السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 27 May 2024

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

 

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவராக இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பெற்றுக்கொண்டார்கள். சிறு வயதிலேயே புனித அல்-குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்னர் தனது உயர்கல்விக்காக மொரோக்கோவின் பெஸ் நகருக்குச் சென்ற இமாம் அவர்கள், பெஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். இளைஞராக இருக்கும் போது பிக்ஹ் மற்றும் ஏனைய துறைகளிலுள்ள அறிஞர்களுடன் சமயரீதியான விவாதங்களில் ஈடுபடுவதில் சிறந்தவராக இமாம் அவர்கள் காணப்பட்டார்கள். அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்த இமாம் அவர்கள் பின்னர் டியூனிசியா மற்றும் ஈராக் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்கள் கி.பி. 1243இல் தனது 47வயதில் டியூனிஸ் நகரில் தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். முதன் முதலில் டியூனிஸ் நகரின் அல்-பலத் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றினார்கள். இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர். அக்காலப்பகுதியில் டியூனிஸ்

நகரின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் அபூஸகரிய்யா யஹ்யா அவர்களும் இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்டார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்களிடம் முதலில் 40பேர் பைஅத் பெற்றனர். இதுவே ஷாதுலிய்யா தரீக்காவின் ஆரம்பமாகும் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


கி.பி. 1250ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மன்சூரா யுத்தம் நடைபெற்றது. இது எகிப்தின் அய்யூபிய படைக்கும், சிலுவை வீரர்களுக்கும் இடையில் நடைபெற்றது. எகிப்தின் அய்யூபிய படைக்கு அமீர் பக்ருத்தீன் யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னர் சிலுவைப் படைக்குத் தலைமை தாங்கினார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நுாற்றுக்கணக்கான முரீதீன்களுடன் இப்போரில் கலந்துகொண்டார்கள். இப்போரில் எகிப்தியப் படை வெற்றிப் பெற்றதுடன், பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னரும் அவரது படைத்தளபதிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா வழியமைப்பை பிற்காலத்தில் தோண்றிய பல புகழ்பெற்ற அறிஞர்கள் தொடர்ந்தனர். அவர்களில் இமாம் அவர்களின் மாணவரும், ஷாதுலிய்யா வழியமைப்பின் முதலாவது செய்ஹாகாவும்  அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். எகிப்தின் நான்கு பெரும் சூபி அறிஞர்களில் முதன்மையானவராக இவர்கள் கருதப்படுகின்றார்கள்.


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முரீதாக இருந்த இவர்கள், சுல்தானுல் உலமா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் உலகம் தாத்தாரியர்களதும், சிலுவை வீரர்களதும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த வேளை, பிரிந்து இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்துவதற்கு தனது உறுதியான சொற்பொழிவுகளின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார்கள். செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆணித்தரமான உரையே தாத்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜலுாத் என்ற யுத்தத்தின் மூலம் முதன் முறையாக தாத்தாரியர்கள் (மங்கோலியர்கள்) , முஸ்லிம்களால் (மம்லுாக்கிய ஆட்சியாளர்) தோற்கடிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 


இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற கஸீதாவாகக் கருதப்படும், கஸீததுல் புர்தாவை இயற்றிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு ஸஈத் பூஸரி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் செய்ஹ் அபுல் அப்பாஸ்  அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக இருந்தார்கள்.  


நபிகள் நாயகம்  ﷺ அவர்களின் பெயரிலான புகழ்பெற்ற ஸலவாத் தொகுப்பான 'தலாஇலுல் கைராத்தை' கோர்வை செய்த செய்ஹ் முஹம்மத் இப்னு சுலைமான் அல்-ஜஸூலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்கள். மொரோக்கோவின் பெஸ் நகரில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞரான செய்ஹ் அஹமத் அல்-ஸரூக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஸரூக்கிய்யா பிரிவை தோற்றுவித்தார்கள். 


காதிரிய்யா வழியமைப்புக்குப் பின்னர் உலகில் அதிகமானோரால் பின்பற்றப்படும் பிரிவாக ஷாதுலிய்யா வழியமைப்பு காணப்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் ஷாதுலிய்யா வழியமைப்பின் 72பிரிவுகள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஷாதுலிய்யா வழியமைப்பைப் பின்பற்றுகின்றனர். வட ஆபிரிக்கா நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் டியூனிசியா ஆகிய நாடுகளில் ஷாதுலிய்யா வழியமைப்பு அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இமாம் முஹம்மத் அல்-பாஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட  ஷாதுலிய்யா வழியமைப்பின் பாஸிய்யா பிரிவானது இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. 


எகிப்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தலைசிறந்த எழுத்தாளருமான இமாம் ஜலாலுத்தீன் அல்-ஸுயூத்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் புகழ்பெற்ற செய்ஹகாக காணப்பட்டார்கள். இமாம் புகாரி அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு புகழ்பெற்ற விளக்கவுரையை எழுதிய இமாம் சிஹாபுத்தீன் அல்-கஸ்தலானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் செய்ஹ் ஒருவராகக் காணப்பட்டார்கள். புகழ்பெற்ற முஜத்தித்தாகக் காணப்பட்ட இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஒரு செய்ஹாக செயற்பட்டார்கள். 


உதுமானியப் பேரரசின் சுல்தான்களுள் முக்கிய ஒருவராகக் கருதப்படும் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். அவர்களது செய்ஹாக அஷ்செய்ஹ் ஸபீர் எபிந்தி  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்பட்டார்கள். 


இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் நிறுவனர் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தனது ஆரம்ப காலத்தில் ஷாதுலிய்யா தரீக்காவின் "ஹஸபிய்யதுஷ் ஷாதுலிய்யா" பிரிவில் இணைந்து கொண்டார். அத்தரீக்காவில் தான் பெற்ற ஆன்மீக பயிற்சிகளே தான் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளுடன் போராட தனக்கு ஆன்ம வலிமையையும், உறுதியையும் வழங்கியதாக தனது "முஸக்கராத்" என்ற சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

நவீன காலத்தில் தோண்றிய தலைசிறந்த அறிஞராகக் கருதப்படும் செய்ஹுல் அஸ்ஹர் கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை விரிவுரையாளர்களாக பணியாற்றும் பலர் ஷாதுலிய்யா வழியமைப்பை பின்பற்றுகின்றனர். 


முழுமையான கட்டுரையை கீழ்வரும் லிங்கில் வாசிக்க முடியும் - 


https://ziyaratceylon.blogspot.com/2021/05/blog-post_29.html?m=1


தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்


See more

Friday, 24 May 2024

ரவ்ழா ஷரீபை சியாரத் செய்வோம்

 

பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் போகலாமா?

பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் போகலாமா?


பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்ப்பதற்காக பயணம் செய்வதைத் தடுப்பவர்கள் யார் தெரியுமா? 


إذ،إذا 

இத், இதா ஆகிய இரு வார்த்தைகளுக்கும் விளக்கம் தெரியாத வள்ளல்கள் அவர்கள். 


ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحميا


இது அந்நிஸா அத்தியாயத்தின் 64 வது வசனம். 


கருத்து: இன்னும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டால் (நபியே நாயகமே யா ரசூலல்லாஹ்) உங்களிடம் வந்து (உங்கள் முன்னிலையில்) அவர்கள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும். இன்னும் அவர்களுக்காக ரசூ(ல் ஆகிய நீங்க)ளும் பிழை பொறுக்கத் தேட வேண்டும். அப்பொழுதுதான் அல்லாஹ்வை, அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் அவர்கள் காண்பார்கள். 


இத்திருமறை வசனத்தின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த மக்களிடையே இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் எங்கள் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தளம் செல்ல முடியும் என்பதாகும்.


எனினும் இவ்வசனத்தில் உள்ள إذ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு, இந்த வசனம் வள்ளல் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்று சிலர் கூறுகின்றனர்.


இதுவொரு பிழையான பிரசாரம் ஆகும். ஏனென்றால் إذ என்ற வார்த்தை கடந்த காலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. மாறாக எதிர்காலத்திற்கும் சொந்தமானது. அத்துடன் إذ என்பதை எதிர்காலத்திற்கும் إذا என்பதை இறந்த காலத்திற்கும் உபயோகம் செய்யும் வழக்கம் அரபிகளிடம் உண்டு. إذ என்ற வார்த்தைப் பிரயோகம் எதிர்காலத்தைக் குறித்து உபயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க பின்வரும் வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன.


