السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 22 March 2015

ஸூன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை விளக்க சி.டி களை பெற்றுக் கொள்ள

உங்களுக்கு தேவையான அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் துய கொள்கைப் பிரச்சார மற்றும் இணிமையான இஸ்லாமியப் பாடல்கள்,கசீதாக்களை மற்றும் ஆன்மிக மார்க்க சொழ் பொழிவுகள் அடங்கிய சி.டி களை அஸ்ஹாபுல் பத்ர் மீடியா யுனிட் கல்முனை ஷாஹூல் ஹமீத் கடற்கரை நாஹூர் மகாம் முன்றலில் உள்ள காரியாலத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
 ஸூன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை விளக்க சி.டி களை பெற்றுக் கொள்ள

Saturday 21 March 2015

மோதிரத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்து…

சுவீடனின் 1000 ஆண்டுக்கு முந்தைய மோதிரத்தில் ‘அல்லாஹ்’ அரபு எழுத்து
ண்டெடுக்கப்பட்டிருக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மோதிரம் ஒன்றின் மூலம் ஸ்கண்டினேவியர்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையில் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
சுவீடன் நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு பெண் ஒருவரது கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரம் ஒன்றில் ‘அல்லாஹ்வுக்காக’ என்ற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைகிங் காலத்து வர்த்தக மையமாக இருந்த ஸ்டொக்ஹோமுக்கு மேற்காக 15.5 மைல் தொலைவில் இருக்கும் மிர்கா பகுதியில் 1872-1895 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே வர்ண கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண் ஒருவரது அலங்கரிக்கப்பட்ட பலகையாளான சவப்பெட்டி ஒன்றில் இந்த மோதிரம் இருந்துள்ளது. அந்த சவப்பெட்டியில் இருந்த உடல் முற்றிலும் மக்கிய நிலையில் காணப்பட்டதோடு கி.பி. 850 ஆம் ஆண்டளவிலேயே அந்த உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என டிஸ்கவரி செய்தி குறிப்பிட்டுள்ளது. அரபு எழுத்துகள் கொண்ட வேறு மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் ஸ்கன்டினேவியா பகுதியில் இவ்வாறான ஒன்று கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
அரம்பத்தில் இது ஒரு செவ்வந்திக்கல் என்றே ஆய்வாளர்கள் நம்பி வந்தனர். ஆனால் அண்மையில் ஸ்கேன் சோதனை செய்து பார்த்தபோது அது ஒரு வண்ணக் கண்ணாடி என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் அது ஒரு கவர்ச்சிகரமான பொருளாக இருந்துள்ளது. ஸ்கண்டினேவியர்களுக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கும் இடையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தொடர்பு இருப்பதாக பண்டைய நூல்கள் குறிப்பிட்டபோதும் அதற்கு ஆதாரமான ஒரே தொல்பொருள் சான்றாக இந்த மோதிரம் மாத்திரமே காணப்படுகிறது.

Friday 20 March 2015

புதிய புத்தகங்களை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்

அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் தூய கொள்கையைின் தமிழ் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்_
pdf islamic tamil books


  1. நபிவழியே தக்லீத் மௌலவி அல் ஹாபிழ் எஸ்.எம் அப்துல் காதர் ஃபாஸி காயல் பட்டனம் ,இந்தியா – வெளியீடு 1972
  2. நான்கு மதம் போற்றும் நாகூர் ஆண்டவர்
  3. வழிகேடுகளுக்கு ஒரு வாள் -ஆசிரியர் -சங்கைக்குரிய மௌலவி அமானுல்லாஹ் நூரி இந்தியா -வெளியீடு 1985
  4. நல்லோர்களின் பொருட்களின் மூலம் பரக்கத் தேடுவது பற்றி ஓர் ஆய்வு - மௌலவி எச்.எம் அன்வர் மன்பயி பாஸில் தகாபி
  5. வுழுயின்றி குர்ஆனைத் தொடலாமா?ஆசிரியர் அல்ஹாபிழ் மௌலவீ எம்.ஷெயக் அப்துல்லாஹ் ஜமாலீ இந்தியா
  6. கொடி ஏற்றுவது பற்றி இஸ்லாம் சொல்வதென்ன? ஆசிரியர் மௌலவீ எச்.எம் இப்றாஹீம் நத்வீ வெளியீடு 2000
  7. மாதரசி கதீஜாவின் காதலர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
  8. அஹ்மது கபீர் றிபாய் நாயகத்தின் வரலாறு
  9. மும்மதம் போற்றும் நாஹூர் வலியுல்லாஹ்
  10. பாபா பக்றுத்தின் இறைநேசர்
  11. இறைநேசர்களின் கப்றுகளை முத்தமிடலமா?ஆசிரியர் மௌலவி அப்துல் அஸீஸ் மௌலானா விருதோடை புத்தளம்
C:ABU IZZAH

