மஃஆனிமுல்_முஸ்தபா_அறபுக்_கல்லூரியின்_வருடாந்த_கந்தூரி_விழா
ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கல்லூரியில் அஸ்ஸெய்யிது குத்புத்தீன் முத்து கோயா தங்கள் (அந்தரிய்யி), அஸ்ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (பூங்கோயாத் தங்கள்), மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம், ஆகியோரின் ஞாபகார்த்த கந்தூரி விழா 2022-12-18ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையில் (ஸூபி மன்ஸில்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் பீ.ஏ முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம், மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எஸ் அபூபக்கர் ஹம்மாது ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் #MS_நழிம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா, மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையின் ஆசிரியர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இக்கந்தூரி வைபவத்தில் கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம், மௌலிது வைபவம், பேருரை, துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதோடு, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.