நல்ல காரியங்களையும் துவக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் பெயர்கூறி துவக்கம் செய்ய வேண்டும் என்று அதற்குப் பொருள் கூறுகின்றோம். உண்மைதான். ஆனாலும்கூட இதற்குள் இவ்வாறனதொரு கருத்தும் கூறுவதற்கு சந்தர்பம் இருக்கின்றதாவென்று ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.
சகல நல்ல காரியங்களையும் துவக்கம் செய்யும் முன் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று கூறவேண்டும் என்பது ஸுன்னத்தான ஒரு அமலாக இருக்கிறது. எனவே சுன்னத்தானதொரு அமலை செய்யும்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நமது நினைவுக்கு வர வேண்டுமா? இல்லையா?.
அல்லாஹ், அகிலங்களையெல்லாம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக்கொண்டுதான் ஆரம்பித்து வைத்தான். எனவே அகிலங்களெல்லாம் அண்ணலாரின் நினைவோடு சலக நல்ல காரியங்களையும் ஆரம்பிக்கவேண்டும் என்று இது வலியுறுத்துகிறதென்று சொன்னால் இதனை உங்களால் ஜீரணிக்க முடிகின்றதா?
இன்னும் ஒவ்வொரு நல்ல கருமங்களையும் முடிக்கும்போது ஸலவாத் கூறி முடிக்க வேண்டும். கலிமாவை பெருமானாரின் பெயரைக்கொண்டு முடிக்க வேண்டும். தொழுகையை சலாம் கூறி முடிக்கின்றோம். நோன்பில் ஸகாத்துல் பித்ராவுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. ஸகாத்தில் கூட்டு ஸகாத்திற்கு சிறப்பு இருக்கிறது. ஹஜ், உம்ராவை தவாபுல் விதாவைக்கொண்டு நிறைவு செய்கின்றோம். இவ்வாறு இங்கு கூறப்பட்ட அல்லது கூறப்படாத ஒவ்வொரு விடயமும் முடிவுறும்போது அங்கே நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கண்பித்துத்தந்த வழிமுறைகள் நினைவுக்கு வருகின்றதா? இல்லையா?
பெருமானாரைக் கொண்டு துவக்கம் பெற்ற இவ்வுலகம் பெருமானாரின் மறைவோடு அது முடிவுக்கு வந்துவிட்டது. அவ்வாறே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை மீண்டும் அவர்களின் அருள் நிறைந்த சுவத்துப் பூங்காவில் இருந்து எழுப்பாட்டி வைபதனூடாக துவக்கம் பெரும் மஹ்ஷரின் வாழ்க்கை, பெருமானாரின் பிரார்த்தனையோடு அதுவும் முடிவுக்கு வருகிறது. இன்னும் சுவனத்து வாயில்களும் பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினால்தான் துவக்கம் பெறப்போகிறது. அதன் முடிவை அல்லாஹ்வும் அவன் ரசூலுமே நன்கறிந்தவர்கள்.
இவ்வாறு பெருமானாரின் பெருமைகள் போதிக்கப்பட்டு வருகின்றபோது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஒரு கூட்டம் ஏகத்துவ அணி என்னும் பெயரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க இன்னுமொரு கூட்டம் தொழுகைக்கு அழைத்தல் என்னும் பெயரில் நடமாடித் திரிகிறது.
எனவே உண்மையான விசுவாசிகள் பெருமானார் அவர்களின் நினைவில் இருந்து விலகி தூரமாகி அகன்று எவ்வாறு இருக்க முடியாதோ அவ்வாறே “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதற்கு பொருள் தெரியாமல் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவமதிக்கின்ற இயக்கங்களை நேசிப்பவர்களாகவும் உண்மை விசுவாசிகள் என்றென்றும் இருக்கமாட்டார்கள்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரை சுமார் 800 ஆண்டுகள் அந்நாடு இஸ்லாமியர்களால் ஆளப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த காலப்பகுதியில் சுன்னா, ஷீஆ என்னும் இரு கொள்கைக் கோட்பாடுகள்தான் அங்கு இருந்திருக்கிறது. பதில் கூற முடியாதளவுக்கு ஷீஆ அமைப்புக்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அறிஜர்களால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேவபந்த் தாருல் உலூம் மதரசா தோற்றம் (31- 05-1866) பெற்றதன் பின்னர் 800 ஆண்டுகள் இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டில் காணாத பிளவுகளை சீரழிவுகளை இந்தியா கண்டு கொண்டது.
இன் ஷா அல்லாஹ் தொடரும்..........

Tuesday 8 December 2015

தப்லீக் இயக்க அமைப்பாளர்களே! ஆதரவாளர்களே! 10

தப்லீக் இயக்க அமைப்பாளர்களே! ஆதரவாளர்களே!

