السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 22 September 2025

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ

 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ

எனது முரீத் உதயத்திலிருந்து 

அல்லது அஸ்தமனத்திலிருந்து 

அல்லது விண்ணில் பறந்த நிலையில் 

அல்லது ஆழ்கடலின் அடியிலிருந்து 

என்னை அழைத்தாலும் அவரை நான் இரட்ஷிப்பேன். 

நானுமோ தீர்ப்பு வாள்.  

(முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை.)


ஆண்டகையின் சொற்படி காதிரிய்யஹ் வழியில் சேர்ந்து வாழும் ஒவ்வொருவரும் அவர்களின் முரீதுகள்தான். 


நீங்கள் அவர்களை அழைக்காத ஒன்றுதான் குறை.!

அழையுங்கள்! 


மனமுருகி மனக்கண் முன் உங்கள் நெற்றியின் மத்திபத்தில் முத்தொளி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகத்தை முன்னிறுத்துங்கள்.!


நீங்கள் கரம் பற்றிய காதிரிய்யஹ் தரீகத்தின் ஷைகுவை நினைத்தாலே போதும் !


உங்களுடன் இருப்பவர்கள் முஹ்யித்தீன் தஸ்தகீர் ஆண்டகையே! 


எதற்கும் அஞ்ச வேண்டாம் ! 


சித்திக்கும் முக்திக்கும் காரணா காரியமே அவர்கள்தான்.!


அல்லாஹ்வின் வலீமார்களுக்கு 

அச்சம் பயம் கவலை எதுவும் கிடையாது.!


- மௌலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.-