السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 20 November 2023

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்


 இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் : பலஸ்தீன விடுதலை போராட்டத்தின் முன்னோடி


பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றி முஸ்லிம்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை மையப்படுத்தியே இந்த விடுதலைப் போராட்டம் இடம்பெறுகிறது. அல்லாஹ்தஆலா பைதுல்மக்திஸ் பகுதியை அல்குர்ஆனில் புனித பூமியாக அறிவித்திருக்கிறான். புனித பூமியை தாம் பாதுகாப்பதாக அவன் உறுதியளித்திருக்கிறான். மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பகுதிகளில் அதிகளவிலான நபிமார்களும் ரசுல்மார்களும் வாழந்திருக்கிறார்கள். மர்யம் அலைஹிஸ்ஸலாம் போன்ற இறைவனிடம் அந்தஸ்துப் பெற்ற நல்லடியார்களும் இங்குவாழ்ந்துள்ளதொடு, இந்தப் பகுதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் தான் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளும், வளம் நிறைந்த பிரதேசங்களாகக் காணப்படுவதாக தப்ஸீர் அறிஞர்கள் கூறுகிறார்கள். 


பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பது நீண்டகாலமாக இடம்பெற்றவரும் விடயமாகும். உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் காலத்தில் பைதுல்மக்திஸ் பகுதி முஸ்லிம்களின் வசமானதோடு, பின்னர் சிலுவைப் படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஐயூபிய ஆட்சியாளர் சுல்தான் சலாஹூத்தின் அல்- ஐயூபி அவர்களினால் கைப்பற்றப்பட்டது. உஸ்மானிய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் பலஸ்தீன் ஆள்புலத்தை பிரித்தானியா கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியோடு பலஸ்தின் நிலப்பகுதியில் இஸ்ரேல் என்ற அரசு உருவாக்கப்பட்டது. 


அன்று முதல் இன்றுவரை பலஸ்தீன மக்கள்  மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு தாக்குதல்களை தொடர்ந்தது மேற்கொண்ட வருகிறது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமா*ஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து காஸாவின் மீது  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு போரை அறிவித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசின் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 9000 இற்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்*லப்பட்டுள்ளனர். அதேபோன்று, அல் - கஸ்ஸாம் மற்றும் ஏனைய போராட்டக் குழுக்களின் தாக்குதல்களால் இதுவரை 327 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்*லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


 பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை படிக்கும் சகலரும் அறிந்து வைத்திருக்க வேண்டியவர்கள் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள். பிரான்ஸ், பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு எதிராகவும் குறிப்பாக 1920ம் ஆண்டுக்குப் பின்னர் சியோனிஸத்திற்கு எதிராகவும் இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடிய பெருமை செய்ஹ் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களை சாரும். 


இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் சிரியாவின் ஜப்லிஹ் நகரில்  பிறந்தார்கள். அவரது தந்தை உஸ்மானிய கிலபாத்தின் கீழ் இயங்கிய ஷரீஆ நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்கள்.  செய்ஹ் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களின் குடும்பம் ஈராக்கை பூர்வீகமாகக் கொண்டதாகும். சிரியாவில் ஆரம்பக் கல்வியை  பூர்த்திசெய்த அவர் உயர்கல்விக்காக அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்றார்கள். நவ ஸலபி சிந்தனையாளர்களான முஹம்மத் அப்துஹூ, ராஷித் ரிழா போன்றவர்களிடமும் இமாம் கஸ்ஸாம் கற்றார்கள். நவஸலபி அறிஞர்களிடம் அவர்கள் கற்றாலும்  கற்றாலும் தரீக்கா காதிரியாவின் கலீபாவாகப் பணியாற்றினார்கள். சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்தமையால் கூடுதலானோர் இவர்களின் கருத்துக்களால் கவரப்பட்டார்கள். இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் சமூக சீர்த்திருத்த பணிகளுக்கு அவர் பின்பற்றிய காதிரிய்யா வழியமைப்பு உந்துசக்தியாக அமைந்தது என அரபு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்திலேயே  காலனித்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளில் அவர் இணைந்துகொண்டார் என்று பிரித்தானியாவின் எஸ்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பெவர்லி மில்டன் எட்வட்ஸ்  அவர்கள் கூறுகிறார்கள். 


ஆன்மீக  அமைப்புக்கள் வரலாற்றில் மேற்கொண்ட சமூக புணர்நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்குடன் அவர் சிரியாவில் உள்ள தனது சொந்த ஊரான ஜப்லிஹ் நகருக்கு விஜம் செய்தார்கள். தொழுகை மற்றும் ரமழான் மாதத்தில் நோன்பை பயனுள்ள விதத்தில் கழித்தல் ஆகிய விடயங்கள் மீது அவர்கள் கூடுதல் நாட்டம் காட்டினார்கள். இதற்கு அமைவாக சூதாட்டம் மற்றும் மதுப்பாவனை ஒழிப்பு வேலைத்திட்டங்களையும் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் ஆரம்பித்தார்கள்.  இவரது முயற்சிகளுக்கு ஜப்லிஹ் நகரில் மகத்தான வரவேற்புக் கிடைத்ததது. உஸ்மானிய கிலாபத்தின் பெலிஸ் படையுடன் இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார்கள். 


