ஸுப்ஹான மவ்லிது ஓதுவது (ஷிர்க் பித்அத்) என்றால், உத்தம ஸஹாபாக்கள் ஓதிய (மவ்லித்) கவி வரிகளை மாத்திரம் ஓதுவதற்க்கு வஹ்ஹாபிகள் தயாரா?
அது ஒரு பக்கம் இருக்க ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தின் பிரகாரம் ஸுப்ஹான மவ்லிது ஓதுவதை விட்டுவிட்டாலும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓத தயாரா? மேலே குறிப்பிட்டது போன்று ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள மௌலித் கவி வரிகளை ஒரு கிதாபாக கோர்வை செய்து உங்கள் பள்ளிவாசல்களில் ஓத தயாரா?
இறைவன் இந்த நீண்ட இரு வசனத்திலும் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும், சுவர்க்கம் கிடைக்கும், ஆகவே முழுமையாக மார்க்கம் குர்ஆன் ஆகும். அந்த குர்ஆனில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓதுவதற்க்கு தயங்குவது ஏனோ.. !
அல்லாஹ் அவர்களை அவனது ஹபீபின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்'.
ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: மிஷ்காத்
நூல்: மிஷ்காத்