السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 30 June 2015

27ஆம் வருட புனித பத்ர் ஸஹாபாக்கள் மாகந்தூரி


அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன் புனித திருக் கொடி ஏற்றமும் சந்தனக்கூடு ஏற்றமும்

காலம் - 05-07-2015 ஞாயிறு பிற்பகல் 4.00 


  1. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள் 
  2. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் யூசுப் முஸ்தபீ
  3. சங்கைக்குரிய மௌலவீ ஏ.ஜெ.எம் வலீத் கௌதி
  4. சங்கைக்குரிய மௌலவீ எம்.ஜப்றான் கௌதி
  5. சங்கைக்குரிய மௌலவீ எஸ்.எல் அப்துர் ரஹ்மான் கௌதி
  6. சங்கைக்குரிய மௌலவீ முஹ்யித்தீன் மன்பயீ
  7. சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் அல்தாபீ
  8. சங்கைக்குரிய மௌலவீ முஜாஹீத் பைஸி
  9. சங்கைக்குரிய மௌலவீ ஹபீல் மன்பயீ
  10. சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம் பைஷல்
  11. மற்றும் உள்ளுர்-விளியூர் சங்கைக்குரிய மௌலவீமார்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.


புனித பத்ர் கந்தூரி   05-07-2015 
புனித மௌலீத் மனாகிப் மஜ்லிஸ் 05-07-2015 மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து

புனித பத்ர் ஸஹாபாக்கள் பற்றிய அகமிய உரை
அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்கள்

இடம் - பத்ர் ஸஹாபாக்களின் நினைவுச் சின்னம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை - இலங்கை

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். அல் குர்ஆன் (8:9)

அனைவரும் வருக வருக அருள் வரம் பெறுக! அருள் கோடி பெறுக!









தர்கா நகரில் சிங்கள - முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பு



தர்கா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் இன்றிரவு சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர்.

இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் நான்கு சிங்கள இளைஞர்களும் இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் இடையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்திற்கு வருகை வந்து நிலைமைகளினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-அல்மஷுறா/விடியல்

கண்டிப்பாக அனைவரும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்...

Read more:http://www.vanniexpressnews.com/2015/07/blog-post.html

التهاني لوزارة الاوقاف المصرية

التهاني لوزارة الاوقاف المصرية

التهاني لوزارة الاوقاف المصرية

 التهاني لوزارة الاوقاف المصرية لمنع نظر كتب الوهابية . هذا امر عظيم لهدم عقائد السلفية الوهابية التي كانت تهدم عقائد أهل السنة والجماعة منذ ازمان من محمد بن عبد الوهاب وابن تيمية وغيرهم من الضالين والمضلين . كانت كتبهم ضدا للقرأن الكريم والاحاديث النبوية والاجماع والقياس ولاقوال أئمة المجتهدين في الدين .
ونحن بفرح وسرور بما علمنا من خدمات وزارة الاوقاف المصرية .هنيأ لكم بخدماتكم والله يعطيكم أجرألف حج وعمرة .
وعمّركم بالسعادة والايمان وطول الله حياة الامير للمصر وحياة وزيروزارة الاوقاف المصرية . والله في عون الدين مادام الدين في الدنيا والآخرة 
والسلام عليكم ورحمة الله وبركاته

Congratulations to the Egyptian Ministry of Awqaf and congratulations to the Egyptian Ministry of Awqaf and prevent wrote consider Wahhabism. This is a great for the demolition of the Salafist doctrines of Wahhabism, which was demolished doctrines of Sunni Islam since Azman from Muhammad ibn Abd al-Wahhab and Ibn Taymiyyah and other misguided and misleader. The antibody books of the Holy Quran and the hadith, and consensus and measurement and the imams diligent in religion.
We joy and pleasure as we learned from the Egyptian Ministry of Awqaf and services .henneo with your service and your God gives you Ojrolv Haj and Umrah.
Your age and happiness and faith in God and the length of the life of Prince of Egypt and the Egyptian Zyrosarh life and endowments. And God help the debt as long as the religion in the world and the Hereafter and answer Nerjhomenkm
Peace, mercy and blessings of God
01-07-2015

Email:mashaabulbadhr@gmail.com

Monday 29 June 2015

Egypt bans Salafi books from mosques

Egypt bans Salafi books from mosques

By: ABU HUDHAYFAH
The Egyptian Ministry of Religious Endowments have launched a campaign to remove the books of scholars that belong to the Salafi movement from all mosques in Egypt.
Names of scholars whose books are to be removed or confiscated:-
– Sheikh Muhammad Ibn Abdul Wahhab
– Imam Ibn Taymiyyah
– Sheikh Ibn Baz
– Sheikh Ibn Uthaymeen
– Sheikh Abu Ishaq al-Huweini
– Sheikh Mohamed Hussein Yacoub
– Sheikh Mohammed Hassan
They have already confiscated 7000 books and CDs from mosque libraries in Cairo, Alexandria and Giza. The authors of these materials include:
– Sheikh Wagdi al-Ghoneim
– Sheikh Yusuf al-Qaradawi
– Sheikh Muhammad al-Maqsood
– Yasser al-Burhami
– Sheikh Abu Ishaq al-Huweini
– Sheikh Mohamed Hussein Yacoub
– Sheikh Mohammed Hassan
The ministry’s department is currently launching an inspection campaign on mosques and libraries in all provinces, to make sure they are free of any books and media calling for “militancy and extremism”.

