السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 19 January 2019

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்


சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று மிகவும் அழுத்தி விளங்கப்படுத்துகிறேன்? என்றால், சஹாபாப் பெண்களை பொருத்தமட்டில் எச்சமூகத்தை பிரதிபலித்து தமது பங்களிப்பை மேற்கொண்டார்கள்? என்ற வினாவிற்கு விடை காணல் வேண்டும். அதாவது அவர்களை சார்ந்து இருந்த கொள்கையான இஸ்லாமியச் சமூகம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டிதான். மனித நேயம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தை பிரதிபலித்துத்தானே தமது பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.? ஏன் இஸ்லாமிய சமூகத்தை மட்டும் குறிவைத்து தமது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார்கள்? போன்ற கேள்விகள் எழுவதிலும் தவிர்க்க முடியாது.

இஸ்லாம் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்குமான வழிகாட்டி என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் தனது திருமறையில் மனித சமூகத்திற்காகவே இந்த குர்ஆனை அருளியுள்ளதாக சொல்கிறான். எனவே இஸ்லாமிய சமூகத்தினுடனான பங்களிப்பு ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உள்ளடக்கிவிடும் என்பதில் சஞ்சலம் இல்லை.

சஹாபாப் பெண்கள் சமூக அஸ்திவாரத்தின், சமூகச் சீர்திருத்தத்தின், சமூக முன்மாதிரிகளின் முன்னோடிகள் என்பதில் எல்லின் முளையளவும் சந்தேகமில்லை. மக்கமா மண்ணில் நடப்பட்ட ஏகத்துவ விதை கட்டிப்பாதுகாத்து, சொல்லனா துயரங்களுக்கு முகம்கொடுத்து, இரத்தத்தை உரமாக இட்டு இன்று உயிர்ப்புடன் செளிப்புடன்  விருட்சமாக வானுயரந்திருக்கின்றது என்றால், சஹாபாப் பெண்களின் வகிபங்கு அளவிடமுடியாது. இஸ்லாமிய வெற்றிக்கொடியின் கம்பம் எத்தனையோ வீர சஹாபாக்களின் இரத்தக்கரைகளின் மீதே எழுப்பப்பட்டிருக்கிறது. உயிரை துச்சமாக மதித்து, உயிருக்கு பகரமாக இஸ்லாத்தின் வெற்றியே தமது உயிர் மூச்சு என்ற வீரமுலக்கத்துடன் வீரமரணம் எய்தினார்கள். ஏன்? சஹாபாப்பெண்களும் தமது வீரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதனை இஸ்லாத்திற்கான முதல் வீரமரணத்தை தன்வசப்படுத்திய சுமையா (றழி) அவர்களின் வரலாறு நமக்கு பறைசாற்றுகின்றது. அந்தச் சஹாபாப் பெண்ணின் துணிச்சலான, மார்க்கப்பற்றான உயிர்தியாகத்தின் திருப்புமுனைதான், இஸ்லாம் இன்று உலகம்பூராகவும் பட்டித்தொட்டியெங்கும் வீரியத்துடனும், உத்வேகத்துடனும் 1/3 பங்கு என்ற விகிதாசாரளவில் பரவிக்காணப்படுவதற்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது. உயிரையே விலைக் கொடுத்து மார்க்கத்திற்காக மண்ணரையை தங்குமிடமாக தன்வசப்படுத்திக்கொண்டார்கள் என்றால் சஹாபாப் பெண்கள் சமூகப்பங்களிப்பில் இணைபிரியாத இமைகள் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. 

மேலும் இஸ்லாமியச் சமூகத்தை வார்த்தெடுத்ததில் (அநியாயங்களுக்கு எதிரான) யுத்தங்களின் பெறுமானம் அவரிவிதமானது. யுத்த வெற்றிகளின் பிரதிபலிப்பு சமூகத்தை இன்னும் திடமாக உறுதிப்படுத்தியது. அன்றைய உலகத்தை வளைத்திருந்த ரோம, பாரசீக வல்லரசுகள் எல்லாம் சஹாபாக்களின் யுத்தவீர மனபலத்தின் முன்னால் வேரற்ற மரங்களாக மூச்சிரைத்து கிடந்தார்கள்.  அவ்வாறான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த யுத்தங்களில் பெரும்பாலும் சஹாபாப் பெண்கள் ஆயுதமேந்தி கலந்து கொள்ளவில்லை என்றாயினும் யுத்ததிற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் தாரளமாகவே செய்திருக்கின்றனர். யுத்த களத்தில் கூடவே காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளையும் இதர அத்தியவசிய கடமைகளையும் குறைவின்றி செய்திருக்கின்றனர் என்பதை ஆதரபூர்வமான கிரந்தங்கள் ஒப்புவிக்கின்றன.

அன்றைய அறியாமைக் காலத்தில் இரண்டாம்தர பிரவிகளாகவே அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பெண்ணினத்தை, இஸ்லாம் சமூக அந்தஸ்தோடு பெரும்பாலான துறைகளில் அவர்களை புடம் போட்ட தங்கங்களாக தடம் பதியச்செய்தது. சமூக அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சஹாபாப் பெண்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக தம்மையே அர்பணித்தனர். அவ்வகையில் அறிவியல் துறையில் உலகம் வியக்கும் பெண்ணாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நேசத்துக்குறிய துணைவியாக திகழ்ந்த அவர்கள், அறிவின் உச்சத்தையே தொட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடமாடும் ஒரு பழ்கலைகலகமாகவே திகழந்தார்கள். நபி (ஸல்) அவர்களோடு தமது வாழ்நாட்களில் அதிக நேரங்களை செலவிட்ட அன்னையவர்கள், நபிகளாரின் வாழ்க்கை முறையின் அரிதான பல அறிவிப்புக்களை சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஹதீத்களை அறிவித்த 7 நபித்தோழர்கள் பட்டியலில் அன்னையவர்கள் மூன்றாம் இடத்தில் திகழ்கிறார்கள். 2210 ஹதீத்களை மானிட சமூகத்திற்கு வாழும் வழிகாட்டியாக அறிவித்திருக்கிறார்கள். நபியவர்களின் மறைவிற்கு பின்னர் தாபிஈன்களுக்கு மிகச்சிறந்த மார்க்க விளக்க ஆசிரியையாக வளம் வந்து, அவர்களின் அறிவுப் பசிக்கு தீணி போட்டு, வளரும் சமூகத்தை செம்மைப்படுத்தக் கூடிய கற்றுத்தேர்ந்த கல்வியலாளர்களை கட்டியமைத்துவிட்டுச் சென்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் சஹாபாப் பெண்கள், இஸ்லாத்தின் வெற்றித்தீபத்தின் எறிபெருளாக தம்மையும் ஈடுபடுத்தி சமூக வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். இஸ்லாத்தின் முதலாவது ஹிஜ்ரத்தான அபீசீனியா ஹிஜ்ரத்தின் போது 83 ஆண்களுடன் சேர்ந்து 19 பெண்களும் தமது பங்கிற்கு பாதங்களை தடம் பதித்திருந்தனர். மேழும் மக்காவிலிருற்து 300 கி.மீ தொலைவிலான மதீனா ஹிஜ்ரத்தின் போது துணைக்கு சஹாபாப் பெண்களும் உடுத்த உடைகலோடு சொந்த மண்ணைவிட்டு வெளியேரிவர்களாக ”முஹாஜிரா” என்ற அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டமை சமூகப் பங்களிப்பின் மயில்க்கல் என்றாலும் மிகையாகாது.

முதலில் புனித இஸ்லாத்திற்குள் பிரவேசித்த அன்னை கதீஜா (ரழி) அவர்கள் அக்காலத்தில் மிகப்பெரும் செல்வச்சீமாட்டியாக வாழ்ந்தார்கள். புனித இஸ்லாத்தின் வளர்சிக்காக தமது செல்வத்தை வாரி இரைத்தார்கள். நபியவர்களுக்கு பக்கத்திலே இருந்து பக்கபலமாக உதவி ஒத்தாசைகளை நல்கினார்கள். கணவனுக்கு நல்ல மனைவியாக குடும்பத்திற்கு சிறந்த தலைவியாக மிளிர்ந்தார்கள்.

உஹத் போரின் போது முஸ்லிம்களிடம் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் சஹாபாப் பெண்மணியான உம்மு அமாரா (ரழி) அவர்கள் நேருக்கு நேர் மோதினார்கள். இருவரும் பரஸ்பரம் மோதிக்கொள்ள உம்மு அமாரா (ரழி) அவர்களுக்கு உடலில் 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன. போர்க்களத்தில் எதிரியோடு நேருக்கு நேர் மோதுகின்ற மன வலிமையை அப்பெண் பெற்றிருந்தார் என்றால் சமூகப்ப பங்களிப்பில் இத்தைகைய சஹாபாப் பெண்களின் பங்களிப்பை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு வீரத்தில், பொருளாதாரத்தில், அறிவியலில், ஒழுக்கவியலில், குடும்பவியலில், ஒட்டுமொத்தமாக சமூகவியலில் என்று அனைத்து துறைகளிலும் சஹாபாப் பெண்களின் வாழ்வில் அடுக்கடுக்கான சான்றுகளை நிறையவே காணலாம்.

பெண்கள் என்றாலே ஒரு வித கவர்சிக் கதாபாத்திரமாகவே அடையாளம் காணப்பட்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி அக்கால கட்டத்திலும் சரி இஸ்லாம் பெண்கள் ரீதியில் வியக்கத்தகு அற்புதமான சிந்தனைகளை விதைத்து விட்டுச் சென்றிருக்கிறது. ஹிஜாபுடைய சட்டத்தைக் கொண்டு அவர்களுக்குறிய பாதுகாப்பை முதலில் தயார்செய்து விட்டு, அவர்களின் மார்க்கரீதியான அவர்களுடைய வகிபங்கை எதிர்ப்பார்க்கிறது. இதனை அருள் மறையில் அல்லாஹ் மிகத்தெளிவாக இவ்வாறு அடையாளப்படுத்துகிறான்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; 24:31.