சமகாலத்தில் அரபுத் தேசியவாதத்திற்கு இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் நேரடியாக ஆதரவு வழங்கினார்கள். அரபுத் தேசிய வாதத்திற்கு உஸ்மானிய கிலாபா எதிர்பர்ப்பாக இருந்தாலும் கூட இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்களுக்கு உஸ்மானிய கிலபா ஆதரவு வழங்கியது. ஆன்மீகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் அவர் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்தார்கள் என்று கலாநிதி பெவர்லி மில்டன் எட்வட்ஸ்  அவர்கள் கூறுகிறார்கள்.  


இத்தாலியின் ஆட்சியளார் பெனிட்டோ மொஸோலினி தலைமையிலான இத்தாலியப் படை 1911ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லிபியாவை ஆக்கிரமித்தது. இந்த ஆக்கிரமிப்பு எதிராகப் போராட அவர்கள் தயாரானார்கள். லிபியாவின் மன்னர் செய்ஹ் ஸன்னூஸியின் மன்னரின் மாணவர் உமர் முக்தாரின் போராட்டத்திற்கு முழுமயான ஓத்துழைப்பை வழங்குவதாக இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் உறுதியளித்தார்கள். இதற்காக லிபியாவின் போராட்த்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சிரியாவில் நிதி திரட்டும் பணிகளை அவர்கள் ஆரம்பித்தார்கள். உஸ்மானிய கிலாபத்தின் ஆதரவும் இதற்காக கிடைத்தது. சிரியாவில் இருந்தே லிபிய விடுதலைப் போராட்ட அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதற்கான நிதியை திரட்டினார்கள். போராட்டத்திற்கான வெற்றிபாடலும் இமாம் அவர்களாலேயே இயற்றப்பட்டது. அது பின்வரமாறு அமைந்திருக்கிறது. 

" யா றஹீம் யா றஹ்மான்

உன்சுர் மௌலானா அஸ் சுல்தான்

வகுஸ்ர்  ஆதன்னா அல் இத்தாலியான்"

அதாவது 

'அருளாளனே அன்பாளனே எங்கள் இறைவனே எமக்கு வெற்றியை தந்தருள்வாயாக எமது எதிரிகளான இத்தாலியர்களை தேற்கடித்திடுவாயாக'  என்ற வெற்றிப்பாடலால் அரபு இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமடைநதார்கள். 


1912ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் இத்தாலியரை எதிர்ததுப் போராடுமாறு லிபியர்களுக்கு அவர் பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்கள். உஸ்மானிய படை தன்னார்வ முறையில் போராடவந்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கியது. 1919ம் ஆண்டு பிரான்ஸியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சிரியாவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிரான்ஸின் ஆதரவுடன் இயங்கிய அலவியர்களுக்கு எதிராக இமாம் கஸ்ஸாமின் ஜப்லிஹ் படைதாக்குதலை நடத்தியது. இதன்போது தான் பிரான்ஸியர்களுக்கு எதிராக இமாமின் படை கெரில்லா தாக்குதலை முதல் தடவையாக முன்னெடுத்தது. 


1929ம் ஆண்டு பலஸ்தீன் ஷரீஆ நீதிமன்றத்தின் திருமணப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்கள். பலஸ்தீனில் விவிசாய அமைப்புக்களை கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்தார். இஸ்ரேல் -பிரிடிஷ் எதிர்ப்பு இயக்கமான " Black Hand" இயக்கத்தை இமாம் அவர்கள் 1930ம் ஆண்டில் உருவாக்கி ஸியோனிஸர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் அவர்கள் தனது படைவீரர்களுக்கு, போருக்கு செல்ல முன்னர் காதிரிய்யா வழியமைப்பின் ஆன்மீக வழிகாட்டலை பின்பற்றி திக்ர், ஸலவாத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டார்கள். பலஸ்தீன் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிறுவப்பட்டிருந்த சட்டவிரோதக் குடியிருப்புக்கள் மீது இந்தப் படை தாக்குதல் நடத்தியது. ஜெரூஸலத்தின் முப்தி ஹாஜ் முஹம்மத் அமீன் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணினார்கள். ஜேர்தானைச் சேர்ந்த காலனித்துவ எதிர்பாளரான மன்னர் ரஷீத் அல்- குசையின் நெருக்கிய ஆதரவும் இமாம் அவர்களுக்கு இருந்தது. 


இமாம் கஸ்ஸாம் அவர்கள் 1935 நவம்பர் மாதம் 20ம் திகதி 52ம் திகதி பிரிடிஷ் பொலிஸாரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இமாம் அவர்கள் ஷஹீதாக்கப்படதன் பின்னர் டேவிட் பென்கூரியன் என்ற யூதன் இப்படிச் சொன்னான். "முதல் தடவையாக ஒருவர் தனது வாழ்வை அர்ப்பணித்ததை அரபிகள்கண்டுவிட்டார்கள். அரேபியர்களிடம் குறைபாடாக இருந்த தார்மீக உறுதியை இது வழங்கும்" என்றான். யூத சியோனிஸத்திற்கு எதிரான போராட்டத்தில் இமாம் அவர்கள் ஓர் அழியாச்சின்னமாகும். இமாம் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பின் இராணுவப்பிரிவுக்கு "இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் படையணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஸ்ஸாம் ஏவுகணையும் பலஸ்தீன் போராளிகளால் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்தஆலா செய்ஹ் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் அவர்களின் பணிகளை ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்!


