السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 5 April 2024

ஏறாவூரும் செய்ஹுனாவும்

#இன்று ஏறாவூர் #மீராகேணி கலந்தர் வீதியில் அமைந்துள்ள ஹமத் மஸ்ஜிதில் இன்றைய தினத்தில் மறைந்த  மரியாயாதைக்குரிய எங்கள் செய்ஹு நாயகம் ஞான பிதா அஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி காதிரி வர் ரிபாயீ மற்றும் மறைந்து வாழும் அவர்களின் கலீபாக்களின் மீதும் மற்றும் இப்பள்ளிவாயலை கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த மர்ஹும் எனது நண்பர் மெளலவி ரிஸ்வி முஸ்தபி அவர்களுக்கும் இப்பள்ளிவாயலுக்கு உதவிகள் செய்த அனனவருக்கும் சங்கையான மாதத்தில் புனிதமான தினத்தில் புனித அல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்பட்டது. 


#இந்நிகழ்சிக்கு சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தவர்களுக்கும் இப்பள்ளிவாயலைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு நோன்பு திறக்க கன்ஜி கொடுத்து உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹுவின் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்யப்பட்டது.


#இறுதியாக எங்கள் அப்துல்காதிர் ஸூபி நாயகத்தைப் பற்றியும் அவர்களின் கராமத் பற்றியும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.


#சங்கைக்குரிய மெளலவி முன்னால் ஏறாவூர் உலமா சபைத்தலைவர், முன்னால் காழி நீதிபதி,முன்னால் நகர சபை முதல்வர் மெளலவி அப்துல் மஜீத் மிஸ்பாஹி காதிரி 


இப்தார் ஸலவாத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.