السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 31 May 2015

மனிதன் வயிற்றில் 2 அடி நீளமுள்ள மீன் உயிருடன் மீட்பு !

மனிதன் வயிற்றில் 2 அடி நீளமுள்ள மீன் உயிருடன் மீட்பு !

பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது.
அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார்.

Image Credit :esmeraldanoticias.com

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? முடியும் என நிருபிக்கும் விஞ்ஞானம்

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

Image result for ‫سمك  يونس عليه السلام‬‎
மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?
இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள்மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலாம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

Friday 29 May 2015

மலேசியக் காடுகளில் வங்கதேச அகதிகளின் பிணக்குவியல்!


தாய்லாந்து எல்லையை ஒட்டிய மலேசிய காடுகளில் மியன்மர் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த அகதிகளின் பிணக்குவியல் கண்டுபிடிக்கபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியன்மர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏழை முஸ்லிம்கள் புதிய வாழ்க்கை தேடி அண்டை நாடான தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடத்தல்காரர்களின் கள்ளத்தோணி வழியாக ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து மலேசியாவிலும் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
தாய்லாந்து எல்லையை ஒட்டிய மலேசிய காடுகளில் மியன்மர் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த அகதிகளின் பிணக்குவியல் கண்டுபிடிக்கபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியன்மர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏழை முஸ்லிம்கள் புதிய வாழ்க்கை தேடி அண்டை நாடான தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடத்தல்காரர்களின் கள்ளத்தோணி வழியாக ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து மலேசியாவிலும் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
   
கள்ளத்தோணியில் ஏற்றும் போது குறைந்த கட்டணத்தை பேசிவிட்டு பின்னர் தாய்லாந்து சென்றதும் அவர்களை தனிச்சிறையில் அடைத்து வைத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது கடத்தல்காரர்களின் டெக்னிக் ஆகும். கூடுதல் கட்டணம் கிடைக்காத அகதிகளை அடித்துக் கொன்று காடுகளில் புதைத்து விடுவர். அண்மையில் தாய்லாந்து காடுகளில் இதுபோன்ற சட்டவிரோத முகாம்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
முகாம்களின் அருகில் ஏராளமான சவக்குழிகள் இருந்தன. அவற்றை தோண்டிபார்த்த போது அதில் மியன்மர் மற்றம் தாய்லாந்தை சேர்ந்த அகதிகள் எலும்புக்கூடுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மலேசிய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. தாய்லாந்து எல்லையை ஒட்டி மலேசியாவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு கடந்த சில வாரங்களாக போலீசார் தீவிர சோதனை நடத்தினர். காட்டின் உள்புறம் பல தற்காலிக முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் அருகில் பிணங்களை புதைத்திருப்பதற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. மொத்தம் 28 முகாம்களும், 139 சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டு தடய அறிவியல் சோதனை விஞ்ஞானிகள் வரவழைக்கப்பட்டனர். நேற்று சடலங்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. இன்னும் தீவிரமாக தேடினால் மேலும் பல சவக்குழிகளை கண்டுபிடிக்க முடியும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிலரை கைது செய்திருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் அகமது ஹமிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.


மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உருப்பினருமான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஏறாவூர் நகர சபை முன்றலில் முடிவுற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் நகர சபையின் முன்னால் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர். இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உருப்பினருமான பஷீர் சேகுதாவூத் கருத்துத் தெரிவிக்கையில்.
நல்லாற்சி எனும் எமது அரசே மியன்மார் அரசை உடனடியாக கண்டனம் செய்யவேண்டும். இந்த பிரச்சினை மியன்னாரில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. உலகம் முழுவதிலும் வாழு;கின்ற எல்லா இனங்களிலும் சிறுபாண்மைகளாக வாழுகின்ற மக்களுகெதிரான பிரச்சினையாக அடையாளம் காணவேண்டுமெனவும் அவர் கூறினார்.


மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Abdul Majeed Mohamed Farsath's photo.

Thursday 28 May 2015

சாய்ந்தமருது அல் வாஹிதிய்யாஹ் அரபுக்கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ்  29-05-2015  இன்று வெள்ளிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா  வரவேற்பு மண்டபத்தில் கல்லூரி அதிபர்  மௌலவி அம்ஜத் தகாபி அவர்களின் தலைமையில் மௌலவீ புவாத் அவர்களின்  வழிகாட்டலில்  மௌலவி  நவாஸ்  பாதுபி அவர்களின் ஒழுங்கமைப்பில்  மிகச்  சிறப்பாக நடை பெற ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.


