بداية الهداية
இமாம் ஙஸ்ஸாலி - றஹ்மதுள்ளாஹி அலைஹி
__________________________
தமிழில் :
ஷரிக்கி, பரேலவி
--------------------------------------- (5) வுழுவின் ஒழுக்கம்
- - - - - - - - -
வுழுச் செய்ய முன் மிஸ்வாக் செய்து பல் துலக்கவும்.
இவ்வாறு செய்வதால் வாய் பூரணமாக சுத்தமாகும்,
வாய் சுத்தமாக இருப்பது
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயலாகும். பல் துலக்குவதால் ஷைத்தான் ஓடி
விடுவான் ,
"பல் துலக்கித் தொழுவது
பல் துலக்காமல் தொழுவதை விட எழுபது மடங்கு மேலாகும்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் கூறினார்கள்.
"எனது உம்மத்திற்குக் கஷ்டம் இல்லாதிருப்பின் ஒவ்வொரு தொழுகையிலும்
பல் துலக்குவதைக் கடமையாக்கியிருப்பேன்.
மேலும் கூறினார்கள்
பல் துலக்குவதை எனது
றப்பு எனக்குக் கட்டளையிட்டான் அது பர்ளாகி விடுமோ என்று அஞ்சினேன்,
வுழுச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கி வேண்டும், நீர் தெறிக்காமல்
இருப்பதற்காக உயர்ந்த இடத்தில் உட்கார வேண்டும்,
கையைக் கழுவமுன் பின்வரும் துஆவை ஓத வேண்டும்,
بِسْمِ اللّٰهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُوْنِ
அல்.லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன், அவன் அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன்,
இரட்சகர! ஷைத்தானின்
ஊசாட்டங்களை விட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். அவனின் தூண்டுதலால் தீய காரியங்கள் என்னில் ஏற்படுவதிலிருத்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்,
நீரில் கையைப் போட முன்
மணிக்கட்டுக்கள் வரை மூன்று முறை கழுக வேண்டும் அப்போது இதை ஒத வேண்டும்,
اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ الْيُمْنَ وَالْبَرَكَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الشُؤْمِ وَالْهَلْكَةِ
நாயனே ! உன்னிடத்தில் வணங்குவதற்குரிய சக்தியையும் அதிகமான நன்மையையும் கேட்கிறேன், இன்னும் தீமையிலிருந்தும்
அழிவிலிருந்தும் பாதுகாப்பைக் கேட்கின்றேன்
(சிறு) தொடக்கை நீக்குவதாக அல்லது தொழுகையை ஆகுமாக்கத் தேடுவதாக நிய்யத் வைக்க வேண்டும் முகம் கழுவ முன்
நிய்யத் வைப்பது கூடாது,
அவ்வாறு செய்தால் வுழு
நிறைவேறாது.
சொர்ப்ப நீரை கையால் அள்ளி எடுத்து மூன்று முறை
வாய் கொப்பளிக்கவும், வாய் கொப்பளிக்கும் போது
தொண்டைக் குழி வரை நீரைச் செலுத்தவும். நோன்பாளி இவ்வாறு செய்யக்
கூடாது, நோன்பாளி இவ்வாறு செய்வதால் நீர் தொண்டைக்குள் சென்று நோன்பு முறிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது,
வாய் கொப்பளிக்கும் போது பின்வரும் துஆவை ஓதவும்,
اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلَي تِلَاوَةِ كِتَابِكَ وَكَثْرَةِ الذِّكْرِ لَكَ وَثَبِّتْنِيْ بِالْقَوْلِ الثَّابِتِ فِيْ الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
யா அல்லாஹ் திருக்குர்ஆன் ஓதவும் உன்னை அதிகமாக திக்று செய்வதற்குமுரிய சக்தியை தந்தருள்வாயாக ! உலகத்திலும் மறுமையிலும் கலிமாவின் படி
இருக்கச் செய்வாயாக!
