السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 30 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 204



 அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்” என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

ladies arabic college

நிலையா உடலைவிட்டே உயிர் செல்லும் நேரத்திலே

நிலையா உடலைவிட்டே உயிர் செல்லும் நேரத்திலே

அண்மையில் நடந்த இந்தோனேசிய விமான விபத்து மிகவும் துயரமானது.

இறப்பு உண்டு என்பது,இறையடியார்கள் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் திடீர் மரணம் வந்துவிடக் கூடாது என்பது குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கிருக்கும் போது இறப்பு எப்படி வரும் என்பதை இறைவனே அறிவான்.எனினும் "அழகிய முடிவு"க்காக நாம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் இறப்பு எப்படி நேர்ந்தாலும் அதன் ரகசியத்தையும் மதிப்பையும் அறிந்தவன் அல்லாஹ்வே.

சற்றும் எதிர்பாராத தருணத்திலே மரணம் வந்தாலும் கூட இறைவனை நினைத்து அவனுடைய திருப்பெயர் கூறி அல்லது கலிமாவை (இஸ்லாத்தின் மூல முதல் உறுதிமொழியை)முழங்கி இறப்பை எதிர்கொள்வது என்பது சாதாரணமான செய்தி அல்ல.இதற்கு வாழ்வு முழுவதும் மனப்பயிற்சி பெற்றிருந்தால்தான் இது வாய்க்கும்.அதற்கு அல்லாஹ்வின் அருளும் வேண்டும்.வரலாற்றில் இந்தப் பேறுபெற்ற பலரை நாம் காண்கிறோம்.

அதனால்தான் தக்கலை ஞானி பீரப்பா அவர்கள் இதுபற்றிய தம் கவலையை இப்படி வெளிப்படுத்தினார்கள்:

"......
நிலையா உலகைவிட்டே உயிர்செல்லும் நேரத்திலுன்
 'கலிமா'வை நெஞ்சுள் கலங்காமல்தா என்'ஹக்'கானவனே ...!

இந்தோனேசிய விமானவிபத்தின் போது விமானத்தில் இருந்த ஏறத்தாழ எல்லாரும் இப்படி இறுதியாகக் கூறுவதைக் காட்டும் காணொளியை  கண்டபோது ஏற்பட்ட எண்ணங்களே மேற்கண்டவாறு பதிவானது.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் செய்வானாக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் ....             


Yembal Thajammul Mohammad FB Friend


                           
ladies arabic college



Monday 29 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 201



இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா ) Moulavi i.m sajith musthafi eravur 

சாந்த நபியின் சிறு பிராயம்


நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் முன்பே தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்கள்

அவர்களுக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள்

 *மகனே* *மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா?*

எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்கள்.
     
அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்.

அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பராக்கா..

மக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..


ஆறு வயதேஆன நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் சக்கராத்தென்று.. !

அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..

ஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..

தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்.."*மகனே! பொறுமையாக இரு..

இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..

அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..

ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..

ஒவ்வொரு இன்பமும் அழியும்..

மகனே! பொறுமையாக இரு!"

 எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம்
"“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன்.

என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான்.

 ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பராக்கா.

அவனை விட்டு விலகாதே.” என்று.


அதை பராக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு.

புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார்.

 தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது.

ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)

துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பராக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..

அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)

"அம்மா! உங்களை விட்டு போகமாட்டேன். நீங்கள் எனக்கு தேவை" என தேம்பிதேம்பி அழுகிறார்கள். மக்கா வரை அழுதுகொண்டே செல்கிறார்.

பிறகு அப்படியே காலம் செல்கிறது.
இப்போது நபி(ஸல்) அவர்களுக்கு வயது 63.
 தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்.

 தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு,

அந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்கள்.

6வயதில் விட்டுசென்ற தாயை  63வயது ஆனபோதும் தாயை மறக்கவில்லை.


இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கவில்லை.

பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கவில்லை.

சித்ரத்துல் முன்தஹா  வரை விண்ணுலக பயணம் சென்று வந்தார்கள்.
 நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கவில்லை.

தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார்கள்..

*அம்மா! நீங்கள் உயிரோடு இருந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு பணிவிடைகளை செய்திருப்பேன் தெரியுமா.*

 *நான் தொழுகையில் இருக்கும்போது நீங்கள் முஹம்மது முஹம்மது! என்று அழைத்திருந்தால் இதோ. வந்துவிட்டேன் தாயே!*

என்று  தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்ய வந்திருப்பேனே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே" என அழுது அழுது மனம் வருந்தினார்கள்...


*இதன்மூலம் யுக முடிவுநாள் வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்கள்.*

நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..
ஒரு *நபியாகவே* இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...


தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை *‘சீ’* என்றுகூடக் கூறாதீர்.

 மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக.. ( திருக்குர் ஆன் 17:23 ).

பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுபோல் முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது.

 *‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’*
 என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள்.

நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்,

நீ ஒருவனின் தந்தையைத் திட்ட, அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே
 என்று உணர்த்துகிறார்கள் நபி (ஸல்).
( நூல் முஸ்லிம்)

*பெற்றோரை_மறக்காதீர்கள்*...

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 203



என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…

அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன் தாய்க்கு நோவினை கொடுத்து, தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால், ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால், சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால், மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                     ( நூல்: திர்மிதீ )

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு அபீ ஷைபா )  moulavi I'm sajith musthafi eravur

ஏந்தல் நபி தாஹாவே

ladies arabic college

*ஏந்தல் நபி தாஹாவே*
என் கவியின் நாயகரே
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
முஹம்மதென்ற முத்துக்குள்
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
கண்ணுக்குள் கரு மணியாகி
கல்புக்குள் கலந்து உடலுக்குள் 
உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!
இனிக்கிறதே என் இதய நதி!
கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன் 
கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலே
விழிகள் தேடும் விடியலே!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யாஹ்*
 Manaleerul Anwar ladies arabic college Eravur Srilanka

Saturday 27 October 2018

காசிம் நானூத்தவி பற்றி சதீதுத்தீன் பாகவி

Image may contain: 1 person, beard

ஒரு வழிகெட்ட வஹ்ஹாபியை வலியுல்லாஹ் என்று சொல்லி முஸ்லிம்களை வழிகெடுக்கும்
"தப்லீக் சதியுத்தீன் பாக்கவி !*
கண்மணி நாயகத்தை மிகவும் மோசமான முறையில் விமர்சித்த தேவ்பந்திய வஹாபியாகி காஃபிராகிப்போன காசிம் நானூத்தவி பற்றி சதீதுத்தீன் பாகவி " பெரும் மகான் " என்று புகழ்கிறார்.

ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்

ரபியுல் அவ்வல்



ஆப்ரஹாவின் யானைச்சண்டை நடை பெற்று 50 நாட்களுக்கு பின்னர் 12 ம் திகதி கி.பி 571 ஏப்ரல் 20 ம் திகதி திங்கட் கிழமை காலை நேரத்தில் ஆமினா அம்மையாருக்கும் அப்துல்லாஹ் என்பவருக்கும் அருமைப் புதல்வராக அண்ணல் நபி அவர்கள் பிறந்தார்கள்.

