السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 7 November 2019

எங்களின் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய அறிஞர் Yembal Thajammul Mohammad ஸாஹிப் அவர்களே!
#கொண்டையை_மறைக்க_மறந்த நூ அப்துல் ஹாதி பாகவிக்கு #குடை_பிடிக்க_வேண்டாம்!

சுந்தரத் தமிழில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புகழ் பாடினால் என்னவென்று யோக்கியர்கள் போல் கேள்வி கேட்டு, ஸுப்ஹான மவ்லித் ஷரீஃபை தமிழ் உலகத்தில் இருந்து அகற்றி விடலாம் என்று கனவு கண்டு காணாமல் போன கசடு மனம் கொண்டவர்களின் கூட்டத்தில் இடம் கிடைக்க இந்த இளம் மௌலவி காத்திருக்கின்றார் போலும்.

இதைச் சொல்வதற்கு காரணம் உள்ளது.

நீங்கள் மிகவும் சிலாகித்து உரை கொடுத்துப் பகிர்ந்துள்ள அவர் பதிவில் #யாரோ_எழுதிய_அரபி_பைத்துகள் என்று எழுத்துக் கொழுப்பெடுத்துப் பிதற்றியுள்ளார்.

எனவே அவரின் கொழுப்பை உருக்கிக் கரைக்க வேண்டியதும், உரை கொடுத்த தாங்களுக்கு உண்மையைச் சொல்வதும் எனது கடமை ஆகின்றது.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை இயற்றியவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்பதாகவும், இமாம் முஹம்மது மதனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்பதாகவும் இரு ரிவாயத்கள் உள்ளன.

இரு ரிவாயத்கள் இருந்தாலே இரு ரிவாயத்கள் உள்ள ஹதீஸை இந்த இந்த மாமேதை மறுத்துவிடுவாரா?
இப்படிப்பட்ட மேதைகளை வைத்துக் கொண்டா புனிதமிகு ஹதீஸ் ஷரீஃப்களின் மொழியாக்கங்கள் நடைபெறுகின்றன?

இஸ்லாமிய ஞானிகளும், தவசீலர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மேலைநாட்டு அறிஞர்களும் ஏற்றுப் புகழ்ந்திடும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவருக்கு யாரோ ஆகிவிட்டார்களா?

#சிரியா_நாட்டு_மேதை_இப்னு_நாஸிருத்தீன்
#ஈராக்_நாட்டு_மேதை_ஹாஃபிழுல்_இராகிய்யி
#எகிப்து_நாட்டு_மேதை_ஸகாவி
#எமன்_நாட்டு_மேதை_வஜீஹூத்தீன்_அப்துர்_ரஹ்மான்_இப்னு_அலிய்யுல்_முஹம்மதுஷ்_ஷைபானி
#இமாம்_இமாதுத்தீன்_இஸ்மாயில்_இப்னு_உமர்_இப்னு_கதீர்
#இமாம்_முல்லாஅலீ_காரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா)

#இவர்களையும்_யாரோ_எழுதிய_பைத்துகள்_லிஸ்டில்_இணைத்துவிடலாமா?
‌மாமன்னர் ஔரங்கசீப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கே ஞான ஆசிரியராக இருந்து, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ்ந்து வித்ரிய்யா ஷரீஃபை அளித்த ஸதக்கத்துல்லாஹ் அப்பா கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் இவருக்கு யாரோ ஆகி விட்டார்களா?

இலங்கையில் மாத்திரம் 400 மஸ்ஜித்களை நிர்மாணித்து பல்வேறு அரபி இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும், அரபி-தமிழ் எனும் மொழியையே ஆக்கியளித்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவருக்கு யாரோ ஆகிவிட்டார்கள்?

இரண்டு மூன்று மொழியாக்க குழுக்களில் இடம்பெற்று, நான்கைந்து முகநூல் பதிவுகளை இட்டவுடன், மூத்த அறிஞர் பெருமக்களையும் ஞானிகளையும் #யாரோ என்று கொழுப்பெடுத்துக் கூறும் இவரின் தற்குறித் தனத்திற்கு தங்களைப் போன்ற அறிஞர்களின் உரை மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ் மௌலித், தமிழ் மௌலித் என்று அங்கலாய்த்து இருக்கின்றார்.

ஐயா! எல்லாக் காப்பியங்களும் மௌலித் ஆகிவிடுமா?

மௌலித் என்ற சொல்லிற்கு பிறப்பு ,பிறப்பின் சிறப்புகள், பிறப்பிடத்தின் சிறப்புகள், பிறப்பின் நேரத்தின் சிறப்புகள் என்று எல்லாமே பிறப்பைச் சுற்றித் தானே வருகின்றது.

#ஜாஹிலாகிய_எனக்குத்_தெரிந்தது_கூட_ஆலிமாகிய_அவருக்குத்_தெரியாதா?

பொதுவான காப்பியங்கள் எல்லாம், பிறப்பின் சிறப்பு மட்டுமே கூறும் காவியங்கள் ஆகி விடுமா?

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் பைத்துகளும், ஹிக்காயத்துகளும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறுபவை!
அது மாத்திரமல்ல அவர்களின் குலத்தின் சிறப்பை எடுத்துக் கூறுபவை!
அவர்களை ஈன்றெடுத்த புனித தாய் தந்தையர் முதல் குடும்பத்தார் அனைவரின் சிறப்புக்களைக் கூறுபவை!
அவர்கள் பிறந்த இரவின் சிறப்புக்களைக் கூறுபவை!
அவர்கள் பிறந்த அன்று உலகில் நடந்த அதிசயங்களைக் கூறுபவை!

சில பேருக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதும், நெஞ்செரிப்பு எடுப்பதும் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறப்பின் சிறப்பையும், அவர்களின் புனித குடும்பத்தினர் சிறப்பையும், அப்புனித இரவின் சிறப்புக்களையும் கூறுவதில் தானே!

ஏன் இந்த ஷைத்தானிய எரிச்சல் என்பது தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி?

ஆயிரம் தமிழ்க் காவியங்கள் ஏற்படுத்தும் ஓர் உணர்வை, ஓர் #யாநபி_ஸலாம்_அலைக்க_பைத் தருகின்றதே! உலகம் முழுக்க ஒலிக்கின்றதே! ‌
பொருள் உணராதவர்களும் கண்ணீர் விட்டல்லவா ஓதுகின்றனர்.
இந்த மௌலவிக்கு ஏனிந்த வயிற்றெரிச்சல்?
இவரைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் அறிஞர் பெருமகனாராகிய தாங்களுக்கு வந்த அவசியம் என்ன?

#யாரோ_எழுதிய_பைத்துகள்_என்று_சொல்வது_வாய்க்_கொழுப்பா_எழுத்துக்_கொழுப்பா?
#அரபி_பைத்துகள்_எழுதிய_மூத்த_அறிஞர்_பெருமக்கள்_முகவரி_இல்லாதவர்களா?

#வார்த்தைகளில்_மெல்லினம்_வேண்டாமா?

#அறிஞர்_பெருமகனாரே!

ஓடி ஓடி வந்து, தமிழ்ப் பாக்களுக்கு ஆதரவு தருகின்றோம் என்ற போர்வையில், தேடித் தேடிப் பின்னூட்டமிடும் பிஜேவை மானசீக குருவாக ஏற்று உள்ள நண்பர்களையும் நாம் அறிவோம்.

நீங்கள் உரை கொடுத்துள்ள இந்த இளம் மௌலவியை கற்காலத்திலிருந்து தற்காலத்திற்கு வரச்சொல்லுங்கள்!

#மௌலித்_ஷரீஃபை_வைத்து_மலிவான_விளம்பரம்_தேடுவோரின்_கதி_கண்_முன்னே!

ஸூப்ஹான மௌலித் மஜ்லிஸ்கள் தோறும் தமிழ்க் கவிஞர்களின் பாடல்கள் தமிழ்ப் பாடகர்களின் தேனிசைக் குரல்களில் கம,கமவென்று மண,மணக்கின்றன!

கண்ணை மூடிக் கொண்டு தன் மனம் போன போக்கில் தடித்த வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதுவது தொடருமானால்

#ராயல்டி_வாங்காமலே
#ரத்தத்தையும்_வியர்வையும்_சிந்தி_தீனை_ஹயாத்தாக்கிய #அறிஞர்களின்_ஞானிகளின்_கால்_தூசுக்கு_இவர்_சமம்_ஆவாரா என்று நாமும் கேட்பதற்கு நேரம் அதிகம் ஆகி விடாது! கபர்தார்!!
Mueenudeen Ibrahim
Fazulul Alaudeen