பின்னர் நாசிக்கு மூன்று முறை நீர் செலுத்த வேண்டும், அப்போது பின்வரும்
துஆவை ஓதவும்,
اَللّٰهُمَّ أَرِحْنِيْ رَائِحَةَ الْجَنَّةِ وَأَنْتَ عَنِّيْ رَاضٍ
யா அல்லாஹ் ! சொர்க்கத்தின் சுகந்தத்தை நுகரச்
செய்வாயாக ! மேலும் என்னை பொருந்திக் கொள்வாயாக!
மூக்கைச் சீறும்போது ஓதும் துஆ.
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ رَوَائِحِ النَّارِ وَسُوْءِ الدَّارِ
யா அல்லாஹ்! நரகத்தையும் நரகத்தின் நெருப்புக் காற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்
பின்னர் முகத்தைக் கழுவ
வேண்டும். இதனை முன்
நெற்றியிலிருந்து தொண்டைக் குழி வரை நீளத்திலும் காதுச் சோணையிலிருந்து மறு காதுச் சோணை வரை அகலத்திலும் கழுவ வேண்டும். பெண்கள் முன்நெற்றியின் ஆரம்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,
முடி அதிகமுள்ள இடங்களான புருவங்கள் மீசை தாடி கன்னம் தந்தம் உள்ளிட்ட இடங்களில் நீரைச் செலுத்த வேண்டும். அடர்த்தியான தாடியினுள் நீரைச் செலுத்த வேண்டியதில்லை.
இலோசான தாடியினுள் நீரைச் செலுத்த வேண்டும்,
முகம் கழுவும் போது ஓதும்
துஆ
اللّٰهُمَّ بَيِّضْ وَجْهِيْ بِنُوْرِكَ يَوْمَ تَبْيَضُّ وُجُوْهُ أَوْلِيَائِكَ وَلاَ تُسَوِّدْ وَجْهِيْ بِظُلْمَاتِكَ يَوْمَ تَسْوَدُّ وُجُوْهُ أَعْدَائِكَ
யா அல்லாஹ் ! உனது நேசர்களின் முகங்கள் பிரகாசிக்கும் நாளில் உனது ஒளியின் மூலம் எனது முகத்தைப் பிரகாசமாக்கி வைப்பாயாக ! உனது விரோதிகளின் முகங்கள் கறுக்கும்
நாளில் (பாவம் என்ற) உனது இருளினால் எனது முகத்தை கறுப்பாக்கி விடாதே
பின்னர் கையைக் கழுவவும் முதலில் வலது கையை
முழங்கையிலிருந்து தோள்புயத்தின் அரைவாசி வரைக் கழுவ வேண்டும், அப்போது பின்வரும் துஆ வை
ஓதவும்,
اللّٰهُمَّ أَعْطِنِيْ كِتَابِيْ بِيَمِيْنِيْ وَحَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا
யா அல்லாஹ் ! எனது அமல்களின் பட்டோலையை எனது வலது கரத்தில் தந்தருள்வாயாக! எனது விசாரணையை இலேசாக்கு வாயாக !
இடது கையைக் கழுவும் போது ஓதும் துஆ
اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ تُعْطِيَنِيْ كِتَابِيْ بِشِمَالِيْ أَوْمِنْ وَرَاءِ ظَهْرِيْ
யா அல்லாஹ். ! எனது அமல்களின் பட்டோலையை இடக்கரத்தில் வழங்குவதிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (அல்லது
முதுகுக்குப் பின் வழங்கப்
படுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று
கூறவும்.)
பின்னர் தலையை மஸஹ்
செய்யவும். கையை நீரில்
நனைத்த பின், வலது கையின் விரல்களோடு சேர்த்து தலையின் முற்பகுதியிலிருந்து பிடரி வரை வருடி
பின்னர் மீண்டும் தலையின் முற்பகுதி வரை மீட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும்.
ஏனைய உறுப்புக்களையும்
மூன்று முறை செய்ய வேண்டும்.