தப்லீக் இயக்க அமைப்பாளர்களே! ஆதரவாளர்களே! உங்களிடம் கடுகளவாவது ஈமான் இருக்குமானால் இதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.
அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நம்முடைய பிள்ளைகள், சொத்து சுகங்கள், ஏனையவர்களைவிட அதிகம் நேசிக்கும் ஒருவர்தான் உண்மையான விசுவாசியாகும். (நபி மொழி) எனவே எவரொருவர் சதாவும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் எண்ணத்தில் சிந்தனையில் வாழ்வாரோ அவரே உண்மை விசுவசியாகும்.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நினைவு ஒரு நொடிப்பொழுதுகூட என்னைவிட்டும் பிரிந்திருக்குமனால் நான் என்னை இஸ்லாமியனாக கருதமாட்டேன் என்று ஷாதுலியா தரீக்க்த்தின் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
தேவபந்த் உலமாக்களின் குரு நாதர் அல்லாமா ஹழ்ரத் அஷ்ஷேக் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) நாயகம் அவர்கள் பல வருடங்கள் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் முபாரக்கான தோற்றத்தில் வாழ்ந்து வந்ததாக மௌலவி அஷ்ரப் அலி தானவி (கிஸஸுள் அகாபிர்) எனும் நூலின் 88 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறே அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை சந்திக்க சென்ற பயணத்தில் தன்னில் தன்னுடைய தோற்றத்தில் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை கண்டதாக “அன்பாசுள் ஆரிபீன்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். இதனை தகவலை சென்ற தொடரிலும் பதிவு செய்திருந்தோம்.
இவ்வாறு தப்லீக் இயக்க முன்னோடிகளான தேவபந்த் உலமாக்களின் குருமார்கள் கூறியிருக்க அவர்களின் வழிவந்த இஸ்மாயில் திஹ்லவி பின்வருமாறு எவ்வாறு சொல்வதற்கு முன் வந்திருப்பார்? என்று உள்ளத்தில் கடுகளவாவது ஈமான் உள்ளவராக நீங்கள் இருப்பின் சிந்தித்துப்பாருங்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் ஆழம் அளந்து வெளிப்படுத்தி வைக்க வேண்டும். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தவறுதலாகவாவது ஒரு வார்த்தை வெளிப்படுமானால் அதற்காக தவ்பா செய்து அந்த வார்த்தையை நீக்கிவிட வேண்டுமேயன்றி விளக்கம் கூறி வலிந்துரை செய்திட அவரோ அல்லது அவரது அணியினரோ முன்வருவது புத்திசாலித்தனம் அல்ல.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தொடர்பில் பிழையான தவரான கீழ்த்தரமான அசிங்கமான வார்த்தைகளை உபயோகம் செய்துவிட்டு அதற்குப் பரிகாரம் தேடாமல் அவ்வார்த்தைகளை மீளப்பெறாமல் அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் தற்போதைய தப்லீக் இயக்க தலைவர் மௌலவி தாரிக் ஜமீல் (பாகிஸ்தான்) சைய்யிதுனா ஹுஸைன் ரலியள்ளாஹு அன்ஹு அன்னவர்களை பைத்தியக்காரன் என்று கூறியுள்ளார்.
மரணம் எவரையும் விட்டு வைக்காது. யாராக இருந்தாலும் மரணித்தே ஆக வேண்டும். ஆனாலும்கூட மரணித்து விட்டார் என்ற சொற்பிரயோகத்தினை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விடயத்தில் உபயோகம் செய்திட சைய்யிதுனா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு விரும்பி இருக்கவில்லை. அதனால்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மரணமாகியுள்ளார் என்று சொல்பவரை கொலை செய்வேன் என்று வீர வசனம் பேசிஇருந்தார்கள்.
அவ்வுத்தமத் தோழரின் 34 வது தலைமுறையில் வந்த மௌலவி இஸ்மாயிலின் வார்த்தைப் பிரயோகங்களை சாதாரண எங்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கும்போது இறை நேசர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள்.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின்மீது தரக்குறைவாக கருதப்படும் வார்த்தைக்கு வேறு விளக்கங்கள் இருந்தாலும்கூட அதைச் சொன்னவருக்கு குப்ருடைய பத்வா வழங்கப்படும் என மௌலவி கொன்கொஹி ஸாஹிப் கூறியதாக “அஷ்ஷிஹாபுஸ் ஸாகிப்” எனும் நூலில் பதிவாகியுள்ளது.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“நீங்கள் தொழுகையின் போது உங்கள் மனைவியுடன் கூடுவது அல்லது தீய சலனமுடைய விபச்சார சிந்தனை கொள்வது நல்லது மேலும் ஷைகுமார்களையோ அல்லது ஒரு நல்லடியாரையோ அல்லது அது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவு வருவதைக் காட்டிலும் கீழானது”
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,லாகூர் பதிப்பகம் ]
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“தொழுகையின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவில் மூழ்கி இருப்பதை விட கீழானது”(அஸ்தக்பிருல்லாஹ் )
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]
சிராத்துல் முஸ்தகீம் என்ற பெயரில் இப்னு தைமியாவும் நூல் ஒன்றைத் தொகுத்தார். அதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அஹ்லெ பைத்துகள், சஹாபாக்கள், இமாமே முஜ்தஹித், வலிமார்கள் போன்றோரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இமாம்களின் இஜ்மாவுக்கு முரணாக மார்க்கச் சட்டங்களை இயற்றியுள்ளார்.
இன் ஷா அல்லாஹ் தொடரும் ............

Sunday 6 December 2015

தெஹிவலை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ்


தெஹிவலை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் அரபுக்கல்லூரியில் 03/12/2015 
அன்று இடம்பெற்ற எமது ஆன்மீக ஆசான்

🌼 ஆஷிகுர் ரஸூல் குதுபுஸ் ஸமான் அஷ் ஷெய்ஹ் அஸ் ஸெய்யி அப்துர் ரஷீத் கோயா தங்கள் வாப்பா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)🌼 அன்னவர்களின் மனாகிப் வைபவமும்,
அடுத்த வருடம் ஆலிம்(மௌலவி) பட்டம் பெறும் மாணவர்களுக்கான தலைப்பாகை சூட்டு விழாவும்
அஸ் ஸெய்யிது ஹஸன் கோய தங்கள் மற்றும் அஸ் ஸெய்யிது ஹுஸைன் கோய தங்கள் அன்னவர்களின் தலைமையின் கீழ்
வெகுவிமர்சையாக நடந்தேறியது.
அல்ஹம்துலில்லாஹ்....