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 9:71.

சமூக மாற்றத்தை நோக்கிய அஸ்திவாரத்தை பலமாக இட்ட சஹபாப் பெண்களின் வாரிசுகளான இன்றைய நமது பெண்களின் மார்க்கரீதியான அரும்பணிகள்தான் என்ன? என்றால் மிகவும் குறைவான சதவீத பெண்களே இதில் தேரியவர்களாக நோக்கப்படுகின்றனர். பெருவாரியானவர்கள் தூண்டிலில் சிக்குண்ட மீனைப்போன்று அன்னிய மதக்கலாச்சார தூண்டிலில் சிக்கி சீரழியக்கூடிய பரிதாபத்தையே காண்கிறோம். தவ்ஹீதை சுமந்த உள்ளம் அதனை சீர்குலையாமல் பாதுக்காக்க கடமைப்பட்டவர்கள் அதற்கு வேட்டுவைக்கும் அனாமோதய நடவடிக்கைகளை எவ்வித உளநெறிடலும் அற்றவர்களாக செயல்படுத்துகின்ற காட்சியையே காண்கிறோம்.

 எனவே சமூகப்பங்களிப்பில் முஸ்லிம் பெண்களும் அதீத அக்கரையை செலுத்துதல் வேண்டும். சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இணைவைப்பு, மாற்றுமதக் கலாச்சாரம், மார்க்கத்தின் பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் மூடப் பழக்கவழக்கங்கள், சமூகக் கொடுமைகள் என்பனவற்றிற்கு எதிராக எமது சக்திற்கு ஏற்ப ஆகக்குறைந்தளவிலாவது எமது பங்களிப்புகளை முடுக்கிவிட வேண்டும். குறிப்பாக சமூக மாற்றத்தின் ஆறம்பப் பயிற்சிப் பாசறையான வீட்டுச்சூழலில் தமது பெறுமதிவாய்ந்த பிள்ளைகளை சமூக விடிவின், சீரான சமூகக்கட்டமைப்பின் பங்குதாரர்களாக தயார்ப்படுத்தக் கூடிய பொறிமுறைத்திட்டங்களை கொண்டு வழிகாட்டுதல் வேண்டும். வெறுமனே அவர்களுக்கு தொழிழ் வாய்ப்பிற்கான கல்வியை மட்டும் ஊட்டுவதற்கு அப்பால் முதன்மையும், மூலதனமுமாக சமூக அக்கரை கொண்ட, சமூக சீர்திருத்த்த்திற்கான அறிவு சார்ந்த ஆளுமைகளையும் சிறுவயதிலிருந்தே தயார்ப்படுத்தி ஊக்குவிக்கப்பட வேண்டிய கடமையும் கடப்பாடும் இன்றியமயாததாகும். சஹாபாப் பெண்களின் சீரிய வரலாறு இதற்கு மிகச்சிறந்த முண்ணுதாரணமாக கண்முன்ணே மிளிர்கின்றது என்பதனை மனதில் வைத்து இஸ்லாமியமயப்படுத்தப்பட்ட சமூக மாற்றத்திற்கு பெண்களும் தமது பூரணத்துவமான பங்கை பூர்த்தி செய்ய இன்றே மன உறுதி கொள்வோமாக!

MK YASIR YTV

Saturday 12 January 2019

ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலில் பயான்










இன்று 12/01/2019 சனிக்கிழமை ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளி வாயலில் இஷா தொழுகையினைத் தொடர்ந்து  நடைபெற்ற விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜமாஅத்தார்களும் முஹிப்பீன்களும் இந்தியா தமிழ்நாட்டின் உலமா சபையின் தலைவர் சங்கைமிக்க மெளலவி அல்ஹாபிழ் pm காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களை சந்தித்து முஸாஹபா ,முஆனகா செய்தபோது...

Wednesday 9 January 2019

நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!

நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!
இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்,கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கூட்டம் ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 45 உள்ளூராட்சி சபைகளுக்கான அனைத்து வெற்றிடங்களையும் இவ் வருடம் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக 500 க்கு மேற்பட்டவர்கள் கடமை புரிகிறார்கள். இதுவரை அவர்கள் நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கப்படவில்லை ஆகவே உடனடியாக சகல உள்ளூராட்சி சபை ஊழியர்கள் அனைவரையும் உள்வாங்கி வெற்றிடங்கள் அனைத்தையும் இவ் வருடம் மார்ச் முதலாம் திகதிக்கு முன் நிரப்புமாறு ஆளுநர் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு கல்வி அமைச்சின் அதிகாரிகள்,கல்வி அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மொழி மூலப்பாடசாலைகளுக்கான 1000 வெற்றிடங்களை இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!

 இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஆளுனர் எனும் பெயரில் நடைபெறும் இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஒரு தேசம் என்ற வகையில் குடிமக்களாக சகல இனங்களும் பார்க்கப்பட்டு அவர்கள் ஆளப்படும் முறையில் நீதம் இருக்குமானால் அங்கு இனவாதத்திற்கு இடமிருக்காது. "இனவாதம் என்பது கீழ்த்தரமாக ஒரு மிருக உணர்வு". "இன்று அரசியல் வாதிகள் தூக்கும் மிகப்பெரிய ஆயுதம்". இந்த அரசியல் வாதிகள் இவ்வாறு இனவாதத்தை தூண்டுவதனால்தான் மனிதம் செத்துப்போகிறது; சுயநலன் மேலோங்குகிறது. இதற்கு பிரதான காரணம் இன்றுள்ள முதலாளித்து அரசியல் முறையாகும். இந்த அரசியல் முறையில் சுயநலம் எப்போதும் மேலோங்கியிருக்கும். மக்கள் நலம் சந்தர்ப்பவாத நலனாகவே இருக்கும்.
நீண்ட கால யுத்தம் எமக்கு புகட்டிய படிப்பினையை மக்களாகிய நாம் மறக்கமுடியாது. இனவாதத்தீயை மூட்டி மக்களது இரத்தம் ஓட்டப்பட்டது; பெண்கள் விதவையாக்கப்பட்டார்கள்; குழந்தைகளது எதிர்காலம் கேள்விக்குறியாகியது. தற்பொழுது ஓரளவு நிம்மதியாக சுவாசிக்க முற்படும்போது மீண்டும் இந்த இனவாத் தீயை மூட்டி அதில் அரசியல் இலாபமடைய நினைக்கும் காடையர் கூட்டத்தை மக்கள் ஓரம் கட்டவேண்டும்; எமக்குள் உள்ள சந்தேகங்களை இல்லாதொழிக்கும் விதத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். நிருவாகிகள் நிருவாகத்தில் மக்கள் நலன் சார்ந்து யோசிக்க வேண்டும். இனவாதத்திற்கு இடமளிக்க கூடாது.
ஆளுனராக யார் வந்தாலும் அவர் இனவாதத்திற்கு அப்பால் மனிதநலன் சார்ந்து சிந்தித்து, மக்கள் நலன் பேணவேண்டும். இலங்கை மக்கள் நாம் எனும் தொனிப்பொருளில் சகல மக்களையும் நீதமாக நடத்தவேண்டும். ஒரு முஸ்லிம் ஆளுனருக்கு இந்த பொறுப்பு நிறையவே உள்ளது. ஏனெனில் அவர் நீதம் தவறமுடியாதவராக எப்போதும் இருக்க கடமைப்பட்டுள்ளார்.
Abu Maryam 

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

(ஊடகவியலாளர் பஹத் ஜுனைட்)
தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் இன முறுகல் நிலையை தொற்றுவிக்கும் வகையில் ஒரு சில இன வாதிகளிகளால் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது..
பல தசாப்த காலத்தில் இருந்து அண்ணன் தம்பிகளாக ,அயல் வீட்டுக்காரர்களாக,உறவுகளை பேணி வரும் தமிழ் முஸ்லிம் உறவுகளை சகித்துஜ்கொள்ள முடியாத தனிப்பட்ட அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ், முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு இன வாந்தி எடுத்து அதில் இன்பம் அனுபவிக்கும் இனவாத அறிவிலிகளிடம் இருந்து நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும்.
கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம்களாகிய நாம் உறவில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும், தொழில்களிலும் பின்னிப் பிணைந்து வாழ்கிறோம் காலத்திற்கு காலம் முளைத்து வரும் அரசியல் நஞ்சு செடிகளை நாம் கவணத்தில் கொள்ளத் தேவை இல்லை காரணம் அந்த செடிகளில் உறுதி இல்லை சில காலத்தில் அழுகிய நிலையில் செத்துப் போய்விடும்..
அதே போன்று இனவாத அறிவிலிகள் தங்களது காரியங்களை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அதிகமான இளைஞர்கள் பாவனையில் இருக்கும் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயண்படுத்துகின்றனர்.
எனவே இது தொடர்பில் தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகள் ,பின்னூட்டம் இடும்போதும் அடுத்தவர்களது மனதை புண்படுத்தும் வகையிலோ அடுத்த சமயத்தை அல்லது சகோதர இனத்தை பாதிக்காத வகையில் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்களாகிய எங்களது நல்லிணக்க செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் ...

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.

மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.
நீ மனிதனாகப் பிறந்தால் மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.
1. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ சாப்பிட்டுக்கோ என்று சொல்ல முடியாது.
2. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ கழிவகற்று ( பேன்று தள்ளு) என்று மற்றவர் ஒருவரைப் பொறுப்புச் சாட்ட முடியாது.
3. எனக்காக நீ இன்றிரவு தூங்கிக் கொள் என்று யாரையும் கேட்க முடியாது.
ஆனால், எங்களுக்காக நீங்கள் அவர்களை நிர்வாணமாக்குங்கள் என்று யாரும் எவரையும் கேட்க முடிகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காணி எல்லைப் பிரிவினை, மதப் பிரிவினை, இனப் பிரிவினை பாலியல் பிரிவினை,நிறப் பாகுபாடு உட்பட்ட போலியாகக் கட்டமைக்கப்பட்ட பல புனிதப் பிரிவினைகளை உபயோகித்து வன்முறை எனும் வழிமுறை ஆளுகிற நவீன ஜனநாயக உலகில் நாம் வாழுகிறோம்.
1985 க்கு முன்னர் கிழக்கில் தமிழர் முஸ்லிம் முரண்பாட்டு மோதல்கள் இயற்கை வளப் பங்கீடு தொடர்பானதாக மட்டுமே இருந்தன.இவை இயற்கையான வளர்ச்சிப் போக்கை நிர்ணயிக்கும் தன்மையுடையதாக மாத்திரம் அமைந்திருந்தன.இங்கு உயிர்ப் பலிக்கோ மானபங்கப்படுத்தலுக்கோ இடமிருக்கவில்லை.சொற்பகால மன வருத்தங்களோடு முரண்கள் காணாமல் போயின.ஒரே மொழியைப் பேசிய மூன்று மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மீண்டும் மீண்டும் கைகளைக் கோர்த்து பட்டினியை விரட்டி வாழ்ந்தனர்.
இதன் பின்னரான தமிழர் முஸ்லிம் மோதல்கள் கடந்த 33 வருடங்களாக செயற்கையானவையாக உருவாக்கப்பட்டன. அவை அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்திருந்தன. பல உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சக்திகளால் இம்மோதல்கள் அவர்களது வியூக வெற்றிக்காக உருவாக்கப்பட்டன. இம் மோதல்கள் பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டதோடு நூற்றாண்டுப் பகைமையாக வேரூன்றியுள்ளது.
இனத்துவ அரசியல், வன்முறை வடிவத்ததை எடுத்த பின்னர் பெரிய பேரினக் கட்சிகள் இரண்டும், கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டி இரண்டு சிறுபான்மையினரும் ஒன்றாக அரசியல் செய்யும் வாய்ப்பை சிதறடித்தே வந்துள்ளன. இந்தச் செயல்பாட்டில் இஸ்ரேல் புலனாய்வின் பங்களிப்பு அளப்பெரியதாகும்.
மேற்குலகின் 2015 ஆம் ஆண்டைய நல்லாட்சி அரசமைக்கும் வியூகத்திற்கு பரிபூரணமாக இணங்கிப் போன மூன்று சிறுபான்மையினங்களையும் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தாள வேண்டிய அவசரம் சில சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வியூகத்தை வகுத்திருக்கும் வலுவான சக்திகளின் வலையில் கிழக்குத் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் சிக்காதிருக்க வேண்டும்.ஏற்கனவே சிக்கியவர்கள் வெளியேற வேண்டும்.
தம்பிகளே! தங்கைகளே!!
பரஸ்பரம் மன்னித்து பிழைகளை மறந்து கை கோர்த்து செயல்பட முன்வாருங்கள். தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்த அமைப்பாக்கம் பெறுவோம் வாருங்கள்.கிழக்கு வாழ் தமிழர்களும் முஸ்லிம்களுமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கட்சியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாகும். இதனை சரியாகக் கணக்கிட்டவர்கள் செய்யும் உத்திகளை அடையாளம் காண்போம், புத்தியைத் தீட்டுவோம், தமிழால் இணைவோம், தமிழால் அடைவோம், கிழக்கின் அபரிமிதமான வளங்களையும் கேந்திர முக்கியத்துவத்தையும் காப்பாற்றி நமது அடுத்த பரம்பரையின் கைகளில் சேர்ப்போம். அவர்கள் கடந்த பரம்பரையின் வேறுபாடுகளை வேரறுத்து இயற்கையை நேசித்து மனிதராக வாழ வழி சமைப்போம்!
மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.

வலயக்கல்வி பணிப்பாளரு நன்றி

வலயக்கல்வி பணிப்பாளரு நன்றி


ஏறாவூர் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு இம்முறை ஏறாவூர் கோட்டத்தில் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைக்கு விண்ணப்பித்திருந்தார்கள் கடந்த வருடம் 3 வகுப்புக்களுக்குரிய 103 மாணவர்கள் இணைக்கப்பட்டனர் .
இம்முறை 132 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயில விண்ணப்பித்திருந்தனர் இவ்விடயத்தினை மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இப்பாடசாலை அதிபர் இப்பாடசாலைக்கு கடந்த ஆண்டை விட இம்முறை 29 மாணவர்கள் உள்ளதனால் 4 வகுப்புக்களாக பிரிக்க அனுமதி கோரிய போது பெரும் மனதுடன் இக்கோரிக்கையை ஏற்று 132 மாணவர்களை சேர்ப்பதற்கும் அம்மாணவர்களை 4 வகுப்புக்களக பிரிப்பதற்கு அனுமதி வழங்கிய வலயக்கல்வி பணிப்பளருக்கு அதிபர், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக நன்றியினை தொரிவித்துக்கொள்கின்றோம் .
செயலாளர்
பாடசாலை அபிவிருத்தி குழு
டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயம்
ஏறாவூர்

Mohamed Niyas

இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்

இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்

இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கெதிரான இனவாதப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் -Thehotline
எம்.ஐ.லெப்பைத்தம்பி
விவசாயம், நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கெதிராக தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனவாதப்பிரசாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஒரு பிரதேசத்திற்கோ ஒரு இனத்திற்கோ உரிய அமைச்சரல்ல. அவர் இந்த மாவட்டத்தினதும் தேசத்தினதும் மூவின மக்களுக்குமான அமைச்சர் என்பதை இனவாதப்பிரசாரத்தில் ஈடுபடும் தமிழ் தலைமைகள் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பதுடன், அவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து இனங்களுக்கிடையில் விரிசலை உண்டு பண்ணும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
இந்த மாவட்டத்தில் இன நல்லுறவு கட்டியெழுப்பட்ட வேண்டுமெனும் நன்னோக்கிலும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளும் தனது வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமையை நன்றியுடன் நினைவுகூர்ந்து தனது அபிவிருத்திப் பணிகளை முஸ்லிம் பிரதேசங்களை விடவும் அதிகமாக தமிழ் பிரதேசங்களில் முன்னெடுத்து வருவதுடன், எப்போதும் அவர் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக நன்றியுடன் நினைவுகூரும் ஒருவராகவே இருந்து வருகிறார்.
இதன் காரணமாக அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி என எதிர்க்கட்சியினரால் வசைபாடலுக்குள்ளான பல சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும், தமிழ் பிரதேசங்களும் சரி சமமாக அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் அதிகரித்து வரும் மதுச்சாலைகள் அகற்றப்பட வேண்டும் என குரல் கொடுத்து வரும் அமீர் அலியை விமர்சிப்பதை எந்த தமிழ் மகனாலோ ஏற்றுக்கொள்ள முடியாது.
தாங்கள் தமிழ் சமூகத்தில் இழந்து போயுள்ள செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள கையிலெடுத்திருக்கும் ஆயுதம் தான் அமீர் அலி மீதான இனவாத சாயம் பூசல்கள் என்பதை சகோதர இனமான தமிழ் மக்கள் உணராதவர்களல்லர்.
தாங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அமைச்சராக பழம் பெரும் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து தமிழ் சமூகத்திற்கும் பெற்றுகொடுத்தவை என்னவென்பதை உங்களைப் பார்த்து நீங்கள் கேள்வி தொடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் இந்த மாவட்டத்தின் தமிழ் சமூகம் அடைந்த பலாபலன்கள் என்ன? நீங்கள் சுகபோகமாக வாழ வேண்டுமென்பதற்காக இந்த சமூகத்தைப்பலி கொடுத்தீர்களே தவிர, உங்களால் ஆனது எதுவுமில்லை.
கடந்த காலங்களில் தங்கள் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் செல்லாக்காசாகிப் போனமையால், நீங்கள் இப்போது கையிலெடுத்திருக்கும் ஆயுதம் தான் அமீர் அலி மீதான இனவாதப்பிரசாரம். இவைகளை நம்பி இனியும் தமிழ் சமூகம் ஏமாறப்போவதில்லை. நீங்கள் யார் என்பதை தமிழ் சமூகம் உணர்ந்துள்ளது.
இரு இனங்களும் சரி சமமான அபிவிருத்திகளை அடைந்து கொள்ள வேண்டும். அன்னியோன்யமாக வாழ வேண்டுமெனும் நோக்கிலே அமீர் அலிக்கான ஆதரவை தமிழ் வழங்கி வருகின்றனர். இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் நீங்கள் முன்னெடுக்கும் இனவதப்பிரசாங்களுக்கு உங்களால் மூழைச்சலவை செய்யப்பட்ட ஒரு சிலர் அப்பாவி இளைஞர்கள் பலியாகியுள்ளமை கவலைக்குரியது.
கடந்த காலங்களில் இவ்வாறு மூழைச்சலவை செய்து பலி கொடுக்கப்பட்டு ஒரு தலைமுறையை அழித்த தவறுகளை இனி மேலும் தொடர்ந்து செய்யாமல், நிம்மதியாக வாழ எத்தனிக்கும் இரு சமூகங்களையும் வாழ விடுங்கள் எனப்பகிரங்கமாக கேட்டுக் கொள்வதோடு, அதற்காக நீங்கள் கைலெடுத்திருக்கும் அமீர் அலிக்கெதிரான இனவாதப் பிரசாரங்களை கைவிட்டு பிணக்குகள், சர்ச்சைகள் ஏற்படுகின்ற போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.


Tuesday 8 January 2019

நோயாளர் பராமரிப்பு சேவை ஆரம்பம்.