அத்தியாயம் அன்ஆம் வசனம் 27, 30, 93

அத்தியாயம் அஸ்ஸஜ்தா வசனம் 12

அத்தியாயம் சபஃ வசனம் 51

 

وقد اعترض البعض على الاستدلال بالآية فقال:


(إذ) هذه ظرف لما مضى وليست ظرفا للمستقبل لم يقل الله، ولو أنهم (إذا ظلموا)، بل قال، (( إذ ظلموا ))، فالآية تتحدث عن أمر وقع في حياة رسول الله صلى الله عليه وسلم، واستغفار الرسول صلى الله عليه وسلم بعد مماته أمر مُتَعَذَّر لأنه إذا مات انقطع عمله إلا من ثلاث كما قال الرسول صلى الله عليه وسلم : (( صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له )) رواه مسلم

فلا يمكن للإنسان بعد موته أن يستغفر لأحد بل ولا يستغفر لنفسه لأن العمل انقطع. انتهى


وهذا الاستدلال مردود والأدلة على رده ما يلي، أما قصره ( إذ ) على الزمن الماضي فقط ففيه نظر لأن ( إذ ) كما تستعمل في الماضي فتستعمل أيضا في المستقبل، ولها معان أخرى ذكرها ابن هشام في مغنى اللبيب ( 1/ 83.80 ) .


وقد نص على أن ( إذ ) تستعمل للمستقبل الأزهري فقال في تهذيب اللغة ( 15/47 )، العرب تضع (إذ) تستعمل للمستقبل و ( إذا ) للماضي قال الله عز وجل ( ولو ترى ( إذ ) فزعوا )، (سبأ آية رقم 51 ).


ومن استعمال إذ للمستقبل قوله تعالى: ( ولو ترى إذ وقفوا على النار ) ( الأنعام آية 27 ).


( ولو ترى إذ وقفوا على ربهم )، ( الأنعام 30 )


( ولو ترى إذ الظالمون في غمرات الموت ) ، (الأنعام 93 )


( ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ) ، ( السجدة 12 ) .

Thursday, 23 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும். 11

 

━━━━━━━━━ ♛ ━━━━━━━━━╮  கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,        மௌலவி பாஸில் ஷெய்கு        *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*    பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.  ╰━━━━━━━━━━━━━━━━━━━╯

துக்கத்தை வெளிப்படுத்தல்:

---------------------------------

மைய்யித்துக்காக அழுவது தவறல்ல! ஆடைகளைக்கிழித்து தலையில், மார்பில் அடித்து கூச்சல்போடுவதும் ஒப்பாரி வைப்பதும் கூடாது, மரணம் நிகழ்வதற்கு முன்பும், பின்பும் அழாதிருப்பது ஏற்றம்; சப்தமிட்டு அழுவது மக்றூஃ; சப்தம் போடாமல் கண்ணீர் வடிப்பது ஆகும்; மௌத்திற்குப்பின் அழுவது மக்றூஃ 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


فاذا وجبت فلا تبكين باكية 


மரணம் நிகழ்ந்து விட்டால் எந்தப் பெண்ணும் அழாதிருக்கவும்.


முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தான போது ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு மிம்பரில் ஏறி நின்று அன்னாரின் வபாத் செய்தியை அறிவிக்கும்போது இவ்வாறு கூறினார்கள்,


من كان منكم يعبد محمدا فان محمدا قد مات من كان يعبد الله فان الله حي لا يموت 


உங்களில் எவராவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கினால், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தாகிவிட்டார்கள், எவராவது அல்லாஹ்வை வணங்கினால், அல்லாஹ் உயிரோடு இருக்கின்றான்; அவன் மரணிக்கவில்லை; பின்னர் கீழ்வரும் திருவசனத்தை ஓதினார்கள்.


انك ميت وانهم ميتون


நீங்களும் மைய்யித்துத்தான், இன்னும் அவர்களும் மைய்யித்துத்தான்.


وما محمد الا رسول قد خلت من قبله الرسل افئن مات او قتل انقلبتم علي اعقابكم ومن ينقلب علي عقبيه فلن يضر الله شيئا وسيجزالله الشاكرين .


முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் திருத்தூதராகும், அவருக்கு முன்பும் பல திருத்தூதர்கள் வந்து போய்விட்டனர்; அவர் மரணித்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் புறங்காட்டி சென்றுவிடுவீர்களா? (அவ்வாறு எவரேனும் புறங்காட்டி சென்று விட்டால், அதனால் அல்லாஹ்வுக்கு தீங்கிழைத்துவிடமாட்டான்; விரைவில் நன்றியுள்ளோருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். 

3: 144


இதைக்கேட்டதும் ஸஹாபாக்கள் உணர்சிவசப்பட்டனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! இத்திருவசனத்தை இப்போதுதான் முதற்தடவையாகக் கேட்பது போன்றிருந்தது என்று ஹளறத் உமர் பாறூக் றழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; இத்திருவசனத்தின் தாக்கத்தால் அனைவரும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை சிரமேற்கொண்டனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்தில் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தவிர்த்து ஏனைய ஸஹாபாக்கள் சபதமிட்டு அழலானார்கள்;


பொறுமை அழகானது! இரக்கம் மீக்குற்று அழுவதில் தப்பில்லை, ஓர் ஆலிம், ஸாலிஹான மனிதர் உள்ளிட்டவர்கள் வபாத்தான போது அவர்களின் இழப்புக்காக அழுவது முஸ்தஹப்பாகும்; ஆனால் எவராவது ஒருவரின் மரணத்தினால் தனது வருமானம், அல்லது பராமரிப்பு அற்றுப்போய்விட்டதை எண்ணி அழுவது மக்றூஃ; இவ்வாறு அழுவதில் அல்லாஹ்வில் நம்பிக்கையீனம் வெளிப்படுகின்றது;


ஐந்து நபர்களுக்காக அழுவது சுன்னத்தாகும்.


1- ஆலிம்.  

2- நீதமான இமாம் (ஆட்சியாளர்)

3- ஸலிஹான வலி

4- உண்மையான வீரன்

5- கொடைவள்ளல்.


மைய்யித்தின் அருமை பெருமைகளை கூறிக்கொண்டு கூச்சல்போட்டு அழுவது பெரும்பாவத்தில் உள்ளது ஹறாம்; சப்தம் கூட்டி அழுவது மைய்யித்தின் நலவுகளைக் கூறுவது உள்ளிட்ட இரண்டு கருமங்கள் ஒன்று சேர்வது ஹறாம்; இவ்விரண்டில் ஒன்று இருந்து மற்றது இல்லாது போனால் ஹறாமாகாது; 


ஆடையைக்கிழிப்பது, தலையில் அல்லது நெஞ்சில் அடிப்பது; முடியைப்பிடுங்குவது; தலையில் மண்வாரிப்போடுவது; கறுப்பு நிற ஆடை அணிவது உள்ளிட்ட இச்செயல்கள் அல்லாஹுத்த ஆலாவின் பொருத்தத்திற்கும், கழா கத்றுக்கும் எதிரானதாகும்; பொறுமை இழப்பும், கூச்சலும் எதில் வெளிப்படுகிறதோ அது ஹறாமாகும்; 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعو. الجاهلية ،


கன்னத்தில் அடிப்பதும், சட்டைப் பையைக்கிழிப்பதும்; ஜாஹிலியாக்காலத்து சப்தங்களை உயர்த்துவதும் முஃமீன்களின் பண்பைச்சார்ந்ததில்லை.


இவ்வாறான கருமங்களால் மைய்யித்திற்கு வேதனை ஏற்படுவதில்லை, அல்லாஹுத்த ஆலாவின் நாட்டம் அநாதியில் கழாவோடு தொடர்பானதாகும்; ஆக்கலும், அழித்தலும் குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.


மரணம் நிகழ்வதற்கு முன் அழுவது பாராட்டுக்குரியது; இதுதான் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து வெளிப்பட்டது, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்து நின்று இவ்வாறு கூறினார்கள்:


ما تقولون في رجل خير فاختار لقاء الله 


அல்லாஹ் சந்திக்க விரும்பும் அந்த நல்ல மனிதரைப்பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? 


