السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 12 May 2024

ஏறாவூரின்_சமூக_ஆளுமை_1

Meeralebbai

(SOCIAL PERSIONALITIES - ERAVUR)


மர்ஹூம் மீரா லெப்பை வலியுல்லாஹ்


மர்ஹூம் முஹாந்திரம் மீராலெப்பை வலியுல்லாஹ் அவர்கள் 30.10.1907 இல் உமர் லெப்பை போடியார் அவர்களுக்கும், அஹமது லெப்பை ஷேகுப்போக்கர் போடியாரின் மகளான ஆசியா உம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்கள். இவர் ஆரம்பக் கல்வியை ஏறாவூர் மைனர் றோட் பாடசாலை எனறு அழைக்கப்பட்ட மட்/அறபா வித்தியாலயத்தில் பயின்று பின்பு மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் மெற்றிகுலேசன் வரை படித்தார்.


இவர் முதலில் பலாங்கொடைஅயைச் சேர்ந்த சுவாரியத்து உம்மா என்பவரை திருமணம் செய்து 18.04.1940 இல் பரீத் மீராலெப்பை அவர்களை மகனாகப் பெற்றார். முதல் மனைவியின் மறைவை அடுத்து இரண்டாவது மனைவி பக்கீர் சாஹிபு சரீபாவை பதுளையில் திருமணம் செய்து ஒரு ஆண்மகனும், இரண்டு பெண் மக்களும் உள்ளார்கள்.


இப்பெரியார் ஏறாவூர் ஓட்டுப்பள்ளிவாயல் எனும் மீரா ஜும்ஆ பள்ளிவாயல், ஆற்றங்கரை பள்ளிவாயல் , காட்டுப்பள்ளிவாயல் ஆகியவற்றிற்கு ஒரே நம்பிக்கையாளராக 1926 இலிருந்து 1954 வரையும் கடமையாற்றினார்.


முதலாவது காழி நீதிபதியாக 1936 இலிருந்து 1954 வரையிலும் கடமையாற்றினார். ஏறாவூர் பட்டின சபையில் அக்கிராசனராக 1947 தொடக்கம் 1954 வரை கடமைபுரிந்தார். 1948 ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதன் தலைவராக இருந்து பல சேவைகளை செய்து வந்துள்ளார்.


1952 இல் எலிஸபத் மகாராணியார் இலங்கை வந்த போது இஅவருக்கு “முகாந்திரம்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இது இலங்கையில் 5 பேருக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. அதில் இவர் மாத்திரமே முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏறாவூர் மக்களின் அன்பிற்கும், அபிமானத்திற்கும் உரிய இப்பெரியார் சிறந்த விஷக்கடி வைத்தியராகவும் சேவையாற்றியுள்ளார். தென் இந்தியாவைச் சேர்ந்த பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களை கண்டியில் மீரா மக்காம் பள்ளிவாசலில் சந்தித்து அருள்வாக்குப் பெற்று விஷக்கடி வைத்தியம் செய்து வந்தார்.


இப்பெரியார் 24.10.1954 இல் இறையடி சேர்ந்தார். ஏறாவூர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகிலுள்ள அன்னாரது வன்னியனார் பரம்பரை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். தான் இறையடி சேர்ந்த பின்னரும் இவர்களின் மீஸான் கட்டையில் விஷம் தீண்டியவர்கள் விஷம் இறக்கிக்கொள்வதை தினசரி அங்கே காணலாம். இதனால் “சேர்மன் வலியுல்லாஹ்” என அன்னாரை அழைப்பதுமுண்டு.

https://eeravur.lk/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/