நன்றி - பஸ்ஹான் நவாஸ்


தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்

NAWAS fb



குஞ்சாலி மரிக்கார்


குஞ்சாலி மரிக்கார் .

போர்த்துக்கேயருக்கு எதிராக இலங்கையின் மாயதுன்ன மன்னனுக்கு உதவுவதற்கு,  கோரளா ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத் தளபதியான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கைக்கு வந்தார். இவர்கள் நாகூர் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்களின் மாணவராவார்.

 போர்த்துக்கேயருக்கு எதிரான ஒரு யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட இவர்கள் சிலாபத்தில் அமைந்துள்ள மலே  பள்ளிவாசலில் (Mosque Garden) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். குஞ்சாலி மரிக்கார் அவர்களின் ஸியாரத்தில் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட மீதான் கல் நடப்பட்டுள்ளது.

குஞ்சாலி மரிக்கார் அவர்களுடன் போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராட வந்த மற்றுமொரு தளபதியான அலி இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்டு சிலாபம் கடற்கரையோரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இலங்கைமுஸ்லீம்களின் பூர்விகத்தை நிரூபிக்கும் இப்படியான ஸியாரங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday 19 November 2023

காலி கச்சுவத்தை பள்ளிவாயல்



 காலி கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் !


காலியில் அமைந்துள்ள கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக இன்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) பிரகடணப்படுத்தப்பட்டது. தொழில் மற்றும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்படி பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் செய்யப்பட்டது.  


இலங்கையில் காணப்படும் பழமைவாய்ந்த பள்ளிவாசல்களில் கச்சுவத்தை பள்ளிவாசலும் ஒன்றாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வபாத்தின் பின்னர் அவர்களது ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் தூதை உலகின் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றார்கள். அவ்வாறு இலங்கைக்கு  இஸ்லாத்தின் தூதை எடுத்துவந்த தூதுக்குழுவுக்கு தலைவராக இருந்தவர்களே கச்சுவத்தை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான் வலீயுல்லாஹ் ஆவார். இவர்கள் இலங்கையில் காலடிவைக்க முன்னரே வபாத்தானதாகவும், அவர்களுடன் வந்த தூதுக்குழு அவர்களை தற்போது கச்சுவத்தை பள்ளிவாசலில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 


ஹிஜ்ரி 22இல் (கி.பி. 642) இங்கு வருகைதந்த செய்யிதினா அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, அப்போது யெமனை ஆட்சிசெய்த மன்னரின் (கவர்ணர்) மகனான சத்ருத்தீன் அவர்களும், அவருடைய தோழர்களும் இங்கு ஏற்கனவே காணப்பட்ட மக்பராவின் அருகில் ஹிஜ்ரி 27இல் (கி.பி. 647) இந்த பள்ளிவாசலை கட்டினார்கள். அப்போது குப்பா மற்றும் மினாரா இன்றி பள்ளிவாசல் கட்டப்பட்டது.


கச்சுவத்த என்ற பெயர் ஹஜ்ஜிவத்தை என்ற பெயரின் நீட்சியாகும். அதாவது ஹஜ்ஜி தோட்டம் என்பது இதன் தமிழ் அர்த்தமாகும். இஸ்லாத்தின் அறிமுகத்தின் பின்னர் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புனித மக்கா நகருக்கு ஹஜ் செய்வதற்காக சென்ற ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜிவத்தையில் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தாகவும் 

வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.


சீனாவின் மிங் வம்ச அரச குடும்பத்தின் (Ming dynasty) ஆலோசகர் அட்மிரல் செங் ஹே (Zheng He)அவர்கள் சீனாவில் இருந்து ஹஜ்ஜாஜிகளை கப்பல் மூலம் கி.பி 1400ம் ஆண்டு காலப் பகுதியில் (போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) ஹஜ்ஜிக்காக அழைத்துச் சென்ற போது காலி ஹஜ்ஜிவைத்தைக்கு வருகை தந்ததாகவும் சுதேச சிங்கள மக்களும் இலங்கை முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் சீனாவின் வரலாற்றுக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், காலியின் கிரிப்ஸ் பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழி கல்வெட்டில்  செங் ஹே (Zheng He) தொடர்பாகவும், ஒரு பள்ளிவாசல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.


மலேசிய, இந்தோனேசிய, சீன  ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜூவத்தை பள்ளிவாசலில் இருந்தே இஃராம் கட்டியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு முதலில் தமிழில் தப்ஸீர் எழுதிய இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா பின் பாவா ஆதம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஹஜ்ஜிவத்தை  பள்ளிவாசலில் இருந்தே  ஹஜ் பயணத்தை ஆரம்பித்தார்கள்.