இதைக்கேட்டதும் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அழத்தொடங்கினார்கள், ஸஹாபாக்களில் எவரும் அழவில்லை; அவர்களின் அழுகையை நல்லதாகக்காணவில்லை; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இக்கூற்றின் மூலம் ஸஹாபாக்கள் மத்தியில் தன்னைப்பற்றியே கூறுகின்றார்கள் என்பதை ஹளறத் ஸித்தீக்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு புரிந்து கொண்டார்கள்; அரபியில் இதற்கு نعي இளவு சொல்லுதல் என்று கூறப்படும்; ஒருவரின் மரணத்திற்குப் பின் அவரின் நலவுகளை க்கூறுவதற்கும் نعي எனப்படும்.


தஃஸியத்: ஆறுதல் கூறல்,

--------------------------------

நல்லடக்கம் செய்து மூன்று நாட்கள் வரை மைய்யித்தின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும், தஃஸியத் என்பது, சோதனையில் பொறுமைக்கான வழிகாட்டுதல், ஆறுதல் கூறுதலுக்குக் கூறப்படும்;.


பொறுமைக்கான வழிகாட்டுதல், என்பது "பொறுமை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறுவதோடு பொறுமைக்கான நற்கூலியை எடுத்துக்கூறுவது; மைய்யித்துக்காக மன்னிப்புக் கேட்பது; பாதிக்கப்பட்டவர்களின் கவலையைப் போக்குவதற்காக துஆக்கேட்பது உள்ளிட்டவைக்குறிக்கும்; இவ்வாறு கூறுவது சுன்னத்தாகும்.


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ما من مسلم يعزي اخاه من مصيبة الا كساه الله من حلل الكرامة .


எவராவது ஒரு முஸ்லிம் தனது முஸ்லிம் சகோதரனின் சோதனையில் ஆறுதல் கூறினால் அவருக்கு சங்கையான ஆபரணம் அணிவிக்கப்படும். 


ஆறுதல் கூறும் விதம்:


اعظم الله اجرك ، واحسن عزاك وغفر لميتك وجبر مصيبتك او اخلف عليك .


அல்லாஹுத்த ஆலா உமக்கு மகத்தான கூலி தருவானாக, இன்னும் உமது கவலையை அழகாக்குவானாக; இன்னும் உமது மைய்யித்தின் பிழையைப் பொறுப்பானாக; உமது சோதனையால் உடைந்ததை பிணைப்பானாக இன்னும் உமக்கு அருட்பாக்கியத்தைப் பகரமாக்குவானாக! 


முதன்முதலில் பலவீனமானவரிலிருந்து ஆறுதல் கூறுவதை ஆரம்பிக்க வேண்டும், கவலையோடுள்ள அனைவருக்கும் ஆறுதல் கூறவேண்டும்; மைய்யித்துடையவர்களும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வது சுன்னத் 


கவலையை ஏற்படுத்தும் சாதாரணமான சிறு விடயமானாலும் கூட (வீட்டில் வளர்ப்புப் பூனை செத்தாலும்) ஆறுதல் கூறுவது சுன்னத்; சிறுவர் பெரியவர் பெண்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறவேண்டும்; பெண்களுக்கு திருமணம் முடிப்பதற்கு ஹறாமானவர்கள் மட்டும் ஆறுதல் கூறவேண்டும்; ஆறுதலுக்கான பதில் இவ்வாறு அமைய வேண்டும்.


جزاك الله خيرا وتقبل الله منك ومنه 


அல்லாஹுத்த ஆலா உமக்கு நற்கூலி தருவானாக! உம்தரப்பிலும் இன்னும் அவர் தரப்பிலும் ஒப்புக்கொள்வானாக! 


ஆறுதல் கூறும் காலம்:

--------------------------

இரு தரப்பில் ஒருவர் ஆறுதல் பெறல் என்ற நிபந்தனையில் மூன்று நாள் வரை தஃஸியத் சுன்னத்தாகும், இருவரில் ஒருவர் தூரத்திலிருந்தால் அவர் வந்தபின் அவருக்கு ஆறுதல் கூறவேண்டும்; மைய்யித்திற்குரியவர்கள் அடக்கம் தொடர்பான ஒழுங்கில் ஈடுபட்டிருப்பதால் அடக்கத்திற்குப்பின் தஃஸியத் கூறுவது ஏற்றமாகும்; அதிக கவலை இருந்தால் அமைதிப்படுத்துவதற்காக அடக்கத்திற்கு முன்பு தஃஸியத் கூறுவது ஏற்றமாகும்; மூன்று நாட்களுக்குப் பின் கவலைப்புதுப்பிக்கப்படுவதால் மூன்று நாட்களுக்குப் பின் தஃஸியத் மக்றூஃ; தஃஸியத்துக்கான சரியான காலம் மௌத்திலிருந்து ஆரம்பிக்கின்றது; கடிதம், தொலைபேசி; தொலைநகல் உள்ளிட்டவை மூலமும் தஃஸியத் செய்யலாம். 


உணவளித்தல்:,

----------------

அண்டை வீட்டார்கள், நெருங்கிய உறவினர்கள் மைய்யித்தின் குடும்பத்தவர்களுக்கு இரவு பகல் இரு வேளை உண்ணக்கூடியளவு உணைவைத்தயாரித்து அனுப்பி 

அவர்களை வற்புறுத்தி உண்ணவைக்கவைப்பது சுன்னத், ஏனெனில் கவலையால் சமைக்காமல் பசியோடு இருப்பார்கள்; கவலையால் உடல்பாதிக்கும் என்று புரியவைத்து சாப்பிடவைப்பது சுன்னத்; இந்த உணவை மைய்யித்தின் நெருங்கிய உறவினர்கள் அல்லாதவர்கள் சாப்பிடக்கூடாது, 


மைய்யித் வீட்டை விருந்து வைபவமாக்கக்கூடாது, அறுசுவையான உயர்ரக உணவைத் தவிர்க்க வேண்டும்; சந்தோஷத்தில் பரிமாறும் பிரியாணி, வறுவல் உள்ளிட்டவையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; இது நோக்கத்திற்கு எதிரானது. சில அறிவிலிகள் தங்களின் பெரியதனத்தைக்காட்ட இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.


நோய்க்கு சிகிச்சையளிப்பது:  

-----------------------

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ان الله لم يصع داء الا جعل عليه دواء غير الهرم 


நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா மரணத்தைத்தவிர எந்த ஒரு நோய்க்கும் அதற்கான மருந்தை ஏற்படுத்தியே தவிர வைக்க வில்லை.


காரண காரியங்களைப் பேணிக்கொண்டு விதியைமறுக்காமல் பொருந்திக்கொள்வதுதான் றிழா رضا ஆகும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைத்து தவக்குல் காறர்களுக்கும் செய்யித் நாயகராகும்; அன்னார் நோயுற்ற போது வைத்தியர்களிடம் பரிகாரம் செய்தார்கள்; பொருட்களில் அல்லாஹுத்த ஆலா வைத்திருக்கும் தனித்துவங்களை மறுக்கக்கூடாது. அல்லாஹ்வில் தவக்குல் வைத்திருப்பதாகக்கூறி நோய்க்கு பரிகாரம் பார்க்காமலிருப்பது அறிவீனமாகும்.


தௌபா:

------

பாவத்திலிருந்து தௌபாச்செய்வதை விரைவு படுத்துவது இன்னும் மௌத்திற்காக எந்த நேரமும் தயாராக இருப்பது வாஜிபாகும், திடீரென மரணம் வந்தால் தௌபாவுக்கான வாய்ப்பை இழந்தவராகிவிடுவார்.


மௌத்தை நினைவு கூர்வது சுன்னத், மௌத்தை நினைவு கூர்வதால் உலக ஆசை தணியும், நல்ல காரியங்கள் இரட்டிப்பாகும்.


மரணத்தை விரும்புதல்:

------------

 உலக காரியங்களில் உடல், உளப்பிரச்சினைக்காக மரணத்தை விரும்புவது மக்றூஃ மார்க்கத்தில் குழப்பம் ஏற்பட்டால், அல்லது ஏதும் மறுமைக்கான காரணங்களுக்காக மரணத்தை எதிர்பார்ப்பது சுன்னத்; உ+மாக பீஸபீலில் ஷஹாதத்தை எதிர்பார்ப்பது.