தெஹிவலை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ்

தெஹிவலை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ்

தெஹிவலை அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ்

தேவுபந்து வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள்


Deobandis have always claimed to be sunni but when it comes to respect Scholars and Sufis then they always have blame Sunni brailwis of Shirk and Biddat like khawarij. They mostly make noise when a Sunni kisses hands of a scholar or a sufi. But now we have found some pictures in which Deobandis are kissing hands of there scholar Molvi Tariq Jameel.

We can also make some noise here about Shirk and Biddat but we know the difference between Shirk and Respect but those who were blaming Sunnis for Shirk and Biddat are they going to call there own people Mushriks now or Deobandis just like to play the double policy.

It is not only about Kissing the hands but Kissing the feet of Molvi Tariq Jameel and even giving him a massage. Proofs in the image below.




Friday 4 December 2015

தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் கொள்கை கோட்பாடு

தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் கொள்கை கோட்பாடு

மௌலவி அஷ்ரப் அலி தானவியின் வாழ்வில் பல நிகழ்வுகள் விருப்பமான நிகழ்வுகளாக இருந்துள்ளது. பஷன்தீதா வாக்கிஆ எனும் பெயரில் அந்நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது. அவை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்களினால் பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுமாகும். அவற்றில் ஒருசிலவற்றை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.
அருமை நாயகம் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருவுடல் பாதுகாப்பாக இருக்கிறது. பிற மத சகோதரர்களிடமும் இதே நம்பிக்கை இருந்துள்ளதென்று மௌலவி தானவி கூறுகிறார். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் பரிசுத்த ரவ்ளா ஷரீபை தோண்டி எடுத்துச்செல்ல வந்த நிகழ்வொன்றை அதற்கு சான்றாக குறிப்பிடுகிறார். (பக்கம் 178)
உம்மத்தினர்களுக்கு கிடைக்கப்பெறும் பாக்கியங்கள் அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் பரக்கத்தினால்தான் வந்தடைகின்றதென்று கூறிவிட்டு, நபித்தோழர் சைய்யிடுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் விருப்பத்தின்படி வஹி வந்ததெற்கெல்லாம் இதுவே காரணமாகும் என்று 110ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
ஒரு வலிய்யுல்லாஹ்விடம் விஷப் பாம்பு ஒன்று பைஅத் செய்து கொண்டது. அப்போது நீ யாருக்கும் தீங்கிழைக்க வேண்டாம் என்று அதனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அந்த பான்பு வாழ்ந்து வரும் சந்தர்பத்தில் ஷைக் அவர்களை அது சந்திக்கிறது. அதன் தோற்றத்தைக்கண்டு அதிர்சியுற்று உன்னை நான் யாருக்கும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன். அச்சுறுத்தக் கூடாதென்று சொல்லவில்லையே என்று கூறிச் சென்ற தகவலும் தானவிக்கு விருப்பமுள்ள தகவலாக 206ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ் கடமை பற்றி அழைப்புவிடுத்தபோது அவ்வழைப்பை உலகம் முடியும் வரை உள்ளவர்களுக்கு அல்லாஹ் சென்றடைய செய்ததுபோல கவ்துள் ஆழம் பாஸுள் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு அன்னவர்கள் எனது பாதம் எல்லா வலிமார்களின் பிடரியின் மீது இருக்கின்றதென்று கூறியபொழுது உலகம் முடிவுள்ளவரை உள்ள எல்லா வலிமார்களுக்கும் அல்லாஹ் சென்றடை வைத்து சிரம் தாழ்த்த வைத்தான் என்று 110ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
குத்புல் அக்தாப் கௌதுள் ஆழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறுத்து சமைத்து உண்ட கோழியின் முற்களை ஒன்று திரட்டி அதனை மீண்டும் உயிப்பித்த நிகழ்வினை அவருக்கு விருப்பமான நிகழ்வாக பதிவு செய்துள்ளார். பக்கம்
கௌது நாயகம் அவர்களுக்கு பணிவிடை செய்த சலவைத் தொழிலாளி ஒருவர் மரணமாகி நல்லடக்கம் சைய்யப்பட்ட பின்னர் அவரிடம் வருகை தந்த அமரர்கள், உமது ரப்பு யார்? நபி யார்? என்று வினவுகிறார்கள். நான் பெரிய குருநாதருக்கு சலவை பணி செய்பவன் என்றார். இதனைக் கேட்ட அமரர்கள் சிரித்துவிட்டு அவரையும் விட்டுச் சென்றார் என்ற நிகழ்வையும் விருப்பமுள்ள சம்பவம் என்று கூறிகிறார். (பக்கம் 36.)
இமாம் கஸ்ஸாலி நாயகம் அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயருள்ள சகோதரர் ஒருவர் இருந்தார். இமாம் கஸ்ஸாலி பள்ளிவாயில் ஒன்றில் இமாமாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சகோதரர் பள்ளிக்குச் செல்வதும் இல்லை. இமாம் ஜமாஅத்துடன் தொழுவதும் இல்லை. இதனை இமாம் அவர்கள் தாயாரிடம் முறைப்பாடு செய்கிறார்கள். தாயாரும் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுமாறு வேண்டிக்கொல்கிறார். ஒரு முறை பள்ளிக்கு சென்று இமாம் அவர்களின் பின்னால் கூட்டாகத் தொழுது கொண்டிருக்கும்போது தொழுகையை இடையில் விட்டுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
நடந்த நிகழ்வை இமாம் அவர்கள் தாயாரிடம் மீண்டும் முறையிடுகிறார்கள். அதற்கு,. இவர் தொழுவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர் உள்ளம் இரத்தம் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தது. தொழும் ஒருவரின் உடல் சுத்தமாக இருப்பதுபோன்று உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும். இவரின் உள்ளம் அசுத்தமாக இருந்தது. அதனால்தான் தொழுகையின் இடையில் வந்துவிட்டேன் என்ற நிகழ்வும் மௌலவி தானவிக்கு விருப்பமுள்ள நிகழ்வாக இருந்துள்ளது. பக்கம் 74.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார்
“யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.” [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41] 34
“அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் “[நூல் -தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ],
“அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.”
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
இஸ்மாயில் திஹ்லவியின் இவ்வாறான கருத்துக்கள் அல்லாஹ்வின் ரசூலையும் அவனின் நேசர்களையும் நோவினை செய்வதாக கருதப்பட மாட்டாதா?
இன் ஷா அல்லாஹ் தொடரும்..........