நோயாளர் பராமரிப்பு சேவை ஆரம்பம்.
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இலக்கு இன்னும் ஓரிரு தினங்களில் செயல்வடிவம் பெறுகிறது.
கடந்த மூன்றாண்டுகால கடின உழைப்பின் பெறுபேறாய் எமது பராமரிப்பு இல்லம் எதிர்வரும் 13.01.2019 ஞாயிறு காலை தனது பராமரிப்பு சேவையினை ஆரம்பம் செய்ய இருக்கிறது.
எதிர்வரும் #மார்ச்_மாத_நடுப்பகுதியில் #வரலாற்று#முக்கியத்துவம்_நிறைந்த திறப்பு விழா (Grant Opening Ceremony) இடம்பெற இருக்கும் இதே வேளை முதலில் பயனாளிகளை உள்வாங்கி அவர்களுக்கான அடிப்படை விடயங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு நோயாளிகளை அனுமதிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அன்பார்ந்த உறவுகளே...
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நோயின் தீவிரநிலையை அடைந்து வாழ்நாளின் இறுதித் தருணங்களை கவலையோடும் உபாதைகளோடும் கடத்திக் கொண்டிருக்கும் உறவுகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் குடும்ப அங்கத்தவர்களின் சுமையை சற்று தளர்த்தி உதவிட முன் வாருங்கள்.
உங்களது உறவுகள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிந்திய நிலையை அடைந்து நிர்க்கதியான நிலையிலிருந்தால் #நாட்டின்_எப்பகுதியில் இருந்தாலும் அவர்களை எங்களோடு இணையுங்கள்.
தனித்தனியான சகலவசதிகளும் நிறைந்த அறைகளில் அவர்களை முற்றிலும் இலவசமாக பராமரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
முதல் கட்டமாக 12 தீவிரநிலை நோயாளர்களுக்கான இட ஒழுங்கே நம்மிடம் இருப்பதால் #பதிவுகளுக்கு_முந்திக்கொள்ளுங்கள்.
#இன_மத_வேறுபாடில்லாத #இலங்கையர் #யாவருக்குமான#இந்த_தேசிய_வேலைத் திட்டத்தில் அனைவரும் கை கோர்த்து நோயினால் நொந்து நூலாகிப்போன உறவுகளின் இறுதி நிமிடங்கள் அமைதியான சூழலில் ஆரோக்கியமான போசாக்குடன் ஆன்மீக திருப்தியுடன் நிம்மதிப் பெருமூச்சுடன் கழிந்திட நாம் எமது பங்களிப்பை தாராள மனதுடன் வழங்குவோம்.
உங்களது #ஒவ்வொரு #share உம் மிகப்பெரும் தர்மமே.
உடனடித் தொடர்புகளுக்கு:
Dr.A.Iqbal(Consultant clinical oncologist)-0714442248
Mr.AM.Fairoos(Nursing Officer)-0779919986

நோயாளர் பராமரிப்பு சேவை ஆரம்பம்.


ஒரு வழி பாதைக்கு மனச் சுவர்கள் தேவையில்லையே!

ஒரு வழி பாதைக்கு மனச் சுவர்கள் தேவையில்லையே!
சுவர்கள் - வீட்டின் எல்லைகளாகவோ அல்லது பாதுகாப்பிற்காகவோ தேவைதான் என்றாலும், மனிதர்களுக்குள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணம் காட்டி தனித்தனியே அல்லது கூட்டாக தங்களுக்கிடையே மனங்களில் சுவர்களை எழுப்பிக் கொண்டு வாழ்தல் தேவையா என்பது ஆழ்ந்த சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய ஒன்றாகும். 
          ஏதோ ஒரு அறியாமையில் அற்பக் காரணத்திற்காக
     தத்தம் நெஞ்சத்திற்குள் நெடுஞ்சுவர்களை எழுப்பிக் கொண்டு,
          இன்ப ஊற்றாக இருக்க வேண்டிய நமது உறவில்
     ஈட்டியை பாய்ச்சிக் கொண்டு,
          ஒருவருக்கொருவர் நெருங்காமல்
     தொலைதூரத்தில் நின்றுக் கொண்டு,
          அருகிலே எதிரும் புதிருமாக
     அவரவர் முதுகை காட்டி கொண்டு,
          மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல்,
     ஏதோ ஒரு சூறாவளியில் சிக்கி கொண்டு,
          வீட்டை சுற்றி கட்ட வேண்டிய சுவற்றை
     உள்ளத்தைச் சுற்றி எழுப்பிக் கொண்டு, 
          சோகத்தின் சொந்தக்காரர்களாகி நிற்கின்றோமே.

நாம் - பல ஆண்டுகள் உயிருக்கு உயிராய் பழகிய நண்பர்கள் என்பது மறந்து விட்டதா? அல்லது மறக்கடிக்கப்பட்டதா?.

"எனக்காக உயிர் கொடுப்பான் என் தோழன் என்று பெருமிதப்பட்டு, பிரிக்கப்பட முடியாதவர்கள் நாங்கள்" - என மார்தட்டி நட்பை அடைமழையாய் பொழிந்தவர்களிடையே கூட திடீரென ஒரு சுவர் ஓசையின்றி கட்டப்பட்டு விட்டதே! அதுவும், இந்த குறுக்குச் சுவர், நமது பல ஆண்டுகால நட்பு என்பதையே பொய்யாய், பழங்கதையாய், கனவாய், மாற்றி விட்டதே. ‘கண்ணுக்கு தெரியாத, கருத்துக்கு’ மட்டுமே தெரியக் கூடிய இந்த சுவருக்கு இப்படி ஒரு சக்தியா? என்ன ஒரு ஆச்சரியம்!

நட்புரிமை பாராட்டும் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இடையே ஏற்படும் பிழைபட உணர்தல், கசப்புணர்வாக மாறி - "காரையும் சிமெண்டும் இல்லாமலேயே சித்தாளும் கொத்தாளும் கட்டாமலேயே" இந்த மனச்சுவர்கள் - மனைசுவர்களை விட வெகுவேகமாக எழும்பிவிட்டதே! என எண்ணும்போது நல்லோர் மனம் வேதனை கொள்கிறது.

கருத்து-வேறுபாடு என்பதற்கும், கருத்து-மாறுபாடு என்பதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன என்பதையே நண்பர்கள் பலர் உணர்ந்து கொள்வதை விட்டு, நயத்தக்க நாகரீக முறையில் ஒன்று கூடி, தன்மையாகப் பேசி தீர்வை சிறப்பாக்கி கொள்ளலாமே.

சில மனிதர்களிடத்தில் "ஆசைக்கு முன் அறிவு வேலை செய்வதில்லையே?" அது போன்று, "படித்தவர்கள் எண்ணிக்கை பெருகிய அளவிற்கு பண்பாளர்களின் எண்ணிக்கை பெருகவில்லையே" - ஏன்? என்பதும் இது போன்ற சுவர்கள் தோன்ற காரணமாகி விடுகின்றதோ? மனிதன் என்பவன் பகுத்தறிவையும், மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும், விட்டு கொடுத்து வாழும் நெறிமுறைகளையும் அடிப்படையாக கொண்டு இருப்பதால்தான் மற்ற உயிர்வாழ் பிராணிகளை விட உயர்ந்த, வாழ்வியலுக்கு உரியவனாகிறான்.

வீட்டின் ‘மூலையில் உள்ள குப்பைகளை வெளியே எறிவது போல நமது மூளையில் ஏற்படும் சில தரமில்லாத முடிவுகளை புறந்தள்ளி விடுவோமேயானால்’ அனைவரும் மகிழும்படியான ஒரு நல்ல தீர்வு "தானே" அமையும். "பிரச்சனைக்கு தீர்வை தேட வேண்டும் அல்லாது தீர்வையே பிரச்சனையாக்கினால்" ‘சிந்துபாத்’ தொடர் போன்று நீண்டு கொண்டே போகுமல்லவா?

உன்னுடனேயே நீ நட்பு கொள்வதும், மற்றோரிடம் அன்பு காட்டுதலும், பெருந்தன்மை, நியாயம் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் போதே சமுதாயம் உங்களை பின்தொடர வழிவகை செய்யும். "எதை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என நீங்கள் கருதுகிறீர்களோ, அந்த செயலை மற்றோருக்கு நீங்களும் செய்யாதிருப்பதே சிறந்த மனிதனின் செயல். ஆகவே, எது முறையான செயல்? என்பது எப்போதும் நமக்குள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கேள்வியாகும். "ஊக்குவிக்க ஆள் இருந்தால் - கொண்டை ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்".

கசப்புணர்வு, சச்சரவு இவைகளற்ற ஒரு சமாதானமான அமைதி வாழ்க்கை அமைய, உயர்ந்த உன்னத உணர்வினை கொண்டவர்களாக, தொண்டு எண்ணமும், ஒற்றுமைக்கு உழைக்கும் - வானம் போன்ற பரந்த - மனம் உள்ளவர்களாக வாழ கற்றுக் கொண்டு வாழ்வோமேயானால், காலம் நம்மை சிறந்த மனிதர்கள் என்று மட்டுமல்லாது - வரலாற்று மனிதர்கள் என்றும் போற்றும்.

இப்போதோ, பின்னரோ அடுத்தவர் மனம் வருந்தும் விதமாக எந்த செயலையும் செய்வது முறையல்ல. தவறுகள் பின்னர் திருந்தினாலும் அல்லது திருத்தப்பட்டாலும் கூட, அந்த தவறுகளால் ஏற்பட்ட காயங்கள், தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறலாக நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, நன்கு சிந்தித்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மனைச் சுவர்களை மண்ணோடு மண்ணாக்கி இடிப்பதைப் போன்று, இந்த மனச் சுவர்களையும் - நமது பாசத்தால், பண்பால், பழகும் நேசத்தால் இடித்தால், முன் போலவே ஊனாகி, உணர்வாகி உறவில் கலந்து, உயர்வது எப்படி என்று யோசியுங்கள்... மகிழ்ச்சி ஊற்று மறுபடியும் நமக்குள் பொங்கி வழிவது நிச்சயம்...