தகவல் உதவி மற்றும் படம் : Vinuka Manitha Vidanapathirana , Fazhan Nawas , Manusha Nanayakkaara , Farhan Nizamdeen 


தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்

Nawas Fb

Saturday 18 November 2023

அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....


 அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....

பகுதி - 01

*********

9/11 அன்று அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்தபோது - இச்சம்பவத்தைத் தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் - கோபுரக்கள் இடிந்து விழத்தொடங்கிய போது - அதனைக் கண்டு நடனமாடத் தொடங்கிய ஒரு குழுவைக் அவதானித்தார். அவர்கள் இந்நிகழ்வால மகிழ்ச்சியடைந்திருந்ததோடு கோபுரங்கள் எரிவதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டுமிருந்ததை கண்டார்.


அந்த அமெரிக்கப் பெண் இது தொடர்பில் தொலைபேசியில் அழைத்துத் தகவலையும் சொன்னார். அதன் பிரகாரம் அக்குழு உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் 5 பேரும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட்டுடன் தொடர்புடைய இஸ்ரேலியர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த சலசலப்புமில்லாமல் விடுவிக்கப்பட்டனர்.


இந்தச் சம்பவம், மொசாட், சிஐஏவுடன் இணைந்து - இக்கோபுரங்கள் தாக்கப்படுவதற்கு பின்னணியாக இருந்தத்தை - அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், விஷேட குழு அமைக்கப்பட்டு செய்யப்பட்ட விசாரணைகளில் - இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாமல் மூடிமறைக்கப்பட்டிருந்தது.


ஈரான் மற்றும், அரபு நாடுகளின் இராணுவ வளர்ச்சியின் காரணமாக - இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக - மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் மிகவும் அவசியமெனப்ப்பட்டது. இந்த அரபு / முஸ்லிம் நாடுகளில் எண்ணெய் இருப்பதனால் - அவை வேகமாக முன்னேறி இராணுவ ரீதியாக வளர ஆரம்பித்தன. இது மொசாட்டிற்குச் #சிவப்பு #எச்சரிக்கையை ஏற்படுத்தியது. 


மறுபுறம், மத்திய கிழக்கிற்கு இராணுவரீதியாக வந்து - எண்ணெயைக் கைப்பற்றி - அப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கு - அமெரிக்காவிற்கு #வியட்நாமில் #ஏற்பட்ட #தோல்விக்குப் #பிறகு - வெளிநாட்டில் மற்றொரு இராணுவப் பிரச்சாரத்தை நியாயப்படுத்த ஒரு பெரிய சாக்குப்போக்கு தேவைப்பட்டது. 


எனவே, இரட்டைக்.கோபுரத்தைத் தகர்ப்பதன் மூலம் - #அமெரிக்க #மண்ணில் #பயங்கரவாதத் #தாக்குதல் என்ற போர்வையில் -  மத்திய கிழக்கில் யாரோ ஒருவர் மீது குற்றம் சாட்டி - இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது. அதன் பிரகாரம், ஒசாமா பின்லேடன் மீது வைல்ட் கார்டு விழுந்தது. 


ஒசாமா  பின்லேடன் அமெரிக்காவினால் வளர்க்கப்பட்டவரே. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுடனான போரில் அவருக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கியது அமெரிக்காவே. ஆனால், அறியப்பட்டபடி சிஐஏ எப்போதும் அதன் குழந்தைகளை இறுதியில் சாப்பிட்டு விழுங்கிவிடும் (கடாபி, சதாம் உசேன்). எனவே இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு - அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைந்தது. 


மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தி - அதன் எண்ணெய் வளங்களை ஏப்பமிடவும் - ஈரான் உட்பட அரபு / முஸ்லிம் நாடுகளின் இராணுவ பலத்தை அழிப்பதற்கும் -ஆப்கானில் மாத்திரம் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால்,  ஈரானின் மறுபுறத்தில் நுழைவதற்கு அமெரிக்காவிற்கு மற்றொரு சாக்குபோக்குத் தேவைப்பட்டது. 


எனவே, மொசாட் மற்றும் சிஐஏ ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது, #ஈராக்கில் #பேரழிவு #ஏற்படுத்தும் #இரசாயன #ஆயுதங்கள் அதுதான் அந்த சாக்குப்போக்கு. இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதன் பிரகாரம், அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து - நாட்டின் மொத்த தங்க இருப்புகளையும் சூறையாடியதோடு எண்ணெய் வயல்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.


இத்திட்டம் நிறைவேறியதால், இஸ்ரேலுக்கு உடனடியாக இருந்த பெரும் அச்சுறுத்தல் மறைந்ததாலும் - இஸ்ரேலும் மொசாட்டுக்கும் சிரியாவின் இராணுவ பலமும் - அதனை அண்டியதாகவுள்ள ஈரானின் சிரியாவுடனான இராணுவ பொருளாதார ஒத்துழைப்பும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்தது. அதனால், சிரியாவின் மீது மொஸட்டின் அடுத்த குறியிருந்தது. 