See More

தப்லீக் இயக்க ஊழியர்களே! ஆதரவாளர்களே! 09

தப்லீக் இயக்க ஊழியர்களே! ஆதரவாளர்களே! 08

தப்லீக் இயக்க ஊழியர்களே! ஆதரவாளர்களே!
உங்கள் இயக்கத்தின் முன்னோர்களின் கருத்துக்களையும் அதன் ஸ்தாபகரின் கருத்தையும் படித்துப்பாருங்கள்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் “வஹ்ததுல் வுஜுத், வஹ்ததுஷ் ஷுஹுத் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலும் இணக்கம் காண முயன்றார். வஹ்ததுல் வுஜூத் பற்றிய கொள்கையை ஷைகுல் அக்பர் இப்னு அரபியும் வஹ்ததுஷ் ஷுஹுத் பற்றிய கோட்பாட்டை ஷைக் அஹ்மத் ஸிர் ஹிந்தியும் ஒரே உண்மையை இரு வேறுபட்ட மொழிகளில் விளக்குகின்றார்கள் என்றும், ஆனால் தூரப்பார்வையற்ற விமர்சகர்களே இவற்றிற்கிடையில் முக்கிய வேறுபாடு இருப்பதாக கருதி சிந்தனைக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். ”என்றும் ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகின்றார். கடுமையான விசனத்திற்குரிய ஒரு விடயத்தை பின்வரும் உதாரணத்தினூடாக விளக்க பிரயத்தனப்படுகின்றார்.
“மெழுகை மூலப் பொருளாக கொண்டு குதிரை, கழுதை, மனிதன் போன்ற வடிவங்களை உருவாக்கினால் மூலப் பொருள் ஒன்று, ஆனால் வடிவம் வேறாகும். வடிவத்தில் வித்தியாசம் இருப்பதன் காரணமாகவே அதற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மூன்றும் இயற்கையின் வடிவங்களே. ஆனால் ஆழ்ந்து சிந்திதால், அது மெழுகுதான் அதுபோன்றே இவ்விருவரின் கோட்பாடுகளுக்குமிடையில் எந்த விதமான வேறுபாடுகளுமில்லை” எனக் கூறினார்.
இந்தியாவில் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பாற்றிய ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்
சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.
இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.
ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.
இப்பொழுது மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி, அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இறுதி தருவாயில் கண்ட கார்ச்சியின் வாக்கு மூலத்தைப் பார்போம்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மரண தருவாயில் சிறு குழந்தை போன்று தமது பிள்ளைகள் பற்றி கவலைப்பட்டு தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் அவ்விடத்திற்கு சமூகமளித்த நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள், எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் எனக்கும்தான் குழந்தைகள் என்று கூறிச் சென்றார்கள். அதனால்தான் ஒருவரைத் தவிர சகல பிள்ளைகளும் மார்க்க அறிஜர்களாக விளங்கினர் என்று மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி “தத்கிரதூர் ரஷீத் ” எனும் நூலில் குறிப்பிடுகிறார். (அர்வாஹே தலாதா பக்கம் 22)
மேலும் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுமாறும் இந்த உலக நியதிற்கு ஏற்றவாறு வாழுமாறும் முந்திய இரு கலீபாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமாறும் என்னை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் வலியுறுத்தினார்கள் என்ற அஷ்ஷாஹ் வலியுல்லாஹ்வின் குறிப்பை மௌலவி தானவி “கிஸஸுள் அகாபிர்” 14 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார்
“பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]
இன் ஷா அல்லாஹ் தொடரும்.........