மறப்போம்.
மன்னிப்போம்.
மறுபடியும் இணைவதற்கு படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக...



சாதனையின் திறவுகோல் உங்களிடமே

சாதனையின் திறவுகோல் உங்களிடமே

கல்விக்கு கண் உதவும். கேள்விக்கு காது உதவும். கேள்வியால் தான் ஞானம் பெற முடியும். நம் உடலில் ஒன்பது வாசல்கள். அவற்றுள் இரண்டுக்குத்தான் கதவுகள் இல்லை. ஒன்று மூக்கு, மற்றொன்று காது.

 மூக்கு உயிர்மூச்சின் பயணப்பாதை. அது எந்த நேரமும் திறந்தே இருக்கும். அதுபோல நல்ல கருத்துக்கள் எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாரிடமிருந்து எப்போது வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் காதுகளுக்கு  கதவுகள் இல்லை. காதுகளின் மகிமை இப்போது புரிந்திருக்கும்.

 இத்தகைய இனிய காதுகளைப் பெற்றிருக்கின்ற இளைஞர்களே..! உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுங்கள். சாதனையின் திறவுகோல் உங்களிடமே! எப்படி என சொல்கிறேன்.

 நம்மில் பலர் நேரமே போகவில்லை என்கின்றனர். சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர். இன்னும் சிலர் நேரமே சரியில்லை என்கின்றனர்.

 நேரத்தைக் கொன்று விடுவது கொலையல்ல, அது ஒரு தற்கொலை நேரத்தைத்தவிர வேறு எதுவும் நமக்குத் சொந்தமானதல்ல. அந்த நேரத்திலும் அதிகாலை மிகவும் வாழ்க்கைக்கு நல்ல நேரமாகும்.ஆனால், பலருக்கு சிரமமானது அதிகாலையில் தினமும் எழுந்திருப்பது தான்.

 அந்த சோம்பல்க்கு நிறந்தர விடுமுறை கொடுத்து விடுங்கள். ஒரு நாளையின் உற்சாகம் அதிகாலையில் எழுந்திருப்பதில் தான் உள்ளது என்றால் மிகையில்லை!

 டாக்டர் ப்ரட் ஸ்டட்மன் என்பவர் தான் உலகிலே முதலில் நடப்பதை உடற்பயிற்சியாக மேற்கொண்டார். உடல் உறுதிக்கும், அழகான தேக தோற்றத்திற்கும் நடைப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அந்த ஆய்வில் அவர் கண்டறிந்த உண்மை.

 இன்றும் நடைமுறையில் எல்லா வயதினருக்கும் வாழ்வில் தேவையான ஒன்றானாலும் நன்றாகவே,அது நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் முக்கிய கேடயமாக உதவி புரிகிறது.

 காலையில் தினமும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடப்பதன் மூலம் இளமையில் இருந்தே உடலில் சேரும் கொழுப்பு குறைவதுடன் சுகர், இரத்த அழுத்தம் எப்போதுமே அளவுக்கு அதிகமாக இல்லாமல் அது பார்த்துக் கொள்கிறது.

 எப்போதும் இளமையாகவும், புத்துணர்ச்சியும் பெற நடைப்பயிற்சி உதவுகிறது . உடல் பலம் - ஆன்மபலம் எனும் இரண்டு பெரிய சக்திகள் இயற்க்கையாகவே கிடைக்கும் போது, எத்தனையோ சிறந்த சாதனைகளைச் செய்ய எரிசக்தியாக அது உருப் பெறுகிறது.

 நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களிடம் இளமையும், திறமையும், வேலைத்திறனும் அதிகரிக்கின்றது என மருத்துவ ஆய்வுக் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

 உடல் நலம் உள்ளவர்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்கிறது, தன்மைபிக்கை உள்ளவர்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது. உடலில் உற்சாகம் குறைந்து போவதற்கு வயசு மட்டும் ஒரு காரணமல்ல - மாறாக சரியான உடல்பயிற்ச்சி நடைமுறைபடுத்தாமல் இருப்பதுதான் மூலக்காரணம்...முதல் காரணம்...

 கவலையில்லா வாழ்க்கை பள்ளி, கல்லூரி வாழ்க்கை தான். வாழ்வில் வசந்தகாலம் இங்குதான் தொடங்குகிறது. எண்ணங்கள் சிறகடித்து எங்கெங்கோ பறக்கும், புதுமைகளைக் காணும் பொழுதெல்லாம் மனது பட்டாம்பூச்சியாக படப்படக்கும், துடி துடிக்கும், ஆசைகள் அலைபாயும், குறும்புகள் கள்ளமில்லாமல் கொப்பளிக்கும்.

 வகுப்பறை விநோதங்கள் பல நிகழ்வதுண்டு அதில் ஒன்றை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.  வகுப்பாசிரியர் மாணவர்களிடம் இன்னும் ஒரிரு மாதத்தில் முழு ஆண்டு தேர்வு வரப்போகிறது. நாம் ஒரு புதிய இடத்திற்கு சுற்றுலா போகலாம், எங்கே போகலாம்? என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்றார்.

ஒரு மாணவன் எழுந்து சார்! குற்றாலம் போகலாம் என்றான். பலரும் பார்த்தது என்றார்கள். இன்னொரு மாணவன் எழுந்து சார்! கன்னியாகுமாரி என்றான். அப்போதும் பலர் பார்த்தாச்சு என்றார்கள்.

 ஒட்டுமொத்தமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. இறுதியாக ஒரு மாணவன் எழுந்து சார்! நம்ம ஊர் பொது நூலகத்துக்கு போகலாம், அங்குதான் சார் நம்ம யாருமே இதுவரை போனதில்லை என கூறினான்.

 குறும்பான அந்த வார்த்தைகளில் வகுப்பறையே சிரிப்பலைகளால் குலுங்கியது என்றாலும், அந்த சிரிப்புக்குள் சிந்திக்கவும் பல செய்திகள் இருக்கின்றன .

 மாணவர்களிடத்தில் இன்று மனிதர்களின் வரலாறுகளை படிக்கின்ற பழக்கம் மிக குறைவாக குறைந்துக்கொண்டே வருகிறது என்பதுதான் வேதனையான ஒன்று.

 அனைத்தும் இருந்தும் அறிவு பெற காயல் நூலகத்திற்கு வருவோர் அதிகமில்லை. ஏனெனில், அணைத்துக் கொண்டிருப்பது, அழைத்துக் கொண்டிருப்பது , கைபேசியில் வாட்ஸ் அப் , முகநூலை அல்லவா..?

 மனிதர்களைப் புத்தகங்கள் தான் புனிதர்களாக மாற்றுகிறது. அத்தகையப் புத்தகங்களில் புதைத்திருக்கின்ற புதையலைத் தேடி, தோண்டி மாணவர்களின் இளமைப் பருவம் செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய காலச்சுழலுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.

 பலரை சாதனை புரிவதற்கும், சமூக மாற்றத்திற்கு துணை புரிவதற்கும் புத்தகங்கள் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளன. செய்து வருகின்றன.

 என் மனதுக்கு உகந்த நல் நூல்களை மட்டும் என்னிடம் கொடுத்து என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கவலைப் படாமல் சந்தோமாக வாழ்நாளை கழிப்பேன் என்கிறார் சிந்தனையாளர் மாஜினி .

 நமதூர் மா(ணவிகள்)ணவர்கள், இளைஞர்கள் அன்றைய காலத்தை விட இன்று மார்க்க அறிவுக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்களின் பெயருக்கு முன், பின் பட்டங்கள் இட உழைத்து படித்தாலும்,

பொதுஅறிவு என்பது என்னமோ நூலகத்தில் தான் புதைந்து கிடக்கிறது. ஆனால் அங்கு முதியவர்களைத்தான் அதிகம் காணக் கிடைக்கிறது.

 பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை, மாணவர்களை கடமையுடன் நூலகத்தில் இணைத்துவிட்டு அவர்களுக்கு உலக அறிவு தாகத்தை ஏற்படுத்திட வேண்டும். அப்போது தான் அவர்கள் வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும் இளமையிலிருந்து வேரூன்ற முடியும்.

 இன்றைய நமது எதிர்கால புதிய தலைமுறையை வழிநடத்த பிறந்த இளைஞர்கள் , ஊரில் இருசக்கர வாகனங்களை எப்படி ஒருவழிப்பாதையில் ஓட்டுவது, எந்த இடங்களில் முறையாக நிறுத்துவது, ஓட்டுனர் உரிமம், விபத்துக்கள் இன்றி இப்படி எண்ணற்ற ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்களாக திகழ வேண்டும்.

 அவ்வாறு திகழ்வதற்கு இன்னும் பல நல்ல அறிஞர்கள், சாதனையாளர்கள், நாட்டுத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 மேலும், நமது பிள்ளை செல்வங்கள் நாளை இவர்களைப் போல சாதனையாளர்களாக வளர்ந்து வர ஊன்று கோலாக , தூண்டு கோலாக பெற்றோர்கள் விளங்கிட வேண்டாமா ? வாழ்க்கை என்பதே வெற்றியை நோக்கிய பயணம்தானே!

 நீ இந்த உலகத்திற்கு வெள்ளைத் தாளாகவே வருகிறாய் அதில் நீதான் உன்னை எழுதிக்கொள்ள வேண்டும் சிலர் இந்தத்தாளில்  கிறுக்குகிறார்கள். சிலரோ படிக்கப்பட்டபின் குப்பைக்கூடையில் எறியப்படும் காகிதமாகிறார்கள். சிலரோ வெற்றுத்தாளாகவே இருந்து விடுகிறார்கள் இதில் நான் யார்? என்பதை நிரப்பிக்கொள்ள வேண்டியது உங்களது தேடலின் திறவுகோலில் தான் உள்ளது என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.