அல் வாஹிதிய்யாஹ் அரபுக்கல்லூரியல் 2வது பட்டமளிப்பு விழா

அல் வாஹிதிய்யாஹ் அரபுக்கல்லூரியல் 2வது பட்டமளிப்பு விழா


Tuesday 26 May 2015

வஹ்ததுல் வுஜுதும் தடுமாறும் உள்ளங்களும்

வஹ்ததுல் வுஜுதும் தடுமாறும் உள்ளங்களும்

வஹ்ததுல் வுஜுத் என்றால் என்ன?
.
மார்க்கம் என்பது இஸ்லாம் (ஷரீஅத்), ஈமான் (அகீதா), இஹ்ஸான் (தரீக்கத்) இவை மூன்றும் சேர்ந்ததுதான் மார்க்கம்.
.
இஹ்ஸான் என்று சொல்லக்ககூடிய தரீக்கத்தை இறைவன் எமக்கு வழங்கிய காரணம் தன்னை அறிந்து தன் ரப்பை (இறைவனை) அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.
.
தரீக்கத்துடைய ஞானவான்களான ஸுபியாக்கள் இந்த தரீக்காக்களின் (ஆன்மீக கல்லூரிகள்) மூலம் ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளங்களை திக்ர் பயிற்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தி மனிதன் தன்னை அறிந்து தன் ரப்பை அறிந்து, இறைவன் ஒருவன் என்ற தௌஹீதை உள்ளத்தின் மூலம் உணர வைப்பதற்காகவே தரீக்காக்களை (ஆன்மீக கல்லூரிகளை) உருவாக்கினார்கள்.
.
ஏனெனில் இஹ்ஸான் என்பது கற்கும் அறிவல்ல உணரும் அறிவு. இதனால்தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், தான் இறைவனை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வில் வணங்குவது அல்லது இறைவன் தன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவது. (ஸஹிஹுல் புகாரி)
.
இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் இஹ்ஸான் என்பது உணரும் அறிவு என்று.
.
இப்போது விடயத்திற்கு வருவோம், வஹ்ததுல் வுஜுத் என்றால் உள்ளமை ஒன்று அதாவது இறைவன் ஒருவன் என்பதை அறிந்து உணரும் கல்விக்கே வஹ்ததுல் வுஜுத் என்று கூறப்படும்.
.
வஹ்ததுல் வுஜுத் பற்றி அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏராளமாக இருக்கிறது. அதன் விளக்கங்களை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள முடியாது. அவைகளை ஆன்மீக ஆசிரியர் (Spiritual Master) ஒருவர் மூலமாகவே அறிந்துக்கொள்ளலாம்.
.
அதாவது (Heart to Heart) ஒரு உள்ளத்தில் இருந்து இன்னொரு உள்ளத்திற்கு என்ற முறையில் பெற்று உணரும் அறிவாகும் (கல்வியாகும்).
.
இன்று இதை அறியாத சில அறிவிலிகள் வஹ்ததுல் வுஜுத் வழிகேடு, ஷிர்க் என்று கூறியும் அந்த கல்வியை போதித்த, போதிக்கின்ற ஞானவான்களை காபிர், முர்த்தத் என்று பத்வா கொடுத்து கடைசியில் இவர்களே காபிர்களாக மாறுகிறார்கள்.
.
இந்த கல்வியை இவர்கள் எதிர்ப்பதற்கு காரணம் என்னவென்றால் ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிறது. இஸ்லாத்தை அழிக்க வந்த ஸியோனிச கூலிப்படைகளின் நோக்கமே இஸ்லாத்தில் இருந்து ஆன்மீகத்தை துடைத்தெறிய வேண்டும்.
.
அவர்களுக்கு தெரியும் ஆன்மீகம் இல்லாத சமுதாயத்திற்கு வெற்றி கிடைக்காது என்று.
.
ஷிர்க்கில் வாழும் வஹாபிகள் வஹ்தத்துல் வுஜூதை எதிர்ப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால் சில முஸ்லிம்கள் குறிப்பாக தரீக்கவை சேர்ந்த ஒரு சிலரும் அதை எதிர்க்கிறார்களே ஏன்? என்று நீங்கள் கேட்கலாம்.
.
அதற்கு காரணம் நாம் மேலே கூறியதுதான். அதாவது ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிறது.
.
இன்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்டதற்கு காரணம் வருடம் ஒரு முறை கந்தூரி கொடுக்கவும், மௌலித் ஓதவும், கொடி ஏற்றவும், உரூஸ் கொண்டாடவும் இதற்காக தான் தரீக்காக்கள் இருக்கிறது என்று நினைத்து அறியாமையில் வாழ்கிறார்கள்.
.
தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்ட நோக்கமே உள்ளமை ஒன்று மற்றவையன்று என்ற உணர்வை பெற்றுக்கொள்வதற்காக வேண்டிதான்.
.
அதேநேரம் இந்த கந்தூரிகள், மௌலித்கள், உரூஸ் போன்ற நற்காரியங்கள் மூலம் நல்லடியார்களின் நெருக்கத்தை பெற்று அவர்களின் துஆ பாரக்கத்தை பெற்று இந்த ஆன்மீக அறிவை அதிகரித்து இறை நெருக்கத்தை அடைந்துகொள்ளதான் இந்த நற்காரியங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
.
நோக்கமில்லாத அமல்கள் எதுவும் இல்லை. அனைத்தும் ஒரு நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கம் தான் படைத்தவனை அறிவதற்காக.
.
ஆனால் இன்று நமது சமுதாயத்தில் நோக்கம் இல்லாமல் சடங்கிற்காக அமல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
.
இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. அதுதான் இன்று நமது சமுதாயத்தில் காமிலான ஷெய்குமார்கள் மிகவும் குறைந்து வருகிறார்கள். அதனால் இந்த ஆன்மீக கல்வியை போதிக்க சிலருக்கு தெரியாதனாலும், தகுதி இல்லாதனாலும் இவைகளை போதிப்பதில்லை. தன்னுடைய மாணவர்களுக்கு ஷரீஅத்தை மட்டும் பின்பற்றினால் போதும் என்று இவர்கள் உபதேசிப்பதனால் அந்த மாணவர்களும் அப்படி ஒன்று இல்லை என்று நினைத்து ஆன்மீக கல்வியை நிராகரிக்கிறார்கள்.
.
இன்னும் சில இடங்களில் வஹாபிகள் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் தரீக்காக்களில் உட்புகுந்து கலீபாக்களாகவும், முகத்தம்களாகவும், உஸ்தாதுகளாகவும் இருக்கிறார்கள். இவர்களின் மூலமும் இந்த கல்வி சமுதாயத்தில் இருந்து துடைத்து எறியப்படுகிறது.
.
இன்று நம் சமுதாயத்தில் தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) எதற்காக உருவாக்கப்பட்டது என்று கூட தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. ஆன்மீக அறிவு உயர்த்தப்படும்.
.
மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியாமல் வாழ்வது வீண். நோக்கத்தை அறியாமல் வாழ்ந்தால் தோல்வி ஏற்படும்.
.
மார்க்கத்தை சரியாக பின்பற்றாமல் இருப்பது வேறு விடயம். ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவிய ஒன்றை அது மார்க்கத்தில் இல்லை, அது வழிகேடு என்றும், அந்த கல்வியை போதிக்கும் ஞானவான்களை காபிர்கள், வழிகேடர்கள் என்று தூற்றுவது உங்களை காபிராக்கி விடும் கவனம்.
.
உங்களுக்கு ஒன்றை பற்றிய அறிவு இல்லை என்றால் மௌனமாக இருங்கள். மார்கத்தில் உள்ளதை இல்லை என்று வஹாபிகளை போல் சொல்லி முர்த்தத் ஆகி விடாதீர்கள்.
.
அதற்கு பதிலாக அதிகமாக இஸ்திக்பார் செய்து இறைவனிடம் இறைஞான அறிவை தரும்படியும், ஒரு காமிலான ஷெய்கை வேண்டியும் துஆ கேளுங்கள். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியை காண்பிப்பான்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பெயரில் அதிகமாக பாத்திஹாக்கள், ஸலவாத்துகள் ஓதி வாருங்கள். ஒரு காமிலான ஷெய்கை தேடி அடைந்து இந்த கல்வியை கற்று அல்லாஹ்வை அறியும், அடையும் இந்த ஞானத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
.
இறுதியாக எமது ஆன்மீக ஞான ஆசிரியரின் வார்த்தையுடன் நிறைவு செய்கிறோம்.

ஒரு மனிதன் தன்னையும் தன் நாயனையும் அறிவதற்கு துணை செய்யும் அறிவே உண்மையான அறிவு. இந்த அறிவு பெருமையை உண்டாக்காது. பணிவையும், அடக்கத்தையும் உருவாக்கும்.
.
“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
.
அல்லாஹ் இந்த அறிவு ஞானத்தை நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன்.