வஹாபிகளின் நூல்களை அகற்ற உத்தரவு


 வஹாபிகளின் நூல்களை அகற்ற உத்தரவு

எகிப்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் உள்ள வஹாபி ஸலபிகளின் நூல்களை தடை செய்து அவற்றை அகற்றும் பணியை எகிப்தின் மதவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. அமைச்சர் கலாநிதி முக்தார் ஜூம்ஆ இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
.
பின்வரும் வஹாபிகளின் நூல்களை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.
இப்னு தைமியா
இப்னு அப்துல் வஹாப்
பின் பாஸ்
இப்னு உதைமீன்
அபூ இஸ்ஹாக் ஹுவைனி
முஹம்மத் ஹுசைன் யாகூப்
முஹம்மத் ஹஸ்ஸன்
.
இதேநேரம் கெய்ரோ, அலக்ஸ்சாந்திரியா, ஜிசா ஆகிய பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல் நூலகங்களில் இருந்து பின்வரும் வஹாபிகளின் 7000 நூல்கள், சீடிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
.
வக்தி அல் கொனிம்
யூசுப் அல் கர்ளாவி
முஹம்மத் மக்ஸுத்
யாஸிர் புர்ஹாமி
அபூ இஸ்ஹாக் ஹுவைனி
முஹம்மத் ஹுசைன் யாகூப்
முஹம்மத் ஹஸ்ஸன்
.
இதேநேரம் எகிப்தின் மதவிவகார அமைச்சு ஏனைய மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து உள்ளனர்.

  1. .مصر.. الأوقاف تصادر كتب ابن باز وابن عثيمين من المساجد

Sunday 28 June 2015

P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது

P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது


ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டள்ளது

இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுதியும், பேசியும், பிரச்சாரங்கள் செய்தும் முஸ்லிம் சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிறது TNTJ என்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் ஒரு வஹாபி இயக்கம். அந்த அமைப்பின் ஸ்தாபகர் PJ எனும் பி.ஜெயனுலாப்தீன்.
.
இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக பேசி வருகின்றனர். 
.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், சஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் போன்ற இஸ்லாமிய பெரியார்களை கேவலமாக பேசியும் எழுதியும் வருக
ின்றார்கள்.
.
இவர்களின் பித்னா (குழப்பம்) அதிகரிக்கவே தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக சமீபத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். மேலும் இந்த வழிகேடர்களை தடை செய்யுமாறு கூறி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
.
எனவே, முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்கி, PJ எனும் பி.ஜெய்னுலாப்தீனின் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை திரட்டி, 16-06-2015 ஆம் திகதி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அவசர ஆலோசனை கூட்டத்தில் சமர்பிக்க 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது.
.
இதற்காக 8 பேர் கொண்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களின் விபரங்கள்:
.
1. மௌலவி அப்லளுள் உலமா ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A சென்னை
.
2. மௌலவி அன்வர் பாதுஷா (உலவி) M.A, M.Phil, Phd.
.
3. மௌலவி சைபுதீன் (ரஷாதி) பெங்களூர்
.
4. மௌலவி காஜா மொஹினுத்தீன் (பாகவி) மேலப்பாலயம்
.
5. மௌலவி சதீதுத்தீன் (பாகவி) M.A Phil. சென்னை
.
6. மௌலவி அப்துல் அஸீஸ் (பாகவி) கோவை.
.
7. மௌலவி நீடூர் இஸ்மாயில் (பாகவி)
.
8. மௌலவி ஹமித் பக்ரி (மன்பஈ) காயல்பட்டிணம்
.
இந்த 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கீழ்காணும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
.
"(TNTJ) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பின் அமைப்பாளர் P.J என்பவர் இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வரும் காரணத்தால் இவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்" என்று இச்சபை அறிவித்து "இவரை பின்பற்றியோர் தவ்பா செய்து (பாவமன்னிப்பு) தேடி மீள வேண்டும்" என இச்சபை பத்வா (மார்க்க தீர்ப்பு) வெளியிட்டுள்ளது.
.
குறிப்பு: இச்செய்தியை உலகிலுள்ள அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு அறிவிக்கும்படியும், இந்த வழிகெட்ட கூட்டத்தாரையும் அதன் ஸ்தாபகர் PJ என்பவரை பற்றியும் முஸ்லிம்களுக்கு தெரிவித்து, முஸ்லிம்களின் ஈமானை பாதுக்காக்க உதவுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுள்ளது.