கப்றைத் தரிசித்தல்:

---------------------

கப்றைத்தரிசித்தல் மூலம் மறுமையின் நினைவு வருவதால் சுன்னத், பெண்களின் மனம் பலவீனமாக இருப்பதால் கப்றுகளைச் ஸியாறத்செய்வது மக்றூஃ, அன்னிய ஆண்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் பெண்களுக்கு ஹறாம்; இதில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றௌழாவை ஸியாறத் செய்வது விலக்கலாகும்; 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


من حج وزار قبري بعد وفاتي كان كمن زارني في حياتي 


எவர் ஹஜ் செய்து எனது வபாத்திற்குப் பின் எனது கப்றை சியாறத் செய்கின்றாரோ அவர் என்னை உயிரோடு இருக்கும்போது ஸியாறத் செய்தவர் போன்றாவார்.


நபிமார்கள் வலிமார்களின் கப்றுகளை ஸியாறத் செய்வது தொடர்பில் இதே கருத்தை இப்னு றுப்ஆ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், புகஹாக்களில் ஸூபிகள் நபிமார்கள் வலிமாராகளின் கப்றுகளை பெண்கள் ஸியாறத் செய்யலாம் என்கின்றனர்.


ஸியாறத் செய்பவர்கள் பின்வருமாறு கூறுவது சுன்னத்,


السلام عليكم دار قوم مؤمنين وانا ان شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية ، اللهم لا بحرمنا اجرهم ولا تفتنا بعدهم واغفرلنا ولهم 


என்று கூறுவது சுன்னத்.


கப்றைத் தரிசித்தலில் பின்வரும் நோக்கங்கள் உள்ளன,


1- மரணத்தையும், மறுமையையும் மட்டும் ஞாபகப்படுத்துவதற்காக:


 கப்றிலிருப்பவர்களைப்பற்றி அறிந்து கொள்ளாமல் கப்றுகளைப் பார்ப்பதால் இது நிறைவேறும்‌


2- துஆக்கேட்பதற்காக:


இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சுன்னத்,


3- பறக்கத் பெறுவதற்காக: 


     நல்லடியார்களான வலிமார்களைத் தரிசிப்பதால் இது நிறைவேறும், இவர்களின் பர்ஸகின் உலகத்தில் இவர்களுக்கு ஆட்சி அதிகாரமிருக்கிறது, உதவிசெய்யக்கூடிய கணக்கற்ற பறக்கத்துக்களுமிருக்கின்றன;


4- நண்பர்கள், பெற்றோர்களைப்போன்று கடமையை நிறைவேற்றுவதற்காக தரிசித்தல்,


من زار قبر والديه او احدهما يوم الجمعة كان كحجة وفي رواية غفر له وكتب له براءة من النار 


எவராவது ஒருவர் பெற்றோரின் கப்றை அல்லது இருவரில் ஒருவரை ஜும்ஆவுடைய தினத்தில் ஸியாறத் செய்தால் ஹஜ்செய்தவர் போன்றாகுவார், ஓர் அறிவிப்பில் அவர் பாவம் மன்னிக்கப்படும் இன்னும் நரகத்திலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும் என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது.


5- இரக்கம் இன்னும் அன்னியொன்னியத்திற்காக: 


 உலகத்தில் நேசத்திற்குரியவர் கப்றிலிருப்பவரைச்சியாறத் செய்யும் போது அவர் உறவால் அன்னியொன்னியப்படுகிறார்.

                                       ஈஆப் ايعاب


 கப்றுகளிலிருப்பவர்கள் பரஸ்பரம் அறிந்து கொள்வார்கள், தங்களின் கபன் உடையுடன் மற்றவர்களைச் சந்திப்பார்கள், ஆகவேதான் கபனை அழகுபடுத்திப் போடுங்கள் எனப்படுகிறது; மேலும் தங்களை ஸியாறத் செய்பவர்களை அறிவார்கள்; அவர்கள் மூலம் அன்னியொன்னியமடைவார்கள்; அவர்களுக்குச் சொல்லப்படும் ஸலாத்திற்குப்பதில் கூறுவார்கள்;   


பூமிஅவர்களுக்குத் திரையாக ஆகாது, அவர்கள் மறைவான உலகில் உள்ளவர்கள்; அதைப்பற்றி நாம் ஈமான் கொள்ள வேண்டியது அவசியம்;


முஃமீன்களின் றூஹ் சொர்க்கத்திலும் காபிர்கள் றூஹ் ஸிஜ்ஜீன் என்ற நரகிலிருந்தாலும் நான்காம் வானத்திலிருக்கும் சூரியன் பூமியில் தொடர்பாக இருப்பது போன்று கப்றிலிலுள்ள உடலோடு தொடர்பாக இருக்கும்.


மரணித்தவர்களின் றூஹ் திங்கள், வெள்ளி மங்ரிபுக்குப் பின் வாழ்ந்த இடங்களுக்கு வந்து தங்களுக்கு நன்மைகளைச்சேர்த்து வைக்குமாறு வேண்டுகின்றன, நன்மைகளைச் சேர்த்து வைத்தால் சந்தோஷப்படும்; தவறினால் கவலையோடு திரும்பிச்செல்லும் என்பது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் மத்ஹப் என்று இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்; 


யாஸீன் ஓதுதல்:


யாஸீன் சூறத் அல்லது வேறு திருவசனங்களை ஓதி அவர்களுக்குச்சேர்த்துவைத்த பின் அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆக்கேட்க வேண்டும், இதன் நன்மைகள் அவர்களைப்போய்ச் சேரும் என்ற எண்ணத்தில் தர்மங்கள் நல்லகாரியங்கள் செய்ய வேண்டும்; கப்றில் தலைப்பக்கமாக கப்றை முன்னோக்கி கிப்லாவை பின்நோக்கி ஸலாம் கூற வேண்டும்; 


கப்றில் அல்லது பெட்டியில் கைவைப்பது அல்லது முத்தமிடுவது மக்றூஃ ஆகும், இவ்வாறு நபிமார்கள் வலிமார்களின் கப்றுகளிலும் முத்தமிடுவது மக்றூஃ பறக்கத்தை நாடி ஒழுக்கத்தோடு முத்தமிடுவது ஆகும் என்று சிலர் கூறியுள்ளனர்; உயிரோடு இருக்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வதை விட கூடுதல் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்; ஆகவே கப்றிலிருந்து சற்று இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்; 


அறிவில்லாத சில மூடர்கள் வலிமார்களின் கப்றில் நெஞ்சை வைப்பது, சாய்ந்து படுப்பது; முத்தம் என்ற பெயரில் சுஜூது செய்வது பாவமானதும் வரம்பு மீறியதுமாகும்.


ஈஸாலுத்தவாப்: 

--------------------

நான்கு இமாம்களின் கூற்றுப்படி திருக்குர் ஆன் ஓதும் நன்மை மைய்யத்திற்கு போய்ச்சேரும்,


وان ليس للانسان الا ما سعى  


மனிதனுக்கு அவன் முயற்சி செய்தது அன்றி இல்லை 


என்ற திருவசனம் நல்லமல்களை அதிகப்படுத்துவதற்கும் அவனை ஊக்கப்படுத்துவதற்குமாகும்;, சிலர் இத்திருவசனம் மாற்றப்பட்டது என்கின்றனர்; மற்றும் சிலர் இத்திருவசனம் நபி இப்றாஹீம் நபி மூஸா அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தோடு தொடர்பானது என்கின்றனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களுக்கு அவர்கள் முயற்சித்ததும் அடுத்தவர்கள் முயற்சித்ததும் கிடைக்கும்;


முஸ்லிம் ஷரீபில் ஹளறத் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கும் ஹதீதில் இவ்வாறுள்ளது,


ஒரு பெண் தனது குழந்தையை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடத்தில் 

தூக்கிக்காட்டி 

இந்த குழந்தைக்கும் ஹஜ் கடமையா? என்று கேட்டார்; ஆம் உமக்கும் கூலி கிடைக்கும் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ‌ 


முஸ்லிம் ஷரீபில் மேலும் பதிவாகியுள்ளது.


ஒருவர் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வந்து எனது தாய் வபாத்தாகி விட்டார்கள், அவருக்காக நான் ஸதக்காக் கொடுத்தால் அது அவரைச்சேருமா என்று கேட்டதற்கு ஆம் சேரும் என்றார்கள்.


இவ்வாறான ஆதாரங்கள் ஏராளம் உண்டு! விபரம் வேண்டியவர்கள் எமது ஜாஅல்ஹக் அசத்தியம் அழிந்தது என்ற பெருநூலைப்பார்க்கவும்.


கப்றில் பச்சைக்கொத்துக்களை நடுவதும் பூப்போடுவதும் சுன்னத், அதில் பசுமை இருக்கும் வரை அது தஸ்பீஹ் செய்யும்; அதனால் மைய்யித்தின் வேதனை இலேசாகிறது. இவை காய்ந்து போகுமுன் அதை அகற்றுவது ஹறாமாகும். சிலர் மைய்யவாடியை சுத்தம் செய்தல் என்ற போர்வையில் கப்றலிருக்கும் பச்சைகளையும் கப்றையும் நிர்மூலமாக்கி அடையாளத்தை இல்லாமல் செய்கின்றனர்; இவ்வாறான விஷமிகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கப்றில் மரம் போன்றதை நட்டு அதற்கு நீர்பாய்ச்சி வளர்ப்பதால் அதன் வேர் மைய்யித்தை சென்றடையுமாயின் ஹறாமாகும், இல்லாவிட்டால் கடுமையான மக்றூஃ, ஹறாம் என்றும் கூறப்பட்டுள்ளது அறிவில்லாத சிலர் நன்மையெனக்கருதி இவ்வாறு செய்து பாவத்தை சம்பாதிக்கின்றனர்;


கப்றை மிதிப்பது உட்காருவது மலம்சலம் கழிப்பது ஹறாம் என்று ஷறஹ் முஸ்லிமில் கூறப்பட்டுள்ளது. மைய்ய வாடியில் மிருகங்களை மேய விடுவது மனிதன் மிதித்து நடப்பதை விட கடுமையான மக்றூஃ ஆகும்; மிருகம் கப்றில் சிறுநீர் கழிப்பதை எவராவது கண்டால் துரத்துவது வாஜிபாகும்; சாதாரணமான கப்றில் இச்சட்டமாயின் அல்லாஹ்வோடு யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட வலிமார்கள் விடயத்தில் எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயிருள்ளவர் எதையெல்லாம் வெறுப்பார்களோ அதை மரணித்தவர்களும் வெறுப்பார்கள்; உயிருள்ளவருக்கு வேதனை தருவது மரணித்தவருக்கும் வேதனை கொடுக்கும்; மைய்யித்தின் எலும்பை முறிப்பது உயிருள்ளவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.

━━━━━━━━━ ♛ ━━━━━━━━━╮

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     

 மௌலவி பாஸில் ஷெய்கு   

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

╰━━━━━━━━━━━━━━━━━━━╯

Wednesday, 22 May 2024

மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் 4

 இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.




இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.

இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.

இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.

இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.

இன்று 22/05/2024 கல்முனை அஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் மஃஆனிமுல் முஸ்தபா அரபுக்கல்லூரி மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது.
























Tuesday, 21 May 2024

மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும்.



மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும்.

 முஸ்லிம் சமூகத்தில் குர்ஆன் மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும். 


இஸ்லாமிய நாகரீக வரலாற்றை நாம் எடுத்து நோக்கினோமானால் அது காலமாற்றத்திற்கு ஏற்றால் போல் தன்னை அல்குர்ஆன் ஸூன்னாவிற்கு முரண்படாதவாறு அழகியல், கலாச்சாரம், அறிவியல், அரசியல், பொருளியல், வரலாறு மற்றும் சமூகவியல் என பல துறைகளிலும் இயைந்து கெடுத்து மாற்றமடைந்தது செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் தான் இன்று வரை உலக வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ச்சியடைந்து அழிவுற்றாலும் 14 நூற்றாண்டுகளைக் கடந்தும் இஸ்லாமிய நாகரிகம் தனது நெகிழும் நெகிழாத் தன்மையின் ஊடாக தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது  வருவதை நாம் காணலாம்.


எமது நாகரிகத்தின் வளர்ச்சி பாதையில் மஸ்ஜிதுகளின் பங்கு என்பது என்றும் மறக்க முடியாத தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டு வருகின்றது. 


இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்திய நிலையமாகவே இருந்து வந்துள்ளது என்பதை வரலாற்றினுடா நாம் அறிய முடிகின்றது. அதாவது தொழுகைத் தளமாக, நீதிமன்றமாக ,கல்விக்கூடமாக பொது விடயங்கள் கலந்துரையாடப்படும் மத்திய தளமாக, திருமண மண்டபமாக ஒழுக்க சீர்திருத்தக் கூடமாக என பல கோணங்களிலும் முஸ்லிம் சமூகத்துடன் மிக நெருங்கிய ஒன்றாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


காலம் மாற்றம் மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ஆன்மிக கல்வியை போதிப்பதிலும் பெற்றுக் கொள்வதிலும் எந்த ஒரு புதிய நடைமுறைகளை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இவ் ஆன்மீக கல்வியை பள்ளிவாயல்கள் குர்ஆன் மத்ரஸாக்கள், குல்லியாக்கள், கலாபீடங்கள் போன்ற தளங்களின் ஊடாகவும் வெள்ளிதேறும் குத்பா உரைகள் , கந்தூரிகள் ,மீலாத் விழாக்கள் மற்றும் ரமழான் விஷேட நிகழ்வுகள் என பல ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாகவும் வழங்கி வருகின்றன.


இதில் குர்ஆன் மத்ரஸா கல்வி என்பது முஸ்லிம் சமூகத்தின் குழந்தைகளின் ஆரம்ப ஆன்மீக கல்விக் கூடமாக திகழ்கின்றது.


இக்கூடத்தை இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரதேச மக்களும் வெவ்வேறு சொல்லாடல்களை கொண்டு அடையாளப்படுத்துவது இயல்பு அதில் ஓதர, ஓதல் பள்ளிக்கூடம் ,மரைக்கார் பள்ளி போன்ற சொற்கள் மிகவும் பிரபல்யமானவையாகும்.


இக்குர்ஆன் மத்ரஸாக்கள்  எமது குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பல பங்களிப்புக்கள் மற்றும் அடிப்படைகளையும் வழங்கி வருவதை நடைமுறை வாழ்வின்ஊடாகவே நாம் இயல்பாக காண முடியும். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.


சிறுபிள்ளைகளுக்கு அரபு எழுத்துக்களை கற்பித்தல் மற்றும் குர்ஆனை முறைப்படி ஓதப் பழக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும் பிரதான தளமாக காணப்படுகின்றன.


நல்ல ஒழுக்க விழுமியங்கள் போதிக்கப்படும் தளமாக காணப்படுகின்றன. 


தொழுகை சம்பந்தமான ஆரம்ப பயிற்சி வழங்கப்படுவதுடன் குறிப்பாக தொழுகைகளில் ஓதப்படும் ஓதல்கள் சம்பந்தமான விளக்கங்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.


நபி (ஸல்)அவர்கள் பற்றியும் அவர்களது குடும்பம் மற்றும் ஏனைய இறை நேசர்களின் சிறுவயது வாழ்வு மற்றும் அவர்களுடைய நற்பண்புகள் தொடர்பான வரலாற்று சம்பவங்கள் போதிக்கப்படுகின்றன.


சிறு பிள்ளைகளுக்கு இடையிலான விட்டுக்கொடுப்பு அன்பு சகோதரத்துவம் போன்ற சமூகப் பண்புகள் கற்பிக்கப்படும் தளமாகவும் திகழ்கின்றன. 


இஸ்லாமிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற கஸீதாக்கள் மௌலிதுகள் போன்றன கற்பிக்கப்படுகின்றன.


பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்ற நடைமுறை வழிகாட்டல்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 


ஆரம்பகால முதல் இன்று வரை இவ்வாறு பல கோணங்களில் சிறுவர்களின் ஆன்மீக கல்வியின் அடிப்படைத் தளத்தில் பல பங்களிப்புகளை குர்ஆன் மத்ரஸாக்கள் செய்தாலும் நடைமுறையில் அவற்றின் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் இன்று காண முடிகின்றது. 


பொதுவாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தோற்றம் பெற்றுள்ள மாணவர் மையக் கல்வியை விருத்தி செய்து  வளர்ச்சியடையச் செய்வதற்கான இயலுமை இன்றைய குர்ஆன் மத்ரஸா கல்வி முறையில் இல்லை என்ற விமர்சனம் பிரதானமாக முன் வைக்கப்படுகின்றது. அதாவது குர்ஆன் மத்ரஸாக்களின் கல்வியானது கற்பிக்கும் ஆசிரியர்களின் வார்த்தைகளை மாணவர்கள் செவிமடுத்து மனனம் செய்து மீண்டும் கூறுகின்ற ஆசிரியர் மையக் கல்வியை ஆதரிப்பதாகவே காணப்படுகின்றது. இந்நிலை மாணவர்களின் சிந்தனை ஆற்றல்  விருத்தியை கட்டுப்படுத்துவதாக அமையப்பெற்றுள்ளது.


பள்ளிவாயில்களின் நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுகின்ற குர்ஆன் மத்ரஸாக்களில் நன்கு அரபு மொழியில் புலமை பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்கள் அதேபோல் சாதாரணமாக குர்ஆனை ஓதத் தெரிந்த லெப்பை என்று அழைக்கப்படுகின்றவர்களும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றார்கள்.


இதில் அரபு மொழியில் புலமை பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அல்குர்ஆனை கற்பிக்கும் போது அல்குர்ஆனின் பொருள், யதார்த்தம் போன்றவற்றை உணர்த்தும் வகையில்  தனது கற்பித்தலை மேற்கொள்வார்கள் ஆனால் அரபு மொழியில் புலமை பெறாத லெப்பை ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்கள் பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்பிக்க முற்படுகின்ற போது அதை வெறுமனே ஓதுவதற்கான அறிவை மாத்திரமே வழங்குபவர்களாக காணப்படுவார்கள். இதனால் மாணவர்கள் அல்குர்ஆனின் அடிப்படையான மொழி அர்த்தத்தை கூட விளங்கிக் கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்படுவதை நாம் காணலாம்.


பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தை பொருத்தவரை அது பழமையானதாகவும் புராதன விடயங்களை மாத்திரம் உள்ளடக்கியதாகவும் இன்று வரை காணப்படுகின்றது. மாறாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றால் போல் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீழ் பரிசீலனை செய்வதென்பது அசாத்தியமான ஒன்றாகவே இன்று வரை தொடர்கின்றது. இதனால் மாணவர்கள் கிளிப்பிள்ளைகளைப் போலவே வடிவமைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலான மத்ரஸாக்களின் பௌதீக வளங்களை நாம் நோக்குகின்ற போது ஏனைய கல்விகளுக்காக அமைக்கப்படுகின்ற வசதியான கட்டிடங்கள் போல் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக இருந்தாலும் வறுமையான பிரதேசமாக இருந்தாலும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு எவ்வித கட்டடங்களும் முறையாக அமைக்கப்பட்டுவதில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.


நாம் கற்ற காலங்களில் இருந்து இன்று வரை பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களின் கட்டடங்கள் ஓலை குடிசைகளாகவும், சிதைந்த ,இடிந்த அழுக்கடைந்தாகவுமே காணப்படுவதுடன் அங்கு பயன்படுத்தப்படுகின்ற தளபாடங்கள் கிழிந்த அழுக்கடைந்த பாய்களாகவே காணப்படுகின்றன.


அதேபோல் அங்கு  கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களது அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கு கூட போதுமானதாக இன்று வரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இவ்வாறான சூழல்கள் குர்ஆன் மதரஸா மாணவர்களின் சுகாதாரச் சூழல் கல்வியின் தரம் போன்றவற்றில் செல்வாக்கு செலுத்துவதை அறிய முடிகிறது. 


குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறுவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய உளவியல் என்பது பெரியவர்களின் உளவியலில் இருந்து மாறுபட்டது. எனவே சிறுவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற சிறுவர் உளவியல் கற்ற ஆசிரியர்கள் குர்ஆன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக அமர்த்தப்படுவது இன்று அரிதாகவே காணப்படுகின்றது . இந்நிலை குர்ஆன் பாடசாலை மாணவர்களின் உள ஆரோக்கியத்தில் பாதிப்பு செலுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.


இவ்வாறு பல கோணங்களில் குர்ஆன் மத்ரஸாவில் செயற்பாடுகள் நவீன காலத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தாலும் அதன் தேவையும் முக்கியத்துவமும் சமூகத்தில் எக்காலமும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது 


எனவே  நவீன மாற்றங்கள் சிலவற்றை குர்ஆன் மத்ரஸாவின் கல்வித்திட்டத்தில் ஏற்படுத்துவதன் ஊடாக ஒரு பாரிய ஆன்மீக கல்விப் புரட்சியை எமது இளம் சமூகமட்டத்திலிருந்து மேற்கொள்ள முடியும் என்பது நம்பத்தக்கதாகும்.


இதன் அடிப்படையில் பின்வரும் சில மாற்றங்களை குர்ஆன் மத்ரஸாக்களில் இற்றைப்படுத்துவதன் ஊடாக வினைத்திறனான மாற்றங்களை நாம் உணரலாம். 


குர்ஆன் மத்ரஸாவின் அமைப்பிலும் சூழலிலும் மாற்றங்களை கொண்டு வருதல் வேண்டும். அதாவது சீரான கட்டடங்கள் மற்றும் அழுக்கடைத்த தளபாடம் மாற்றி அமைக்க வேண்டும்.


பாடத்திட்டம் முழுமையாக மாணவ மைய கல்வியை போதிப்பதாகவும் நடைமுறை சூழலுக்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்கப்பட கூடியதாகவும் அமைய வேண்டும்.


வருடத்தில் ஒருமுறை மாத்திரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.


மத்ரஸாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் அறிவுத்தரத்தை அதிகரிப்பதுடன் சிறுவர் உளவியல் சம்பந்தமான கல்வி அவர்களுக்கு போதிக்கப்படல் வேண்டும்.


கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொருத்தமான போதியனமான ஊதியம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். 


மாணவர்களுக்கு குர்ஆன் மத்ரஸா கல்வியை பாடசாலை கல்வியை போல இலகுவாக போதிக்க முயற்சிக்க வேண்டும். 


குர்ஆன் மதரஸாக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் உரிய முறையில் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். 


எனவே சுருக்கமாக கருதினால் இஸ்லாமிய நாகரிகத்தின் பெரும்பாலான துறைகள் காலமாற்றத்திற்கு ஏற்றால் போல்‌ இயைபடைந்து செல்வதே போல குழந்தைகளின் ஆன்மீகக் கூடமான குர்ஆன் மத்ரஸா கல்வியை நவீன சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் மாற்றி அமைப்பதனுடாக மத அடிப்படையிலான ஆரம்பக் கல்வியை எமது சமூக மாணவர்களுக்கு வினைத்திறனாக வழங்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


உசாத்துணைகள் 

ஜெமில் எஸ்.எச்.எம்,(1990), கல்வி சிந்தனைகள், தமிழ் மன்றம், கொழும்பு.


அல்- இன்ஷிராஹ் , பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பேராதனைப் பல்கலைகழகம்.


Hans Raj Bhatia. 1991. General Psychology. Oxford & IBH Publishiry co. pvt. Ltd. New Delhi. 

 

Mangal. S.K. 2006. General Psychology. Sterling Publishers pvt. Ltd. New Delhi.


M.L Lathfan Rosin 

Department of Political Science 

Faculty of Arts 

University of Peradeniya.

133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப்

 

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்; எதிர்வரும் 25ஆம் திகதி (25.05.2024) சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையின் பின்னர் கலீபத்துஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி மஜ்லிஸ் நடைபெறுவதோடு தொடர்ந்து 9 நாட்கள் மனாகிப் மஜ்லிஸ் இடம்பெறுவதோடு, உலமாக்களினால் மார்க்க உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

தினமும் இடம்பெறும் மனாகிப் மஜ்லிஸில் ஆத்மீக ஞானி இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பணிகள் பற்றிய விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றி வருகிறது.

கலீபதுல் குலபாவும் காலி அலிய்யா சட்டக்கல்லூரி பணிப்பாளருமான மௌலவி உஸ்தாத் எம்.இஸட். ஸ{ஹ்ர் (பாரி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அஷ்ஷெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்சி) ஆகியோர் தமாம் மஜ்லிஸில் உரையாற்றவுள்ளதாக சீனன்கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம். சிஹாப் தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இம்மஜ்லிஸில்; கலீபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் பங்குபற்றுவர்.
ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் அல் குத்புல் அக்பர் இமாம் அபுல்ஹசன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் 850ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும் ஷாதுலிய்யா மஷாயிகுமார்களின் ஞாபகார்த்தமாகவும் இம்மஜ்லிஸ் இடம்பெறுகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்

ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்

 விபத்துக்குள்ளான ஈரான் ஜனாதிபதியின் ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ராயிஸி, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயணித்த ஹெலி ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரானின் வட மேற்கு பகுதியில் விபத்துக்குள்ளானது. அவர்கள் பயணித்த ஹெலி ஏறத்தாழ 12 மணி நேரமாக ராடாரில் இருந்து மறைந்திருந்தது. பின்னர், ஈரான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க துருக்கியின் தயாரிப்பான "அகின்ஸி (Akinci)" ஆளில்லா விமானம் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்துக்குள்ளான பகுதிக்கு தேடுதல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குள் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலியின் சிதைவடைந்த பகுதிகள், குறித்த ஆளில்லா விமானத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் GPS புள்ளிகள் ஈரானிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. துருக்கியின் அகின்ஸி ஆளில்லா விமானத்தின் தேடுதல் நடவடிக்கைகள் துருக்கியின் அனடோலு செய்திச் சேவையின் X பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், அந்த நேரடி ஒளிபரப்பை 3.1 மில்லியன் பேர் பார்வையிட்டனர். 


நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அகின்ஸி ஆளில்லா விமானம் முதன் முதலாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி வானில் பறக்கவிடப்பட்டதுடன், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி துருக்கி இராணுவத் தளபாடங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆளில்லா விமானம் 40,000 அடி உயரத்திலும் மேலாக பறக்கக்கூடிய ஆற்றல் கொண்டதுடன், தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு அதிமான நேரம் பரந்த அளவிலான பகுதிகளை கண்காணிக்கக்கூடிய வல்லமையையும் கொண்டது. அகின்ஸி ஆளில்லா விமானமானது , துருக்கியின் இஸ்தான்புல் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் "பய்கர்" என்ற என்ற ஆளில்லா விமானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் அதிக உயரத்தில் பறக்கும் வல்லமையையும், அதி உயர் வெப்ப தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது மிகவும் குறைவாக 100 மீற்றர உயரத்தில் மலைப்பாங்கான பகுதிகளிலும், சவாலான வானிலை மாற்றங்களின் போது பறக்கக்கூடிய வல்லமை கொண்டது.

Monday, 20 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர்10

 

தல்கீன்: -------- மைய்யித்துக்கு தல்கீன் கூறுவது சுன்னத்: அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான். فذكر فان الذكرى تنفع المؤمنين  நல்லுபதேசம் செய்யுங்கள் நிச்சயமாக நல்லுபதேசம் முஃமீன்களுக்கு பிரயோசனம் செய்யும். முகல்லபுக்கு தல்கீன் சுன்னத்தாகும், முகல்லப் அல்லாதவருக்கு சுன்னதில்லை; ஷஹீதுக்கு தல்கீன் சொல்லப்படுவதில்லை; தல்கீனுக்குரிய வாக்கியங்கள் வருமாறு, يا عبدالله ابن امة الله  اذكر العهد الذي خرجت عليه من الدنيا  شهادة ان لا اله الاالله  وان محمدا  رسول الله  وان الجنة حق  وان النار حق وان القبر حق وان الساعة اتية لا ريب فيها  وان الله يبعث من في القبور وانك رضيت بالله ربا وبالاسلام دينا  وبمحمد صلي الله عليه وسلم نبيا ورسولا  وبالقران اماما  وبالكعبة قبلة  وبالمؤمنين اخوانا


