السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 24 May 2024

ரவ்ழா ஷரீபை சியாரத் செய்வோம்

 

பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் போகலாமா?

பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் போகலாமா?


பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் செய்வதைத் தடுப்பவர்கள் யார் தெரியுமா? 


إذ،إذا 

இத், இதா ஆகிய இரு வார்த்தைகளுக்கும் விளக்கம் தெரியாத வள்ளல்கள் அவர்கள். 


ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحميا


இது அந்நிஸா அத்தியாயத்தின் 64 வது வசனம். 


கருத்து: இன்னும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டால் (நபியே நாயகமே யா ரசூலல்லாஹ்) உங்களிடம் வந்து (உங்கள் முன்னிலையில்) அவர்கள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும். இன்னும் அவர்களுக்காக ரசூ(ல் ஆகிய நீங்க)ளும் பிழை பொறுக்கத் தேட வேண்டும். அப்பொழுதுதான் அல்லாஹ்வை, அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் அவர்கள் காண்பார்கள். 


இத்திருமறை வசனத்தின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த மக்களிடையே இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் எங்கள் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தளம் செல்ல முடியும் என்பதாகும்.


எனினும் இவ்வசனத்தில் உள்ள إذ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு, இந்த வசனம் வள்ளல் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்று சிலர் கூறுகின்றனர்.


இதுவொரு பிழையான பிரசாரம் ஆகும். ஏனென்றால் إذ என்ற வார்த்தை கடந்த காலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. மாறாக எதிர்காலத்திற்கும் சொந்தமானது. அத்துடன் إذ என்பதை எதிர்காலத்திற்கும் إذا என்பதை இறந்த காலத்திற்கும் உபயோகம் செய்யும் வழக்கம் அரபிகளிடம் உண்டு. إذ என்ற வார்த்தைப் பிரயோகம் எதிர்காலத்தைக் குறித்து உபயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க பின்வரும் வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன.


அத்தியாயம் அன்ஆம் வசனம் 27, 30, 93

அத்தியாயம் அஸ்ஸஜ்தா வசனம் 12

அத்தியாயம் சபஃ வசனம் 51

 

وقد اعترض البعض على الاستدلال بالآية فقال:


(إذ) هذه ظرف لما مضى وليست ظرفا للمستقبل لم يقل الله، ولو أنهم (إذا ظلموا)، بل قال، (( إذ ظلموا ))، فالآية تتحدث عن أمر وقع في حياة رسول الله صلى الله عليه وسلم، واستغفار الرسول صلى الله عليه وسلم بعد مماته أمر مُتَعَذَّر لأنه إذا مات انقطع عمله إلا من ثلاث كما قال الرسول صلى الله عليه وسلم : (( صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له )) رواه مسلم

فلا يمكن للإنسان بعد موته أن يستغفر لأحد بل ولا يستغفر لنفسه لأن العمل انقطع. انتهى


وهذا الاستدلال مردود والأدلة على رده ما يلي، أما قصره ( إذ ) على الزمن الماضي فقط ففيه نظر لأن ( إذ ) كما تستعمل في الماضي فتستعمل أيضا في المستقبل، ولها معان أخرى ذكرها ابن هشام في مغنى اللبيب ( 1/ 83.80 ) .


وقد نص على أن ( إذ ) تستعمل للمستقبل الأزهري فقال في تهذيب اللغة ( 15/47 )، العرب تضع (إذ) تستعمل للمستقبل و ( إذا ) للماضي قال الله عز وجل ( ولو ترى ( إذ ) فزعوا )، (سبأ آية رقم 51 ).


ومن استعمال إذ للمستقبل قوله تعالى: ( ولو ترى إذ وقفوا على النار ) ( الأنعام آية 27 ).


( ولو ترى إذ وقفوا على ربهم )، ( الأنعام 30 )


( ولو ترى إذ الظالمون في غمرات الموت ) ، (الأنعام 93 )


( ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ) ، ( السجدة 12 ) .