“அக்பாருல் ஆலமில் இஸ்லாமி“
என்பது சவூதியிலிருந்து வெளிவரும்
ஒரு வாரப் பத்திரிகை!
சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற
ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி
என்ற அமைப்பின் அதிகாரப்
பூர்வமான வார இதழ் அது!
அந்த அக்பாருல் ஆலமில் இஸ்லாமி
இதழின் மண்ணறையை
முன்னோக்குதல் என்ற தீர்ப்பு
ஒன்று வெளியாகியுள்ளது.
அதனை அப்படியே மொழி
பெயர்த்து கீழே தந்துள்ளோம்.
அண்ணலார் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின்
கப்ரை ஸியாரத் செய்கிறபோது
கிப்லாவை முன்னோக்கி நின்றுதான்
நாடியவற்றை இறைவனிடம்
கேட்பது சுன்னத்தா? அல்லது
முதுகை கிப்லாவின் பக்கம் திருப்பி
கப்ரை முன்னோக்கி நின்று
துஆ செய்வது சுன்னத்தா?
இந்தக் கேள்விக்கு ராபிதத்துல்
ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின்
அடிப்படை உறுப்பினரும்,
முன்னாள் எகிப்து முப்தியுமான
பெரியார் ஹுஸைன் முஹம்மது
மக்லூப் சொல்கிறார்.
மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
அவர்களின் றாவிகளில் ஒருவரான
இப்னு ஹமீது என்பவர் மூலமாக
கிதாபுஷ் ஷிபா என்ற நூலில்
காழி இயாழ் அறிவிக்கின்றார்கள்.
அபூஜஃபர் மன்ஸுர் நாழிர் என்பவர்
பெருமானாருடைய பள்ளிவாசலை
பரிபாலனம் செய்து வந்தார்.
அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் சொன்னார்கள்.
“அமீறுல் முஃமினீன்!
இந்தப் பள்ளிவாசலில் உமது
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
ஏனெனில், அல்லாஹ் ஒர்
கூட்டத்திற்கு ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுக்கும் முகமாக
இவ்வாறு கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடைய
சப்தத்தைவிட உங்களுடைய
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
உங்களில் சிலர், சிலரிடம்
சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று
அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப்
பேச வேண்டாம். அப்படிச் செய்தால்
உங்கள் அமல்கள் அழிந்துவிடும்.
அதனை நீங்கள் அறிந்து
கொள்ளமாட்டீர்கள். என்றும்,
(அல்குர்ஆன்-49 : 02)
ஒரு கூட்டத்தாரை புகழுமுகமாக
இறைவன், “நிச்சயமாக எவர்
அல்லாஹ்வுடைய தூதரின் முன்
மரியாதையாக தங்களது குரலைத்
தாழ்த்திக் கொள்கின்றாரோ
அத்தகையோருடைய இதயத்தைப்
பரிசுத்தப்படுத்துவதற்காக
இறைவன் சோதனை செய்தான்.
அவர்களுக்கு மன்னிப்பும்,
மகத்தான கூலியும் உண்டு“
(அல்குர்ஆன்-49 : 03)
ஒரு கூட்டத்தினரை
இகழ்வதற்காக இறைவன்,
“எவர்கள் உம்மை தங்களது
அறைகளுக்கு பின் நின்று உரக்கக்
கூவி அழைக்கின்றாரோ அவர்களில்
பெரும்பான்மையானோர்
அறிவில்லாதவர்களே!
என்றும் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் -49:04)
நிச்சயமாக அவர்கள் மறைந்த
பின்னர் கொடுக்கப்படக்கூடிய
மரியாதை, கண்ணியம் அன்னார்
உயிரோடிருக்கும்போது
அவர்களுக்கு கொடுக்கக்கூடிய
கண்ணியத்தையும், மரியாதையையும்
போன்றதே! என மாலிக்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அபூஜஃபர்,
அபூ அப்துல்லாஹ்!
நான் ஸியாரத்து செய்த பின்
கிப்லாவை முன்னோக்கி
நின்று துஆச் செய்யட்டுமா?
அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களை
முன்னோக்கி நிற்கட்டுமா?எனக்
கேட்க, இமாம் மாலிக் சொன்னார்கள்
உனது முகத்தை அண்ணலார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களை விட்டுத் திருப்பாதே!
அன்னார் உனக்கு இறைவனிடத்து
வஸீலாவாக இருக்கிறார்கள்.