Wednesday 18 March 2015

சூரியன் பூமியை சுற்றுகின்றது" முட்டாள் வஹ்ஹாபியின் பத்வா


அறிவியல் உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிய இன்றைய காலத்தில், குர்ஆன், ஹதீஸ் என்று உயிரை விட்டு, சவுதிக் காசில் ஊரை, குடும்பத்தை பிரிக்கும் வஹ்ஹாபியக் குஞ்சுகளின் பெரிய வஹ்ஹாபி ஒன்று சவுதியில் அடிமுட்டாள் தனமான பத்வா ஒன்றை வழங்கியுள்ளது.
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது என்பது இன்று சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த ஒரு உண்மை ஆகும். தன்னை பெரிய மார்க்க அறிஞர் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாம் போதிக்கும் வஹ்ஹபிய ஷேய்க் இற்கு இந்த சின்ன விடயம் கூட தெரியாதது மட்டுமல்ல, எல்லாம் தெரிந்த பண்டிதர் என்று நினைத்துக் கொண்டு மாணவர்களுக்கு விளக்கமும் கொடுக்கின்றது இந்த வஹ்ஹாபி.
ஷேய்க் பந்தர் அல் கைபாரி விஞ்ஞான விளக்கம் கொடுக்கும் முட்டாள் விடியோ இந்த லிங்க் இல் காணப் படுகின்றது.
பூமி சுற்றுவது இல்லை, பூமி ஒரே இடத்தில் அப்படியே இருக்கிறது, சூரியன்தான் பூமியை சுற்றி வருகின்றது என்று சொல்கின்றது இந்த வஹ்ஹாபி. பூமி சுற்றினால் சார்ஜாவில் இருந்து விமானத்தில் ஏறி வானத்தில் அந்தரத்தில் நின்றுகொண்டு இருந்தால், சிறிது நேரத்தில் சீனா நாடு அங்கே வந்துவிடும், உடனே இறங்கி விடலாம் என்று சொல்கின்றான்.
முதலில் ஒரு விடயத்தை இந்த முட்டாள் புரிந்துகொள்ள வேண்டும், விமானத்தை ஆகாயத்தில் அந்தரத்தில் நிறுத்தி வைக்க முடியாது,விமானம் என்பது கார் மாதிரி ரோட்டில் கண்ட கண்ட இடத்தில் பார்க் பண்ணும் ஒன்று அல்ல.
மற்றது, பூமி சுற்றும் பொழுது, பூமியை சூழ இருக்கும் வளி மண்டலமும் சேர்ந்தே சுற்றுகின்றது, இந்த அளவுக்கு சிறிய அறிவியல் விடயங்களைக் கூட புரிந்து கொள்ளும் அறிவு வஹ்ஹாபிய வெறிபிடித்த மண்டைகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அனால், விரல் ஆட்ட வேண்டுமா? யார் முஷ்ரிக், எவன் பித்தத் வாதி, எவன் நரகவாதி என்று கேட்டால் இவன்களின் அறிவை பார்க்கலாமே? வேறு என்னத்துக்குத்தான் வஹ்ஹபிகள் லாயக்கு?
பூமி சுற்றுகின்றதா என்று கூட தெரியாத மடையர்கள், இன்டர்நேஷனல் பிறையா, லோக்கல் பிறையா என்று தீர்ப்பு சொன்னால் எப்படி இருக்கும்?
இவங்கள்தான் இப்பொழுது சூனியம் சூனியம் என்று பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். கலிமாவை எழுதி, அதற்குக் கீழே கழுத்தை வெட்டும் கொலைகார வாள் படம் போட்டு, கலிமாவுக்கு வாளால் பரப்பப் பட்டது என்று அவப்பெயரை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அப்துல் வஹ்ஹாப், அல் சவூத் கூட்டமைப்பில் உருவாகிய சவூதி அரேபியாவின் வஹ்ஹபிகளிடம் வேறு என்னதான் மண்டையில் இருக்க போகிறது?
அறிவுகெட்ட வஹ்ஹாபிய முட்டாள் முல்லாக்களின் மூளைகெட்ட கூத்துக்களை பார்க்கும்பொழுது பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு தலை சுற்றுகின்றது.
வாசகர் ஆக்கம் : அபூ முப்தி

ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடு

கல்முனை அஸ்டோ அமைப்பின் அனுசரனையுடன் எஜமான் நாகூர் சாஹுல் ஹமீது வலியு்ல்லாஹ் நாயகம் அவர்களின் 193 ஆவது கொடியேற்று விழாவை முன்னீட்டு எதிர்வரும்
20-03-2015 வெள்ளிக்கிழமை கலைமாமணி , சமூக தீபம் திருமதி பாத்திமா நஸீறா அலி எழுதிய ” ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடப்படவுள்ளது...
நூல் தேவைப்படுவோர்-
0772480700, 0772240924

ஞானக் கடலோரம்” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீட

TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!

நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம்(ஸல்)அவர்களை குழப்பவாதி என்று சொல்லும் TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!!அதற்கு பதில் தரும் வகையில், பேராசிரியர்:S.சைபுத்தீன் ரஷாதி ஹழ்ரத்,அவகளின் அனல் பறக்கும் உரை ...
TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!


TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!

அல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்



திருமணம் என்பது ஆதி காலம் முதலே
நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்ச்சி.

அதற்கு பெண் வீட்டார், மணமகன்
வீட்டார் ஆகிய இரு குடும்பத்தினரும்
கலந்த பேசி உடன்பாடு ஏற்படுவது
ஏற்படுவது வழக்கம்.

ஆனால், அல்லாஹ்வே வலீயாக
இருந்து நடத்திய திருமணம்
நபி பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றது.

தம்முடைய தந்தையின் சகோதரி
‘உஸைமா’என்பாரின் மகள் ஸைனப்
(Zainab) ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை, அதாவது தமது சொந்த
மாமிமகளை, முதன் முதலாக பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தமது வளர்ப்பு மகனான
ஸைதுப்னு ஹாரிஸா ரளியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு நிகாஹ் செய்து
வைத்தார்கள்.

ஆம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு
மகனாகிய ஸைதை மண முடித்துக்
கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள்

ஒரு முன்னாள் அடிமை என்பதாலும்,
தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர்
என்பதாலும் அவரைத் திருமணம்
செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
முதலில் மறுத்து விடுகிறார்கள்.

உடன் பின் வரும் இறை வசனம்
இறங்கியது;''அல்லாஹ்வும் அவனது
தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக்
கட்டளையிட்டு விட்டால்,
அவர்களுடைய அக்காரியத்தில்
வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு
ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ,
பெண்ணுக்கோ உரிமையில்லை.
ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய
தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால்
நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.''
(அல்குர்ஆன்33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்கள் ஸைதைத் திருமணம்
செய்ய சம்மதித்தார்கள்.
(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

மிகவும் உயர்ந்த குலம் என்று
பெருமை பாராட்டிய தமது குலத்துப்
பெண்ணை–தமது மாமி மகளை
ஒரு அடிமைக்குத் திருமணம்
செய்து வைப்பதென்பது அன்றைய
சமூக அமைப்பில் கற்பனை செய்தும்
பார்க்க முடியாததாகும்.

ஆனால், சிறிது காலம்தான் வாழ்ந்தார்கள்;
மணவேற்றுமையால் வாழ இயலவில்லை.
ஸைது (Zaid) ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் அவ்வம்மையாருக்கு
‘தலாக்’என்னும் திருமண முறிவு
சொல்லியபின் ,அம்மையாரின்‘
இத்தா ’காலம் முடிந்தவுடன் ஹிஜ்ரி5ஆம்
ஆண்டு துல்கஃதா மாதம்,
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை தான் திருமணம் செய்து
கொள்வதாக பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தூதுவரை அனுப்பினார்கள்.

தூதுவர் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களிடம் செய்தியைக்
கூறியபோது அதற்கு அவர்கள்,
‘நான் என் ரப்பிடம் (என்னை
படைத்தவனிடம்) ஆலோசனை
செய்யாமல் பதில்கூறமாட்டேன்’
என்று சொல்லி விட்டார்கள்.

பின்னர் உளூ செய்து, தொழுகைக்காக
தக்பீர் கட்டிவிட்டார்கள்.
அவர்களின் உள்ள உறுதியினால்
அல்லாஹு தஆலாவே ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா அவர்களை,
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு திருமணம்
செய்து வைத்ததாகக் கூறி
திருக்குர்ஆனில் ஒரு வசனத்தையும்
இறக்கி வைத்துவிட்டான்.


ஆம்! அந்த திருவசனம் இதுதான்:
‘எனவே, ஸைது, அப்பெண்ணிட
மிருந்து தலாக்கை நிறைவேற்றிக்
கொண்டபோது, நாம் அவரை உமக்கு
திருமணம் செய்து கொடுத்தோம்’
(அல்குர்ஆன்:33:37)

ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை, பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு நிகாஹ் செய்து
வைத்தது பற்றிய ஆயத்து இறங்கிய
நற்செய்தியை ஒருவர் அவரிடம்
அறிவித்தபோது, செய்தியைக்
கொண்டுவந்த அம்மனிதருக்கு
தாங்கள் அணிந்திருந்த நகைகளைக்
கழட்டி, அன்பளிப்பு செய்துவிட்டு,
உடனே ஸஜ்தாவில் வீழ்ந்து
நன்றி தெரிவிக்கும் முகமாக
இரண்டு மாதம் நோன்பு இருப்பதாக
நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களுக்கு மற்றுமுள்ள எல்லா
மனைவியருடைய திருமணங்களும்
அவர்களின் உறவினர்களால்
நடத்தி வைக்கப்பட்டது.

ஆனால் ஹளரத் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களின் திருமணம்
மட்டும் வானத்தில் அல்லாஹ்வினால்
நடத்தி வைக்கப்பட்டது.
இது உலகத்தில் எவருக்கும் கிடைக்காத
தனிப்பெரும் சங்கையாகும்.

இந்த மகத்தான சிறப்பு ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு
எப்படி கிடைத்தது?
அசைக்க முடியாத இறை
நம்பிக்கையால்தான்.
அல்லாஹ் மகிழ்வுற்றான்.
ஹளரத் ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா
அவர்களும் மகிழ்வுற்றார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களும் மகிழ்ச்சியல் இருந்தார்கள்.

அதற்காக மற்ற எந்த
திருமணத்திற்கும் நடந்திராத
மிகப்பெரிய வலிமா
விருந்தை நடத்தினார்கள்.

நான் என் ரப்பிடத்தில் கேட்டுச்
சொல்கிறேன் என்று அல்லாஹ்வை
முன்னிலைப் படுத்தியதால் அல்லாஹ்
மிகவும் மகிழ்வுற்று தானே
திருமணத்தை நடத்தி வைத்தான்.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் பெண் கேட்டு தூதுவரை
அனுப்பியபோது, தானாகவே
பதில் கூறாமல், ஒரு நபியை திருமணம்
செய்கிற மனப்பக்குவம் தனக்கு
இருக்கிறதா என்று தன் ரப்பிடம்
ஆலோசனை பெற்று அதன் பின்
மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்.

அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி
வந்ததை அறிந்தவுடன் இரண்டு
மாதங்கள் நோன்பு பிடிப்பதாக
அவர்கள் நேர்ச்சை செய்து கொண்டதன்
மூலம் அவர்கள் எந்த அளவுக்கு
இந்த திமணத்தை ஆவலோடு
எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்
என்பதும், அவ்வாறு ஆவலோடு
இருந்தபோதும் அல்லாஹ்விடமிருந்து
பதில் வரவேண்டும் என்று அவர்கள்
காத்திருந்ததும் ஸுப்ஹானல்லாஹ்,
அல்லாஹ்வின் மீது அவர்களுக்கிருந்த
அசைக்க முடியாத இறைநம்பிக்கை
வெளிப்படுத்துகிறது.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களை திருமணம்
செய்த போது ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களுடைய வயது
முப்பத்தி ஐந்து (பார்க்க அல் இஸாபா)

Tuesday 10 March 2015

வஹ்ஹாபிகளுக்கு எதிரான மட்டக்களப்பு விவாதம் மாபெரும் வெற்றி

இலங்கையில் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் 05,07,08 - 03 - 2015 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இஸ்லாமிய கொள்கைக்கு வெற்றி கிடைத்த விவாதத்தின் முழு வீடியோக்களையும் Eravur Yoosuf Musthafi என்ற இணையத் தளத்தில்  இப்போது பார்க்கலாம். 

https://www.youtube.com/user/YOOSUF6/videos

  1. அல்லாஹ் எங்கே உள்ளான் 05 -03- 2015 விவாதம்
  2. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 01
  3. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 02
  4. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 03
  5. கழா தொழுகை உண்டா, இல்லையா 08- 03 -2015- பகுதி- 01 
  6. கழா தொழுகை உண்டா, இல்லையா 08- 03 -2015- பகுதி- 02
  7. மட்டகளப்பு விவாதத்தில் ஸஹ்ரான் செய்த பித்தலாட்டங்கள்
  8. வஹ்ஹாபிகளின் தொடர் தோல்விகள்
  9. விவாத இறுதியில் சுன்னத் ஜமாத்தினரின் தக்பீர் முழக்கமும்  வஹாபிகளின் கூச்சலும்




காத்தான்குடி