SEE MORE FULL


P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது


பத்ர் ஸஹாபாக்களின் கந்துரி காரியாலயம் திறப்பு

புனித பத்ர் ஸஹாபாக்களின் நிணைவாக கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ்வில் நடை பெறும் மாபெறும் மாகந்துரி நிகழ்வுக்காக இன்று 28-06-2015 மாலை 5.00 மணிக்கு பத்ர் ஸஹாபாக்கள் கந்துரி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவி எச்.எம் இப்றாஹிம் நத்வி,மௌலவி எச்.எம் யுசுப் முஸ்தபி.மௌலவி ஜெ.ஏ.எம் வலீத் கெளதி மௌலவி பைஸல் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகம் ஜமாஅத்தார்கள் கலந்து சிறப்பித்தார்கள்






பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு






கந்துரி





Saturday 27 June 2015

முகமது அலி - சிறப்பு பகிர்வு

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்
தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு. "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ;
தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது. "I'M THE GREATEST !" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் "ஆமாம் ! ஆமாம் "என்று கொண்டாடினார்கள்.
இரண்டுமுறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்தவருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர்
ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்க கூட ஆளில்லை; நிறவெறி-வெய்ட்டர் கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை
நதியில் வீசிவிட்டு நடந்தார்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரைமுகமது அலி
என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார் ; கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும்,உலக சாம்பியன் ஆனார். வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட
வைக்க அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது,""எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த கொலை,அப்பாவிகளை கொல்லுதல்,அவர்களை எரித்தல் ஆகியவற்றை என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை ஏன் செலுத்த வேண்டும் ? இங்கே என்னூரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு,மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போகவேண்டும் ? இதுவே இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் மற்றும் காலம்" என இவர்
சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது.
காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது; மூன்று வருட வனவாசம்.பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவு தான் என நாடே நகைத்தது.
அப்பொழுது தான் உலக சாம்பியன்ஷிப் வந்தது ,ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை ;மூன்று
வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி ! அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது -பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை
பாதித்து முடக்கிபோட்டது.ஆனாலும்,அவர் பல்வேறு நிதிதிரட்டல்கள் மூலம் எளியவர்களுக்கு உதவிவந்தார்.
அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள் ,"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை. அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த தினம் இன்று
- பூ.கொ.சரவணன்

Friday 26 June 2015

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

Qadiriyya Sunnath Wal Jamaath's photo.
பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜிங்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அஅலைஹி வஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பு எவ்வித மாற்ற்மோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது .(அல்குர்ஆன் = 34=14 ) 
நிச்சயமாக நபிமார்களின் மேனிகளை மண் தின்னாது.சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது .( அல்கஸாய்ஸுல் குப்ரா=பாகம்=2,பக்கம் =280 ) 
ஹஜரத் உஜைர் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள் (அல்குர்ஆன்= 2=259 )
ஹஜரத் யூனுஸ் நபி அலைஹி வஸல்லம் அவர்களை மீன் விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். ( அல்குர்ஆன்=37=142,143 )
இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள் :
ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் சூரத்து தபாரக்கல்லதீ ஓதிக்கொண்டிருக்கும் விஷயம் பிறகு தான் வந்தது.இவ்விஷயத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது சுரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பற்றக்கூடியது என்று கூறினார்கள் ( திர்மீதீ,மிஷ்காத்= பக்கம்=187 )
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள்.
( முஸ்லீம் பாகம் =1 ,பக்கம்=91 .பாபுல் இஸ்ரா ,மிஷ்காத் =527 )
இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்களும் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்
( புகாரி= பாகம்= 1 .பக்கம் =484 , மிஷ்காத்=19 )
இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள்
முஃமிங்களே அமல் செய்யுங்கள் .ஏனெனில் உங்களுடைய செயல்களை அவனுடைய ரஸூலும் முஃமிங்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நீங்கள் அவர்களிடம் கூறுங்கள், ( தவ்பா=106 )
மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் ; اذا ولي احدكم اخاه فليحسن كفنه فانهم يتزاورون في قبورهم ( ترمذي ,ابن ماجه ا )
இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கஃபன் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ( திர்மிதி ,இப்னுமாஜா )

Thursday 25 June 2015

பாவ மன்னிப்பு தேடுங்கள்!

பாவ மன்னிப்பு தேடுங்கள்!பாவ மன்னிப்பு தேடுங்கள்!


பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.


இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.