ஆனால், அமெரிக்காவிற்குள்ளே வெளிநாடுகளில் நேரடி அமெரிக்க இராணுவ தலையீடுகள் தொடர்பில் காணப்பட்ட எதிர்ப்பு வலுவாக இருந்தமையால் - அதன் பிரகாரம் மொசாட்டும் சிஐஏயும் சேர்ந்து புதிய திட்டத்தை வகுத்தன். இம்முறை அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் - #கூலிப்படையை (ஐ.எஸ்.ஐ.எஸ்) உருவாக்கி அதற்கு நிதியுதவி அளித்து - பயிற்சி அளித்து - ஆயுதம் வழங்கி - சிரியாவில் உள்நாட்டுப் போரை ஆரம்பிக்க வைத்தது. 


தொடரும்.....


AL Thavam Fb

Wednesday 15 November 2023

சேர் முகம்மது மாக்கான் மாக்கார்


 சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழக பள்ளிவாசலும்  


சேர் முஹம்மத் மகான் மாகார் இலங்கையின் புகழ்பெற்ற மாணிக்கக்கல் வர்த்தகர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்தார். பின்னர் குடும்ப வர்த்தகமான மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இவரது மாணிக்கக் கல் வர்த்தகம் பிரித்தானிய அரசகுடும்பத்திலும், உஸ்மானிய கிலாபத்திலும் பிரபலம்பெற்றிருந்தது. 1909ம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் 7ம் எட்வர் அவர்களால் பிரித்தானியாவுக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 


அவரது சேவைகளை அறிந்த உஸ்மானிய கிலாபத்தின் சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களை கொழும்பு நகரின் துருக்கிக்கான 'கொன்ஸல் ஜெனரலாக' “Consul General”    நியமித்தார். கொன்ஸல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு 28 வயது. இந்த பதவிக்கு கிழக்கு உலகில் இருந்து நியமிக்கப்ட்ட முதலாவது நபர் முஹம்மத் மகான் மாகார் ஆவார். 1903ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். துருக்கியையும் - மதீனா நகரையும் இணைக்கும் ஹிஜாஸ் ரெயில்வே Hijaz Railway திட்டத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நிதி திரட்டி ஸ்தான்பூல் நகருக்கு அனுப்பிவைத்தார். 1907ம் ஆண்டில் துருக்கி வெளிவிகார அமைச்சரிடம் இந்தநிதி  கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு 12 புதிய சோனகத் தெருவில் இடம்பெற்றது. 


சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்கள் அவரது தாயாரும் முஸ்லிம் பெண்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அவரது தாயார் ஆமீனா உம்மா மாகான் மாகான் அவர்களே காலி பஹ்ஸதுல் இப்றாஹீமிய்யா அரபுக்கல்லூரியை ஸ்தாபித்தார்கள். இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வியை மேம்படுத்த நீதியரசர்  அக்பர் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தார். கொழும்பு 12 பாதிமா மகளிர் கல்லூரியையும் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் செலவுலேயே நிர்மாணிக்கப்பட்டது. மனிங் அரசியல் திருத்தத்தின் கீழ் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 1924ம் ஆண்டில் தெரிவுசெய்யப்ட்டார். 


இலங்கை முஸ்லிம்கள் தனி இனம் அல்ல என்று பிரித்தானியாவின் Royal Society of Londonஇல் வாதாடிய  Sir பொன்னம்பலம் ராமநாதனின் வாதங்களை முறியடிக்க சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் மூலம் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு பொன் ராமநாதனின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை நியாயமற்றவை என்று நிறுவினார். 


போராதனை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சொந்தப் பணத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்டதாகும். போராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற முஸ்லிம் பெண் மாணவியருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து புலமைப்பரிசில்களை வழங்கினார். முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியாவின் மன்னரும் எலிசெபத் மகாராணியாரின் தந்தையுமான மன்னர் 6ம் ஜோர்ஜ் அவர்கள் ' Sir'     பட்டம்  knighthood வழங்கி  கௌரவித்தார் சேர் முஹம்மத் மகான் மாகார் அவர்களின் மூத்தத மகன் அஜ்வாத் மாகான் மகார் அவர்கள் இலங்கையின் முதலாவது மருத்துவத்துறை பேராசிரியர் ஆவார். 


முஹம்மத் மகான் மாகார் அவருக்கு துருக்கி அரசாங்கம் எபந்தி என்ற பட்டத்தையும் வழங்கிகௌரவித்தது. அவர் பயன்படுத்திய இராஜதந்திர உடை கொழும்பு 08 கிங்ஸி வீதியில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0767WipX6MVbv6YWuProzvTaam2pU4mWs22kkhCohMWBr8pKoGf2vzB8bwKb96viJl&id=100064695969099&mibextid=Nif5oz

Tuesday 14 November 2023

அப்துல் கபூர் ஹாஜி இலங்கை


 அல் ஹாஜ் 

என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள்


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார். 


என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஸாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.


ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார். 


நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது. 


1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி்  ஜனாப் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது. 


என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள். 


என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர் 

S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.


Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him".

Sunday 12 November 2023

அபூதர் ரலியல்லாஹ்

 

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு. 


உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார். 


“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர். 


“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?” 


அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்” 


(முஸ்னது அஹ்மத் 21373). 


நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்? 


“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?” 


அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர். 


சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்முதர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை. 


தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.” 


அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது. 


அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள் 


“அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க, 


“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி. 


“யார் அவர்?” 


“அபூதர்.” 


“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” 


“ஆம்.” 


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”. 


வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம். 


வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி, 


ரலியல்லாஹு அன்ஹு.

இஸ்லாமிய உச்சி மாநாடு


 இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையத்தின் உச்சி மாநாடு அரசியல் முக்கியத்துவமற்ற ஒரு கூடிக் கலைதல் மட்டுமா? 


காஸா இனப்படுகொலை மற்றும் இனச்சம்ஹாரம் குறித்து ஆராய்ந்து உடனடித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையமும் அறபு லீக்கும் எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமலேயே கலைந்து சென்றுள்ளமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. காரணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் ராஜதந்திர நோக்கம் கொண்ட நாடுகள் கூடி ஒரேவகைப்பட்ட தீர்மானத்தை அவை எடுக்க வாய்ப்பில்லை.


காஸா எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் படுகொலை 12 000 ஐ நெருங்குகின்றது. 35 நாட்களின் பின்னரே இந்நாடுகள் கூடியமை அவற்றின் இயலாமையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. ஒரு சம்பிரதாயத்துக்கும் சடங்குக்குமே அவை ஒன்றுகூடின. ஸவூதி அறேபியாவே இப்போது அறபு லீக் ற்குத்தலைமை வகிக்கின்றது. அதை பயங்கரமான பொறியில் மாட்டி ஆட்டிப்படைக்கும் வொஷிங்டனும் வொஷிங்கடனின் உற்ற தோழன் இஸ்ரேலும் றியாதை வைத்தே காய் நகர்த்தி வரும் நிலையில் அறபு நாடுகளின் கூட்டமைப்போ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்போ உச்சிமாநாட்டில் எதையும் சாதிக்கபபோவதில்லை.


ஒரு மாதத்திற்கு முன்னரே இது நடந்திருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை நடாத்தாமல் ரியாத் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. உண்மையில் இன்று தேவையானது உடனடி நடவடிக்கை. போரை அவசரமாக நிறுத்த வேண்டும். காஸாவுக்கான மனிதாபிமான கொரிடோரை விசாலப் படுத்த வேண்டும். நீண்ட காலத் தீர்வான 1967 எல்லையுடன் கூடிய சுதந்திர ஃபலஸ்தீன் பற்றிய பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட வேண்டும். இதை விடுத்து வெறும் கண்டன வார்த்தைகளோடு அனைத்தையும் சுருக்கிக் கொண்டார்கள் அவர்கள்.


இஸ்ரேலை வாழவைக்கும் சவூதி.  ஐக்கிய அரபு அமீரகம் ஜோர்தான் மற்றும் எகிப்து  என்பனவும் இங்கே உள்ளன.அவை எப்படி இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கும்? இஸ்ரேலுக்கு எதிராக சவூதி பெற்றோலியத்தை ஓர் ஆயுதமாகக் பயன்படுத்த மாட்டாது என்று மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார் முஹம்மத் பின் ஸல்மான். ஈரானிய ஜனாதிபதி இந்தப்பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் ஊடாகவே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்படுவதால் அமெரிக்க தளங்களை அறபு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் துப்புவதா விழுங்குவதா என்ற திரிசங்கு நிலையிலுள்ள அராபிய மன்னர்கள் ஒருபோதும் இஸ்ரேலை எதிர்த்து எந்தத்தீர்மானதையும் எடுக்கப்போவதில்லை என்பதை இந்த உச்சிமாநாட்டில் உறுதி செய்துள்ளனர்.


முஸ்லிம் உம்மாவின் எதிர்பார்ப்பையும் அபிலாஷையையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தமது இருப்பை மட்டும் இலக்காகக் கொண்டு காய்நகர்த்தும் அரேபிய ஆட்சியாளர்கள் குறிப்பாக மேலே குறிப்பிட்ட நான்கு நாடுகளும் இஸ்ரேலைப்பகைப்பது தமது எஜமானரான அமெரிக்காவைப் பதைப்பதாகும் என்பதைத் தெளிவாக விளங்கி வைத்துள்ளன. ஆதலால் இவர்கள் கூடாமலேயே இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் இவர்கள் இஸ்ரேலில் கொண்டுள்ள தனிப்பட்ட செல்வாக்கைப்பயன்படுத்தியேனும் காஸா மக்கள் மீதான இனப்படுகொலையை ஆவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்.


எண்ணெய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துகின்றோம் என்று ஓர் அச்சுறுத்தலையேனும் விடுத்திருக்கலாம். அல்லது தமது எஜமானர்கள் அறியாவண்ணமேனும் பலஸ்தீனர்களுக்கு உதவியிருக்கலாம். எதுவுமே செய்யாமல் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பச்சை பச்சையாக ஆதரிக்கும் இந்த அதிகார வர்க்கத்தின் மனோபாவம் மிகவும் குரூரமானது. குமட்டலைத்தரக்கூடியது. கோபத்தைக் கொப்பளிக்க வைக்கக்கூடியது. நேர்மையான முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானத்தின் நூறில் ஒன்று கூட இவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த அவமானகரமான து. இழிவானது. 