தல்கீன்:
--------
மைய்யித்துக்கு தல்கீன் கூறுவது சுன்னத்:
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
فذكر فان الذكرى تنفع المؤمنين
நல்லுபதேசம் செய்யுங்கள் நிச்சயமாக நல்லுபதேசம் முஃமீன்களுக்கு பிரயோசனம் செய்யும்.
முகல்லபுக்கு தல்கீன் சுன்னத்தாகும், முகல்லப் அல்லாதவருக்கு சுன்னதில்லை; ஷஹீதுக்கு தல்கீன் சொல்லப்படுவதில்லை;
தல்கீனுக்குரிய வாக்கியங்கள் வருமாறு,
يا عبدالله ابن امة الله اذكر العهد الذي خرجت عليه من الدنيا شهادة ان لا اله الاالله وان محمدا رسول الله وان الجنة حق وان النار حق وان القبر حق وان الساعة اتية لا ريب فيها وان الله يبعث من في القبور وانك رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلي الله عليه وسلم نبيا ورسولا وبالقران اماما وبالكعبة قبلة وبالمؤمنين اخوانا
தல்கீனுடைய வாக்கியங்களை மூன்று விடுத்தம் கூறுவது சுன்னத்தாகும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரே மகனான இப்றாஹீம் றழியல்லாஹு அன்ஹு ஒருவருடம் பத்து மாதமாக இருக்கும் போது வபாத்தாகி விட்டார்கள், அவர்களின் நல்லடக்கத்திற்குப் பின் பின்வரும் வசனங்களை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒதினார்கள்;
قل الله ربي ورسول الله ابي والاسلام ديني
கூறுவீராக! அல்லாஹ் எனது றப்பு, அல்லாஹ்வின் திருத்தூதர் எனது தந்தை எனது மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! பாவமறியாத பச்சைக்குழந்தைக்கு இவ்வாறு தல்கீன் சொல்லப்படுகிறதே! எங்களுக்கு யார்தான் சொல்லித்தருவார்கள்? என்று ஸஹாபாக்கள் கூறிய போது
يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الاخرة
பலப்படுத்தும் வார்த்தையின் காரணமாக ஈமான் கொண்டவர்களுக்கு
இம்மைவாழ்விலும் மறுமையிலும் அல்லாஹுத்த ஆலா பலப்படுத்துவான்.
தல்கீன் தொடர்பான ஹதீது பலவீனமானது என்று சிலர் கூறி தல்கீன் பித்அத் என்கின்றனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் புதிதாக உருவானதற்குத்தான் பித்அத் எனப்படும்; தல்கீனுக்கான மூல ஆதாரம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாயினால் மொழியப்பட்டுள்ளதால் அதனை பித்அத் என்று கூறுவது சரியல்ல!ஆயினும் இப்போதுள்ள முறைப்படி தொடர்சியாகச் செய்வது பித்அத்தாக இருப்பினும் அது சுன்னத் என்று அறிஞர்கள் தீர்ப்புக்கூறியுள்ளனர்.
தல்கீன் பற்றிய ஹதீத் பலவழிகளால் வந்திருப்பதால் அது ஹஸன் தரத்தில் உள்ளது; தவிர, பலவீனமான ஹதீதை சுன்னத்தான அமலுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது புகஹாக்கள் முஹத்ததீன்களின் இஜ்மாஃவாகும்.
நல்லடக்கத்திற்குப் பின் கப்றைச்சுற்றி சிலர் தங்கியிருந்து மைய்யித்துக்காக பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்; மையித்தை நல்லடக்கம் செய்த பின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கப்றடியில்நின்று
استغفروا لاخيكم واسئاواله التثبيت فانه الان يسئل
தங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்புத்தேடுங்கள் நிச்சயமாக இந்த நேரத்தில் அவர் விசாரிக்கப்படுகின்றார் என்று கூறுவார்கள்.
புஜைறமி என்ற நூலில் தல்கீனின் வாக்கியம் பின்வருமாறு உள்ளது
• اعوذ بالله من الشيطان الرجيم ، بسم الله الرحمن الرحيم ، كل من عليها فان ةيبقي وجه ربك ذوالجلال والاكرام ،كل نفس ذائقة الموت وانما توف ن اجوركم يوم القيمة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز ، وماالحية الدنيا الا متاع الغرور منها خلقناكم للعمل والثواب نعيدكم للقبر والتراب ومنها نحرجكم للبعث والحساب تارة اخرى ،
يا عبد الله يا ابن امة الله اذكر العهد الذي خرجت عليه من دار الدنيا الي دار الاخرة وهو شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله ، وان الجنة حق وان النار حق وان الساعة اتية لا ريب فيها وان الله يبعث من في القبور ،
فاذا جاءك الملكان فلا يفزعاك ولا يروعاك ولا يرهباك فانما هما خلق من خلق الله تعالى فاذا سئلاكا عن ربك وعن نبيك وعن دينك فقل لهما الله ربي ومحمد صلي الله عليه وسلم نبيي والكعبة قبلتي والقران امامي وامؤمن ن اخواني ،
ثبتك الله وايانا وجميع المؤمنين بالقول الثابت يثبت الله الذيم امنوا بالقول الثابت في الحيوة الدنيا وفي الاخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ، يا ايتها النفس المطمئنة ارجعي الي ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
வள்ளம், கப்பல் ஆகியவற்றில் மரணித்து கடலில் தாழ்த்திப்போட்டாலும், மீன் முதலை வயிற்றுக்குள் போனாலும் அடங்கிய இடத்தில் நிற்காமல் அந்தக்கப்பல் வேறு இடத்திற்குப் போனாலும் தல்கீன் ஓத வேண்டும். கப்பலில் மரணித்து கடலில் போட முன் தல்கீன் ஓதுவது சுன்னத்.
மைய்யித் பருவமெய்திய ஆணாக இருந்தால் அதன் தலைமாட்டில் ஒருவர் உட்கார்ந்து கிப்லாவை பின்னோக்கி மைய்யித்தை முன்னோக்கி தல்கீன் ஓதுவது சுன்னத், மைய்யித் பெண்ணாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கி தல்கீன் ஓதுவது முஸ்தஹப்பாகும் (மஙானி)
இட நெருக்கடி, அதிகளவான மைய்யித்தின் தொகை உள்ளிட்ட அவசியமான காரணங்கள் இல்லாமல் ஒரு கப்றில் இரு மைய்யித்துக்களை நல்லடக்கம் செய்வது மக்றூஃ; இதற்கான விளக்கத்தை இமாம் பாஜூரி றஹ்மதுல்லாஹி அலைஹி இவ்வாறு கூறுகின்றார்கள்.
ஒரு கப்றில் இரு மைய்யித்துக்களை நல்லடக்கம் செய்வது ஒரே இனம் (ஆண், அல்லது பெண்) அல்லது திருமணம் முடிக்க ஹறாமான மஹ்றமிய்யத்தான உறவினர்களாக இருந்தால் மட்டும் மக்றூஃ, இல்லாவிட்டால் இமாம்களின் ஏகோபித்த கருத்துப்படி ஹறாமாகும். சிலர் ஒத்த இனத்தவர்களாக இருந்தாலும் ஹறாம் என்கின்றனர்; சேர்த்து அடக்கும் நிர்பந்த சூழல் ஏற்பட்டால், ஒருவரை ஒருவர் படாத படி இருவருக்கு மத்தியில் களி மண்போன்ற ஒரு தடையை வைக்க வேண்டும்;
காறிஜா பின் ஸைத், ஸஃது இப்னு றபீஃ ஆகிய இருவரையும் ஒரு கப்றிலும், நுஃமான் இப்னு மாலிக், அப்து இப்னு கஷ்காஷ் ஆகிய இருவரை ஒரு கப்றிலும் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது
மைய்யித்தை அவர்களின் சிறப்பைக்கவனித்து முற்படுத்த அல்லது பிற்படுத்த வேண்டும், பொதுவாக அவசியத்தைக்கவனித்து ஒரே இனத்தைச்சார்ந்த இரு மைய்யித்துக்களை ஒரே கப்றில் நல்லடக்கம் சொய்வது ஆகும்; தவிர்க்க முடியாதளவு கடுமையான தேவை ஏற்பட்டால் இனவித்தியாசமானவர் (ஆண், பெண்)களை ஒரே கப்றில் நல்லடக்கம் செய்யலாம்;
கப்று தோண்டும் போது மற்றுமொரு மைய்யித் நல்லடக்கம் செய்திருப்பது தெரிய வந்தால் அல்லது அதன் ஊனம் இருந்தால் அதை மூடி விட வேண்டும்; கப்றை முழுமையாகத் தோண்டிய பின் எலும்புகள் காணப்பட்டால் அதை அதே இடத்தில் வைத்து மூடி விட்டு வேறு இடத்தில் கப்று தோண்டுவது வாஜிபாகும்; சொரிமணலில் குழி அமைத்து மைய்யித்தை அடக்கினால் மைய்யித்தில் மண் விழாதவாறு தடுப்புப்போடுவது வாஜிபாகும்.
கப்றின் அருகில் நிற்பவர்கள் இரு கைகளினாலும் கப்றின் தலைப்பக்கத்திலிருந்து மூன்று தடவைகள் மண் எடுத்து முதற் தடவையில்
منها خلقناكم،
என்றும் இரண்டாவது தடவை
وفيها نعيدكم
என்றும் மூன்றாவது தடவை..
ومنها نخرجكن تارة اخرى
என்றும் ஓதி மண்ணை கப்றில் போடுவது சுன்னத், இன்னும் சற்று அதிகப்படுத்தி முதற் தடவை
اللهم لقنه عند المسالة حجته
இரண்டாவது தடவையில்
اللهم افتح أبواب السماء لروحه
மூன்றாவது தடவையில்
اللهم جاف الارض عن جنبيه
ஓதுவது சுன்னத்.
இன்னும், கப்றிலிருந்து மண் எடுத்து சூறா இன்னா அனாஸல்னாஹுவை ஏழு விடுத்தம் ஓதி கபனைத்திறந்து நெஞ்சுப்பகுதியில் அல்லது கப்றில் அந்த மண்ணை வைத்தால் கப்றின் பித்னாக்களிலிருந்து பாதுகாப்பு கிட்டும்.
கப்றை மீண்டும் தோண்டல்:
-------------------------------
நல்லடக்கம் செய்யப்பட்ட பின், மைய்யித்தைத் தோண்டி வெளியில் எடுப்பது மைய்யித்தை இடமாற்றும் நோக்கமாக இருந்தாலும் சரி மைய்யத்துக்குக் கண்ணியக் குறைச்சலாகும் என்பதனால் ஹறாமாகும்.
கப்றைத்தோண்டுவதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு,
1- மைய்யித் சுத்தமில்லாமலும்,
குளிப்பாட்டாமல் அல்லது தயம்மம் செய்யாமல் அடக்கியிருந்தால், தோண்டிஎடுத்து குளிப்பாட்டி அல்லது தயம்மம் செய்யவேண்டும். ஒரு நிபந்னை! மைய்யித் பழுதாகாமல் இருக்க வேண்டும்.
2- அபகரிக்கப்பட்ட நிலத்தில் மைய்யித் அடக்கப்பட்டு நில உரிமையாளர் வேண்டினால் மைய்யித் பழுதாகியிருந்தாலும் கப்றைத்தோண்ட வேண்டும். நில உரிமையாளர் அவ்வாறு வேண்டாதிருப்பது சுன்னத்தாகும்.
3- கப்றில் ஒரு பொருள் வைக்கப்பட்டிருந்தால் பொருள் வீணாகக்கூடாது என்பதற்காக மைய்யித் பழுதாகியிருந்தாலும் தோண்டலாம்.
4-, மைய்யித் கிப்லாவுக்கு நேராக இல்லாமல் அடக்கப்பட்டு மைய்யித் பழுதாகாதிருந்தால் கப்றைத் தோண்டி மைய்யித்தை கிப்லாப்பக்கம் வைக்க வேண்டும், கபன் செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டால் கப்றைத் தோண்டக்கூடாது; ஏனெனில் அடக்கத்திற்குப்பின் மைய்யித் தானாகவே மறைக்கப்பட்டுள்ளது; மறைப்புக்கான அவசியம் இல்லாமல்போய்விட்டது.
5- ஹறம் ஷரீப் பூமியில் காபிர் அடக்கப்பட்டால்
6-வாரிசுக்காறர்கள் அடக்கப்பட்டவர் ஆணா, பெண்ணா என்று தர்க்கம் செய்து கொண்டால்
7- நிறைமாத ஒரு கற்பிணிப் பெண் அடக்கப்பட்டு வயிற்றிலிருக்கும் அக்குழந்தை உயிருடன் இருக்கிறது அதனை உயிருடன் வெளியில் எடுக்க முடியும் என்று நம்பியிருந்தால்
8- கற்பமுற்றிருக்கும் தன் மனைவியை நோக்கி உன் வயிற்றிலிருப்பது ஆணாக இருந்தால் நீ தலாக் என்று கூறியிருக்க அதை அறிவதற்கு முன் அவள் இறந்து அடக்கப்பட்டால்,
மேற்கண்ட நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் கப்றைத்தோண்டலாம்.
தொடரும்..
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி
All react