நல்லதை மட்டும் அறிந்த வானவர்களாக மனிதர்களை இஸ்லாம் பார்க்கவில்லை.அவ்வாறே நல்லது – கெட்டது எது? என்று அறியாத விலங்குகளின் பட்டியலிலும் அவர்களை சேர்க்கவில்லை.


பாவம் செய்யும் இயல்பில் மனிதன் படைக்கப்பட்டதாக கூறும் இஸ்லாம் பாவ மன்னிப்பின் வாசல்களை அவனுக்காக திறந்தே வைத்துள்ளது.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا رواه مسلم


படைத்த ஏக இறைவன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் தன்னை‘மன்னிப்பாளன்’ என்று கூறுவதின் நோக்கமும் இது தான்.


பாவ மன்னிப்பு தேடுங்கள்!
பாவம் செய்த மனிதன் உடனே இறைவனிடம் மன்னிப்பு தேட வேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மூன்று நிபந்தனைகளை கூறியுள்ளது.

see More

அன்பான முஃமீன்களே! கொள்கைத் தியாகிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகஹ-
கல்முனை சுன்னத் வல்-ஜமாஅத் இராக் நட்புறவு ஒன்றியம், (கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் பள்ளிவாயல், அஸ்ஹாபுல் பத்ர் மீடியா யுனிட்)
போன்றவற்றின் வளர்ச்சிக்காக நிதிகள் திரட்டுதல் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நிதி தர விரும்பியவர்கள் நேரடியாக, இமெயில், முகநுால், தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
அது மட்டுமில்லாது எமது அமைப்பானது வருடாந்த மாபெரும் மீலாத் விழா நிகழ்ச்சிகள், மாபெரும் மௌலித் மஜ்லிஸ்கள் மற்றும் மீலாத் ஊர்வலம், புனித பத்ர் ஸஹாபாக்களின் நினைவை முன்னிட்டு மாபெரும் மௌலித் மஜ்லிஸ்கள் கந்துாரி அன்னதான வைபவம், அண்ணலே ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) நாயகம் மற்றும் அவர்களின் அருந்தவ மைந்தர் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தி (றழி) நாயகம் அவர்களின் நினைவை முன்னிட்டு மாபெரும் மௌலித் மஜ்லிஸ்கள் கந்துாரி அன்னதான வைபவம், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் நினைவை முன்னிட்டு மாபெரும் மௌலித் மஜ்லிஸ்கள் கந்துாரி அன்னதான வைபவம் போன்றவற்றை வருடா வருடம் மிக சிறப்பான முறையில் மிக விமர்சையா நடாத்தி வருகிறது..
எனவே இது போன்ற நிகழ்வுகளுக்கு நேர்ச்சையை பணமாகவோ, பொருளாகவோ தர விரும்புவர்கள் நேரடியாக, தபால் மூலமாக, இ-மெயில், முகநுால், தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
இது போன்ற நிகழ்வுகளுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹூத்தாஆலாவின் பறக்கத் மழையினிலும் மற்றும் அண்ணலே நாயகம் றஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், அஉலியாக்கள், நல்லோர்கள், இறைநேசச்செல்வர்கள், பத்ர் ஸஹாபாக்கள் போன்றோர்களினதும் அன்பு மழையினிலும் துஆ மழையினிலும் தாராளமாக நனைய வாழ்த்துகிறோம்..

குறிப்பு- மாதா மாதம் முதல் திங்கட்கிழமை பத்ர் மௌலித்தும் அன்னதான வைபவமும் நடைபெற்று வருகிறது.
நன்றி வஸ்ஸலாம்.
கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ்
சுன்னத் வல்-ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் கல்முனை.
அஸ்ஹாபுல் பத்ர் மீடியா யுனிட் கல்முனை.

எமது கடந்த கால நிகழ்வுகள் சில

  1. பத்ர் பெருவிழா - 2010"
  2. https://www.youtube.com/watch?v=O-Y-T2POONM
  3. https://www.youtube.com/watch?v=Vr2RtEUlKjY
  4. https://www.youtube.com/watch?v=vwnHCPBn27o

51C, DR.RISVI ROAD (P.P.ROAD) KALMUNAI - 05
SRILANKA.

SRILANKA:
0672054215,
0776984355

QATAR:
(+974) 77496954
(+974) 30671277
(+974) 66762133


E-mail: 
mashaabulbadhr@gmail.com


Customer Neme: Sakkaf
Account Number:  091020182852
HNB Bank, Kalmunai, Srilanka

அன்பான முஃமீன்களே! கொள்கைத் தியாகிகளே!


அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்
Add caption
இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார்.
இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டுகையில்,
மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் அழைப்பின் பிர­காரம், அணு­சக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக இன்­றைய தினம் இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் இலங்கை வருகை தர­வுள்ளார்.