பிறக்கும் போதே தந்தையை இழந்து விட்ட முஹம்மது நபியவர்கள் பிறந்த செய்திப பாட்டனார் அப்துல் முத்தலிபின் காதுக்கு எட்டியதும் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. உடனே அவர் வந்து குழந்தையை அணைத்து தன் மடியில் அமர்த்தி முத்தமிட்டு நேராக கஃபதுல்லாவிற்கு கொண்டு போய் வலம் வந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

உலகத்தின் உயர்தரமான சிந்தனையின் சிகரமான உத்தமக் குழந்தை தாயிடத்திலும் துவைபா அன்னையிடத்திலும் அமூதட்டப்பட்டது. பிறந்து ஏழாம் நாள் அரபு நாட்டின் வழமைப்படி அப்துல் முத்தலிப் தமது வம்சத்தினருக்கு பெரிய விருந்தொன்றை ஏற்படுத்தி அந்த சபையில் முஹம்மத் என்ற பெயரைச் சூட்டினார். அரபு நாட்டின் பெரிய குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு பக்கத்து கிராமத்திலுள்ள செவிலித் தாய்மார்களிடம் பாலூட்டி வளர்க்கும்படி ஒப்படைப்பது வழக்கமாக வழக்கமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகள் தங்களிடம் தரப்படும் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து உரியவர்களிடம் ஒப்படைத்து ஊதியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இத்தகைய அமைப்புக்கமைய பனிஸஅத் வம்ஸத்தை சேரந்த ஹலீமா அம்மையாரிடம் பாலூட்ட முஹம்மத் அவர்களை ஒப்படைத்தார்கள். அத்தகைய செவிலித்தாய் ஹலீமா அம்மையார் எப்படியான கட்டத்தில் குழந்தையை பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஹலீமா அம்மையார் கதைப்பது காதுக்கு கேட்கிறது. மக்காவிலுள்ள செல்வச்சீமான்களிடம் பிள்ளைகளைக் கொண்டுவந்து பால் கொடுத்து பராமரிக்கலாம் என்று ஊரை விட்டு கிளம்பி வந்தேன். நடுவழியில் எனது கோவேறு கழுதை களைத்து விட்டது. அங்கு அதிக நேரம் தாமதமாகிவிட்டேன். அப்போது சிறிய தூக்கம் ஆட்கொண்டது. அதிலொரு கணவு,பழங்கள் நிறைந்திருந்த ஒரு மரம் அதன் கீழ் நான் இருக்கின்றேன். என்னைச்சுற்றி பனீஸஅத் வம்சப் பெண்களும் இருக்கின்றனர்.அதிசயமாக அம்மரத்திலிருந்து ஒரு பேரிச்சம் பழம் என் வாயில் விழுகின்றது.

அக்கனியின் இனிமை சுவையானது. நீண்ட நேரம் என்நாவில் அக்கனி சுவைபடுவதை நான் கண்டேன். ஞாயிற்றுக்கிழமை நாள் என்னை அறியாது விடை பெற்று திங்கட்கிழமை மக்காவுக்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்பதாகவே பனீஸஅத் கோத்திரப் பெண்கள் சென்று அங்குள்ள செல்வந்தர்களின் செல்வக் குழந்தைகளை வளர்ப்பதற்கு பாரமெடுத்து மிகக் களிப்போடு சென்று விட்டனர். இன்னும் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வில்லை. நான் பல நாட்கள் தங்கியிருந்தும் குழந்தையொன்று கைக்குக் கிடைக்கவில்லை.மனசு வருத்தத்திலேயே தோய்ந்து கிடந்தது. அப்போது ஒரு பெறியவர் என்னிடம் வருகிறார். ஒரு குழந்தையை பாரமெடுக்க யாராவது பெண்கள் உண்டா? எனக் கேட்கின்றார். நூன் வந்தவரின் பெயரைக் கேட்டடேன். வாய் நிறைய அப்துல் முத்தலிப் என உதித்தார்.