இலங்கை குரான் மதரஸாக்கள் வரலாற்றில் ஓர் எழுச்சி

இலங்கை குரான் மதரஸாக்கள் வரலாற்றில் ஓர் எழுச்சி

இந்தியா ஸக்காபியத்துஸ்ஸுன்னிய்யா மதரஸா Islamic Educational Board of India என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி உலகம் முழுவதும் ஸுன்னத் வல் ஜமாத் அகீதாவினைப் போதிக்கும் குரான் மதரஸாக்களை உருவாக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்தியாவில் மட்டும் பல லட்சம் மாணவர்கள் கல்வி கறுகும் 10000 குரான் மதரஸாக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அது தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் வெற்றிகரமாக இம்மதரஸாக்கள் இயங்கிவருகின்றது.
அதன் தொடரில் இலங்கையிலும் குர்ஆன் மதரஸாக்களை நிறுவும் நோக்கில் கடந்த புதன்கிழமை மேற்படி அமைப்பின் இலங்கைக்குரிய பொறுப்பாளரான சேலத்தை சேர்ந்த மௌலவி இஸ்மாயில் முஸ்தபவி ஹழரத் அவர்களுக்கும் எமது அஸ்டோ அமைப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்று முடிவில் கல்முனையில் முதன்முறையாக மதரஸாவை ஆரம்பிக்க எமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இலகுவான முறையில் குர்ஆனையும் பிற மார்க்க விடையங்களையும் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மிக கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸுன்னத் ஜமாத் அகீதாவை சிறுபராயம் தொட்டு போதிப்பதே இம்மதரஸாக்களின் நோக்கமாகும்.
எனவே இன்ஷா அல்லாஹ்! மிக விரைவில் எமது கல்முனையில் எமது அமைப்பின் கீழ் இம்மதரஸா ஆரம்பிக்கப்படவிருப்பது முழு கல்முனை மாநகருக்கும் கிடைத்த ஓர் வரப்பிரசாதமே!

Wednesday 2 December 2015

தப்லீக் இயக்க ஊழியர்களே! ஆதரவாளர்களே! 08

உங்கள் இயக்கத்தின் முன்னோர்களின் கருத்துக்களையும் அதன் ஸ்தாபகரின் கருத்தையும் படித்துப்பாருங்கள்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் “வஹ்ததுல் வுஜுத், வஹ்ததுஷ் ஷுஹுத் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலும் இணக்கம் காண முயன்றார். வஹ்ததுல் வுஜூத் பற்றிய கொள்கையை ஷைகுல் அக்பர் இப்னு அரபியும் வஹ்ததுஷ் ஷுஹுத் பற்றிய கோட்பாட்டை ஷைக் அஹ்மத் ஸிர் ஹிந்தியும் ஒரே உண்மையை இரு வேறுபட்ட மொழிகளில் விளக்குகின்றார்கள் என்றும், ஆனால் தூரப்பார்வையற்ற விமர்சகர்களே இவற்றிற்கிடையில் முக்கிய வேறுபாடு இருப்பதாக கருதி சிந்தனைக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். ”என்றும் ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகின்றார். கடுமையான விசனத்திற்குரிய ஒரு விடயத்தை பின்வரும் உதாரணத்தினூடாக விளக்க பிரயத்தனப்படுகின்றார்.
“மெழுகை மூலப் பொருளாக கொண்டு குதிரை, கழுதை, மனிதன் போன்ற வடிவங்களை உருவாக்கினால் மூலப் பொருள் ஒன்று, ஆனால் வடிவம் வேறாகும். வடிவத்தில் வித்தியாசம் இருப்பதன் காரணமாகவே அதற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மூன்றும் இயற்கையின் வடிவங்களே. ஆனால் ஆழ்ந்து சிந்திதால், அது மெழுகுதான் அதுபோன்றே இவ்விருவரின் கோட்பாடுகளுக்குமிடையில் எந்த விதமான வேறுபாடுகளுமில்லை” எனக் கூறினார்.
இந்தியாவில் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பாற்றிய ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்
சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.
இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.
ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.
இப்பொழுது மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி, அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இறுதி தருவாயில் கண்ட கார்ச்சியின் வாக்கு மூலத்தைப் பார்போம்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மரண தருவாயில் சிறு குழந்தை போன்று தமது பிள்ளைகள் பற்றி கவலைப்பட்டு தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் அவ்விடத்திற்கு சமூகமளித்த நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள், எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் எனக்கும்தான் குழந்தைகள் என்று கூறிச் சென்றார்கள். அதனால்தான் ஒருவரைத் தவிர சகல பிள்ளைகளும் மார்க்க அறிஜர்களாக விளங்கினர் என்று மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி “தத்கிரதூர் ரஷீத் ” எனும் நூலில் குறிப்பிடுகிறார். (அர்வாஹே தலாதா பக்கம் 22)
மேலும் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுமாறும் இந்த உலக நியதிற்கு ஏற்றவாறு வாழுமாறும் முந்திய இரு கலீபாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமாறும் என்னை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்கள் வலியுறுத்தினார்கள் என்ற அஷ்ஷாஹ் வலியுல்லாஹ்வின் குறிப்பை மௌலவி தானவி “கிஸஸுள் அகாபிர்” 14 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார்
“பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]
இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
“கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]
இன் ஷா அல்லாஹ் தொடரும்.........

வெறுப்புக்குரிய த.த.ஜ



உங்கள் தவ்ஹீதுக்கும் எங்கள் தவ்ஹீதுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு 

1. இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லி உருவத்தை வழிபடுவது உங்கள் தவ்ஹீத்...
★இறைவனுக்கு உருவமும் இல்லை, உருவ வழிபாடும் கூடாது என்பது எங்கள் தவ்ஹீத்..