Wednesday 24 June 2015

நோன்பு தரும் ஆரோக்கியம்

معجزات شهر رمضان على جسم الانسان
ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.
நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை மறுசீரமைக்கின்றது.
லீன் ஞதேவ் எனும் அறிஞர் தனது இயற்கை மாற்றீடுகள்எனும் புத்தகத்தில் ‘நோன்பானது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உடற்பாகங்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும், பக்டீரிய எதிர்ப்பு இரத்தக் கலங்களை அவற்றினது திறனில் பல மடையச் செய்கிறது’ எனக் குறிப்பிடுகிறார்.
மேலும், சமிபாட்டுத் தொகுதி ஓய்வெடுக்கும்பொழுது- அதன் உள்வெளி உறையான சீதப்பகுதி- நமது பிழையான உணவுப் பழக்க வழக்கங்களால் பாதிப்புற்றிருந்தால், அதனை மீள ஒழுங்கமைத்துக் கொள்ள ஒரு அவகாசமாய் பயன்படுத்தும்.
அவற்றுடன் உடலின் நஞ்சகற்றும் பிரதான அங்கமாகிய ஈரற் கலங்களும் ஊக்கப்படுத்தப்படும். மேலும் சிறுநீரகம், பெருங் குடல் என்பன இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை வழமையை விட திறனுடனும் உத்வேகத்துடனும் நோன்பின்போது செய்யும்.. இச் செயற்பாடுகள் உடலில் மேலதிகமாக தேங்கி இருக்கின்ற நீரை அகற்றுவதற்கும், உடலில் படிந்திருக்கின்ற கொழுப்பை கரைப்பதற்கும், குருதிக் கலன்களில் படிந்திருக்கின்ற மேலதிக கொலஸ்ட்ரோல் போன்ற உடலுக்கு பாதிப்பான நஞ்சுகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படவும் ஏதுவா அமையும்.
இன்று எம்மை ஆட்டிப் படைக்கும், நீரிழிவு, கொலஸ்ட்ரோல், உயர் குருதி அழுத்தம்போன்றமோசமான நோய்களுக்கு நோன்பு வருமுன் காக்கும் கேடயமாகவே அமைகிறது.
நோன்பை சரியான முறையில் நோற்கும்போது உடல் சம்பந்தமாகவும், உணவுப் பழக்கங்கள் பற்றியும் கவனிக்கத்தக்க விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
நோன்பு காலங்களில் பிரதான உணவு வேளைகள் இரண்டோடு மட்டும் போதுமாக்கிக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கத்தை அடைவதற்கு ஏற்றதாகும். ஸஹர், இப்தார் என்பனவே அவை. ஸஹரை நாம் கட்டாயம் உட்கொண்டே ஆக வேண்டும். ஸஹர் நேரத்தில் குறிப்பாக எமது நாட்டைப் பொறுத்தவரை வழமையான உணவை (சோற்றை) உன்பதில் தவறில்லை.
ஆனாலும் பாரமற்ற உணவுகளை தெரிவு செய்வதே உகந்ததாகும். சலாது வகைகள், மரக்கறிகள்,பழங்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளலாம். எமது அடிப்படை “எதுவும் அளவுக்கு அதிகமாகக் கூடாது” என்பதே. அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு நோன்பு பகல் நேரம் கடினமானதாகவும் அசதி நிறைந்ததாகவுமே காணப்படும்.
இப்தார் நேரத்தில் பேரீத்தம் பழமும் பாலும் பாவிப்பதே சிறந்ததாகும். பேரீத்தம் பழம் உடனடி சக்தியை வழங்குவதோடுவிட்டமின் A, B, மக்னீசியம், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் நார்ச் சத்தும் காணப்படுவதால் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொலஸ்ட்ரோலையும் குறைக்கவல்லது.
பாலில் பல உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதோடு, கொழுப்பையும் கொண்டிருப்பதால் பேரீத்தம் பழத்தின் சீனி உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தி, இரத்த குருதி குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
ரஸூல் (ஸல்) அவர்களின் இப்தார் பாலும், பேரீத்தம் பழமாகவுமே அமைந்திருந்தது என்பது வியக்கத்தக்கது..அத்தோடு மரக்கறி சூப்புகளையும் சலாதுகளையும் இப்தாரில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது. எமது நாட்டில் வழக்கத்தில் காணப்படும் ‘கஞ்சி’ சிறப்பான, இலகுவில் சமிபாடடையக் கூடிய பாரமற்ற உணவாகும்.ஆனால், இன்று கஞ்சி உடலுக்கு தீங்கு பயக்கும் அளவை அடைந்து விட்டது கவலைக்குரியது. மிகக் குறைந்த தேங்காய்ப் பாலுடன் மேலும் எண்ணெய், கொழுப்பு குறைத்து அதிக திரவத் தன்மையுடைய கஞ்சியை வரவேற்கலாம்.
மேலும், மேற்குறிப்பிட்ட பலன்களை ரமழானில் அடைய வேண்டுமாயின், அதிக எண்ணெய்யில் பொரித்த மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் எனப்படும் கடைகளில் விற்கப்படும் தின் பண்டங்களை இயன்றளவு தவிர்ப்பதே சிறந்தது. இரவு நேரம் முழுவதிலும் குறைந்தது 1.5 லீற்றர் நீரையாவது அருந்துவது நல்லது.
இப்தாருக்குப் பின் உடனடியாகத் தூங்க வேண்டாம். முடியுமாயின் சிறிது தூரம் காலாற நடப்பது மிகச் சிறந்ததாகும். உண்மையான முறையில் அதிகம் உண்ணாமல் நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின், உங்களது உடலில் நஞ்சகற்றப்படுவதற்கான இயல்பான சில அறிகுறிகளை நோன்பின் ஆரம்ப நாட்களில் உணர்வீர்கள்.
குறிப்பாக தலைவலி, அசதி மற்றும் வாய் நாற்றம் என்பன ஏற்படுவதானது, உங்களது உடலில் நஞ்சகற்றல் இடம்பெறுகிறது என்பதற்கான இயல்பான அடையாளங்களாகும். அதிக நீர் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம் இவற்றிலிருந்து மீளலாம்.
அடுத்து மனிதனது உள, சமூக மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தில் நோன்பு மிக வெளிப்படையாக பாரிய பங்காற்றுகிறது. மனிதன் தான் விரும்பும் அனைத்தையும் விட்டு விடுவதும், தனிமையிலும் அவற்றை அனுபவிக்காது விடுவதும், அவனது உள்ளத்தில் நாட்ட சக்தி அதிகரிப்பையே காட்டி நிற்கிறது.
மேலும், நோன்பின் ஒழுக்கங்களைப் பேணி நோன்பை நோற்கும்போது, மற்ற மனிதர்களது சமூக உறவைப் பாதிக்கின்ற பொய், புறம், கோள் சொல்லல், வசைபாடல் போன்ற சகல துர்ச் செயல்களிலிருந்தும் விடுபடுகிறான். அத்துடன் அடுத்த மனிதனால் விரும்பப்படுகின்ற, சமூக ஒழுங்கைப் பாதிக்காத ஒருவனாக மாறுகிறான். இவற்றின் மூலம் உள, சமூக நோய்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான்.
ரமழானைத் தொடர்ந்து வரும் காலங்களிலும், சமூகத்திற்கு ஏற்ற பிரஜையாக வாழ பயிற்றுவிக்கப்படுகிறான். மேலும், ஏழைகளின் பசியை உணர்தல், இல்லாதவர்களுக்கு தனது செல்வத்திலிருந்து வாரி வழங்குதல் போன்ற சமூக பொருளாதார சமநிலையை நோக்கிய சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டப்படுகிறான்.இவற்றோடு இரவு முழுவதும் நின்று வணங்குதல், பகல் முழுவதும் திலாவத் போன்ற அளப்பரிய நண்மைக்குரிய காரியங்களை அதிகமதிகம் செய்வதன் ஊடாக, ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறான்.

