السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 8 April 2024

காணவில்லை


ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவா்கள் ஸஹாபாக்களுடன் 

உரையாடிக் கொண்டிருக்கும் போது

ஒருவா் மிக வேகமாக ஒடி வந்து , சபையி்ல் கவலை கலந்த முகத்தோடு சொன்னாா்.


யா ரஸூலல்லாஹ் ! "என் மகனைக் 

காணவில்லை,

பல இடங்களில்

தேடியும் கிடைக்கவில்லை,

தாங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிராா்த்தனை

செய்யுமாறு வேண்டி கேட்டுக்

கொண்டாா்". 


அப்பொழுது அந்த சபையிலிருந்த ஒரு

ஸஹாபி எழுந்து சொன்னாா் ..

யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடைய

மகனைத் தெரியும், 

அந்தக் குழந்தை 

நான் வருகின்ற பாதையில்தான்

விளையாடிக் கொண்டிருக்கிறது".


"அதைக் கேட்ட குழந்தையின் தந்தை 

அவசர, அவசரமாகப் புறப்பட ஆயத்தமானாா்.


"நபி (ஸல்) அவா்கள் அவரை அழைத்துக் கேட்டாா்கள்


"தாங்களுக்கு இவ்வளவு அவசரமா ? 


அவா் கூறினாா் 

" யா ரஸூல்லாஹ்!  

தாங்களுக்குத் தெரியாதா ஒரு 

தந்தையின் மனதேனை "


"என்னுடைய மகனை காணாமல் 

நானும் என்னுடைய மனைவியும்

மிகவும் சோகத்திலுள்ளோம்"


"என் மனனவி, மன வருத்தத்துடன் என் மகனை எதிர்நோக்கி வாசலில்

காத்துக் கொண்டிருக்கின்றாள். ஆகவே

நான் அவசரமாக அவனை பாா்க்கப் போகின்றேன்" 


நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள், 

தாங்கள்

மகனைக் காணாத மனவேதனையில்

இருக்கின்றீர்கள் என்பது தெரியும்,

ஆனால் தாஙகள் உங்களுடைய 

மகனை நேரில் சந்திக்கும போது,

தாங்களுக்கும் அறியாது, பாசத்தின்

இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச 

நேரிடும்,


"ஆனால் விளையாடிக் கொண்டு

இருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில்

சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம்" ..


"அது உங்களுக்குத் தெரியாது,

அன்போடு,

 மகனே ! என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் மக்களின் 

மனது வேதனைப்படலாம்" ..


" என்னுடைய தந்தை இருந்திருந்தால்

இதுபோல் என்னையும் அன்போடு

அழைத்து கொஞ்சி இருப்பாரே என்று பிஞ்சு இதயம் வலிக்கக்கூடும்".


"எனவே தாங்களின் வீட்டிற்குச் சென்று

மகனின் மீதுள்ள அன்பை 

வெளிப்படுத்துங்கள்" என்றார்கள்.


" நினைவில் வைத்துக் கொள்வோம்"


இதேபோல விதவையின் முன்னில் வைத்து தன்

மனைவியோடு அன்பு பாராட்டாதீர்கள்.


ஏழைகளின் முன்னில் தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள் " ..


" அல்லாஹ், ரப்புல் ஆலமீன் 

நம்முடைய குழந்தைகளை 

ஸாலிஹான மக்களாக ஆக்கி,

நாட்டிற்கும், சமுதாயத்திற்கும்,

வீட்டிற்கும் நன்மை சோ்க்கும் மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.♥️