2. இறை மறையில் பிழை உள்ளது என்பது உங்கள் தவ்ஹீத்
★இறை மறையில் ஒரு பிழை கூட இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


3. இறைவனே கூறினாலும் ஆய்வு செய்து தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் தவ்ஹீத்
★இறைவன் கூறியது எதுவாயினும் கண்ணை மூடிக் கொண்டு தலை சாய்த்து அடிபணிவது எங்கள் தவ்ஹீத்..


4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உலகின் மிகப் பெரிய குழப்பவாதி என்று கூறுவது உங்கள் தவ்ஹீத்..
  ★நபியவர்கள் ஒரு காலத்திலும், ஒரு விஷயத்தில்கூட குழப்பமான செய்தியை சொன்னதே இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் 11 ஆண்டுகள் ஷிர்கை ஆதரித்தார்கள் என்பதும், ஷிர்க் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் உங்கள் தவ்ஹீத்..
★  ஷிர்கை ஒழிக்க வந்த நபியவர்கள் ஒரு காலத்திலும் ஷிர்கை ஆதரித்ததில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


6.  நபியவர்கள் அந்நிய பெண் வீட்டில் போய் படுப்பார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்..
★அண்ணலார் அந்நிய பெண்ணை கனவிலும்கூட நினைத்தது இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


7.  நபியவர்கள் உலக விஷயத்தில் பொய் சொல்லுவார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்...
★ நபியவர்கள் மார்கம், மறுமை, ஷரீஅத், சொர்கம், நரகம், கப்ரு, மலக்குகள், மஹ்ஷர், உலகம் என எந்த விஷயத்திலும் நபியவர்கள் பொய் சொல்லவே மாட்டார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்...


8. நபி தாவூத் ( அலை)  அவர்கள் குடி மக்கள் சொத்தை அபகரித்தவர் என்பது உங்கள் தவ்ஹீத்...
★எந்த நபியும் யாருடைய சொத்தையும் அபகரிக்கவில்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


9.  நபி யூனுஸ் ( அலை) அவர்கள் இறை ஆற்றலின் மீது நம்பிக்கை இல்லாதவர் என்பது உங்கள் கொள்கை
★ உலகில் தோன்றிய எந்த நபிக்குமே இறைவன் மீது நம்பிக்கை இழந்தவர்களில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


10.  நபித்தோழர்களுக்கு காண்டம் பற்றி தெரியுமா என்று கேள்வி கேட்டு நபித்தோழர்களை விட நாங்கள்தான் அறிவாளி என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் தலை சிறந்த அறிவாளிகள் என்பது எங்கள் தவ்ஹீத்...

11. நபித்தோழர்களை ரவுடிகள் என்பது உங்கள் தவ்ஹீத்..
 ★ நபித்தோழர்கள் தான் உலகிலேயே நல்லவர்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..


12. நபித் தோழர்களை கிரிமினல்கள் என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் நீதியின் இருப்பிடம் என்பது எங்கள் தவ்ஹீத்..


13. நபித்தோழர்கள் பித்அத் செய்ததாக கூறுவது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் பித்அத்தை அழித்தார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..


14. ஃபிக்ஹ் சட்டங்கள் வழிகேடு என்பது உங்கள் தவ்ஹீத்..
★ ஃபிக்ஹ் சட்டங்கள்தான் சமுதாயத்தின் பாதுகாப்பு என்பது எங்கள் தவ்ஹீத்....

இப்படியாக உங்களுக்கும் ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும்)
எங்களுக்கும் (சுன்னத் ஜமாஅத்தக்கும்) நிறைய வேறுபாடுகள் உள்ளன..*