உனது தந்தை ஆதமுக்கும்
வஸீலாவாக இருக்கிறார்கள்
அவர்களையே நீ முன்னோக்கு!
அவர்களைக் கொண்டே ஷபாஅத்
தேடு! அல்லாஹ் உமது விஷயத்தில்
அண்ணலாரைக் கொண்டே
ஷபாஅத் அருள்வான்
இறைவன் சொல்கின்றான்.
“அவர்கள் தமக்குத்தாமே
தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில்
உம்மிடம் வந்து அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடினால்
அல்லாஹ்வை பிழைபொறுப்
போனாகவும், அருள் புரிபவனாவும்
பெற்றுக் கொள்வார்கள்”
(அல்குர்ஆன் -04 : 64)
ஷிஹாபுல் கிபாஜி தமது நூலில்
கூறுகிறார், ஸலாம் சொல்வதற்காகவும்
அண்ணலாரின் புனிதக் கப்ரை
முன்னோக்குதலே விரும்பத்தக்கது
என்பது இமாம் மாலிக், அஹ்மது,
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹும்
ஆகியோரது மத்ஹபாகும்.
அவர்களுடைய நூற்களில்
இது குறித்துத் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது.
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் தமது அத்கார்,
ஈளாஹ் எனும் நூற்களில் இது
குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு
அவர்களிடமிருந்து இமாம் சுப்கீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
சொல்கிறார்கள்.
“ஸியாரத் செய்கிறபோது கப்று
சரீபை பின்னோக்கி கப்றின்
தலைப் பகுதிக்கு 4அடித்
தூரத்தில் நின்று நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களுக்கும்
சற்று அகன்று அபூபக்கர் ரழியல்லாஹு
அன்ஹு பின்னர் உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கும் ஸலாமுரைத்து
விட்டு முதலில் நின்ற இடத்திற்கு
வந்து கப்றை முன்னோக்கிதான்
நாடியவைகளை துஆச் செய்வான்!“.
இவ்வாறே இமாம் அபூ ஹனீபா
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
மத்ஹபிலும் காணப்படுகின்றது.
பத்ஹுல் கதீர் என்ற நூலிலிருந்தும்
கமால் அவர்களும் இவ்வாறே
எடுத்துரைக்கிறார்கள்.
பதாவா ஹிந்திய்யா
(பதாவா ஆலம் கீரி)விலும்
இப்படித்தான் பதிவு செய்யப்
பட்டுள்ளது.
லைஸ் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
இப்னு தைமிய்யாவும் துஆ
ஓதும்போது கிப்லாவை முன்னோக்க
வேண்டுமென்கின்றனர்.
காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி போன்ற மார்க்க மேதைகள்
இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(பதாவா ஷர்இய்யா வ
புஹுஸ்னைன் மக்லூப்)
வஹ்ஹாபியக் கொள்கையில்
ஊறித் திளைத்த ராபிதாவின்
அடிப்படை உறுப்பினர் ஒருவர்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள்
நமக்கும் நமது ஆதி தந்தை
ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கும் வஸீலாவாக
அமைந்துள்ளனர் என்பதை
ஏற்பதோடு, தமது பத்வாவிற்கு
ஆதாரமாக இமாம்களுடையதும்,
அவர்களது மத்ஹபுகளை பின்பற்றிய
அறிஞர் பெருமக்களதும் கருத்துக்களை
எடுத்து வைக்கின்றார்.
இந்தியப் பெரு நாட்டின்
அறபியரல்லாதவர்களால்
தொகுக்கப்பட்ட பதாவா ஆலம்
கீரியை ஆயிரக் கணக்கான
மைல்களுக்கு அப்பாலும் அறபி
மேற்கோளுக்காக எடுத்துரைக்கிறார்.
ஆனால் அதே பதாவா ஆலம்
கீரியை மொஙலாய மன்னர்களைத்
திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டது
என்றும் கரங்கூசாது எழுதுகின்றனர்
நம்மூர் பேதையர்கள்.
வழி தவறிய வஹாபிகள் இடத்திற்கும்
நேரத்திற்கும் தகுந்தாற்போல்
பேசுவதில் வல்லவர்கள்.
அதனால் நம் பகுதியில் உள்ள
அரைகுறை அரைவேக்காட்டு
வேதாந்திகளை தூராக்கிவிட்டு
தூய இஸ்லாத்தில் நடந்திட
அல்லாஹ் அருள் புரிவானாக