தலையை தடவும் போது ஓதும் துஆ
اللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ وَأَظِلَّنِيْ تَحْتَ ظِلِّ عَرْشِكَ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّكَ اللّٰهُمَّ حَرِّمْ شَعْرِيْ وَبَشَرِيْ عَلَي النَّارِ
யா அல்லாஹ் ! உனது அருளைக் கொண்டு எனக்கு இரட்சிப்பு வழங்குவதயாக !
உனது அருள்களை என்னில் சொரிவாயாக ! உனது
நிழலைத் தவிர்த்து நிழல்
கிடைக்காத மறுமை நாளில் உனது அர்ஷூக்குக் கீழ்
நிழல் தருவாயாக !
யா அல்லாஹ் !
எனது முடியையும் மேனியையும் நரகத்தின் மீது ஹறாமாக்கி வைப்பாயாக!
இதன் பின் புதிதாக நீரை
எடுத்து காதின் உள் வெளிப் பகுதிகளை கலிமா
விரலினால் தடவி மஸஹ்
செய்யவும், அப்போது இந்த
துஆவை ஓதவும்.
اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ أَحْسَنَهُ اللّٰهُمَّ أَسْمِعْنِيْ مُنَادِيَ الْجَنَّةِ مَعَ الْأَبْرَارِ
யா அல்லாஹ் ! வார்த்தையைக் கேட்டு அதில் அழகானதைப் பின்பற்றி வழிபடும் நல்ல கூட்டத்தில் என்னைச் சேர்த்து வைப்பாயாக !
யா அல்லாஹ் ! மறுமையில் சொர்க்கத்தின் பாங்கை
(அதானை)க் கேட்டு உன்னை வழிபட்டு நடக்கும் கூட்டத் தாருடன் சேர்த்து எனக்கும் அதனைக் கேட்கும்
பாக்கியத்தைத் தந்தருவாயாக !
( சொக்கத்தில் முதலில் பாங்கு சொல்பவர் ஹளறத்
செய்தினா பிலால் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களாகும்)
தலையை மஸஹ் செய்த
பின் பிடரியை மஸஹ் செய்ய வேண்டும், பின்னர் இந்தத் துஆவை ஓதவும்.
اللّٰهُمَّ فُكَّ رَقَبَتِيْ مِنَ النَّارِ وَأَعُوْذُ بِكَ مِنَ السَّلاَسِلِ وَالأَغْلاَلِ
யா அல்லாஹ் என்னை நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக! மேலும் நரகத்தின்
விலங்குகளிலிருந்தும் அதன் சங்கிலிகளிலிருந்தும்
உன்னிடம் காவல் தேடுகின்றேன்,
பின்னர் இரு கால்களையும் கரண்டை உட்படக் கழுவவும், முதலில் வலதையும்
பின்னர் இடதையும் கழுவவும்,
கழுவும் போது விரல்களைக் குடைந்து தேய்த்துக் கழுவவும். வலது காலின் சின்னி விரல் வரை உட்பகுதிகளைக் கழுவவும்,
வலது காலைக் கழுவும் போது ஓதும் துஆ
اللّٰهُمَّ ثَبِّتْ قَدَمِيْ عَلَي الصِّرَاطِ الْمُسْتَقِيْمِ مَعْ أَقْدَامِ عِبَادِكَ الصَّالِحِيْنَ
யா அல்லாஹ் ! ஸாலிஹான உனது நல்லடியார்களின் பாதத்தோடு எனது பாதத்தையும் ஸிறாத்தல் முஸ்தகீம் பாலத்தில் நிலைக்கச் செய்வாயாக !