இன்று தென்னாபிரிக்கா மிக தைரியமாகவும் வெளிப்படையாகவும் நெடன்யாஹூ என்ற போர்க்குற்றவாளியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடனடியாக கைது வேண்டும் என்று கோரியுள்ளது.இப்படிக்கோருவதற்கு கூட ஒரு முஸ்லிம் நாட்டுத்தலைவருக்கு தில் இல்லை என்றால் இவர்கள் யார்? இவர்கள் இவ்வளவு கோழைகளாய் ஏன் இருக்கிறார்கள்? இவர்கள் யாருக்கு அஞ்சுகிறார்கள்? இவர்களை அமைதிப்படுத்தியுள்ள காரணி எது என்ற பல கேள்விகளை இது எழுப்புகின்றது. அர்தூகான் கூட அமைதியாக இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளது.


ஆனால் அருகிலுள்ள அறபு நாடுகள் இஸ்ரேலை இன்னும் விசுவாசமிக்க நண்பனாகவும் காதலனாகவுமே நடாத்துவதை என்னவென்று நாம் வர்ணிப்பது?. இந்தப்போர் எமது நட்பை பாதித்துவிடாது என்று இன்றைய தினம் ஐக்கிய அறபு அமீரகம் அறிவித்துள்ளது.அப்படியானால் எதற்கு உச்சி மாநாடு? காஸா மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை முழு அறபுலகமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் என்ற பலஸ்தீனரின் வார்த்தை எத்துணை உண்மை என்பதை மீளவும் ஒருமுறை அறபு களைக்கூத்தாடிகளின் காட்டுதர்பார் நிரூபித்துள்ளது.


வரலாறு கோழைகளையும் துரோகிகளையும் வாழவைத்த வரலாறில்லை. இந்தப்பாடத்தை நிச்சயம் ஒருநாள் இன்றுள்ள மீசை வைத்த அரேபிய பெட்டை மன்னர்களும் இராணுவ சர்வதிகாரிகளும் அறிந்தே ஆகுவார்கள்


Zain Rouff

Friday 10 November 2023

கொழும்பு சாஹிரா கல்லூரி

 

கொழும்பு சாஹிரா கல்லூரி

 எந்த சூழ்நிலையில் எதற்காக அன்று உருவாக்கினார்கள் எமது முன்னோர்கள் என்பதை காணலாம் வாருங்கள்.


ஆமாம் 19 ஆம் நூற்றாண்டு காலம். அது . இலங்கை இந்தியாவை போர்த்துகீசியர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து அவரவர் மதங்களை திணிப்பு செய்த காலம் அது. 


இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18 1822 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறந்தார். காலப்போக்கில் அவர்கள்.  சைவமும் தமிழும் என் இரண்டு கண்கள் அவை இரண்டும் ஒலி குன்றாமல் இறுதி வரை காத்து பயன் பெறச் செய்யும் நோக்கை தனது வாழ்நாளில் குறிக்கோளாக கொண்டு முதல் முதலில் வண்ணார் பண்ணை சைவ பிரகாச வித்தியா என்ற பாடசாலையை 1864 இல் ஆரம்பித்தார்.


இவரைத் தொடர்ந்து 1864 செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த அனகாரிக தர்மபாலா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை திருநாட்டில்  கிருஸ்தவ மதம் மேலோங்கி இருந்ததை கண்டு புத்த மத நெறிகளை பாதுகாக்க  பெளத்த தேசியத்தை நிலை நாட்ட  கொழும்பு ஆனந்தா கல்லூரியை உருவாக்கினார்.


இந்த சூழலில்  தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் சங்கங்கள் மூலம் நடக்கும் தமிழ் பாடசாலைகளிலும், சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் சிங்கள பாடசாலைகளும் கல்வி கற்கும் நிலை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது.


 இந்த நிலையில் தமிழ் சங்கங்களில்  கட்டுண்டு கிடந்த முஸ்லிம்களின் கல்வியை மீட்டெடுக்க,

* ஓராபி பாஷா, 

* மு. கா. அறிஞர் சித்தி லெப்பை,  

* வாப்பிச்சி மரைக்கார், 

*  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்.

போன்றோர்கள் பல முயற்சிகளை செய்து கொண்டு இருக்கும் போது.


எகிப்து அல் அஸர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,  அந்த பல்கலைக்கழகத்தின் எம் ஏ பட்டதாரியுமான ( சேக் அப்துல்லா பின் பாதிம்  அல் கொமனி )அவர்கள் மார்க்க நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைக்க கேரளா  வந்தார்கள். பிறகு, இலங்கை வந்து இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு  எடுத்துரைத்து கொண்டு இருந்தார்கள்.


அப்போது, இவர்களின் மாணவராக இருந்த சேர் ராசிக் பரீட் அவர்களின் பாட்டனார்  பாபுஜி மரைக்கார் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் மற்றும்  தனித்துவம் என்பன பாதுகாக்க பட வேண்டும் என அறிவுரைகளையும், ஆலோசனைகளை எடுத்துரைக்க,


எல்லோரும் இணக்க பாட்டுக்கு வந்து  பாடசாலை அமைக்க இடம் தேடிய போது பாபுஜி மரைக்கார் மற்றும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்றவர்கள் 1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருதானை ஜும்மா பள்ளிவாசல் அமைத்த  இடத்திற்கு அருகில் அமைக்கலாம் என ஆலோசனை முன் வைத்தார்கள். இன்றைய கொழும்பு கோட்டை எப்படி வியாபாரிகள் சந்தையாக இருக்கிறதோ! இதேபோல் தான் அன்று அரேபியர்களின் வியாபார சந்தையாக பிரசித்தி பெற்று விளங்கியது மருதானை.


இதன் பிரகாரம் 22 ஆகஸ்ட் மாதம் 1892 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்டது. 


8000 மாணவர்கள் கற்கும் இட வசதிகளை கொண்ட சாஹீராவில் இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்பிப்பதால் சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.


முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் பெளசி அவர்கள். மற்றும் பாக்கீர் மரைக்கார் அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் கார்த்திக் கேசு சிவத்தம்பி மற்றும் தமிழ் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர்கள்  இந்த கல்லூரியின் பழைய மாணவர்களாவார்கள்.


 மேலும், இந்த கல்லூரியானது, 

* இஸ்லாமிய சங்கம்.

* அறிவியல் சங்கம்.

* வர்த்தக சங்கம்.

* ஆங்கில இலக்கிய சங்கம்.

* சிங்கள இலக்கியச் சங்கம்.

* தமிழ் இலக்கிய சங்கம்.

* ஐக்கியநாடுகள் இளைஞர் சங்கம்.

* தகவல் தொழில்நுட்ப சங்கம்.

       போன்ற சங்கங்களின் வழி காட்டலின்  பிரகாரம் கொழும்பு மா நகரத்தில் வெற்றி நடை போடுகிறது.

FB Nadheem

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!





🔴நியூஸிலாந்தில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? 

New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு இந்த மணியின் வயது?-15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். 

நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த  வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார். 

166mm உயரமும், 155mm   சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. 

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-
‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ 

இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. 

வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.

B.H.Abdul Hameed


 

Thursday 9 November 2023

Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது


 Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.


ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான  தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.


உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? 


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன்.  உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.


உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்

சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?


நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு

பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.


மேலும் அரசுக் கருவூலப்  (பைத்துல் மால்)  பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும்  குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...


அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!


📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா


📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..

Tuesday 7 November 2023

மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

 


மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு.


அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த மின் பொறியாளர்கள் வருகை தந்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள் எனது மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னர் மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலுக்கு வழங்குங்கள் என்றார் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள்.


இதன் பிரகாரம் கி, பி 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சுல்தான் அவர்களின் உத்தரவின் பேரில் மஸ்ஜிதில் நபவி பள்ளி வாசலுக்கு மின் குமிழிகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த பள்ளிவாசலுக்கு முதல் முதலில் ஜெனரேட்டர்களை தனது சொந்த செலவில் வழங்கினார்கள் இந்தியா ஹைதராபாத்தை சேர்ந்த நிஜாம்கள்.

Monday 6 November 2023

முற்றாக அழித்த பலஸ்தீன போராளிகள்

 


98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்


காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா). 


உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது. 


அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019 இல் இஸ்ரேல் மேம்படுத்த ஆரம்பித்தது.  2021 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனது இராணுவ சேவையில் அதனை ஈடுபடுத்தி வருகிறது. 


2023 ஒக்டோபர் கடைசியில் PANTHER படைகாவி கவச வாகனம் காஸாவினுள் தரைவழியாக நுழைய முற்பட்ட வேளை போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கொர்னெட் வகை ரொக்கட்டைப் பயன்படுத்தி அந்த கவசவாகனத்தை போராளிகள் சுக்கு நூறாக்கினர். இதனால் அதனுள்ளிருந்த 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 


ஆயுத சந்தையில் இஸ்ரேலுக்கு நற்பெயரைத் தேடித் தந்த பல்வேறு ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் போராளிகளினால் அழிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் மேலும் பின்னடையும் என கருதப்படுகிறது.


சுற்றி வர அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்ட இந்த கவசவாகனத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள். 


- தேவையான நேரத்தில் எதிரிகளை குறிபார்த்து சுடுவதற்கு வசதியாக பல துளைகளைக் கொண்டிருக்கிறது. 


- 20 படைவீரர்களை காவிச் செல்லக்கூடியது.


- 900 குதிரைவலு சக்தி கொண்டது


- மணித்தியாலத்திற்கு 70 வேகத்தில் பயணிக்கக்கூடியது


- ஒரு படைகாவியின் நிறை பத்தாயிரம் கிலோவாகும் (பத்து டொன்)


- 60 மில்லிமீற்றர் அளவு கொண்ட பீரங்கி தளத்தை கொண்டுள்ளது.


- குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போதுமானளவு வைத்திருப்பதற்கான சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது