السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 29 December 2023

விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்


இஸ்லாமிய மார்க்கம் எல்லா காலங்களிலும் மனித முன்னேற்றத்திற்கு ஆதரவாகவே உள்ளது. தீவிரமாக மார்க்கத்தை பின்பற்றுபவர் விஞ்ஞானத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போதும் கூறியது கிடையாது. ஆதலால் மெஞ்ஞானத்தை விரும்புபவர்கள் விஞ்ஞானத்தை எதிர்ப்பவர்களும் கிடையாது. உண்மையான மெஞ்ஞானத்தை அறிந்த எவரும் விஞ்ஞானத்தை கண்டு மகிழ்வார்கள். மெஞ்ஞானத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் விஞ்ஞானமே திறவுகோல்.



கணினி உலக இயக்கத்தின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். விஞ்ஞானத்தின் உச்சம் என்றும் சொல்லலாம். சாதாரண பாமரனும் கூட இதை வைத்து முன்னேறினான். இதை வைத்து மிகப் பெரிய ஆன்மீகத்தை சொல்லிவிட முடியும். ஆன்மீகத்தின் அடிப்படைளை விளக்க இதைவிட ஒரு உதாரணம் இருக்க முடியும்£ என்று தெரியவில்லை. கணினியை பொறுத்தவரை இரண்டு அம்சங்கள் 1. மென்பொருள் (ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ) 2. வன்பொருள் (பிணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ) இந்த இரண்டும் சரியாக இயங்கும் பட்சத்தில் கணினியை பயன்படுத்த முடியும். இவையிரண்டில் ஒன்று கோளாறானாலும் கணினியை பயன்படுத்த முடியாது.




ஆன்மீகத்தை உணர்த்த இதை அப்படியே மனிதனுக்கு ஒப்பிடலாம். கணினியின் வன்பொருளை (பிணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ) நாம் எப்படி பாதுகாப்போமோ அதுபோன்று நம் உடல் உறுப்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது தூசி தட்டி துடைத்து பாதுகாப்பது போன்று மருத்துவரிடம் சென்று நாம் நம் உடலுறுப்புகளை பாதுகாக்க வேண்டும். கணினியின் மென்பொருளை (ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ) வைரஸ் தாக்காமல் இருக்க நாம் எப்படி ஆன்டி லைரஸ் போட்டு பாதுகாக்கிறோமோ அதுபோன்று நம் உள்ளம் பழுதடையாமல் பொறாமை, பொய், முகஸ்துதி போன்ற வைரஸ்கள் தாக்காமல் இருக்க தக்வா என்கிற ஆன்டி வைரஸ் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும்.




இதுபோன்றே விஞ்ஞானத்தின் ஒவ்வொரு வளர்ச்சியை சற்று கவனித்தால் அதிலுள்ள மெஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முடியும். 


மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.

திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .கண்களால் காண்பது விஞ்ஞானமெனில்கண்களால் காணாமல் நம்புவது மெய்ஞானம்.]
இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால்அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்லமனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.
ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்திஉலகெங்குமுள்ள மரம்செடிகொடிகளை எழுதுகோலக பயன்படுத்திஇந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியேகடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.
திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;

''(
நபியே!) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!'' (அல்குர்ஆன் 18:109)

''
மேலும்நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும்கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும்அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)

குர்ஆனும் பூச்சியியலும்

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (குர்ஆன் 50:37)
பூச்சியியல்  என்றால் என்ன?
அறிவியல் பற்றி படித்த நாம் பூச்சியியல் பற்றி படித்திருக்கிறோமா? அல்லது அறிந்துத்தான் வைத்துள்ளோமா? நம்மில் பலர் பூச்சியியல் என்பதை இன்றுத்தான் கேட்டிருப்போம்! ஆம் பூச்சியியல் என்ற அறிவியல் பூச்சிகளைப் பற்றி ஆராயும் படிப்பறிவியலாகும் இதற்கு ஆங்கிலத்தில் என்டாமாலஜி (Entomology) என்று கூறுவர்.




16ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த பூச்சியியல் இதுவரை உலகில் சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளதாக கூறுகிறது. ஆனால் அருள்மறை குர்ஆன்இந்த பூச்சியியலைப் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன் அதை தெளிவாக விவரித்து உள்ளது வியப்பளிக்கிறது. அப்படி அருள்மறை குர்ஆன் என்னத்தான் கூறுகிறது இது உண்மையா என்பதை நாம் இந்த ஈ என்ற பூச்சியைக் கொண்டு அறியலாம். இதோ அழகிய அறிவுரையுடன் கூடிய ஈ என்ற பூச்சியை மையமாக வைத்து ஒரு சிந்தனை!
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாதுஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)
மேற்கண்ட வசனத்தில் அப்படி என்னத்தான் விஞ்ஞானம் கொட்டிக் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனமாகும் காரணம் இறைவன் அடிக்கடி குர்ஆனை சிந்தியுங்கள் என்று அறிவிப்பு செய்கிறான் எனவே சிந்திக்காத மனிதன் எவ்வாறு அறிவாளியாக இயலும் இதோ சிந்திக்கக்கூடிய வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
  • அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர்ஈயைக் கூட படைக்க முடியாது
  • ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது
இந்த ஒரு வசனத்தில் 2 வகையான கேள்விகள் அடங்கியுள்ளன. முதல் கேள்வியில் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது அப்படியானால் நம் பார்வையில் காணப்படும் சாதாரண அந்த ஈ எப்படிப்பட்ட படைப்பு சிந்திக்க வேண்டாமா? அந்த ஈ என்ற படைப்பின் கட்டமைப்பை நாம் சிந்திக்க வேண்டாமா? வாருங்கள் ஈயின் படைப்பை பற்றி ஆராய்ச்சி செய்வோம்!

கேள்வி – 1

அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது (குர்ஆன் 22:73)

ஈக்கள் என்றால் என்ன?
ஈக்கள் என்பது பூச்சியியல் துறையில் தலைசிறந்த பூச்சி இனமாகும். பட்டி தொட்டி எங்கும் பரவி பாரீஸ் போன்ற தூய்மையான நகரம் வரை நுழைந்து மக்களை துன்புறுத்தும் ஓர் பூச்சியினம்தான் ஈ. மனிதனின் உடலில் பலவகை நோய்களை உருவாக்கி மனிதனை மரணிக்கச் செய்யும் திறமையும் இந்த ஈக்களுக்கு உண்டு எனவேதான் ஈக்கள் என்றாலே சிலருக்கு ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படுகிறது.
e-1

சராசரி வயதை அடையும் ஈக்கள் சுமார் 4 முதல் 8mm காணப்படுகிறது. இதில் இனப்பெருக்கத்தை அடையும் ஈக்கள் 6.35 mm நீளமும் .012 கிராம் எடையும் இருக்கின்றன. இவைகளின் இறக்கைகளின் நீளம் 13 முதல் 15 mm காணப்படுகிறது. அதாவது உடலைவிட இறக்கைகளின் நீளம் இருமடங்கு அதிகமாக இருப்பதால் அவைகளால் தன் உடலை மிகவும் இலகுவாக கொண்டு பறக்க இயலுகிறது. (சுபுஹானல்லாஹ்)
ஈக்களின் உடல் அமைப்பு
ஈக்களின் உடல் அமைப்பு 3 பாகங்களாக அமைந்துள்ளது.
  • தலை
  • மார்பு பகுதி
  • வயிற்றுப் பகுதி
normal fly anatamy


மார்ப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை இணைத்தவாறு இறக்கைகளும் ஆறு கால்களும் அமைந்துள்ளன. மேலும் இதன் இறக்கைகள் கண்ணாடி இழைகளைப் போன்று காணப்படுவதால் ஒளி புகும் தன்மையை கொண்டுள்ளது ஆச்சரியப்படவைக்கிறது! (அல்லாஹூ அக்பர்)
ஈக்களின் பாலினம்
ஈக்களில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் காணப்படுகிறது இதை குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது! இதோ குர்ஆன் வசனம்
நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.(குர்ஆன் 51:49)

h6

h6

இந்த ஈக்களின் பாலினத்தில் ஆண் ஈக்கள் பெண் ஈக்கள் என்ற இரண்டு ஜோடிகள் இருக்கின்றன. இதிலும் ஒரு வேடிக்கை என்னவெனில் ஆண் ஈக்களை விட பெண் ஈக்கள் சற்று தடிமனாக குண்டாக காணப்படுகிறது. மேலும் பெண் ஈக்களை விட நீள வாக்கில் ஆண் ஈக்கள் குட்டையாக காணப்படுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் ஈக்களின் கண்களைப் பொருத்தவரை பெண் ஈக்களின் கண்கள் ஆண் ஈக்களின் கண்களைவிட சற்று பருமனாக காணப்படுகிறது இங்கும் மனிதர்களைப் போன்றே பெண் ஈக்கள் தான் ஆண்களைவிட சற்று கூடுதல் அங்க அமைப்புகளை பெற்றுள்ளது.
ஈக்களின் கண்கள்!
ஈக்களுக்கு இரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களில் பார்வையை உணரக்கூடிய ஆயிரம் பல்வேறு உறுப்புக்களின் கூட்டமைப்பாக திகழ்கிறது இதனால் இந்த ஈக்கள் ஒரு இடத்திலிருந்தவாறே பல்வேறு கோணங்களில் பார்க்கக்கூடிய திறன் பெற்றுள்ளன அதுமட்டுமின்றி மனிதனின் பார்வைக்கு புலப்படாத இராசயண வர்ணங்களின் கலவைகளை உணரக்கூடியதாக ஈக்களின் பார்வை உள்ளது.
                   housefly eye

ஈக்களின் கண்கள் ஒரு சிறு அசைவு கூட மிக எளிதாக உணரக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஈக்கள் எளிதில் தங்களது இலக்கை மிக இலவகமாக அடைகின்றன. ஈக்களின் இந்த அபார பார்வைத்திறனால் தங்களது எதிரிகளின் அனைத்து அசைவுகளையும் துள்ளியமாக உணர முடிகிறது. எனவேதான் ஒரு ஈ-யை மனிதர்களாகிய நாம் அடிக்க கையை ஓங்கினாலும் அடிக்க முடிவதில்லை இதைத்தான் அல்லாஹ் சுபுஹானவதாலா கீழ்க்கண்டவாது குர்ஆனில் அழகாக கூறுகிறான்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (குர்ஆன் 22:73)
h3

கண்களை பாதுகாப்பதில் இந்த ஈக்களுக்கு நிகராக யாருமில்லை எனலாம் ஏனெனில் இந்த ஈக்கள் தங்கள் பார்வையை துள்ளியமாக வைத்திருக்க எந்தவித அழுக்குகளையும் தன் கண்களில் படாதவண்ணம் பார்த்துக் கொள்கின்றன ஒரு வேளை இந்த ஈக்களின் கண்களில் தூசு போன்ற ஏதாவது தொற்றிக் கொண்டால் அதை நீக்குவதற்கென்றே உள்ள முன்னங்கால்களைக் கொண்டு அதன் தூசு படிந்த கண்களை சுத்தம் செய்துக் கொள்கின்றன.
ஈக்களின் கால்கள் அமைப்பு
ஈக்களுக்கு ஆறு கால்கள் உள்ளன.
  • முன்னங்கால்கள் (இரண்டு)
  • நடுப்பகுதி கால்கள் (இரண்டு)
  • பின்னங்கால்கள் (இரண்டு)
h-5

கால்களின் விஷேச குணங்களைப் பார்க்கும் போது முன்னங்கால்கள் இரண்டும் தன் தலைப்பகுதியில் உள்ள கண்களில் அவ்வப்போது விழும் தூசித்துகள்களை அப்புறப்படுத்துவதற்கு உதவுகிறது.
கால்களில் சுவை நரம்புகள்
ஈக்களின் கால்களில் ஒருவகை செல்கள் அமைப்பு உள்ளது அவை சுவையை உணரக்கூடிய நரம்புகளுடன் தொடர்புடையது.

h7

ஈக்களின் பின்னங்கால்களில் மயிர் இழைகளில் இந்த செல் அமைப்புகள் காணப்படுவதால் அதில் சுவையை உணரும் சுரப்பித் தன்மை உள்ளது. இதனால்தான் இந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது அமர்ந்து மெதுவாக நடக்க முற்படுகிறது இதற்கான காரணம் இவைகள் அந்த உணவின் சுவையை அறிய முன் பின்னாக அதன் மீது நடந்து செல்வதால் கால்களில் உள்ள சுவையை உணரும் நரம்புகள் அந்த உணவின் அதிக சுவைப்புத் தன்மையை அந்த ஈக்கு உணர்த்துகிறது. (சுபுஹானல்லாஹ்)
ஈக்களின் கால்களில் உள்ள திரவம்!
ஈக்களின் கால்களில் சுவையை உணரும் நரம்புகள் மட்டும் அல்லாமல் ஒருவகை பசை உள்ள திரவமும் சுரக்கிறது இது சுவரில் தலைகீழாக நிற்பதற்கு பயன்படுகிறது எனவேதான் ஒரு மேசையின் மீது தலைகீழாக தொங்கியவாறு நடந்து செல்கின்றன எனவே ஈ கீழே விழுவதில்லை!
ஈக்களின் இறக்கைகள்
ஈக்களின் மார்புப் பகுதியிலிருந்து அதன் இறக்கைகள் முளைத்து விரிகின்றன. பின்பக்கமாக விரிந்து மடங்கக்கூடிய அமைப்பாக இறக்கைகள் காணப்படுகின்றன.
ஈக்களின் இரண்டு இறக்கைகளுக்கும் இடையில் சிறிய இறக்கை போன்ற தோல்பட்டை அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது இறக்கைகளை கட்டுப்படுத்தி வேகமாக பறந்து செல்ல உதவுகிறது.





Tuesday 19 December 2023

வுழுவின் ஒழுக்கம்

 



நேர் வழியின் முதற்படி

بداية الهداية 
இமாம்  ஙஸ்ஸாலி - றஹ்மதுள்ளாஹி அலைஹி
__________________________
தமிழில் :
             ஷரிக்கி, பரேலவி
--------------------------------------- (5)                      வுழுவின் ஒழுக்கம்
          - - - - - - - - -
வுழுச் செய்ய முன் மிஸ்வாக் செய்து பல் துலக்கவும்.
இவ்வாறு செய்வதால் வாய் பூரணமாக சுத்தமாகும்,
வாய் சுத்தமாக இருப்பது
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயலாகும். பல் துலக்குவதால் ஷைத்தான் ஓடி
விடுவான் ,

"பல் துலக்கித் தொழுவது
பல் துலக்காமல் தொழுவதை விட எழுபது மடங்கு மேலாகும்.

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் கூறினார்கள்.

"எனது உம்மத்திற்குக் கஷ்டம் இல்லாதிருப்பின் ஒவ்வொரு தொழுகையிலும்
பல் துலக்குவதைக் கடமையாக்கியிருப்பேன். 
மேலும் கூறினார்கள்
பல் துலக்குவதை எனது
றப்பு எனக்குக் கட்டளையிட்டான் அது பர்ளாகி விடுமோ என்று அஞ்சினேன்,

வுழுச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கி வேண்டும், நீர் தெறிக்காமல்
இருப்பதற்காக உயர்ந்த இடத்தில் உட்கார வேண்டும்,
கையைக் கழுவமுன் பின்வரும் துஆவை ஓத வேண்டும்,

بِسْمِ اللّٰهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ  رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُوْنِ

அல்.லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன், அவன் அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன்,
இரட்சகர! ஷைத்தானின்
ஊசாட்டங்களை விட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். அவனின் தூண்டுதலால் தீய காரியங்கள் என்னில் ஏற்படுவதிலிருத்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்,

நீரில் கையைப் போட முன்
மணிக்கட்டுக்கள் வரை மூன்று முறை கழுக வேண்டும் அப்போது இதை ஒத வேண்டும்,

اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ الْيُمْنَ وَالْبَرَكَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الشُؤْمِ وَالْهَلْكَةِ

நாயனே !  உன்னிடத்தில் வணங்குவதற்குரிய சக்தியையும் அதிகமான நன்மையையும் கேட்கிறேன், இன்னும் தீமையிலிருந்தும் 
அழிவிலிருந்தும் பாதுகாப்பைக் கேட்கின்றேன்

(சிறு) தொடக்கை நீக்குவதாக  அல்லது தொழுகையை ஆகுமாக்கத் தேடுவதாக நிய்யத் வைக்க வேண்டும் முகம் கழுவ முன்
நிய்யத் வைப்பது கூடாது,
அவ்வாறு செய்தால் வுழு
நிறைவேறாது.

சொர்ப்ப நீரை கையால் அள்ளி எடுத்து மூன்று முறை
வாய் கொப்பளிக்கவும், வாய் கொப்பளிக்கும் போது
தொண்டைக் குழி வரை நீரைச் செலுத்தவும். நோன்பாளி இவ்வாறு செய்யக்
கூடாது, நோன்பாளி இவ்வாறு செய்வதால் நீர் தொண்டைக்குள் சென்று நோன்பு முறிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது,

வாய் கொப்பளிக்கும் போது  பின்வரும் துஆவை ஓதவும்,

اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلَي تِلَاوَةِ كِتَابِكَ وَكَثْرَةِ الذِّكْرِ لَكَ وَثَبِّتْنِيْ بِالْقَوْلِ الثَّابِتِ فِيْ الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

யா அல்லாஹ்  திருக்குர்ஆன் ஓதவும் உன்னை அதிகமாக திக்று செய்வதற்குமுரிய சக்தியை தந்தருள்வாயாக !  உலகத்திலும் மறுமையிலும் கலிமாவின் படி
இருக்கச் செய்வாயாக!

பின்னர் நாசிக்கு மூன்று முறை நீர்  செலுத்த வேண்டும், அப்போது பின்வரும்
துஆவை ஓதவும்,

اَللّٰهُمَّ أَرِحْنِيْ رَائِحَةَ الْجَنَّةِ وَأَنْتَ عَنِّيْ رَاضٍ 

யா அல்லாஹ் ! சொர்க்கத்தின் சுகந்தத்தை  நுகரச்
செய்வாயாக ! மேலும் என்னை பொருந்திக் கொள்வாயாக!

மூக்கைச்  சீறும்போது ஓதும் துஆ.

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ رَوَائِحِ النَّارِ وَسُوْءِ الدَّارِ

யா அல்லாஹ்! நரகத்தையும் நரகத்தின் நெருப்புக் காற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்

பின்னர் முகத்தைக் கழுவ
வேண்டும். இதனை முன்
நெற்றியிலிருந்து தொண்டைக் குழி வரை நீளத்திலும் காதுச் சோணையிலிருந்து மறு காதுச் சோணை வரை அகலத்திலும் கழுவ வேண்டும். பெண்கள் முன்நெற்றியின் ஆரம்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,

முடி அதிகமுள்ள இடங்களான புருவங்கள் மீசை தாடி கன்னம் தந்தம் உள்ளிட்ட இடங்களில் நீரைச் செலுத்த வேண்டும். அடர்த்தியான  தாடியினுள் நீரைச் செலுத்த வேண்டியதில்லை.
இலோசான தாடியினுள் நீரைச் செலுத்த வேண்டும்,

முகம் கழுவும் போது ஓதும்
துஆ

اللّٰهُمَّ بَيِّضْ وَجْهِيْ بِنُوْرِكَ يَوْمَ تَبْيَضُّ وُجُوْهُ أَوْلِيَائِكَ وَلاَ تُسَوِّدْ وَجْهِيْ بِظُلْمَاتِكَ يَوْمَ تَسْوَدُّ وُجُوْهُ أَعْدَائِكَ 

யா அல்லாஹ் ! உனது நேசர்களின் முகங்கள் பிரகாசிக்கும் நாளில்  உனது ஒளியின் மூலம் எனது முகத்தைப் பிரகாசமாக்கி வைப்பாயாக ! உனது விரோதிகளின் முகங்கள் கறுக்கும்
நாளில் (பாவம் என்ற) உனது இருளினால் எனது முகத்தை கறுப்பாக்கி விடாதே

பின்னர் கையைக் கழுவவும் முதலில் வலது கையை
முழங்கையிலிருந்து தோள்புயத்தின் அரைவாசி வரைக் கழுவ வேண்டும், அப்போது பின்வரும் துஆ வை
ஓதவும்,

اللّٰهُمَّ أَعْطِنِيْ كِتَابِيْ بِيَمِيْنِيْ وَحَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا

யா அல்லாஹ் ! எனது அமல்களின் பட்டோலையை எனது வலது கரத்தில் தந்தருள்வாயாக! எனது விசாரணையை இலேசாக்கு வாயாக !

இடது கையைக் கழுவும் போது ஓதும் துஆ

اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ تُعْطِيَنِيْ كِتَابِيْ بِشِمَالِيْ أَوْمِنْ وَرَاءِ ظَهْرِيْ

யா அல்லாஹ். ! எனது அமல்களின் பட்டோலையை இடக்கரத்தில் வழங்குவதிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (அல்லது
முதுகுக்குப் பின் வழங்கப்
படுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று
கூறவும்.)

பின்னர் தலையை மஸஹ்
செய்யவும். கையை நீரில்
நனைத்த பின், வலது கையின் விரல்களோடு சேர்த்து தலையின் முற்பகுதியிலிருந்து பிடரி வரை வருடி
பின்னர் மீண்டும் தலையின் முற்பகுதி வரை மீட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும்.
ஏனைய உறுப்புக்களையும்
மூன்று முறை செய்ய வேண்டும்.

தலையை தடவும் போது ஓதும் துஆ

اللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ وَأَظِلَّنِيْ تَحْتَ ظِلِّ عَرْشِكَ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّكَ اللّٰهُمَّ حَرِّمْ شَعْرِيْ وَبَشَرِيْ عَلَي النَّارِ

யா அல்லாஹ் ! உனது அருளைக் கொண்டு எனக்கு இரட்சிப்பு வழங்குவதயாக !
உனது அருள்களை என்னில் சொரிவாயாக ! உனது
நிழலைத் தவிர்த்து நிழல்
கிடைக்காத மறுமை நாளில் உனது அர்ஷூக்குக் கீழ்
நிழல் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எனது முடியையும் மேனியையும் நரகத்தின் மீது ஹறாமாக்கி வைப்பாயாக!

இதன் பின் புதிதாக நீரை
எடுத்து காதின் உள் வெளிப் பகுதிகளை கலிமா
விரலினால் தடவி மஸஹ்
செய்யவும், அப்போது இந்த
துஆவை ஓதவும்.

اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ أَحْسَنَهُ  اللّٰهُمَّ أَسْمِعْنِيْ مُنَادِيَ الْجَنَّةِ مَعَ الْأَبْرَارِ 

யா அல்லாஹ் ! வார்த்தையைக் கேட்டு அதில் அழகானதைப் பின்பற்றி வழிபடும் நல்ல கூட்டத்தில் என்னைச் சேர்த்து வைப்பாயாக ! 