mail of islam

அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம் எனும் நூல் வெளியீடு

 அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம்  எனும்  நூல்  வெளியீடு

நூலின் பெயர்: அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம்.
நூலாசிரியர்: அல் ஆலிமுல் பாழில் அஷ்ஷைக் சைய்யத் அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலீ, அர்ரிபாஈ.
வெளிஈடு : ஜமிய்யத் இஷாஅத்தி அஹ்லலிஸ் சுன்னாஹ்.
தொடர்புகளுக்கு: 0094-773557710 - 0094-718414705 - 0091-7299159299 – 0097-1557657019
நபிமார்கள் எவரும் சன்மார்க்கப் பிரசாரத்துக்ககாக எவர்களிடத்திலும் எவ்விதக் கூலியையும் கேற்பதில்லை. அந்த வகையில் நபிகள் பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் கூலி கேற்கவில்லை. ஆனாலும்கூட அதற்குப் பிரதிபலனாக தனது உறவினர்களை பிரியங் கொள்ளுமாறு நபியே நீங்கள் கூறுங்கள் என்று அல்லாஹ் நபி அவர்களுக்கு சொல்லச் சொன்னான். அல்குரான் 42-23.
இஸ்லாம், ஈமான் என்பன அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடையாகும். அவ்வாறானதொரு வெகுமதியற்ற அல்லாஹ்வின் அருட்கொடையை நாம் பெற்றிருக்கிறோம். அல்லாஹ்வின் இறைத்தூதர் நபிகள் நாதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபியாகவும் ரசூலாகவும் விசுவாசம் கொண்டதுதான் இதற்கான காரணமாகும். அத்துடன் ஆரோக்கியமான வாழ்வும் அல்லாஹ்வின் கொடையாக இருக்கிறது. அவனின் சகல கொடைகளும் அடியார்களுக்கு அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊடாக வந்தடைகிறது. இதற்கெல்லாம் பிரதிபலனாக நாம் நபியவர்களுக்கு என்ன கைமாறு சைய்யலாம்? என்ற வினாவுக்கு, அண்ணலாரின் சிறப்பான குடும்பத்தினை நேசிப்பதைத் தவிர வேறில்லையென்று அல்குரான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நிமித்தம் எண்ணற்ற அறிஜர் பெருமக்கள் அண்ணலாரின் அன்புக் குடும்பத்தினை நேசிப்பதுடன் நின்றுவிடாது அது தொடர்பான கருத்துக்களை நூலுருவில் பதிவேற்றமும் செய்து அல்லாஹ்வின் இக்கட்டளையினை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். அப்பெருமக்கள் வழி சென்று இந்நூலாசிரியரும் தமது கடமையை நிறைவேற்றி வைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த உறவினர்களை நேசிப்பது ஈமானிய விடயமாகும். அதனால் அதன் அத்தியாவசியத்தினை இந்நூல் எடுத்துக் கூறுவதுடன், அவர்களை நோவிப்பதால் ஏற்படப்போகும் அபாயத்தினையும் அள்ளித் தெளித்துள்ளது. அத்துடன் அருமை நாயகம் முஸ்தபா ஸல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்பத்தினரை நேசிக்கிறோம் என்ற பிரச்சாரத்தில் அண்ணலாரின் அருமை மனைவிமார்கள், மதிப்புக்குரிய தோழர்கள் ஓரங்கட்டப்படும் ஒழுக்கமற்ற கருத்துக்களுக்கும், உண்மையில் அஹ்லுல் பைத்துக்களை நேசிப்பது யார்? நிந்திப்பது யார்? என்ற வினாக்களுக்கும் பதில் இதிலே பதிவாகியுள்ளது. எங்களை இவர்கள்தான் நோவினை சைதவர்கள். நிந்தித்தவர்கள். எம்மைக் கொலை செய்தவர்கள் என்ற அஹ்லுல் பைதுக்களின் வாக்கு மூலத்தினையும் இந்நூலில் காணலாம். அத்துடன், அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விஷேட சிறப்புக்கள், வழிகேடர்களின் கொள்கை விஞ்ஜாபனம், தன்ஸீஹ் தஷ்பீஹ் தொடர்பிலான பல்சுவை அம்சங்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைக் கோட்பாட்டில் வாழ்பவர்களை சீஆக்கள் என பழி சுமத்திவிட்டு நாங்கள்தான் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிட குள்ளத்தனமாக குழி தோண்டும் முகல்லித் வஹ்ஹாபிகள், உருவ வழிபாட்டுக்காரர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து ஊடறுத்து சென்று உழைக்க ஒன்றுபடுவோம்.
இந்நூலாசிரியர், இலங்கை புத்தளம் மதுரங்குளி விருதோடை அல் ஜாமியா அஸீஸிய்யா அரபிக் கல்லூரி, அல் பாஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை, ஜம்யிய்யது இஷாஅத்தி அஹ்லிஸ் சுன்னாஹ், முனள்ளமது மதாரிசி அஹ்லிஸ் சுன்னாஹ் என்பனவற்றின் நிறுவுனர். இது இவரின் முப்பதாவது நூலாகும். அன்னவரின் 49 வது ஜனன தினத்தில் ஜம்யிய்யது இஷாஅத்தி அஹ்லிஸ் சுன்னாஹ் உலமா சபை இதனை வெளியிட்டுள்ளது. எனினும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அல் ஜாமியா அஸீஸிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் இந்நூலாசிரியரின் தலைமையில் இடம்பெறவுள்ள 16 வது வருட உரூஸ் முபாரக். நான்காவது அல் அஸீஸி சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இன் ஷா அல்லாஹ்.
உம்முல் முமினீன் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் அடக்கஸ்தளம் இந்நூலின் அட்டைப் படமாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. யா அல்லாஹ் அளப்பரிய இப்பணியினை நீ உன் நபியின் பொருட்டினால் ஏற்றிடுவாயாக! ஈருலகிலும் சகல பாக்கியங்களும் பெற்று வாழ தவ்பீக் செய்தருள் புரிவாயாக!

முடிக்கு கறுப்பு சாயம் பூசுதல் ஹறாம்


முடிக்கு கறுப்பு சாயம் பூசுதல் ஹறாம்


மௌலவி. ஹாஜா முஹ்யித்தீன் (மஹ்ழரி)
நரைமுடி அல்லாஹ்வின் பிரகாசத்தின் வெளிப்பாடு என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் நவின்றுள்ளார்கள். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நரை முடியைக் கண்டதும் யாஅல்லாஹ் என்ன இது? வித்தியாசமாக இருக்கின்றதே! என்று கேட்டதற்கு, இது எனது பிரகாசம் என்று இறைவன் இயம்பினான். அல்லாஹ்வில் அதிகமான அன்பு வைத்திருந்த நபியவர்கள். அப்படியாயின் என் முடியனைத்தையும் வெண்மை யானதாக ஆக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான்
முடியில் வெண்முடிகளை பிடுங்குவது, கத்தரிப்பது உள்ளிட்டவைகளை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் தடுத்தார்கள். ஒருவர் தன் நரை முடியைப் பிடுங்குவது கத்தரிப்பது மக்றூஃ என்று ஷரீஅத் தடை செய்கின்றது.
நரைமுடி வயோதிபத்தை பறைசாற்றும் ஓர் அடையாளம், அதனால் வயோதிபத்தை ஒத்துக் கொள்ள வயோதிபவனும் கூட முன் வருவதில்லை. அனைவரும் இளவல்களாக இனம் காட்டவே விரும்புகின்றனர். அதற்காக நரை முடியை மறைப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தனர். சிலர் சாயம் பூசி வாலிபத்தை உறுதி செய்தனர். வேறு சிலர் மருதோண்டி போன்றவைகளைப் பூசி நிறத்தை மாற்றுவர். இதுபோன்று வேறு வேறு வழிகளில் முடியின் வெண்மையை மறைப்பதற்கு வழி தேடுவர்.
குறிப்பாக யூதர்கள் கறுப்பு சாயத்தை விரும்பினர். அது அவர்கள் வழக்கமாகவும், அடையாளமாகவும் ஆகி விட்டது. நஸாறாக்கள் ஈஸா அலைஹிஸலாத்தை பின்பற்றியவர்கள். இவர்கள் துறவறத்தை தேர்ந்தனர். அதில் அதிக ஈடுபாடு காட்டியவர்கள் தங்களை வயோதிபவனாக காட்டிக் கொள்வதற்காக “கெந்தகம்” போன்றவைகளைப் பூசி முடியை வெண்மையாகக் காட்டுவர்.
நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் இவ்விருவரின் செயல்பாட்டையும் வெறுத்தார்கள். எச்சந்தர்ப்பத்திலும் யஹூதி, நஸாறாக்களைப் பின்பற்றாமல் தனித்துவமாக செயல்படுவதையே விரும்பினார்கள்.
அதனால் முடிக்கு கறுப்பு சாயம் பூசுவதையும், கெந்தகம் போன்றவைகளைப் பூசி முடியை வெண்மையாக்குவதையும் வெறுத்தார்கள். மீறி செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்கள். இதனை பின்வரும் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.
01. ஹளரத்அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை குஹாபா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாடி முடி பூரணமாக வெண்மையாக இருந்ததை கண்ணுற்ற காத்தமுன் நபியவர்கள் ஏதாதொன்றினால் நிறமாற்றம் செய்யுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹுமா)
நூல் : அஹ்மத் - முஸ்லிம், நஸாஈ, இப்னுமாஜா
02. நரை முடியின் நிறத்தை மாற்றுங்கள். கறுப்பு நிறத்தின் பக்கம் நெருங்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அகஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்னத் அஹ்மத்
03. கடைசி காலத்தில் சில மனிதர்கள் புறாவின் இறக்கையைப் போல் கருஞ்சாயம் பூசுவார்கள்.
இவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் இப்னு, அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம்

காட்டுப் புறாக்களின் வால்பகுதி கருமையாக இருக்கும். அதனால், தாடிக்கு புறாவின் வாலை ஒப்புவமை கூறினார்கள். நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்.
04. கறுப்பு சாயம் பூசுபவர்களை மறுமையில் அல்லாஹுத்தஆலா பார்க்கவே மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னுஸஃது ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு (முர்ஸல்)
05. மஞ்சள் முஃமீனின் சாயம், சிவப்பு முஸ்லினின் சாயம், கறுப்பு காபிரின் சாயமாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : தப்றானி, முஃஸமுல்கபீர், ஹாகீம், முஸ்தத்றக்
06. நரைமுடி (அல்லாஹ்வின்) பிரகாசமாகும். (நூர்) யார் நரை முடியை பிடுங்குகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பிரகாசத்தை பிடுங்கியவராவார். முதன் முதலில் நரை முடிக்கு மருதோண்டியால் சாயமிட்டவர் நபி இப்றாஹீம் அலைஹிவசல்லமாகும். முதன் முதலில் தாடிக்கு கறுப்பு சாயம் பூசியவன் பிர்அவ்ன் ஆகும்.
அறிவிப்பவர் : ஹளரத் அனஸ்பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தைலமி, இப்னு நஜ்ஜார்
நன்றி : புஷ்றா இதழ் 02 மார்ச் 2006


Monday 25 May 2015

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை

ஜாஃபர் பங்காஷ்
முஸ்லிம்கள் இன்று ஏறத்தாழ எல்லா முனைகளிலும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர் —இராணுவம், கலாச்சாரம் மற்றும் இடைப்பட்ட சகல முனைகளிலும் தாக்கப்படுகின்றனர். ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீன், செச்சன்யா போன்ற நாடுகளில் அந்நியப் படைகளால் அவர்கள் ஆயிரக்கணக்கில் பலிகொடுக்கப்படுவது மட்டுமின்றி, முஸ்லிம் நாடுகள் பலவற்றின் சொந்த இராணுவங்களே கூட முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றன —எடுத்துக் காட்டு: பாகிஸ்தான், எகிப்து, அல்ஜீரியா, துனீஷியா, மொராக்கோ. இந்த இராணுவத் தாக்குதல்கள் போதாதென்று மேற்குலகின் கலாச்சாரத் தாக்குதல்கள் வேறு. எனினும், சவூதிகள் புனித மக்கா-மதீனா நகரங்களில் —முஸ்லிம்கள் இவையிரண்டையும் சேர்த்து ஹரமைன் என்றழைக்கும் அந்நகரங்களில்— எடுக்கும் நடவடிக்கையோடு ஒப்பிடும்போது, மேற்கண்ட கொடூரமான யதார்த்தம் கூட முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது. பேராசையும் வஹாபிஸ ஆர்வ வெறியும் நச்சுக்கலவையாக சேர்ந்துகொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் அழிப்புக்கு வழிவகுத்துள்ளது. இவை, துவக்ககால இஸ்லாத்தின் செழிப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்னும் சில வருடங்களில் நிரந்தரமாகத் துடைத்தழித்துவிடும் எனத் தெரிகிறது.

இன்று மத்திய கிழக்கின் பெரும்பாலான எண்ணை உற்பத்தி நாடுகள் கட்டுமானப் பித்துப் பிடித்து, பாலைவனங்களை உருமாற்றி நியூயார்க், ஹியூஸ்டன், லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களின் நகல்களாக ஆக்கிக் கொண்டிருக்கிற அதேவேளை, சவூதிகள் உம்மத்தின் பௌதிகப் பாரம்பரியத்தை அழிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர். சவூதிகள் லாஸ் வேகாஸின் உருவமைப்பில் ரியாத் நகரைக் கட்டியெழுப்ப முனைந்திருந்தால், வெகுசில முஸ்லிம்களே அது குறித்துக் கவலை கொண்டிருப்பர். ஆனால், அவர்கள் மக்கா-மதீனா மீது கைவைக்கின்றனர், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களைத் துடைத்தழித்து, கான்கிரீட்-கண்ணாடி டவர்களை அவற்றுக்குப் பதிலாக நிர்மாணிக்கின்றனர். அந்த டவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமைச் சூழ்ந்தமைந்திருப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தை குள்ளமாக்கி விடுகிறது, மற்றும், அதன் ஆன்மிகச் சூழலின் சுகந்தத்தைக் கெடுத்துவிடுகிறது.

வருடத்துக்கு வருடம் அதிகரித்துச் செல்லும் அளவுகடந்த விலைவாசியால், ஏற்கனவே பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முஸ்லிம்களின் ஏக்கத்துக்குரிய ஆன்மிகப் பயணமாய் அமைவதற்கு பதிலாக, ஹஜ் இன்று ஒரு பெரிய ஊழலாக மாற்றப்பட்டு, சவூதி அரச குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் ஹாஜிகளின் வாழ்நாள் சேமிப்புகளையே ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஹஜ்ஜில் பல தரங்கள், வகுப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலுள்ள பயண முகவர்கள் இப்போது ஐந்து நட்சத்திர ஹஜ் சுற்றுலாத் திட்டங்களை வழங்குகின்றனர் —ஏதோ ஹஜ் என்பது டிஸ்னீலேண்டுக்குச் செல்லும் விடுமுறை காலச் சுற்றுலா போல! இஸ்லாத்தின் அடிப்படை வழிபாடுகளுள் ஒன்றான ஹஜ்ஜுக்கு நிகழ்ந்திருக்கும் இத்தகு திரிபு, ஹஜ்ஜின் உயிரோட்டத்துக்கே முரணானது; குர்ஆன், சுன்னாஹ் வலியுறுத்துவதன்படி ஹஜ் வெளிப்படுத்தவேண்டிய சமத்துவ, சகோதரத்துவக் கோட்பாட்டுக்கே முரணானது. ஆனால் சவூதுக் குடும்பத்துக்கோ, குர்ஆன், சுன்னாஹ் போதனைகள் குறித்தெல்லாம் அக்கறையில்லை. தாங்கள் ஏற்காத எந்தவொரு செயலையும் பித்அத் (நூதனம்) எனக் கடிந்துரைப்பதில் மட்டுமே துரிதம் காட்டுகின்றனர். மேற்கூறியது போன்று, இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மீறுவது மூலம் சவூதிகள் செய்துவரும் மகா பித்அத்துகளுக்கு போலியான வாதங்களை முன்வைத்து நியாயம் கற்பிக்க, கூலிப்பாட்டாள முகவர்களும் அரசவை உலமாவும் உள்ளனர். ஒரு வேளை, இன்று இறைத்தூதர் (ஸல்) எழுந்துவர நேர்ந்தால் அவரையும் கூட இந்த வஹாபிகள் குற்றம்சாட்டி, அவர் தீனில் (மார்க்கம்) நூதனங்களைப் புகுத்தியுள்ளார்; பித்அத்தில் ஈடுபட்டுள்ளார் எனப் பழிசுமத்தி இருப்பார்கள். (இத்தகு பாவத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!)

