***************************************
மகீதா...!
கைபரில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்.
யூதர்கள் பெருமளவு வாழ்ந்து வந்த இந்த கிராமத்தில் ஜைனப் பின்த் ஹாரிஸ் என்ற யூதப் பெண் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் விருந்தளிப்பதாக அழைத்தாள்.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்லத் திட்டமிட்டு இறைச்சியில் விஷம் கலந்து விடுகிறாள்.
விருந்துக்கு வந்த பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட விருந்துணவை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த விஷயத்தை காட்டிக் கொடுத்து விட்டான்.
சுதாரித்துக் கொண்ட ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவை சாப்பிடுவதை நிறுத்தி தனது தோழர்களுக்கும் அறிவித்து விடுகிறார்கள்.
அதற்குள்ளாக ஒரு கவளம் சாப்பிட்டு விட்ட ஹஜ்ரத் பிஷ்ரு இப்னு பராஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விஷ உணவை சாப்பிட்டு விட்டதால் அதன் காரணமாக இறந்து விடுகிறார்கள்.
விருந்தாளிகளாக அழைத்து அதில் விஷம் வைத்து கொலை செய்யும் கொடூர மனம் படைத்த அந்த யூதர்களின் கிராமம் இது தான்..!
இங்கு தான் மேற்காணும் மனிதத்தன்மையற்ற செயல் நடைபெற்றது.
#khaibar #makeeda #poisenfood