யா அல்லாஹ் ! மறுமையில் சொர்க்கத்தின் பாங்கை
(அதானை)க் கேட்டு உன்னை வழிபட்டு நடக்கும் கூட்டத் தாருடன் சேர்த்து எனக்கும் அதனைக் கேட்கும்
பாக்கியத்தைத் தந்தருவாயாக !
( சொக்கத்தில் முதலில் பாங்கு சொல்பவர் ஹளறத்
செய்தினா பிலால் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களாகும்)

தலையை மஸஹ்  செய்த
பின் பிடரியை மஸஹ் செய்ய வேண்டும், பின்னர் இந்தத் துஆவை ஓதவும்.

اللّٰهُمَّ فُكَّ رَقَبَتِيْ مِنَ النَّارِ وَأَعُوْذُ بِكَ مِنَ السَّلاَسِلِ وَالأَغْلاَلِ

யா அல்லாஹ் என்னை நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக! மேலும் நரகத்தின்
விலங்குகளிலிருந்தும் அதன் சங்கிலிகளிலிருந்தும்
உன்னிடம் காவல் தேடுகின்றேன்,

பின்னர் இரு கால்களையும் கரண்டை உட்படக் கழுவவும், முதலில் வலதையும்
பின்னர் இடதையும் கழுவவும், 

கழுவும் போது விரல்களைக் குடைந்து தேய்த்துக் கழுவவும். வலது காலின் சின்னி விரல் வரை உட்பகுதிகளைக் கழுவவும்,

வலது காலைக் கழுவும் போது ஓதும் துஆ

اللّٰهُمَّ ثَبِّتْ قَدَمِيْ عَلَي الصِّرَاطِ الْمُسْتَقِيْمِ مَعْ أَقْدَامِ عِبَادِكَ الصَّالِحِيْنَ

யா அல்லாஹ் ! ஸாலிஹான உனது நல்லடியார்களின் பாதத்தோடு எனது பாதத்தையும் ஸிறாத்தல் முஸ்தகீம் பாலத்தில் நிலைக்கச் செய்வாயாக !

இடது காலைக்கழுவும் போது ஓதும் துஆ

اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ تَزِلَّ قَدَمِيْ عَلَي الصِّرَاطِ فِيْ النَّارِ يَوْمَ تَزِلُّ أَقْدَامُ الْمُنَافِقِيْنَ وَالْمُشْرِكِيْنَ

யா அல்லாஹ். ! (மறுமையில்) முனாபிக்குகள், முஷ்
ரிக்குகளின் பாதங்கள், "சிறாத் " என்ற பாலத்தில்
இடறுவதைப் போன்று எனது பாதம் இடறுவதை விட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

கால்களைக் கழுவும் போது
முழங்காலின் அரைவாசி வரைக் கழுவது பேணுதலாகும்,  உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கழுவ வேண்டும்,

வுழுச் செய்து முடித்த பின்
வானத்தின் பக்கம் பார்
வையை உயர்த்தி பின் வரும் துஆவை ஓதவும்,

أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ عَمِلْتُ سُوْءً وَظَلَمْتُ نَفْسِيْ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ فَاغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ الْمُتَطَهِّرِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ وَاجْعَلْنِيْ صَبُوْرًا شَكُوْرًا وَاجْعَلْنِيْ أذْكُرُكَ ذِكْرًا كَثِيْرًا وَأُسَبِّحُكَ بُكْرَةً وَأَصِيْلاً

அல்லாஹ்வைத் தவிர்த்து
வணக்கத்திற்குரியவன்
வேறு எவரும் இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை.

முஹம்மது ஸல்லல்லாஹு
அலைஹி வசல்லம் அவனின் நல்லடியாரும், திருத்தூதருமாகும் என்று மேலும்
சாட்சி பகர்கின்றேன். உனக்கே பரிசுத்தம் யாவும் உண்டு.