  www.EravurYoosufblogspot.com *

Tuesday 1 December 2015

தப்லீக் அமீர்மார்களே! ஆதரவாளர்களே! - 07


அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அளவு கடந்து எல்லை மீறி புகழ்வதாகக் கூறி குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, உங்கள் தப்லீக் இயக்க முன்னோடிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா?
(மதீனா முனவ்வராவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது என நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். அதாவது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மகிமைகளை சுமந்துள்ள உள்ளங்களை அல்லாஹ் (பாதுகாக்கின்றான்.)
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அன்னவர்ளின் தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் ஹிஜ்ரி 1054லில் பிறந்து ஹிஜ்ரி 1131ல் சமாதி கொண்ட மிகப்பெரிய இறை நேசராகும். குத்புல் ஹிந்த் காஜா கரீப் நவாஸ் (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் நாயகம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து சிஷ்திய்யா தரீக்கத்திற்கான கலீபாவாக நியமித்து சென்றுள்ளர்கள். அத்துடன் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேருக்குநேர் சந்திக்கும் அதிஉயர் பாக்கியம் பெற்ற பெரும் மகானாகவும் இருந்துள்ளார்கள்.
மௌலவி அஷ்ரப் அலி தானவி (கிஸஸுள் அகாபிர்) எனும் நூலின் 13ம் பக்கத்தில், அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் அன்னவர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள விடயங்களைக் காணும் கராமத் உள்ள ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.
எனது தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் நாயகம் அவர்களை நலம் விசாரிக்க வருகை தந்த அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், தங்களது முபாரக்கான இரு திரு முடிகளையும் வழங்கி சென்றிருந்தார்கள். அது உயிரோட்டமுள்ளதாக இருந்தது. அவசர சந்தர்பங்களில் அதனை வெளியில் எடுத்துச் செல்ல நேரிட்டால் மேகம் அதற்கு நிழல் இட்டுக்கொண்டு இருக்கும். இந்தக் காற்சியினை விமர்சகர்கள் கண்ணுற்றதும் அவர்களும் திருந்திக் கொண்டார்கள். இரு திரு முடிகலும் சேர்ந்து இருக்கும். ஸலவாத் ஓதினால் இரண்ரும் பிரிந்து விடுவது இதன் விசேடத் தன்மையாகும். அவ்விரண்டில் ஒன்றை தந்தை அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். இதற்காக அல்லாஹ்வை நான் புகழ்கின்றேன் என அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் (அன்பாஸுள் ஆரிபீன் பக்கம் 35) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தில் ஹதீஸ் கலைக்கு புத்துயிர் அளித்து, அத்துறையில் அரும் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி, ஆக்கப்பணிபுரிந்த அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ், ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை இஸ்லாமிய உலகம் இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றது.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமானதும் முஸ்லிம் அறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்ற, உலக பிரசித்தம் அடைந்ததுமான நூல், “ஹுஜ்ஜதுல்லாஹி அல் பாலிகா” வாகும். எகிப்தின் தலை நகரம் கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீண்ட நாட்களாக அது இருந்து வந்தது என்பது குறிப்பித்தக்கது.
1731ல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, ஹிஜாஸில் 14 மாதங்கள் தங்கியிருந்தார். மக்காவில் புகழ்பெற்ற சமய அறிஞர்களிடம் ஹதீஸ் கலையிலும் மார்க்கச் சட்டக் கலையிலும் தேர்ச்சி பெற்றார். மக்காவில் கல்வி கற்றபோது, இப்னு அப்துல் வஹ்ஹாபிடமும் (1703 - 1787) கல்வி கற்றதாக கூறப்படுகிறது. இது புனித காபத்துல்லாஹ்வையும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை தரிசிப்பதற்கென்றும் மேற்கொள்ளப்பட்ட புனித யாத்திரை.
இந்த சிறப்பான யாத்திரை தொடர்பில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் (புயூளுள் ஹரமைன்) என்ற பெயரில் நூல் ஒன்றைத் தொகுத்து அப்பயணத்தில் அனுபவித்த அற்புதமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
கண்மணி நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை பல தடவைகள் நேருக்குநேர் தரிசித்து தம்மிடமுள்ள பல சந்தேகங்களுக்கு விடைகளைப் பெற்றிருப்பதுடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரைகள் அகற்றப்பட்டு யதார்த்தமான ஹகீகத்தான தோற்றத்தில் காணும் பாக்கியமும் பெற்றுக் கொண்டதாக அதில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிக்கும் தண்ணீருக்கும் இடையில் இருந்தபோது நான் நபியாக இருந்தேன் எனும் நபி மொழி தொடர்பில் வினவி அண்ணலாரின் அப்போதைய தோற்றத்தையும் காணும் அரிய பாக்கியம் பெற்றதது மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் நானும் அண்ணல் நபி நாதரும் இரண்டறக்கலந்து காணப்பட்டோம். என்னில் அண்ணலாரைக் கண்டேன் என்று அதில் பதிவு செய்கிறார்கள். இப்படியான இன்னும் பல ஹகீகத்தான கருத்துக்களை காணும் பாக்கியம் அதைப் பார்பவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஆனாலும்கூட இப்பெரியாரின் பேரப்பிள்ளை இஸ்மாயில் திஹ்லவி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
“அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.” [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிவார்களென்று நம்புவது சுத்தமான ஷிர்க்காகும்
நூல் : ஃபதாவா ரஷீதியா பாகம் =2 ,பக்கம்=10 அசிரியர் : ரஷீது அஹ்மது கொங்கோஹி
ரஸூலுல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ரவுளா ஷரீபை ஜியாரத்துச் செய்வதற்காக மட்டும் போவது ஷிர்க்காகும்
( நூல் : தக்வியத்துல் ஈமான் , பக்கம் = 10,40, அசிரியர் : இஸ்மாயீல் )
நண்பர்களே!
இவ்வாறு een எழுதினார்kal ? இதனூடாக ivarkal நிறுவ வந்த விடயம் என்னவென்பதைப் பார்க்கும் முன்னர் இப்படியானதொரு எண்ணம் ஒரு உண்மை விசுவாசியின் உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் பெற முடியும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவ்வாறானதொரு எண்ணம் கொண்டவரும் அவரை போற்றிப் புகழ்பவர்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருக்க முடியும்?
நாயகம் முஸ்தபா ஸல்லல்லஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறப்புக்களை மகிமைகளை யதார்த்தங்களை கூறி அதற்கு விளக்கங்கள் சொல்ல முற்படவேண்டுமே தவிர பெருமானாரை தரக்குறைவாக கருதப்படும் கருத்துக்களை சொல்லவோ அவ்வாறு சொல்லிவிட்டு அதற்காக தவ்பா செய்யாமல் விளக்கம் சொல்ல முற்படக் கூடாது.
"ராயினா" என்ற வார்த்தை நல்லதொரு வார்த்தைதான். ஆனாலும்கூட அந்த வார்த்தையை பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எதிரிகள் தவறான எண்ணத்தில் பிரயோகம் செய்கிறார்கள் என்ற காரணத்தினால் அந்த வார்த்தையை நீங்களும்தான் உபயோகம் செய்யாதீர்கள் என அருமைத் தோழர்களைப் பார்த்து அல்லாஹ் சொன்னான்.
தொடரும்........

Eravur Yoosuf

Eravur

Eravur

eravur





தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06

 தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06


சத்தியத்தை தேடுபவனுக்கு ஒரு ஆதாரம் போதும், மனோஇச்சையைப் பின்பற்றுபவனுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் போதாது”
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும் என நபித்தோழர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். புகாரி. பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீதான அன்பு ஈமான் உள்ளவரைக் கண்டுகொள்வதற்கான அலவு கோளாகும் என்பதற்கு இந்தவொரு ஆதாரம் போதும்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், (பிறப்பு 02-03- 1703) அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியில் (ஹிஜ்ரி 1114 ஷவ்வால் மாதம் பிறை 4 ல்) தோன்றிய ஷெய்கு அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாக பிறந்தார்கள்.
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் முப்பாட்டனார் அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் அவர்கள் பாரூக்கி என அழைக்கப்பட்டார்கள். நக்க்ஷபந்திய்யா தரீகாவில் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அனுமதியின்படி பைஅத் செய்து கொண்டார்கள். கிலாபத்தும் பெற்றிருந்தார்கள். நபியே நாயகமே! நீங்கள் இல்லையென்றால் நான் ரப்பு என்பதை வெளிப்படுத்தி வைத்திருக்க மாட்டேன் என்ற நபி மொழிகளை பிரச்சாரம் சையும் சூபிகளில் ஒருவராகும். வலிமார்களை அதிகமதிகம் நேசிப்பவராக, அவர்களைத் தேடிச் சென்று நல்லாசி பெறுபவராகவும் இருந்துள்ளார்கள்.
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் கருத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிரார்கள். அதிகமதிகம் சலவாத் ஓதுபவர்களாக, அதன் பரக்கத்தினால்தான் தனக்கு சகலதும் கிடைக்கப்பெற்றதாகவும் கூறுவார்கள்.
சங்கையான ரபீஉனில் மாதத்தில் விசேடமாக உணவுகள் தயார் செய்து பங்கீடு செய்துள்ளார்கள்.
ஒரு தடவை உணவு தயார் செய்து கொள்வதற்கான வசதி இல்லாமல் போனதற்காக கவலை அடைகிறார்கள். அன்றிரவு நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தயார் சைய்யப்பட்ட உணவுகளை வழங்கியிருந்தார்கள். அதனை மறு நாள் பங்கீடு செய்ததாகவும் ஷாஹ் வலியுல்லாஹ், அன்பாசுள் ஆரிபீன் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் நல்லடியார்களான வலிமார்கள் சமாதி கொண்ட பின்னரும் அவரின் பழைய தோற்றத்தில் இவ்வுலகில் காற்சியளிப்பார்கள். எனது தந்தை அஷ்ஷாஹ் வஜீஹுத்தீன் மரமான பின்னர் பல தடவைகள் காற்சியளித்து நிகழவுள்ள விடயங்களை அறிவித்து தருவார்கள். அவ்வாறு ஒரு நாள் மறுமை நாள் வரை நடக்கவுள்ள சகல விடயங்களையும் காண்பித்து தந்தார்கள் என்று தன்னிடம் கூறியதாக அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் மேற்க்கூறிய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
(இது பரேலவி, தேவபந்த் என்ற பிரச்சினை எழுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்.)
வலியுல்லாஹ் என்று தன் மகனுக்குப் பெயரிட்டதற்கான காரணத்தினை தந்தை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
ஒரு தடவை குத்புத்தீன் அஹ்மது பக்தியார் காகீ (கி.பி 1173-1235 )ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தை தரிசிக்க அப்துர் ரஹீம் வலி அவர்கள் சென்று அவ்விடத்தில் நீண்ட நேரம் முராகபாவில் மூழ்கி இருந்தார்கள். அப்பொழுது உங்கள் இல்லத்தரசி கருவுற்றிருப்பதாகவும் அதுவொரு ஆண் மகன் என்றும் அதற்கு குத்புத்தீன் அஹ்மத் என்ற எனது பெயரையே சூட்ட வேண்டும் என்று அந்த வலியுல்லாஹ் வேண்டிக்கொண்டார்கள். இதனை பெரியார் மறந்து போய் விட்டார்.
ஒருநாள் பெரியார் அவர்களின் மனைவி தொழுதுவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அவரது கரங்களில் சின்னஞ்சிறிய கரங்களைக் காணுகிறார். இதனால் அச்சம் கொண்டு கணவரிடம் கூறியபொழுது பயப்படத்தேவையில்லை. நீங்கள் வலியுல்லாஹ் ஒருவரை சுமந்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அவ்வாறே குத்புத்தீன் அஹ்மத் எனப் பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது. இதனால் வலியுல்லாஹ் என்றே அழைக்கப்பட்டார். (அர்வாஹ் ஸ லாஸா )
அன்பர்களே! சூபித்துவ குடும்பத்தில் பிறந்த மௌலவி இஸ்மாயில் திஹ்லவி, “பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் ) [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59] என்று நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவமதித்து, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிறார்.
எனவே இவரும் இவரை தலைவராகவும் நம்புகின்றவர்கள் இஸ்லாமியர்களா?
தொடரும்..........
அர்வாஹ் ஸலாஸா நூலின் பிரதியும் அஷ்ஷேக் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் முபாரக்கான மஸார் ஷரீபும்.

 தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06