சவூதிகள் இஸ்லாத்தினது வரலாற்றுத் தலங்களின் புனிதத்தை இழிவுபடுத்துவது குறித்தும், ஹஜ்ஜை வணிகமயமாக்குவது குறித்தும் இந்த அரசவை உலமாவுக்கு தவறேதும் தெரிவதில்லை போலும். எனினும் இவை, முஸ்லிமல்லாதவர் சிலர் உள்ளிட்ட ஏனையோரின் கவனத்திலிருந்து தப்பவில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்வைகா க்ரீகர் என்பவர் 2008 மார்ச் 26 அன்று நியூ ரிபப்ளிக் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில், மக்காவுக்கு வரவிரும்பும் வருங்கால “சுற்றுலாப் பயணிகளை” கவர்ந்திழுக்கும் ஒரு விளம்பர டி.வி.டி.யின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியுள்ளார். அந்த டி.வி.டி அப்ரஜ் அல்-பைத் டவருக்காகத் தயாரிக்கப்பட்டது. ஹரமின் நுழைவாயில்களுள் ஒன்று அமைந்திருக்கும் வீதியில் எதிர்பக்கமாக, 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்படவிருக்கும் புதிய ராட்சச விண் கோபுரக் கட்டிடவளாகம் அது. அந்த டவரில், கூரை முதல் தரை வரையிலான ஜன்னல்களைக் கொண்ட சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அழகான பெண்ணொருவள் அமர்ந்திருப்பதை அந்த டி.வி.டி. காட்டுகிறது. கீழே கஅபாவை வலம்வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்க்கும் வண்ணம் உள்ள ஜன்னல்கள் அவை. இறுகச் சுற்றிய முக்காடுக்குள் அவளது கண்கள் ‘இங்கே-வா’ சிமிட்டல் போட்டுக் கொண்டிருக்க, அவள் அரபிமொழியில் வருங்கால வாடிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கேட்கிறாள்: “கஅபாவுக்கு முன்னால் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீங்கள் ஒவ்வொரு வருடமும் தங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?” இத்தகு ஆபாச விளம்பரங்களைக் கொண்டு அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருமாறு ஹாஜிகளைக் கவர்ந்திழுப்பது அவசியம்தானா? அவர்கள் யாத்திரிகர்களாகத் தானே வருகின்றனர்; மான்டி கார்லோ அல்லது லாஸ் வேகாஸில் உள்ள சூதாட்ட விடுதிக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரவில்லையே!


இவ்வகை ஆபாசத்திற்கு அப்பால், இதைவிட மிக முக்கியமான விவகாரமொன்று இருக்கிறது. தகர்த்தழிக்கப்பட்ட அல்லது தகர்த்தழிப்பதற்காகக் காலம் குறிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் தலங்கள் தொடர்பான விவகாரம் அது. மதீனாவிலுள்ள இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலம் தொடர்பாக தீட்டியுள்ள தங்களது கொடிய திட்டங்களில் சவூதிகள் வெற்றி பெறுவார்களேயானால், மதீனாவின் பகீ அடக்கத்தலத்துக்கு (ஜன்னதுல் பகீ) அவர்கள் இழைத்த காட்டுமிராண்டித்தன அழிப்பு கூட சிறியதாகத் தோன்ற ஆரம்பித்துவிடும். முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ என்ற மதீனா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். ‘இறைத்தூதரது (ஸல்)  அடக்கத்தலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் குவிமாடம் பற்றி…’ எனும் தலைப்பிட்டிருந்த  அக்கட்டுரைக்கு ஊக்குவிப்பு ஆசிரியர், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி. இதில், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை நபிப்பள்ளியில் இருந்து வெளியே அகற்றவேண்டும் என்பதாக முக்பில் இப்னு ஹாதீ கோருகிறார். அந்த அடக்கத்தலம் அங்கிருப்பதும், அதன் மீதுள்ள குவிமாடமும் பெரும் நூதனங்கள் (பித் அத்துகள்); எனவே அவையிரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது இந்த ஆய்வுக் கட்டுரை பாராட்டுப் பெற்று பல்கலைக்கழக மதிப்பீட்டில் உயர் மதிப்பெண்களை வென்றது; மற்றும், இறைத்தூதர் (ஸல்) மீது அவர்களுக்கிருக்கும் முழு அவமரியாதையை ஊர்ஜிதம் செய்தது.


நேற்று முளைத்த இந்த சவூதி மாணவன் எப்படி, குவிமாடம் கட்டுவதை பித்அத் என்றும் இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து வெளியே அகற்றவேண்டும் என்றும் தீர்மானத்துக்கு வந்தான் என்பதை விமர்சன மீளாய்வு செய்வது அவசியம். முன்மாதிரியான நபித்தோழர்களை (ரழி) காட்டிலும் இந்த மாணவன் இஸ்லாம்பற்றி அதிகம் அறிந்துவிட்டானோ? நபித்தோழர்கள் (ரழி) எவரும்  இதை ஆட்சேபிக்கவில்லை என்பது மட்டுமின்றி, இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தைத் தரிசிப்பதன் மூலம் அவருக்கு (ஸல்) பெரும் மரியாதை செலுத்தி வந்துள்ளனர். மேலும், இறைத்தூதரின் (ஸல்) மிகநெருங்கிய தோழர்கள் இருவரும் கூட அவரருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அபூபக்கர் மற்றும் உமரை (ரழி) காட்டிலும் இந்த முக்பில் இப்னு ஹாதீ அதிகம் அறிவு பெற்றுவிட்டாரோ? முஸ்லிம்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “சவூதிகள் தாங்கள் விரும்புவதையெல்லாம் இத்தலங்கள் மீது செயற்படுத்துவதற்கு என்ன உரிமை கொண்டுள்ளனர்?” சவூதிகள் ஒன்றும் ஹரமைனின் உடமைதாரர்கள் அல்லவே! அவர்கள் அரேபிய தீபகற்பத்தை அபகரித்துக்கொண்டு அதன் பெயரை சட்ட விரோதமாக, ‘சவூதி’ அரேபியா என்று மாற்றியவர்கள் தானே! இது ஒரு பித்அத் அல்லவா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதனை ‘அரேபிய தீபகற்பம்’ (ஜஸீரத்துல் அரபு) என்றே பெயரிட்டு அழைத்தார்கள். சவூதிகள் தங்களது திரிபு வடிவ இஸ்லாத்தை எல்லோர் மீதும் திணிப்பதற்கான ஆர்வவெறியில், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை மொத்தமாக அழிக்கும் திட்டப் பணியில் இறங்கியுள்ளனர்.


மஸ்ஜித் அந்-நபவீயின் பச்சைநிறக் குவிமாடம், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை அடையாளப்படுத்துவதாகவும் அதன் குறியீடாகவும் விளங்குகிறது. இப்போது அது பள்ளியின் விரிவாக்கத்தால், சூழப்பட்டு உள்ளது. ஆயினும், அது ஒரு தனித்துவ காட்சிக் குவிமையமாக விளங்குகிறது. சென்ற ஆண்டு மதீனா மாநகரத் திட்ட வாரியம், நபிப் பள்ளியின் பிரசித்திபெற்ற இந்த பச்சைநிறக் குவிமாடத்திற்கு நிறம் மாற்றி, வெள்ளிநிறப் பூச்சைப் பூசியது. ஒருவேளை, அதனைத் தகர்க்க வழிவகுப்பதுதான் இதன் நோக்கமோ! ஏனெனில், ‘மஸ்ஜித் அந்-நபவீயின் வெள்ளிநிறக் குவிமாடம் ஒன்று தகர்க்கப்பட்டது’ என்பதைக் கேள்விப்படவோ கவனிக்கவோ நேரும்போது, பெரும்பாலான முஸ்லிம்கள், அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பதை உணராமலே போய்விடக் கூடும். ஏற்கனவே, விரிவாக்கம்-புனரமைப்பு என்ற சாக்கில் வெள்ளிநிறக் குவிமாடங்கள் பல துடைத்தழிக்கப்பட்டுள்ளன. அக்கறை கொண்ட குடிமக்களின் தீவிரக் கண்டன ஆர்ப்பாட்டங்களால் நிர்பந்தத்துக்கு ஆளான வாரியம், அந்தக் குவிமாடத்தை அசல் நிறத்துக்கே மீட்டுள்ளது. எனினும் இதை வைத்து, வஹாபிகள் தங்கள் வழிமுறைகளின் பிழைகளை உணர்ந்துவிட்டனர் என்ற தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.


ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்) மற்றும் பித்அத் (தீனில் நூதனங்களை ஏற்படுத்துதல்) செயல்களிலிருந்து முஸ்லிம்களைக் ‘காப்பாற்ற வேண்டும்’ என்ற தங்களது ஆர்வமிகுதியில் இந்த வஹாபிகள் பல தசாப்தங்களாகவே வரலாற்றுத் தலங்கள் மற்றும் கட்டிடங்களைத் தகர்ப்பதில் ஈடுபட்டுவருகின்றனர். “கட்டிடங்களையும், வரலாற்றுத் தலங்களையும் உயர்த்திப் போற்றுவது அனுமதிக்கப்பட்டதல்ல” என்று ராஜ்யத்தின் தலைமை ஆலிமாக இருந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், தான் உயிரோடிருந்த காலத்தில் (1994-ல்) ஓர் விளம்பரம் மிகுந்த ஃபத்வாவில் பிரகடனம் செய்தார். அவர் தொடர்ந்தும் கூறினார்: “இத்தகு செயல் இணைவைப்பிற்கு வழிவகுக்கும்…எனவே, இத்தகு செயல்களை நிராகரிப்பதும் அவை குறித்துப் பிறரை எச்சரிப்பதும் அவசியம்.” எனினும், இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் வெறுமனே எச்சரிக்கைகளோடு திருப்திகொள்வதில்லை. இவர்கள், சவூதி இளவரசர்கள் கும்பலின் உதவியோடு, இஸ்லாத்தின் பாரம்பரியத்தைத் துடைத்தழிக்கும் திட்டமொன்றில் இறங்கியுள்ளனர். ’இத்தலங்களைத் தரிசித்ததன் மூலம் இதுவரை எத்தனை முஸ்லிம்கள் இணைவைப்பவர்களாகி இருக்கின்றனர்? அவ்வாறு தரிசிப்பதை விட்டு அந்த முஸ்லிம்களைத் தடுக்க இந்த வஹாபிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.


இஸ்லாமியப் பாரம்பரியங்கள் ஆராய்சசி நிறுவனத்தின் ஸ்தாபகர், முன்னாள் செயலாட்சி இயக்குனர், மற்றும் வரலாற்றாசிரியரான டாக்டர் இர்ஃபான் அல்-அலவீ, ஹரமைன் மற்றும் சுற்றுப்புறங்களின் அழிப்பு நடவடிக்கையை எதிர்த்து மிக வெளிப்படையாகக் குரல் கொடுப்பவர்களுள் ஒருவர். அவரது கூற்றுப்படி, சென்ற வருடம் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அமைச்சகம், பச்சை நிறக் குவிமாடத்தை இடிக்க வேண்டும் என்று கோரி மஸ்ஜித் அந்-நபவீயில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தது. ராஜ்யத்தின் தற்போதைய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்கின் ஒப்புதல்பெற்ற அத்துண்டுப் பிரசுரம் ஆணவத்தோடு பின்வருமாறு பிரகடனம் செய்திருந்தது: “பச்சைநிறக் குவிமாடம் இடிக்கப்பட வேண்டும்; நபிப்பள்ளிவாசலில் உள்ள மூன்று அடக்கத்தலங்களும் (அதாவது இறைத்தூதர், அபூபக்கர் மற்றும் உமர் அடங்கியுள்ள இடங்கள்) தரைமட்டமாக்கப்பட வேண்டும்.” இத்தகு புனிதக்கேடான கூற்றுகளுக்கு அடித்தளம் போட்டுச் சென்றவர், இன்னொரு பிரதான சவூதி அறிஞரான காலஞ்சென்ற முஹம்மது இப்னு அல்-உஸைமீன். 35 வருடகாலம் மஸ்ஜித் அல்-ஹராமில் குத்பாக்கள் ஆற்றிவந்த அவர் “என்றாவது ஒருநாள் இறைத்தூதரின் (ஸல்) பச்சை நிறக் குவிமாடத்தை நம்மால் இடித்துத்தள்ள முடியும் என்று நாம் நம்புகிறோம்.” என்று கூறியதன் ஒலிப்பதிவை டாக்டர் அலவீ வழங்குகிறார்.


இதுவரை, 300 வரலாற்றுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன, அல்லது இடிப்பதற்குக் காலம் குறிக்கப்பட்டுள்ளன என்பதாக டாக்டர் அலவீ மதிப்பிடுகிறார்.  அவற்றுள் ஒன்று: ஒரு பொதுக் கழிப்பிட வசதிக்கு இடமேற்படுத்தித் தரும் பொருட்டு, உம்முல் முஃமினீன் கதீஜா அல்-குப்ராவுக்குச் (ரழி) சொந்தமாயிருந்த பழைய வீடொன்று சமீபத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மக்காவிலுள்ள இறைத்தூதரது (ஸல்) பிறந்த வீடு முதலில் ஒரு நூலகமாக மாற்றப்பட்டு, ‘மக்தபா மக்கா அல்-முகர்ரமா’ எனப் பெயரிடப்பட்டது. இப்போது அது வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுவருகிறது. நூலகங்கள் முக்கியமானவைதான். ஆனால், இந்தத் திட்டம், கற்றல் மீதான வஹாபிகளின் ஆர்வத்தால் எழவில்லை. மாறாக, இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சுவடுகளைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற அவர்களது தீர்மானத்தினாலேயே எழுந்துள்ளது. மக்காவில் எஞ்சியிருக்கும் வரலாற்றுத் தலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும், அவையும் கூட அநேகமாக அடுத்த ஹஜ் காலம் கழிந்தபின் வெகுநாட்களுக்குத் தப்பிப் பிழைக்காது என்றும் டாக்டர் அலவீ கூறுகிறார். “(மக்காவிலுள்ள) அல்லாஹ்வின் இல்லத்துக்கு எத்துணை அற்பமான கண்ணியம் அளிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.”
முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீகின் (ரழி) பெயர் கொண்ட தொன்மையான பள்ளிவாசல் நின்றிருந்த இடத்தில் இன்று ஏ.டி.எம். (பண உமிழ்வு எந்திரம்) ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹது, பத்ரு போர்க்களங்கள் இன்று வாகன நிறுத்தங்களாக மாறியிருக்கின்றன. அமீர் ஹம்ஸா உள்ளிட்ட உஹதின் உயிர்த் தியாகிகளது (ரழி) அடக்கத்தலங்கள் இதைக் காட்டிலும் மோசமான அவமதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அவ்விடம் குப்பைக் கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன; அந்த அடக்கத்தலங்கள் மீது அடையாளக் குறியீடுகள் எதுவும் இடப்படுவதை வஹாபிகள் திட்டவட்டமாகத் தடைசெய்து விட்டனர் —மீண்டும், இது ஷிர்குக்கு வழிவகுக்கும் என்ற போலியான சாக்குப்போக்கின் பேரில். மதீனாவின் மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து நான்கு மைல்கள் தொலைவிலிருந்த, சைய்யித் இமாம் அல்-உரைதி இப்னு ஜாஃபர் அஸ்-ஸாதிக்கின் 1200 வருடப் பழமையான பள்ளிவாசலும் அடக்கத்தலமும் 2002 ஆகஸ்டு 13 அன்று டைனமைட் வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இமாம் அல்-உரைதி, இறைத்தூதரின் (ஸல்) வழித்தோன்றல்கள் வரிசையில் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.



வஹாபிகளின் இந்த ஆர்வவெறியும், ஆயிரக்கணக்கான சவூதி ‘ராஜகுடும்ப’ —சவூதி சாம்ராஜ்ய ஸ்தாபகர் அப்துல் அஸீஸ் இப்னு சவூதின்— புதல்வர்கள், புதல்விகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பேராசையும் தோளோடு தோளிணைந்து செயலாற்றுகின்றன. இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிப்பது, வசதியாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் இன்னபிற நவீன கட்டுமானங்களுக்கு வழியேற்படுத்தித் தருகிறது; வசதியாக, ஹாஜிகளுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்குகிறோம் என்பது சாக்காக அமைந்து விடுகிறது. இது ஒரு முழு மோசடியே அன்றி வேறல்ல: மிகப் பெரும்பாலான ஹாஜிகள் இத்தகு ஹோட்டல்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்தும் அளவுக்கு ஒருபோதும் வசதிபெற மாட்டார்கள்.


என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சவூதி ராஜ்யத்தின் மிகப்பெரும் கடனளிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சவூதி பிரிட்டிஷ் வங்கியின் (SABB) பின்வரும் அறிக்கையைப் பாருங்கள். வருகிற நான்கு வருடங்களில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் மக்காவில் மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவிருக்கின்றன என்று அது கணிக்கிறது. அதிகபட்சம் 130 விண்கோபுரங்கள் எழும்பும்; அதில் 6 பில்லியன் டாலர் அப்ரஜ் அல்-பைத் டவர்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, ஏழு கோபுரக் கட்டிடங்களைக் கொண்ட அப்ரஜ் அல்-பைத் டவர் திட்டம் 2009-ல் நிறைவுசெய்யப்படும் போது, அது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களுள் ஒன்றாக இருக்கும். இதில், ஓர் 60 தளங்கள் மற்றும் 2000 அறைகளைக் கொண்ட ஹோட்டல்; 1500 நபர்கள் கூடும் அளவிலான ஒரு நிகழ்ச்சி மையம்; மற்றும், இரண்டு ஹெலிகாப்டர் தளங்கள் இருக்கும். மேலும், இதில் ஸ்டார் பக்ஸ், தி பாடி ஷாப், ஐ.ரா.வில் தளம்கொண்ட ஆடையகத் தொடர் கடையான டாப்ஷாப் (கேட்டி மோஸ் இங்கு ஒரு சிறப்பு உடை வடிவமைப்பாளர்), டிஃப்பனி அண்டு கோ உள்ளிட்ட 600 பிற விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு நான்கடுக்கு வணிக வளாகமும் இடம்பெற்றிருக்கும். பணக்கார ‘யாத்திரிகர்கள்’ இப்போதே ஷாப்பிங் செய்வதற்காக MAC அழகுபொருள் பேரங்காடி, வாவாவூம் வாசனைத் திரவியகம், கிளாயர்ஸ் ஆக்சஸரீஸ் ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. எச்-எம் மற்றும் கார்டியர் தயாராகிக் கொண்டுள்ளன. “உயர் பிராண்டுகள் அனைத்தும் இங்கே படையெடுத்து வருகின்றன” என்பதாக SABB-யின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜான் எஸ். ஃபாகியானாகிஸ் பெருமையாகக் கூறுகிறார். அப்பட்டமான பொருளாதாயம், ஹஜ்ஜின் ஆன்மிக அம்சங்களுக்குப் பதிலாக புகுந்துகொண்டிருக்கிறது —எல்லாம் வளர்ச்சி என்கிற போர்வையில். மக்காவின் ஹில்டன் ஹோட்டலுக்கு இடம் விடுவதற்காக அபூபக்கரின் (ரழி) வீடு இடித்துத் தள்ளப்பட்டபோது, ஹில்டனின் செய்தித் தொடர்பாளர் இவோர் மெக்பர்னே துணிச்சலாக இவ்வாறு கூறினார்: “சவூதி அரேபியாவின் சமய சுற்றுலாப் பிரிவில் நுழைவதற்கு மாபெரும் வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் கண்டோம்.”


மக்காவுக்கு வருகைதரும் முஸ்லிம்களுள் பெரும்பாலானோர், ஜபல் அந்-நூரின் (ஒளிக் குன்று) உச்சிக்கு ஏறிச்சென்று ஹிறா குகை யைத் தரிசிக்க ஏங்குகின்றனர். இந்தக் குகையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாத வணக்கம் மற்றும் தியானத்திற்காக ஒதுங்குவார்கள். இந்தக் குகையில் இருந்தபோது தான் குர்ஆனின் முதல் வேதவெளிப்பாடுகள் அவருக்கு அருளப்பட்டன. இன்று, இந்த குகையை யாத்திரிகள் தரிசிப்பதிலிருந்து தடுப்பதற்காக வஹாபி ஆர்வவெறியர்கள் அந்தக் குன்றையே தகர்க்க விரும்புகின்றனர். குன்றின் அடிவாரத்தில் பின்வரும் ஃபத்வாவை வஹாபிகள் ஒட்டிவைத்துள்ளனர்: “இந்தக் குன்றில் ஏறவோ தொழவோ பாறைகளைத் தொடவோ மரங்களில் முடிச்சுகளிடவோ… கூடாதென முஹம்மது நபி (ஸல்) நமக்குத் தடைவிதித்துள்ளார்கள்.” முஸ்லிம்கள் அங்கு செல்வதை  இறைத்தூதர் (ஸல்) தடைசெய்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதையேனும் இந்த வஹாபிகளால் தரவியலுமா? அல்லது, இந்த உளறல்கள் எல்லாம், அவர்கள் இஸ்லாத்தின் மீதும்; அல்லாஹ்வின் அன்புத் தூதர் (ஸல்) குறித்து முஸ்லிம்களுக்கு உள்ள பற்று மற்றும் காதல் மீதும் கொண்ட வெறுப்புணர்வின் அடிப்படையிலான வாசகங்களா?


இதற்கு முரணாக, முஸ்லிம்கள் நிராகரிப்பாளர்களை தங்களது அவ்லியாவாக (எஜமானர்கள் மற்றும் பாதுகாவலர்கள்) எடுத்துக் கொள்வதை குர்ஆனும் இறைத்தூதரும் (ஸல்) ஐயமின்றி முற்றாகத் தடைசெய்துள்ளனர். எனினும், சவூதுக் குடும்பம் இஸ்லாத்தின் மிகப்பெரும் எதிரிகளுக்கு அடிபணிந்து சேவையாற்றுவதைக் கண்டித்து இந்த வஹாபி உலமா ஒருபோதும் ஃபத்வா வெளியிட்டதில்லை. மிகச் சமீபத்தில் —கடந்த மே மாதத்தில்— அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவூதி ராஜ்ஜியத்துக்கு வந்திருந்தார். லட்சக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தத்தில் தனது கைகளை நனைத்தவர் இந்த புஷ் என்பது பற்றியெல்லாம் சவூதிகளுக்கு எந்தக் கவலையுமில்லை. எனினும், முஸ்லிம்கள் ஜபல் அந்-நூர் மீதேறி ஹிறா குகைக்குச் சென்று இறைவேத வெளிப்பாட்டின் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால் மட்டும் இந்த வஹாபிகளுக்குப் பைத்தியக் கோபம் வருகிறது. சுன்னாஹ் மீதான முஸ்லிம்களின் பக்தியைக் கண்டு மகா எரிச்சலுறும் இந்த வஹாபிகள், ஒரு குன்றையே தரைமட்டமாக்கிவிட விரும்புகின்றனர். இத்தகைய எண்ணங்களெல்லாம் சாத்தானிய உள்ளங்களிலிருந்தே உருவெடுக்க முடியும். அநேகமாக, இன்னும் சில வருடங்களில் ஓர் இளவரசருக்குச் சொந்தமான ஹோட்டலைக் கட்டுவதற்கோ, அல்லது, இன்னொரு வாகன நிறுத்தம் அமைப்பதற்கோ இந்தக் குன்று வெடிவைத்துத் தகர்க்கப்படலாம்.


ஒவ்வொரு நடவடிக்கையிலும் சவூதிகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை மீறிவருகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்ரஜ் அல்-பைத் டவர்களுக்கான 6 பில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதி, மன்னர் அப்துல் அஸீஸ் அறநிலையத்திலிருந்து (வக்ஃபு) வருகிறது. இதற்கு வசதியாக, அந்த டவர்களின் மேம்பாட்டாளர்கள் அதனை, “இஸ்லாமியச் சமூகத்தின் நலவாழ்வுக்கு இன்றியமையாத” நலன்களுக்காக உருவாக்கப்படுகிற ஒரு “மார்க்கச் சொத்து” எனச் சித்தரிக்கின்றனர். சவூதி ராஜகுடும்பத்தினர் வக்ஃபு நிதிகளிலிருந்து கூட திருடித் தங்கள் ஜேப்புகளை நிரப்பிவருகின்ற நிலையில், இந்த டவர்கள் எந்த மார்க்க நலனை வழங்கப்போகிறது? இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களுக்கு எவ்வாறு அது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது? அவர்கள் இவ்வாறு செய்வது மிகக்கொடிய நயவஞ்சகமும் குற்றமும் ஆகும். அதைவிட, பதிலீடு செய்யமுடியாத வரலாற்றுத் தலங்களை தாறுமாறாக அழித்துக் கொண்டிருக்கிறார்களே, அதுதான் மன்னிக்கமுடியாத ஒரு குற்றம்.
“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்! அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”. வருத்தத்துக்குரிய வகையில், முஸ்லிம் உலகில் வெகுசிலரே, சவூதிகளின் காட்டுமிராண்டித்தன இடிப்புகளைத் தடுக்கவேண்டும்; அதன் மூலம், இஸ்லாத்தின் அதிமுக்கிய வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஓரளவு அக்கறையை —அதிர்ச்சியை அல்ல— வெளிப்படுத்தியுள்ளனர்.



இங்கு முக்கியக் கேள்வி என்னவென்றால், இஸ்லாத்தின் அடையாளங்களும், தலங்களும் அழிக்கப்படுவது குறித்து முஸ்லிம்களிடையே இத்தகு அலட்சியப்போக்கு நிலவுகிறதே, அது ஏன்?


(‘மக்கா படுகொலைகள் 1987: பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு: மெல்லினம், சென்னை)


(குறிப்பு: இக்கட்டுரை https://islamiyasinthanai.wordpress.com என்ற வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு பிரதி)

அகில இலங்கை உலமா சபையிடம் பகிரங்க வேண்டுகோள்

அகில  இலங்கை உலமா  சபையிடம்   வேண்டுகோள்

இஸ்லாமிய “அகீதா” கொள்கையின் ஆணிவேர் “வஹ்தத்துல்வுஜுத்” என்ற ஞானமே!

”அகில இலங்கை ஸுபிஸ ஜம்இய்யதுல் உலமா” இலங்கைவாழ் முஸ்லிம் சகோதரசகோதரிகளுக்கு வழங்கும் “நஸீஹத்” அறிவுரை.

மெய்ப் பொருளானயாவுக்கும் கருவானநிகரற்றஇணைதுணையற்றஎவரையும் பெறாத,எவராலும் பெறப்படாதஉருவமற்றஎடைநிறம்அழிதல்மாறுபடுதல் முதலானசிருட்டிகளின் – படைப்புக்களின் – தன்மைகளை விட்டும் தூய்மையான “வுஜுத்” உள்ளமைஎன்பது ஒன்றே ஒன்றுதான்அது இரண்டுமல்ல பலதுமல்ல என்ற இறையியல் தத்துவமேவஹ்தத்துல்வுஜுத்” என்று சொல்லப்படுகிறது.

வஹ்தத்” என்றால் ஒன்று என்றும், “வுஜூத்” என்றால் உள்ளமை என்றும் பொருள் வரும்.இவ்விரண்டையும் சேர்த்து ஒரே வசனத்தில் சொல்வதாயின் “உள்ளமை ஒன்று” என்றுசொல்ல வேண்டும்உள்ளமை ஒன்று என்பதுதான் இஸ்லாமிய “அகீதா” ஆகும்அதுபலதென்று நம்புதல் “அகீதாவுக்கு முற்றிலும் முறனானதே. “ஹக்கு” வேறு கல்கு” வேறுஎன்று நம்புகிறவன் “வுஜூத்” என்பது பலதென்று சொல்லாமல் சொல்கிறவனேயாவான்.

இக்கொள்கையை உலக மக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தவன் அல்லாஹ்வும்,அவனின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுமேயாவர்.