இடது காலைக்கழுவும் போது ஓதும் துஆ
اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ تَزِلَّ قَدَمِيْ عَلَي الصِّرَاطِ فِيْ النَّارِ يَوْمَ تَزِلُّ أَقْدَامُ الْمُنَافِقِيْنَ وَالْمُشْرِكِيْنَ
யா அல்லாஹ். ! (மறுமையில்) முனாபிக்குகள், முஷ்
ரிக்குகளின் பாதங்கள், "சிறாத் " என்ற பாலத்தில்
இடறுவதைப் போன்று எனது பாதம் இடறுவதை விட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
கால்களைக் கழுவும் போது
முழங்காலின் அரைவாசி வரைக் கழுவது பேணுதலாகும், உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கழுவ வேண்டும்,
வுழுச் செய்து முடித்த பின்
வானத்தின் பக்கம் பார்
வையை உயர்த்தி பின் வரும் துஆவை ஓதவும்,
أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ عَمِلْتُ سُوْءً وَظَلَمْتُ نَفْسِيْ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ فَاغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ الْمُتَطَهِّرِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ وَاجْعَلْنِيْ صَبُوْرًا شَكُوْرًا وَاجْعَلْنِيْ أذْكُرُكَ ذِكْرًا كَثِيْرًا وَأُسَبِّحُكَ بُكْرَةً وَأَصِيْلاً
அல்லாஹ்வைத் தவிர்த்து
வணக்கத்திற்குரியவன்
வேறு எவரும் இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை.
முஹம்மது ஸல்லல்லாஹு
அலைஹி வசல்லம் அவனின் நல்லடியாரும், திருத்தூதருமாகும் என்று மேலும்
சாட்சி பகர்கின்றேன். உனக்கே பரிசுத்தம் யாவும் உண்டு.
யா அல்லாஹ் ! உனது புகழின் மீது சத்தியமாக உன்னையன்றி வேறு நாயன்
இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். நான் பாவம் செய்துள்ளேன் எனது நப்ஸின்
மீது அநியாயம் புரிந்துள்ளேன்.
உன்னிடம் பாவமன்னிப்புத்
தேடுகின்றேன், மீண்டும் பாவம் செய்ய மாட்டேன் என உன்னிடம் உறுதி கூறி
தவ்பாச் செய்கின்றேன், எனது குற்றத்தை மன்னித்து எனது குறைகளை மன்னிப்பாயாக !
எனது தவ்பாவை அங்கீகரிப்பாயாக மெய்யாகவே நீ
தவ்பாவை அங்கீகரித்து இரக்கம் காட்டுபவனாக இருக்கின்றாய்.
யா அல்லாஹ் ! பாவம் செய்யாதவர்களில் என்னையும் சேர்ப்பாயாக என்னை பொறுமை செய்து நன்றி பாராட்டுபவர்களில் சேர்ப்பாயாக !
உன்னை அதிகமாக நினைவு கூர்பவனாக ஆக்குவாயாக ! காலையும், மாலையும் உன்னை அதிகம் தஸ்பீஹ்செய்யக் கூடியவனாக ஆக்குவாயாக
வுழுச் செய்யும்போது மேற்படி துஆக்களை ஓதுவதன்
மூலம் உறுப்புக்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வுழுவின் நற்கூலிகள்
முழுமையாக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. வுழு
அங்கிகரிக்கப்பட்டு அர்ஷு
க்குக் கீழ் அதற்கு இடம் வழங்கப்படுகின்றது.
றஸுலுள்ளாஹி ஸல்லல்
லாஹூ அலைஹி வசல்லம் கூறினார்கள்,
" யாராவது ஒருவர் வுழுச்
செய்யும்போது மேற்படி துஆக்களை ஓதினால், அவனது முழு உடலின் சிறு பா
வங்கள் மன்னிக்கப்படுகி
ன்றன.
துஆக்கள் ஓதாவிட்டால் நீர்
பட்ட உறுப்புக்களின் பாவங்கள் மட்டும் மன்னிக்கப்படும் வுழுவோடு இருக்கும்வரை அல்லாஹ்வைப் புனித
ப்படுத்தித் தஸ்பீஹ் செய்த
நற்கூலி கியாம நாள் வரை
கிடைத்துக் கொண்டே இரு
க்கும்.
தொடரும் ...