“நான் உன்னிடம் ஒரு அநாதைக் குழந்தையை கையளிக்கப் போகிறேன். பனுஸஅத் கோத்திரப் பெண்களிடம் அநாதைக் குழந்தையைப் பாரம்கொடுக்கப் பார்த்தேன் .அவர்கள் அநாதகை; குழந்தையை எடுத்தால் பணம் கிடைக்காதென பதிலூரைத்துப் போய்விட்டார்கள். நீங்கள் அக்குழந்தையை ஒப்புக்கொள்ளலாமா? ஏன அன்புடன் கேட்டுக் கொண்டார் அப்துல் முத்தலிப் தனது கணவருடன் ஆலோசனை நடத்தினார்கள் ஹலீமா அம்மையார். கணவனும் இசைந்தார். ஆனால் ஹலீமாவின் சகோதரியின் மகன் மாத்திரம் மறுத்தான். பனுஸஅத் பெண்கள் எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகளையெல்லாம் அழைத்துச் சென்று கை கை நிறையப் பணம் எடுக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் அநாதைப் பிள்ளையை எடுக்க வேண்டுமென அடம்பிடித்தார்.

ஹீமாவின் நாவில் வந்த கருணையான பதிலிலின் மூலம் அக்கா மகனும் தக்க சமயத்தில் மௌனித்தான். அப்துல் முத்தலிப் அவர்களுடன் வீட்டுக்குச் சென்று முஹம்மத் எனும் குழந்தையை பாரமெடுத்து ஊருக்கு திரும்பினேன். ஹலீமாவின் வீட்டில் குழந்தை வளர்கிறது எல்லா குழந்தைகளை விடவும் அதியசமான வளர்ச்சி. குழந்தைப் பராயத்தில் அதியசயமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன.குழந்தையை பாரமெடுத்த நாள் முதல் ஹலீமா நாயகியின் வீட்டில் இருந்த கஷ்டங்களும் துன்பங்களும் காற்றுடன் கைகோர்த்தன. செல்வம் பெருகியத. வீட்டில் இருந்த மந்தைகளின் மடிகளெல்லாம் பல சுமந்தன. ஹலீமா நாயகியின் அகமும் மலர்ந்தன.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அழகென ஒளிரும் முஹம்மதை () ஹலீமா நாயகி மக்காவுக்கு எடுத்துச் சென்று தாயார் ஆமினாவிடமும் பாட்டனார் அப்துல் முத்தலிபிடமும் காண்பிப்பார்கள். இரண்டு வயதானதும் பால் கொடுப்பதை நிறுத்தி மக்காவுக்கு தாயிடத்தில் ஒப்படைக்க வந்தார்கள். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக்கண்டு  சந்தோசப் பட்ட தாயார் மக்காவின் காலநிலை சீராக இல்லாததனால் குழந்தை ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். என நினைத்து குழந்தையை திருப்பிக் கொண்டு சென்று ஹலீமாவின் வீட்டிலேயே வளர்க்கும் படியும் சில காலம் சென்று மகளை திருப்பி அழைத்துக் கொள்வதாகவும் சொல்லி ஆமினா அம்மைளயார் அனுப்பி வைத்தார்கள். அண்ணல் நபியவர்களுக்கு வயது 03 . ஹலீமா நாயகியின் பிள்ளைகள் அதிகமாக ஆடு மேய்ப்பதைக் கண்டு தானும் போக வேண்டுமென ஆசைப்பபட்டார்கள். அதிகமான நபிமார்கள் ஆடு மேய்த்திருக்க அண்ணல் முஹம்மத் () அவர்களிடம் மட்டும் ஏன் அந்த ஆற்றல் அற்றுப் போக வேண்டும். ஹலீமா நாயகியின் பிள்ளைகளோடு ஆடுமேய்யக்கச் சென்ற போது அதிசமொன்றும் நிழ்ந்தது. அமரர்கள் அவர்களின் ஹலீமா நாயகிகியின் பிள்ளைகளோடு ஆடு மேய்க்கச் சென்ற போதும் அதிசமொன்று நிகழ்ந்தது. அமரரர்கள் அவர்களின் உள்ளத்தை பக்குவப் படுத்தினார்கள் .

காத்தான்குடி
Moulavi  Fouz Saharki
போதனைப் பொக்கிஷம் நூல் 19


போதனைப் பொக்கிஷம்


ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்

ரபியுல் அவ்வல் வசந்தத்தின் வசந்தம் ரஹ்மத் நபி பிறந்த மாதம்





ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

ladies arabic college eravur
ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர்கள்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்....

ஆனால், அவர்களது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர்கள் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர்கள்  திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

அல் பத்ர் வாட்ஸ்அப் குழுமத்தில் இருந்து.......


 ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

Wednesday 24 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 202

Moulavi Sajith Musthafi Eravur
கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார். 

நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள். 

அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.
உடனே, உமர் {ரலி} அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள். 

அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.
பின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.
வரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது. அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.
எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.
தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்! ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!
எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!
ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.
உன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள்.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.
மாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ? நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!” என்றார்.
தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {ரலி} அவர்கள் “ மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.
ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”
”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”
”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்! அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”
என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.
தன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.
உடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.
அதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை
இதோ! உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து விடுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.

Moulavi Sajith Musthafi Eravur

Tuesday 23 October 2018

மாணவிகளுக்கான ஷரீஆ கற்கை நெறி




ஏறாவூர் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியில்  O/L, A/L படித்த மாணவிகளுக்கு மாத்திரம் 3 மாதம் ஷரீஆ கற்கை நெறியினை அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00  மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.




ehs;
ghlk;
jpq;fs;
mfPjh
nrt;tha;
gpf;`;
Gjd;
Fu;Md;
tpahod;
jPdpa;ahj;
rdp
gpf;`;
QhapW
Fu;Md;













இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.

குறிப்பு :       இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு                          இறுதியில்   அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க  
                                              சான்றிதல் வழங்கப்படும்.




               கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி 
                     யு.எல்  நவாஸ் உஸ்மானி  : 778492721
           கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி 
                     எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்


https://drive.google.com/file/d/1ILWBLa7y5SZOwC_aEWCKZH4kDjI3Remp/view?usp=sharing


Wednesday 17 October 2018

மீலாத் விழாவுக்கான கேள்வி பதில்

Eravur Yoosuf Moulavi


2018 ரபிஉல் அவ்வல் மாதத்தில் ஏறாவூரில் நடை பெறும் மாபெறும் மீலாத் விழாவுக்காக அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்சி மிகச் சிறப்பாக நடைபெறும் .
தேவையானவர்கள்  PDF இங்கே பெற்றுக் கொள்ளலாம்.



Image result for கேள்வி பதில்

Saturday 13 October 2018

புனித ரபீவுல் அவ்வல் புகழ்ப்பா

Eravuryoosuf


தாஹா ரஸூலே
திங்கள் ஹபீபே
மதீனத்து மன்னரே
மஹ்மூது மா நபியே
விண் போற்றும் விந்தையரே
மண் தேடும் மதி ஒளியே
ஏழை ஏங்கி அழைத்திடும்
எழில் ஓங்கும் ஏந்தலரே!

1) ஆமினாவின் அருள் மகவே
தாங்கள் மலர்ந்த திரு நாளில்
தரிசனம் யாசிக்கும்
தங்களின் அடிமையின்
பாவப் பிழை பொறுத்து
ஏற்றிடுவீர் யாநபியே
வாடி நிற்கும் பாவியை
பாருமிந்த வேளையிலே

2) முத்து முஹம்மதரே!
முழு மதி தாங்களே!
அகிலத்தில் உதித்தீரே!
அழியாத ஒளி விளக்காய்!
ரஹ்மானின் புண்ணிய
நேசராய் வந்துதித்தீர்
ரஹ்மதுல்லில் ஆலமீனாய்
ஆலத்தில் அவதரித்தீர்

3) மாந்தர் குலத்தை வையகத்தில்
வாழச் செய்த மஹ்மூதே
விண் மீனும் கண் சிமிட்ட
புவி மீதில் ஜனித்தீரே
விண்ணவரும் மண்ணவரும்
வியந்து போற்றும் பேரழகே
காண ஏங்கும் உள்ளங்களில்
வீற்றிருக்கும் பேரரசே

4) கண்மணி நாயகமே
கல்பின் கறை நீங்கவே
காட்சி தருவீர் அஹ்மதரே
புண்ணிய மாதமிதில்
வான் மதியும் நாணி நிற்கும்
வையகத்தின் பேரொளியே
வருக வருக வருகவே
வசந்தத்தின் திரு நாளில்

*கவி:* நிப்லா இம்தியாஸ், முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, கஹடோவிட்ட, இலங்கை

Wednesday 10 October 2018

நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது



Eravur Yoosuf
 *நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது*

*ظل ظل ظلت ظل الظل لا ظل له*
*ظلا ظليلا ظلل الغمام بالمظال ظال*

         (நாயகமே ஒளிமயமான தங்களுடைய) எதார்த்தத்தின் (அஸலின்) நிழலாக (பிரதியாக) ஆகிவிட்டீர்கள். (அந்த) எதார்த்தத்தின் நிழலாகிறது அதற்கு அறவே (சூரிய ஒளியில்) நிழலில்லை. (தாங்களுக்கு) மேகம் குடைப்பிடித்து நேர்த்தியான நிழலைத் தந்தது. (தாங்களோ எங்களுக்கு நாளை மறுமையில் *லிவாஉல் ஹம்து புகழ் கொடி* என்ற) கண்ணியம் மிகு குடையால் நிழல் தரக்கூடியவர்களாகும்.

           - *உமர் வலிய்யுல் காஹிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்*

      *والذي بعثني بالحق بشيرا لم يعلم حقيقتي غير ربي*

          *உண்மையாகவே என்னை நன்மாராயம் சொல்வோனாக அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். என் எதார்த்தத்தை என் ரப்பைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.*

(குர்ரத்துல் அலிப் 24)

            என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆகவே தாங்கள் எங்களுக்கு தாங்களுடைய யதார்த்தத்தின் பிரதியைத்தான் காட்டியிருக்கிறீர்கள். மேலும் தாங்கள் இறைவனின் பிரதிபிம்பமானதால்தான் சூரிய ஒளியில் கூட தாங்களுக்கு நிழல் இல்லாமல் ஆகிவிட்டது. தாங்களுடைய நிழல் இம்மண்ணில்பட்டு அதை மற்றவர் மிதிப்பது தாங்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல என்பதால் தான் வல்ல ரஹ்மான் தாங்களுக்கு நிழலையே இல்லாமலாக்கி விட்டான். சூரிய வெப்பம் தாங்கள் மேல் படாமலிருக்க மேகமே தாங்களுக்கு குடைப் பிடித்திருக்கிறது. ஆனால் தாங்களோ எங்களுக்காக மறுமையில் *لواء الحمد புகழ் கொடி* என்ற குடையால் நிழல் தருவீர்கள்.

குறிப்பு : *ظل الظل என்பதற்கு அகிலத்தையே அரவணைத்துக் காக்கும் அருளாளர்* என்றும் பிரிதொரு பொருள் உண்டு.

         *عن ذكوان رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم لم يكن يري له ظل في شمس و لاقمر*
الخصائص ج ۱ ص ٦٨)

         நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக *தக்வான் (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள் அறிவிக்கிறார்கள்.

        *قال ابن سبع من خصائصه أن ظله كان لا يقع على الأرض و أنه كان نورا فكان إذا مشي في الشمس أو القمر لا ينظر له ظل*
 (الخصائص ص 68)

              மேலும் நிச்சயமாக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விசேட தன்மைகளில் ஒன்றாகும் என *இப்னு ஸபஃ (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள்
அறிவிக்கிறார்கள்

 (கஸாஇஸுல் குப்ரா பாகம் 01 பக்கம் 68)

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