Sunday 21 June 2015

இது எதன் அடையாளம்?

eravurஇது எதன் அடையாளம்?

இது எதன் அடையாளம்?
குஜராத் உமர்காம் பகுதியை
அடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும்
ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.
இப்போது கீழுள்ள வசனங்களை
முழுமையாக வாசித்து விட்டு
ஏனையோர்க்கும் பகிரவும்..
ﻓَﻜَﻴْﻒَ ﺗَﺘَّﻘُﻮﻥَ ﺇِﻥ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﻳَﻮْﻣًﺎ ﻳَﺠْﻌَﻞُ ﺍﻟْﻮِﻟْﺪَﺍﻥَ ﺷِﻴﺒًﺎ
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்
டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய
பிடியிலிருந்து) தப்பித்துக்
கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்)
அந்நாளில் (திடுக்கம்) சிறு
குழந்தைகளையும் நரைத்தவர்களாக
ஆக்கிவிடும்.
(அல்குர்ஆன்: 73:17)
முழு விபரம்>>
(ஸஹீஹுல் புகாரி: 6530. Book: 7)

Brothers&Sisters இதை முழுமையாக படியுங்கள்

Eravur

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்
தந்தை : இந்த போன் எவ்ளோமா??
மகள் : Rs 40,000 அப்பா
தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??
மகள் : Rs 4000 தான் அப்பா
தந்தை : என்னது நாலாயிரமா??
மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??
தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?
?மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா

தந்தை : அப்படியா??
ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??
நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??
இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா நூ இது உனக்கு தெரியவில்லையா??
இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??
யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??
இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.
இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.
"நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்.

முஸ்லிம் வீரரின் வரலாற்றையும் தேச பக்தியையும் தாங்கி நிற்கும் 1000 ரூபா தாள்

Eravur panikkar

எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )




கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.

செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).

இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .

ஸியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?

ஸியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?

ஸியாரத்தின் போது அண்ணலாரின்
சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?
சவூதி அரேபியா ஏடு தீர்ப்பு.
இன்றைய வஹ்ஹாபி இயக்கத்தின்
நம்மூர் தொண்டர்கள் ஸியாரத்தும்,
துஆவும் கூடாது என்று கூறி
ஆதாரத்திற்கு மேல் ஆதாரங்களை
அள்ளி வீசுங்கின்றனர்.
ஆனால், வஹ்ஹாபிசம் தோன்றிய
சவுதி மண்ணின் மைந்தர்கள்
அதற்கு மாறான தீர்ப்பினை
வழங்குகின்றனர்.
“அக்பாருல் ஆலமில் இஸ்லாமி“
என்பது சவூதியிலிருந்து வெளிவரும்
ஒரு வாரப் பத்திரிகை!
சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற
ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி
என்ற அமைப்பின் அதிகாரப்
பூர்வமான வார இதழ் அது!
அந்த அக்பாருல் ஆலமில் இஸ்லாமி
இதழின் மண்ணறையை
முன்னோக்குதல் என்ற தீர்ப்பு
ஒன்று வெளியாகியுள்ளது.
அதனை அப்படியே மொழி
பெயர்த்து கீழே தந்துள்ளோம்.
அண்ணலார் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின்
கப்ரை ஸியாரத் செய்கிறபோது
கிப்லாவை முன்னோக்கி நின்றுதான்
நாடியவற்றை இறைவனிடம்
கேட்பது சுன்னத்தா? அல்லது
முதுகை கிப்லாவின் பக்கம் திருப்பி
கப்ரை முன்னோக்கி நின்று
துஆ செய்வது சுன்னத்தா?
இந்தக் கேள்விக்கு ராபிதத்துல்
ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின்
அடிப்படை உறுப்பினரும்,
முன்னாள் எகிப்து முப்தியுமான
பெரியார் ஹுஸைன் முஹம்மது
மக்லூப் சொல்கிறார்.
மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
அவர்களின் றாவிகளில் ஒருவரான
இப்னு ஹமீது என்பவர் மூலமாக
கிதாபுஷ் ஷிபா என்ற நூலில்
காழி இயாழ் அறிவிக்கின்றார்கள்.
அபூஜஃபர் மன்ஸுர் நாழிர் என்பவர்
பெருமானாருடைய பள்ளிவாசலை
பரிபாலனம் செய்து வந்தார்.
அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் சொன்னார்கள்.
“அமீறுல் முஃமினீன்!
இந்தப் பள்ளிவாசலில் உமது
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
ஏனெனில், அல்லாஹ் ஒர்
கூட்டத்திற்கு ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுக்கும் முகமாக
இவ்வாறு கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடைய
சப்தத்தைவிட உங்களுடைய
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
உங்களில் சிலர், சிலரிடம்
சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று
அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப்
பேச வேண்டாம். அப்படிச் செய்தால்
உங்கள் அமல்கள் அழிந்துவிடும்.
அதனை நீங்கள் அறிந்து
கொள்ளமாட்டீர்கள். என்றும்,
(அல்குர்ஆன்-49 : 02)
ஒரு கூட்டத்தாரை புகழுமுகமாக
இறைவன், “நிச்சயமாக எவர்
அல்லாஹ்வுடைய தூதரின் முன்
மரியாதையாக தங்களது குரலைத்
தாழ்த்திக் கொள்கின்றாரோ
அத்தகையோருடைய இதயத்தைப்
பரிசுத்தப்படுத்துவதற்காக
இறைவன் சோதனை செய்தான்.
அவர்களுக்கு மன்னிப்பும்,
மகத்தான கூலியும் உண்டு“
(அல்குர்ஆன்-49 : 03)
ஒரு கூட்டத்தினரை
இகழ்வதற்காக இறைவன்,
“எவர்கள் உம்மை தங்களது
அறைகளுக்கு பின் நின்று உரக்கக்
கூவி அழைக்கின்றாரோ அவர்களில்
பெரும்பான்மையானோர்
அறிவில்லாதவர்களே!
என்றும் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் -49:04)
நிச்சயமாக அவர்கள் மறைந்த
பின்னர் கொடுக்கப்படக்கூடிய
மரியாதை, கண்ணியம் அன்னார்
உயிரோடிருக்கும்போது
அவர்களுக்கு கொடுக்கக்கூடிய
கண்ணியத்தையும், மரியாதையையும்
போன்றதே! என மாலிக்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அபூஜஃபர்,
அபூ அப்துல்லாஹ்!
நான் ஸியாரத்து செய்த பின்
கிப்லாவை முன்னோக்கி
நின்று துஆச் செய்யட்டுமா?
அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களை
முன்னோக்கி நிற்கட்டுமா?எனக்
கேட்க, இமாம் மாலிக் சொன்னார்கள்
உனது முகத்தை அண்ணலார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களை விட்டுத் திருப்பாதே!
அன்னார் உனக்கு இறைவனிடத்து
வஸீலாவாக இருக்கிறார்கள்.
உனது தந்தை ஆதமுக்கும்
வஸீலாவாக இருக்கிறார்கள்
அவர்களையே நீ முன்னோக்கு!
அவர்களைக் கொண்டே ஷபாஅத்
தேடு! அல்லாஹ் உமது விஷயத்தில்
அண்ணலாரைக் கொண்டே
ஷபாஅத் அருள்வான்
இறைவன் சொல்கின்றான்.
“அவர்கள் தமக்குத்தாமே
தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில்
உம்மிடம் வந்து அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடினால்
அல்லாஹ்வை பிழைபொறுப்
போனாகவும், அருள் புரிபவனாவும்
பெற்றுக் கொள்வார்கள்”
(அல்குர்ஆன் -04 : 64)
ஷிஹாபுல் கிபாஜி தமது நூலில்
கூறுகிறார், ஸலாம் சொல்வதற்காகவும்
அண்ணலாரின் புனிதக் கப்ரை
முன்னோக்குதலே விரும்பத்தக்கது
என்பது இமாம் மாலிக், அஹ்மது,
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹும்
ஆகியோரது மத்ஹபாகும்.
அவர்களுடைய நூற்களில்
இது குறித்துத் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது.
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் தமது அத்கார்,
ஈளாஹ் எனும் நூற்களில் இது
குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு
அவர்களிடமிருந்து இமாம் சுப்கீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
சொல்கிறார்கள்.
“ஸியாரத் செய்கிறபோது கப்று
சரீபை பின்னோக்கி கப்றின்
தலைப் பகுதிக்கு 4அடித்
தூரத்தில் நின்று நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களுக்கும்
சற்று அகன்று அபூபக்கர் ரழியல்லாஹு
அன்ஹு பின்னர் உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கும் ஸலாமுரைத்து
விட்டு முதலில் நின்ற இடத்திற்கு
வந்து கப்றை முன்னோக்கிதான்
நாடியவைகளை துஆச் செய்வான்!“.
இவ்வாறே இமாம் அபூ ஹனீபா
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
மத்ஹபிலும் காணப்படுகின்றது.
பத்ஹுல் கதீர் என்ற நூலிலிருந்தும்
கமால் அவர்களும் இவ்வாறே
எடுத்துரைக்கிறார்கள்.
பதாவா ஹிந்திய்யா
(பதாவா ஆலம் கீரி)விலும்
இப்படித்தான் பதிவு செய்யப்
பட்டுள்ளது.
லைஸ் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
இப்னு தைமிய்யாவும் துஆ
ஓதும்போது கிப்லாவை முன்னோக்க
வேண்டுமென்கின்றனர்.
காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி போன்ற மார்க்க மேதைகள்
இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(பதாவா ஷர்இய்யா வ
புஹுஸ்னைன் மக்லூப்)
வஹ்ஹாபியக் கொள்கையில்
ஊறித் திளைத்த ராபிதாவின்
அடிப்படை உறுப்பினர் ஒருவர்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள்
நமக்கும் நமது ஆதி தந்தை
ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கும் வஸீலாவாக
அமைந்துள்ளனர் என்பதை
ஏற்பதோடு, தமது பத்வாவிற்கு
ஆதாரமாக இமாம்களுடையதும்,
அவர்களது மத்ஹபுகளை பின்பற்றிய
அறிஞர் பெருமக்களதும் கருத்துக்களை
எடுத்து வைக்கின்றார்.
இந்தியப் பெரு நாட்டின்
அறபியரல்லாதவர்களால்
தொகுக்கப்பட்ட பதாவா ஆலம்
கீரியை ஆயிரக் கணக்கான
மைல்களுக்கு அப்பாலும் அறபி
மேற்கோளுக்காக எடுத்துரைக்கிறார்.
ஆனால் அதே பதாவா ஆலம்
கீரியை மொஙலாய மன்னர்களைத்
திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டது
என்றும் கரங்கூசாது எழுதுகின்றனர்
நம்மூர் பேதையர்கள்.
வழி தவறிய வஹாபிகள் இடத்திற்கும்
நேரத்திற்கும் தகுந்தாற்போல்
பேசுவதில் வல்லவர்கள்.
அதனால் நம் பகுதியில் உள்ள
அரைகுறை அரைவேக்காட்டு
வேதாந்திகளை தூராக்கிவிட்டு
தூய இஸ்லாத்தில் நடந்திட
அல்லாஹ் அருள் புரிவானாக