 எப்பொழுதும் உங்களைச் சுற்றிலும் நல்லவர்கள், அறிவாளிகள், அரண்போல் சூழ்ந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு இரும்புதான் இன்னொரு இரும்பைக் கூர்மையாக்கும், அதுபோல கூர்மையான அறிவுடையவர்கள் தான் மற்றவரை கூர்மையான அறிவுடையவராக உருவாக்க முடியும்.

 பிரமிடின் தத்துவம் அனைவரும் அறிந்ததே! சாதாரணமாக பிரமிடின் அடிப்பாகம் அகலமாகவும் பின்பு படிப்படியாக குறுகி அதன் உச்சி ஒரு புள்ளியில் போய் முடியும்.

 இலட்சிய கனவை நடைமுறைப்படுத்த இந்த பிரமிடை தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் இலட்சியக் கனவு பரந்து விரிந்த பிரமிடின் அடிப்பாகம் போன்றதாகும்.

 அதை அடைய முயலும் போது முதலில் சிறு சிறு வெற்றிகள் கிடைக்கும். அந்த சிறு வெற்றிகள் வாழ்கையின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த தன்னம்பிக்கை தான் வலிந்து பெரிய வெற்றியை அடைய வழி வகுக்கும்.

 ஒரு சிறு புள்ளியிலிருந்து தொடங்கி தலைகீழ் பிரமிடின் பரந்து விரிந்த வெற்றியை அடையலாம். அந்த பல வெற்றிகளே ஒன்றுசேர சாதனைக்கு வழுசேர்க்கும்.

 நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர் . இளைஞர்களிடம் உள்ள மகத்தான சக்தியைதான் இவரின் இந்த வைர வரிகள் நினைவு படுத்துக்கின்றன.

 நம்பிக்கையுடன் உங்கள் பயணத்தை தொடர்ந்தால் சாதனை பக்கங்களில் சரித்திரமாக இடம் பெற இன்றே கனவு காணுங்கள்.

 மாணவர்களே! இளைஞர்களே! உங்களிடம் ஒப்பற்ற சக்தி இருக்கிறது. அதைக் கொண்டு ஏதாவது உங்களுக்கு இடப்பட்ட துறையின் சாதனையை செய்யலாம். ஆனால்! பலர் தங்களின் சக்தியை சிறிது சிறிதாக பலவழிகளில் செலவிடுக்கின்றனர் இதை தவிர்க்க வேண்டும்.

 உங்களிடம் உள்ள ஆற்றலை ஒருமுகப்படுத்தி ஒரே வழியில் பயனுள்ளதாக பயன்படுத்திப் பாருங்கள். அப்போது தெரியும். உங்கள் திறமையின் வெளிப்பாடு, வெற்றியாக மாறி இலக்கை எளிதில் தொட்டு விட முடியும் . உங்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரங்கள் என்று எதுவுமில்லை. அந்த உயரத்தை அடைவதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை எல்லாம் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.

 எழுந்து நில்! தைரியமாக இரு! வலிமையுடன் முன்னேறு! பொறுப்புகள் முழுவதையும் உன் தோள் மீது சுமர்ந்துக் கொள்! உனது இலக்கை நீயே நிர்ணயத்துக் கொள்! உனக்கு தேவையான சகல உதவிகளும் உன்னிடமே புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்!

 நீ கருவிலேயே உன்னுடன் போட்டி போட்ட பல கோடி சகோதரர்கள், சகோதரிகளை ஜெயித்தே ஜனித்தவன் என்பதை மறந்துவிடாதே!

 நீ பிறக்கும் போதே உனக்குரிய நற்பண்புகள் உனக்குள்ளே விதையாய் ஒளிந்திருக்கிறது . அதைகண்டுபிடி! தண்ணீர் இடு! உரமிடு! பிறருக்கு நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து, உயர்ந்து நிற்பாய் .

 இளமை மிக அற்புதமானது, வாழ்வில் ஒருமுறை தான் வரும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் இளமையில் சாதித்ததுதான் என்பார் அறிஞர் பெஞ்சமின் பிஸ்ரேலி.

 விதைக்குள் விருட்சம் இருப்பதைப் போல அந்த ஆற்றல் வெளி வந்தால் பயனடையப் போவது நீங்கள் மட்டும் என்று எண்ணாதீர்கள்! உங்களைச் சுற்றியுள்ள இந்த சமூகமும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்!!

 ஒரு குறிக்கோளை அடைவதில் ஒரு இளைஞனுக்கு உற்சாகம் இருக்குமானால் அது எவ்வளவு பெரிய கடினமான விசயமானாலும் அவனால் சாதித்து விட முடியும் என்பார் சார்லஸ் லாப்!

 அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியாகத் திகழ்ந்தவர் ஜான் கென்னடி, சில பார்வையாளர்களை நாள்தோறும் சந்திப்பது அவரது பணிகளில் ஒன்று. அதுபோல ஒரு நாள் வெள்ளை மாளிகையில் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 ஒரு மாணவரிடம் உன் எதிர்கால லட்சியம் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவச் சிறுவன் இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இதே மாளிகையில் இதே நாற்காலியில் நான் உட்கார வேண்டும்! இதுதான் அந்த சிறுவனின் பதில்.

 கென்னடியின் விழிகள் வியப்பால் விரிந்தன, உதடுகள் மொட்டுகளாக மலர்ந்து விரிந்தன. உனக்கு என் பிராத்தனையும், நல்வாழ்த்துகளும் என்று சொல்லி விடைப்பெற்றார்.

 காலம் கனிந்தது. கூடவே பதிலும் சொல்லியது. அதே சிறுவன், அதே இடத்தில், அதே நாற்காலியில் வந்து அமர்ந்தார். அது வேறு யாருமல்ல! உலக புகழ் பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தான்.

 இன்று தனது துணைவியார் ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் என்ற வரலாறு உங்களின் சிந்தனைக்கு நல்ல பாடம் புகட்டவில்லையா?

 இலக்கை நோக்கிய பயணத்தில் இடையூறுகள் வரலாம். ஒருபோதும் அதைப் பொருடபடுத்தாதீர்கள். இளமையில் திறமை என்பது ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்றாக இருக்க வேண்டும். இந்த திறமையை அடிப்படைத்திறமை, செயல்பாட்டுத்திறமை  என இருவகைப்படுத்தலாம்.

 அடிப்படைத் திறமை என்பது பாடம் படிப்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, மற்றவர்கள் எப்படிப் பேசுகிறார்கள். நாம் எப்படி பேசுவது போன்றவை . செயல்பாட்டுத் திறமை என்பது, காலம் தவறாமை, புதிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன அவற்றை எவ்வாறு பயன்படுத்தி வெற்றிப் பெறுவது என்பதை அறிந்து கொள்வது,

 ஆற்றல் எனும் திறவுகோல் மற்றும் போர்க் குணம் இவைகள் மூலம் இலக்கை நோக்கி பயணித்து, சாதிக்க துடிக்கும் இளைஞர்களே , வரலாற்றுப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்களாக மலர்வார்கள் என்பது தான் நிதர்சனம்.

 நம்பிக்கை என்பது புயற்காற்றில் துவண்டு விடும்  மெல்லிய மலரல்ல, அது அடிபெயரா இமயத்தைப் போன்றது. முன்னேறுபவர்களின் மூச்சுக்காற்று நம்பிக்கை தான். வெற்றியடைவதற்கு அவசியமான குணங்களில் தலை சிறந்த நற்குணம், நம்பிக்கை தான். உங்களுக்கு இருக்கின்ற மூன்றாம் கையைப் புரிந்துக் கொண்டீர்களா?

நம்பிக்கையோடு புறப்படுங்கள். இதோ! ஒரு புதிய விடியல் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. யுக்தியோடு திறந்துக் கொள்ளுங்கள் சாதனையின் கதவுகளை.

வாய்ப்பு என்பது எப்பொழுதும் வருவதல்ல , எப்பொழுதாவது வருவதற்குப் பெயர் தான் வாய்ப்பு! அப்படி வரும்பொழுது அதைப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவர்களே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியடைகின்றார்கள்.

நம்முடைய பெயர் , ஊராட்சி, நகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது உலக மக்களின் இதயங்களிலும், வரலாற்றுக் கல்வெட்டிலும் பதியப்பட்டிருக்க வேண்டுமா? என்ற எண்ணத்தின் திறவுகோல் உங்களிடமே..!

ஒரு ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ?

ஒரு ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ?

வை.எல்.எஸ்.ஹமீட்: ஆளுநர் நியமனம் : சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது . சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்கலாம். 154B(2) அதேநேரம் 2/3 பெரும்பான்மை மூலம் குறித்த காரணங்களுக்காக ஆளுநரை நீக்கும்படி மாகாணசபை கோரலாம். 154B(4)
அதிகாரம்
—————
ஜனாதிபதியைப்போன்று ஆளுநருக்கும் மாகாணசபையைக் கூட்டுகின்ற, ஒத்திப்போடுகின்ற ( to prorogue), கலைக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. 154B(8) ஆனால் முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கின்றபோது அவரது சம்மதமின்றி கலைக்க முடியாது. 154B(8). முதலமைச்சரின் சம்மதமின்றி கலைத்து நீதிமன்றத்தினூடாக மீண்டும் கூட்டப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.
நிறைவேற்றதிகாரம்
—————————
நிறைவேற்றதிகாரம் ஆளுநருக்குரியது. அவற்றை நேரடியாகவோ அல்லது அமைச்சர்களுக்கூடாகவோ அல்லது அதிகாரிகளுக்கூடாகவோ ஆளுநர் பாவிக்கலாம். 154C. ஆனால் அவ்வதிகாரங்களை அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம்தான் பாவிக்கலாம். 154F(1) ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.
இங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அதிகாரமளிக்கின்ற பிரதான சரத்துக்கள் இவை இரண்டுமே. இங்கு ‘ஆலோசனை’ என்று பாவிக்கப்படும் சொல் அறிவுறுத்தலே. அதன்பிரகாரம்தான் ஆளுநர் நடக்க வேண்டும். (உண்மையில் இது ஒரு Westminster மொடலாகும்.) 1972ம் ஆண்டு யாப்பில் நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதிக்கும் இதேபோன்ற வசனமே பாவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பாவிக்கப்பட்டால் அந்த விடயங்களில் அவர் நிஜத்தில் நிறைவேற்றுதிகாரம் அற்றவரே. நிறைவேற்றதிகாரம் அந்த ஆலோசனை வழங்குபவருக்கு யதார்த்தத்தில் போய்விடும். இந்திய ஆளுநனரின் அதிகாரமும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. [இந்திய யாப்பு- சரத்து163]
ஆனாலும் இலங்கை ஆளுநர் விதிவிலக்கான விடயங்களில் மாத்திரமல்ல, மேற்கூறிய சரத்துக்களின்படி நிறைவேற்றதிகாரமல்லாத, வெறும் றப்பர் ஸ்டாம்பாக இருக்கவேண்டிய விடயங்களில்கூட அவர் மிகவும் அதிகாரம் பொருந்தியவராகவே இருக்கின்றார். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
அதில் ஒன்று: சரத்து 154F(2) ஆகும். அதாவது 154F(1) இன்படி நிறைவேற்றதிகாரவிடயத்தில் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய இயங்க வேண்டும் ஆனால் அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட சில தற்துணிவு அதிகாரங்களில் அமைச்சரவையின் ஆலோசனையின்படி இயங்கத்தேவையில்லை; என்ற விதிவிலக்கு இருக்கின்றது. மேற்படி உப சரத்து இரண்டில் ஏதாவது ஒரு விடயத்தில் ஆளுநர் தனது தற்துணிவு அதிகாரத்தை பாவித்திருக்க வேண்டும்; என்றோ பாவித்திருக்கக் கூடாது; என்றோ அந்த அடிப்படையிலும் நீதிமன்றில் கேள்வி எழுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதே சரத்து இந்திய யாப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரத்து 163(2). ஆனால் தற்துணிவு அதிகாரத்தைப் பாவித்திரிக்க வேண்டுமா? இல்லையா? என்றுதான் கேள்வி எழுப்பமுடியாதே தவிர, இது தற்துணிவு அதிகாரமா? இல்லையா? என்று கேள்வி எழுப்புவதில் தடையில்லை.
இந்தியாவில் ஆளுநனர்கள் பொதுவாக மாநில நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஆனால் இலங்கையில் ஆளுநனரின் தலையீடு அதிகம். இதற்குக் காரணம் 154F(2) இல் இந்திய யாப்பில் இருப்பதற்கு மேலதிகமாக ஒரு வசனம் இருக்கின்றது. அந்த வசனம் “ இங்கு ஆளுநரின் தற்துணிவு அதிகாரமென்பது ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்திலிருந்து வருவதாகும் ;” என்பதாகும்.
19வது திருத்தம் வரும்வரை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடுக்கும் நிலை இருக்கவில்லை. எனவே, ஆளுநர் தற்துணிவு அதிகாரம் என்று எதையாவது செய்தால் அதனைக் கேள்விக்குட்படுத்த, கட்டுப்படுத்த வழி இருக்கவில்லை. எனவே, மாகாணசபையின் வேண்டிய விடயங்களில் ஆளுநனருக்கு தலையிட முடிந்தது. இதனால்தான் கடந்த காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ‘ ஆளுநர் செய்ய விடுகின்றார் இல்லை; எல்லாவற்றிலும் தலையிடுகின்றார்’ என்ற முறைப்பாடு அதிகமாக இருந்தது.
இரண்டாவது: சரத்து 154B(2) இல் “ ஆளுநர் சரத்து 4(b) பிரகாரமே பதவி வகிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 4(b) தான் ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரத்தை வழங்குகின்றது. எனவே, “ ஜனாதிபதியின் பிரதிதியாகவே ஆளுநர் செயற்படுகின்றார். அவரது நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்திலிருந்தே பெறப்படுகின்றது.
எனவே, ஜனாதிபதிக்கு ஆளுநரின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் உத்தரவுகளை வழங்குவதற்கும் முடியும். அவ்வாறு உத்தரவுகள் வழங்கினால் அவ்வுத்தரவுகள் மாகாண அமைச்சரவைத் தீர்மானங்களை மேவும்;” என்று 13வது திருத்த வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சுருங்கக்கூறின் மாகாண அமைச்சரவை என்ன முடிவுகளை எடுத்தாலும் ஆளுனர் தனது தற்றுணிவு அதிகாரம் என்ற பெயரிலோ அல்லது ஜனாதிபதியின் உத்தரவு என்ற பெயரிலோ வேண்டிய தலையீடுகளைச் செய்யமுடியும்.
பொதுச்சேவை
——————-
இவற்றிற்கு மேலதிகமாக மாகாணசபைகள் சட்டம் இல 42 of 1987 உம் பல அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குகின்றது. இதில் பிரிவு 32 மிகவும் முக்கியமானதாகும். இதன் பிரகாரம் மாகாண பொதுச்சேவைக்கான நியமனம், இடமாற்றம்போன்ற அனைத்து விடயங்களும் ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, பிரதம செயலாளர், மற்றும் அதிகாரிகளுக்கு delegate பண்ணுப்படலாம்.
மட்டுமல்லாமல் 1989 ம் ஆண்டைய 12ம் இலக்க சட்டத்தின்படி ஏதாவதொரு சட்டத்தில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டு அவ்விடயம் தற்போது மாகாணசபையின் கீழ் வந்தால் அந்த ‘ அமைச்சர்’ என்ற சொல் ‘ ஆளுநரை’ அல்லது அம்மாகாணத்தின் உரிய ‘அமைச்சரைக்’ குறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதன்மூலம் அங்கும் ஆளுநரின் தலையீட்டுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் ஆளுநர் தலையிட நினைத்தால் மாகாண அமைச்சரவை வெறும் பொம்மை, ஆளுனர் விட்டுக்கொடுத்தால் நிர்வாகம் செய்யலாம். ஆனால் புதிய யாப்பில் ஆளுநரை முதலமைச்சரின் அடிமையாக ஆக்குவதற்கு இடைக்கால அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.
மாகாணசபை கலைகின்றபோது
——————————————
மாகாணசபையில் அமைச்சரவை இருக்கும்போதே இவ்வளவு அதிகாரமெனில் அவருக்கு அறிவுறுத்தல் வழங்க அமைச்சரவை இல்லாதபோது முழு அதிகாரமும் அவருக்குத்தான் என்பதை சொல்லித்தான் புரியவேண்டுமென்பதில்லை.

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
நேற்று இரவு சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
01.சென்ற வாரம் தனது காணிக்குள் சென்ற எமது ஊரைச்சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரரை நிர்வாணப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செயலை சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான ஒரு நிகழ்வு எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் ஏற்படக்கூடாது.
02. மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட மயூரன் ( காணி உத்தியோகத்தர் ) உட்பட 8 நபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை காணி உத்தியோகத்தர் மயூரனை தவிர வேறு யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கும் மீதமுள்ள 7 நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக சம்மேளனம் இன்று (09.01.2019) ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை சநந்தித்து பேசும் அத்துடன் இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக அரசியல் தலைவர்கள் பொலிஸ் மேலதிகாரிகள் போன்றோரிடமும் தொடர்பை ஏற்படுத்தி இக்கைதை வலியுறுத்தும் முயற்சியில் சம்மேளனம் தீவிர கவனம் செலுத்தும்.
03.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களை அவசரமாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாமதுரு, பூசாரிமார்கள், பாதர், மௌலவிமார்கள் மற்றும் சமய தளங்களின் தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் (10.01.2018) திகதி அதாவது நாளை நடாத்துவதற்கு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் தற்போது மாவட்டத்தில் ஒரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் இக் குழுப்பத்தை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட உள்ளது.
04.இன்ஷா அல்லாஹ் தற்போது நடைபெற்று வரும் அசாதாரன நிலைமைக்கு காரணம் யாது மற்றும் நடந்த சம்பவத்தை கண்டித்து ஊடக மாநாடு ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.01.2019) நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் எனவே பொறுமை தொழுகை துஆ போன்ற நல் அமல்கள் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து துஆ செய்யுங்கள்.
மேலும் முகபபுத்தகத்தில் தயவு செய்து பொறுப்பற்றவிதத்தில் கருத்துக்களை எழுதுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.இனவாதிகள் எப்படியாது ஒரு இனகலவரத்தை ஏற்படுத்த கடும்பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்மேளனம் அவ்வப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தண்டனைகள் - தண்டம் (Punishments - Fines)

தண்டனைகள் - தண்டம் (Punishments - Fines)


சில குற்றங்களுக்குத் தண்டனையாகத் தண்டப்பணம் விதிக்கப்படும்.
பொதுவாகச் சிறு சிறு குற்றங்களுக்குத் தண்டம் விதிக்கப்படுகிறது.
பெரிய குற்றங்களுக்கும் சிறைத்தண்டனையோடு தண்டமும் விதிக்கப்படும். போக்குவரத்து, வாகனங்கள் தொடர்பான குற்றங்கள், மதுபானங்கள், நுகர்வுப் பொருட்கள், பொது ஒழுங்கு விதிகள்.. போன்ற குற்றங்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது.
தண்டம் ஒன்று விதிக்கப்படுகையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தண்டம் ஒன்று செலுத்துவதால் பாரிய சட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
ஓர் அரச அதிகாரி, அரச ஊழியர் தண்டம் செலுத்தும் போது அவரது அரச தொழிலை இழக்க நேரும். ஓர் அரச ஊழியர் தண்டம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் அவரது அரச தொழில் இடைநிறுத்தப்பட்டு விசாரணை ஒன்றன்பின் அத்தொழில் வறிதாக்கப்பட்டு விடும். அதேபோன்று, அரச தொழிலொன்றைப் பெறும் நோக்கில் இருப்பவர்களும் தண்டம் கட்டும்படியான குற்றங்களுக்கு உட்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா அரச தொழில்களுக்கும் விண்ணப்பம் செய்யும் போது குறித்த விண்ணப்பப் படிவங்களின் இறுதித் தகவல் சரத்தில் 'நீர் எப்போதாவது நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளியாகத் தண்டிக்கப் பட்டுள்ளீரா ?' என்று நிச்சயமாகக் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு'ஆம்/இல்லை' என்று தெளிவாகப் பதில் எழுத வேண்டும். ஒரு பதிலும் எழுதாவிட்டாலோ, 'ஆம்' என்று எழுதினாலோ முகத்தோற்ற அளவிலேயே - prima facia - குறித்த தொழிலுக்கு அவர் தகுதியற்றவராக ஆகி விடுவார். தண்டம் செலுத்திய ஒருவர் அல்லது தண்டிக்கப்பட்ட ஒருவர் அதை மறைத்து, விண்ணப்பப் படிவத்தில் 'இல்லை' என்று பதிலளித்து அத் தொழிலைப் பெற்றிருப்பது எப்போதாவது பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது தொழில் இல்லாதொழிக்கப்படுவதுடன் தகவலை மறைத்த குற்றத்திற்காகவும் பொது நிதியை மோசடி செய்த குற்றத்திற்காகவும் பொய்யான சத்தியப்பிரகடனம் (ஒவ்வொரு அரச ஊழியரும் சத்தியப்பிரகடனம் ஒன்று கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்) செய்த குற்றத்திற்காகவும் அவருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
அதற்கான தண்டனைகளாகச் சிறைத்தண்டனை மற்றும் தண்டம் விதிக்கப்படுவதோடு அதுகாலவரை அரசாங்கத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்களையும் வட்டியோடு அரசுக்கு மீளச் செலுத்தும்படி கட்டளை இடப்படுவதோடு, அவ்வாறு செலுத்தத் தவறும் போது அவருக்குச் சொந்தமான ஏதேனும் ஆதனங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை ஏலத்தில் விற்கப்பட்டு அந்த நஷ்டங்கள் அறவிடப்படும். அதுவும் போதாதவிடத்து/ அல்லது அவ்வாறான ஆதனங்கள் ஏதும் இல்லாதவிட்டத்து அத்தொகைக்காக மிக நீண்ட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் ஏற்கனவே அரச தொழில்களில் இருப்போர் ஏதாவது குற்றமிழைத்து, தண்டம் விதிக்கப்படும் ஒரு நிலைமை ஏற்படுமிடத்து குற்றத்தீர்ப்புக் கூறப்பட்டவர் தானாகவோ அல்லது தனது சட்டத்தரணி மூலமாகவோ தான் ஒரு மாணவர் / அரச பணியாளர் என்பதை நீதிவானிடம் கட்டாயமாக எடுத்துச் சொல்லி நீதிமன்றத்தின் சலுகைகளைக் கோர வேண்டும். அப்படிக் கோரச் சட்டத்தில் இடமுண்டு.
பெரும்பாலான நீதிபதிகள் தண்டனை வழங்க முன்னர் 'நீர் என்ன செய்கிறீர் ?' என்று வினவுவது வழக்கத்தில் உள்ளது. அப்போது உண்மையை மறைக்காமல் மாணவரா அரச ஊழியரா என்பதைக் கட்டாயம் சொல்லிவிட வேண்டும். அதனால் நீதிமன்றம் அவருக்கு முடியுமான சலுகைகளை அளிக்க முடியும்.
ஆனால் அவ்வாறு எதுவும் கேட்காமலேயே - கைதியின் முகத்தைக்கூடப் பார்க்காமலேயே தீர்ப்புச் சொல்லும் (அ)நீதிபதிகள் தான் அதிகம் உள்ளனர் என்பதையும் கவனத்திற் கொள்க !
இந்த இடத்தில் சட்டத்தரணிகளும் கூடிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தன் கட்சிக்காரரின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தி இத்தகைய விடயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும். தவறும் போது அது அந்த மனிதனுக்கு இழைக்கப்படும் பாரிய குற்றமாக அமைந்துவிடும். சக மனிதருக்கு இழைக்கப்படும் குற்றத்தை அம் மனிதன் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்பதை முஸ்லிம் சட்டத்தரணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையான போது தமது உத்தியோகபூர்வ மாணவர்/தொழில் அடையாள அட்டையை நீதிமன்றத்தில் காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களுக்குக் கூட நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல் தண்டம் விதித்தும், கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றங்களுக்குக்கூட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும் குற்றவாளிக்கு நீதிமன்றம் கருணை - Mercy - காட்ட வாய்ப்புகள் உண்டு.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையால் உடனடிப் பாதிப்பில்லை, ஆனால் அது பிற்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும் சந்தர்ப்பம் உண்டு. அது குறித்து இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இவ்வாறு, குற்றவாளி தொடர்பில் நீதிமன்றத்தின் கருணையை / சலுகையைக் கோரி நிற்பது ( Pleading for mercy ) ஒவ்வொரு சட்டத்தரணியினதும் தலையாய கடப்பாடாகும். அதைச் செய்யத் தவறும் சட்டத்தரணிக்கு எதிராக பிரஜையொருவர் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு (Bar Association) / உயர் நீதிமன்றத்துக்கு (Supreme Court) முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறு சட்டத்தரணி ஒருவர் செய்யத் தவறி, அதனால் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பின்னர் கூடிய விரைவில் குறித்த நீதிமன்றத்தில் ஒரு நகர்த்தல் பிரேரணையை (Motion) முன்வைத்து நிவாரணம் கோரி நிற்க முடியும்.
விதிக்கப்படும் தண்டப் பணத்தை, தண்டமாக இல்லாமல் 'அரச செலவாக' - (State Cost) நியமிக்கும்படி கோரி நிற்க வேண்டும். அரச செலவாக தண்டம் கட்டுவது அரச தொழிலையோ, எதிர்காலத்தையோ பாதிக்க மாட்டாது.
இவ்வாறு செய்துகொள்ளாமல், உண்மைகளை மறைத்து அப்போதைக்கு தொழிலை - எதிர்காலத்தைப் பாதுக்காத்துக் கொண்டாலும் நிச்சயமாக ஏதோ ஒரு கட்டத்தில் அது நம்மைப் பாதிக்கலாம்.
எந்தவொரு தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பதிவாக ரெக்கோர்ட் ஆகி விடும். அதாவது, தண்டனை பெறும் ஒவ்வொரு பிரஜையினதும் இரண்டு உள்ளங்கைகளினதும் ரேகைப் பதிவுகள் (Finger Prints) நீதிமன்றப் பதிவாளரால் எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். பின்னர் அது மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல் காப்பகத்தில் நிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு விடும். பின்னொரு காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் போலிஸ் விசாரணை ஒன்றுக்கு முகம்கொடுக்கும் போது உங்கள் அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்தவுடன் (கொடுத்துத்தான் ஆக வேண்டும்) உங்கள் பழைய வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வந்து விடும். வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு, வெளிநாட்டு உயர்கல்வி விஸா விண்ணப்பம் மற்றும் ஏதாவது அரச தொழில்களுக்காக போலிஸ் சான்றிதழ் - (Police Clearance Certificate) பெறச் செல்லும்போது இந்த Finger Prints Records உங்களுக்கு வில்லங்கமாக வந்து நிற்கும்.
இப்போது இலெக்ட்ரோனிக் அடையாள அட்டை நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதற்கான நோக்கங்களுள் ஒருவரது குற்றப்பின்னணி (Criminal Background) யை இலகுவாக அறிந்துகொள்ள வசதிசெய்வதும் ஒன்றாகும். ஒருவரது தே.அ.அட்டை இலக்கத்தை எந்தப் பொலிஸில், அரச திணைக்களத்தில், வங்கிகளில், விமான நிலையத்தில், கடவுச்சீட்டு, சாரதிப் பத்திரம், நற்சான்றிதழ்கள் எடுக்கப்போகும் போது உங்கள் அ.அ.இலக்கத்தின் மூலமாக மிகவும் இலகுவாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு விடும். குற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த Electronic Identity Cards உதவும்.
ஒவ்வொரு தண்டனை விதிக்கப்பட முன்னரும் ஒவ்வொரு குற்றவாளியினதும் கைரேகைப் பதிவுகள் எடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அவருக்கு எதிரான ஏதாவது முன்குற்றத் தீர்ப்புகள் (Previous Convictions) உள்ளனவா என்று கட்டாயம் பார்க்கப்பட்ட பின்பே தண்டனை விதிக்கப்படும்.
முன்குற்றத் தீர்ப்புப் பதிவொன்று இருக்கும்போது புதிய இந்த வழக்குக்கான தண்டனை விதிப்பில் தாக்கம் செலுத்தும். முன்குற்றம் குறித்தும் பின்னர் விரிவாக நோக்குவோம்.
போஸ்ட் ஒஃபிஸில், வேறு இடங்களில் தண்டம் செலுத்திய பின்னர் கட்டாயமாக அதன் பிரதியை பொலிஸில், நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பித்துவிடவும் வேண்டும்.
(சட்டம் குறித்த இத்தகைய எனது பதிவுகளைத் தயவு செய்து நீங்களும் என் பெயருடன் இணைத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள், யாருக்காவது பயனளிக்கும் அல்லவா !)
நன்றிகள்.