யா அல்லாஹ் !  உனது புகழின் மீது சத்தியமாக உன்னையன்றி வேறு நாயன்
இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். நான் பாவம் செய்துள்ளேன் எனது நப்ஸின்
மீது அநியாயம் புரிந்துள்ளேன்.

உன்னிடம் பாவமன்னிப்புத்
தேடுகின்றேன், மீண்டும் பாவம் செய்ய மாட்டேன் என உன்னிடம் உறுதி கூறி
தவ்பாச் செய்கின்றேன், எனது குற்றத்தை மன்னித்து எனது குறைகளை மன்னிப்பாயாக ! 

எனது தவ்பாவை அங்கீகரிப்பாயாக மெய்யாகவே நீ
தவ்பாவை அங்கீகரித்து இரக்கம் காட்டுபவனாக இருக்கின்றாய்.

யா அல்லாஹ் ! பாவம் செய்யாதவர்களில் என்னையும் சேர்ப்பாயாக என்னை பொறுமை செய்து நன்றி பாராட்டுபவர்களில் சேர்ப்பாயாக !

உன்னை அதிகமாக நினைவு கூர்பவனாக ஆக்குவாயாக ! காலையும், மாலையும் உன்னை அதிகம் தஸ்பீஹ்செய்யக் கூடியவனாக ஆக்குவாயாக

வுழுச் செய்யும்போது மேற்படி துஆக்களை ஓதுவதன்
மூலம் உறுப்புக்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வுழுவின் நற்கூலிகள்
முழுமையாக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. வுழு
அங்கிகரிக்கப்பட்டு அர்ஷு
க்குக் கீழ் அதற்கு இடம் வழங்கப்படுகின்றது.

றஸுலுள்ளாஹி ஸல்லல்
லாஹூ அலைஹி வசல்லம் கூறினார்கள்,

 " யாராவது ஒருவர் வுழுச்
செய்யும்போது மேற்படி துஆக்களை ஓதினால், அவனது முழு உடலின் சிறு பா
வங்கள் மன்னிக்கப்படுகி
ன்றன.
 
துஆக்கள் ஓதாவிட்டால் நீர்
பட்ட உறுப்புக்களின் பாவங்கள் மட்டும் மன்னிக்கப்படும் வுழுவோடு இருக்கும்வரை அல்லாஹ்வைப் புனித
ப்படுத்தித்  தஸ்பீஹ் செய்த
நற்கூலி கியாம நாள் வரை
கிடைத்துக் கொண்டே இரு
க்கும்.
                           தொடரும் ...


Monday 18 December 2023

கின்னஸ்_புத்தகத்தில் இடம்பிடித்த ஆலிம்.







சர்வதேச_அரபு_மொழி தினத்தில் புதிய வரலாற்றைச் சொந்தமாக்கிய கேரளா.. 


கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிக்காடு ஜாமியா நூரிய்யாவில் பயிலும் ஜசீம் செருமுக் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


உலகின் மிக நீளமான குர்ஆன் கையெழுத்து காலிகிராஃபி பிரதி உருவாக்கியதற்காக

Long's hand ridden குர்ஆன் பிரிவில் முஹம்மது ஜசீம் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  


எகிப்து நாட்டைச் சேர்ந்த முஹம்மது கேப்ரியலின் பெயரில் ஏற்கெனவே இருந்த 

700 மீட்டர் என்ற சாதனையை முறியடித்து ஜஸீம் புதிய வரலாறு படைத்துள்ளார்.. 


அனைத்து பக்கங்களையும் ஒவ்வொன்றாக மடக்கிப் பார்த்தால் 75 செ.மீ உயரம், 34 செ.மீ அகலம், 118.300 கிலோ எடை கொண்டதாக உள்ளது.


செருமுக் மாட்டும்மல் மொய்தீன் ஆசியா தம்பதிகளின் மகன் ஜசீம்.  


ஜசீம் எல்லா விஷயங்களிலும் உச்சத்தை அடைய வாழ்த்துவோம்.

உயரங்கள் பல அடைய அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.. ஆமீன்


தமிழில்:M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி